<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-19T10:35:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/severe-heat-wave-under-water-museum-in-croatia-1784455903"></link>
            <id>https://manithan.com/article/severe-heat-wave-under-water-museum-in-croatia-1784455903</id>
            <summary type="text">&amp;nbsp;ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வரும் நிலையில், அந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க வித்தியாசமான சுற்றுலா அனு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வரும் நிலையில், அந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க வித்தியாசமான சுற்றுலா அனுபவத்தை நாடும் பயணிகளின் கவனத்தை குரோஷியா நாட்டில் அமைந்துள்ள கடலடி அருங்காட்சியகம் வெகுவாக ஈர்த்துள்ளது.</p><p>
குரோஷியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ட்ரோகிர் நகருக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், கடலுக்கு அடியில் உருவாக்கப்பட்ட தனித்துவமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c75af38b-974d-4fd1-a68d-90fa52e7ef10/26-6a5ca7aa22a3b.webp' /></p><p></p><h2>என்ன சிறப்பு?</h2><p> கிறிஸ்தவ மதத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாதையை (Stations of the Cross) சித்தரிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடலின் சுமார் 4 மீட்டர் ஆழத்தில் பல்வேறு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9 மீட்டர் ஆழத்தில் இயேசு கிறிஸ்துவின் பிரம்மாண்ட சிலை நிறுவப்பட்டிருப்பது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. கடலின் தெளிந்த நீருக்குள் இந்த சிற்பங்களை நேரில் காணும் அனுபவம், சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத நினைவாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/019f063e-30c6-4bfc-b957-c793d1a89584/26-6a5ca7aac8ec9.webp' /></p><p></p><p>இந்த அருங்காட்சியகத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் அதன் குறைந்த ஆழமாகும். இதனால், நீச்சல் தெரியாதவர்கள்கூட ஸ்னோர்க்லிங் (Snorkelling) உபகரணங்களின் உதவியுடன் பாதுகாப்பாக கடலுக்குள் சென்று சிற்பங்களை ரசிக்க முடியும்.</p><p> இதற்கான பாதுகாப்பு வசதிகளும் வழிகாட்டுதல்களும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தற்போது ஐரோப்பா முழுவதும் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், குளிர்ச்சியான கடல் சூழலை அனுபவிப்பதற்கும், வித்தியாசமான கலாச்சார மற்றும் ஆன்மிக அனுபவத்தை பெறுவதற்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த கடலடிப் அருங்காட்சியகத்தை நோக்கி வருகை தருகின்றனர்.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Crowds dive into Croatia&#39;s underwater museum to cool off<br><br>Tourists sought relief from Europe&#39;s summer heatwave by diving into Croatia&#39;s underwater museum near Trogir on Friday (July 17), exploring statues and sculptures submerged in the cooler waters. The museum features the… <a href="https://t.co/RUl4FNIJRp">pic.twitter.com/RUl4FNIJRp</a></p>&mdash; The Manila Times (@TheManilaTimes) <a href="https://x.com/TheManilaTimes/status/2078217930551255344?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T10:33:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்பாதிப்பதை மேக்அப் பொருட்களுக்கே செலவிடும் டாப் 3 பெண் ராசிகள்! உங்க ராசி என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-zodiac-sign-women-spent-more-money-for-makeup-1784449522"></link>
            <id>https://manithan.com/article/what-zodiac-sign-women-spent-more-money-for-makeup-1784449522</id>
            <summary type="text">அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற பழமொழி பலருக்கும் தெரிந்ததே. மனதில் நல்ல எண்ணங்களும், தூய்மையான சிந்தனைகளும் இருந்தால் அது முகத்தில் பிரதிபலிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற பழமொழி பலருக்கும் தெரிந்ததே. மனதில் நல்ல எண்ணங்களும், தூய்மையான சிந்தனைகளும் இருந்தால் அது முகத்தில் பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது.
</p><p>
உள்ளத்தையும், வெளித்தோற்றத்தையும் அழகாக வைத்திருப்பது நம் கையில்தான் உள்ளது. நல்ல சிந்தனைகள் மனதை மேம்படுத்துவது போல, ஆரோக்கியமான உணவு மற்றும் சிறந்த சுகாதார பழக்கங்கள் வெளிப்புற அழகையும் பராமரிக்க உதவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4485ba43-c874-4e4a-b29b-1ccd79a4cf44/26-6a5c8e47c2eae.webp' /></p><p>

