<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-24T10:21:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: புதனின் இரட்டை பெயர்ச்சி.. செப்டம்பரில் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/2026-sept-7-virgo-transit-astrology-prediction-1787562589"></link>
            <id>https://manithan.com/article/2026-sept-7-virgo-transit-astrology-prediction-1787562589</id>
            <summary type="text">செப்டம்பர் மாதம் புதன் பகவான் இரண்டு முறை ராசியை மாற்றுகிறார். இதனால் இந்த காலகட்டம் இவர்களுக்கு தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டம்பர் மாதம் புதன் பகவான் இரண்டு முறை ராசியை மாற்றுகிறார். இதனால் இந்த காலகட்டம் இவர்களுக்கு தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டு.</p><p> அதாவது, கிரகங்களின் இளவரசர் என்று போற்றக்கூடிய புதன் பகவான் ஒருவருக்கு அறிவு, ஞானம், கணக்கு, பேச்சு திறன் ஆகியவற்றை வழங்கக் கூடியவர். </p><p>
அந்த நிலையில், தற்பொழுது புதன் பகவான் சிம்ம ராசியில் இருக்கிறார். இவர் செப்டம்பர் 7ஆம் தேதி புதன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.</p><p> இந்த ராசியில் சுமார் 20 நாட்கள் அவர் இருக்கிறார். 
பிறகு செப்டம்பர் 26 ஆம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகள் கொடுக்கப்போகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a205166c-6c91-4ab7-a4d5-28a23ef54181/26-6a8c0a5f6218b.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">மேஷம்:</span><br></p><p>
 மேஷ ராசியினருக்கு செப்டம்பர் மாதத்தில் நடக்கக்கூடிய இடமாற்றம் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமான பலன்களை கொண்டு வரப் போகிறது. </p><p>தொழில் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களில் இவர்கள் தெளிவாக முடிவெடுக்கக்கூடிய தன்மை உருவாகும். தன்னம்பிக்கை அதிகரித்து மனதில் நேர்மறை ஆற்றல் உயரும்.</p><h3> 


துலாம்:</h3><p>
 துலாம் ராசிக்கு இந்த புதன் பெயர்ச்சியானது இவர்களுக்கு பல்வேறு வகையில் நன்மையை கொடுக்கப்போகிறது. உங்களுடைய பேச்சுத் திறன் மேம்படும். </p><p>எளிதாக ஒவ்வொரு விஷயத்தையும் கையாள்வதற்கு கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.</p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">மகரம்:</span><br></p><p>
 மகர ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் ஏற்படும் புதன் பெயர்ச்சி இவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் வருமானம் தொடர்பாக ஒரு நல்ல மாற்றம் வரப்போகிறது. எதிர்பார்த்து காத்திருந்த சாதகமான பலன்களை பெற போகிறார்கள். </p><p>வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும். பதிவு உயர்வு, சம்பள உயர்வு போன்ற அற்புதமான ஏற்றங்களை இந்த காலகட்டங்களில் பெறப்போகிறீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T10:14:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை தேவயானியின் கணவர் என்ன தொழில் செய்கிறார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/rajakumaran-new-business-imaya-naturals-beauty-1757398328"></link>
            <id>https://manithan.com/article/rajakumaran-new-business-imaya-naturals-beauty-1757398328</id>
            <summary type="text">தேவயானியின் கணவரும் திரைப்பட இயக்குனரும் ஆன ராஜகுமாரன் தற்போது புதிய தொழிலில் களமிறங்கி உள்ளார்.&amp;nbsp;&amp;nbsp;இயக்குனர் ராஜகுமாரன்நாம் ஒரு துறையில் இருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேவயானியின் கணவரும் திரைப்பட இயக்குனரும் ஆன ராஜகுமாரன் தற்போது புதிய தொழிலில் களமிறங்கி உள்ளார்.</p><h3>&nbsp;&nbsp;இயக்குனர் ராஜகுமாரன்</h3><p>நாம் ஒரு துறையில் இருந்து அதில் வெற்றி கிடைக்காமல் போனால் மனதை தளர விடாமல் அடுத்த கட்டத்தை நோக்கி செல்பவனே உண்மையான தைரியசாலி. </p><p>இதற்கு பொருத்தமாக தான் இயக்குனர் ராஜகுமாரன் இருக்கிறார். அதாவது 'நீ வருவாய் என', 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' போன்ற அழகான படங்களை இயக்கியவர் ராஜகுமாரன்.