<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-13T11:49:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோவில் பிரசாத புளிசாதம்... வீட்டிலேயே செய்வது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/temple-style-tamarind-rice-recipe-in-tamil-1783936916"></link>
            <id>https://manithan.com/article/temple-style-tamarind-rice-recipe-in-tamil-1783936916</id>
            <summary type="text">கோவில் கொடுக்கப்படும் பிரசாதத்தில் ஒன்றான புளியோதரையை வீட்டில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.தேவையான பொருட்கள்மசாலா பொடி அரைக்க3 ஸ்பூன் -...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோவில் கொடுக்கப்படும் பிரசாதத்தில் ஒன்றான புளியோதரையை வீட்டில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.</p><h2>தேவையான பொருட்கள்</h2><h4>மசாலா பொடி அரைக்க</h4><p>3 ஸ்பூன் - மல்லி விதைகள் <br>முக்கால் ஸ்பூன் - வெந்தயம் <br>4 - வர மிளகாய் <br>3 ஸ்பூன் - வெள்ளை எள் <br>1 - ஸ்பூன் மிளகு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29ea3c4a-a51e-4e74-8536-327c62ad88c4/26-6a54bcad736dd.webp' /></p><h4>புளிக்காச்சல் செய்ய</h4><p>5 ஸ்பூன் - நல்லெண்ணெய் <br>1 டீஸ்பூன் - கடுகு <br>2 டீஸ்பூன் - கடலைப்பருப்பு <br>4 - வர மிளகாய் <br>1 டீஸ்பூன் - பெருங்காயத் தூள் <br>1.5 டீஸ்பூன் - மஞ்சள் தூள் <br>3 கொத்து - கறிவேப்பிலை<br>1/2 கப் - வேர்க்கடலை<br>தேவையான அளவு உப்பு <br>2 டேபிள் ஸ்பூன் - வெல்லம் <br>பெரிய எலுமிச்சை அளவு - புளி <br>1 கப் - அரிசி</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63e0f062-a7d4-452c-938a-34cffcf9bd6d/26-6a54bcac1f622.webp' /></p><h2>செய்முறை</h2><p>கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து மசாலா பொடி அரைக்க வேண்டிய பொருட்களை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து தனியாக வைக்கவும்.</p><p>புளி கரைசலுக்கு புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைத்து புளியை நன்றாக விதை மற்றும் நார் இல்லாமல் கரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f1bb6fc-c79e-4b05-b4d0-e74a86dce1ec/26-6a54bcacc493d.webp' /></p><p>கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, வரமிளாய், கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து புளி கரைசலையும் சேர்க்கவும். இதில் பெருங்காயம், மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.</p><p>பின்பு வறுத்த வேர்க்கடலை மற்றும் உப்பு, வெல்லம் இவற்றினை சேர்த்து, மூடி வைத்து 20 நிமிடம் கொதிக்க வைக்கவும். கடைசியில் அடுப்பை அணைத்துவிட்டு அரைத்து வைத்த மசாலா பொடியை சேர்த்து நன்றாக ஆற வைத்து, பாட்டிலில் சேமித்து வைக்கவும்.</p><p>சாதம் வடித்த பின்பு குறித்த புளியோதரை மிக்ஸ், சிறிதளவு உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கிளறினால் கோவில் ஸ்டைல் புளியோதரை தயார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T11:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டன் வாங்கும்போது தவிர்க்க வேண்டிய 7 பகுதிகள்.., என்னென்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/7-parts-that-should-be-avoided-in-mutton-1783935099"></link>
            <id>https://manithan.com/article/7-parts-that-should-be-avoided-in-mutton-1783935099</id>
            <summary type="text">மட்டன் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு அசைவ உணவாகும். 

மட்டனில் பிரியாணி, குழம்பு, எலும்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டன் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு அசைவ உணவாகும்.</p><p> 

மட்டனில் பிரியாணி, குழம்பு, எலும்பு சூப் மற்றும் மிளகு வறுவல் போன்ற பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம். </p><p>

இந்நிலையில், உடல்நல பாதிப்பைத் தவிர்க்க மட்டனின் சில பகுதிகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.</p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ebe443-01f1-481b-8530-dfa3fa220820/26-6a54b07d5edb8.webp' />
</p><p>
அந்தவகையில், மட்டன் வாங்கும்போது தவிர்க்க வேண்டிய 7 பகுதிகள் என்னென்ன என்பது குறித்து பாரக்கலாம்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">என்னென்ன பகுதிகள்?</span></h2><p><b>1. பித்தப்பை-</b> கல்லீரலுக்கு அருகில் இருக்கும் பித்தப்பையில் பித்தநீர் இருக்கும். அது உடைந்தால் கறி கசப்பாகி சாப்பிட முடியாத நிலை ஏற்படும்.
</p><p><b>
2. சிறுநீர்ப்பை- </b>இதில் சிறுநீர் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்க அதிக வாய்ப்புள்ளதால் இந்தப் பகுதியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
</p><p><b>
3. கழுத்து தசைநாண்கள- </b>ஆட்டின் கழுத்தில் இருக்கும் மஞ்சள் நிற தசைநாண்கள் எளிதில் செரிமானமாகாது. எனவே இதை தவிர்ப்பது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4223432-41ea-430a-bd3c-b124ebdbe4ae/26-6a54b10e743fe.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p><b>
4. நிணநீர் சுரப்பிகள்-</b> கழுத்து மற்றும் கொழுப்புப் பகுதிகளில் இருக்கும் இந்த சுரப்பிகள் கிருமிகளை வடிகட்டும் பணியை செய்கின்றதால் இவற்றை தவிர்ப்பது பாதுகாப்பானது.</p><p><b>5. அடிவயிற்றுக் கொழுப்பு-</b> இந்தப் பகுதியில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் என்பதால் இதய நோய், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.</p><p><b>
6. நுரையீரல்- </b>காற்றில் உள்ள தூசி மற்றும் நுண்கிருமிகள் நுரையீரலில் இருக்க வாய்ப்புள்ளது.</p><p><b>

