<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-05T14:30:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Philippines : 10 ஆண்டுகள் படுக்கைக்கு அடியில் இருந்த பல கோடி மதிப்புள்ள அரிய முத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/fisherman-found-giant-100-million-pearl-1785934636"></link>
            <id>https://manithan.com/article/fisherman-found-giant-100-million-pearl-1785934636</id>
            <summary type="text"> Philippines : பிலிப்பைன்ஸின் பளவான் தீவைச் சேர்ந்த ஒரு மீனவர், 2006ஆம் ஆண்டு கடலில் கண்டெடுத்த 34 கிலோ எடையுள்ள மிகப்பெரிய இயற்கை முத்தை அதன் உண்மையா...</summary>
            <content type="html"><![CDATA[<p> Philippines : பிலிப்பைன்ஸின் பளவான் தீவைச் சேர்ந்த ஒரு மீனவர், 2006ஆம் ஆண்டு கடலில் கண்டெடுத்த 34 கிலோ எடையுள்ள மிகப்பெரிய இயற்கை முத்தை அதன் உண்மையான மதிப்பு தெரியாமல் சுமார் 10 ஆண்டுகள் தனது வீட்டில் படுக்கைக்கு அடியில் அதிர்ஷ்டப் பொருளாக வைத்திருந்தார்&nbsp; என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?&nbsp;</p><p>கடந்த 2006ஆம் ஆண்டு, பளவான் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடல் சிப்பிக்குள் சிக்கியிருந்த இந்தப் பிரம்மாண்ட முத்தை அந்த மீனவர் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. அதன் அரிய தன்மையை அறியாத அவர், அதை தனக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் பொருளாக நம்பி, தனது வீட்டில் படுக்கைக்கு அடியில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3572addc-1867-4eb6-aca0-cf0a3d431c36/26-6a7336ed2bc34.webp' /></p><h2>உலகின் மிகப்பெரிய இயற்கை முத்து</h2><p>

இந்த அரிய முத்து சுமார் 2.2 அடி (67 செ.மீ) நீளம், 1 அடி (30 செ.மீ) அகலம் மற்றும் 34 கிலோ எடை கொண்டதாகும். இதன் அளவும் எடையும் உலகின் மிகப்பெரிய இயற்கை முத்துகளில் ஒன்றாக இதைத் தனித்துவமாக்குகின்றன.
</p><p>
இந்நிலையில், மீனவரின் வீடு தீ விபத்தில் சேதமடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பொருளை அவர் பாதுகாப்பு கருதி உள்ளூர் சுற்றுலா அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அப்போது அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், அது மிகவும் அரிய மற்றும் விலைமதிப்பற்ற இயற்கை முத்து என்பது தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf21c009-7f00-4115-9622-866a750accb8/26-6a7336edd34f9.webp' /></p><p>