</p><p>அந்த கால கட்டத்தில் திரையுலகில் பிரபலமான ஒரு இயக்குனராக இவர் காணப்பட்டார். அவர் இயக்கிய படத்தில் நடித்த நடிகை தேவயானியைக் காதலித்து கரம் பிடித்தார்.<br></p><p> இவருக்கு திரைப்படங்கள் மூலம் பெரிய அளவில் புகழ் இருக்கவில்லை. ஆனால் எதற்கும் தளர்ந்து போகாமல் தற்போது புதிய பிசினஸ் தொடங்கி உள்ளார் ராஜகுமாரன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84b7b7e5-4e03-49fe-b7c2-cb375134fba0/25-68bfc63bc4f10.webp' /></p><h4><b>சினிமா வாழ்க்கை</b></h4><p>சமீபத்தில் ஒரு போட்டியில் கலந்துகொண்ட ராஜகுமாரன் சில வார்த்தைகளை பேசி இருந்தார். "திரைத்துறையில் 40 வருடங்களாக இருக்கிறேன். </p><p>ஆனால், இந்த 40 வருடங்களில் வருடத்திற்கு ஒரு லட்சம் என 40 லட்சம் கூட நான் சம்பாதிக்கவில்லை" என்று அவர் மனம் திறந்து பேசி இருந்தார். </p><p>பொதுவாக எந்த திரைத்துரையை சேர்ந்தவாகளும் இப்படி மனம் திறந்து பேச மாட்டார்கள். ஆனால் ராஜ குமாரனின் இந்த நேர்மை எல்லோரையும் ஈர்த்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ecf7f53-2dac-41ec-92cb-12de2be93612/25-68bfc63d02ba8.webp' /></p><h4>&nbsp;<b>தோட்டத்தில் இருந்து அழகு சாதன பொருட்கள்</b></h4><p>தான் சினிமா துறையில் பெரிய வருமானம் ஈட்டவில்லை என்று தெரிந்த பின்னரும் அவர் பின்தங்கவில்லை. இதற்கு மாறாக தன்னம்பிக்கையுடன் ஒரு புதிய முயற்ச்சியில் இறங்கி உள்ளார். </p><p>அது தான் 'இமயா நேச்சுரல்ஸ்' என்ற பெயரில் ஒரு புதிய பிசினஸ். தான் சொந்தமாக வளர்க்கும் செடிகளில் இருந்து, 100 சதவீதம் இயற்கை முறையில் அழகுசாதனப் பொருட்களை உருவாக்கி, அவற்றைச் சந்தைப்படுத்தத் தொடங்கியுள்ளார். </p><p>இது வெறும் பிசினஸ் மட்டுமல்ல, அவருடைய கஷ்டமான வாழ்க்கைக்குப் பிறகு, அவருடைய தோட்டத்தில் இருந்து பிறந்த ஒரு புதிய கனவு என்றே சொல்லலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dbd257c-f4cf-4064-827a-fd1de17a949a/25-68bfc63c6a071.webp' /></p><p> சென்னையில் சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவின் வளாகத்தில் ஸ்டால் போட்டு தனது அழகு சாதன பொருட்களை விற்பனை செய்துள்ளார்.</p><p> </p>]]></content>
            <updated>2026-08-24T08:48:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசம்: யாருக்கெல்லாம் கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/3-gas-cylinder-free-scheme-in-tamilnadu-1787556148"></link>
            <id>https://manithan.com/article/3-gas-cylinder-free-scheme-in-tamilnadu-1787556148</id>
            <summary type="text">3 Gas Cylinder Free Scheme in Tamilnadu: அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>3 Gas Cylinder Free Scheme in Tamilnadu: அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.</p><h2>முதலமைச்சர் விஜய் அதிரடி</h2><p>
</p><p>
2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது, குடிநீர் வழங்கல்துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ்வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QbblpgN31ao" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இன்று காலை கூட்டம் தொடங்கியதும் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
</p><p>
அதில் பெண்களின் முன்னேற்றத்தை முதன்மையாக கொண்டு நமது அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, சிங்கப்பெண் உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.</p><h2>அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்</h2><p> 

குடும்பதலைவி பயன்பெறும் வகையில் அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் செயல்படுத்தப்படுகிறது, முதற்கட்டமாக மூன்று சிலிண்டர் வழங்கப்படும், சிலிண்டருக்கான தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
</p><p>
ஜனவரி மாதம் தை பொங்கல் முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும், ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வரை வருமானம் பெறுவோரின் குடும்பத்தினர் பயன்பெறுவர் என அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9421e810-64ad-4ddf-bc19-f3db5b3af8ff/26-6a8bf28bad267.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:28:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோஜா செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க எப்சம் உப்பு பயன்படுத்தலாமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/can-we-use-epsom-salt-for-rose-flower-planting-1787483815"></link>
            <id>https://manithan.com/article/can-we-use-epsom-salt-for-rose-flower-planting-1787483815</id>
            <summary type="text">எல்லோருடைய வீடுகளிலும் ரோஜா செடி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதாவது, ரோஜாவில் இருக்கக்கூடிய நறுமணமும் அழகிலும் மயங்காதவர்கள் நிச்சயம...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்லோருடைய வீடுகளிலும் ரோஜா செடி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதாவது, ரோஜாவில் இருக்கக்கூடிய நறுமணமும் அழகிலும் மயங்காதவர்கள் நிச்சயம் யாரும் இருக்க முடியாது. ஆனால், ஒரு சிலர் அவர்களுடைய தோட்டத்தில் செய்யக்கூடிய சிறிய தவறினால் அவர்களுடைய ரோஜா செடி பெரிய அளவில் வளர்வதில்லை. </p><p>அதனால், பூக்கள் பூக்காத நிலை மற்றும் செடியின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது போன்றவை ஏற்படுகிறது. இவ்வாறான தோட்ட பிரச்சனைகளுக்கு இயற்கை மற்றும் எளிய தீர்வு தான் எப்சம் உப்பு.</p><h3> 
ரோஜா செடிகளுக்கு எப்சம் உப்பு ஏன் அவசியம்:
</h3><p>மெக்னீசியம் சல்பேட் என்று அழைக்கக்கூடிய எப்சம் உப்பில் மெக்னீசியம் மற்றும் சல்பர் ஆகிய இரண்டு முக்கியமான சத்துக்கள் நிறைந்திருக்கிறது. அதனால் தாவரங்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான இலைகளுக்கும் பெரிதாக உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91cc8a53-feed-4c0c-b329-9a8cf00d9efa/26-6a8ad6a8dde71.webp' /></p><p>நம்முடைய இலைகளில் குளோரோஃபில் உற்பத்தியை அதிகரித்து அவை இலைகளை அடர் பச்சையாக மாற்ற உதவுகிறது.<br></p><p>அதோடு செடிகள் மண்ணிலிருந்து பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் போன்ற பிற சத்துக்களை எளிதில் உறிஞ்சவும் உதவுகிறது. செடியின் அடிப்பகுதியில் இருந்து புதிய தண்டுகள் வளரவும் மற்றும் துளர்கள் வளர தூண்டுகிறது.மேலும், இந்த எப்சம் உப்பை செடியில் இரண்டு வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.</p><h3>
முதல் முறை:</h3><p>எப்சம் உப்பை செடியின் அடிப்பகுதியை சுற்றிலும் சமமாக தூவிக் கொள்ள வேண்டும். ஆனால், தண்டில் நேரடியாக படுவதை தவிர்க்க வேண்டும். தண்டிலிருந்து சில அங்குலங்கள் தள்ளி பரப்ப வேண்டும். அதேபோல், ஒரு சிறிய மண்வெட்டி அல்லது தோட்ட கருவியை பயன்படுத்தி எப்சம் உப்பு மேலிருக்கும்மண்ணுடன் லேசாக கலக்குமாறு கிளறி விட வேண்டும்.</p><p> பிறகு உப்பு மண்ணில் நன்றாக கரைந்து வேர்களுக்கு செல்வதற்காக, பயன்பாட்டிற்கு பிறகு செடிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். செடிகள் வளரும் பருவத்தில் இருக்கும் பொழுது மாதத்தில் ஒரு முறை இதை செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d37ab1f-634b-4e2a-ab2e-93651823caa6/26-6a8ad6a99d54d.webp' /></p><h3>
 இரண்டாம் முறை:
</h3><p> ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் உப்பு நன்றாக கரைத்துக் கொண்டு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அதை ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு வெயில் இல்லாத காலை நேரத்தில் அல்லது மாலையில் கிளைகளின் மீது நன்கு படுமாறு அதனை தெளிக்க வேண்டும். இதை மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஒருமுறை செய்யலாம்.
