<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-04T11:53:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழைப்பழத் தோலுடன் பேக்கிங் சோடா.., எப்படி பயன்படுத்தலாம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/banana-peels-and-baking-soda-household-uses-1785838199"></link>
            <id>https://manithan.com/article/banana-peels-and-baking-soda-household-uses-1785838199</id>
            <summary type="text">வாழைப்பழத் தோலில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல சத்துகள் உள்ளன. 

2022ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வின்படி, வாழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாழைப்பழத் தோலில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல சத்துகள் உள்ளன. </p><p>

2022ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வின்படி, வாழைப்பழத் தோலை இயற்கை உரம் தயாரிக்கவும், கம்போஸ்ட் செய்யவும், கழிவுகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து வாழைப்பழத் தோலை 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்தால், அதில் இருக்கும் அழுக்கு, பூச்சிக்கொல்லி எச்சங்கள் மற்றும் மெழுகு படலம் நீங்க உதவும். </p><p>அந்தவகையில், வாழைப்பழத்தோல் மாற்று பேக்கிங் சோடாவை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41fe09a7-9c19-4ca1-b506-cd7893aa40cc/26-6a71bac7b8d39.webp' /></p><h2>1. கறைகளை சுத்தம் செய்யலாம்
</h2><p>
3 முதல் 5 வாழைப்பழத் தோல்களை சிறிய துண்டுகளாக நறுக்கி, 1 அல்லது 2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து பேஸ்ட் போல அரைக்கவும்.
</p><p>
இந்த பேஸ்ட்டை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்க் அல்லது பீங்கான் மேற்பரப்பில் தடவி, சில நிமிடங்கள் கழித்து கழுவினால் கறைகள் மற்றும் துர்நாற்றம் குறைய உதவும்.
</p><h2>
2. செடிகளுக்கு இயற்கை உரம்
</h2><p>
சுத்தம் செய்த வாழைப்பழத் தோல்களை சிறிய துண்டுகளாக நறுக்கி, செடிகளின் வேர்களுக்கு அருகில் மண்ணுக்குள் புதைத்து வைக்கலாம்.
</p><p>
இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் மெதுவாக மண்ணில் கலந்து செடிகளின் வளர்ச்சிக்கு உதவும்.
</p><h2>
3. குப்பைத் தொட்டி துர்நாற்றம் குறையும்
</h2><p>
வாழைப்பழத் தோல் - பேக்கிங் சோடா பேஸ்ட்டை குப்பைத் தொட்டியின் உள்ளே தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
</p><p>
மேலும், பேக்கிங் சோடாவால் சுத்தம் செய்யப்பட்ட உலர்ந்த வாழைப்பழத் தோல்களை குப்பைத் தொட்டியின் அடியில் வைத்தால் துர்நாற்றம் குறையவும், பழ ஈக்கள் வருவதும் குறையவும் உதவும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T10:32:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி கைது விவகாரம்.., நிவேதா பெத்துராஜின் வைரலாகும் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-nivetha-pethuraj-viral-posts-thirukkural-1785830027"></link>
            <id>https://manithan.com/article/actress-nivetha-pethuraj-viral-posts-thirukkural-1785830027</id>
            <summary type="text">நடிகை நிவேதா பெத்துராஜ், தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

நிவேதா பெத்துராஜ் பதிவு &quot;புறங்கூறிப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை நிவேதா பெத்துராஜ், தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p><h2>

நிவேதா பெத்துராஜ் பதிவு </h2><p><b>"புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
</b></p><p><b>அறங்கூறும் ஆக்கம் தரும்."</b></p><p>பிறரைப் பற்றி இல்லாதபோது புறங்கூறி, பொய்யாக வாழ்வதை விட, அப்படி செய்யாமல் வறுமையில் வாழ்ந்தாலும் அது உயர்ந்த அறமாகும் என்பதே இந்த திருக்குறளின் பொருள்.</p><p>உதயநிதி கைது செய்யப்பட்ட நாளிலேயே நிவேதா பெத்துராஜ் இந்த திருக்குறளை பதிவிட்டதால், இது அவருக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட பதிவா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்<br>அறங்கூறும் ஆக்கம் தரும்.<br><br>- திருக்குறள் 183</p>&mdash; Nivetha Pethuraj (@Nivetha_Tweets) <a href="https://x.com/Nivetha_Tweets/status/2084510185549418820?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினும், நிவேதா பெத்துராஜும் "என் மனசு தங்கம்" படத்தில் இணைந்து நடித்த பிறகு இருவரைப் பற்றியும் பல கிசுகிசுக்கள் வெளியானாலும், அதுகுறித்து இருவரும் எந்த விளக்கமும் அளித்ததில்லை.
</p><p>
இதனால், இந்த பதிவு உதயநிதியை குறிப்பிட்டதா? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><h2>

உதயநிதி கைது விவகாரம்</h2><p>

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரபல நடிகை குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. </p><p>

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இன்று காலை அவரது நீலாங்கரை இல்லத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac1ff414-c5c4-4475-a9f6-ea3f202799c5/26-6a719a90e29a7.webp' /></p><p>

பின்னர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>

அப்போது, "நான் பேசாத விஷயத்துக்காக பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இது அரசின் திசைதிருப்பும் முயற்சி" என்று அவர் தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T07:58:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[18 வயதில் கல்லூரி பேராசிரியர்.., உலக சாதனை படைத்த இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/18-year-old-nathan-thomas-youngest-male-professor-1785826865"></link>
            <id>https://manithan.com/article/18-year-old-nathan-thomas-youngest-male-professor-1785826865</id>
            <summary type="text">18 வயதிலேயே அமெரிக்க இளைஞர் ஒருவர் கல்லூரி பேராசிரியராகி உலக சாதனை படைத்துள்ளார்.

உலக சாதனை 

அமெரிக்காவைச் சேர்ந்த நேத்தன் தாமஸுக்கு, உலகின் மிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>18 வயதிலேயே அமெரிக்க இளைஞர் ஒருவர் கல்லூரி பேராசிரியராகி உலக சாதனை படைத்துள்ளார்.</p><h2>

உலக சாதனை </h2><p>

அமெரிக்காவைச் சேர்ந்த நேத்தன் தாமஸுக்கு, உலகின் மிக இளம் வயது ஆண் பேராசிரியர் என்ற கின்னஸ் உலக சாதனை பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கு முன்பு, 1717ஆம் ஆண்டு 19 வயதில் பேராசிரியராக பணியேற்ற ஸ்காட்லாந்து கணிதவியலாளர் காலின் மெக்லாரின் பெயரில் இருந்த சாதனை 306 ஆண்டுகளாக நீடித்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a72cc3a-3d4e-485f-9981-2aa3a0800026/26-6a718e33cf21b.webp' /></p><p>2023 ஆகஸ்ட் மாதம், 18 வயதில் மியாமி டேட் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த நேத்தன் அந்த சாதனையை முறியடித்தார்.</p><p>

மேலும், 2008ஆம் ஆண்டு 18 வயதில் உலகின் இளம் பெண் பேராசிரியராக சாதனை படைத்த ஆலியா சபூரை விட நேத்தன் 16 நாட்கள் இளையவர். </p><h2>


இளம் பேராசிரியர்
</h2><p>
நேத்தன், 10 வயதிலேயே மியாமி டேட் கல்லூரியில் பள்ளிப் படிப்புடன் சேர்த்து கல்லூரி படிப்பையும் தொடங்கினார்.</p><p>

14 வயதில் புளோரிடா சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர், மின் பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை 18 வயதிற்குள் முடித்தார்.
</p><p>
2023 ஆகஸ்டில், மியாமி டேட் கல்லூரியில் பொறியியல் மாணவர்களுக்கு சி-பிரோகிராமிங் பாடத்தை கற்பிக்கும் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.
</p><p>
அவர் கற்பித்த வகுப்பில் இருந்த பல மாணவர்கள், அவரது வயதுக்கு சமமானவர்களாகவோ அல்லது அவரைவிட வயதில் மூத்தவர்களாகவோ இருந்தார்கள்.</p>]]></content>
            <updated>2026-08-04T07:21:41+00:00</updated>
        </entry>
    </feed>
