அடுத்த ஆண்டிற்குள் 5 நாடுகள் பிட்காயினை அரசு நாணயமாக ஏற்கிறதாம்... அசுர வளர்ச்சியின் காரணம் என்ன?
பிட்காயினின் அசுர வளர்ச்சியானது இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக வளர்ந்து வருகிறது. பிட்காயினுக்கு இணையாகப் பல கிரிப்டோகரன்சிகள் அதிகளவிலான பாதுகாப்பு தன்மை, கிரீன் எனர்ஜி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பிட்காயினாகவும் உள்ளது.
இதனிடையே, சில வாரங்களுக்கு முன்பு எல் சால்வடோர் நாட்டில் அமெரிக்க டாலருக்கு இணையாகப் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்து நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதைப்பற்றி அந்நாடு ஏற்கனவே தெரிவித்து இருந்தாலும், அரசு கட்டுப்பாட்டில் நிதி பரிமாற்றம் இல்லாமல் இருக்கும் எல் சால்வடோர் போன்ற நாடுகளுக்குப் பெரிய அளவில் பலன் அளிக்கும்.
அந்த வகையில் 2022- ம் ஆண்டு இறுதிக்குள் உலகில் 5 நாடுகளில் பிட்காயினை அதிகார்ப்பூரவ் நாணயமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது. இதை, பிட்மெக்ஸ் என்ற முன்னணி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் சிஇஓ-வான அலெக்ஸ் உலகில் பல முன்னணி நாடுகள் கிரிப்டோகரன்சியை அடுத்தடுத்து ஆதரித்து வரும் நிலையில், பிட்காயின் பயன்பாட்டு அளவு பெரிய அளவில் மேம்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பிட்காயினின் விலை, பிட்காயின் - 57,378 டாலர் (0.48 சதவீத உயர்வு), எதிரியம் - 3,503.33 டாலர் (2.43 சதவீத சரிவு), ரிப்பிள் - 1.10 டாலர் (4.40 சதவீத சரிவு), கார்டானோ - 2.15 டாலர் (2.72 சதவீத சரிவு), போல்காடாட் - 33.49 டாலர் (3.96 சதவீத உயர்வு), டோஜ்காயின் - 0.22 டாலர் (4.10 சதவீத உயர்வு).