</p><h3> கவனிக்க வேண்டியவை:
</h3><p> கடும் வெயில் காலம் அல்லது வறட்சியான கால நிலையின் பொழுது எப்சம் உப்பு பயன்படுத்துவதை நாம் தவிர்ப்பது நல்லது. காரணம், அதிகப்படியான வெப்பமும் வளர்ச்சியும் இது கூடுதல் அழுத்தத்தை கொடுக்கக்கூடும். அதே சமயம், இந்த எப்சம் உப்பை அளவிற்க்கு அதிகமாக பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். அது மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களின் சமநிலையில் பாதிக்க செய்யும்.</p><p> உங்களுடைய தோட்டத்து மண்ணில் ஏற்கனவே தேவையான அளவு மெக்னீசியம் இருந்தால் எப்சம் உப்பு உங்களுக்கு தேவைப்படாது.
 அதனால், மண்ணை பரிசோதித்து கொள்வது அவசியம். குறிப்பாக ரோஜா செடிகளுக்கு தினமும் குறைந்தது ஆறு மணி முதல் நேரடி சூரிய ஒளி கிடைக்க செய்யுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/210ad470-98c9-417c-8ea4-7f1f5e774a58/26-6a8ad6aa4e906.webp' /></p><p>பூக்கள் பூத்து முடித்தவுடன் செடியின் காய்ந்த கிளைகளை கத்தரித்து விடுவது புதிய துளிர்களை வர வழிவகுக்கும். ​2017ல் Frontiers in Plant Science இதழில் வெளியான ஒரு ஆய்வின்படி, ரோஜா செடிகள் உள்ள மெக்னீசியம் சல்பேட் கரைசலை இலைகளில் தெளிக்கும்பொழுது பூக்களின் உற்பத்தி 26 சதவீதம் முதல் 38 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது.<br></p><p> அதாவது மெக்னீசியம் சத்து தாவரங்களில் ஒட்டுமொத்த செயல் திறனை மேம்படுத்தி நமக்கு அதிகம் பூக்கள் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T07:11:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூனைக்கு CFO பதவி! பலரது கவனத்தை ஈர்த்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ginger-cat-gets-a-job-title-cfo-mumbai-metro-1787548725"></link>
            <id>https://manithan.com/article/ginger-cat-gets-a-job-title-cfo-mumbai-metro-1787548725</id>
            <summary type="text">Chief Feline Officer Cat Mumbai Metro: மும்பை மெட்ரோவின் 7வது வழிதடத்தில் குண்டவாலி மெட்ரோ நிலைய நுழைவாயிலில் பூனைக்கு CFO கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chief Feline Officer Cat Mumbai Metro: மும்பை மெட்ரோவின் 7வது வழிதடத்தில் குண்டவாலி மெட்ரோ நிலைய நுழைவாயிலில் பூனைக்கு CFO கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2>
 பூனைக்கு CFO கௌரவ பதவி</h2><p>கடந்த பல மாதங்களாக நுழைவாயிலில் அமர்ந்துள்ள பூனை பலருக்கும் பரீட்சியமாகிவிட்டன.

இதன் அமைதியான தோற்றம் காரணமாக பலரும் அதை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட வைரலானது.
</p><p>
இந்நிலையில் சந்தேஷ் சாமந்த் என்பவர் பூனையை படமெடுத்து மெட்ரோ நிர்வாகத்திடம், ”அன்பான உயிருக்கு பதவியை வழங்குங்கள் என்றும் ஊதியம் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும்” குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39502c7-354c-4802-8e03-9c2c7ed4c939/26-6a8bd4c2b63fa.webp' /><br></p><h2>மெட்ரோ நிர்வாகம் பதிவு</h2><p>
</p><p>
இதனை ஏற்றுக்கொண்ட மும்பை மெட்ரோ நிர்வாகம் பூனைக்கு CFO பதவியை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

மேலும் நிலையத்தை ஆய்வு செய்வது, பயணிகளை கண்காணிப்பது போன்ற பொறுப்புகள் அளிக்கப்படுவதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f81b3fa5-fb34-4fa0-99b2-e604f7fe4cda/26-6a8bd4c367a93.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-24T05:21:17+00:00</updated>
        </entry>
    </feed>
