<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-05T06:28:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித்தின் அறிக்கையால் வெடித்த சர்ச்சை – தேசிய அளவில் டிரெண்டாகும் #AjithKumar!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-ajith-kumar-is-trending-on-x-platform-fans-1788587173"></link>
            <id>https://manithan.com/article/why-ajith-kumar-is-trending-on-x-platform-fans-1788587173</id>
            <summary type="text">எக்ஸ் தளத்தில் நடிகர் அஜித் குமார் பெயரில் உள்ள #AjithKumar ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. ஆனால், அஜித்தின் ரசிகர்கள் அவரைப் பாராட்டுவதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>எக்ஸ் தளத்தில் நடிகர் அஜித் குமார் பெயரில் உள்ள #AjithKumar ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. ஆனால், அஜித்தின் ரசிகர்கள் அவரைப் பாராட்டுவதற்காக அல்லாமல், அவரது சமீபத்திய அறிக்கை தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காகவே இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி வருகின்றனர்.</p><p>

கார் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட அஜித் குமார், தனது கனவைத் தொடர்வதற்காக கார் பந்தையங்களில் பங்கேற்று வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70e56117-d59a-4ff6-8556-a0caaf4246b1/26-6a9bb129e0a83.webp' /></p><h2>எக்ஸ் தளத்தில் டிரெண்டாகும் #AjithKumar</h2><p> இந்நிலையில், தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்றும், அங்கு பல்வேறு ஃபார்முலா பந்தயங்களுக்கான தடங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.&nbsp;</p><p>
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அஜித் குமார் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். மேலும், முதல்வரின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/0r57Bxtwxw">pic.twitter.com/0r57Bxtwxw</a></p>&mdash; RED DRAGON (@red_d24813) <a href="https://x.com/red_d24813/status/2095587868030931154?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p>இந்த அறிக்கை அஜித் ரசிகர்கள் சிலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை”, “ரசிகர்களாக இருந்தது போதும்” உள்ளிட்ட கருத்துகளை அவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70465a5d-4678-4d0b-b908-9186393f430b/26-6a9bb12a9ac0c.webp' /></p><p></p><p>இதன் காரணமாக #AjithKumar ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

மறுபுறம், விஜய் ரசிகர்கள் அஜித்தின் அறிக்கையை வரவேற்று, இருவருக்கும் இடையேயான நட்பையும் பரஸ்பர மரியாதையையும் பாராட்டி வருகின்றனர். </p><p>அஜித்தின் ஆதரவு விஜய்க்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறித்த அறிக்கை சர்ச்சை தற்போது இணையத்தில் இரு தரப்பு வாதமாக ஒருவெடுக்க ஆரம்பித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">எல்லா நடிகனும் சுயநலவாதிதான்,<br>அய்யாவும் ஒரு நடிகன்தான்..!! <a href="https://t.co/2NyqEFxXEF">pic.twitter.com/2NyqEFxXEF</a></p>&mdash; Joe...😎😎 (@ItzmeeJoee) <a href="https://x.com/ItzmeeJoee/status/2095704272189169764?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thanks giving message from Ajith Kumar to Tamil Nadu Chief Minister Hon. C.Joseph Vijay. 🇮🇳 <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/Akracingoffl?ref_src=twsrc%5Etfw">@Akracingoffl</a> <a href="https://x.com/SureshChandraa?ref_src=twsrc%5Etfw">@SureshChandraa</a> <a href="https://x.com/hashtag/AjithKumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AjithKumar</a> <a href="https://x.com/hashtag/JosephVijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JosephVijay</a> <a href="https://x.com/hashtag/TamilNadu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNadu</a> <a href="https://x.com/hashtag/TamilNaduCM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNaduCM</a> <a href="https://x.com/hashtag/AKRacing?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AKRacing</a> <a href="https://x.com/hashtag/AjithKumarRacing?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AjithKumarRacing</a> <a href="https://t.co/yWTn3F8RtN">pic.twitter.com/yWTn3F8RtN</a></p>&mdash; Suresh Chandra (@SureshChandraa) <a href="https://x.com/SureshChandraa/status/2095541477401354707?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><u>FOLLOW NOW</u>&nbsp;</a></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T06:06:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டாலர் இல்லை... உலகின் அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-is-stronger-than-the-u-s-dollar-1788583419"></link>
            <id>https://manithan.com/article/what-is-stronger-than-the-u-s-dollar-1788583419</id>
            <summary type="text">நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இன்றைய உலகம் முழுவதும் பணத்தைச் சுற்றித்தான் இயங்குகிறது. உலகின் வலிமையான கரன்சி என்று கூறும்போது, நம் அனைவருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இன்றைய உலகம் முழுவதும் பணத்தைச் சுற்றித்தான் இயங்குகிறது. உலகின் வலிமையான கரன்சி என்று கூறும்போது, நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அமெரிக்க டாலர்தான். அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பவுண்ட் அல்லது யூரோ ஆகியவை நினைவுக்கு வரும்.</p><p>ஆனால், உண்மை இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது.&nbsp; உலகின் வலிமையான கரன்சி அமெரிக்க டாலர் இல்லை என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/328c1405-d9d5-404c-998f-3c1d15c0bc8a/26-6a9ba6666db26.webp' /></p><p></p><h2>அதிக மதிப்புள்ள கரன்சி&nbsp;</h2><p>ஆம், இந்தியர்கள் அதிகம் வசிக்கும், ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இந்தியர்கள் வேலைக்காகச் செல்லும் நாடுகளில் ஒன்றான குவைத் நாடு தான் உலகின் மிகவும் மதிப்புமிக்க நாணயத்தைக் கொண்டுள்ளது. </p><p>வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் தினார் (KWD) தான் உலகின் அதிக மதிப்புமிக்க நாணயமாகவும் வலிமையான கரன்சியாகவும் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd16c8c8-2496-44d7-a705-a9b4f1b8409e/26-6a9ba6672520c.webp' /></p><p> </p><p>தற்போது, ஒரு குவைத் தினாரின் மதிப்பு சுமார் 3.25 அமெரிக்க டாலர் அல்லது 300 இந்திய ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.

சவுதி அரேபியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள குவைத், பரப்பளவில் சிறிய நாடாக இருந்தாலும், மிகப்பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ளது. </p><p>இந்தப் பணக்கார நாடு தனது வருவாயில் பெரும்பகுதியை எண்ணெய் ஏற்றுமதி மூலமாகப் பெறுகிறது. இதுவே உலகச் சந்தையில் குவைத் தினார் தனது வலிமையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11e13bbb-4f5f-4726-9ebe-73f403135311/26-6a9ba667d02f3.webp' /></p><p><br></p><h2>
ஒரு நாட்டின் கரன்சியை வலிமையாக்குவது எது?
</h2><p>மற்ற நாணயங்களுடன் ஒப்பிடும்போது அதிக வாங்கும் திறன் கொண்ட நாணயம் 'வலிமையான நாணயம்' எனக் கருதப்படுகிறது. உதாரணமாக, ஒரு அமெரிக்க டாலரைக் கொண்டு வாங்கக்கூடிய பொருட்களை ஒரு இந்திய ரூபாயைக் கொண்டு வாங்க முடியாது. </p><p>ஏனெனில், ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது சுமார் 94 இந்திய ரூபாயாக உள்ளது.

ஒரு நாணயத்தின் வலிமை என்பது அந்த நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை, பணவீக்கக் கட்டுப்பாடு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து தான் தீர்மானி்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c495f9ee-1166-484c-b3b8-d12de602b1bd/26-6a9ba66886493.webp' /></p><p> ஒரு நாட்டின் நாணயம் எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ, அந்த நாட்டின் பொருளாதாரத்தின் மீது முதலீட்டாளர்களுக்கும் உலகச் சந்தைகளுக்கும் அவ்வளவு அதிக நம்பிக்கை இருக்கும்.</p><p><b>

குவைத் தினார் ஏன் வலிமையாக உள்ளது?
</b></p><p>குவைத் தினாரின் வலிமைக்கு முக்கியக் காரணம் அந்நாட்டில் உள்ள மிகப்பெரிய பெட்ரோலிய இருப்புகள்தான். உலகின் ஆறாவது மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்ட நாடுகளில் குவைத் ஒன்றாகும்.
</p><p>
குவைத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் பாதியும், அதன் ஏற்றுமதி வருவாயில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கும் எண்ணெய் விற்பனை மூலமாகவே கிடைக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c61afa56-c2de-4674-ba91-5e3ef4d2c8f6/26-6a9ba6693ee41.webp' /></p><p></p><p> </p><p>எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் பெருமளவிலான வருவாய், குறிப்பாக அமெரிக்க டாலர்கள் வழியாகக் கிடைக்கும் அந்நியச் செலாவணி, குவைத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது. இதன் மூலம் அந்நாட்டின் நாணயமும் வலுவாகத் தொடர்கிறது.
</p><p>
</p><p>குவைத் அரசு தனது கரன்சியின் விநியோகத்தை கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் நாணயத்திற்கான தேவை சீராகவும், அதன் விநியோகம் கட்டுப்பாட்டிலும் இருப்பதை உறுதி செய்து, தினாரின் மதிப்பை உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறது.</p><p>

மேலும், குறைந்த பணவீக்கத்துடன் குவைத்தின் பொருளாதாரம் நிலையாக உள்ளது. குவைத் தினார் அமெரிக்க டாலருடன் மட்டும் இணைக்கப்படாமல், பல்வேறு நாணயங்களின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகிறது.இதுவும் நாணயத்தின் மதிப்பை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d3e4bd7-6a33-4009-82a7-0f3d422f01fd/26-6a9ba669e8234.webp' /></p><p><b>

எண்ணெயைத் தாண்டிய முதலீடுகள்</b></p><p>
குவைத்தின் பொருளாதாரம் முழுமையாக எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. மாறாக உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய அரசு முதலீட்டு நிதிகளில் ஒன்றான குவைத் முதலீட்டு ஆணையம் (KIA) அந்நாட்டில் உள்ளது.
</p><p>
குவைத் அரசு தனது பெருமளவிலான எண்ணெய் வருவாயின் ஒரு பகுதியை உலகளாவிய பங்குகள், ரியல் எஸ்டேட் மற்றும் பிற வெளிநாட்டுச் சொத்துகளில் முதலீடு செய்து வருகிறது. இதன் மூலம் எதிர்கால பொருளாதார நிலைத்தன்மைக்கான அடித்தளத்தையும் அந்நாடு உருவாக்கி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30be74aa-1a5f-47d2-ae26-8a039aca5a38/26-6a9ba66a9e50b.webp' /></p><p>

இருப்பினும், ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். குவைத் தினார் உலகின் அதிக மதிப்புமிக்க நாணயமாக இருந்தாலும், அது உலகின் அதிகம் பயன்படுத்தப்படும் அல்லது செல்வாக்குமிக்க நாணயம் அல்ல.

உலக வர்த்தகம், கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் மற்றும் சர்வதேச அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகியவற்றில் மிகப்பெரிய பங்கு வகிப்பதால், அமெரிக்க டாலரே உலகின் சக்திவாய்ந்த மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் நாணயமாகத் தொடர்கிறது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T05:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரே போனாலும் செய்த தவறை ஒப்புக்கொள்ளாத டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/zodiac-signs-who-never-accept-they-are-mistakes-1788526895"></link>
            <id>https://manithan.com/article/zodiac-signs-who-never-accept-they-are-mistakes-1788526895</id>
            <summary type="text">தவறு செய்யாத மனிதர்களே இல்லை. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தவறு செய்கிறார்கள். ஆனால், செய்த தவறை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவறு செய்யாத மனிதர்களே இல்லை. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தவறு செய்கிறார்கள். ஆனால், செய்த தவறை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவரிடமும் இருப்பதில்லை.
</p><p>
ஜோதிட நம்பிக்கைகளின்படி, சில ராசிக்காரர்கள் எவ்வளவு&nbsp; கடினமான சூழ்நிலை வந்தாலும் தங்களின் தவறை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ‘சாரி’ அல்லது ‘என் தவறு’ என்று சொல்வதற்குப் பதிலாக, தங்கள் செயல்களை நியாயப்படுத்தும் வகையில் மாத்திரமே பேசுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cead4c4-2188-496b-9c03-de89afd39fb5/26-6a9ac8b213ae8.webp' /></p><p></p><p>அப்படி தலையே போனாலும் செய்த தவறை மட்டும் ஒப்புக்கொள்ள விரும்பாத ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்களாம்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31572e5f-0ef5-43a9-9d5d-f5de14d9bce2/26-6a9ac8b2bd37a.webp' /></p><p>
சிம்ம ராசியின் அதிபதி கிரகங்களின் ராஜாவான சூரியன். இது அகங்காரம், தன்னம்பிக்கை மற்றும் கௌரவத்தைக் குறிக்கிறது. </p><p>சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே தலைமைப் பண்பு கொண்டவர்கள்; அனைவரும் தங்களைப் பாராட்ட வேண்டும் என விரும்புவார்கள். </p><p>இதனால், தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொள்வதும் மன்னிப்புக் கேட்பதும் அவர்களுக்கு கடினமாக இருக்கும். தாங்கள் வலிமையானவர்களாகத் தோன்ற வேண்டும் என்பதால், தவறை ஒப்புக்கொள்வது தங்களின் மதிப்பையும் இமேஜையும் பாதிக்கும் என நினைப்பார்கள்.
</p><h2>
மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8438c93-307f-4038-861f-6bd28f80eb08/26-6a9ac8b375d36.webp' /></p><p></p><h2>
</h2><p>மேஷ ராசியின் அதிபதி செயல் மற்றும் ஆக்ரோஷத்தின் கிரகமான செவ்வாய். மேஷ ராசிக்காரர்கள் துணிச்சலானவர்கள், தன்னம்பிக்கை மிக்கவர்கள், வேகமாகச் செயல்படுபவர்கள்.</p><p> ஆனால், தாங்கள் தவறு செய்திருந்தாலும் அதை நியாயப்படுத்தி மேலும் வாதிடுவார்கள். உணர்ச்சிவசப்பட்ட நேரங்களில் தங்களின் கருத்தே சரி என விடாப்பிடியாக இருப்பார்கள்.பின்னர் வருத்தப்பட்டாலும், வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க மாட்டார்கள்.</p><h2>
விருச்சிகம்</h2><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/237a56ab-3ae0-4ee6-9f70-f9b0c1d57054/26-6a9ac8b42950c.webp' /></p><h2>
</h2><p>விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் புளூட்டோவின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். தங்களின் உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்தாத இவர்கள், தவறு செய்தாலும் அதை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக மௌனம் காப்பார்கள்.</p><p> தங்களின் காரணங்கள் நியாயமானவை என நம்புவதால், மன்னிப்புக் கேட்பதைத் தவிர்த்து அந்தச் சூழ்நிலையிலிருந்து விலகிச் செல்ல முயல்வார்கள்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">கும்பம்</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca95ae8d-c5af-45e2-b4ab-e542aff98d4b/26-6a9ac8b4d3b7f.webp' /></p><p>கும்ப ராசியினர் யுரேனஸ் மற்றும் சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். வித்தியாசமாகவும் தனித்துவமான கண்ணோட்டத்துடனும் சிந்திப்பார்கள்.தங்களின் நியாயமே சரி என நம்புவதால், தவறுகளை ஒப்புக்கொள்ளத் தயங்குவார்கள்.</p><p> தங்களின் காரணங்களை மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை எனக் கூறி, உணர்வுப்பூர்வமான விவாதங்களைத் தவிர்ப்பார்கள். ஆனால் செய்த தவறை மட்டும் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;</b> &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T04:24:21+00:00</updated>
        </entry>
    </feed>
