<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-02T08:54:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/netizens-criticize-joy-crizildaas-alleged-bb-entry-1788332972"></link>
            <id>https://manithan.com/article/netizens-criticize-joy-crizildaas-alleged-bb-entry-1788332972</id>
            <summary type="text">bigg boss tamil season10 : ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>bigg boss tamil season10 : ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி ஆரம்பமாக இருக்கின்றது.&nbsp;</p><p>இதுவரை 9 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், 10-வது சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இந்த முறை வழக்கமான திரையுலக பிரபலங்களுடன், சாதாரண மக்களும் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பதாக கூறப்படுவதால், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9750a486-4755-488e-998f-91ec42445e45/26-6a97d11792fa6.webp' /></p><p></p><p>

பிக் பாஸ் சீசன் 10-ல் யார் யார் போட்டியாளர்களாக களமிறங்க உள்ளனர் என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.</p><h2>ஜாய் கிரிஸில்டா</h2><p> அந்த வகையில், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தற்போது தகவல் பரவி வருகிறது.எனினும், இந்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daec9d41-7280-46d1-852c-ff55855524a8/26-6a97d11847645.webp' /></p><p><b>
ஜாய் கிரிஸில்டா – மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம்</b></p><p>
ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாகவும், தன்னையும் தனது குழந்தையையும் அவர் புறக்கணித்ததாகவும் புகார் தெரிவித்திருந்தார்.</p><p> இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் கவனம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c54258b-7845-4e99-bcc9-2a8d0b3c6bee/26-6a97d118ef71c.webp' /></p><p> </p><p>அதன் பின்னர் குழந்தையின் பொறுப்புகளை மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது.

மேலும், அண்மையில் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜாய் கிரிஸில்டாவும் மாதம்பட்டி ரங்கராஜும் இணைந்து கலந்து கொண்டனர். இதனால், இருவருக்கும் இடையிலான விவகாரம் மீண்டும் பேசுபொருளானது.</p><p><b>
பிக் பாஸ் வாய்ப்புக்கு கடும் விமர்சனங்கள்&nbsp;</b></p><p>இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா என்பது இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையில், சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46c727d0-bbd4-401b-9281-3552e3c1b15a/26-6a97d119a3485.webp' /></p><p></p><p>
சில இணையவாசிகள், குழந்தையின் தந்தை பெயருக்காக போராடிய நிலையில், குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட ஆகாத சூழலில் பிக் பாஸ் போன்ற நீண்டகால ரியாலிட்டி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுவது குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். </p><p>மேலும், அவர் மேற்கொண்ட போராட்டத்தின் பின்னணியில் விளம்பர நோக்கம் இருந்ததா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.

அதே நேரத்தில், மற்றொரு தரப்பினர் ஜாய் கிரிஸில்டாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது குழந்தை தொடர்பான முடிவுகளை வைத்து அவரை விமர்சிப்பது சரியல்ல என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா உண்மையிலேயே போட்டியாளராக பங்கேற்கிறாரா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T07:33:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக குறைந்த தங்க விலை ... இன்று ஒரு சவரன் எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/september-2nd-gold-and-silver-price-in-chennai-1788327443"></link>
            <id>https://manithan.com/article/september-2nd-gold-and-silver-price-in-chennai-1788327443</id>
            <summary type="text">today Gold and silver price : செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் மாற்றங்கள் நகை பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. நேற்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>today Gold and silver price : செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் மாற்றங்கள் நகை பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. </p><p>நேற்று காலையில் கணிசமாக உயர்ந்த தங்கம் விலை, மாலையில் எதிர்பாராத விதமாக அதிரடியாக குறைந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை சரிந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa229a99-7b75-4f66-be0c-4e4a39a9f6f0/26-6a97bac2759af.webp' /></p><p></p><p>
</p><p>
நேற்று காலை தங்கம் விலை உயர்வை சந்தித்திருந்தாலும், மாலை நேரத்தில் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது. </p><p>நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,175க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04a55677-f92a-4f16-be6b-8e724400da2c/26-6a97bac329bab.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இன்றைய நிலவரம்&nbsp;</span></p><p>

இந்நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி, இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. </p><p>அதேபோல், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,800 குறைந்து, ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம், நேற்று மாலை நிலவரத்துடன் ஒப்பிடும்போது, இன்று ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை மேலும் ரூ.225 குறைந்துள்ளது.</p><p> ஒரு சவரனுக்கு ரூ.1,800 வரை விலை குறைந்திருப்பது நகை வாங்குவோருக்கு முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d5cf0ac-c5ae-4978-9f2a-1d532a2a0380/26-6a97bac3d2e3d.webp' /></p><p>
</p><p>
18 காரட் தங்கம் விலை
22 காரட் தங்கத்தைப் போலவே 18 காரட் தங்கம் விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 18 காரட் தங்கம் விலை ரூ.1,800 குறைந்து, ரூ.93,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0cecd14-1f1f-46f7-9060-80ee6637c96b/26-6a97bac4932e2.webp' /></p><p></p><p>
வெள்ளி விலையில் மாற்றமில்லை
தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டாலும், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T05:58:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புனர்பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-nakshatra-transit-who-get-huge-luck-1788323708"></link>
            <id>https://manithan.com/article/mars-nakshatra-transit-who-get-huge-luck-1788323708</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தளபதியாகக் கருதப்படுபவர் செவ்வாய். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக உள்ளார். செவ்வாய் சுமார் 45 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தளபதியாகக் கருதப்படுபவர் செவ்வாய். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக உள்ளார். செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதுடன், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். </p><p>தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படும் செவ்வாயின் நிலைமாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28d91496-1b72-45b2-af21-74d0582775d6/26-6a97aba4c16f6.webp' /></p><p>

