<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-08T11:51:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 11ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: தொழில் நிலையில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-moon-creates-gajkesari-rajyog-who-get-luck-1786187770"></link>
            <id>https://manithan.com/article/jupiter-moon-creates-gajkesari-rajyog-who-get-luck-1786187770</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்,&amp;nbsp; மனதின் காரகனாகக் கருதப்படுபவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் மட்டுமே இருப்பதால், அடிக்கடி ராசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்,&nbsp; மனதின் காரகனாகக் கருதப்படுபவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் மட்டுமே இருப்பதால், அடிக்கடி ராசியை மாற்றி, மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப, அசுப யோகங்களை உருவாக்கி 12 ராசிகளின் வாழ்ககையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.</p><p>
அந்த வகையில், ஆகஸ்ட் 11ஆம் தேதி சந்திரன் கடக ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே கடகத்தில் குரு பகவான் பயணித்து வருவதால், சந்திரன்–குரு சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af9550ea-acba-4cbf-b41f-9c22a8f081e4/26-6a77150326af5.webp' /></p><p></p><p>அத்துடன் சூரியன் மற்றும் புதனும் கடகத்தில் இருப்பதால் சதுர்கிரக யோகம், புதாதித்ய ராஜயோகம், ஹன்ஸ் ராஜயோகம் உள்ளிட்ட பல சுபயோகங்களும் உருவாகின்றன.</p><p>குறிப்பாக இந்த கஜகேசரி ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும், இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கவுள்ளதாக கணிக்ப்பட்டுள்ளது. அப்படி அதிகளவில் சாதக பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d93f1fd-a791-49bb-b2ad-6ab46e1b44ff/26-6a771503cd8d9.webp' /></p><p>கடக ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டம் பல வகையிலும் சாதகமானதாக அமையப் போகிறது. கடக ராசியின் முதல் வீட்டில் குரு மற்றும் சந்திரன் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. </p><p>இந்த யோகம் உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதுடன், வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும்.

பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக கிடைக்க வாய்ப்புள்ளது. </p><p>குறிப்பாக பணிபுரிபவர்களுக்கு இந்தக் காலம் மிகவும் சிறப்பாக அமையும். அலுவலகத்தில் உங்கள் திறமை மற்றும் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலாம். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.</p><h2>கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/202c7ad7-8ee5-48fd-9138-f3b50472e265/26-6a7715047df54.webp' /></p><p></p><h2>
</h2><p>கன்னி ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் மிகவும் மங்களகரமானதாக அமையப் போகிறது. கன்னி ராசியின் 11-வது வீட்டில் குரு-சந்திர சேர்க்கை ஏற்படுவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. </p><p>இதன் மூலம் பொருளாதாரம், தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக நிதி நிலைமை வழக்கத்தைவிட சிறப்பாக இருக்கும். </p><p>நீண்ட காலமாக சிக்கித் தவித்த பணம் எதிர்பாராத நேரத்தில் கைக்கு வந்து சேரும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்து, மனதில் நிம்மதி ஏற்படும்.வியாபாரிகளுக்கும் இந்தக் காலம் லாபகரமானதாக இருக்கும்.</p><h2>மீனம்
</h2><p>மீன ராசிக்காரர்களுக்கும் இந்தக் காலகட்டம் மிகவும் சிறப்பான பலன்களை வழங்கக்கூடியதாக உள்ளது. மீன ராசியின் 5-வது வீட்டில் குரு மற்றும் சந்திரன் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. </p><p>இதன் காரணமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவு பல்வேறு விஷயங்களில் கிடைக்கக்கூடும்.

குறிப்பாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சூழல் உருவாகும். </p><p>ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கும் வேலையில் மாற்றம், புதிய பொறுப்பு அல்லது எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமை வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u>&nbsp;</b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T11:39:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sangeetha-next-move-after-withdraws-divorce-case-1786173933"></link>
            <id>https://manithan.com/article/sangeetha-next-move-after-withdraws-divorce-case-1786173933</id>
            <summary type="text">தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கடந்த சில காலமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கடந்த சில காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதன் தொடர்ச்சியாக, கணவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததார்.</p><p>
இந்த மனு தொடர்பான விசாரணையின்போது, இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு முதலில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bfb2816-0209-4a2c-9dd5-a9cfa931019b/26-6a76e37065a5f.webp' /></p><p> ஆனால், அந்த நாளில் விஜய்யும் சங்கீதாவும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், வழக்கு மீண்டும் ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜூன் 15ஆம் தேதியும் இருவரும் ஆஜராகாத நிலையில், வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. </p><p>இதனிடையே, நேற்று மதியம் 12.20 மணியளவில் இந்த விவாகரத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த முறை சங்கீதா முதல்முறையாக வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரானதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca7e7f1c-ace5-46b8-afd8-138739aca047/26-6a76e37115e42.webp' /></p><p></p><p> விசாரணையின்போது சுமார் 20 நிமிடங்கள் தனது தரப்பு வாதங்களை அவர் முன்வைத்தார். பின்னர், முக்கிய திருப்பமாக, தான் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.</p><p>

இதையடுத்து, விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா தாக்கல் செய்திருந்த மனு திரும்பப் பெறப்பட்ட நிலையில், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்ததாக தகவல் வெளியானது.</p><h2>விஜய்யுடன் மீண்டும் இணைவாரா?&nbsp;</h2><p>
விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையே சங்கீதா தற்போது வாபஸ் பெற்றிருப்பது, விஜய்–சங்கீதா குடும்ப வாழ்க்கை குறித்த பல்வேறு கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. </p><p>குறிப்பாக, இருவரும் மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளார்களா? அல்லது விவாகரத்து வழக்கை மட்டுமே வாபஸ் பெற்றுவிட்டு, தொடர்ந்து தனித்தனியாக வாழ்கிறார்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a1667fa-b085-4392-b08f-b70e377bb4e5/26-6a76e371c0a0d.webp' /></p><p>
</p><p>
மகன் ஜேசன் பேட்டி ஏற்படுத்திய எதிர்பார்ப்பு
இதற்கிடையே, அண்மையில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விஜய் மற்றும் சங்கீதா குறித்து அவர்களது மகன் ஜேசன் நல்லவிதமாக பேசியிருந்தார்.</p><p>இந்த நிலையில், தற்போது சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றிருப்பது, குடும்பத்தில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் தொடர்பாக புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>மற்றொரு புறம், சங்கீதா தற்போது லண்டனில் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், அவர் மீண்டும் சென்னைக்கு திரும்புவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2f1a69d-7e85-445d-b3a3-d93d1d9685ab/26-6a76e3727408c.webp' /></p><p></p><p>விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, குடும்பத்தைக் கவனிக்காதவர் என்ற ரீதியில் முன்வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களுக்கு சஞ்சயின் பேச்சும், இப்போது சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்ற முடிவும் முற்றுப்புள்ளி வைத்துள்ளன.&nbsp;</p><p>
</p><p>எனினும், சங்கீதாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அவரது தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஆகஸ்ட் 25 அன்று விஜய் - சங்கீதா தம்பதியரின் 27-வது திருமண நாள் வரவுள்ள நிலையில், அவர்கள் மீண்டும் இணைந்து சுமுகமாக வாழ வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T09:48:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வமகள் சேமிப்பு திட்டம்.., மாதம் ரூ.3,000 சேமித்தால் எவ்வளவு கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sukanya-samriddhi-yojana-details-in-tamil-1786181847"></link>
            <id>https://manithan.com/article/sukanya-samriddhi-yojana-details-in-tamil-1786181847</id>
            <summary type="text">பெண் குழந்தைகளின் எதிர்கால நிதி தேவைகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் முக்கியமான சிறுசேமிப்புத் திட்டங்களில் ஒன்று செல்வமகள் சேமிப்புத் திட்டம்....</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண் குழந்தைகளின் எதிர்கால நிதி தேவைகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் முக்கியமான சிறுசேமிப்புத் திட்டங்களில் ஒன்று செல்வமகள் சேமிப்புத் திட்டம்.
</p><p>
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் முதலீடு செய்யலாம். </p><p>

ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். தற்போது இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.&nbsp;</p><p>10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f822183-2c58-4b58-a717-e062639a9237/26-6a76f9b430784.webp' /></p><p>கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை பணம் செலுத்த வேண்டும். ஆனால், கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகே கணக்கு முதிர்வடையும்.</p><p> 

15 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் செலுத்த வேண்டியதில்லை என்றாலும், கணக்கில் விதிகளின்படி வட்டி தொடர்ந்து சேரும்.
</p><p>
பெண் குழந்தையின் உயர்கல்வி போன்ற தேவைகளுக்காக இத்திட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட அளவு தொகையைப் பெறலாம்.
</p><p>
செல்வமகள் சேமிப்புத் திட்டம் EEE வகையைச் சேர்ந்த சேமிப்புத் திட்டமாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45b04bc7-daad-4749-a9a1-4488e28ca0ce/26-6a76f9b366126.webp' /></p><p>இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80Cன் கீழ், விதிகளுக்கு உட்பட்டு வரிச்சலுகை கிடைக்கும். </p><p>

மேலும், கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு உள்ளது.
</p><p>
இத்திட்டத்தில், மாதம் ரூ.3,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் மொத்தம் ரூ.5.40 லட்சம் முதலீடு செய்யப்படும்.
</p><p>
இந்தத் தொகை 21 ஆண்டுகளில் சுமார் ரூ.17.23 லட்சமாக மாறும். இதில் சுமார் ரூ.11.83 லட்சம் வட்டியாக கிடைக்கும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T09:46:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் விலையில் மீண்டும் அதிரடி ஏற்றம் - சவரனுக்கு ரூ.1,720 உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/august-8th-2026-gold-and-silver-price-in-chennai-1786177341"></link>
            <id>https://manithan.com/article/august-8th-2026-gold-and-silver-price-in-chennai-1786177341</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்க விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

நேற்று, ஆகஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்க விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p>

நேற்று, ஆகஸ்ட் 7-ஆம் தேதி, தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,750-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e79cf7ec-cc18-443a-8732-5630ee88913f/26-6a76ea7408a1c.webp' /></p><p></p><h2>இன்றைய நிலவரம்&nbsp;</h2><p>

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 8) 22 காரட் தங்கத்தின் விலை ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.215 அதிகரித்து ரூ.13,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,720 உயர்ந்து ரூ.1,11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம், தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நகை வாங்கத் திட்டமிடுபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5342539-7295-444b-a096-f8f0be690487/26-6a76ea74b0a29.webp' /></p><p> குறிப்பாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1.11 லட்சத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

18 காரட் தங்கம் விலை
18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது.</p><p> ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.11,780-க்கும், ஒரு சவரன் ரூ.94,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 18 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.65 உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரு சவரன் விலை ரூ.520 அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81cc747c-e5a3-4d87-8648-ae901bd66765/26-6a76ea7562a5b.webp' /></p><p></p><p>

வெள்ளி விலையில் மாற்றமில்லை
மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T08:38:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actor-mohan-sharma-old-age-home-drama-revealed-1786167789"></link>
            <id>https://manithan.com/article/actor-mohan-sharma-old-age-home-drama-revealed-1786167789</id>
            <summary type="text">kutty padmini slams actor mohan-sharma : 70, 80-களில் மலையாளத் திரையுலகில் வெளியான பிரபலமான ‘சட்டகாரி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் 170 க்...</summary>
            <content type="html"><![CDATA[<p>kutty padmini slams actor mohan-sharma : 70, 80-களில் மலையாளத் திரையுலகில் வெளியான பிரபலமான ‘சட்டகாரி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் 170 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்&nbsp;மூத்த நடிகர் மோகன் சர்மா.</p><p>மேலும் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து, இயக்கி, ஒரு காலத்தில் புகழிலும் பணத்திலும் உச்சத்தில் இருந்த மோகன் சர்மா, சமீபத்தில் அளித்த பேட்டி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>

“ஒரு காலத்தில் போயஸ் கார்டனில் வாழ்ந்த எனது வாழ்க்கை இன்று இப்படி ஆகிவிட்டது. உடல்நிலை சரியில்லாமல், மாத்திரை வாங்கக்கூட பணமில்லாத நிலையில் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறேன்” என்று அவர் கண்ணீருடன் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் அனுதாபத்தை பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a48a7585-adb8-417f-a3d7-490d27763b2b/26-6a76cf724663a.webp' /></p><h2>உண்மையை உடைத்த&nbsp; குட்டி பத்மினி&nbsp;</h2><p>
இந்தப் பேட்டிக்கு பதிலளிக்கும் விதமாக, நடிகை குட்டி பத்மினி வெளியிட்ட வீடியோவில் பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
</p><p><b>குட்டி பத்மினி குறிப்பிடுகையில்,&nbsp;</b></p><p>மோகன் சர்மா தனது பேட்டியில், தென்னிந்திய பிலிம் சேம்பர் தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், தனது தகவலின்படி, கடந்த ஆண்டுதான் பிலிம் சேம்பர் சார்பில் அவருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டதாக குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f56873-16c0-45d6-9a7e-b02b948cf373/26-6a76cf72eb08d.webp' /></p><p>
“பணத்தையும் பெற்றுக்கொண்டு, யாருமே எனக்கு உதவவில்லை என்று எப்படி சொல்ல முடிகிறது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

“போயஸ் கார்டன் வீடு யாருடைய பணத்தில் வாங்கப்பட்டது?”
மோகன் சர்மா தனது பழைய வாழ்க்கையை நினைவுகூரும்போது குறிப்பிட்டதாகக் கூறப்படும் போயஸ் கார்டன் வீடு குறித்தும் குட்டி பத்மினி பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.</p><p>
நடிகை லஷ்மியை மோகன் சர்மா திருமணம் செய்து வாழ்ந்த காலகட்டத்தில், அந்த வீட்டை வாங்குவதற்காக லஷ்மி தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அந்த வீடு தனது பெயரில் வாங்கப்பட்டதாகவும் குட்டி பத்மினி குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25cb7d1b-d1c4-497e-9ef4-839ebde76e71/26-6a76cf739d3a7.webp' /></p><p></p><p>
“வெயில், மழை பாராமல் உழைத்து சம்பாதித்த பணத்தை லஷ்மி கொடுத்தார். ஆனால் அந்தப் பணத்தில் வாங்கப்பட்ட வீட்டை தனது பெயரில் பதிவு செய்துகொண்டார்” என குட்டிபத்மினி தெரிவித்துள்ளார்.</p><h2>
மூன்று திருமணங்கள்</h2><p>மேலும், இந்த விஷயம் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் லஷ்மிக்கு தெரியவந்ததாகவும் குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், லஷ்மி இதுவரை மோகன் சர்மாவைப் பற்றி பகிரங்கமாக தவறாகப் பேசியதில்லை என்றும், அதே நேரத்தில் மோகன் சர்மா தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கு லஷ்மியே காரணம் என பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
லஷ்மியைப் பிரிந்த பின்னர் மோகன் சர்மா இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து பெற்றதாகவும், அதன் பிறகு சாந்தி என்ற பரதநாட்டியக் கலைஞரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டதாகவும் குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.
</p><p>
மூன்றாவது மனைவியான சாந்தியிடமும் குடும்ப வன்முறை மற்றும் பணம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாக சாந்தியும் அவரைப் பிரிந்து சென்றதாக அவர் கூறுகிறார்.

இவ்வாறு மூன்று பெண்களின் வாழ்க்கையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக மோகன் சர்மா மீது குட்டி பத்மினி பல்வேறு&nbsp; குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/922ff9b3-4eb4-4560-ba30-a04ad49d5ea0/26-6a76cf745220f.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">இது முற்றிலும் பொய்...&nbsp;</span></h2><p>
</p><p>“சாப்பாட்டுக்கே வழியில்லை, மருந்து வாங்கக்கூட பணமில்லை என்று சொல்கிறார். ஆனால் அவர் அணிந்திருக்கும் செருப்பின் விலை ரூ.6,000” என்று கூறியுள்ள குட்டி பத்மினி, “இது எப்படி சாத்தியம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

தொடர்ந்து, மோகன் சர்மா கூறியதாக வெளியான தகவல்களை “நாடகம்” மற்றும் “அண்டப் புளுகு” என கடுமையாக விமர்சித்த அவர், மூன்று பெண்களின் வாழ்க்கையைப் பாதித்ததாகக் கூறப்படும் செயல்களுக்கு ஒருநாள் அவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61dc8c2e-3bd0-4aa7-9519-bd4ec538084c/26-6a76cf750689d.webp' /></p><p></p><p> </p><p>மேலும் தமிஜழக முதலமைச்சர் விஜயிடம் உதவி கேட்டடிருப்பதும் மக்களின் கவனத்தை ஈர்க்கத்தான், அனதாபத்தை பெறத்தான் விஜய் விதவி செய்தாலும் காலம் கடந்தபின் அவரையும் குறை கூறுார் என&nbsp;மோகன் சர்மா குறித்து பல குற்றச்சாட்டுககளை முன்வைத்து பேசியுள்ளார் .குட்டி பத்மினியின்&nbsp; இந்த பேட்டி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T07:07:51+00:00</updated>
        </entry>
    </feed>
