சனியின் வக்ர பெயர்ச்சி...139 நாட்களுக்கு சோதனையில் 5 ராசிகள்: உங்க ராசியும் இருக்கா?
நவக்கிரகங்களில் நன்மையும் சரி தீமையும் சரி அதை அப்படியே இரட்டிப்பாக கொடுக்கக்கூடியவர் தான் சனிபகவான்.
இந்த நிலையில் சனி பகவான் வரும் ஜீலை 13ம் திகதி மீன ராசியில் வக்ர நிலை அடைய உள்ளார். இது யோதிடப்படி சில ராசிகளுக்கு நல்லதல்ல.
பின் 139 நாட்கள் வரை வக்ர நிலையில் நீடித்த பிறகு, நவம்பர் 28ஆம் திகதி சனி வக்ர நிவர்த்தி அடைவார்.
எனவே இந்த சனி வக்ரமாக இருக்கும் போது குறிப்பிட்ட 5 ராசிகள் வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது எந்தெந்த ராசி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
- உங்கள் ராசிக்கு இது மிகப்பெரிய சோதனையான காலகட்டம்.
- முக்கியமாக உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது.
- அலுவலகப் பணியில் இருப்பவர்கள் முடிந்தவரை வேலையை சரியாக செய்ய வேண்டும்.
- சக பணியாளர்களுடன் பிரச்சனைகள் வரும்.
- நிதியில் நட்டம் ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை உண்டாகும்.
மிதுனம்
- நீங்கள் பேசுவதை யோசித்து பேச வேண்டும்.
- வீட்டிலும் பணி இடங்களிலும் வாக்குவாதம் செய்ய கூடாது.
- நீங்கள் உழைத்த உழைப்பிற்கு லாபம் கிடைக்காமல் மன அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள்.
- வேலை செய்யும் இடத்தில் சுமை அதிகரிக்கும்.
- குடும்ப உறவுகளுடன் மனஸ்தாபங்கள் வரும்.
கன்னி
- நிதிநிலை பாதிக்கப்படும்.
- பணம் சம்பாதிப்பதில் போராட்டம் தான்.
- இதுவரை வந்த வருமானமும் குறையலாம்.
- எதையும் சாமர்த்தியமாக தீர்க்க பழகிக்கொள்ள வேண்டும்.
- குடும்ப வாழ்க்கையில் அமைதி கெடும்.
துலாம்
- உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கஷ்டம் உண்டாகும்.
- பணியிடத்தில் பணி சுமை காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
- பழைய சொத்துக்களுக்கு சண்டை வரலாம்.
- வாக்குவாதங்களையும் சர்ச்சைகளையும் தவிர்ப்பது நல்லது.
- குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்காது.
தனுசு
- குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உடல்நிலை பாதிக்கக்கூடும்.
- கையில் பணம் தங்காமல் கடன் வாங்க நேரிடும்.
- அலுவலகத்திலும் நெருக்கடியான நிலையை சந்திக்க கூடும்.
- எனினும் எதிர்காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ வாய்ப்பு கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் வேலைகளில் அதிக கவனம் முக்கியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).