<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-30T08:53:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க இறக்குமதி வரி 15% இல் இருந்து 6%-ஆக குறையுமா? மத்திய அரசு ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gold-import-tax-cut-will-the-price-drop-1788077555"></link>
            <id>https://manithan.com/article/gold-import-tax-cut-will-the-price-drop-1788077555</id>
            <summary type="text">Tax Reduction: தங்கத்தின் இறக்குமதி வரியை தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து மீண்டும் 6 சதவீதமாகக் குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p></p><p><b>Tax Reduction: </b>தங்கத்தின் இறக்குமதி வரியை தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து மீண்டும் 6 சதவீதமாகக் குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> இறக்குமதி வரி உயர்வால் சட்டவிரோத தங்கக் கடத்தல் அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் தங்க வர்த்தகத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42353d3d-f762-4b7c-9c54-065efc147045/26-6a93ed0a26f19.webp' /></p><p>கடந்த மே மாதத்தில் ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.</p><p>இதன் தாக்கமாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் அழுத்தம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, நாட்டின் அந்நியச் செலாவணி வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அத்தியாவசியமற்ற தங்கக் கொள்முதலை குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.&nbsp;</p><p>

இதன் தொடர்ச்சியாக, தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அதன் இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/666fa9ff-260a-4215-abcb-1f15376ca5a9/26-6a93ed0acbd3c.webp' /></p><p> </p><p>வரி உயர்வின் நோக்கம் தங்க இறக்குமதியை குறைப்பதாக இருந்தாலும், அதனால் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்ததுடன், சட்டவிரோதமாக தங்கத்தை நாட்டுக்குள் கொண்டு வரும் கடத்தல் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.</p><h2>தங்கக் கடத்தலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை</h2><p>
</p><p>
இதனால், சட்டப்பூர்வமான தங்க இறக்குமதியை ஊக்குவிக்கும் வகையிலும், கடத்தலை கட்டுப்படுத்தும் வகையிலும் இறக்குமதி வரியை மீண்டும் குறைக்க வேண்டும் என நகைத் தொழில் துறையினர் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
</p><p>
இந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, தங்கத்தின் இறக்குமதி வரியை தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து மீண்டும் 6 சதவீதமாகக் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. </p><p>அவ்வாறு வரி குறைக்கப்பட்டால், தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca8467d4-7026-4a23-904b-661f6c698af3/26-6a93ed0b80ff4.webp' /></p><p></p><p>

மேலும், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளில் வெள்ளி முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவதால், வெள்ளி மீதான இறக்குமதி வரியையும் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

