<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-23T17:56:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வயதுக்கு உட்பட்டோரின் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம்... பிரான்ஸின் புதிய சட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/france-social-media-ban-under-15-kids-1784821883"></link>
            <id>https://manithan.com/article/france-social-media-ban-under-15-kids-1784821883</id>
            <summary type="text">15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>

வரும் கல்வியாண்டு முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae1f8adf-b7eb-434d-a41f-ce383423dc55/26-6a623b32294b1.webp' /></p><p></p><h2>நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல்</h2><p> அப்போது, "எங்கள் நாட்டுக் குழந்தைகளின் மூளை விற்பனைக்கான பொருள் அல்ல.அமெரிக்கா அல்லது சீனாவில் உருவாக்கப்படும் செயலிகள், பிரான்ஸ் குழந்தைகளின் சிந்தனைகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது" என்று அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.</p><p>

இந்தச் சூழலில், 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா, பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்புக்கு வந்தது. இதில் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f00e5c35-4168-4ff5-ae35-e31ff64ff6b9/26-6a623b32ce5d1.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து, வரும் செப்டம்பர் 1 முதல் பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு சட்டப்பூர்வமாகத் தடை அமலுக்கு வருகிறது.
</p><p>
இந்தச் சட்டத்தின் மூலம், சிறார்களின் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு இவ்வகையான முழுமையான கட்டுப்பாட்டை அமல்படுத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7a2142a-2cdd-4477-a7bb-bbe9f3dc6108/26-6a623b337f619.webp' /></p><p></p><p>

ஏற்கெனவே 15 வயதுக்கு உட்பட்டோரின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள சமூக வலைதளக் கணக்குகளை முடக்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நான்கு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், புதிய விதிமுறைகளை சமூக வலைதள நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றுகிறதா என்பதை பிரான்ஸ் தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை அமைப்பான ஆர்காம் (ARCOM) தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T17:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலை உணவிற்கு ஆரோக்கியம் நிறைந்த சுவையான ரவா இட்லி செய்வது எப்படி.? ரெசிபி இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-prepare-healthy-rava-idli-for-breakfast-1784816060"></link>
            <id>https://manithan.com/article/how-to-prepare-healthy-rava-idli-for-breakfast-1784816060</id>
            <summary type="text">ஆனால் எப்போதும் அரிசி மாவிலேயே இட்லி சுட்டு சாப்பிட்டு அலுத்து விட்டதா உங்களுக்கு.? அப்படியென்றால் ரவையை வைத்து ஆரோக்கியமான மற்றும் சுவையான ரவா இட்லிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆனால் எப்போதும் அரிசி மாவிலேயே இட்லி சுட்டு சாப்பிட்டு அலுத்து விட்டதா உங்களுக்கு.? அப்படியென்றால் ரவையை வைத்து ஆரோக்கியமான மற்றும் சுவையான ரவா இட்லியை காலை செய்து பாருங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்...</p><p>காலை வேளையில் எளிதான மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு அந்த நாளை தொடங்க தான் பலர் விரும்புவார்கள். பொதுவாக காலையில் இட்லி, தோசை, உப்புமா என செய்து சாப்பிடுவது தான் வழக்கம். அதுதான் இல்லத்தரசிகளுக்கு காலை வேளையில் செய்ய எளிதாக இருக்கும்.</p><p>ஆனால் எப்போதும் அரிசி மாவிலேயே இட்லி சுட்டு சாப்பிட்டு அலுத்து விட்டதா உங்களுக்கு.? அப்படியென்றால் ரவையை வைத்து ஆரோக்கியமான மற்றும் சுவையான ரவா இட்லியை காலை செய்து பாருங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்...&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29af69aa-36ba-44fc-b01e-7981f604b907/26-6a623308b0e97.webp' /></p><h2>தேவையான பொருட்கள் :</h2><p>ரவை - 1 கப்<br>புளித்த தயிர் - 1/2 கப்<br>&nbsp;துருவிய கேரட் - 1 கப்<br>&nbsp;பீன்ஸ் - 10
<br>பெரிய வெங்காயம் - 1<br>&nbsp;பச்சை மிளகாய் - 2
<br>இஞ்சி துண்டு - 1
<br>கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
<br>உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
<br>கடுகு - 1/2 டீஸ்பூன்
<br>எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
<br>பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
<br>கறிவேப்பிலை - சிறிதளவு
<br>கொத்தமல்லி இலை - சிறிதளவு<br>&nbsp;உப்பு - தேவையான அளவு&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b108a6cf-20aa-4521-83f1-7150d2b43255/26-6a62330962a17.webp' /></p><h2>செய்முறை :</h2><p>
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.
</p><p>பிறகு அதில் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கி வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் நறுக்கிய பீன்ஸ் சேர்த்து பாதி வேகும் வரை வதக்கவும்.</p><p>பிறகு அதில் துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கி இறுதியாக பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி கொள்ளவும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b2fe3a5-b245-4f6b-a8f5-25ef52af5137/26-6a62330a1a25f.webp' /></p><p>பின்னர் அதில் ரவை சேர்த்து மசாலாக்கள் ரவையுடன் நன்கு சேரும் படி மிதமான தீயில் கைவிடாமல் கிளறி ரவை வறுபட்ட வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி அதை நன்றாக ஆறவிடவும்.</p><p>இவை நன்கு ஆறியவுடன் புளித்த தயிர் அல்லது கெட்டியான தயிர் சேர்த்து கலவையை நன்றாக கிளறி சுமார் 5 நிமிடங்களுக்கு மூடி வையுங்கள். ஐந்து நிமிடம் கழித்து பார்த்தால் ரவை தயிரை உள்ளே இழுத்து ஊறி இருக்கும்.</p><p>பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மீண்டும் 10 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள். அதன் பின்னர் அதை இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கலந்துகொள்ளுங்கள்.</p><p>பின்னர் எப்போதும் போல் இட்லி தட்டில் இந்த மாவை ஊற்றி 15 நிமிடம் வேகவைத்தால் சுவையான ரவா இட்லி ரெடி.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T17:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு மிளகை நம் உணவில் சேர்த்தால் இவ்வுளவு நன்மைகளா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-benefits-you-get-by-eating-black-pepper-1784813631"></link>
            <id>https://manithan.com/article/what-benefits-you-get-by-eating-black-pepper-1784813631</id>
            <summary type="text">தினமும் நாம் நம் உணவில் மிளகு சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.மிளகுநாம் சமையலறையில் பயன்படுத்தும் அன்றாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தினமும் நாம் நம் உணவில் மிளகு சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.</p><h2>மிளகு</h2><p>நாம் சமையலறையில் பயன்படுத்தும் அன்றாட ஒரு பொருள் தான் மிளகு. இதை நாம் உணவில் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.</p><p>இதை நாம் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்கி அதிகரிக்கிறது. இது மசாலாக்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இது நம் பாரம்பரிய உணவுகளில் நிறைய சேர்ப்போம்.</p><p>இதை சமையலில் மாத்திரமின்றி ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கு கீழே காணலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f628ad02-9101-4481-b14e-657510cef215/26-6a621e6fcbc61.webp' /></p><h2>என்ன நன்மைகள்</h2><p>மிளகை நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதால் நமக்கு<b> புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது</b>. ஏனென்றால் இதில் உள்ள&nbsp;பைபரினின் ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்கள் பரவுவதைக் குறிக்கிறது. இதை நாம் பொடியகாவும் சேர்த்துக் கொள்ளலாம்.&nbsp; புதிதாக அரைத்த மிளகில் புற்று நோயை தடுக்கும்&nbsp;அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைய உள்ளன. இதனால் இவை புற்றுநோய் உண்டாக்கும்&nbsp;ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்க்கும் வைட்டமின்களை கொண்டது.</p><p>கருப்பு மிளகில் நிறைய <b>ஆன்டிஆக்ஸிடன்ட்கள் களஞ்சியமாக </b>கருதப்படுகிறது. இவை அனைத்தும் நம் உடலுக்கு நிறைய நன்மைகளை தரக்கூடிய ஒன்றாக உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/463fc1e9-7109-4182-aae5-afab17ecaaeb/26-6a621e713742d.webp' /></p><p></p><p>இதை நாம் அன்றாட உணவில் எடுத்துக் கொண்டால் நம் <b>மூளையின் அறிவாற்றல் செயல்பாடு அதிகரிக்கிறது.</b> இது நரம்பியல் நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த பொருளாக கருதப்படுகிறது. இது மூளையி்ல் உள்ள இரசாயன பாதையை செயல்படுத்துவதிலும், ஒருவரின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி இது மன அழுத்தத்தை குறைக்கு ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இது அல்சைமர் நோயை தடுக்க உதவுகிறது.