37-வது திருமணம் செய்து மனைவிகளுக்கு ஷாக் கொடுத்த நபர்! துள்ளி குதிக்கும் பேர குழந்தைகள்.. இது சாத்தியமா?
ஒரு முதியவர் 37-வது முறையாக திருமணம் செய்து கொண்டு அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
இந்த வினோதமான வைரல் கிளிப்பை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா என்பவர் தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.
இந்த வைரல் வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா "துணிச்சலான மனிதன்" என்ற கேப்ஷன் கொடுத்து ஷேர் செய்து உள்ளார்.
மேலும் இந்த திருமணம் 28 மனைவிகள், 135 குழந்தைகள் மற்றும் 126 பேர குழந்தைகளுக்கு முன்னால் நடந்த முதியவரின் 37-வது திருமணம் என்ற தகவலை குறிப்பிட்டுள்ளார் ரூபின் சர்மா.
BRAVEST MAN..... LIVING
— Rupin Sharma IPS (@rupin1992) June 6, 2021
37th marriage in front of 28 wives, 135 children and 126 grandchildren.👇👇 pic.twitter.com/DGyx4wBkHY
இருப்பினும் இந்த வீடியோ எப்போது, எந்த நாட்டில் எந்த இடத்தில் ஷூட் செய்யப்பட்டது என்ற தகல்கள் தெளிவாக தெரியவில்லை.
எனினும் ஐபிஎஸ் அதிகாரி ஷேர் செய்துள்ள கிளிப் என்பதால் இதில் உண்மை தன்மை இருக்கும் என்று நம்பி ஏராளமான நெட்டிசன்கள் இந்த வீடீயோவை ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த 21-ஆம் நூற்றாண்டில் கூட மன்னர்கள் காலத்தை போல இவ்வளவு திருமணங்கள் செய்து கொண்டு வாழ முடியுமா.! இது சாத்தியமா என்று பலரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.