ஜியோ நெட்வொர்க்கில் 5ஜிபி டேட்டாவை கடனாக உடனே பெறுவது எப்படி?
பல நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புது புது வகையில் டேட்டா சலுகைகளை வழங்கி வருகிறது.
அதில், ரிலைன்ஸ் ஜியோ மற்ற நெட்வொர்குகளை விட விலை குறைவாக வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்களை கவர, டேட்டா தீர்ந்துவிட்டால், 1ஜிபி டேட்டாவை கடனாக வழங்குகிறது.
1ஜிபி என்ற அடிப்படையில், 5ஜிபி வரை பெற்றுக்கொள்ளமுடியுமாம். மேலும் இந்த டேட்டா கடனை பெற MyJio ஆபிற்கு சென்று அவசர டேட்டா கடன் பக்கத்திற்கு சென்று பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவை, டேட்டா தீர்ந்த பிறகு உங்களால் பணம் செலுத்த முடியவில்லை என்றால், நீங்கள் உடனடியாக அதைக் கடனாகப் பெற்று பின்னர் செலுத்தலாம்.
இந்த டேட்டா லோன் தொகையை செலுத்துவதற்கான காலக்கெடு எதுவும் இல்லை என்றும், ஜியோ பயனர்கள் திருப்பிச் செலுத்த விரும்பும் போது அது முழுவதுமாகச் சார்ந்தது என்றும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த வசதியைப் பெறுபவர்கள் கடன் தொகையைச் செலுத்த மறந்துவிட்டால், தொடர்ச்சியான நினைவூட்டல்களைப் பெறுவார்கள் என்றும் வெளிப்படுத்தியது. ரிலையன்ஸ் ஜியோ அதன் ப்ரீபெய்ட் பயனர்கள் 1ஜிபி வரை 5 அவசரக்கால டேட்டா லோன் பேக்குகளை கடன் வாங்க அனுமதிக்கிறது.
ஒவ்வொரு 1ஜிபி டேட்டா பேக்கின் விலையும் ரூ.11 என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் ஒரு நேரத்தில், நீங்கள் 1ஜிபி டேட்டாவை மட்டுமே கடன் வாங்க முடியும்.
மேலும், 5ஜிபி வரை டேட்டாவை பெற நீங்கள் விரும்பினால், அவசரகால டேட்டா லோன் வசதியை நான்கு முறை செயல்படுத்துவதன் மூலம் அதைப் பெறலாம்.
ஒரு வாடிக்கையாளர் 5 ஜிபி டேட்டாவை எடுத்துக் கொண்டால், மொத்த டேட்டா கடன் தொகை ரூ.55 ஆக இருக்கும்.
எப்படி வாங்கலாம்?
- முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் MyJio ஆப்பிற்கு சென்று மேல் இடதுபுறத்தில் உள்ள ‘மெனு’ என்பதை க்ளிக் செய்யவும்.
- அடுத்ததாக, மொபைல் சேவைகளின் கீழ் ‘அவசர டேட்டா கடன்’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘தொடரவும்’ என்பதைக் க்ளிக் செய்யவும்.
- பின்னர், அவசர தரவைப் பெறு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அவசர கடன் பலனைப் பெற ‘இப்போதே செயல்படுத்து’ என்பதைக் க்ளிக் செய்யவும்.
-
அவசர டேட்டா கடன் பலன் இப்போது செயல்படுத்தப்பட்டது. இதன்பின்னர் நீங்கள் எப்பொழுதும் போல இன்டர் நெட்டை உபயோகிக்கலாம்.