<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-18T09:35:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று ஒரு சவரன் எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/august-18th-2026-gold-and-silver-price-in-chennai-1787040820"></link>
            <id>https://manithan.com/article/august-18th-2026-gold-and-silver-price-in-chennai-1787040820</id>
            <summary type="text">today Gold and silver price :ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>today Gold and silver price :ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக மாற்றங்கள் பதிவாகி வரும் நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.</p><p>

நேற்று (ஆகஸ்ட் 17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,270-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.1,14,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9e1b5f9-a611-498f-8d73-5915b224988b/26-6a84182a43306.webp' /></p><p></p><h2>இன்றைய நிலவரம்&nbsp;</h2><p>

இந்நிலையில், இன்று 22 காரட் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.14,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.160 அதிகரித்து ரூ.1,14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48ac148a-7d15-4e46-8251-b3eacd918295/26-6a84182aebd82.webp' /></p><p> </p><p>18 காரட் தங்கத்தின் விலை
18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று உயர்வு காணப்படுகிறது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.20 அதிகரித்து ரூ.12,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் 18 காரட் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.96,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e34fb40b-b017-42d5-bbae-ca1f65f66b84/26-6a84182b9ec95.webp' /></p><p></p><p>
வெள்ளி விலையில் மாற்றமில்லை
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T08:33:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல்கள் அனைத்தும் நன்னீராக மாறினால்… பூமிக்கு என்ன ஆகும்? அதிர்ச்சியளிக்கு தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-if-all-sea-water-becomes-fresh-water-1787034290"></link>
            <id>https://manithan.com/article/what-if-all-sea-water-becomes-fresh-water-1787034290</id>
            <summary type="text">what will happen if all the sea water becomes fresh water : பூமியின் மொத்தப் பரப்பளவு சுமார் 510 மில்லியன் சதுர கிலோமீட்டர். அதில் சுமார் 71% பகுதி கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>what will happen if all the sea water becomes fresh water : பூமியின் மொத்தப் பரப்பளவு சுமார் 510 மில்லியன் சதுர கிலோமீட்டர். அதில் சுமார் 71% பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது. உலகின் ஐந்து பெருங்கடல்கள் உள்ளிட்ட எண்ணற்ற கடல்களில் உப்பு நீரே நிறைந்துள்ளது.
</p><p>
ஆனால், ஒருநாள் பூமியில் உள்ள அனைத்து கடல்நீரும் திடீரென நன்னீராக மாறிவிட்டால் என்ன நடக்கும் என எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e2fa074-9195-4bc0-b5e8-8261cd5c6d18/26-6a8403bb08fa9.webp' /></p><p> </p><p>இதனை கேட்கும் பலருக்கு இது ஒரு வரபிரசாதம் போல் தோன்றலாம். ஆனால் உண்மையில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. உண்மையில் அப்படி நடந்தால், அது பூமியின் உயிரியல் சமநிலையையே புரட்டிப் போடும் பேரழிவாக இருக்கக்கும்.&nbsp;</p><p>கடல்கள் அனைத்தும் நன்னீராக மாறினால்… பூமி எவ்வாறான சலால்களை எதிர்கொள்ளும் என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ac342c5-82a5-4699-8c7c-786b51362f98/26-6a8403bbcb726.webp' /></p><p></p><h2>என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?&nbsp;</h2><p><b>

ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்படும்:
</b>கடலில் வாழும் பைட்டோபிளாங்க்டன்கள் உலகின் ஆக்சிஜன் சுழற்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கடலின் உவர்ப்பில் ஏற்படும் திடீர் மாற்றம் இவற்றைப் பெருமளவில் பாதித்தால், கார்பன் மற்றும் ஆக்சிஜன் சுழற்சிகளும் பாரியளவில் பாதிக்கப்படும்.</p><p>கடல் பைட்டோபிளாங்க்டன்கள் பூமியின் ஆக்சிஜன் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கடல்நீர் திடீரென நன்னீராக மாறினால், இவை பாதிக்கப்பட்டு கார்பன் மற்றும் ஆக்சிஜன் சுழற்சிகள் சீர்குலையலாம். இதனால் பூமியின் அனைத்து உயிரினங்களுக்கும் நேரடியான பாதிப்பை எதி்கொள்ளும் அபாயம் உருவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f173f9fa-3e3f-4d88-a5d6-294279131241/26-6a8403bc7f4c2.webp' /><br><b>கடல்வாழ் உயிரினங்கள் அழிவை சந்திக்கும்:
</b>மீன்கள், சுறாக்கள், திமிங்கிலங்கள், பவளப்பாறைகள் என பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்கள் உப்பு நீருக்கேற்ப தகவமைந்தவை. கடல் திடீரென நன்னீராக மாறினால், அவற்றின் உடலியல் சமநிலை பாதிக்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம்.</p><p><b>
உணவுச் சங்கிலியும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்:
</b>கடல்வாழ் உயிரினங்கள் குறைந்தால், கடல் உணவுச் சங்கிலியே சிதையும். இதன் தாக்கம் மீன்பிடித் தொழில் மட்டுமல்லாமல், கடலை நம்பி வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திலும் எதிரொலிக்கும்.</p><p><b>காலநிலையும் வானிலையும் மாறலாம்:
</b>கடலின் உவர்ப்பு நீரின் அடர்த்தியையும், முக்கிய கடல் நீரோட்டங்களையும் பாதிக்கிறது. இந்த நீரோட்டங்கள் பூமியின் வெப்பத்தை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்துச் செல்கின்றன. அவை சீர்குலைந்தால், சில பகுதிகளில் கடும் குளிரும், மற்ற பகுதிகளில் அதிக வெப்பமும் ஏற்படலாம். மழைப்பொழிவும் மாறி, சில இடங்களில் வெள்ளமும் மற்ற இடங்களில் நீண்டகால வறட்சியும் உருவாகலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be786384-4190-4989-ace8-27d4c677a31c/26-6a8403bd32e7f.webp' />&nbsp;</p><p></p><p><b>விவசாயத்துக்கும் பாதிப்பு:</b>
வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் நீர் இருப்பில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்கள் விவசாயத்தை கடுமையாகப் பாதிக்கக்கூடும். பயிர்கள் பாதிக்கப்பட்டால், உணவுப் பற்றாக்குறையும் மேலும் தீவிரமடையலாம்.</p><p>
எனவே, கடல்கள் நன்னீராக மாறுவது குடிநீர் பிரச்சினைக்கான தீர்வாக நிச்சயம் இருக்காது மாறாக பூமியின் இயற்கை சமநிலையை சீர்குலைக்கும் மிகப்பெரிய மாற்றமாகவே அமையும். </p><p>கடலின் உப்பு என்பது வெறும் சுவைக்காக அல்ல, அது பூமியின் உயிரியல் மற்றும் காலநிலை அமைப்பைத் தாங்கி நிற்கும் முக்கியமான இயற்கை சமநிலையின் ஒரு பகுதி என்பதே நிதர்சனம்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:06:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் -ராகு சேர்க்கையால் உருவான அங்காரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-rahu-conjunction-angarak-yog-who-get-bad-luck-1787029295"></link>
            <id>https://manithan.com/article/mars-rahu-conjunction-angarak-yog-who-get-bad-luck-1787029295</id>
            <summary type="text">ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவற்றின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவற்றின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.</p><p>அந்த வகையில், கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை மற்றும் துணிச்சலுக்கு காரணியாக விளங்குகிறார். இவர் சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியையும், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00849860-1d63-4189-96f6-65308dd468cb/26-6a83ec267a8bd.webp' /></p><p>

இந்நிலையில், ஆகஸ்ட் 12-ம் தேதி செவ்வாய் திருவாதிரை நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு என்பதால், செவ்வாய்–ராகு இணைப்பு உருவாகியுள்ளது.</p><p>ஜோதிடத்தில் இந்த சேர்க்கை அசுபமாகக் கருதப்படுகிறது. இதனால் அங்காரக யோகம் உருவாகி, மன அழுத்தம், உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் வேலையில் தடைகள் ஏற்படுத்தும்.&nbsp;</p><p>
செவ்வாய் செப்டம்பர் 2-ம் தேதி வரை திருவாதிரை நட்சத்திரத்தில் இருப்பதால், அங்காரக யோகத்தின் தாக்கமும் அதுவரை நீடிக்கும். இதனால் 3 ராசிக்காரர்கள் செப்டம்பர் 2-ம் தேதி வரை எந்த ராசியினர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். என்று இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ba18f8e-b448-4785-93a4-f49dd0473e7f/26-6a83ec2731172.webp' /></p><h2>
</h2><p>செவ்வாய்–ராகுவால் உருவாகும் அங்காரக யோகத்தின் தாக்கத்தால், மேஷ ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். </p><p>வேலை தொடர்பான மனஅழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் தங்கள் தொழிலில் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். பண விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
</p><p>
எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்த்து, பொறுமையுடன் செயல்படுங்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலைப்பளுவை சந்திக்கக்கூடும்.எனவே, மன அழுத்தத்தை குறைத்து, திட்டமிட்டு வேலை செய்வது சிறந்தது.</p><h2>

கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39ee8821-9af3-4fda-9755-f38e721e1464/26-6a83ec27d6002.webp' /></p><h2>
</h2><p>செவ்வாய்–ராகுவால் உருவாகும் அங்காரக யோகத்தின் தாக்கத்தால், கன்னி ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் வேலைகளில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். </p><p>புதிய நபர்களுடன் ஏற்படும் நட்பு சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம் என்பதால், பழகும் விஷயத்தில் நிதானமாக இருப்பது நல்லது.

இந்தக் காலகட்டத்தில் உடல்நலத்திலும் அன்றாட செயல்பாடுகளிலும் அதிக கவனம் தேவை. </p><p>குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அல்லது தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பிரச்சனைகளை பெரிதாக்காமல், ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி தீர்வு காண முயற்சிப்பது நல்லது.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abdbd984-fc30-410c-b690-350f09c8f793/26-6a83ec288dd8d.webp' /></p><p>செவ்வாய்–ராகுவால் உருவாகும் அங்காரக யோகத்தின் தாக்கத்தால், மகர ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழலை சந்திக்க நேரிடலாம். </p><p>பணியிடத்தில் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் விலகி இருப்பது நல்லது. அதேபோல், முக்கியமான முடிவுகளை எடுக்கும் முன் நன்கு ஆலோசித்து செயல்பட வேண்டும்.
</p><p>
புதிய வேலைகளை மேற்கொள்ளும்போது சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் உருவாகக்கூடும். எனவே, அவர்களிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து, நிதானமாகச் செயல்படுவதால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:06:20+00:00</updated>
        </entry>
    </feed>