அந்த வகையில், செவ்வாய் செப்டம்பர் 2ஆம் தேதியான இன்று தனது நட்சத்திரத்தை மாற்றி, புனர்பூசம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். </p><p>செவ்வாய், குருவின் நட்சத்திரத்தில் நுழைவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாரத அதிர்ஷ்டத்தையும் தொழில் முன்னேற்றத்தையும் கொடுக்கப்போகின்றது.</p><p>அப்படி செவ்வாயின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.&nbsp;</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b232caa1-519b-4609-90e8-b4134feb8a64/26-6a97aba575d37.webp' /></p><h2>
</h2><p>செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும்.</p><p> குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும். பரம்பரைச் சொத்துக்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.</p><p> பணிபுரிபவர்களுக்கு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமாக, மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். தொழிலிலும் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும்.</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37ac7bef-abcb-4663-bbbe-0fca73f7568b/26-6a97aba628a67.webp' /></p><h2>
</h2><p>செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.</p><p> தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறும் சூழல் உருவாகும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கலாம்.</p><p> கடின உழைப்பிற்கான உரிய பலன்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் சந்தர்ப்பங்களும் அமையும்.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c8ea58f-f4d4-4663-ac83-0e40dd487e6b/26-6a97aba6d268f.webp' /></p><p></p><h2>
</h2><p>செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியானது மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், நல்ல பலன்களையும் வழங்கப் போகிறது. நீண்ட காலமாக தொடங்க முடியாமல் நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாகத் தொடங்குவீர்கள்.</p><p> உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இழுபறியில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும்.</p><p>அதன் மூலம் நல்ல லாபமும் கிடைக்கும். செவ்வாயின் அருளால் தொழில் மற்றும் நிதி ரீதியாக சிறப்பான முன்னேற்ற பலன்கள் கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T04:53:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவி, குழந்தையை பிரிந்த பிரதீப் ஆண்டனி.. உருக்கமான பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bigg-boss-pradeep-antony-separates-from-wife-1788276406"></link>
            <id>https://manithan.com/article/bigg-boss-pradeep-antony-separates-from-wife-1788276406</id>
            <summary type="text">பிக் பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி குழந்தையை பிரிந்து மிகுந்த துயரில் இருப்பதாக வெளியிட்டுள்ள உருக்கமாக பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.பிரதீப் ஆண்டனிதமிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி குழந்தையை பிரிந்து மிகுந்த துயரில் இருப்பதாக வெளியிட்டுள்ள உருக்கமாக பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><h2>பிரதீப் ஆண்டனி</h2><p>தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘அருவி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், அதன்பிறகு ‘வாழ்’ திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d54a99f4-4d85-46ba-b98f-6a83a877cf59/26-6a96f3d77a817.webp' /></p><p></p><p>

நடிகர் கவினின் நெருங்கிய நண்பராகவும் அறியப்படும் பிரதீப் ஆண்டனி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஏற்கனவே திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிதான் அவரை அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது.</p><p>

நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி வெளிப்படையாகப் பேசிய விதமும், தனது கருத்துகளை தயக்கமின்றி முன்வைத்த விதமும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.</p><p> </p><p>அதே நேரத்தில், அவரது செயல்பாடுகள் நிகழ்ச்சிக்குள் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தின.

குறிப்பாக, சில பெண் போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனி மீது புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. </p><p>இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிரதீப்புக்கு ரெட் கார்டு வழங்கி வெளியேற்றப்பட்ட முடிவு அப்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. பலரும் பிக்பாஸ் குழுவின் முடிவுக்கு எதிராக தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e710ef7-88f5-4be5-bd73-a694d7f0c81c/26-6a96f3d82befa.webp' /></p><p> பிரதீப்பை வெளியேற்றியது தவறான முடிவு என்றும், அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.
</p><h2>மனைவி குழந்தையை பிரிந்தது ஏன்?&nbsp;</h2><p>பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதீப் ஆண்டனி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். கடந்த 2024ஆம் ஆண்டு பூஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு தனது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வந்த பிரதீப்புக்கு, கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
</p><p>
குழந்தை பிறந்த செய்தி பிரதீப்பின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான ஒரு பதிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e5e0646-0a8b-47f1-a140-29780764f4a4/26-6a96f3d8d1cd0.webp' /></p><h2>உருக்கமான&nbsp; பதிவு&nbsp;</h2><p>
</p><p>பிரதீப் ஆண்டனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், தனது மனைவி மற்றும் குழந்தையை பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு குறித்து அவர் அந்த பதிவில் உருக்கமாக பேசியுள்ளார். </p><p>ஒரு நல்ல குடும்பத்தை அமைத்துக்கொண்டு, தனது குழந்தைக்கு சிறந்த தந்தையாக வாழ வேண்டும் என்பதுதான் தனது வாழ்நாளின் மிகப்பெரிய கனவு என்று பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது இணைந்து வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64106227-c16e-4e02-aaaf-7dc0e90cc3cb/26-6a96f3d9848d4.webp' /></p><p></p><p>
</p><p>
மேலும், தனது குழந்தையின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பதாகக் கூறியுள்ள பிரதீப், குழந்தையை பிரிந்திருப்பது தனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>“ஒவ்வொரு நொடியும் என் குழந்தையை ரொம்பவே மிஸ் பண்றேன்” என்று அவர் தனது பதிவில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதீப்பின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. </p><p>குடும்ப வாழ்க்கை குறித்து பிரதீப் ஆண்டனி வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வரும் நிலையில், அவரது தற்போதைய நிலை குறித்து ரசிகர்கள் பலரும் வருத்தத்தையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u> <a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T04:18:53+00:00</updated>
        </entry>
    </feed>
