78 வயது முதியவரை காதலித்த 18 வயது பெண்! திருமண புகைப்படத்தை பார்த்து கதறும் நெட்டிசன்கள்
18 வயது பெண் ஒருவர் 78 வயது விவசாயியை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முதியவர் மீது ஏற்பட்ட காதல்
காதலுக்கு கண்ணில்லை என்று கூறியது ஒருபுறம் இருக்க தற்போது காதலுக்கு வயது வித்தியாசம் இல்லை என்பதையும் அவ்வப்போது பல காதல்ஜோடிகள் எடுத்துக்காட்டி வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த விவசாயி ரஷாத் மங்காகோப்(75), இவரும் ஹலிமா அப்துல்லாவை(18) என்ற பெண்ணும்கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், இவர்களின் திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றுள்ளது. இந்த ஜோடி 3 ஆண்டுகளுக்கு முன்பு ககாயன் மாகாணத்தில் இரவு விருந்தின் போது சந்தித்தனர்.
இருவருக்கும் இது முதல்காதல் மற்றும் முதல் திருமணம் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயிக்கப்பட்ட தேதி இவர்களது திருமணம் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.