இந்த முத்தின் மதிப்பு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது தோராயமாக 950 கோடி மதிப்புள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிப்பட்ட இந்த விடயம் தற்போது சமூக ஊடகங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றது.</p><p><iframe width="315" height="576" src="https://www.youtube.com/embed/5mKZ30fioco" title="10 ஆண்டுகள் படுக்கையறையில் புதைந்து கிடந்த புதையல்..!😱 | உலகையே வியக்க வைத்த கதை!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T14:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[health benefits of cinnamon : இலவங்கப்பட்டையின் மருத்துவ குணங்களும் ஆரோக்கிய நன்மைகளும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/amazing-health-benefits-of-cinnamon-1785926623"></link>
            <id>https://manithan.com/article/amazing-health-benefits-of-cinnamon-1785926623</id>
            <summary type="text">health benefits of cinnamon : நமது சமையலறையில் மணத்திற்காக பயன்படுத்தப்படும் முக்கியமான மசாலாப் பொருட்களில் ஒன்றான இலவங்கப்பட்டை, உணவின் சுவையையும் நற...</summary>
            <content type="html"><![CDATA[<p>health benefits of cinnamon : நமது சமையலறையில் மணத்திற்காக பயன்படுத்தப்படும் முக்கியமான மசாலாப் பொருட்களில் ஒன்றான இலவங்கப்பட்டை, உணவின் சுவையையும் நறுமணத்தையும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. </p><p>பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இலவங்கப்பட்டை, இன்று நவீன மருத்துவ ஆய்வுகளாலும் பல நன்மைகள் கொண்ட இயற்கை மூலிகையாகக் கருதப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7fxQkqOEX7c" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
இலவங்கப்பட்டையில் மெக்னீசியம், இரும்புச்சத்து, தாமிரம், கால்சியம், மாங்கனீஸ், நார்ச்சத்து மற்றும் சிறிதளவு புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.</p><p> மேலும், இதில் அதிகளவில் காணப்படும் ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
தினசரி உணவில்&nbsp; இலவங்கப்பட்டையை சேர்த்துக் கொள்வதன் மூலம் கிடைக்கும் முக்கியமான ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae01999c-55e0-4220-ba2b-efce9bcf0832/26-6a73237c2a37e.webp' /></p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஆரோக்கிய நன்மைகள்&nbsp;</span></p><p>இலவங்கப்பட்டையில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் தேவையற்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வது குறையும். மேலும், உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) சீராக செயல்படச் செய்து, உடல் எடையைக் குறைக்க உதவக்கின்றது.</p><p>இலவங்கப்பட்டை செரிமான உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. வயிற்றுப்பெருக்கு, அஜீரணம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளை குறைப்பதுடன், உடலில் தேங்கியுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதில் ஆற்றல் காட்டுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2db62e9d-33d2-45f5-bc95-357ae4737c52/26-6a73237cd428a.webp' /></p><p>டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுவதோடு, இன்சுலின் செயல்திறனை மேம்படுத்தவும், உடலில் இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இருப்பினும், நீரிழிவு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் இதனை பயன்படுத்துவது சிறந்தது.&nbsp;</p><p>இலவங்கப்பட்டையில் உள்ள இயற்கையான கிருமி எதிர்ப்பு பண்புகள், நுரையீரலில் தேங்கியுள்ள சளியை வெளியேற்ற உதவுகின்றது.&nbsp;</p><p>இலவங்கப்பட்டையில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட்கள், உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் சேதத்தை குறைக்க உதவுகின்றன. இதனால் அல்சைமர், பார்கின்சன் போன்ற சில நரம்பியல் நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவக்கூடும் என்று சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p>இலவங்கப்பட்டை இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. இது வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகளை கட்டுப்படுத்தி, வாய் துர்நாற்றத்தை குறைக்க உதவுகிறது. இதன் காரணமாகவே பல பற்பசைகள் மற்றும் பற்பொடிகளில் இலவங்கப்பட்டை சேர்க்கப்படுகிறது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yf9dTFN2RVY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>இலவங்கப்பட்டையில் பல நன்மைகள் இருந்தாலும், அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், கல்லீரல் நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு மருந்துகளை பயன்படுத்துபவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் இதனை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T12:16:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Chaitra Reddy : சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்தா? திருமண புகைப்படங்களை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/is-kayal-serial-chaitra-reddy-getting-divorce-1785921606"></link>
            <id>https://manithan.com/article/is-kayal-serial-chaitra-reddy-getting-divorce-1785921606</id>
            <summary type="text">Chaitra Reddy Divorce Rumors :&amp;nbsp; &#039;கயல்&#039; சீரியல்&amp;nbsp; நடிகை சைத்ரா ரெட்டி, தனது கணவரும் தயாரிப்பாளருமான ராகேஷ் சமலாவை விவாகரத்து செய்யவிருப்பதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chaitra Reddy Divorce Rumors :&nbsp; 'கயல்' சீரியல்&nbsp; நடிகை சைத்ரா ரெட்டி, தனது கணவரும் தயாரிப்பாளருமான ராகேஷ் சமலாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p><h2>
சைத்ரா ரெட்டி</h2><p>சன் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடராக “கயல்” சீரியல் இருந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/267aaaf6-2c08-4194-872f-0036eb6bebfa/26-6a73067222b52.webp' /></p><p>இந்த தொடரில் கதையின் நாயகியான கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தமிழக மக்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி.</p><p>தன்னுடைய இயல்பான நடிப்பு, துணிச்சலான கதாபாத்திர வெளிப்பாடு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பின் மூலம் சைத்ரா ரெட்டி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6adf4189-7a21-4e5a-a9f5-e3001c4f2866/26-6a730672cab94.webp' /></p><p></p><h2> </h2><p>“கயல்” தொடருக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான “யாரடி நீ மோகினி” தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும், தனது நடிப்புத் திறமையால் அந்த கதாபாத்திரத்திற்கும் தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்.&nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">திருமண புகைப்படங்கள் நீக்கம்</span></h2><p>சமீப காலமாக திரையுலகில் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான செய்திகள் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி குறித்தும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f8716f-7565-4790-b17f-974ffd5dd8fe/26-6a73067382552.webp' /></p><p>
சைத்ரா ரெட்டி, தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான ராகேஷ் சமலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தங்களது திருமண வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தருணங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ba6688a-9cb6-432d-9b0c-8f9758c75b50/26-6a73067433ba5.webp' /></p><p>
இந்நிலையில், சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த&nbsp; திருமண புகைப்படங்களை நீக்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38eacce3-984e-43d6-9378-0620ba54b43f/26-6a730674d9956.webp' /></p><p></p><p>இதனை தொடர்ந்து, “சைத்ரா ரெட்டிக்கும் அவரது கணவர் ராகேஷ் சமலாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதா?”, “இருவரும் விவாகரத்து செய்ய உள்ளார்களா?” என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.
</p><p>
எனினும், இதுகுறித்து சைத்ரா ரெட்டி அல்லது அவரது கணவர் ராகேஷ் சமலா தரப்பில் இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T11:12:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் புள்ளைக்கு 10 லட்சம் சம்பளம்.. ஆனா நா முதியோர் இல்லத்தில்: நடிகரின் கண்ணீர் பேட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-actor-mohan-sharma-is-staying-in-old-age-home-1785476712"></link>
            <id>https://manithan.com/article/why-actor-mohan-sharma-is-staying-in-old-age-home-1785476712</id>
            <summary type="text">Emotional Interview Actor Mohan Sharma: ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும், தயாரிப்பாளராகவும், திரைப்படத் துறையின் முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Emotional Interview Actor Mohan Sharma: ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும், தயாரிப்பாளராகவும், திரைப்படத் துறையின் முக்கிய நிர்வாகியாகவும் வலம் வந்தவர் மோகன் சர்மா. </p><p>இன்று, 80 வயதில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WJ8UXASKWUI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">பிரபல நடிகர்&nbsp;மோகன் சர்மா</span><br></p><p>
</p><p>
புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற தென்னிந்திய கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவரான மோகன் சர்மா, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 170 திரைப்படங்களில் நடித்துள்ளார்.</p><p> அதுமட்டுமல்லாமல், 20 திரைப்படங்களை தயாரித்து, திரைத்துறையில் தனக்கென ஒரு முத்திரையையும் பதித்தார்.

