<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-14T02:04:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதும் இனி பொறுக்க முடியாது... விட்டா தலை மீது ஏறி மிதித்துவிட்டு போவார்கள்; குஷ்பு ஆதங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/khushbu-sundar-defends-family-against-trolls-1783949175"></link>
            <id>https://manithan.com/article/khushbu-sundar-defends-family-against-trolls-1783949175</id>
            <summary type="text">யாரோ ஒருவர் எனது பிள்ளைகளை தனது 2 நிமிட மலிவான விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவதையோ, அவமதிப்பதையோ என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என்று நடிகை குஷ்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாரோ ஒருவர் எனது பிள்ளைகளை தனது 2 நிமிட மலிவான விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவதையோ, அவமதிப்பதையோ என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.</p><p>கடந்த ஜூன் 25-ஆம் தேதி குஷ்பூவின் மூத்த மகள் அவந்திகா சுந்தர் - ஷ்ரவன் ஸ்ரீனிவாசன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், அனில் கபூர், த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இந்தத் திருமணத்தில் பழம்பெரும் இயக்குனர் கே. பாக்யராஜ் கலந்துகொண்டார். துரதிர்ஷ்டவசமாக, அடுத்த இரண்டு நாட்களில் அவர் மாரடைப்பால் காலமானார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da09f367-460c-42ee-9383-2ed55389be11/26-6a552a6d44793.webp' /></p><p>
ஒட்டுமொத்த திரையுலகமும் பாக்யராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டிருந்த நேரத்தில், குஷ்பூ தொடர்ந்து தனது மகளின் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்ததாக ஒரு தரப்பினர் விமர்சித்தனர். இதற்கு அப்போதே பதிலடி கொடுத்த குஷ்பூ, "என் மகளுக்குத் திருமணமாகி 48 மணி நேரம் கூட ஆகவில்லை, மகிழ்ச்சியாக இருக்க எனக்கு உரிமை உண்டு. பிடிக்காதவர்கள் என்னை அன்ஃபாலோ செய்துவிட்டுப் போகலாம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
இந்நிலையில், நடிகை குஷ்பு தனது மகள்கள் மற்றும் குடும்பத்தை குறிவைத்து சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இணையத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “இது என் குடும்பம். அன்பு, நம்பிக்கை மற்றும் புரிதலால் உருவாக்கப்பட்டது. நாங்கள் இன்று இருக்கும் இடத்திற்கு வர எங்கள் எலும்புகள் தேய உழைத்திருக்கிறோம், வியர்வையும் ரத்தமும் சிந்தியிருக்கிறோம். என் குழந்தைகளை ஒரு நாளும் பிரபலங்களின் பிள்ளைகள் என்ற கர்வத்தோடு நாங்கள் வளர்க்கவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30f7077f-0691-41ec-a699-aee2f7985a4b/26-6a552a6de6bc1.webp' /></p><p></p><p>
ஒரு தாயாக, யாரோ ஒருவர் எனது பிள்ளைகளை தனது 2 நிமிட மலிவான விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவதையோ, அவமதிப்பதையோ என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. பணத்திற்காக எங்களைப் பற்றி பேசும் யூடியூபர்களுக்கான தெளிவான எச்சரிக்கை இது. போதும், இனி பொறுக்க முடியாது. எந்தவொரு தாயிடமும் விளையாடாதீர்கள். தன் குட்டிகளைக் காப்பாற்ற பாய்ந்து கொல்லும் காயம்பட்ட புலிதான் ஒரு தாய் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

&nbsp;&nbsp;</p><p>நமக்காக இன்றைக்கு நாமே குரல் கொடுக்கவில்லை என்றால், இந்த முட்டாள்கள் நம் தலைமேல் ஏறி மிதித்துவிட்டுப் போய்விடுவார்கள். அவர்களுக்குத் தெரியாத ஒன்று என்னவென்றால், நமக்குள்ளே இருக்கும் இந்த வலிமை காசு கொடுத்து வாங்கப்பட்டது அல்ல, நாங்களாகவே கஷ்டப்பட்டு சம்பாதித்தது. வெளியில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் உங்களுக்காக நீங்களே எழுந்து நில்லுங்கள். மற்றவர்கள் உங்களை அவமதிக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். எப்போதும் என்னோடு இருக்கும் உங்களுக்கு நன்றி ராதிகா சரத்குமார்" என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e437b4c2-af4d-4420-9db5-273b1cf7b418/26-6a552a6e929ba.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; &nbsp;</b></a> &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T01:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