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களின் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என கூறப்படுகிறது. </p><p>குறிப்பாக ஒப்பனைகள், நவீன ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் சரும பராமரிப்பு பொருட்கள் என தங்களை அழகுபடுத்துவதில் அதிக ஆர்வம் கொண்ட அந்த ராசிப் பெண்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dd3feec-2435-47ca-9648-3a8e27e74f9a/26-6a5c8e4873a70.webp' /></p><p>

அழகு, ஆடம்பரம் மற்றும் வசதிகளின் அடையாளமாகக் கருதப்படும் சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி பெண்கள், இயல்பாகவே அழகு சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.</p><p>

எப்போதும் அழகாகவும், நேர்த்தியாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். வெளியே செல்லும் போது கூட தங்களை சிறப்பாக தயார்படுத்திக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.</p><p>

தங்களின் தோற்றத்தை மேம்படுத்துவதற்காக அழகு சாதனப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்களுக்கு அதிக நேரமும் பணமும் செலவிடும் பழக்கம் இவர்களிடம் காணப்படும்.</p><h2>

சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f2ecf29-2211-446d-8efc-de0d6c301eda/26-6a5c8e4921cec.webp' /></p><p>

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்பும் ராசிகளில் சிம்மம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த ராசியில் பிறந்த பெண்கள் தங்களின் வெளித்தோற்றத்தை அழகாகவும் கவர்ச்சியாகவும் வைத்திருப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
</p><p>
ஒப்பனை என்பது இவர்களுக்கு வெறும் அழகுக்கான விஷயம் மட்டுமல்ல; அது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு வழியாகவும் இருக்கும்.
</p><p>
தங்களை அழகாக பராமரித்துக் கொள்வதன் மூலம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவும், தங்களுக்கான மதிப்பையும் அங்கீகாரத்தையும் நிலைநாட்டவும் விரும்புவார்கள். அதனால் தங்களின் தோற்றத்தை பராமரிப்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள்.</p><p></p><h2>

கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f2ecf29-2211-446d-8efc-de0d6c301eda/26-6a5c8e4921cec.webp' /></p><p>

அழகு மற்றும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுக்கிரனின் தாக்கம் கொண்டதாகக் கருதப்படும் கடக ராசி பெண்களும், தங்களின் தோற்றத்தில் அதிக கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள்.</p><p>

தாங்கள் இருக்கும் இடத்தில் அனைவரின் கவனமும் தங்களின் மீது ஈர்க்கப்பட வேண்டும் என்ற விருப்பம் இவர்களிடம் இருக்கும்.</p><p>
இவர்கள் இயற்கையாகவே மென்மையான அழகும் வசீகரமான தோற்றமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும், தங்களை மேலும் அழகாக காட்டிக் கொள்ள ஒப்பனை மற்றும் அலங்காரத்திற்காக அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுவார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T08:44:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரோட்டா கடை சிக்கன் சால்னா சுவையின் ரகசியம் தெரியுமா? இனி வீட்டிலேயே எளிதாக செய்யலாம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/parotta-kadai-style-chicken-salna-recipe-1784443069"></link>
            <id>https://manithan.com/article/parotta-kadai-style-chicken-salna-recipe-1784443069</id>
            <summary type="text">விடுமுறை நாள் வந்தாலே வீட்டில் சப்பாத்தி, பூரி, பரோட்டா போன்ற பிடித்தமான டிபன் வகைகளை செய்து குடும்பத்துடன் ரசித்து சாப்பிடுவது பலரின் வழக்கம். ஆனால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுமுறை நாள் வந்தாலே வீட்டில் சப்பாத்தி, பூரி, பரோட்டா போன்ற பிடித்தமான டிபன் வகைகளை செய்து குடும்பத்துடன் ரசித்து சாப்பிடுவது பலரின் வழக்கம். </p><p>ஆனால் அதற்கு சைடு டிஷாக எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் கிரேவி அல்லது குருமாவையே செய்து சலித்துவிட்டதா?

இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக, ஹோட்டல் சுவையில் அசத்தும் ஒரு சைடு டிஷ் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f8890b9-3ac9-4995-92d5-7f26bf1934cf/26-6a5c75b690b96.webp' /></p><p> </p><p>அதற்கு சிறந்த தேர்வு என்றால், அனைவரும் விரும்பி சாப்பிடும் பரோட்டா கடை ஸ்டைல் சிக்கன் சால்னாதான். இந்த சால்னா பரோட்டாவுக்கு மட்டுமல்ல, சப்பாத்தி, பூரி, தோசை, இடியாப்பம் போன்ற பல உணவுகளுடனும் அருமையாக பொருந்தும். </p><p>பரோட்டா கடையில் கிடைக்கும் சால்னாவுக்கு ஏன் அந்த தனித்துவமான சுவை இருக்கிறது என்று பலரும் ஆச்சரியப்படுவார்கள். அதே ஹோட்டல் ஸ்டைல் சுவையை இப்போது உங்கள் வீட்டிலேயே எளிதாக செய்து, குடும்பத்தினரின் பாராட்டைப் பெறுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95a4ad74-ee30-4da3-9442-636175689867/26-6a5c75b51e96e.webp' /></p><p></p><h2>தேவையான பொருட்கள்</h2><p><b> தேங்காய் மசாலாவிற்கு</b></p><p> கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்&nbsp;</p><p> கசகசா - 1 டீஸ்பூன்&nbsp;</p><p> துருவிய தேங்காய் - 1 பெரிய மூடி&nbsp;</p><p> மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்&nbsp;</p><p> சிக்கன் மசாலா - 2 1/2 டேபிள் ஸ்பூன்&nbsp;</p><p>பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன் </p><p><b>சால்னா தாளிப்பதற்கு</b></p><p>கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்&nbsp;</p><p> பட்டை - 1&nbsp;</p><p> கிராம்பு - 3 </p><p>அன்னாசிப்பூ - 1&nbsp;</p><p> ஏலக்காய் - 2&nbsp;</p><p> சோம்பு - 1 டீஸ்பூன்&nbsp;</p><p> கறிவேப்பிலை - 1 கொத்து </p><p>பெரிய வெங்காயம் - 2&nbsp;</p><p> இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்&nbsp;</p><p> மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்&nbsp;</p><p> மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்&nbsp;</p><p> பெரிய தக்காளி - 2&nbsp;</p><p> உப்பு - சுவைக்கேற்ப&nbsp;</p><p> சிக்கன் - 1/2 கிலோ&nbsp;</p><p> அரைத்த மசாலா&nbsp;</p><p> தண்ணீர் - தேவையான அளவு&nbsp;</p><p> புதினா - சிறிது </p><p>கொத்தமல்லி - சிறிது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4488a21f-176b-45a3-b2cc-b12dc4cecbc9/26-6a5c75b5ca967.webp' /></p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">செய்முறை</span></h2><p>
முதலில் ஒரு பார்த்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், கசகசா மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து, ஈரப்பதம் போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.&nbsp;</p><p> பின்பு அதில் மல்லித் தூள் மற்றும் சிக்கன் மசாலாவை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வறுக்க வேண்டும்.&nbsp; பின் அதில் பொட்டுக்கடலையை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.&nbsp;</p><p> பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73c76885-dece-4888-96b3-93cdd3d25297/26-6a5c75b469ba0.webp' /></p><p> அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.</p><p> பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.&nbsp; பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். </p><p>பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும். அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். </p><p>அதன் பின் அதில் சிக்கனை கழுவி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, சால்னாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.&nbsp;</p><p> விசில் போனதும் குக்கரைத் திறந்து, சிறிது நறுக்கிய புதினா, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான பரோட்டா கடை சிக்கன் சால்னா தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b> <u>FOLLOW NOW&nbsp;</u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T06:59:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகு-கேது பிடியில் இருந்து விடுபடும் கிரகங்கள்: இனி இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/six-planets-released-from-rahu-ketu-who-get-luck-1784391079"></link>
            <id>https://manithan.com/article/six-planets-released-from-rahu-ketu-who-get-luck-1784391079</id>
            <summary type="text">ஜோதிடக் கணிப்பின்படி, ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கின்றனர். சூரியன், குரு, சந்திரன் கடகத்திலும், செவ்வாய் ரிஷபத்திலும், புதன் மிதுன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடக் கணிப்பின்படி, ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கின்றனர். சூரியன், குரு, சந்திரன் கடகத்திலும், செவ்வாய் ரிஷபத்திலும், புதன் மிதுனத்திலும், சுக்கிரன் சிம்மத்திலும், சனி மீனத்திலும் உள்ளனர்.
</p><p>
தற்போது கிரகங்கள் ராகு-கேதுவுக்கு இடையில் பயணிப்பதால், சில ராசிக்காரர்களுக்கு தடைகள் மற்றும் எதிர்பாராத சவால்கள் ஏற்பட்டிருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0076fc43-8cab-468f-a536-a2c286f1335c/26-6a5bac65165e4.webp' /></p><p>இந்நிலையில், ஜூலை 19ஆம் தேதி சந்திரன் சிம்மத்திலிருந்து கன்னிக்கு பெயர்ச்சி அடைவதால் ராகு-கேதுவின் தாக்கம் குறையும் எனக் கூறப்படுகிறது.</p><p>

இந்த சந்திரப் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் நிலையில், சில ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றம், நிதி வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. ஜூலை 19 முதல் ராகு-கேதுவின் தாக்கத்திலிருந்து விடுபட்டு பலன் பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.</p><p></p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cee242bd-afc2-475d-8ddd-882c969c482d/26-6a5bac65bbd0d.webp' /></p><h2>
</h2><p>ராகு-கேதுவின் தாக்கத்தில் இருந்து சந்திரன் விலகுவதால், இதுவரை பேச்சு தொடர்பாக ஏற்பட்டுவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.</p><p>பணியிடத்தில் மனக்குழப்பம் இல்லாமல் தெளிவான முடிவுகளை எடுத்து, செயல்பட முடியும். உடன்பிறந்தவர்களுடனான உறவு மேலும் வலுப்படும். குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.</p><p> தொழில் துறையில் நல்ல முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் காணக்கூடிய காலமாக அமையும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவான சிந்தனை ஏற்படும்.
</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d20465-c640-4fb8-9401-01bd77c19d85/26-6a5bac666ce7a.webp' /></p><h2>
</h2><p>ராகு-கேதுவின் பிடியில் இருந்து சந்திரன் வெளியே வருவதால், இதுவரை மன அழுத்தம் மற்றும் குழப்பங்களை சந்தித்து வந்த கடக ராசிக்காரர்களுக்கு நிம்மதி கிடைக்கும். </p><p>குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முடிவுகளை எடுப்பதில் இருந்த தயக்கம் நீங்கி, இனி தெளிவாகவும் தைரியமாகவும் செயல்படுவீர்கள்.</p><p>பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய வழிகளில் வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் தானாக உருவாகும்.&nbsp;</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21802827-0f56-4182-bbfa-3af3da06f6ca/26-6a5bac671d664.webp' /></p><p></p><p>
ராகு-கேதுவின் தாக்கத்தில் இருந்து சந்திரன் விலகுவதால், பணியிடத்தில் இதுவரை எதிர்கொண்ட சிரமங்கள் குறையும். </p><p>மன அழுத்தம் நீங்கி, நிம்மதி அதிகரிக்கும். குடும்பம் மற்றும் வேலை சார்ந்த பொறுப்புகளை திறம்பட கையாளும் திறன் அதிகரிக்கும்.</p><p>பணம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, வருமான வாய்ப்புகள் மேம்பட்டு நிதிநிலை சிறப்பாகும். நீண்ட கால கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T05:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாணக்கியர் சொல்லும் இந்த குணங்கள் இருந்தால் செல்வம் தானாக வரும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/chanakya-said-this-quality-more-power-than-money-1784436132"></link>
            <id>https://manithan.com/article/chanakya-said-this-quality-more-power-than-money-1784436132</id>
            <summary type="text">சாணக்கியர் இந்திய வரலாற்றின் தலைசிறந்த தத்துவஞானிகளில் ஒருவராக மட்டுமல்லாமல், சிறந்த அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகராகவும் விளங்கியவர்.&amp;nbsp;சந்திரகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாணக்கியர் இந்திய வரலாற்றின் தலைசிறந்த தத்துவஞானிகளில் ஒருவராக மட்டுமல்லாமல், சிறந்த அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகராகவும் விளங்கியவர்.&nbsp;</p><p>சந்திரகுப்த மௌரியரும் சாணக்கியரும் இணைந்து செயல்பட்ட காலகட்டமே மௌரியர்களின் பொற்காலம் என்று வரலாற்றில் போற்றப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/915b274e-1b82-457f-a890-ede486b4be31/26-6a5c5cfe2e365.webp' /></p><p>
</p><p>
ஆச்சார்ய சாணக்கியரின் கருத்துப்படி, ஒருவரிடம் போதுமான செல்வம் இருந்தால், வாழ்க்கையில் ஏற்படும் பல பெரிய சவால்களையும் தன்னம்பிக்கையுடன் சமாளிக்க முடியும். </p><p>ஆனால், பணம் மட்டும் வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயிப்பதில்லை. அதனுடன் சேர்த்து, ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய சில உயர்ந்த குணங்களும் அவசியம் என்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b563807b-d471-4302-9231-7e42881f9274/26-6a5c5cfed5f06.webp' /></p><p>
சாணக்கியரின் போதனைகளின்படி, குறிப்பாக பணம் மற்றும் செல்வம் தொடர்பான விஷயங்களில் ஒவ்வொருவரும் ஒரு முக்கியமான பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். </p><p>அந்த ஒரு சிறப்பான குணமே ஒருவரை பொருளாதார ரீதியாக முன்னேறச் செய்து, அதிக செல்வத்தை ஈட்டுவதற்கான அடித்தளமாக அமையும்.சாணக்கியர் வலியுறுத்திய அந்த அரிய குணங்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/557778df-4b6e-40dc-b360-e9d502ff2c15/26-6a5c5d003b57f.webp' /></p><p></p><h2>அந்த முக்கிய குணங்கள் என்னென்ன?&nbsp;</h2><p><b>அறிவு&nbsp;</b></p><p>
"அறிவே ஒருவரிடம் இருக்கும் மிகப்பெரிய செல்வம்" என்று சாணக்கிய நீதி கூறுகிறது. அறிவை எவ்வளவு பகிர்ந்தாலும் அது ஒருபோதும் குறையாது; மாறாக மேலும் வளர்ந்துகொண்டே இருக்கும்.</p><p>இதை விளக்குவதற்காக சாணக்கியர் அறிவை காமதேனுவுடன் ஒப்பிடுகிறார். காமதேனு பசு எப்போதும் குறைவில்லாமல் பால் தருவது போல, அறிவும் பகிர்ந்துகொண்டால் குறையாது. அதனால் முடிந்தவரை தன்னிடம் உள்ள அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.</p><p><b>

சிக்கல்களுக்கு அறிவே தீர்வு

</b></p><p> கருத்துப்படி, அறிவு என்பது தனது குழந்தையை எந்தச் சூழலிலும் காக்கும் தாயைப் போன்றது. அறிவின் துணையால் வாழ்க்கையில் வரும் பல்வேறு சவால்களையும் சிக்கல்களையும் எளிதாக சமாளிக்க முடியும். ஒருவரின் வாழ்க்கையில் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், தனது அறிவையும் சிந்தனைத் திறனையும் பயன்படுத்தி அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a522cbaa-ca58-49bc-a461-67e8cd3f5dbe/26-6a5c5d00e1382.webp' /></p><p></p><p><b>அறிவு ஏன் ரகசியச் செல்வம்?</b></p><p>

சாணக்கியரின் பார்வையில், அறிவு என்பது ஒருபோதும் தீர்ந்துபோகாத ரகசியச் செல்வம். அது இக்கட்டான காலங்களிலும் மனிதனுக்கு துணையாக இருந்து, இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வழிகாட்டும் ஆற்றல் கொண்டது.</p><p> ஒருவரின் அறிவு எப்போதும் வெளிப்படையாகத் தெரியாது; ஆனால் சரியான தருணத்தில் அதன் உண்மையான மதிப்பு வெளிப்படும்.அதனால்தான் அறிவை அவர் "ரகசியச் செல்வம்" என்று குறிப்பிடுகிறார்.</p><p><b>
அறிவை பகிர்ந்தால்தான் அதன் மதிப்பு உயரும்
</b></p><p>
அறிவு தனிநபருக்குச் சொந்தமானதாக இருந்தாலும், அதை தனக்குள் மட்டுமே வைத்துக்கொள்வது சரியல்ல. அந்த அறிவை மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் சமூகமும் முன்னேறும். கல்வியும் அறிவும் ஒருவரின் வாழ்க்கையை மட்டுமல்ல, பல தலைமுறைகளின் எதிர்காலத்தையும் மாற்றும் வல்லமை கொண்டவை. </p><p>அறிவைப் பகிர்ந்துகொள்ளும் போதுதான் அதன் உண்மையான பயன் வெளிப்படும்.

சமூகத்தில் பணம் உள்ளவர்கள் மதிக்கப்படலாம். ஆனால் அறிவுச் செல்வம் கொண்டவர்களே மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாகவும், நீண்ட காலம் நினைவுகூரப்படும் மனிதர்களாகவும் திகழ்வார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T05:19:12+00:00</updated>
        </entry>
    </feed>
