<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-26T17:00:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக சத்தத்தைக் கேட்டால் தலைவலி, எரிச்சல் உணர்வு ஏற்படுகின்றதா? மருத்துவ விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/headaches-and-irritation-when-listening-to-noise-1785074435"></link>
            <id>https://manithan.com/article/headaches-and-irritation-when-listening-to-noise-1785074435</id>
            <summary type="text">பொதுவாக, அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது சிலருக்கு எரிச்சல், அசௌகரியம் அல்லது அமைதியின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.&amp;nbsp;குறிப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது சிலருக்கு எரிச்சல், அசௌகரியம் அல்லது அமைதியின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.&nbsp;</p><p>குறிப்பாக, தொடர்ந்து அதிக இரைச்சல் நிறைந்த சூழலில் இருப்பது அல்லது மணி அடிப்பது, இயந்திரங்களின் சத்தம், ஹார்ன் ஒலி, கட்டுமானப் பணிகளின் இரைச்சல் போன்ற ஒரே மாதிரியான ஒலிகளை மீண்டும் மீண்டும் கேட்பது, சிலருக்கு தலைவலி, சோர்வு மற்றும் மன உளைச்சலையும் ஏற்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb97a31-3169-4683-b5b3-f18791453fd9/26-6a661917398b4.webp' /></p><p>
இத்தகைய நிலை ஒருசிலருக்கு மட்டுமல்ல, பலரிடமும் காணப்படுகிறது. ஆனால், ஏன் சிலருக்கு மட்டும் சத்தம் அதிகமாகத் தொந்தரவு செய்கிறது? அதற்கான காரணங்கள் என்ன? இதைத் தவிர்க்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம்? என்பதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்.</p><p></p><p>
</p><h2>முக்கிய காரணங்கள்
</h2><p>அன்றாட வாழ்க்கையில் பலரும் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். வேலைப்பளு, குடும்பப் பொறுப்புகள், பொருளாதாரச் சிக்கல்கள், போதுமான ஓய்வு இல்லாமை, தூக்கக் குறைபாடு போன்றவை மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.</p><p> மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, மூளை வெளிப்புறத் தூண்டுதல்களுக்கு அதிக உணர்திறனுடன் செயல்படும். இதன் காரணமாக, சாதாரணமாகத் தோன்றும் சத்தங்கள்கூட மிகவும் எரிச்சலூட்டுவதாக உணரப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b70e54b8-c0d5-4005-8f87-8cdb12c4567c/26-6a661917dba9f.webp' /></p><p>

குறிப்பாக, பெண்கள் வீட்டு வேலைகள், அலுவலகப் பொறுப்புகள், குழந்தை பராமரிப்பு, சமையல் உள்ளிட்ட பல பொறுப்புகளை ஒரே நேரத்தில் கவனிப்பதால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக, அதிக சத்தம் அல்லது தொடர்ந்து கேட்கும் ஒரே மாதிரியான ஒலிகள் அவர்களுக்கு எரிச்சல், கவனச்சிதறல் மற்றும் தலைவலியை ஏற்படுத்தக்கூடும்.</p><p>

அதேபோல், தூக்கமின்மை, ஒற்றைத்தலைவலி (மைக்ரேன்), பதட்டக் கோளாறுகள், அதிக சோர்வு அல்லது சிலருக்கு இருக்கும் ஒலி உணர்திறன் (sound sensitivity) போன்ற காரணங்களாலும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.
</p><h2>
இதற்கான தீர்வுகள்
</h2><p>இந்தப் பிரச்சினையை குறைப்பதற்கு முதலில் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். தினமும் போதுமான அளவு தூங்குதல், சீரான உடற்பயிற்சி செய்தல், தியானம் அல்லது மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளுதல், அமைதியான சூழலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தல் போன்றவை மன அமைதியை மேம்படுத்த உதவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a9ece7d-f62e-402c-856f-46359a3aa801/26-6a66191889890.webp' /></p><p>
</p><p>
அதிக இரைச்சல் நிறைந்த இடங்களில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்ப்பதும் நல்லது. தேவைப்பட்டால் காதுகளைப் பாதுகாக்கும் இயர்ப்ளக் (Earplugs) அல்லது இரைச்சலைக் குறைக்கும் ஹெட்போன்களைப் பயன்படுத்தலாம். </p><p>மேலும், இந்தப் பிரச்சினை தொடர்ந்து நீடித்து, அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்கு இருந்தால், காது, மூக்கு, தொண்டை (ENT) நிபுணர் அல்லது நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ede7c17-e739-47d8-8ff7-9feaa28b3b48/26-6a66191935180.webp' /></p><p></p><p>
</p><p>
அதிக சத்தத்தால் ஏற்படும் எரிச்சல் என்பது சாதாரணமான அனுபவமாக இருந்தாலும், அது அடிக்கடி ஏற்பட்டு வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கத் தொடங்கினால், அதன் பின்னால் இருக்கும் காரணத்தைக் கண்டறிந்து சரியான சிகிச்சை அல்லது வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b> <u>FOLLOW NOW</u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T16:28:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/benefits-of-eating-one-cardamom-at-night-1785062842"></link>
            <id>https://manithan.com/article/benefits-of-eating-one-cardamom-at-night-1785062842</id>
            <summary type="text">ஏலக்காய் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மசாலா பொருள் மட்டுமல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. 

இதில் கார்போஹைட்ரேட், நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏலக்காய் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மசாலா பொருள் மட்டுமல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. </p><p>

இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. </p><p>

மேலும், குறைந்த அளவிலான கலோரிகளையும் அவசியமான தாதுக்களையும் வழங்குகிறது.</p><p> 

அந்தவகையில், இரவு தூங்கும் முன் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் சில நன்மைகள் குறித்து பார்க்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a9e11f9-107a-4159-aa69-be65a37be977/26-6a65e5bc3f883.webp' /></p><h2>செரிமானம் மேம்படும்</h2><p>

ஏலக்காய் செரிமான நொதிகளின் செயல்பாட்டைத் தூண்டி, உணவு எளிதில் செரிமானமாக உதவுகிறது. இதனால் வாய்வு, வயிற்று உப்புசம் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் குறையக்கூடும்.
</p><h2>
வாய் துர்நாற்றம் </h2><p>குறையும்

ஏலக்காயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால் வாய் புத்துணர்ச்சியாகவும், நல்ல மணத்துடனும் இருக்கும்.
</p><h2>
நிம்மதியான தூக்கம்</h2><p>

ஏலக்காயில் உள்ள இயற்கை எண்ணெய்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவும். இதனால் மன அழுத்தம் குறைந்து, நிம்மதியான தூக்கம் கிடைக்க உதவும்.</p>]]></content>
            <updated>2026-07-26T15:18:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடி உதிர்வை தடுக்க உதவும் சூறை மீன்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/health-benefits-of-eating-soorai-fish-in-tamil-1785049453"></link>
            <id>https://manithan.com/article/health-benefits-of-eating-soorai-fish-in-tamil-1785049453</id>
            <summary type="text">மீன் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் பி1...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீன் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
</p><p>
மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் பி12 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
</p><p>
அந்தவகையில், குறைந்த விலையில் கிடைக்கும் சூரை மீன் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது.
</p><p>
இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் சூரை மீன்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a2b2dc-97e7-4ec3-9063-619f6736dfdc/26-6a65b2049a45f.webp' /></p><p>சூரை மீனில் அதிகளவு புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12, நியாசின், செலினியம், வைட்டமின் பி6 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.&nbsp;</p><p>அதாவது, 85 கிராம் சூரை மீனில் சுமார் 21 கிராம் புரதம் இருப்பதாக கூறப்படுகிறது.
</p><p>
சூரை மீனில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. </p><p>

மேலும், நியாசின் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் முடி வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8bc7b22-ea65-4b34-8758-7cad7b01cc6f/26-6a65b2058300f.webp' /></p><p>இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவக்கூடும் என்பதால் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.</p><p>இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கண் ஆரோக்கியத்திற்கும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவக்கூடும் என கூறப்படுகிறது.
</p><p>
வஞ்சிரம் போன்ற விலை உயர்ந்த மீன்களுடன் ஒப்பிடும்போது, சூரை மீன் குறைந்த விலையில் கிடைக்கிறது.</p>]]></content>
            <updated>2026-07-26T13:23:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோதனைகளை சாதனைகளாக மாற்றும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/zodiacs-who-born-with-healing-power-1785059384"></link>
            <id>https://manithan.com/article/zodiacs-who-born-with-healing-power-1785059384</id>
            <summary type="text">மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இயல்பானவை. ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் சவால்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.ஆன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இயல்பானவை. ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் சவால்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.ஆனால், அந்த சூழ்நிலைகளிலும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் முன்னேறுபவர்களே வெற்றியை அடைகிறார்கள்.</p><p>ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் இந்த 3 ராசிகளில் பிறந்தவர்கள் சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் தங்களின் இலக்கில் குறியாக இருப்ந்து பழி சொன்னவர்கள் முன்னிலையிலும், அவமானப்படுத்தியவர்கள் மத்தியிலும் நிச்சம் சாதித்து காட்டுவார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c55bda63-ee5c-46a8-8aae-fbb0b24bbc02/26-6a65ddd6cfa59.webp' /></p><p>அப்படி பிறப்பிலே அதீத தன்னம்பிக்கையும், மன உறுதியும் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c687fe65-81ec-4e93-bc9f-0db360ab8374/26-6a65ddd77f999.webp' /></p><p>மகர ராசியில் பிறந்தவர்கள் ஒழுக்கத்தின் கிரகமான சனிபகவானால் ஆளப்படுவதால், இவர்களின் வாழ்வில் நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.</p><p> 

இந்த ராசியினர் தங்களுக்கு வலிகளை கொடுத்தவர்களுக்கும் துரோகம் செய்தவர்களுக்கு தங்களின் வெற்றியால் பதில் சொல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
</p><p>
இவர்களை சுற்றி இருக்கும் அனைவரும் இவர்களின் வளர்ச்சியை தடுக்க முயன்றாலும் தனிஒருவராக நின்று வாழ்வில் சாதித்துகாட்டு தைரியம் இவரை்களுக்கு இயல்பிலேயே இருக்கும்.&nbsp;</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c47b2e9e-2a98-4b21-b573-b2dbaa2608e6/26-6a65ddd82f9e9.webp' /></p><p>ரிஷப ராசியில் பிறந்தவர்கள்&nbsp; எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் தங்களின் தன்னம்பிக்கையை இழக்கவே மாட்டார்கள். </p><p>இவர்கள் வாழ்வில் அழுத்தம் என்பது புதியது அல்ல. இவர்கள் வலிகளை சுமந்துககொண்டே வாழ்வில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.&nbsp;</p><p>இவர்களை அவமானப்படுத்தினாலும் கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் இருந்து தங்களின் வெற்றியால் பதில் சொல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தேவையற்ற விவாதங்களில்&nbsp; இருந்து அமைதியாக விலகிவிடுவார்கள்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43bfbf4a-2075-4947-8ffb-7253d4c4f448/26-6a65ddd8d831f.webp' /></p><p></p><p>கடக ராசியினரிடம், இயல்பிலேயே&nbsp; அசாத்திய தைரியம் இருக்கும். 

இவர்கள் தங்கள் சுறுசுறுப்பான ஆற்றல் மற்றும் அச்சமற்ற மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
</p><p>
இவர்களுக்கு வலிகளை கொடுத்து வளர்ச்சியை தடுப்பது மிகவும் கடினமாக காரியமாக இருக்கும். இவர்கள் தங்களின் வலிகளை சாதனைகளாக மாற்றும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்.&nbsp;</p><p>இவர்களை மனதளவில் நொருக்கினாலும், அதனை தாங்களாகவே சரிப்படுத்திக்கொண்டு தங்களின் வெற்றியால், அவதூறு பேசியவர்கள் முகத்தில் கரியை பூசுவார்கள். இவர்களை&nbsp; தோற்கடிப்பது அசாத்தியம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T11:31:39+00:00</updated>
        </entry>
    </feed>
