<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-27T21:53:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்மன் கோவிலில் மறந்தும் செய்யக்கூடாத 5 தவறுகள்.., என்னென்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/5-things-never-do-even-by-mistake-in-amman-temples-1785155868"></link>
            <id>https://manithan.com/article/5-things-never-do-even-by-mistake-in-amman-temples-1785155868</id>
            <summary type="text">ஆடி மாதம் மட்டுமின்றி அனைத்து மாதங்களிலும், குறிப்பாக வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பலரும் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர். 

அம்மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் மட்டுமின்றி அனைத்து மாதங்களிலும், குறிப்பாக வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பலரும் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர். </p><p>

அம்மன் கோவில்களில் சில முக்கியமான மரபுகள் உள்ளன. அவற்றை முறையாகப் பின்பற்றி வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.</p><p>

அதன்படி, அம்மன் கோவிலுக்கு செல்லும்போது சில தவறுகளை செய்யக்கூடாது என ஆன்மிக நம்பிக்கைகள் கூறுகின்றன.</p><p> 

அந்தவகையில், அம்மன் கோவிலுக்கு சென்றால் மறந்தும் செய்யக்கூடாத 5 முக்கிய தவறுகள் குறித்து பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b8d23ac-31e6-467f-9db8-1e6f6ddefe00/26-6a67511ec3e32.webp' /></p><h3>1. கோவில் வாசல் படியை மிதிக்கக் கூடாது</h3><p>

அம்மன் கோவிலுக்குள் நுழையும்போது வாசலில் இருக்கும் படியை மிதிக்காமல் தாண்டிச் செல்ல வேண்டும் என்பது மரபு. அந்தப் படியில் காவல் தெய்வங்கள் இருப்பதால், படியை மிதிப்பது அவமரியாதையாகக் கருதப்படுகிறது.</p><h3>

2. அம்மனை கண்களை மூடி வழிபடக் கூடாது</h3><p>

மாரியம்மன், காளியம்மன், துர்க்கை அம்மன் போன்ற தெய்வங்களை வழிபடும்போது அம்மனின் திருமேனியை பார்த்து வழிபட வேண்டும் என கூறப்படுகிறது.</p><h3> 

3. எலுமிச்சை விளக்கை எங்கு வேண்டுமானாலும் ஏற்றக் கூடாது
</h3><p>
அம்மன் கோவில்களில் வேண்டுதலுக்காக ஏற்றப்படும் எலுமிச்சை விளக்கை கோவில் பிரகாரத்தில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் மட்டுமே எலுமிச்சை விளக்கை ஏற்ற வேண்டும் என்பது வழக்கம்.</p><h3>

4. கொடிமரம் மற்றும் பலிபீடத்தின் நிழலை மிதிக்கக் கூடாது
</h3><p>
கோவிலில் உள்ள கொடிமரம், பலிபீடம் மற்றும் ராஜகோபுரத்தின் நிழலை மிதிக்கக் கூடாது என்பது ஆன்மிக நம்பிக்கை. </p><h2>

5. தவறான திசையில் வலம் வரக்கூடாது
</h2><p>
அம்பாள் சன்னதியை ஆகம விதிகளுக்கு மாறாக தவறான திசையில் சுற்றி வரக்கூடாது என கூறப்படுகிறது. மேலும், அம்மன் கோவில்களில் 5 முறை வலம் வந்து வழிபடுவது சிறப்பானது என்ற நம்பிக்கை உள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T16:30:59+00:00</updated>
        </entry>
    </feed>
