<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-20T09:49:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.153 கோடி லாட்டரி வெற்றி.., ஒரே மணி நேரத்தில் ஏழையான பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/wins-153-crore-lottery-tragically-becomes-poor-1784445991"></link>
            <id>https://manithan.com/article/wins-153-crore-lottery-tragically-becomes-poor-1784445991</id>
            <summary type="text">இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரூ.153 கோடி லாட்டரி பரிசு கிடைத்தும், அதை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

லாட்டரி வென்ற பெண் 

இங்கிலாந்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரூ.153 கோடி லாட்டரி பரிசு கிடைத்தும், அதை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>

லாட்டரி வென்ற பெண் </h2><p>

இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸில் வசிக்கும் கீத் மெயின் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார்.</p><p> 

ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற லாட்டரி குலுக்கலில், கீத் வாங்கிய சீட்டுக்கு 12 மில்லியன் பவுண்டுகள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.153 கோடி ஆகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb4e8150-bee1-4b67-b6fe-6e3ddeb55fa5/26-6a5c7c293bf5c.webp' /></p><p>லாட்டரியில் வெற்றி பெற்றதை அறிந்த கீத், உடனடியாக தனது தாயிடம் தெரிவித்தார். </p><p>

கீத்தின் தாய், அந்த லாட்டரி சீட்டை இயந்திரத்தில் ஸ்கேன் செய்து பார்த்தபோது எந்தவிதமான எச்சரிக்கை ஒலியும் வரவில்லை.&nbsp;</p><h2>ஏழையான பெண் </h2><p>

அந்த சீட்டு வெற்றி பெற்றதாக தெரியவில்லை என நினைத்து, அதை லாட்டரி மையத்தில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசிவிட்டார்.</p><p>

இதையடுத்து, கீத் உடனடியாக லாட்டரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு, வெற்றி பெற்ற சீட்டு தங்களிடம் இருந்ததாக தெரிவித்தார்.</p><p>

இதனைத்தொடர்ந்து அந்த லாட்டரி சீட்டு கிடைக்காததால் ரூ.153 கோடி பரிசை வென்றும், அதை பெற முடியாமல் கீத் தவித்து வருகிறார்.
</p><p>
இந்நிலையில், லாட்டரி நிறுவனம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. </p><p>

இதற்காக 30 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டதை தொடர்ந்து கீத் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T08:55:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைந்த விலையில் கிடைக்கும் பவளப்பாறை மீன்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/pavala-parai-fish-health-benefits-in-tamil-1784534310"></link>
            <id>https://manithan.com/article/pavala-parai-fish-health-benefits-in-tamil-1784534310</id>
            <summary type="text">பொதுவாக, மீன் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, மீன் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.</p><p>

மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் பி12 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. </p><p>

அந்தவகையில் குறைந்த விலையிலும், அதிக சத்துக்கள் நிறைந்த பவளப்பாறை மீன் குறித்து பார்க்கலாம்.
</p><p>
பவளப்பாறைகளில் வளரும் பாசிகளை இந்த மீன்கள் உணவாக உட்கொள்வதனால் பவளப்பாறைகள் ஆரோக்கியமாக வளர உதவுகின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb4e04e4-144d-4fae-b2ff-da514e9fedb1/26-6a5dd592b5425.webp' /></p><p>இந்த மீன்களில் அதிகம் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், டிரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. </p><p>

மேலும், மூட்டுவலி அறிகுறிகளைக் குறைக்கவும், மனநலத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
</p><p>
குறிப்பாக இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கவும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.&nbsp;</p><p>மேலும், இந்த மீன்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86fdc9db-a867-4f70-a519-565bb251eb13/26-6a5dd59377b18.webp' /></p><p>

அதேபோல், இதில் உள்ள குறைந்த அளவு கொழுப்பு மற்றும் அதிக அளவு புரதம் இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. </p><p>

பவளப்பாறை மீன்களில் உள்ள அத்தியாவசிய கொழுப்புச் சத்துக்கள் மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.
</p><p>
மேலும், இதில் உள்ள ஒமேகா-3 மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-20T08:50:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் செல்லுமிடமெல்லாம் இருக்கும் இந்த பையன் யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/who-this-young-man-accompanied-chief-m-vijay-1779964521"></link>
            <id>https://manithan.com/article/who-this-young-man-accompanied-chief-m-vijay-1779964521</id>
            <summary type="text">முதலமைச்சர் விஜய் டெல்லிக்கு பயணம் சென்றிருந்தார் அப்போது அவருடன் வந்த இளஞைன் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.முதலமைச்சர் விஜய்தமிழ்நாடு முதலமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதலமைச்சர் விஜய் டெல்லிக்கு பயணம் சென்றிருந்தார் அப்போது அவருடன் வந்த இளஞைன் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f656edb5-7238-4b4e-9d55-7ef96bd4766c/26-6a182048da653.webp' /></p><h3><b>முதலமைச்சர் விஜய்</b></h3><p>தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லி சென்றார். </p><p>சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் டெல்லிக்கு சென்றார். அவருக்கு அங்கு சிறந்த வரவேற்பு கொடுக்கபட்டது.&nbsp;</p><p></p><p> </p><p>காவல் துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதன் பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் 4.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரின் அலுவலகத்தில் சந்தித்து இருந்தார்ஃ&nbsp;</p><p>இப்படி இருக்க முதலமைச்சர் விஜய்யுடன் எப்போதும் இருக்கும் இளைஞன் யார் என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5213d9d4-95b3-480a-aa5d-df18195d859b/26-6a18204997445.webp' /></p><h2><b>இளைஞன் யார்?</b></h2><p>
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணத்தின் போது அவருடன் சென்றவர்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.&nbsp;</p><p> அதில் இருக்கும் ஜெகதீஷ் எனும் இளைஞன் யார் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c77ef83-f52c-4a7a-9e5d-8b6adbefcc41/26-6a18204a4743f.webp' /></p><p> </p><p>இந்த ஜெகதீஷ் விஜய்யின் ஹேர் ஸ்டைலிஸ்ட். பிரதமரை சந்திக்கும் டெல்லி பயணத்தில் இவரும் உடன் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.</p><p>அண்மையில் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிகழ்வின் போது விஜய்க்கு சிகை அலங்காரம் செய்தது இவர் தான். இதுதொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துக்கு ஜெகதீஷ் அஸ்வதி பேட்டி கொடுத்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;அதில் அவர் பேசியதாவது<b>&nbsp; "எனக்கு 10ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் ஆசை.</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e93c7824-c0c7-4281-bdaa-ec0c6f0e26fa/26-6a18204aeaf7a.webp' /></p><p> </p><p><b>இதற்கான படிப்புகளை முடித்து சலூன்களில் வேலை பார்த்து, முன்னணி ஹேர் ஸ்டைலிஸ்டுகளிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிறகு மெல்ல மெல்ல என்னைப் பற்றிய தகவல் பரவியது.</b></p><p><b> அப்படி 'பிகில்' திரைப்படத்தின் போது விஜய் சாரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.அதன்பின் 'மாஸ்டர்', 'பீஸ்ட்', 'வாரிசு', 'லியோ', 'தி கோட்' மற்றும் இன்னும் வெளியாகாத 'ஜன நாயகன்' உள்ளிட்ட விஜய்யின் அனைத்து திரைப்படங்களிலும் இந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன்.</b></p><p></p><p> </p><p><b>'மாஸ்டர்' படப்பிடிப்பு முடிந்த தருணம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது விஜய் சார் என்னிடம், "வெல்டன் தம்பி!" என்று கூறி என்னை பாராட்டினார். அந்த தருணம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது."</b> என்று கூறி உள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> FOLLOW NOW&nbsp;&nbsp;</b></a></td></tr></tbody></table><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-20T07:59:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Today Gold Rate: வாரத்தின் முதல்நாளிலே அதிகரித்த தங்கத்தின் விலை... இன்று சவரன் எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gold-rate-july-20-2026-india-and-srilanka-1784527709"></link>
            <id>https://manithan.com/article/gold-rate-july-20-2026-india-and-srilanka-1784527709</id>
            <summary type="text">ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</p><h2>இன்றைய தங்கம் விலை
</h2><p>ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ 13,135 ஆகவும் சவரன், ரூ.1,05,080 ஆகவும் இருந்து வந்தது.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, 13,150 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 120 அதிகரித்து, 1,05,200 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
</p><p>ஆனால் வெள்ளியின் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. இன்று கிராமுக்கு ரூ. 235.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,43,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19a5a9a6-129f-4b48-9890-c9c2a5d7663d/26-6a5dbd6333b16.webp' /></p><p>
</p><h2>
இலங்கையில் தங்கம் விலை
</h2><p>இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,64,880 அதுவே கிராமிற்கு ரூ.45,610க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,34,480க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 41,810க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 597.20 LKR என்றும் ஒரு அவுன்ஸ 18,575.06 LKR என்று விற்பனை ஆகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b6125d4-be98-45d3-8372-71b70c131d38/26-6a5dbd63e522d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T06:17:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Oats Kara Paniyaram: ஆரோக்கியமான ஓட்ஸ் கார பணியாரம்... வீட்டில் செய்வது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/healthy-oats-kara-paniyaram-in-tamil-1784522730"></link>
            <id>https://manithan.com/article/healthy-oats-kara-paniyaram-in-tamil-1784522730</id>
            <summary type="text">ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ஓட்ஸ் கொண்டு எவ்வாறு சுவையான கார பணியாரம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.பணியாரம் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ஓட்ஸ் கொண்டு எவ்வாறு சுவையான கார பணியாரம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.</p><p>பணியாரம் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.</p><p>அதிலும் இன்னும் ஆரோக்கியமான வகையில் ஓட்ஸ் கொண்டு பணியாரம் செய்யலாம். இன்றைய காலத்தில் ஓட்ஸ் ஆரோக்கிய உணவாக இருக்கின்றது.</p><p>வயது முதிர்ந்த பெரும்பாலான நபர்கள் ஓட்ஸை தான் காலை உணவாக சாப்பிடுகின்றனர். இந்நிலையில் ஓட்ஸ் கொண்டு ஆரோக்கியமான முறையில் பணியாரம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ac652a2-4009-49d1-93fd-eb9ecddeada0/26-6a5daff2a367e.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">தேவையான பொருட்கள்</span></h2><p>Instant Oats - 1 கப்
<br>அரிசி மாவு - ¼ கப்
<br>கெட்டி தயிர் - ½ கப்
<br>பெரிய வெங்காயம் - 1
<br>கேரட் - 1
<br>பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
<br>கடுகு - ½ டீஸ்பூன்
<br>சீரகம் - ½ டீஸ்பூன்
<br>பெருங்காய தூள் - ¼ டீஸ்பூன்
<br>எண்ணெய் - தேவையான அளவு
<br>கறிவேப்பிலை - சிறிதளவு
<br>கொத்தமல்லி இலை - சிறிதளவு
<br>உப்பு - தேவையான அளவு
<br>தண்ணீர் - தேவைக்கேற்ப</p><p></p><h2>செய்முறை</h2><p>அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் ஓட்ஸ் போட்டு மிதமான தீயில் 4-5 நிமிடங்களுக்கு நிறம் மாறாமல் நறுமணம் வரும் வரை வறுத்து எடுத்து நன்றாக ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு கரடுமுரடான பொடியாக அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.</p><p>பின்னர் அதில் சலித்த அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கெட்டியான புதிய தயிரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலந்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு தயாரிக்கவும்.</p><p>பின்னர் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் சீரகம் போட்டு கடுகு வெடித்ததும் பெருங்காய தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31999079-6df9-4d5e-8bff-d2a8de41472b/26-6a5daff1f37db.webp' /></p><p>அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் துருவிய கேரட்டை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.</p><p>வெங்காயம் மற்றும் கேரட் மென்மையாக வதங்கியவுடன் அவற்றை அப்படியே தயார் செய்துள்ள மாவில் கொட்டி நன்றாக கலந்துவிட்டுக் பின்பு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை போட்டு நன்றாக கலக்கவும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T05:19:52+00:00</updated>
        </entry>
    </feed>