தமிழ் ரசிகர்களுக்கு அவர் மிகவும் பரிச்சயமான முகம். விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவின் தந்தையாக நடித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95801c2d-7acf-4d08-b6ab-e25662288cc4/26-6a6c3be9ed8be.webp' /></p><p> </p><p>மேலும் சலங்கை ஒலி, ஏணிப்படிகள், நாடகமே உலகம், தூண்டில் மீன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். </p><p>சிறிய திரையிலும் தனது முத்திரையை பதித்த அவர், நடிகை தேவயானி நடித்த கோலங்கள் தொடரில் முக்கிய வேடத்தில் தோன்றியிருந்தார்.
</p><p>
நடிகராக மட்டுமல்லாமல், திரைப்படத் துறையின் நிர்வாகத்திலும் முக்கிய பங்காற்றியவர் மோகன் சர்மா. 2002ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும்&nbsp; பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95801c2d-7acf-4d08-b6ab-e25662288cc4/26-6a6c3be9ed8be.webp' /></p><p>தேசிய திரைப்பட விருது தேர்வுக் குழுவிலும், சர்வதேச திரைப்பட விழாவுக்கான இந்திய பனோரமா படங்கள் தேர்வுக் குழுவிலும் உறுப்பினராக இருந்துள்ளார். </p><p>மேலும், தாதா சாகேப் பால்கே சாதனை விருதில் தென்னிந்தியாவுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடி அதை பெற்றுத்தந்தவர்களில் ஒருவராகவும் அவர் அறியப்படுகிறார்.</p><p>

2012ஆம் ஆண்டு அவர் இயக்கிய நம்ம கிராமம் திரைப்படம், ஜாதி அடக்குமுறையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படம் தமிழக அரசும் கேரள அரசும் வழங்கிய விருதுகளை வென்றது.3</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa8ba309-b546-49d6-9724-9f9ea8a68eda/26-6a6c3eabac64d.webp' /></p><p>முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இந்தப் படத்தைப் பாராட்டி, தாம் மிகவும் விரும்பும் திரைப்படங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டதாக மோகன் சர்மா பின்னர் தெரிவித்துள்ளார்.</p><h2>மோகன் சர்மாவுக்கு ஏன் இந்த நிலை?</h2><p>ஆனால் மோகன் சர்மாவின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது சோகமான நிலையில் உள்ளது.