தங்கத்தின் இறக்குமதி வரி மீண்டும் 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டால், அதன் தாக்கம் சந்தை விலையிலும் பிரதிபலிக்கலாம். இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் ரூ.10,000 வரை குறைய வாய்ப்புள்ளதாக சில நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e9bc480-b53d-474d-a723-184e8de1c6d4/26-6a93ed0c31725.webp' /></p><p> </p>மேலும், மின்னணு சாதனத் தயாரிப்புகளுக்கு வெள்ளி முக்கியத் தேவையாக உள்ளதால், வெள்ளி மீதான வரியும் குறைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.&nbsp;<p></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p></p><p><br></p><p><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T08:47:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பெயர்ச்சியால் பொற்காலம் தொடங்கும் 3 ராசிகள்: பணவரவும் வெற்றியும் அதிகரிக்கும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-transit-in-virgo-who-get-huge-luck-1788070073"></link>
            <id>https://manithan.com/article/mercury-transit-in-virgo-who-get-huge-luck-1788070073</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுபவர் புதன். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுபவர் புதன். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், குறுகிய காலத்திலேயே தனது நிலையை மாற்றக்கூடியவர். </p><p>தற்போது புதன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில், செப்டம்பர் 07 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான கன்னிக்குள் நுழைகிறார். சுமார் 1 ஆண்டுக்குப் பிறகு புதன் தனது சொந்த ராசிக்கு திரும்புவதால், பத்ர ராஜயோகம் உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dd2c9cd-e133-4907-b05e-aac6a7e9a48f/26-6a93d788a947d.webp' /></p><p> பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான இந்த யோகம், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.எனினும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தின் மூலம் நல்ல வெற்றி, புகழ், பணம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைப் பெறவுள்ளனர். </p><p>அப்படி செப்டம்பர் 07 ஆம் தேதி புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c11c4239-ec82-49b6-959e-83f54ac94eb5/26-6a93d7895d38f.webp' /></p><p></p><p>
மேஷ ராசியின் 6-வது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். </p><p>பணியில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. </p><p>மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும்.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dce3e29-905c-44cf-9ac7-17238435e8dc/26-6a93d78a0e33f.webp' /></p><p>
சிம்ம ராசியின் 2-வது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். </p><p>வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.</p><p> குறிப்பாக, புதனின் அருளால் புதிய தொழிலைத் தொடங்கும் முடிவையும் எடுக்கக்கூடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
</p><h2>தனுசு&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ffd4fea-bf66-4060-afe6-a7c7a30f4c06/26-6a93d78ab45a1.webp' /></p><p></p><p>தனுசு ராசியின் 10-வது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் நீண்ட காலமாக மேற்கொண்ட கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.</p><p>அதேசமயம், நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்கும்.</p><p> புதிய முதலீடுகளை மேற்கொண்டாலும் நல்ல வருமானம் கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த பணிகள் மீண்டும் தொடங்கி வெற்றிகரமாக நிறைவடையும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;.</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T07:11:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட் வீரரின் மகன் : அவுஸ்திரேலியாவில் விளையாட அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/australia-approve-transgender-anaya-bangar-to-play-1788065858"></link>
            <id>https://manithan.com/article/australia-approve-transgender-anaya-bangar-to-play-1788065858</id>
            <summary type="text">trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட் விளையாட அவுஸ்திரேலியா&amp;nbsp; அனுமதி வழங்கியுள்ளது.அனயா பங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட் விளையாட அவுஸ்திரேலியா&nbsp; அனுமதி வழங்கியுள்ளது.</p><h2>அனயா பங்கர்</h2><p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் பங்கர், தற்போது அனயா பங்கர் என்ற பெயரில் திருநங்கை பெண்ணாக மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5654ddb1-a21d-492f-aa2b-adc3cda1b15f/26-6a93bd8717103.webp' /></p><p></p><p>
</p><p>
மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) அனுமதி கோரியிருந்த நிலையில், அங்கிருந்து பதில் கிடைக்காததால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பை அவர் அணுகியுள்ளார்.</p><p> இதையடுத்து, அவுஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனயாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd1066d8-3c5a-47a7-959c-be9ae8609830/26-6a93bd87bd400.webp' /></p><p>

கிரிக்கெட்டில் இருந்து பாலின மாற்றப் பயணம்
2001 முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சஞ்சய் பங்கரின் மகனான ஆர்யன், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
</p><p>
2023ஆம் ஆண்டு, தான் பெண்ணாக மாற விரும்புவதாக வெளிப்படையாக தெரிவித்த அவர், அதற்கான ஹார்மோன் சிகிச்சையை மேற்கொண்டார். தொடர்ந்து பாலின மாற்ற சிகிச்சைகளை மேற்கொண்டு, தனது பெயரையும் அனயா பங்கர் என மாற்றிக்கொண்டார்.</p><p>

இதையடுத்து மகளிர் கிரிக்கெட்டில் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடரும் நோக்கில் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20800c02-f590-4eea-b149-d3c957776424/26-6a93bd886e244.webp' /></p><p>

அவுஸ்திரேலியாவில் புதிய வாய்ப்பு
மகளிர் கிரிக்கெட்டில், குறிப்பாக அவுஸ்திரேலியாவின் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அனயா விருப்பம் தெரிவித்திருந்தார். </p><p>இதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு தற்போது வழங்கியுள்ளது.

