<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-14T22:36:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்றோரை கொன்ற யானை, 14 ஆண்டுகள் கழித்து மருமகள்–பேரனையும் பலி தீர்த்த அதிர்ச்சி சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/elephant-kills-four-members-of-same-nepal-family-1784036777"></link>
            <id>https://manithan.com/article/elephant-kills-four-members-of-same-nepal-family-1784036777</id>
            <summary type="text">நேபாளத்தில் கூலி தொழிலாளி ஒருவரின் பெற்றோரை கடந்த 2012-ம் ஆண்டு கொன்ற அதே காட்டு யானை, 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மருமகள் மற்றும் பேரனையும் கொன்ற ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் கூலி தொழிலாளி ஒருவரின் பெற்றோரை கடந்த 2012-ம் ஆண்டு கொன்ற அதே காட்டு யானை, 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மருமகள் மற்றும் பேரனையும் கொன்ற சம்பவம்&nbsp; பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
நேபாளத்தின் சித்வான் தேசிய பூங்கா அருகே உள்ள மாடி கிராமத்தைச் சேர்ந்தவர்&nbsp; தான்சனிச்சரா போட். இவரது தந்தை புதிராம், தாய் ஜராலி ஆகியோர் கடந்த 2012-ம் ஆண்டு ‘துர்பே’ என்ற காட்டு யானை தாக்கி உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a45b5259-0b17-4700-84c2-2796644c9dd1/26-6a5641443fc63.webp' /></p><p></p><h2>காட்டு யானை ”துர்பே”</h2><p>

இதனால் அதிர்ச்சியடைந்த சனிச்சரா போட், தனது குடும்பத்தின் பாதுகாப்புக்காக மாடி கிராமத்தை விட்டு சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜகத்பூர் கிராமத்துக்கு குடிபெயர்ந்தார். அங்கு கடந்த 14 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தார்.
</p><p>
ஆனால், கடந்த 12-ம் தேதி அவரது வீட்டுக்குள் நுழைந்த அதே காட்டு யானை ‘துர்பே’, சனிச்சரா போட்டின் மருமகள் ஆஷிகா போட் மற்றும் 4 வயது பேரன் பரத் போட்டை தாக்கிக் பலியாக்கியுள்ளது.</p><p>

இதுகுறித்து சனிச்சரா போட் கூறுகையில், “யானையிடம் இருந்து தப்பிக்க ஆற்றைக் கடந்து தொலைவில் குடியேறினோம். 14 ஆண்டுகளாக பாதுகாப்பாக இருந்தோம். ஆனால், என் பெற்றோரை கொன்ற அதே யானை மீண்டும் வந்து என் மருமகளையும் பேரனையும் கொன்றுவிட்டது” என வேதனையுடன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b1a3bf9-bf7f-4c58-8104-258487ad3822/26-6a564144e70f6.webp' /></p><p></p><p>
</p><p>
நேபாளத்தில் மிகவும் ஆபத்தான காட்டு யானையாக கருதப்படும் ‘துர்பே’, கடந்த 2010-ம் ஆண்டு முதல் இதுவரை 25 பேரை கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p> அதன் நடமாட்டத்தை கண்காணிக்க பலமுறை அதன் உடலில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததும் இந்த யானைக்கு என்று தனியே 'விக்கிப்பீடியா' உள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் இணையத்தில் தற்பாது பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்மன் சிலை போன்று காணப்படும் திவ்யா கணேஷ்... ரசிகர்கள் எழுப்பிய கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bigg-boss-divya-ganeshs-traditional-look-photos-1784048704"></link>
            <id>https://manithan.com/article/bigg-boss-divya-ganeshs-traditional-look-photos-1784048704</id>
            <summary type="text">பிக்பாஸ் திவ்யா கணேஷ் வெளியிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.நடிகை திவ்யா கணேஷ்சின்னத்திரை நடிகையான திவ்யா கணேஷ் பிக்பாஸ் நிகழ்ச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக்பாஸ் திவ்யா கணேஷ் வெளியிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.</p><h2>நடிகை திவ்யா கணேஷ்</h2><p>சின்னத்திரை நடிகையான திவ்யா கணேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அவ்வப்போது புதிய புகைப்படங்களை பதிவிட்டு வரும் திவ்யா தற்போதும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.</p><p>பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது திவ்யா முகம்சுழிக்கும் வகையில் எந்தவொரு ஆடையும் அணியாமல் வலம்வந்தார். ஆனால் சமீபத்தில் வெளியான வெப் சீரிஸில் கவர்ச்சியான தோற்றத்திலும், நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஆனால் படுக்கையறை காட்சியைக் குறித்தும் கேட்ட கேள்விகளுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் கலகலப்பாக பதில் அளித்தது அதிகமாக பகிரப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccc73f27-c4cb-43c4-a215-bd0a00240d39/26-6a567618e817a.webp' /></p><h2>புதிய புகைப்படம்</h2><p>இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற பட்டுப்புடவையில், தலை முதல் இடுப்பு வரை தங்க நகைகளால் அலங்கரித்த டிரெடிஷ்னல் லுக்கில் எடுத்த புகைப்படங்களை திவ்யா கணேஷ் பகிர்ந்துள்ளார். </p><p>ஒவ்வொரு புகைப்படத்திலும் சாமி சிலையைப் போல கம்பீரமாகவும், அதே நேரத்தில் எளிமையான புன்னகையுடனும் அவர் காட்சியளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.<br></p><p>ஆனால், இந்த புகைப்படங்களுக்கு அவர் வைத்திருக்கும் "This is an Ad shoot... Unless Destiny Has Other Plans." என்ற கேப்ஷன்தான் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50daa6b4-a951-4040-aa6b-4237bcbcacbf/26-6a5676199f504.webp' /></p><p> </p><p>"இது ஒரு விளம்பர படப்பிடிப்பு தான்... விதி வேறு ஏதாவது முடிவு செய்திருந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை" என்ற அர்த்தத்தில் அவர் பதிவிட்ட இந்த வரிகளை பார்த்த ரசிகர்கள், "ஹீரோயினாக வாய்ப்பு வந்தா ரெடி என்று மறைமுகமாக சொல்லிட்டீங்களா?" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.</p><p>ஆனால் சில ரசிகர்கள் இந்த அளவிற்கு நகை போட்டு காணப்படுபவதைப் பார்த்து எந்த ஜுவல்லரி இது? அம்மன் சிலை மாதிரி இருக்கீங்க... என்று பாராட்டி வருகின்றனர்.</p><p>
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T17:47:19+00:00</updated>
        </entry>
    </feed>
