பேரழிவை ஏற்படுத்திய 1941ம் ஆண்டு... அதே துயரங்கள் 2025ம் ஆண்டும்! இரண்டும் ஒரே காலண்டரா?
பேரழிவினை ஏற்படுத்திய 1941ம் ஆண்டும் தற்போது நடந்து கொண்டிருக்கும் 2025ம் ஆண்டும் துயரங்கள் ஒன்றாக இருந்து வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளின் காலண்டர் ஒன்றாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025ல் இன்னும் பேரழிவு உண்டா?
தற்போது 2025ம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இதில் 6 மாதங்களை கடந்து விட்டோம். ஆனால் இந்த ஆறு மாதத்தில் பல அழிவுகளையும் சந்தித்து வருகின்றோம்.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல், மகா கும்ப மேளாவில் ஏற்பட்ட நெரிசல், அகமதபாத் ஏர் இந்தியா விமான விபத்து, ரயில் விபத்துக்கள் என அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றது.
2025ம் ஆண்டின் கிரக நிலைகளும் மோசமாக உள்ளதுடன், இந்த ஆண்டு செவ்வாயின் ஆதிக்கமும் அதிகமாக இருப்பதால், உலகில் பல பேரழிவுகள் ஏற்படும் என ஜோதிடர்கள் கூறி வருகின்றனர்.
1941 மற்றும் 2025 காலெண்டர் ஒன்றா?
இந்நிலையில் தற்போது 2025ம் ஆண்டு காலெண்டரும் 1941ம் ஆண்டும் காலெண்டரும் ஒரே மாதிரியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலெண்டர் மட்டுமின்றி, அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளும் ஒரே மாதிரியாகவே இருப்பதால், 1941ம் ஆண்டைப் போன்று 2025ம் ஆண்டும் இருண்ட காலமாக இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதாவது 941ம் ஆண்டில் தான் இரண்டாம் உலகப்போர், பஞ்சம், தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சனைகள் இருந்துள்ளது. மேலும் அமெரிக்கா ஜப்பானை தாக்க தயாரானதாம். ஆதலால் 1941ம் ஆண்டு வரலாற்றில் இருண்ட காலங்களில் ஒன்றாக கூறப்படுகின்றது.
1941-ல் நடந்த சம்பவங்கள்
அக்டோபர் 30ம் தேதி விமான விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் பயணம் செய்த 15 பேரில் 14 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்.
டிசம்பர் 07 அன்று ஹவாய் தீவுகளில் உள்ள அமெரிக்க கடற்படை தளமான பேர்ள் ஹார்பர் மீது ஜப்பான் திடீர் தாக்குதலை நடத்திய நிலையில், 2400 பேர் உயிரிழந்ததுடன், மிகப்பெரிய சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் நுழந்ததாம்..
ஜெர்மனி சோவியத் யூனியனைத் தாக்கியதுடன், பொருளாதா நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. மாலியில் நடந்த போரால் மக்கள் பசியால் இறந்து கொண்டிருந்தனர்.
நாஜிக்கள் போலந்து விஞ்ஞானிகளையும் எழுத்தாளர்களையும் கொன்றனர். யூதர்களின் படுகொலையும் அந்த ஆண்டு தான் நடைபெற்றுள்ளது.
பிரிட்டிஷ் கப்பல் ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. பல போர்கள் வெடித்துள்ளதுடன், பிலிப்பைன்ஸில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படவும் செய்துள்ளனர்.
2025ல் நடந்த சம்பவங்கள்
இந்த ஆண்டில் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த 242பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் இடையே போர் 3 ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் தற்போது இன்னும் தீவிரமாகியுள்ளது.
ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் திடீரென்று ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்த நிலையில், இதற்கு இந்தியா பதிலடி கொடுக்க ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தனுக்கு இடையே ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுடன் போர் நடக்கும் சூழ்நிலை உருவானது.
தைவானுக்கும், சீனாவிற்கும் இடையிலான பதற்றத்தால் போர் பயம், இஸ்ரேல், ஈரான் போர் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் வேளையில் 3ம்உலகப் போர் அச்சத்தை எழுப்புகிறது.
மேலும் பல நாடுகளில் வெள்ளம், புயல், மோசமான வானிலை, பனிப்பாறைகள் உருகுதல் என பல இயற்கை பேரழிவுகள் அரங்கேறி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |