<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-31T06:23:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகமே அழிந்தாலும் வாழக்கூடிய உயிரினம் இதுதான்.. விஞ்ஞானிகள் சொல்லும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cockroach-and-its-survival-secrets-1788086392"></link>
            <id>https://manithan.com/article/cockroach-and-its-survival-secrets-1788086392</id>
            <summary type="text">இந்த உலகத்தில் அணு வெடிப்பு நிலநடுக்கம் சுனாமி என எவ்வளவு பெரிய பேரழிவு வந்தாலும் அசராமல் பிழைத்துக் கொள்ளும் ஒரு உயிரினம் உள்ளது அது தான் கரப்பான் பூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த உலகத்தில் அணு வெடிப்பு நிலநடுக்கம் சுனாமி என எவ்வளவு பெரிய பேரழிவு வந்தாலும் அசராமல் பிழைத்துக் கொள்ளும் ஒரு உயிரினம் உள்ளது அது தான் கரப்பான் பூச்சி. </p><p>அதாவது, எந்த பிரச்சனைகளில் இருந்தும் தப்பித்து வாழக்கூடிய திறன் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். டைனோசர்கள் பூமிக்கு வருவதற்கு பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே 32 ஆண்டுகளாக இவை பூமியில் வாழ்ந்து வருகின்றன. அதைப்பற்றி பார்ப்போம். </p><p>2026 ஆம் ஆண்டு புதிய தொடக்கத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் ஓர் பதற்றம், புயல், பூகம்பம் என இயற்கை பேரழிவுகள் அவ்வப்போது நடந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be5923fa-0e95-41af-9245-d51873a9b893/26-6a94087a11226.webp' /></p><p></p><p> அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பாக கூட நேபாளம் திபெத் எல்லையில் பனிப்பாறைகள் சரிந்து திடீர், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திருக்கிறது. </p><h3>பேரழிவில் உயிர் வாழும் உயிரினம்:
</h3><p>நேபாளத்தில் கொத்துக்கொத்தாக உயிரிழந்த மனிதர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த பகுதிகயில் மீட்டு பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் உலக அளவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. </p><p>அந்த வகையில், போர் பனிமழைசரிவு, இயற்கை பேரழிவுகள் என இத்தனையும் தாண்டி இவ்வளவு காலம் சிறிய பூச்சி ஒன்று அழியாமல் பிழைத்து இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் நம் அன்றாட வாழ்க்கையில் பயணிக்க கூடிய கரப்பான் பூச்சி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdcb9257-dc2b-4382-9923-0864aca79d3b/26-6a94087ac75b3.webp' /></p><h3> எதையும் செரிக்கும் வயிறு: </h3><p>கரப்பான் பூச்சிகள் உணவுகளை பற்றி கவலைப்படுவதே கிடையாது. சாதாரண உணவுகள் கிடைக்காத போதும் மர பட்டை, காகிதம், பசைகள், சோப்பு, முடி, தோல் பொருட்கள் துணி என எதை வேண்டுமானாலும் சாப்பிட்டு உயிர் வாழும். இவற்றின் வயிற்றில் இருக்கக்கூடிய சிறப்பு பாக்டீரியாக்கள் இந்த விசித்திர பொருட்களை செரித்து சத்துக்களாக மாற்றுகிறது. </p><p>அதனால் ஒரு சாதாரண கரப்பான் பூச்சி தண்ணீர் இல்லாமல் ஒரு வாரமும். உணவே இல்லாமல் ஒரு மாதத்திற்கு மேலாக உயிர் வாழ முடியும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, தகுந்த சூழலுக்கு ஏற்ப உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை குறைத்து ஆற்றலை சேமித்துக் கொள்ளும் என்று சொல்கிறார்கள்.