<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-17T13:34:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-direct-in-gemini-on-24-july-who-get-money-1784261434"></link>
            <id>https://manithan.com/article/mercury-direct-in-gemini-on-24-july-who-get-money-1784261434</id>
            <summary type="text">ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக புதன் கருதப்படுகிறார். அறிவுத்திறன், பேச்சுத் திறன், கல்வி மற்றும் வியாபாரம் ஆகியவற்றின் காரக கிரகமாக புதன் விளங்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக புதன் கருதப்படுகிறார். அறிவுத்திறன், பேச்சுத் திறன், கல்வி மற்றும் வியாபாரம் ஆகியவற்றின் காரக கிரகமாக புதன் விளங்குகிறார். </p><p>மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான&nbsp; புதன் தற்போது மிதுன ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில், வரும் ஜூலை 24ஆம் தேதி தனது சொந்த ராசியான மிதுனத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்க உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef7ccbd5-0e81-44b4-bcdf-3650cca46ea0/26-6a59b3cfc80dc.webp' /></p><p></p><p>
</p><p>
புதனின் இந்த நிலை மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், தொழில் மற்றும் நிதி ரீதியில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8d7fee7-e879-4e13-9169-d45762580a43/26-6a59b3d07b854.webp' /></p><p>

மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் 3-ஆம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைவதால், தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். </p><p>உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் சந்தர்ப்பமும் அமையும். </p><p>நிதி நிலைமை வழக்கத்தை விட மேம்பட்டு காணப்படும். மாணவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80d68241-23a7-4ffb-961f-0de9a3dd77d6/26-6a59b3d12fa73.webp' /></p><h2>
</h2><p>
மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் முதல் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைவதால், பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். </p><p>பணியிடத்தில் உங்கள் திறமையும் செயல்திறனும் பாராட்டைப் பெறும். வாழ்க்கைத்துணையுடனான உறவு மேலும் வலுவடையும். தொழிலதிபர்களுக்கு லாபம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.</p><p> குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குறிப்பாக ஐடி துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த காலம் மிகவும் சிறப்பாக அமையும்.</p><h2>

விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be85b3af-0e9a-45ed-a30b-9e56248344e0/26-6a59b3d1d5c74.webp' /></p><p></p><p>விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் 8-ஆம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைவதால், நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.</p><p> புதிய வருமான ஆதாரங்களும் உருவாகலாம். புதிய தொழில் தொடங்க இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.</p><p> நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதால் மனஅழுத்தம் குறைந்து, மனநிம்மதி அதிகரிக்கும். குறிப்பாக திருமண உறவில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T13:16:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி வெள்ளி ஸ்பெஷல்... செட்டிநாடு பால் கொழுக்கட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/aadi-friday-special-recipe-paal-kozhukattai-tamil-1784287715"></link>
            <id>https://manithan.com/article/aadi-friday-special-recipe-paal-kozhukattai-tamil-1784287715</id>
            <summary type="text">ஆடி மாதத்தில் செட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகவும், புனிதமான மாதமாகவும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதத்தில் செட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.</p><p>ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகவும், புனிதமான மாதமாகவும் கருதப்படுகின்றது. ஆடி வெள்ளி, செவ்வாய் நாட்கள் அம்மனுக்கு விரதம் இருந்து பூஜைகளை செய்ய பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.</p><p><br></p><p>மேலும் அம்மனுக்கு கூல் காய்ச்சி ஊற்றுவது, பாயசாம் போன்ற பிரசாதங்கள் தானமாக கொடுப்பதையும் விரும்புகின்றனர்.</p><p>இவ்வாறான பிரசாதத்தில் ஒன்று பால் கொழுக்கட்டை ஆகும். அம்மனுக்கு படைத்து வழிபடும் பால் கொழுக்கட்டை எ்வவாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0c01156-6670-4483-982b-aadd1dde8379/26-6a5a21e668287.webp' /></p><h2>தேவையான பொருட்கள்</h2><p>கொழுக்கட்டை/இடியாப்ப மாவு - 1 3/4 கப்<br>உப்பு - 1/2 டீஸ்பூன் <br>சுடுநீர் - தேவையான அளவு </p><h4>தேங்காய் பாலுக்கு</h4><p>துருவிய தேங்காய் - 2 கப் <br>ஏலக்காய் - 3<br>வெதுவெதுப்பான நீர் - தேவையான அளவு </p><h4>வெல்ல நீருக்கு</h4><p>பொடித்த வெல்லம் - 1 1/4 கப்<br>தண்ணீர் - 1/4 கப்</p><h4>கொழுக்கட்டைக்கு</h4><p>தண்ணீர் - 4 கப்<br>உருட்டிய கொழுக்கட்டை<br>வெல்ல நீர்<br>தேங்காய் பால்<br>துருவிய தேங்காய்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f5f65d8-f850-48b7-8d1a-349eebe04afa/26-6a5a21e71936f.webp' /></p><h2>செய்முறை</h2><p>பாத்திரம் ஒன்றில் 5 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் கொதிக்க வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கொழுக்கட்டை அல்லது இடியாப்ப மாவை எடுத்து, அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.</p><p>பின்பு சுடுதண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கரண்டி ஒன்றினால் கிளறிவிட்டு, நன்றாக கொழுக்கட்டை செய்யுமம் பதத்திற்கு கிளறிக்கொள்ளவும்.</p><p>பிசைந்த வைத்த மாவை உருண்டையாகவோ, குச்சியாகவோ உருட்டி வைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜார் ஒன்றில் துருவிய தேங்காயம் மற்றும் ஏலக்காய் மற்றும் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ff13b49-0c74-4940-bead-4a9fb805ce0c/26-6a5a21e7bcbaa.webp' /></p><p>மீண்டும் சக்கையை ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து இரண்டாவது தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.</p><p>பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் பொடித்த வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து பாகு எடுத்துக் கொள்ளவும்.</p><p>அடிகனமான பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, அதில் உருட்டி வைத்த கொழுக்கட்டையை சேர்த்து 4 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5acd0dc-be31-4dbe-ad9a-258b6f18b2cd/26-6a5a21e869938.webp' /></p><p>சிறிது கிளறிவிட்டு மீண்டும் 5 நிமிடம் வேக வைத்து, அதற்குள் வெல்ல நீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிடவும்.</p><p>அடுத்ததாக தேங்காய் பால் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிட்டு, கடைசியாக துருவிய தேங்காய் சிறிது தூவி பரிமாறவும். சுவையான பால் கொழுக்கட்டை தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T13:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களின் ஆரோக்கியத்தை காக்கும் கும்மாயம் : இவ்வளவு நன்மைகள் இருக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/amazing-health-benefits-of-kummayam-1784276681"></link>
            <id>https://manithan.com/article/amazing-health-benefits-of-kummayam-1784276681</id>
            <summary type="text">நமது முன்னோர்களின் உணவு முறைகளும், அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறையும், இயற்கையோடு இணைந்த பழக்கவழக்கங்களும் அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நமது முன்னோர்களின் உணவு முறைகளும், அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறையும், இயற்கையோடு இணைந்த பழக்கவழக்கங்களும் அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கான முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.</p><p>அவர்கள் உணவுகளை வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல், உடலின் தேவைகளைப் புரிந்து கொண்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4817d5b7-110e-46db-811b-5dad7d93d1c2/26-6a59ed7249120.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், பெண்களின் உடல் நலனை மேம்படுத்தும் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக கும்மாயம் பிரபல்யமாக காணப்படுகின்றது.</p><p>குறிப்பாக பெண் பிள்ளைகளின் எலும்பு வளர்ச்சியை வலுப்படுத்தவும், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் சோர்வு மற்றும் வலியை குறைக்க உதவும் வகையிலும், இந்த சத்துமிக்கஇனிப்பு உணவு பழங்காலத்தில் அதிகமாக தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b947a471-4586-4a21-90ce-3a7af3367db7/26-6a59ed72ec973.webp' /></p><p>

மேலும், பெண் பிள்ளைகள் பருவமடையும் காலத்திலும் அவர்களின் உடல் வளர்ச்சிக்கும், சத்துத் தேவைகளுக்கும் உதவும் வகையில் கும்மாயம் செய்து கொடுக்கும் வழக்கம் நமது முன்னோர்களிடையே காணப்பட்டது. </p><p>இதில் உடலுக்கு தேவையான புரோட்டீன், இரும்புச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், வளரும் பருவத்தில் உள்ள பெண்களுக்கு இது ஒரு சிறந்த பாரம்பரிய உணவாக விளங்குகிறது.

