இந்த 3 ராசியினருக்கு சோறு தான் முக்கியம்! சரியான உணவுப் பிராணிகளாக இருப்பார்களாம்
பொதுவாகவே அனைத்து உயிர்களுக்கு உணவு என்பது இன்றியமையாதது. ஆனால் அந்த உணவை வகை வகையாக சமைத்து சாப்பிடுவது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம்.
பெரும்பாலும் அனைவருமே உழைப்பதன் முக்கிய நோக்கங்கள் பல இருந்தாலும் அதில் முதன்மை காரணம் உணவு தான். விதவிதமாக உணவு சாப்பிடுவது யாருக்கு தான் பிடிக்காது?
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழவேண்டும் என்பதற்காக சாப்பிடாமல், சாப்பிட வேண்டும் என்பதற்காகவே வாழும் அதீத உணவு பிரியர்களாக இருப்பார்களாம்.
அப்படி வாழ்வில் உணவுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவ கொடுக்கும் குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனால் ஆளப்படுவதால், ஆடம்பர வாழ்க்கை மீதும் ஆடம்பர உணவுகள் மீதும் இவர்களுக்கு அளவுகடந்த பிரியம் இருக்கும்.
ரிஷப ராசிக்காரர்கள் நன்கு தயாரிக்கப்பட்ட உணவுகளின் அமைப்பு, நறுமணம் மற்றும் சுவைகளில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இவர்கள் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகும் போதும், அதிக மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும் நல்ல உணவுகளை அனுபவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பெரும்பாலும் உணவை வெறும் உணவாக அல்ல, ஒரு அனுபவமாகவே பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இயல்பாகவே எந்த விடயத்தையும் முழு ஈடுபாட்டுடன் செய்யும் பழக்கம் கொண்டவர்கள் என்பதால், உணவு விடயத்திலும் அதே விருப்பத்தை கொண்டிருப்பார்கள்.
அவர்களிடம் விருப்பமான உணவுகள் மற்றும் சமையல் குறிப்புகளின் குறித்து ஒரு நீண்ட பட்டியலே இருக்கும். பொதுவாக எல்லா உணவுகளையும் விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பாடு தான் மிக முக்கியம் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
கடகம்
சந்திரனால் ஆளப்படும் கடக ராசியிகர் பெரும்பாலும் உணவுடன் ஆழமான உணர்ச்சி ரீதியான தொடர்பைக் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் உணவின் மீது அதிக விருப்பம் மற்றும் அக்கறை கொண்டவர்களாக இருப்பதுடன் இவர்களை போன்ற உணவு பிரியர்களுடன் நட்பு வைத்துக்கொள்வதை தான் அதிகம் விரும்புவார்கள்.
சரியாக நேரத்துக்கு உணவு கிடைக்காத போது இவர்கள் தங்கள் நிலையில் இருக்க மாட்டார்கள். இவர்கள் வாழ்வில் அதிக சந்தோஷம் கொடுக்கும் விடயம் என்றால், அது நிச்சயம் உணவாகத்தான் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |