6000 அன்னாசி செடிகள்... பயிர்ச்செய்கையில் அசத்தும் இலங்கை Reecha!
கிளிநொச்சியில் (kilinochchi) அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் அன்னாசி பயிர்ச்செய்கை தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் பல்வேறு பயிர்ச்செய்கை, மீன் வளர்ப்பு,கோழிவளர்ப்பு உட்பட பல்வேறு விடயங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறுபட்ட புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், எவ்வித இரசாயன பதார்த்தங்களும் உபயோகிக்காமல் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட 6000 அன்னாசிகள் தற்போது காய்த்துள்ள நிலையில் வெகு விரைவில் அறுவடைக்கு தயாராகும் என எதிர்ப்பார்க்ப்படுகின்றது. இது தொடர்பான முழுமையான விபரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |