<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-14T07:38:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து : சென்னையில் 1,562 சிலைகளுக்கு அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijay-greetings-on-vinayagar-chaturthi-1789366536"></link>
            <id>https://manithan.com/article/cm-vijay-greetings-on-vinayagar-chaturthi-1789366536</id>
            <summary type="text">விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1,562 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1,562 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.</p><h2>முதலமைச்சர் விஜய் வாழ்த்து</h2><p>
</p><p>
விழாவையொட்டி முதலமைச்சர் விஜய், பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விநாயகப் பெருமானின் அருளால் அனைத்து நற்செயல்களும் வெற்றியடையவும், மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் பெருகவும் அவர் வாழ்த்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a00cc8f2-35da-4fa9-bacd-173030923fa4/26-6aa7964f83212.webp' /></p><p></p><p>

விழாவையொட்டி சென்னையில் 16,500 காவலர்கள் மற்றும் 1,500 ஊர்காவல் படையினர் என மொத்தம் 18,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். </p><p>சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் CCTV கேமராக்கள் பொருத்தவும், தலா இரண்டு தன்னார்வலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0b5cd08-3756-4407-a07e-f37bf9cefe28/26-6aa79650341ac.webp' /></p><p></p><p>
</p><p>
வழிபாடு முடிந்த பின்னர், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>அனுமதியின்றி சிலைகள் வைப்பவர்கள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T06:38:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சதுர்த்தியில் தங்கம் விலை தடாலடி சரிவு.. இன்று ஒரு சவரன் எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/september-14th-gold-and-silver-price-in-chennai-1789364071"></link>
            <id>https://manithan.com/article/september-14th-gold-and-silver-price-in-chennai-1789364071</id>
            <summary type="text">செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில்,&amp;nbsp;இன்றைய செப்டம்பர் 14ஆம் தேதி தங்கம் மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில்,&nbsp;இன்றைய செப்டம்பர் 14ஆம் தேதி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.</p><p>கடந்த சில நாட்களில் விலை உயர்வு மற்றும் சரிவு என மாற்றம் காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f01416f-2266-489b-b2c5-030a137886ce/26-6aa78a7c7ae15.webp' /></p><p>
</p><p>
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170 ஆகவும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
</p><p>
இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.11,940 ஆகவும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.95,520 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0afd779a-0637-4cac-9e75-e1e4d5512ac3/26-6aa78a7d2ef7f.webp' /></p><h2>இன்றைய நிலவரம்</h2><p>
</p><p>
இந்நிலையில், இன்று தங்கம் விலையில் அதிரடியான சரிவு பதிவாகியுள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125 ஆகவும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48a31d9f-8c31-42dd-9c3c-841994161e0b/26-6aa78a7dd868b.webp' /></p><p>
</p><p>
இதன்படி, கடந்த செப்டம்பர் 12ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 குறைந்துள்ளது. தங்கம் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இந்த விலை மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
</p><p>
மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி தொடர்ந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<u><b> <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank" style="">FOLLOW NOW</a></b></u></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T05:53:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடகத்தில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/guru-mangala-yoga-in-cancer-who-get-huge-luck-1789360303"></link>
            <id>https://manithan.com/article/guru-mangala-yoga-in-cancer-who-get-huge-luck-1789360303</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களும், ஆற்றல் வாய்ந்த கிரகங்களின் இணைவால் உருவாகும் ராஜ யோகங்களும் 12 ராசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களும், ஆற்றல் வாய்ந்த கிரகங்களின் இணைவால் உருவாகும் ராஜ யோகங்களும் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.</p><p>அந்தவகையில், கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், 2026 செப்டம்பர் 18 அன்று கடக ராசியில் நுழைந்து, நவம்பர் 12 வரை அங்கு சஞ்சரிக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b524b646-df2b-4235-b9a7-a47da2b883d2/26-6aa77f50dd018.webp' /></p><p>நெருப்பு கிரகமான செவ்வாய், நீர் ராசியான கடகத்தில் நுழைவது 2026-ன் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாகும்.

ஏற்கனவே குருபகவான் கடக ராசியில், தனது உச்ச நிலையில் சஞ்சரித்து வருகிறார். ஜூன் 2 முதல் அக்டோபர் 31, 2026 வரை குரு கடகத்தில் இருப்பார்.</p><p> </p><p>இதனால் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 31 வரை செவ்வாய்–குரு இணைவு ஏற்பட்டு குரு மங்கள யோகம் உருவாகிறது.

இந்த யோகம் அனைத்து ராசிகளிலும் ஆதிக்கம் செலுத்தினாலும் சில ராசிக்காரர்களுக்கு அதிகளவில்&nbsp; சாதகமான பலன்களை வழங்கும். </p><p>அப்படி குரு மங்கள யோகத்தால் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75dc8682-9df8-4e9c-bdb7-46d25dc5cdf8/26-6aa77f51ba4e3.webp' /></p><h2>
</h2><p>செவ்வாய் இந்த காலகட்டத்தில் வீடு, சொத்து மற்றும் குடும்ப வாழ்க்கையைக் குறிக்கும் 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறது. இதனால் பல்வேறு துறைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.</p><p>இருப்பினும் அதற்கு கடின உழைப்பும் முயற்சியும் தேவைப்படும். உங்கள் உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.

புதிதாக ஏதாவது தொடங்க, குறிப்பாக வியாபாரம் தொடங்க இது சிறந்த காலமாக இருக்கும்.</p><p> நிதி நிலை சாதகமாக இருப்பதுடன், முதலீடுகளும் நல்ல பலனைத் தரலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். பணியிடத்திலும் சிறப்பான முன்னேற்றம் காணலாம். </p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89cccbe9-0b2f-4014-91a0-dad4d2ed99df/26-6aa77f52742b1.webp' /></p><p>குருபகவான் ஏற்கனவே கடக ராசியில் சஞ்சரித்து வரும் நிலையில், தற்போது செவ்வாயும் இணைகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த கிரக சேர்க்கை வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும்.</p><p> பல்வேறு விஷயங்களில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். குறிப்பாக சட்டம் தொடர்பான பிரச்சினைகளில் நிவாரணம் கிடைக்கும்.</p><p>வியாபாரிகளுக்கு நல்ல லாபமும், பணியாளர்களுக்கு அலுவலகத்தில் சாதகமான பலன்களும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் நிலவும்.</p><p>

நீங்கள் மேற்கொண்டு வரும் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.காதல் மற்றும் திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையும். வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.&nbsp;</p><h2>
விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/954b3e01-7cee-480e-bd5b-3c3531999574/26-6aa77f53280ad.webp' /></p><p></p><p>
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குரு மங்கள யோகம் எதிர்பாராத நன்மைகளைத் தரக்கூடும். செவ்வாய் ஆர்வத்தையும் செயல்திறனையும் அதிகரிக்க, குருபகவான் தன்னம்பிக்கையை கொடுப்பார்.</p><p>இதனால் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவதுடன், புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும்.</p><p>முதலீடுகளிலிருந்தும் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் உள்ளன.

குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்புகள் உருவாகும்.வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T05:48:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகரின் அருளைப் பெற சதுர்த்தி நாளில் இதை படைத்து வழிபடுங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-are-some-auspicious-things-to-do-on-chaturthi-1789305338"></link>
            <id>https://manithan.com/article/what-are-some-auspicious-things-to-do-on-chaturthi-1789305338</id>
            <summary type="text">Ganesh Chaturthi 2026: இந்து மதத்தின் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படும் விநாயகரின் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தில் பல்வேறு வகையான சுவையான நைவேத்தியங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ganesh Chaturthi 2026: இந்து மதத்தின் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படும் விநாயகரின் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தில் பல்வேறு வகையான சுவையான நைவேத்தியங்களைப் படைத்து, அவருடைய அருளைப் பெறுவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
</p><p>
அந்த வகையில், இன்றையதினம் (செப்டெம்பர் 14) சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இனிப்பு மற்றும் பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை விநாயகருக்குப் படைத்து வழிபடுவது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு முக்கியமான வழிபாட்டு முறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49a7d0d0-a84a-46c8-b8d1-b8d2602aa7c1/26-6aa6a8a0abce5.webp' /></p><p></p><p>
</p><p>
ஆனால், விநாயகரின் அருளைப் பெறுவதற்கு கொழுக்கட்டை மட்டும் போதுமானதல்ல. விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிரியமானதாகக் கருதப்படும் மேலும் சில புனிதமான பொருட்களும் உள்ளன. </p><p>

அந்தப் பொருட்களை விநாயகர் சதுர்த்தி நாளில் முறைப்படி அவருக்குப் படைத்து, பக்தியுடன் வழிபடுவதன் மூலம் விநாயகரின் அருளையும், ஆசீர்வாதத்தையும் பெறலாம் என்று சாஸ்திரங்கள் மற்றும் ஆன்மிக நம்பிக்கைகள் கூறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/954906f3-eef8-4f7a-bae2-1ca1ac22e423/26-6aa6a8a15d06d.webp' /></p><p>
</p><p>
விநாயகரை வழிபடும்போது பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்துவமான ஆன்மிக முக்கியத்துவம் இருப்பதாகவும், அவை நம் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, வெற்றி, தடையின்மை உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்கும் எனவும் நம்பப்படுகிறது.
</p><p>
அப்படி, விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்ததாகக் கருதப்படும் அந்தப் புனிதமான பொருட்கள் என்னென்ன? அவற்றை எவ்வாறு படைத்து வழிபட வேண்டும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;&nbsp;</p><h2>கொழுக்கட்டை</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af199356-5e94-4cca-8838-c9d4f8ba8c03/26-6aa6a8a216e57.webp' /></p><p>
வட இந்தியாவில் மோதகம் என்று அழைக்கப்படும் கொழுக்கட்டை இல்லாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நிறைவு பெறாது. இது விநாயகருக்கு மிகவும் பிடித்த இனிப்பு என்பதால், அன்றைய தினம் அவருக்கு கட்டாயம் படைக்கப்படுகிறது. அரிசி மாவினால் செய்யப்பட்ட கொழுக்கட்டையின் உள்ளே தேங்காய் மற்றும் வெல்லம் நிரப்பப்படும். விநாயகரை வழிபடும்போது மோதகம் படைப்பது வழிபாட்டை முழுமையாக்கும் என நம்பப்படுகிறது.</p><h2>

அருகம்புல்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f215a52-0b4f-4d31-a27d-29578f5a5d99/26-6aa6a8a2bd2be.webp' /></p><h2>
</h2><p>விநாயகருக்குப் பிடித்த பொருட்களில் அருகம்புல்லும் ஒன்று. வயல்வெளிகளில் இயல்பாக வளரும் இந்த மூன்று கிளைகளைக் கொண்ட புல்லைப் பற்றிய சுவாரஸ்யமான கதை ஒன்றும் உள்ளது. தேவர்களைத் துன்புறுத்திய அனலாசுரன் என்ற அரக்கனை விநாயகர் விழுங்கியபோது, கடுமையான வயிற்று எரிச்சலால் அவதிப்பட்டார். அப்போது முனிவர்கள் அவருக்கு அருகம்புல்லைச் சமர்ப்பித்தனர். அதனால் அவரது எரிச்சல் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் அருகம்புல் விநாயகருக்கு மிகவும் பிடித்தமானதாக மாறியது.
</p><h2>
சாமந்திப் பூ</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23aeedb0-a54c-4cd5-b9d8-f3ba861cd928/26-6aa6a8a3708e9.webp' /></p><h2>
</h2><p>விநாயகர் சதுர்த்தியன்று வீட்டிற்கு விநாயகர் சிலையை எடுத்து வரும்போது, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறச் சாமந்திப் பூக்களால் அலங்கரிப்பது வழக்கம். விநாயகருக்குச் சாமந்திப் பூக்கள் மிகவும் பிடிக்கும் என்பதால், பல கோவில்களில் அவருக்கு சாமந்திப் பூ மற்றும் அருகம்புல் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன.
</p><h2>
சங்கு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/704361b9-83df-428d-afc4-9332210433a7/26-6aa6a8a42658b.webp' /></p><h2>
</h2><p>நான்கு கைகளைக் கொண்ட விநாயகரின் ஒரு கையில் சங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. பல இந்துப் பண்டிகைகள் சங்கு முழக்கத்துடன் தொடங்குவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி பூஜையின்போதும் சங்கு முழங்குவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. சங்கு நாதம் தீய சக்திகளை விரட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
</p><h2>
தேங்காய், வாழைப்பழம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/114b06df-5c4a-4863-824b-d6b0ccd7bd2c/26-6aa6a8a4cf681.webp' /></p><h2>
</h2><p>தேங்காயும் வாழைப்பழமும் விநாயகருக்குப் பிடித்தமான படையல்களில் அடங்கும். யானை முகத்தைக் கொண்ட விநாயகருக்கு வாழைப்பழங்கள் மற்றும் வாழை மரத்தின் அனைத்துப் பாகங்களும் விருப்பமானவை என நம்பப்படுகிறது. அதனால், அவரது சிலைகள் பெரும்பாலும் வாழை இலைகள் மற்றும் வாழைத்தண்டுகளால் அலங்கரிக்கப்படுகின்றன.</p><h2>

எருக்கம் பூ</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c254ce97-370f-44b0-b62d-e4350220091d/26-6aa6a8a58700a.webp' /></p><p></p><h2>
</h2><p>எருக்கம் பூ எதிர்மறை ஆற்றலை நீக்கும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது. விநாயகருக்கு எருக்கம் பூ மாலை சாற்றி வழிபட்டால், பக்தர்களுக்கு நல்ல ஆரோக்கியமும் நோயற்ற வாழ்வும் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இந்த பொருட்களை படைத்து விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் வழிப்பாடு செய்வதால் வாழ்வில் சகல துன்பங்களும் நீங்கி செல்ல செழிப்பு பெருகும் என்று நம்ப்படுகின்றது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T04:01:42+00:00</updated>
        </entry>
    </feed>