கும்மாயம் என்ற சொல்லுக்கு "குழையச் சமைத்த பருப்பு" என்று பொருள்.</p><p> </p><p>இது உளுந்து, பாசிப்பருப்பு மாவு, நெய், பனங்கருப்பட்டி போன்ற இயற்கையான பொருட்களை சேர்த்து மெதுவாக வேகவைத்து தயாரிக்கப்படும் சுவையான மற்றும் சத்தான இனிப்பு பலகாரமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b01d30b1-7c56-4241-bf21-24cb3872003e/26-6a59ed739d8d6.webp' /></p><p> இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் உடலுக்கு வலிமையையும், தேவையான சக்தியையும் வழங்கக்கூடியவை. இந்த கும்மாயத்தை இன்றைய தலைமுறையினரும் அறிந்து பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.</p><p>பெண் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் இந்த சத்துமிக்க கும்மாயத்தை வீட்டிலேயே எளிமையான முறையில் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99b73b1a-fb17-4902-882a-43bdf7f68ee7/26-6a59ed744cdc9.webp' /></p><h2>தேவையான பொருட்கள்
</h2><p><b>
வறுத்து பொடி செய்வதற்கு</b></p><p>உளுத்தம் பருப்பு – 1/2 கப்
</p><p>பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்</p><p>
பச்சரிசி – 2 டேபிள் ஸ்பூன்</p><p>
ஏலக்காய் – 3
</p><p><b>
கும்மாயம் செய்வதற்கு</b></p><p> பொடித்த வெல்லம் – 1 கப்
</p><p>தண்ணீர் – 2 1/2 கப்
</p><p>அரைத்த மாவு – 1 கப்
</p><p>நெய் – 1/2 கப்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ea017d-3528-4f67-b347-c86457c9b95a/26-6a59ed74f2dcf.webp' /></p><p></p><p>
</p><h2>செய்முறை
</h2><p>
முதலில் ஒரு பாத்திரத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதை ஒரு தட்டில் எடுத்து ஆற வைக்கவும்.
</p><p>
அதே பாத்திரத்தில் பாசிப்பருப்பை சேர்த்து, நல்ல வாசனை வரும் வரை வறுத்து அதையும் தனியாக எடுத்து ஆற வைக்கவும்.

பிறகு அதே வாணலியில் பச்சரிசியை சேர்த்து நன்கு பொரியும் வரை வறுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae92c3f6-a695-4672-bcf8-7b2ae20bc0e9/26-6a59ed75a6561.webp' /></p><p>அதில் ஏலக்காயையும் சேர்த்து சிறிது நேரம் வறுத்து இறக்கி ஆற வைக்கவும்.

ஆறியதும், வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையான பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.</p><p>பின்னர் அந்த மாவை சலித்து வைத்துக் கொள்ளவும்.

சலித்த மாவில் இருந்து 1 கப் மாவை எடுத்து ஒரு வாணலியில் சேர்க்கவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் முழுவதும் கரையும் வரை சூடாக்கவும். </p><p>வெல்லம் கரைந்ததும் இறக்கி சிறிது ஆற விடவும். பின்னர் அதை வடிகட்டி மாவுடன் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை அடுப்பில் வைத்து, தொடர்ந்து கிளறிக் கொண்டே வேகவைக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d08afeb3-8627-4248-a17f-86ab3477d25a/26-6a59ed76581eb.webp' /></p><p></p><p> மாவு கெட்டியாக ஆரம்பித்ததும், நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து தொடர்ந்து கிளறவும்.

கலவை நன்கு திரண்டு அல்வா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கினால் அவ்வளவு தான்&nbsp; &nbsp;பாரம்பரிய முறையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கும்மாயம் தயார்.&nbsp; குறிப்பாக மாதவிடால் காலத்தில் பெண்கள் இதனை சாப்பிடுவதால் வலி குறைந்து ஆரோக்கியம் மேம்படும்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T12:07:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Tamizha Tamizha: 10 வயதில் 5 ரூபாய் சம்பளத்திற்கு வேலை... இன்று இளைஞர் சம்பளத்தால் பிரமிப்பில் அரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tamizha-tamizha-person-works-many-jobs-family-1784282659"></link>
            <id>https://manithan.com/article/tamizha-tamizha-person-works-many-jobs-family-1784282659</id>
            <summary type="text">தமிழா தமிழா நிகழ்ச்சியில் பல வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றுபவர்கள் மற்றும் குடும்ப நபர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.

தமிழா தமிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழா தமிழா நிகழ்ச்சியில் பல வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றுபவர்கள் மற்றும் குடும்ப நபர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
</p><h2>
தமிழா தமிழா</h2><p>தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
</p><p>
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac5ffc99-a186-4be9-91bb-f8be54eba0dd/26-6a5a0132c433d.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் இந்த வாரம் பல வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றுபவர்கள் மற்றும் குடும்ப நபர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது. </p><p>

குடும்பத்திற்காக பல வேலைகள் செய்து கஷ்டப்பட்டவர்கள் இன்று என்னவாக இருக்கின்றனர் என்பதைக் கேட்டு அரங்கமே பிரமிப்பில் ஆழ்ந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
நபர் ஒருவர் தான் கஷ்டப்பட்டாலும் பிள்ளையை பிஸியோதெரபிக்கு படிக்க வைத்ததாக கூறியுள்ளார். மற்றொரு இளைஞர் 10 வயதில் 5 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்துள்ளார்.
</p><p>
இன்று அவரது படிப்பினால் 80 ஆயிரம் சம்பளம் வாங்கி தனது தாய்க்கு பெரும் சேர்த்துள்ளார். இளைஞரின் பேச்சினால் அரங்கமே பூரித்து போயுள்ளது.

