4 கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு... தற்போது இதன் நிலை என்ன?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழியில் நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி சொக்கம்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் சோலைமலை. கடந்த 30 ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் சோலைமலை விவசாயத்துடன் ஆடு, மாடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், இவர் வீட்டில் வளர்த்து வரும் கோழி ஒன்று நான்காவது முறையாக பத்து முட்டைகள் இட்டு அடைகாத்து குஞ்சு பொரித்தது.
அதில், அதிசயமாய் ஒரு கோழிக்குஞ்சு மட்டும் நான்கு கால்களுடன் உள்ளது. நான்கு கால்களுடன் இருந்தாலும் அந்த கோழிக்குஞ்சு ஆரோக்கியமாக தாயுடனும் மற்ற கோழிக் குஞ்சுகளுடனும் இணைந்து சுற்றி வருகிறது.
நான்கு கால்களுடன் கோழி, குஞ்சு பொரித்த தகவலை அடுத்து சுற்றுவட்டார கிராம மக்கள் சோலைமலையின் வீட்டிற்கு வந்து நான்கு கால்களுடன் பொரித்த அதிசய கோழிக்குஞ்சை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.