</p><h3> தலை போனாலும் பிழைக்கும்:</h3><p> கரப்பான் பூச்சியை பொருத்தவரை தலை துண்டிக்கப்பட்ட பிறகும் கூட ஒரு கரப்பான் பூச்சியால் ஒரு வாரம் வரை உயிர் வாழ முடியும் என்று சொல்கிறார்கள். மனிதர்களைப் போல இவை மூக்கு அல்லது வாயால் மூச்சு விடுவதில்லை. </p><p>உடலில் பக்கவாட்டில் உள்ள சிறிய துளைகள் வழியாகவே ஆக்ஸிஜன் சுவாசிக்கின்றனர். இது தலை இல்லாததால் தண்ணீர் குடிக்க முடியாமல் ஏற்படக்கூடிய நீர் சத்து குறைபாட்டால் மட்டுமே இறுதியில் இறந்து போகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0433791d-b151-4cd3-80a9-43113b234bc6/26-6a94087b7cd33.webp' /></p><p></p><p> </p><h3>கதிர் வீச்சை தாங்கும் சக்தி: </h3><p>பூமியில் அணு ஆயுதப் போர் வந்தாலும் கூட கரப்பான் பூச்சி மட்டும் மிஞ்சும் என ஒரு பேச்சு உண்டு. அதாவது, இவை மனிதர்களை விட 15 மடங்கு அணுக்கதிர்வீச்சை தாங்கக்கூடிய சக்தி பெற்றதாம். இவற்றின் செல்லுலார் பிரிவு மிக மெதுவாக நடப்பதால் கதிர்வீழ்ச்சியால் இவற்றின் dna அவ்வளவு எளிதில் பாதிக்கப்படுவதில்லை.</p><h3> நெகிழும் உடல் அமைப்பு:</h3><p> இவற்றினுடைய வெளிச்சட்டகம் மிகவும் நெகிழ்வு தன்மை கொண்டது. இவை தன் உடலில் 25% வரை குறைத்துக் கொண்டு மிகவும் குறுகிய சந்துக்கள், சுவர்களின் விரிசல்களில் கூட லாபகமாக ஒளிந்து கொள்ளுமாம். நாம் தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை எதிர்த்து வாழும் வகையில் இவை தங்கள் மரபணுக்களை மிக வேகமாக மாற்றிக் கொள்கிறது. </p><p>அதைவிட, முக்கியமாக ஒரு தலைமுறை கொல்லும் விஷத்திற்கு அடுத்த தலைமுறைப் பூச்சிகள் எதிர்ப்பு திறனுடனே பிறக்கின்றனவாம். இயற்கையின் பரிணாம வளர்ச்சிக்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த கரப்பான் பூச்சி என்கிறார்கள். </p><p>மனிதர்கள் பூமிக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழத் தொடங்கிய இந்த கரப்பான் பூச்சி மனித இனம் அழிந்த பிறகும் கூட பூமியில் தொடர்ந்து வாழ்ந்து வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T05:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் தப்பிய பச்சை வீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/the-green-building-not-fall-nepal-flood-1788150076"></link>
            <id>https://manithan.com/article/the-green-building-not-fall-nepal-flood-1788150076</id>
            <summary type="text">நேபாளத்தில் கடந்த 26ம் தேதி பனிப்பாறை சரிந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 800 பேர் உயிரிழந்துள்ளனர், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் கடந்த 26ம் தேதி பனிப்பாறை சரிந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 800 பேர் உயிரிழந்துள்ளனர், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
</p><p>
ஆற்றங்கரையில் இருந்த வீடுகள் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டன, இதில் பிதூர் பகுதியில் திரிசூலி ஆற்றங்கரையில் மலைச்சரிவில் அமைந்திருந்த பச்சை நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட வீடு ஒன்று வெள்ளத்தில் அசராமல் இருந்தது.</p><p>

இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகின, வீட்டின் முதல் தளத்தில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர், இந்த வீடு மட்டும் வெள்ளத்தை எப்படி தாங்கியது என்பதே பலரது கேள்விக்குறியாகவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62a1e7ec-6804-42da-8b84-f286a8e437d2/26-6a9501ed69974.webp' /><br></p><p>

வீட்டின் அருகில் இருந்த மரம் மற்றும் பக்கத்துவீட்டின் காரணமாக வெள்ள நீர் பச்சை நிற வீட்டை நேரடியாக தாக்காமல் இருந்திருக்கலாம்.