.<br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/m_Z3vf9-egg" width="640" height="360" class="note-video-clip"></iframe>
&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T11:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/indias-first-hydrogen-train-flagged-off-by-pm-1784282132"></link>
            <id>https://manithan.com/article/indias-first-hydrogen-train-flagged-off-by-pm-1784282132</id>
            <summary type="text">இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக, நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.தொடக்க விழாவில் ஹரியானா முதல்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக, நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.தொடக்க விழாவில் ஹரியானா முதல்வர் மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
</p><p>
ஹரியானா மாநிலத்தின் ஜின் (Jind) ரயில் நிலையத்திலிருந்து சோனிபட் (Sonipat) வரை இயக்கப்படும் இந்த பசுமை ரயில், கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்கும் நோக்கில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/943a1a48-5c49-406a-a373-3619750071e2/26-6a59ff4b03160.webp' /></p><p>

டீசல் ரயில்களுக்கு மாற்றாக அறிமுகமாகியுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில், ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் (Hydrogen Fuel Cells) மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து இயங்குகிறது. இயக்கத்தின் போது நீரும் நீராவியும் மட்டுமே வெளியேறுவதால், காற்று மாசு ஏற்படாது.</p><h2>

ஹைட்ரஜன் ரயிலின் முக்கிய அம்சங்கள்</h2><p>சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக இருக்கும் டீசல் இன்ஜின்களுக்கு மாற்றாக இந்த ஹைட்ரஜன் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.</p><p>
பூஜ்ஜிய மாசு: இந்த ரயில் இயங்கும்போது பிற ரயில்களைப் போல எந்தவிதமான நச்சுப் புகையோ, காற்று மாசோ ஏற்படாது.</p><p> இந்த ரயில் வெளியேற்றும் ஒரே கழிவு 'நீரும் நீராவியும்' (Water and Steam) மட்டுமே.
</p><p> தொழில்நுட்பம்: ஹைட்ரஜன் செல்கள் (Hydrogen Fuel Cells) மூலமாக ரயிலுக்குள்ளேயே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, அதன் மூலம் இன்ஜின் இயக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4168e41b-b8fa-4c69-90de-4e98b075358f/26-6a59ff4a4ebea.webp' /></p><p>
</p><p>வேகம் மற்றும் கட்டமைப்பு: முற்றிலும் நவீன வசதிகளுடன் கூடிய 10 பெட்டிகளைக் கொண்டுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில், மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
</p><p>முதல் பயணத்தில் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் பயணம் செய்தனர்.

இந்தத் திட்டம் இந்திய ரயில்வேயின் அடுத்தகட்ட தொழில்நுட்ப முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p>சோதனை வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
</p><p>
ஆரம்பத்தில் இந்தத் தொழில்நுட்பத்திற்கான முதலீடு அதிகமாக இருந்தாலும், நீண்டகாலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கார்பன் உமிழ்வு குறைப்பு மற்றும் பசுமை ஆற்றல் பயன்பாட்டில் இது முக்கிய பங்களிப்பை வழங்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Prime Minister <a href="https://x.com/narendramodi?ref_src=twsrc%5Etfw">@narendramodi</a> flags off India&#39;s first Hydrogen train between Jind and Sonipat at Jind railway station<a href="https://x.com/hashtag/HydrogenTrain?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HydrogenTrain</a> <a href="https://x.com/hashtag/%E0%A4%AD%E0%A4%BE%E0%A4%B0%E0%A4%A4_%E0%A4%95%E0%A5%80_%E0%A4%AA%E0%A4%B9%E0%A4%B2%E0%A5%80_%E0%A4%B9%E0%A4%BE%E0%A4%87%E0%A4%A1%E0%A5%8D%E0%A4%B0%E0%A5%8B%E0%A4%9C%E0%A4%A8_%E0%A4%9F%E0%A5%8D%E0%A4%B0%E0%A5%87%E0%A4%A8?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#भारत_की_पहली_हाइड्रोजन_ट्रेन</a> <a href="https://x.com/RailMinIndia?ref_src=twsrc%5Etfw">@RailMinIndia</a> <br><br>Watch: ⬇️ <a href="https://t.co/j1lJCliqRs">pic.twitter.com/j1lJCliqRs</a></p>&mdash; PIB India (@PIB_India) <a href="https://x.com/PIB_India/status/2077999438166147580?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> <b>FOLLOW NOW</b></a></u>&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T10:11:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை தண்ணீ குழம்பு.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/drumstick-leaves-kuzhambu-recipe-in-tamil-1784278845"></link>
            <id>https://manithan.com/article/drumstick-leaves-kuzhambu-recipe-in-tamil-1784278845</id>
            <summary type="text">சத்தான ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.

