<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-15T07:53:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[எஜமான் இறுதி ஊர்வலம்: சோகத்தில் உயிரைவிட்ட செல்ல நாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/pet-dog-dies-during-owner-funeral-procession-1784100007"></link>
            <id>https://manithan.com/article/pet-dog-dies-during-owner-funeral-procession-1784100007</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உரிமையாளரின் இறுதி ஊர்வலத்தின் போது அவரது செல்ல நாயும் மரணமடைந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்தியபிரதேசத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உரிமையாளரின் இறுதி ஊர்வலத்தின் போது அவரது செல்ல நாயும் மரணமடைந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><p>
மத்தியபிரதேசத்தின் பெடுல் மாவட்டத்தை சேர்ந்தவர் Pradeep Jain(வயது 67), இவர் Duggu என்ற நாயை செல்லமாக வளர்த்து வருகிறார்.</p><p>

15 வயதான Dugguக்கும் இவர்கள் குடும்பத்தில் ஒருவர் போலத்தான், இந்நிலையில் உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த Pradeep Jain காலமானார்.
</p><p>
அவரது உடலை வீட்டிற்கு கொண்டுவந்ததில் இருந்து சோகமாக இருந்துள்ளது Duggu, உறவினர்களும் அடுத்தடுத்து வீட்டிற்கு வர Dugguவை வேறொரு அறையில் அடைத்துவைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08d3cbee-27ae-428d-a56b-0de57ddbbcd3/26-6a5735fec6abd.webp' /><br></p><p>
</p><p>
இரவு முழுவதும் குரைத்துக்கொண்டே இருந்ததுடன் எஜமானை பார்க்க வேண்டும் என துடிதுடித்துள்ளது.
</p><p>
நேற்று மாலை இறுதிசடங்குகள் நடைபெறுவதற்கு முன்னதாக Dugguவை பார்க்க அனுமதித்துள்ளனர், மிக அமைதியாக அருகிலேயே நின்றிருந்தது Duggu.</p><p>

இறுதி ஊர்வலம் தொடங்கிய சிலநிமிடங்களில் அப்படியே சரிந்து விழுந்த Duggu பரிதாபமாக உயிரிழந்தது.</p><p>

15 ஆண்டுகளாக கூடவே இருந்த Dugguவால் மரணத்தை தாங்கி கொள்ள முடியவில்லை, Pradeep Jainயை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே Dugguவையும் அடக்கம் செய்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.&nbsp; &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-15T07:26:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமோசா பிரியர்களின் சொர்க்கம்... இந்தியாவின் 'சமோசா தலைநகரம்' எதுன்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-city-is-indias-samosa-capital-1784095730"></link>
            <id>https://manithan.com/article/which-city-is-indias-samosa-capital-1784095730</id>
            <summary type="text">சமோசா என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு அலாதி பிரியம் இருக்கும்.இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரத்திலும் அதன் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமோசா என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு அலாதி பிரியம் இருக்கும்.இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரத்திலும் அதன் செய்முறை, சுவை, உள்ளீடுகள் மாறுபட்டாலும், சமோசாவுக்கான மக்களின் காதல் மட்டும் எப்போதும் குறைவதில்லை. </p><p>ஆனால், இந்த பிரபலமான சிற்றுண்டியின் 'தலைநகரம்' என்று அழைக்கப்படும் இடம் எது தெரியுமா? இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef6a6c4a-3cc4-4d55-a913-22a2cd853ce9/26-6a572abf17d2f.webp' /></p><p></p><h2>சமோசா தலைநகரம்</h2><p>

இந்தியாவின் தலைநகரமான டெல்லி, அரசியல் முக்கியத்துவத்திற்காக மட்டுமல்ல, சமோசாவின் சொர்க்க பூமியாகவும் அறியப்படுகிறது.</p><p> குறிப்பாக, பழமையான சாந்தினி சௌக் பகுதி, பல ஆண்டுகளாக சுவைமிக்க சமோசாக்களை வழங்கி உணவுப் பிரியர்களின் மனதை வென்று வருகிறது.அங்குள்ள குறுகிய தெருக்களில் வரிசையாக இருக்கும் கடைகளில் தயாராகும் சூடான சமோசாக்கள், அடுப்பிலிருந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825946a4-6ad2-40a5-914f-4dcaad2c72a4/26-6a572abfbcb1e.webp' /></p><p>
சாந்தினி சௌக் மட்டுமல்ல, கரோல் பாக், லஜ்பத் நகர், கம்லா நகர், ராஜௌரி கார்டன் உள்ளிட்ட டெல்லியின் பெரும்பாலான பகுதிகளிலும் தினமும் நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பிரபலமான சமோசா கடைகள் இயங்கி வருகின்றன.</p><p>

பொதுவாக மொறுமொறுப்பான முக்கோண மாவுக்குள் மசித்த உருளைக்கிழங்கு, பட்டாணி, மசாலா ஆகியவை நிரப்பப்பட்டு பொன்னிறமாக பொரிக்கப்படுவது தான் பாரம்பரிய சமோசா. சில இடங்களில் இதனுடன் தக்காளி, கொண்டைக்கடலை, தயிர், புதினா சட்னி போன்றவையும் சேர்த்து பரிமாறப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05cb50c7-4bfe-4e0b-b78c-a6c7ef6371bc/26-6a572ac06ba55.webp' /></p><p>
</p><p>
ஆனால் டெல்லியின் சிறப்பு அதைவிட வித்தியாசமானது. உருளைக்கிழங்கைத் தாண்டி பனீர், பட்டாணி, உலர் பழங்கள், கீமா உள்ளிட்ட பல்வேறு வகை பூரணங்களுடன் தயாரிக்கப்படும் சமோசாக்கள், அங்குள்ள மக்களின் விருப்பமான உணவுப் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளன.
</p><p>
பல டெல்லிவாசிகளுக்கு, மாலை நேரம் என்பது ஒரு தட்டு சூடான சமோசாவும், ஆவி பறக்கும் ஒரு கோப்பை மசாலா தேநீரும் சேர்ந்தால்தான் முழுமை பெறும். அதனுடன் புதினா சட்னி, இனிப்புப் புளி சட்னி மற்றும் காரமான பச்சை மிளகாய் சேரும்போது, அதன் சுவை மேலும் பல மடங்கு அதிகரிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61891f46-d2dd-482a-980a-b60cc1b6ebff/26-6a572ac11c0de.webp' /></p><p></p><p>

சாலையோர தள்ளுவண்டி கடைகளிலிருந்து நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட இனிப்புக் கடைகள் வரை, டெல்லியின் ஒவ்வொரு மூலையிலும் சமோசாவுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. </p><p>அதன் எண்ணற்ற வகைகள், தனித்துவமான சுவை மற்றும் எப்போதும் குறையாத வரவேற்பு ஆகியவற்றின் காரணமாக, இந்தியாவின் தலைநகரமான டெல்லி இன்று பலரால் 'சமோசாவின் தலைநகரம்' என்றும் பெருமையுடன் அழைக்கப்படுகிறது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T07:05:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக்ஸர் சாப்பிட்ட 3 வயது குழந்தை மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/3-year-old-boy-died-while-eating-mixture-1784098821"></link>
            <id>https://manithan.com/article/3-year-old-boy-died-while-eating-mixture-1784098821</id>
            <summary type="text">கேரளாவில் மிக்ஸர் சாப்பிட்ட 3 வயது குழந்தை மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலப்புரம் அருகே குன்னும்புரத்தை சேர்ந்த தம்பதியினர் Muneer- Farsi...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவில் மிக்ஸர் சாப்பிட்ட 3 வயது குழந்தை மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