</p><p>
மேலும் பச்சை நிற வீட்டின் முன்புறம் பாய்ந்த நீர் மிதமான வேகத்தில் சென்றதும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
</p><p>
அந்த வீ்ட்டில் இருந்த பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c68e4eeb-1f8f-4e7b-8240-cd1779af2a6e/26-6a9501ee2e46b.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-31T04:24:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டியிருந்த சேலையால் காப்பாற்றிய பெண்.. நேபாள வெள்ளத்தில் சிக்கிய சிவரஞ்சனி பேட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/nepal-flood-survivor-sivaranjini-interview-1788092923"></link>
            <id>https://manithan.com/article/nepal-flood-survivor-sivaranjini-interview-1788092923</id>
            <summary type="text">சில தினங்களுக்கு முன்பாக நேபாளில் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஓடியது. அதில் சிவரஞ்சனி என்ற ஒரு பெண் அளித்த பேட்டியில் தான் கட்டியிருந்த சேலையால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில தினங்களுக்கு முன்பாக நேபாளில் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஓடியது. அதில் சிவரஞ்சனி என்ற ஒரு பெண் அளித்த பேட்டியில் தான் கட்டியிருந்த சேலையால் மயிலாடுதுறையை சேர்ந்த பெண் காப்பாற்றியதாகவும் நெகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.<br></p><p> நேபாளத்தில் நேரிட்ட&nbsp;இயற்கை பேரழிவு காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மீண்டு வந்த திருச்சி உறையூர் சேர்ந்த சிவரஞ்சனி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அவர் பேசும்போது கைலாஷ் மானசரோவர் செல்வது வாழ்நாளின் ஒரு கனவாக இருந்த நிலையில் அதற்காக இவர் கடந்த 23ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள டிராவல்ஸ் மூலமாக பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/477dd1f4-d5a8-4c9c-90b3-32dab8ce1279/26-6a9421fcb81a6.webp' /></p><p></p><p> </p><p>அங்கிருந்து 24 ஆம் தேதி அவர் காட் மாண்டுவில் இருந்து காலை புறப்பட்டதுடன் ஷியாகுல் பேசி சென்ற இடத்தில் தங்கி 26 ஆம் தேதி மீண்டும் பயணத்தை தொடங்கிய நிலையில் கை ரோவ என்ற எம்பஸுக்கு செல்லும் வழித்தடங்கள் முழுவதும் மோசமான நிலையில் இருந்ததாகவும் அதே நேரம் இயற்கையான சூழலை ரசித்துக்கொண்டு சென்றபோது திடீரென ஒரு கரும் புகை எழுந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.</p><p> 57 பேர் யாத்திரி சென்ற நிலையில் நண்பர்கள் மற்றும் தூரத்து உறவினர்களான 17 பேருக்கு மற்றும் இருக்க இருப்பதால் கூடுதலாக மூன்று பேர் வந்து சேர்ந்தவுடன் 21 பேர் சென்றனர். கைரோ எம்பஸிக்குமூன்று கிலோமீட்டர் தொலைவு உள்ள நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வண்டியை ஓட்டிய டிரைவர் இறங்கி சென்றது தெரியாத நிலையில் கரும் புகையுடன் நீரும் கலந்த நிலையில் வந்த வெள்ளத்தில் முழுவதுமாக அனைத்தும் அடித்து செல்லப்பட்டதாகவும் அது அவர்களுடைய வாகனத்தை ஒரு வளைவில் நிறுத்தியதால் அனைவரும் பத்திரமாக கடவுளின் அருளால் தப்பித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். </p><h3>சிவன்&nbsp;பார்வதியாக:</h3><p>தங்களுடைய வாகனத்தில் உள்ள அட்டெண்டர் ஓடிவிட்டதாகவும் தங்கள் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொருவர் உதவியுடன் மேல் ஏறி வந்தவுடன் மாயவரத்தை சேர்ந்த பூங்குழலி மற்றும் ரத்தினகுமார் ஆகியோர் சேர்ந்து வேனில் இருந்து அவர்களை ஏற முடியாதவர்களை மேலே ஏற்றி விட்டதாகவும் தனது கட்டியிருந்த சேலையை கழற்றி கொடுத்து மற்றவர்களை காப்பற்றிய அவர்கள் சிவன் பார்வதி ஆகவே தெரிந்தார்கள் என்று நெகிழ்ச்சி உடன் தெரிவித்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e52c495-7086-48d5-b7d3-9b2cf0f3e316/26-6a9421fd7bd72.webp' /></p><p></p><p> </p><p>மேலே ஏறிச்சென்ற அவர்கள் அங்கு ராணுவ முகாமில் தங்கி இருந்தவர்கள் இறந்து விட்டதாகவும். அங்கு தங்கும் இடத்தை தங்களுக்கு திறந்து கொடுத்ததால் நிம்மதி அடைந்ததாகவும் இல்லையெனில் பலரும் பனியில் உறைந்து இருந்திருப்பார்கள் என்று தெரிவித்தார்கள்.</p><p> அதேபோல், மேலே இருந்து பார்த்தபோது கைலாசநாதர் பார்க்கச் சென்று அவர்களுக்கு அவரது இருப்பை காட்டியது போன்று அந்த காட்சி அமைந்ததாகவும். அந்த காட்சியை பார்த்த பிறகு ஜென்ம சாபல்யம் அடைந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும் 57 பேர் யாத்திரைக்கு சென்ற நிலையில் இன்று இவர்கள் நிலை என்ன ஆனது என்பதுதான் அவர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>அவர்கள் மீண்டும் வரவேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்துகொள்வதாக தெரிவித்திருக்கிறார். மேலும், அவர்கள் முகாமில் பல்வேறு சிரமங்களை சந்தித்து நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தங்களுடய உறவினர்கள் பணியாற்றுவதால் அவர்களுக்கு தகவல் தெரிவித்தோம்.</p><p> பிறகு அவர்கள் நம்பிக்கை தெரிவித்த பின்னர் மத்திய மாநில அரசு அதிகாரிகள் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு அவர்களை மீட்டு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், அவர் மத்திய அமைச்சர்களாக இருக்கட்டும் தமிழக அமைச்சர்களாக இருக்கட்டும் சிறப்பான ஒத்துழைப்பை அளித்ததுடன் பழகுவதற்கு எளிமையான முறையில் இருந்ததாக நெகழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c2a0a8b-3b71-4d20-96c5-df44eed848c0/26-6a9421fe32e1f.webp' /></p><p></p><p> </p><p>நமக்கு இந்தியாவைத் தாண்டி சென்றால் தான் இந்தியாவின் அருமை தெரியும் என்றும், உண்மையிலேயே இந்தியா ஒரு சொர்க்க பூமி என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதற்காக இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தங்கள் சொர்க்கமான பூமியில் இருப்பது உணர்ந்தாகவும் தெரிவித்தார். </p><p>மேலும், இது போன்ற பேரிடர் நேரிடும் காலங்களில் அரசு மற்றும் மீட்பு பணிக்கான தொடர்பு கொள்வதற்காக அரசு ஒரு அவசர எண்ணை அறிவிக்க வேண்டும் என்றும், இதனை மத்திய அமைச்சர்கள் ஜெயசங்கர் மற்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாகவும் அதனை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் கொடுத்து உள்ளார். </p><p>அதோடு இவர்கள் தங்களது ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் தொலைந்து விட்ட நிலையில் அதனை தங்களது இல்லத்திற்கு கொண்டு வந்து தருவதற்காக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T03:38:07+00:00</updated>
        </entry>
    </feed>