</p><p><b>இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது</b>. இது வகை 2 நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதை நாம் அதிகமாக சாப்பிட்டால் நாம் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க முடியும். அது மட்டுமின்றி இது செரிமான பிரச்சனைகளுக்கும் தீர்வு தந்து செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e5d80ac-9924-4e4d-a1f3-bda4a72c0035/26-6a621e7080333.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; </b></a>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T16:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் ஓபனிங் காட்சியில் தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijay-jananayagan-movie-released-with-title-1784816508"></link>
            <id>https://manithan.com/article/cm-vijay-jananayagan-movie-released-with-title-1784816508</id>
            <summary type="text">முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கில் இப்படத்தை பார்த்த அமைச்சர் பர்வேஸ் கண...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கில் இப்படத்தை பார்த்த அமைச்சர் பர்வேஸ் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><h2>அமைச்சரின் நெகிழ்ச்சி</h2><p>
</p><p>
ஆதரவாளர்களுடன் திரையரங்கில் அமர்ந்து படம் பார்த்த அமைச்சர் பர்வேஸ், விஜய்யின் அறிமுகக் காட்சி வந்தபோதே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விடத் தொடங்கினார். பின்னர் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கர்சீப் மூலம் துடைத்துக் கொண்டார்.அவரது அருகில் இருந்த உதவியாளரும் இதனால் ஆச்சரியமடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a41380ef-56cb-4fea-b6c2-6e7aa2569184/26-6a622721b5572.webp' /></p><p>
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 950 திரையரங்குகளிலும், உலக அளவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. </p><p>இதையொட்டி பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக சென்சார் தொடர்பான பிரச்சனைகளால் தாமதமான இப்படம் தற்போது வெளியான நிலையில், இணையத்தில் படம் கசிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. </p><p>இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முதல் காட்சியை பார்த்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca2a65cf-713a-4ac9-848b-622e5ab4fbae/26-6a62272265b3b.webp' /></p><p>அந்த வகையில் புதுக்கோட்டையில் அமைச்சர் பர்வேஸ் ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்தபோது, விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற உணர்வால் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p> இதனால், படத்தில் எந்த காட்சி அவரை இவ்வளவு பாதித்தது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும், எம்ஜிஆர் நடித்த ‘மீனவ நண்பன்’ திரைப்படம் அவர் முதல்வரான பிறகு வெளியானதைப் போல, தற்போது விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படமும் அவர் முதல்வரான பிறகு வெளியாகியுள்ளது என தவெக தொண்டர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T14:38:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க நகை அணிந்து குளிப்பவரா நீங்கள்? நகையின் அழகே போயிடுமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gold-jewellery-does-wearing-bathing-reduce-shine-1784809751"></link>
            <id>https://manithan.com/article/gold-jewellery-does-wearing-bathing-reduce-shine-1784809751</id>
            <summary type="text">தங்க நகையை அணிந்து குளிக்கும் போது அதன் பளபளப்பு குறைந்துவிடுமா என்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.தங்க நகைபொதுவாக பெண்கள் அனைவருக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்க நகையை அணிந்து குளிக்கும் போது அதன் பளபளப்பு குறைந்துவிடுமா என்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>தங்க நகை</h2><p>பொதுவாக பெண்கள் அனைவருக்கும் தங்க நகை மீது அலாதி பிரியம் இருக்கும். தங்க நகையை அணிவதற்கு பலரும் விரும்பும் நிலையில், வீட்டில் எப்பொழுதும் அணிந்து கொண்டும் இருக்கின்றனர்.</p><p>குளிக்கும் போது தங்க நகையை கழற்றாமல் அணிவதும் பொதுவாக பழக்கமாக இருக்கின்றது. ஆனால் இவை மெதுவாக பாதிப்பினை ஏற்படுத்துமாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8b54576-d2e4-4fc1-8136-eec988206d57/26-6a6216bfe14c8.webp' /></p><p>குளியல் சோப்பு, ஷாம்பு, பாடி வாஸ் நகை இடுக்குகளில் படிந்து இறக்கையான பளபளப்பனை மறைத்து, மங்கலான தோற்றத்தினை அளிக்கின்றது. இதனால் நாளடைவில் நகையின் அழகும் குறைந்துவிடும்.