100 வயதிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் தாத்தா! நெகிழ வைக்கும் பின்னணி காரணம்
100 வயதானாலும் தன்னுடைய பேரப்பிள்ளைகளுக்காக கஷ்டப்படும் தாத்தாவின் கதை படிப்போரை கண்களை குளமாக்குகின்றன.
பஞ்சாபை சேர்ந்தவர் Harbans Singh, வயது 100க்கும் மேல் ஆகிறது, ஆனாலும் தினந்தோறும் கஷ்டப்பட்டு வெங்காயம், உருளைக்கிழங்கு விற்றுக்கொண்டிருக்கிறார்.
காரணம் தன்னுடைய பேரப்பிள்ளைகளை கவனித்துக் கொள்வதற்காக, அவர்கள் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்பதற்காக.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மகன் இறந்துவிட, மருமகளும் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் கஷ்பட்டாலும் பிள்ளைகளை வளர்க்க முடிவு செய்தார் Harbans Singh.

தினந்தோறும் காய்கறிகளை விற்று அதில் வரும் பணத்தை பேரப்பிள்ளைகளுக்காக செலவிட்டு வந்துள்ளார்.
இவர் பற்றி தகவல் தெரியவர, பலரும் Harbans Singh தாத்தாவுக்கு உதவிகளை செய்ய முன்வந்தனர்.
பஞ்சாப் அரசு, உடனடியாக 5 லட்ச ரூபாயை வழங்கியதுடன் பிள்ளைகளின் கல்விக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