எனினும், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தகுதி தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விதிமுறைகள் தொடர்ந்து அமலில் உள்ளன.
</p><p>
ஆண் பருவமடைதலை அடைந்த திருநங்கை பெண்கள், உயர்மட்ட மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதைத் தடுக்கும் விதிமுறைகளை ஐசிசி 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bedfbd37-9168-4dbe-96fc-f40609ebb5f4/26-6a93bd891fb77.webp' /></p><p></p><p>
</p><p>
டெஸ்டோஸ்டிரோன் அளவு முக்கியம்
ஐசிசி விதிமுறைகளின்படி, உயர்மட்ட மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்குத் தகுதி பெற, சம்பந்தப்பட்ட வீராங்கனையின் இரத்தத்தில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்தது 12 மாதங்களுக்கு 10 nmol/L-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
</p><p>
அனயாவின் உயர்மட்ட கிரிக்கெட் தகுதி தொடர்பான முடிவு, அவரது டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே அமையும்.

இதுகுறித்து கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நேர்மை பிரிவுத் தலைவர் ஜாக்கி பார்ட்ரிட்ஜ் கூறுகையில், 2027 மார்ச் மாதத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே அனயாவின் உயர்மட்ட கிரிக்கெட் தகுதி தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, 2027 மார்ச் மாதம் வரை அவுஸ்திரேலியாவின் மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களில் நடைபெறும் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் அனயா தொடர்ந்து பங்கேற்கத் தகுதியுடையவராக இருப்பார்.
</p><p>
இதன் மூலம், இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய ஆர்யன் பங்கர், அனயா பங்கர் என்ற புதிய அடையாளத்துடன் மகளிர் கிரிக்கெட்டில் தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T05:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாளவ்ய ராஜயோகம் தரும் சுக்கிரன்: இந்த ராசிகளின் செல்வம் இரட்டிப்பாகப்போகுது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-transit-in-libra-who-get-huge-luck-1788014210"></link>
            <id>https://manithan.com/article/venus-transit-in-libra-who-get-huge-luck-1788014210</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாற்றம் செய்து, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் அசுரர்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாற்றம் செய்து, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. </p><p>அந்த வகையில் அசுரர்களின் குருவாகவும், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பின் காரணியாகவும் கருதப்படுபவர் சுக்கிரன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e0ddfae-fda8-4ab1-8ef5-923cf56a8313/26-6a92f801a43b3.webp' /></p><p>
</p><p>
சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசி மாறுவதுடன், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாகவும் உள்ளார். இந்நிலையில், செப்டம்பர் 2ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார். </p><p>இதனால் பஞ்சமகா புருஷ ராஜயோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது.

இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களின் நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், தொழிலிலும் சிறப்பான வளர்ச்சியை அடையவுள்ளனர் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>அப்படி செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89f8d3e0-d97a-4171-bcba-2885dcf7f317/26-6a92f8025f7a4.webp' /></p><p>
சிம்ம ராசியின் 10 மற்றும் 3ஆம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் 3ஆம் வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். </p><p>குறிப்பாக, சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். </p><p>வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். அவற்றைத் திறம்பட பயன்படுத்திக் கொண்டால், தொழிலில் நல்ல உச்சத்தைத் தொடலாம். குறிப்பாக, வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.</p><p></p><p>
</p><h2>
மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71609054-af7a-448b-8312-c5732b89fce4/26-6a92f80313f8f.webp' /></p><h2>
</h2><p>மேஷ ராசியின் 7 மற்றும் 2ஆம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் 7ஆம் வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள்.நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும்.</p><p>பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள்.</p><h2>
விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/864b8c71-cda6-4448-aaab-b2a449ee4076/26-6a92f803bd12e.webp' /></p><h2>
</h2><p>விருச்சிக ராசியின் 12ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார்.இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. </p><p>போட்டிகள் மற்றும் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும்.தொழில் ரீதியாக சிறப்பான காலமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4c7320e-ece2-452e-a021-5132c25ede53/26-6a92f80475c3f.webp' /></p><p></p><h2>
</h2><p>மிதுன ராசியின் 5ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். </p><p>குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் பிணைப்பும் அதிகரிக்கும். </p><p>எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T04:11:10+00:00</updated>
        </entry>
    </feed>