மலப்புரம் அருகே குன்னும்புரத்தை சேர்ந்த தம்பதியினர் Muneer- Farsina, இவர்களது 3 வயது மகன் Muhammaed Rizan.
</p><p>
இன்று காலை உணவு முடிந்த பின்னர், குழந்தைக்கு மிக்ஸர் சாப்பிடக் கொடுத்துள்ளனர்.
</p><p>
அதில் இருந்த நிலக்கடலை எதிர்பாராதவிதமாக குழந்தையின் தொண்டையில் சிக்கியது, இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.</p><p>

குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர், பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1448ed7a-c482-4afa-a8ae-dd6a27094452/26-6a5730316761c.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-15T07:01:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டை அடித்துக் கொண்ட இளம் பெண்! வைரல் வீடியோவின் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/did-a-woman-shave-her-head-to-avoid-marriage-1784092518"></link>
            <id>https://manithan.com/article/did-a-woman-shave-her-head-to-avoid-marriage-1784092518</id>
            <summary type="text">கேரளாவைச் சேர்ந்த கீர்த்தனா மேனன் என்ற இளம்பெண், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவைச் சேர்ந்த கீர்த்தனா மேனன் என்ற இளம்பெண், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் தேசிய ஊடகங்கள் வரையில் கவனம் பெற்றது.</p><p>குறித்த வீடியோவில், கோவிலில் அமர்ந்தபடி தனது நீண்ட மற்றும் அடர்த்தியான தலைமுடியை முழுமையாக மொட்டையடித்துக் கொள்வது பதிவாகியுள்ளது. வீடியோவின் மீது, "என் அம்மா என் திருமணத்திற்கு திட்டம் போட்டிருக்கிறார்" என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.

இந்த வாசகமே பலரது கவனத்தை ஈர்த்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ab25a0-26ec-4939-9360-f4e70cc91a8f/26-6a571a8b089de.webp' /></p><p> </p><p>வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே அது மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது. இதைப் பார்த்த பலரும், பெற்றோர் கட்டாயப்படுத்தும் திருமணத்தில் இருந்து தப்பிக்கவே கீர்த்தனா மொட்டையடித்துக் கொண்டார் என்றும், வரன் பார்ப்பதைத் தடுக்கவே இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் நினைத்து கருத்துக்களை பகிர ஆரம்பித்தனர்.</p><p>சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஏராளமான கருத்துகக்களை பெற்றது.&nbsp;</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">கீர்த்தனா கொடுத்த&nbsp; விளக்கம்&nbsp;&nbsp;</span></h2><p>
</p><p>
இதையடுத்து, சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீர்த்தனா தனது யூடியூப் பக்கத்தில் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். </p><p>அதில், தனக்கு எந்தவித கட்டாயத் திருமணமும் நடைபெறவில்லை என்றும், வீடியோவில் இடம்பெற்ற வாசகம் வெறும் நகைச்சுவைக்காகவும் சமூக ஊடக உள்ளடக்கமாகவும் சேர்க்கப்பட்டதுதான் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77cb87aa-a662-4c56-8e49-10fbcc6e20e8/26-6a571a8baadf0.webp' /></p><p></p><p> திருமண வயதில் இருக்கும் ஒரு பெண் திடீரென மொட்டையடித்தால் மக்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதை சுவாரஸ்யமாகக் காட்டவே அந்த வாசகத்தை பயன்படுத்தியதாகவும் கூறினார்.

மேலும், தனது தோற்றத்தில் ஒரு மாற்றம் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பமாக இருந்ததாகவும், அதற்காக தனது தாயின் முழு சம்மதத்துடனும் ஆதரவுடனும் கோவிலில் முடி காணிக்கை செலுத்தியதாகவும் கீர்த்தனா விளக்கமளித்தார்.</p><p> </p><p>மேலும், பெண்கள் மொட்டையடிப்பதை சமூகம் இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஒரு பெண் தலைமுடியை அகற்றியதற்காகவே இவ்வளவு பெரிய சர்ச்சை உருவானது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்ள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eaf1bb3a-7d90-4ab4-ade3-8525e5760a04/26-6a571a8c59919.webp' /></p><p>