</p><p>கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் அல்லது நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட நகைகளின் இடுக்குகளில் எளிதாக படிமங்கள் சேர்கின்றது. 22 காரட் தங்க நகைகள் அதிக மென்மை கொண்டதாக இருப்பதால் இந்த வேதிப்பொருட்கள் எளிதில் பொலிவை இழக்க செய்துவிடுமாம்.&nbsp;</p><p></p><h2>எந்த நகையை குளிக்கும் போது கழற்ற வேண்டும்?</h2><p>கற்கள் பதிக்கப்பட்ட நகைகள், முத்துகள், பவளம் போன்றவற்றினை குளிக்கும் போது கட்டாயம் கழற்ற வேண்டும்.&nbsp;</p><p>அதே போன்று நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட கம்மல், மெல்லிய செயின் இவைகள் எளிதில் உடைந்து போகலாம். ஆதலால் குளிப்பதற்கு முன்பு அவற்றையும் கழற்றி வைப்பது நல்லது.</p><p>நாம் தினமும் அணியும் தங்க நகையை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வது அவசியம் ஆகும். அதாவது வெதுவெதுப்பான தண்ணீரில் லேசான சோப்பு கரைசலை கலந்து சில நிமிடங்கள் ஊற வைத்து, மென்மையான பல் துலக்கும் பிரஷ்ஷால் கழுவி, துணியால் துடைத்து எடுக்கவும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6141c91a-6b51-41d1-a1b9-d42b77d8da90/26-6a6216c0930fc.webp' /></p><p>ரசாயனங்கள் கொண்ட கிளீனர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் நகையின் ஆயுளை நிச்சயம் குறைத்துவிடுமாம்.</p><p>தங்க நகை நீண்ட நாட்களுக்கு பளபளப்பாக இருக்க வேண்டுமெனில், சமையல் செய்யும் போது, குளிக்கும் போது, உடற்பயிற்சி செய்யும் வேலைகளில் கழற்றி வைப்பது நல்லது.</p><p>நகைகளை ஒன்றோடு ஒன்று உரசி கீரல்கள் ஏற்படுத்தாமல் தடுப்பதற்கு தனித்தனியாக பெட்டியில் வைக்கவும். வருடத்திற்கு ஒருமுறை அனுபவம் வாய்ந்த நகைக்கடைகளில் சுத்தம் செய்து கொள்ளவும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5a18c6a-bfa8-45dd-ac49-d466e3542896/26-6a6216c142578.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T14:11:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்மா குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய சுவாசிகா... கண்கலங்க வைத்த தருணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/swasika-mothers-of-india-awards-2026-video-1784809899"></link>
            <id>https://manithan.com/article/swasika-mothers-of-india-awards-2026-video-1784809899</id>
            <summary type="text">இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான &#039;நூறு சாமி&#039; திரைப்படத்தில், கணவனை இழந்த பெண்ணாக உருக்கமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'நூறு சாமி' திரைப்படத்தில், கணவனை இழந்த பெண்ணாக உருக்கமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை சுவாசிகா, தனது இயல்பான மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். </p><p>ஒரு தாயின் வாழ்க்கை, தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் மறுமணம் தொடர்பான நிஜச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவான அந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9324da80-3519-46c5-a720-a761fbd2d5dc/26-6a621081bed7c.webp' /></p><p></p><p>
</p><p>
இந்நிலையில், தாய்மையைப் போற்றும் வகையில் ஐபிசி தமிழ் பிரம்மாண்டமாக நடத்திய Mothers Of India Awards 2026 விழாவில், நடிகை சுவாசிகாவும் அவரது தாயாரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மேடையை அலங்கரித்தனர்.இந்த நிகழ்வு பலரையும் நெகிழச் செய்த உணர்வுபூர்வமான தருணமாக அமைந்தது.
</p><p>
அம்மாவாகப் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் பெண்களை கௌரவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விருது விழாவில், நடிகை சுவாசிகாவின் தாயாருக்கு Mothers Of India விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.</p><p>

விழா மேடையில் தனது அம்மா குறித்து நெகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் நடிகை சுவாசிகா பகிர்ந்த மனம் தொட்ட உரையின் முழு காணொளியை இங்கே காணலாம்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/K5bv4RONYe4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:01:12+00:00</updated>
        </entry>
    </feed>