அதேபோல், முருங்கைக்கீரை முடி வளர்ச்சியை அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சத்தான ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.</p><p>

அதேபோல், முருங்கைக்கீரை முடி வளர்ச்சியை அதிகரிக்க, நரைமுடி மறைய மற்றும் உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.</p><p>

ஆரோக்கியம் நிறைந்த இந்த&nbsp; முருங்கைக்கீரை தண்ணீ குழம்பை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
</p><p>
அந்தவகையில், உடலிற்கு சத்தான முருங்கைக்கீரை தண்ணீ குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.&nbsp;</p><h2>தேவையான பொருட்கள் </h2><ul><li>

பாசிப்பருப்பு- 1 கைப்பிடி </li><li>தண்ணீர்- 1 கப் </li><li> மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன் </li><li>பூண்டு- 1 பல் </li><li>எண்ணெய் - 1½ ஸ்பூன் </li><li> வெந்தயம்- ½ ஸ்பூன்</li><li> கடுகு - 1 ஸ்பூன்</li><li> காய்ந்த மிளகாய்- 3</li><li> சின்ன வெங்காயம்- 15 </li><li> பூண்டு- 5 பல் </li><li>தக்காளி- 1 </li><li>உப்பு - தேவையான அளவு </li><li>அரிசி கழுவிய நீர்- ½ லிட்டர் </li><li>பெருங்காயத் தூள்- ½ ஸ்பூன் </li><li>முருங்கைக்கீரை- 2 கைப்பிடி </li><li>துருவிய தேங்காய்- 1 கப் </li><li>சீரகம்- 1 ஸ்பூன் </li></ul><h2>

செய்முறை</h2><p> 

முதலில் ஒரு குக்கரில் கழுவிய பாசிப்பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து 3 விசில் விட்டு இறக்க வேண்டும். </p><p>

பின் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம், தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.</p><p> 

அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bffcc14e-323c-4985-9c73-6f5bda98bc69/26-6a59ef3f9cebe.webp' /></p><p>பிறகு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி தக்காளி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். </p><p>

அடுத்து அதில் அரிசி கழுவிய நீரை ஊற்றி, அத்துடன் வேக வைத்த பருப்பை மசித்து சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.</p><p> 

இதற்கடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். </p><p>

 இறுதியாக இதில் கழுவி வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான முருங்கைக்கீரை தண்ணி குழம்பு தயார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T09:02:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Today Gold Rate: சரிவை நோக்கிச் செல்லும் தங்கத்தின் விலை... மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gold-rate-july-17-2026-india-and-srilanka-1784277094"></link>
            <id>https://manithan.com/article/gold-rate-july-17-2026-india-and-srilanka-1784277094</id>
            <summary type="text">ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்றைய தங்கம் விலை
ஆபர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>இன்றைய தங்கம் விலை
</h2><p>ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களில் அதிகரித்து, சில தினங்களில் குறைந்தும் வருகின்றது.
</p><p>
இந்நிலையில், இன்று சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.13,150 ஆகவும், சவரன் ரூ.1,05,200 ஆகவும் இருந்து வந்தது.</p><p></p><p>
</p><p>
தற்போது சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, 13,100 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 400 குறைந்து, 1,04,800 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p>இதே போன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ. 235.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,35,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/522ea230-8037-4ca5-97b5-2fc647779214/26-6a59e9b3dc9a4.webp' /></p><p>
</p><h2>
இலங்கையில் தங்கம் விலை
</h2><p>இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,67,840 அதுவே கிராமிற்கு ரூ.45,980 க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,37,200க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 42,150க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 626.08 LKR என்றும் ஒரு அவுன்ஸ 19,473.24 LKR என்று விற்பனை ஆகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67c835bf-296d-4381-8587-a1a7c0aa95ca/26-6a59e9b4b9bb6.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<b> <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T08:37:13+00:00</updated>
        </entry>
    </feed>
