Natural Remedies: மழைக்கால வயிற்றுப் பிரச்சினைகளுக்கு 7 இயற்கை தீர்வுகள்
மழைக்காலங்களில் பெரும்பாலும் அஜீரணம், வாயு, குமட்டல் மற்றும் மாசுபட்ட உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படும் தொற்றுகள் போன்றன வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
இயற்கை வைத்தியங்கள், பொதுவான மழைக்கால வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து பயனுள்ள நிவாரணத்தை வழங்குகின்றன.
அந்தவகையில் எளிமையான, அணுகக்கூடிய மற்றும் பக்க விளைவுகள் இல்லாத இந்த 7 பழங்கால தீர்வுகள் குடல் சமநிலையை மீட்டெடுக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் துணைப்புரிகின்றது.
வயிற்றுப் பிரச்சினைகளை தீர்வு கொடுக்கும் முக்கிய ஆற்றல் மிக்க வீட்டு வைத்தியங்கள் தொடர்பில் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
வீட்டு வைத்தியங்கள்
இஞ்சி தேநீர்: இது செரிமானத்தைத் தூண்டவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. மழைக்காலத்தின் போது, சில துண்டுகளை தண்ணீரில் கொதிக்க வைத்து,தேநீர் தயாரித்து சூடாகக் பருகுவது நல்ல வயிற்றுப்பிரச்சினைகளில் இருந்து சிறந்த தீர்வை கொடுக்கும்.
சீரகம் : வாயு மற்றும் வீக்கத்திற்கும் வாயு பிரச்சினைகளுக்கும் இது ஒரு பாரம்பரிய இந்திய மருந்தாகும். ஒரு தேக்கரண்டி சீரகாத்தை எடுத்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மென்று சாப்பிடுங்கள் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை அருந்துவது வயிறு வலி, மற்றும் அஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும்.
புதினா இலைகள்: இது குமட்டல் மற்றும் வாந்தியைக் குறைக்க உதவும் அமைதிப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, புதிய புதினாவை நசுக்கி எலுமிச்சை சாறு மற்றும் தேனுடன் கலந்து குடிப்பது ஒரு பயனுள்ள தீர்வாகும், மேலும் வயிற்று வலியைப் போக்க புதினா தேநீரையும் பருகலாம்.
வெந்தய விதைகள் : வயிற்று தசைகளை தளர்த்துவதிலும், பிடிப்புகளை நீக்குவதிலும் இது ஆற்றல் காட்டுகின்றது. எனவே, உணவுக்குப் பின்னர் ஒரு தே.கரண்டி வெந்தயத்தை மென்று சாப்பிடுவது அல்லது சூடான நீரில் ஊறவைத்து ஒரு இனிமையான பானம் தயாரித்து குடிப்பது, ஏப்பம், வீக்கம் மற்றும் அஜீரணத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன.
ஓமம்: அஜீரணம் மற்றும் வாயுத்தொல்லைக்கு ஓமம் ஒரு சிறந்த தீர்வாகும். ஓமம் தேநீர் குடிப்பது நொதி உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் மழைக்காலத்தில் அடிக்கடி தொந்தரவு செய்யும் குடல் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும்.
தயிர் மற்றும் வாழைப்பழம்: அவை பெக்டின் மற்றும் பொட்டாசியம் நிறைந்தவை, மேலும் அவை மலத்தை திடப்படுத்தவும் உதவுகின்றன. குடல்களை ஆற்ற புரோபயாடிக் நிறைந்த தயிருடன் இணைக்க வேண்டும். மேலும், இந்த கலவை வயிற்றுக்கு மென்மையானது மற்றும் உங்கள் செரிமான சமநிலையை உடனடியாக மீட்டெடுக்க உதவுகிறது.
கொத்தமல்லி விதை : கொத்தமல்லி விதைகள் கல்லீரலை நச்சு நீக்கி ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகின்றன. இந்த தேநீர் குடிப்பது அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் வீக்கத்தைக் குறைக்கும். குறிப்பாக மழைக்காலத்தில் ஏற்படும் வயிறு பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |