<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-14T10:44:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 தலைமுறைகள் - 83 பேர்... ஒற்றுமையாக வாழும் அதிசயக் கூட்டுக் குடும்பம்! எங்கு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/andhra-pradesh-6-generations-83-members-family-1784022436"></link>
            <id>https://manithan.com/article/andhra-pradesh-6-generations-83-members-family-1784022436</id>
            <summary type="text">நவீன காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தன வாழ்க்கை அதிகரித்து வரும் சூழலில், ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 6 தலைமுறைகளாக 83 பேர் ஒரே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவீன காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தன வாழ்க்கை அதிகரித்து வரும் சூழலில், ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 6 தலைமுறைகளாக 83 பேர் ஒரே கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்ந்து வரும் சம்பவம் பலரையும் ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.</p><p>
</p><p>
ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம், குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா குடும்பம்தான் இந்த அபூர்வமான ஒற்றுமைக் குடும்பமாகத் திகழ்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac13d4be-5be6-4750-95ea-dda475c83768/26-6a5609221c625.webp' /></p><p></p><h2>வியக்க வைத்த கூட்டுக் குடும்பம்</h2><p>குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அனைவரும் வசதிக்காக ஒன்றுக்கொன்று அடுத்ததாக அமைந்துள்ள நான்கு வீடுகளில் வசிக்கின்றனர். ஆனால், வாழ்வியல் முறையிலும் குடும்ப நிர்வாகத்திலும் அவர்கள் ஒரே குடும்பமாகவே செயல்பட்டு வருகின்றனர்.</p><p>
இந்தக் குடும்பத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், 83 பேருக்குமான உணவும் ஒரே சமையலறையில்தான் தினமும் தயாரிக்கப்படுகிறது. குடும்பத்தின் மருமகள்கள் அனைவரும் முழு ஒற்றுமையுடன் சமையல் உள்ளிட்ட வீட்டுப் பொறுப்புகளைப் பகிர்ந்து செய்து வருகின்றனர்.</p><p> வயது, திறமை மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், குடும்ப நிர்வாகம் எந்தச் சிக்கலும் இன்றி சீராக நடைபெறுகிறது.

குடும்பத்தின் மூத்தோர் அனைவரும் ஆலோசனைகளின் மூலம் குடும்பத்தை ஒற்றுமையுடன் வழிநடத்துகின்றனர். </p><p>இளைஞர்கள் விவசாயம் மற்றும் குடும்பத் தொழில்களை முழுப் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் கவனித்து வருகின்றனர். இதனால் தலைமுறைகள் மாறினாலும் குடும்பத்தின் ஒற்றுமை மற்றும் பாரம்பரியம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba2837a5-38da-4e50-938e-26927718233f/26-6a560922c58b5.webp' /></p><p></p><p>

இந்த மாபெரும் கூட்டுக் குடும்பத்திற்குச் சொந்தமாக 120 ஏக்கர் விவசாய நிலமும், 4 பேருந்துகளும் உள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கும் தனித்தனியாகப் பிரிக்கப்படாமல், முழுமையாக ஒரே பொதுக் கணக்கில் சேர்க்கப்பட்டு குடும்பத்தின் தேவைகளுக்காக வெளிப்படையான முறையில் பயன்படுத்தப்படுகிறது.</p><p>

இன்றைய வேகமான வாழ்க்கை முறையிலும், தனிமனிதச் சிந்தனைகள் மேலோங்கும் காலத்திலும், அன்பு, விட்டுக்கொடுத்தல், பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் மூலம் ஒரு பெரிய குடும்பத்தை வெற்றிகரமாக வழிநடத்த முடியும் என்பதை இந்தக் குடும்பம் நிரூபித்துக் காட்டியுள்ளது.</p><p> இவர்களின் அசைக்க முடியாத குடும்ப ஒற்றுமை சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கானோரின் பாராட்டுகளையும் நெகிழ்ச்சியான வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெட்ஷீட், தலையணை உறையை எப்போது துவைக்கிறீங்க? எச்சரிக்கை பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-often-should-bedsheets-and-pillowcases-washed-1784019207"></link>
            <id>https://manithan.com/article/how-often-should-bedsheets-and-pillowcases-washed-1784019207</id>
            <summary type="text">படுக்கை விரிப்பு, தலையணை உறையினை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? அதனால் நன்மைகள் என்ன? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.பொதுவாக ஒரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>படுக்கை விரிப்பு, தலையணை உறையினை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? அதனால் நன்மைகள் என்ன? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p>பொதுவாக ஒரு மனிதர் தனது வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை படுக்கைக்கு தான் செலவிடுகின்றனர். அவ்வாறு நாம் அதிகமாக பயன்படுத்தும் படுக்கை சுத்தமாக இருந்தால் தான் நல்ல தூக்கத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பெற முடியும்.</p><p>தூங்கி எழும்பிய பின்பு படுக்கையை சரியான ஒழுங்கு செய்து வைத்துவிட்டு செல்கின்றோம். ஆனால் அதனை எப்பொழுது துவைக்கின்றோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83489b1f-f825-489f-ad9d-b349cc0737c5/26-6a5607b3b19e9.webp' /></p><p>அதிகமான நாட்கள் துவைக்காமல் பயன்படுத்தினால், உடல் எண்ணெய், வியர்வை, இறந்த சரும செல்கள், தூசிப் பூச்சிகள், பாக்டீரியா, பூஞ்சை என துணிகளில் படிந்து கொண்டே செல்லும்.</p><p>இதனால் தோல் அரிப்பு, ஒவ்வாமை, முகப்பரு, மூச்சுத்திணறல், துர்நாற்றம், சரியாமல் தூங்கமுடியாத பிரச்சனைகள் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75795d82-0828-44b1-abec-c50591877d44/26-6a5607b45f2c6.webp' /></p><p></p><h2>எத்தனை நாட்களுக்குள் துவைக்க வேண்டும்?</h2><p>படுக்கை விரிப்பினை வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் துவைக்க வேண்டும். அதிலும் அதிகமாக வியர்ப்பவர்கள், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், குழந்தைகள் இவர்கள் எனில் 3 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் துவைக்கவும்.</p><p>அதுவே தலையணை உறையினை 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்றவும். அவ்வாறு இல்லையெனில் அதிகபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது துவைத்து சுத்தம் செய்யவும்.</p><p>துவைக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து துவைப்பது சிறந்தது. ஏனெனில் அதில் படிந்திருக்கும் பாக்டீரியா, கிருமிகள் அழியுமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22025902-f38f-4332-a513-0ff26c9b4e8f/26-6a5607b50d0f2.webp' /></p><p>அதிகமாக வியர்ப்பவர்கள், ஒவ்வாமை பிரச்சனை, சளி, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி துவைப்பது அவசியம்.</p><p>இவ்வாறு அடிக்கடி துவைத்து பயன்படுத்தும் போது தரமான தூக்கத்தையும், உடல்நலத்தில் மிகப்பெரிய மாற்றத்தினையும் பெறுவீர்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T09:56:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[French Fries Dangerous: எச்சரிக்கும் புற்றுநோய் மருத்துவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/french-fries-worse-than-cigarette-doctor-explains-1784018577"></link>
            <id>https://manithan.com/article/french-fries-worse-than-cigarette-doctor-explains-1784018577</id>
            <summary type="text">இந்தியாவின் குருகிராமை சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவரான Dr Vartika Vishwani உலகம் முழுவதும் விரும்பப்படும் &#039;பிரெஞ்ச் ஃப்ரைஸ்&#039; (French fri...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் குருகிராமை சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவரான Dr Vartika Vishwani உலகம் முழுவதும் விரும்பப்படும் 'பிரெஞ்ச் ஃப்ரைஸ்' (French fries) குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
மிக எளிதில் கிடைக்கக்கூடிய துரித உணவான 'பிரெஞ்ச் ஃப்ரைஸ்' (French fries) சிகரெட்டை விட ஆபத்தானது என கூறுகிறார்.
</p><p>
வாரத்திற்கு மூன்றுமுறை இதனை சாப்பிட்டால் நீரிழிவு நோய்க்கான அபாயத்தை 20 சதவிகிதம் அதிகரிப்பதாகவும் கூறுகிறார்.
</p><h2>
மீண்டும் சூடாக்கப்படும் எண்ணெயின் ஆபத்து
</h2><p>
உருளைக்கிழங்குகள் நல்லது என்றாலும் 'பிரெஞ்ச் ஃப்ரைஸ்' தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் மீண்டும் மீண்டும் சூடுபடுத்தப்படுகிறது, இது அதனுடைய வேதியியல் அமைப்பை மாற்றுகிறது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DajzQUuPAV3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DajzQUuPAV3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DajzQUuPAV3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Dr vartika vishwani (@neil.ki.doctor.mama)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script><br></p><p>ஒரே எண்ணெயை அதிக வெப்பநிலையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது டிரான்ஸ் கொழுப்புகளும், நச்சு சேர்மங்களும் அதிகரிக்கின்றன.</p><p>

குறித்த எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவை உட்கொள்ளும் போது உடல் செல்களுக்கு பரவலான பாதிப்பை ஏற்படுத்துகிறது,</p><p> இவை உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தை அதிகரிப்பதாக தெரிவிக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81ec8b12-5fb4-4209-8d0f-4dc796f8b87c/26-6a55f7f866d85.webp' /><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மறைந்திருக்கும் ஆபத்துகள்</span></p><p>
'பிரெஞ்ச் ஃப்ரைஸ்' மற்றொரு முக்கிய காரணியாக உப்பின் அளவு அதிகமாக உள்ளது, இதனை தொடர்ந்து உட்கொள்ளும் போது சோடியத்தின் அளவு அதிகரித்து எதிர்காலத்தில் பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறது, இதனால் ரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்படலாம்.</p><p>

மற்றொன்று உடல் பருமன், இளைஞர்களின்- குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் துரித உணவுகள்.</p><p>

'பிரெஞ்ச் ஃப்ரைஸ்'-ன் ருசியால் அதிகளவில் சாப்பிடுகிறார்கள், இதனால் உடலுக்கு எவ்வித நன்மையும் கிடையாது.
</p><p><b>
பொறுப்புத்துறப்பு - சமூகவலைத்தளத்தில் வெளியான தகவல்களை அடிப்படையாக கொண்டது.</b><br></p>]]></content>
            <updated>2026-07-14T08:50:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Today Gold Rate: தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை.... இன்று சவரன் எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gold-rate-july-14-2026-india-and-srilanka-1784016330"></link>
            <id>https://manithan.com/article/gold-rate-july-14-2026-india-and-srilanka-1784016330</id>
            <summary type="text">ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்றைய தங்கம் விலை
ஆபர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>இன்றைய தங்கம் விலை
</h2><p>ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களில் அதிகரித்து, சில தினங்களில் குறைந்தும் வருகின்றது.
</p><p>
இந்நிலையில், இன்று சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.13,200 ஆகவும், சவரன் ரூ.1,05,600 ஆகவும் இருந்து வந்தது.</p><p></p><p>
</p><p>
தற்போது சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, 13,150 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 400 குறைந்து, 1,05,200 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>இதே போன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ. 235.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,35,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eeab623-5775-486e-9a15-ebc5f41e1ed2/26-6a55f5fbef5c3.webp' /></p><p>
</p><h2>
இலங்கையில் தங்கம் விலை
</h2><p>இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,66,800 அதுவே கிராமிற்கு ரூ.45,850 க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,36,240க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 42,030க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 631.02 LKR என்றும் ஒரு அவுன்ஸ 19,627.06 LKR என்று விற்பனை ஆகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a98439c0-8753-410a-8695-2178cec05c65/26-6a55f5fcbd8c3.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T08:45:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[Fridgeல் சிவலிங்கம்: படையெடுக்கும் மக்கள் கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sivalinga-in-fridge-viral-news-1784018113"></link>
            <id>https://manithan.com/article/sivalinga-in-fridge-viral-news-1784018113</id>
            <summary type="text">ஆக்ராவில் உள்ள வீட்டொன்றில் இயற்கையாக தோன்றிய பனிக்கட்டி அமைப்பு சிவலிங்கம் போன்று இருப்பதாக கருதி அப்பகுதி மக்கள் வழிபடத் தொடங்கியுள்ளனர்.

அமர்நாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆக்ராவில் உள்ள வீட்டொன்றில் இயற்கையாக தோன்றிய பனிக்கட்டி அமைப்பு சிவலிங்கம் போன்று இருப்பதாக கருதி அப்பகுதி மக்கள் வழிபடத் தொடங்கியுள்ளனர்.
</p><p>
அமர்நாத் யாத்திரை நடைபெற்றும் வரும் வேளையில் இந்த சம்பவம் அதிக கவனம் பெற்றுள்ளது.
</p><h2>
குளிர்சாதன பெட்டியில் சிவலிங்கம்
</h2><p>
ஆக்ராவை சேர்ந்த குடும்பத்தினர் தங்களது குளிர்சாதனப்பெட்டியை திறந்த போது விசித்திரமான பனிக்கட்டி அமைப்பை பார்த்துள்ளனர்.
</p><p>
அதனை கவனித்த போது சிவலிங்கம் போன்ற உருவ அமைப்புடன் ஒத்துப்போவதாக கருதியுள்ளனர்.</p><p>

இத்தகவல் அக்கம்பக்கத்தில் பரவியதும், மக்கள் அதனை காண குவியத்தொடங்கினர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KZ2227iUdZ0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>

ஜலாபிஷேக வழிபாடு
</h2><p>
சிலர் ஜலாபிஷேகம் செய்து வழிபாடு செய்யத் தொடங்கினர், ஹர் ஹர் மகாதேவ் என முழக்கமிட்டனர், மக்கள் கூடியதால் அந்த வீடு வழிபாட்டு தலமாகவே மாறிவிட்டது.
</p><p>
இத்தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாக, தானாக உருவான பனிக்கட்டியை மக்கள் இவ்வாறு சித்தரிப்பது முட்டாள்தனமானது என கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
</p><p>
அறிவியலை தாண்டி மக்கள் இதனை மதநம்பிக்கையின் அடிப்படையில் பார்க்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d468cd6e-3628-43ff-b071-3b85131fda4a/26-6a55f5cfdd760.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-14T08:39:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரப்பூர்வ சந்திப்பில் முதல்வர் விஜய்யின் க்யூட்டான செயல்... படு வைரலாகும் வீடியோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijays-adorable-toy-car-moment-goes-viral-1784014538"></link>
            <id>https://manithan.com/article/cm-vijays-adorable-toy-car-moment-goes-viral-1784014538</id>
            <summary type="text">தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் விஜய், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிகம் பேசப்படும் முக்கிய நபர்களில் ஒருவராகத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் விஜய், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிகம் பேசப்படும் முக்கிய நபர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.அவரது அரசியல் நடவடிக்கைகள், நிர்வாக முடிவுகள் மற்றும் பல்வேறு அதிகாரப்பூர்வ சந்திப்புகள் தொடர்ந்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.</p><p> அதே நேரத்தில், அரசியல் நிகழ்வுகளைத் தாண்டி அவர் வெளிப்படுத்தும் இயல்பான அணுகுமுறை, எளிமையான நடத்தை மற்றும் கலகலப்பான தருணங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதுடன், அவ்வப்போது பேசுபொருளாகவும் மாறிவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b8ef322-6d8e-4611-8509-2398600a33e4/26-6a55ea0a49521.webp' /></p><p></p><h2>வைரல் வீடியோ</h2><p>இந்த நிலையில், வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான ‘வின்ஃபாஸ்ட்’ (VinFast) நிறுவனத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது முதல்வர் விஜய்க்கு மின்சார காரின் சிறிய மாதிரி பொம்மையை (Miniature model) பரிசாக வழங்கினார்.</p><p>குறித்த மாதிரி காரை வாங்கியதும், விஜய் மிகவும் மகிழ்ச்சியுடன் அதன் கதவுகளைத் திறந்து, நுணுக்கங்களை வியந்து சிறு குழந்தையைப் போல விளையாட்டாகப் பரிசோதித்த விஜய் வெளிப்படுத்திய ஒரு இயல்பான தருணம், அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், ரசிகர்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.</p><p></p><p>அரசியல் பணிகளுக்கு மத்தியில் அவரது எளிமையான அணுகுமுறையும், இயல்பான செயல்பாடுகளும் தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், குறித்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/CMVijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMVijay</a>&#39;s cute playtime with a Miniature Toy Car... 🤎🚗 <a href="https://t.co/dmrxMCbeO2">pic.twitter.com/dmrxMCbeO2</a></p>&mdash; 𝐒𝐚𝐤𝐭𝐡𝐢 𝐀𝐠𝐫𝐢 𝑻𝑽𝑲 (@mersal_sakthi03) <a href="https://x.com/mersal_sakthi03/status/2076631371959943585?ref_src=twsrc%5Etfw">July 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T08:07:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[45 வயது அம்மா - 21 வயது மகன்: ஒரே மேடையில் பட்டம் பெற்ற நெகிழ்ச்சி தருணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mom-and-son-21-graduate-together-at-iit-madras-1784011676"></link>
            <id>https://manithan.com/article/mom-and-son-21-graduate-together-at-iit-madras-1784011676</id>
            <summary type="text">ஒரு தாய் தனது மகனின் பட்டமளிப்பு விழாவைக் கண்டு பெருமைப்படுவது சாதாரண விஷயம். ஆனால், அதே மேடையில், அதே விழாவில், மகனுடன் சேர்ந்து பட்டம் பெற்றால்? இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு தாய் தனது மகனின் பட்டமளிப்பு விழாவைக் கண்டு பெருமைப்படுவது சாதாரண விஷயம். ஆனால், அதே மேடையில், அதே விழாவில், மகனுடன் சேர்ந்து பட்டம் பெற்றால்? இது எவ்வளவு பெரிய விடயம்.</p><p>குஜராத்தைச் சேர்ந்த ஜிகிஷா டெய்லர் (45), தனது மகன் ஆதித்யா கபாடியாவுடன் சேர்ந்து சென்னை ஐஐடி-யின் டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பை முடித்து, ஒரே பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுள்ளார்."கற்றலுக்கு வயது ஒரு தடையல்ல" என்பதை அவர்கள் வாழ்க்கையிலேயே நிரூபித்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20cd689b-c415-49ec-b936-e8bfb92aa447/26-6a55e25fdc373.webp' /></p><p></p><h2>சுவாரஸ்யமான பின்னணி</h2><p>
குஜராத்தின் பரூச் நகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 16 ஆண்டுகள் எலக்ட்ரானிக்ஸ் பேராசிரியராகப் பணியாற்றிய ஜிகிஷா, குடும்பச் சூழ்நிலை காரணமாக 2019-ல் தனது வேலையை விட்டு விலகினார்.</p><p>

அதே சமயம், 2021-ல் ஆதித்யா சென்னை ஐஐடி-யின் ஆன்லைன் டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பில் சேர்ந்தார். கொரோனா காலம் என்பதால் அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடந்தன.

"அந்த நேரத்தில் ஐஐடி, எம்ஐடி, ஸ்டான்போர்டு எதிலே சேர்ந்திருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள்தான். எனக்கு டேட்டா சயின்ஸ், ஏஐ மீது அதிக ஆர்வம் இருந்தது," என்று ஆதித்யா கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc7ca275-9f00-4975-8299-226be9aead8c/26-6a55e2608c335.webp' /></p><p>
</p><p>
ஆரம்பத்தில் வேறு ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்த அவர், பின்னர் சென்னை ஐஐடி இந்தப் படிப்பை முழுமையான பட்டப்படிப்பாக அங்கீகரித்ததும், அந்தக் கல்லூரியை விட்டு முழு கவனத்தையும் ஐஐடி படிப்பில் செலுத்தினார்.</p><p>

மகனைப் பார்த்து மாணவியான அம்மா

மகன் படித்துக் கொண்டிருந்த பாடங்களைப் பார்த்த ஜிகிஷாவுக்கும் டேட்டா சயின்ஸ் மீது ஆர்வம் ஏற்பட்டது. எலக்ட்ரானிக்ஸ் பின்னணி இருந்ததால் புள்ளியியல், கணினி அமைப்புகள் போன்ற பாடங்களைப் புரிந்துகொள்ள முடிந்துள்ளது. மேலும் மகனின் ஊக்கத்தால் 2022-ம் ஆண்டு அவரும் அதே படிப்பில் சேர்ந்தார்.</p><p>
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாணவியாக மாறுவது அவருக்கு எளிதாக இருக்கவில்லை.

"ஆரம்பத்தில் கணிதமும் புள்ளியியலும் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் சில வாரங்களில் அதற்கு பழகிவிட்டேன்," என தெரிவித்துள்ளார்.</p><p>ஜிகிஷாவின் தினசரி அட்டவணையும் படிப்புக்காக மாறியது. அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து காலை 7 மணிக்குள் படிப்பை முடித்துவிட்டு, வீட்டு வேலைகளை கவனித்த பிறகு மீண்டும் படிப்பில் ஈடுபட்டார். </p><p>ஐஐடி நடத்திய நேரலை வகுப்புகள், சந்தேக நிவர்த்தி அமர்வுகள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் அவருக்கு பெரும் ஆதரவாக இருந்தன.</p><p></p><h2>கேலி பேச்சுகளுக்கு பதில்</h2><p>
"இந்த வயதில் ஏன் படிக்கிறாய்? வேலைக்குப் போகப் போகிறாயா?" என்ற கேள்விகளை பலர் எழுப்பினாலும், ஜிகிஷா "புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வித்தியாசமான ஒன்றைச் செய்ய வேண்டும்." என எளிமையாக பதில் கொடுத்துள்ளார்.</p><p>இவரின் குடும்பத்தின் முழு ஆதரவுடன், படிப்பின் சவால்களை எதிர்கொண்டு அவர் தனது படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். ஒரே பாடத்தைப் படித்ததால் தாயும் மகனும் ஒருவருக்கொருவர் உதவியதுடன், நல்ல போட்டியிலும் ஈடுபட்டனர். ஆதித்யா தனது அனுபவத்தின் மூலம் ஆன்லைன் தேர்வுகள், விவா உள்ளிட்டவற்றில் தாய்க்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.</p><p>இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில், இருவரும் ஒரே நேரத்தில் மேடையேறி பட்டம் பெற்றது எதிர்பாராத சிறப்பு நிகழ்வாக அமைந்துள்ளது. இந்தக் நிகழ்வு கற்றலுக்கு வயது தடையல்ல; முயற்சி மற்றும் ஆதரவு இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதை மீண்டும் ஒரு முறை பறைசாற்றியுள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T07:17:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூலை 16 உருவாகும் பரிவர்த்தன யோகம்: இந்த ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போவது உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-moon-parivarthan-yog-on-16-july-who-get-luck-1784003853"></link>
            <id>https://manithan.com/article/sun-moon-parivarthan-yog-on-16-july-who-get-luck-1784003853</id>
            <summary type="text">ஜோதிடத்தின் படி, ஜூலை மாதம் மிகவும் சிறப்பான மாதமாகக் கருதப்படுகிறது. காரணம், இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, பல்வேறு யோக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தின் படி, ஜூலை மாதம் மிகவும் சிறப்பான மாதமாகக் கருதப்படுகிறது. காரணம், இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்</p><p>அந்த வகையில், ஜூலை 16 மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அன்று சூரியனும் சந்திரனும் தங்களது ராசிகளை மாற்றுகின்றன. சூரியன் கடக ராசிக்கும், சந்திரன் சிம்ம ராசிக்கும் பெயர்வதால், ராசி பரிவர்த்தன யோகம் உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e2d1d66-4504-4670-a0cd-99360a40965a/26-6a55c22c70e5b.webp' /></p><p> </p><p>இது கிரகங்களின் தனித்துவமான நிலைமையால் உருவாகும் சிறப்பு யோகமாகக் கருதப்படுகிறது.

இந்த பரிவர்த்தன யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளி்ன வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தினாலும், தொழில் மற்றும், பொருளாதார ரீதியில் உச்சகட்ட பலனை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில்&nbsp; பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28a367f6-6c6e-4cc6-92e7-8c350dd51ab1/26-6a55c22d21475.webp' /></p><p>

சூரியன்–சந்திரன் பரிவர்த்தன யோகத்தின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான காலகட்டம் உருவாக உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த முன்னேற்ற வாய்ப்புகள் இப்போது கைகூடும். </p><p>குறிப்பாக கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்றவர்கள் தங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல முடிவுகளைப் பெறும் வாய்ப்பு அதிகம். தொழில் புரிவோருக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.</p><p>
புதிய தொழில் அல்லது வியாபாரத்தை தொடங்க நினைப்பவர்கள் இந்த நேரத்தில் தைரியமாக முயற்சி மேற்கொண்டால் வெற்றி பெறலாம். பணியிடத்திலும் புதிய பொறுப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். </p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b98251a-cccc-450f-8f86-f1da62b66840/26-6a55c22dc7725.webp' /></p><p>
சூரியன்–சந்திரன் பரிவர்த்தன யோகம் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பல மாற்றங்களை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை மற்றும் செயல்திறன் அதிகரிப்பதால் எந்த காரியத்தையும் உற்சாகமாக செய்து முடிக்க முடியும்.</p><p>இதுவரை எடுத்த கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கத் தொடங்கும்.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, வருமானம் அதிகரிக்கும்.மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெறலாம்.</p><p> குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து, உறவினர்களின், குறிப்பாக உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1e7d65f-20f0-4ef6-b38b-e1937df6bc8d/26-6a55c22e761dd.webp' /></p><p>[AA8SF2K ]</p><p>சூரியன்–சந்திரன் பரிவர்த்தன யோகத்தின் அருளால் துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணியிடத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.</p><p>நீண்ட காலமாக மேற்கொண்ட உழைப்புக்கான அங்கீகாரமும் பலனும் இந்த காலத்தில் கிடைக்கக்கூடும். பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.</p><p>
வேலைப்பளு குறைவதால் மன அழுத்தமும் குறைந்து, புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும். போட்டித் தேர்வுகள் மற்றும் போட்டி சார்ந்த முயற்சிகளில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். திருமண&nbsp; வாழ்க்கையில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T06:03:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vijay-s-first-salary-was-rs-500-for-vetri-in-1984-1784006428"></link>
            <id>https://manithan.com/article/vijay-s-first-salary-was-rs-500-for-vetri-in-1984-1784006428</id>
            <summary type="text">முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் முதல் முதலில் வாங்கிய சம்பளம் குறித்த அவரின் தந்தை பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் தற்போது இணையத்தில் வைரலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் முதல் முதலில் வாங்கிய சம்பளம் குறித்த அவரின் தந்தை பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p><p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், அதிக வசூல் ஈட்டும் நட்சத்திரமாகவும் திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் விஜய். பல கோடி ரசிகர்களின் அன்பைப் பெற்றுள்ள அவர், இறுதியாக நடித்த ஜனநாயன் படத்துக்கு 220 கோடி சம்பளம் பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9831ff09-f0da-4c34-97bd-589898a775b1/26-6a55cfed0d91b.webp' /></p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">முதல் சம்பளம்&nbsp;</span></h2><p>ஆனால், தனது திரையுலகப் பயணத்தின் தொடக்கத்தில் அவர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் தகவலாக உள்ளது.
</p><p>
நடிகர் விஜய், பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. சிறுவயதிலேயே திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கியதன் மூலம் இன்று தமிழ் சினிமாவின் அழிக்க்க அடையாளமாக மாறியிருக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb7b4319-c2a4-4847-9f77-28e92034f8c5/26-6a55cfedb31b8.webp' /></p><p>ஆனால்&nbsp; விஜய், தனது முதல் திரைப்படத்திற்காக பெற்ற சம்பளம் வெறும் ரூ.500 மட்டுமே என்பதே பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

1984-ஆம் ஆண்டு வெளியான 'வெற்றி' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக விஜய் திரையுலகில் அறிமுகமானார். </p><p>இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான பி.எஸ். வீரப்பா தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு ரூ.500 சம்பளமாக வழங்கப்பட்டதாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது பழைய பேட்டியில் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2211aca3-ba44-4102-a2ad-dd925db375c0/26-6a55cfee61053.webp' /></p><p>
அதன்பிறகு 'நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய், 1992-ஆம் ஆண்டு வெளியான 'நாளைய தீர்ப்பு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும், தனது திறமையை நிரூபித்து தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி வசூல் நாயகனாக உருவெடுத்துள்ளார்.
</p><p>
மேலும், விஜய்யின் திரைப்பயணம் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களுக்கும் சாட்சியாக அமைந்துள்ளது. 1980-களில் பயன்படுத்தப்பட்ட ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பம் முதல், பின்னர் கலர் ஃபிலிம் காலம், தற்போது டிஜிட்டல் மற்றும் அதிநவீன திரைப்படத் தொழில்நுட்பங்கள் வரை பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைக் கண்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43875441-fde3-478a-8d2d-024d9873991a/26-6a55cfef0f6bb.webp' /></p><p></p><p>
வெறும் ரூ.500 சம்பளத்தில் தொடங்கிய விஜய்யின் திரைப்பயணம், இன்று இந்திய சினிமாவின் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகர்களில் ஒருவராக அவரை உயர்த்தியுள்ளது.</p><p>தற்போது சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி தமிழக முதல்வராக தனது பணியை சிறப்பாக செய்து வருகின்றார். விஜயின் இறுதி படமான ஜனநாயகன் விரைவில் திரைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T06:01:36+00:00</updated>
        </entry>
    </feed>
