2022 இல் குரு, சனியால் இனி விபரீத ராஜயோகம்! ஜென்ம கேதுவிடமிருந்து தப்பிய 2 ராசிகள்
புத்தாண்டு பிறக்க இன்னும் ஓரிரு வாரங்கள் தான் இருக்கின்றது.
ராகு பகவான் ஏப்ரல் மாதத்தில் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பயணம் செய்கிறார்.
2022ஆம் ஆண்டு துலாம், விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன யோகம் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்
பிறக்கப் போகும் 2022 ஆண்டு தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும்.
மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். நல்ல கல்லூரியில் படிக்க வேலை கிடைக்கும்.
வெளிநாட்டு யோகம் கை கூடி வரும்.வேலைக்காகவும், உயர்கல்விக்காகவும் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 2022ஆம் ஆண்டு சுப காரியங்கள் நடைபெறும்.
திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
குருவின் பார்வை உங்களுக்கு சுபத்தை கொடுக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு 2022ஆம் ஆண்டு தொட்டது துலங்கக் கூடிய ஆண்டாக அமையப்போகிறது.
விருச்சிகம்
பிறக்கப்போகும் 2022ஆம் ஆண்டு புத்தாண்டு நிறைய நன்மைகளையும் அதிர்ஷ்டங்களையும் தரப்போகிறது.
பல ஆண்டுகாலமாகவே கஷ்டத்தை அனுபவித்து வரும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனி விடிவுகாலம் பிறக்கப் போகிறது.
ஜென்ம கேது ஏழாமிடத்து ராகுவினால் நிறைய தொல்லைகளையும் சங்கடங்களையும் அனுபவித்து வந்த உங்களுக்கு குரு சனியால் எந்த தொந்தரவும் கிடையாது.
குருவின் புண்ணியத்தால் புத்திரபாக்கியம் கை கூடி வரும்.
குருவின் ஆசியுடன் கல்வியை சிறப்பாக தடைகள் இன்றி முடிப்பீர்கள். 2022ஆம் ஆண்டு நினைத்தது நிறைவேறும் அதிர்ஷ்கரமான ஆண்டாக அமைந்துள்ளது