நடிகை லட்சுமியை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்ற அவர், சாந்தி என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். </p><p>தற்போது 80 வயதாகும் மோகன் சர்மா, கும்மிடிப்பூண்டியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.

அங்கு உணவும் தங்குமிடமும் கிடைத்தாலும், வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருந்து வாங்க கூட பணமின்றி அவர் சிரமப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bc06dec-8522-4459-a8de-8b68a745522d/26-6a6c3ead23347.webp' /></p><p>இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், அவரை தொடர்புகொண்டு வங்கி விவரங்களை பெற்று ரூ.1 லட்சம் உதவி செய்துள்ளார்.</p><p>இது குறித்து மோகன் சர்மா கூறுகையில், தனது ‘நம்ம கிராமம்’ படத்தை தயாரிக்க வங்கிக் கடன் பெற்றும், சொத்துகளை விற்றும் பணம் செலவிட்டதாகவும், அந்தப் படத்தை ஜெயலலிதா மிகவும் பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>அந்த கடனை அடைக்க உதவுவதாக ஜெயலலிதா கூறியிருந்த நிலையில், அவர் மறைந்துவிட்டதால் அது நிறைவேறவில்லை என்றும் கூறியுள்ளார்.

“கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் முதியோர் இல்லத்திற்கு வந்தேன். உடல்நலக் குறைபாடுகளால் மருந்து வாங்க முடியாமல் தவித்தேன். அந்த நேரத்தில் ரஜினிகாந்த் கடவுள் போல உதவினார்”.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0bebae7-7caf-4247-96da-586f622cea88/26-6a6c3eac6834c.webp' />&nbsp;&nbsp;</p><p>மேலும், சினிமாவில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், தனது ‘நம்ம கிராமம்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை யாராவது வாங்கினால், தனது மருத்துவச் செலவுகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஃபிலிம் சேம்பரில் இருந்தபோது, வயதான கலைஞர்களுக்கு உதவி வழங்கும் தீர்மானம் கொண்டுவந்ததாகவும், ஆனால் தற்போது அந்த விதிமுறை மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.</p><p>

தனது மகன் ஜெர்மனியில் இருப்பதாகவும், அவனது எதிர்காலத்திற்காக அவனை அங்கு அனுப்பியதாகவும் கூறிய மோகன் சர்மா, தற்போது தனிமையில் இருப்பது வேதனையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழக முதல்வர் விஜயை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T10:09:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[Actress Meena Viral Post: சாதி, மதம் குறித்து நடிகை மீனாவின் வைரல் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-meena-post-about-religion-caste-viral-1785923645"></link>
            <id>https://manithan.com/article/actress-meena-post-about-religion-caste-viral-1785923645</id>
            <summary type="text">Meena Viral Post: மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு ஒன்று கவனம் பெற்றுள்ளது.90களில் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Meena Viral Post: மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு ஒன்று கவனம் பெற்றுள்ளது.</p><p>90களில் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் மீனா. </p><p>

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான அவர், பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.</p><p>

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் மீனா நடித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87b0d48e-b22b-4513-b66d-bb15fc242848/26-6a73083fb1d91.webp' /></p><p>இதனைதொடர்ந்து மீனா, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
</p><p>
இந்நிலையில், மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு ஒன்று கவனம் பெற்றுள்ளது.
</p><p>அதில், "சாதி, மதம், பிறந்த இடம், பாலினம் ஆகியவை நாம் தேர்வு செய்தவை அல்ல. அவை பிறப்பால் கிடைத்தவை. அதனால் அவற்றை நினைத்து பெருமைப்பட வேண்டாம். அதற்கு பதிலாக நமது குணநலன், செயல்கள் மற்றும் மனிதநேயத்தை நினைத்து பெருமைப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04c4ab76-0043-463e-8ec0-d46a941f08b7/26-6a730840632de.webp' />&nbsp;&nbsp;</p><p>

நடிகை மீனாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-05T09:59:10+00:00</updated>
        </entry>
    </feed>