இதன் மூலம், சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு மாறாக, இந்த சம்பவம் கட்டாயத் திருமணத்திற்கு எதிரான போராட்டமோ அல்லது குடும்ப வற்புறுத்தலின் விளைவோ அல்ல என்பது தெளிவாகியுள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T05:43:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டவனே நினைத்தாலும் தோற்கடிக்கவே முடியாத டாப் 3 ராசியினர்! உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-sign-are-unbeatable-1784089583"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-sign-are-unbeatable-1784089583</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்பு ராசியும் நட்சத்திரமும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்பு ராசியும் நட்சத்திரமும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. </p><p>ஒரு நபரின் எதிர்கால முன்னேற்றம், பொருளாதார நிலை, தொழில் வாய்ப்புகள், தனித்திறமைகள், உடல் அமைப்பு, மனப்பாங்கு, குணநலன்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் உருவாக்கும் ஆளுமை ஆகியவற்றில் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்தின் தாக்கம் நிச்சயம் இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c196f5a-489f-4a7b-ba99-6d42531cd80c/26-6a5710bda2f20.webp' /></p><p></p><p>அந்த வகையில், சில குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் உடல் வலிமை மட்டுமின்றி, அபாரமான அறிவாற்றல், தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஆகியவற்றால் பிறரிடமிருந்து தனித்து விளங்குவார்கள்.</p><p>இவர்களை எளிதில் தோற்கடிப்பதும், அவர்களின் மன உறுதியை உடைப்பதும் மிகவும் கடினம்&nbsp; அப்படிப்பட்ட அபூர்வமான ஆளுமை, அசைக்க முடியாத மனவலிமை மற்றும் சிறப்பான திறமைகளுடன் பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">விருச்சிகம்</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce071785-4c21-4013-aee9-4fc368d31e93/26-6a5710be51ab3.webp' /></p><p>விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் தங்களின் மர்மமான இயல்புக்கும் கவர்ச்சிகரமான இருப்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.இவர்கள் எத்தனை தடைகள் வந்தாலும் நிச்சயம் வாழ்வில் சாதித்து காட்டுவார்கள்.</p><p>இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், கேட்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக, யாரையும் எதிர்கவும் ஒருபோதும் தயங்குவதே கிடையாது. இவர்களின் அசாத்திய துணிச்சலே வெற்றியின் ரகசியமாக இருக்கும்.</p><p>மாற்றத்தின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படும் இந்த நீர் ராசியினர் தாங்கள் இருக்கும் இடத்தில் எந்த விடயத்தையும் மாற்றியடைக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்களை தோற்கடிப்பது அசாத்தியம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a8ba603-17d4-4c88-a78d-49b6a484a527/26-6a5710bf017ae.webp' /></p><p>சுக்கிரனால் ஆளபக்படும் ரிஷப ராசியினரை&nbsp; யாராலும் தோற்கடிக்க முடியாத ஆளுமை மற்றும் தலைமைத்துவ குணங்களுடன் இருப்பார்கள்.</p><p>இவர்கள் நுழையும் எந்த அறையிலும் பிரகாசமாக இருப்பார்கள். இவர்கள் யாராலும் புறக்கணிக்கவே முடியாத ஒரு காந்த ஆற்றலை வெளிப்படுத்துகின்றார்கள். இவர்ளை தோற்கடிப்பது மட்டுமல்ல புறக்கணிப்பதும் இயலாத காரியமாக இருக்கும்.</p><p>இவர்கள் எத்தனை முறை வீழ்ந்தாலும் மறுபடியும் அதே ஆற்றலுடன் எழுந்து நிற்கும் அளவுக்கு அசாத்திய தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மகரம்</span></h2><p><span style="font-size: 14px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3a218c9-c561-42af-9f61-eb75126ed35c/26-6a5710bfa39f7.webp' /></span></p><p><span style="font-size: 14px;"></span></p><p>மகர ராசியில்&nbsp; பிறந்தவர்கள் இயல்பிலேயே சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாகவும், எந்த விடயத்தையும் பல கோணங்களில் ஆராயும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.</p><p>மற்றவர்கள் தவறவிடும் விடயங்களிலும் கவனம் செலுத்தும் ஆளுமை இவர்களிடம் இயற்கையாகவே இருக்கும். இதனால் இந்த ராசியினரை எந்த விடயத்திலும் எளிமாக தோற்கடிக்கவே முடியாது.&nbsp;</p><p>சூழ்நிலைகளை நம்பிக்கை, திறன் மற்றும் தன்னம்பிக்கையுடன் கையாளும் இவர்களின் நிதானமான குணம் எதிரிகளை குழப்பத்தில் ஆழ்த்திவிடும் வல்லமை கொண்டதாக இருக்கும். இவர்க்ள வி்டாமுயற்சியால் வெற்றியை தனதாக்கிக்கொள்வார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T05:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்றோரை கொன்ற யானை, 14 ஆண்டுகள் கழித்து மருமகள்–பேரனையும் பலி தீர்த்த அதிர்ச்சி சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/elephant-kills-four-members-of-same-nepal-family-1784036777"></link>
            <id>https://manithan.com/article/elephant-kills-four-members-of-same-nepal-family-1784036777</id>
            <summary type="text">நேபாளத்தில் கூலி தொழிலாளி ஒருவரின் பெற்றோரை கடந்த 2012-ம் ஆண்டு கொன்ற அதே காட்டு யானை, 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மருமகள் மற்றும் பேரனையும் கொன்ற ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் கூலி தொழிலாளி ஒருவரின் பெற்றோரை கடந்த 2012-ம் ஆண்டு கொன்ற அதே காட்டு யானை, 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மருமகள் மற்றும் பேரனையும் கொன்ற சம்பவம்&nbsp; பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
நேபாளத்தின் சித்வான் தேசிய பூங்கா அருகே உள்ள மாடி கிராமத்தைச் சேர்ந்தவர்&nbsp; தான்சனிச்சரா போட். இவரது தந்தை புதிராம், தாய் ஜராலி ஆகியோர் கடந்த 2012-ம் ஆண்டு ‘துர்பே’ என்ற காட்டு யானை தாக்கி உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a45b5259-0b17-4700-84c2-2796644c9dd1/26-6a5641443fc63.webp' /></p><p></p><h2>காட்டு யானை ”துர்பே”</h2><p>

இதனால் அதிர்ச்சியடைந்த சனிச்சரா போட், தனது குடும்பத்தின் பாதுகாப்புக்காக மாடி கிராமத்தை விட்டு சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜகத்பூர் கிராமத்துக்கு குடிபெயர்ந்தார். அங்கு கடந்த 14 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தார்.
</p><p>
ஆனால், கடந்த 12-ம் தேதி அவரது வீட்டுக்குள் நுழைந்த அதே காட்டு யானை ‘துர்பே’, சனிச்சரா போட்டின் மருமகள் ஆஷிகா போட் மற்றும் 4 வயது பேரன் பரத் போட்டை தாக்கிக் பலியாக்கியுள்ளது.</p><p>

இதுகுறித்து சனிச்சரா போட் கூறுகையில், “யானையிடம் இருந்து தப்பிக்க ஆற்றைக் கடந்து தொலைவில் குடியேறினோம். 14 ஆண்டுகளாக பாதுகாப்பாக இருந்தோம். ஆனால், என் பெற்றோரை கொன்ற அதே யானை மீண்டும் வந்து என் மருமகளையும் பேரனையும் கொன்றுவிட்டது” என வேதனையுடன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b1a3bf9-bf7f-4c58-8104-258487ad3822/26-6a564144e70f6.webp' /></p><p></p><p>
</p><p>
நேபாளத்தில் மிகவும் ஆபத்தான காட்டு யானையாக கருதப்படும் ‘துர்பே’, கடந்த 2010-ம் ஆண்டு முதல் இதுவரை 25 பேரை கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p> அதன் நடமாட்டத்தை கண்காணிக்க பலமுறை அதன் உடலில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததும் இந்த யானைக்கு என்று தனியே 'விக்கிப்பீடியா' உள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் இணையத்தில் தற்பாது பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T04:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜுலை மாதத்தில் இறுதியில் சுக்கிரன் பெயர்ச்சி.... அதிர்ஷ்டத்தினை பெறும் 4 ராசியினர் இவர்கள் தானாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-transit-4-lucky-zodiac-signs-1784033366"></link>
            <id>https://manithan.com/article/venus-transit-4-lucky-zodiac-signs-1784033366</id>
            <summary type="text">சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்டத்தில் நனையும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.சுக்கிரன் பெயர்ச்சிஅழகு, ஆடம்பரம், காதல், செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்டத்தில் நனையும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><h2>சுக்கிரன் பெயர்ச்சி</h2><p>அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு இவற்றிற்கு காரணமாக இருக்கும் சுக்கிரன் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுவதுடன், அவ்வப்போது நட்சத்திரத்தினை மாற்றுவார்.</p><p>சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அனைத்து ராசியினர் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் ஏற்படும். தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் பயணித்து வரும் நிலையில், ஜுலை 29ல் உத்திரம் நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார்.</p><p>குறித்த நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி வரை இருக்கின்றார். உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் என்பதால், குறித்த நட்சத்திரத்தில் சூரியன் செல்வதால் சில ராசியினருக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/609074ff-9fda-44fe-b228-63deede7e8db/26-6a56eb3ecd62d.webp' /></p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ரிஷபம்</span><br></p><p> </p><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியினால் ரிஷப ராசியினர் நல்ல பலனை பெறுவதுடன், வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.</p><p>பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகள் வாழ்வில் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பணப்பிரச்சனை தீர்வதுடன், குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்குமாம். மன அழுத்தம் குறைந்து, மன அமைதியும் அதிகரிக்கும்..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/948d2795-9329-4978-8b5a-9bfbd661d377/26-6a56eb3f7faca.webp' /></p><p>

</p><h2>மிதுனம் </h2><p>சுக்கிரன் பெயர்ச்சியினால் மிதுன ராசியினரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதுடன், நீண்ட காலமாக தடைபட்ட வேலையும் வெற்றியாக முடியும்.</p><p>தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிப்பதுடன், புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகளும் கிடைக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a244ed2-1a05-4186-9095-c940da5c0038/26-6a56eb402ede8.webp' /></p><p></p><p>

</p><h2>சிம்மம் </h2><p>சிம்ம ராசியினருக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பாக இருக்குமாம். தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.</p><p>செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றியில் முடியும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதுடன், பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் சம்பள மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.</p><p>புதிய வழிகளிலிலிருந்து பணம் தேடி வருவதுடன், நிதி நிலையில் நல்ல உயர்வும் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5d162cf-4318-44b3-bdc6-2f809f864caa/26-6a56eb40daf5f.webp' /><br></p><h2>மகரம் </h2><p>மகர ராசியினருக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நிதி ரீதியான நல்ல பலனை அளிப்பதுடன், முன்னேற்றமும் ஏற்படும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகமாகும்.</p><p>வருமானத்தில் உயர்வு, ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலனை பெற முடியும்.&nbsp;</p><p>காதல் வாழ்க்கை இனிமையாக இருப்பதுடன், மகிழ்ச்சி, செழிப்பு, முன்னேற்றம் ஆகியவை கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0afd81e3-8119-4604-80e4-a9bb0e5b3824/26-6a56eb418a6a5.webp' /></p><p><i><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></i>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T02:07:46+00:00</updated>
        </entry>
    </feed>