7. சிறுகுடல், பெருங்குடல்-</b> இவற்றை பலமுறை நன்றாக சுத்தம் செய்து மட்டுமே சமைக்க வேண்டும். இல்லையெனில் வயிற்றுப்போக்கு ஏற்படும்.</p>]]></content>
            <updated>2026-07-13T10:12:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணப்பெண் மாதிரி மின்னும் தொகுப்பாளினி டிடி... அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/anchor-dd-traditional-beauty-photoshoot-goes-viral-1783933205"></link>
            <id>https://manithan.com/article/anchor-dd-traditional-beauty-photoshoot-goes-viral-1783933205</id>
            <summary type="text">தொகுப்பாளினியும், நடிகையுமான டிடி வெளியிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாவில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.தொகுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொகுப்பாளினியும், நடிகையுமான டிடி வெளியிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாவில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.</p><h2>தொகுப்பாளினி டிடி</h2><p>தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம்வந்தவர் தான் டிடி. சிறுவயதில் பேசவே கஷ்டப்பட்ட டிடி இப்படியொரு தொகுப்பாளினியாக மாறுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.</p><p>கலகலப்பான பேச்சால் பிரபல தொகுப்பாளினியாக வலம்வந்தவர், பின்பு படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.</p><p>காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சி தான் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இவர் தனது சிறுவயது நண்பராக ஸ்ரீகாந்த் என்பவரைக் காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61e03fdf-6ab0-420d-bc3b-2de8f7e3badf/26-6a54b5f2cd707.webp' /></p><p>ஆனால் இவரது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாத நிலையில், அவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகின்றார்.</p><p>பின்பு உடல் அளவிலும் பல சிக்கல்களை சந்தித்து, அனைத்து பிரச்சனையிலிருந்தும் மீண்டு வந்த டிடி, தன்னம்பிக்கை, விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95258c12-52b4-4db2-b2cb-c5c235fc2868/26-6a54b5f3870c6.webp' /></p><p></p><h2>வைரலாகும் புகைப்படம்</h2><p>இந்நிலையில் டிடி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். தற்போதும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><p>அதாவது முற்றிலும் பாரம்பரிய தோரணையில் தேவதை போன்று காணப்படுகின்றது. அவரது புடவையின் நிறம், நெக்லஸ், ஜிமிக்கி, வளையல் என அனைத்தையும் ஒரே நிறத்தில் தெரிவு செய்துள்ள நிலையில், ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb848a5a-5587-4966-afcb-52d9df8b4f56/26-6a54b5f447095.webp' /></p><p></p><p>அதாவது புடவையைக் குறித்தும், அவரது அழகைக் குறித்தும் பேசி வருகின்றனர். உங்களுக்கு வயசே ஆகாதா? கல்யாண வீட்டு பொண்ணு மாதிரி இருக்கீங்க என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.</p><p>சமீபத்தில் நடைபெற்ற டிரெயின் படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவினை மாகாபா-வுடன் இணைந்து தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78eb4b30-b7ed-46bb-855a-f6be39f594f6/26-6a54b5f52574b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T09:55:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Today Gold Rate: தடாலடியாக குறைந்தது தங்கத்தின் விலை.... மகிழ்ச்சியில் நகைபிரியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gold-rate-july-13-2026-india-and-srilanka-1783931299"></link>
            <id>https://manithan.com/article/gold-rate-july-13-2026-india-and-srilanka-1783931299</id>
            <summary type="text">ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்றைய தங்கம் விலைஆபரணத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>இன்றைய தங்கம் விலை</h2><p>ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களில் அதிகரித்து, சில தினங்களில் குறைந்தும் வருகின்றது.
</p><p>
இந்நிலையில், இன்று சவரனுக்கு 800 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.13,300 ஆகவும், சவரன் ரூ.1,06,400 ஆகவும் இருந்து வந்தது.</p><p></p><p>
</p><p>
தற்போது சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, 13,200 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 800 குறைந்து, 1,05,600 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>
ஆனால் வெள்ளியின் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது. இன்று கிராமுக்கு ரூ. 240.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,40,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68a71de4-08db-4e44-b38e-c840a8d18bd6/26-6a54a28320758.webp' /></p><p>
</p><h2>
இலங்கையில் தங்கம் விலை
</h2><p>இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,66,800 அதுவே கிராமிற்கு ரூ.45,850 க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,36,240க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 42,030க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 631.02 LKR என்றும் ஒரு அவுன்ஸ 19,627.06 LKR என்று விற்பனை ஆகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/954b48f2-cc58-491b-859a-f02be58e5586/26-6a54a283d4c3e.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T08:54:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் ஜானகி வாடகை வீட்டில் வசிக்க என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-janaki-ended-up-living-in-a-rented-house-1783924133"></link>
            <id>https://manithan.com/article/why-janaki-ended-up-living-in-a-rented-house-1783924133</id>
            <summary type="text">பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகியின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அவரது இறுதிச்சடங்குகள் முடிந்த நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகியின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. </p><p>

அவரது இறுதிச்சடங்குகள் முடிந்த நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.</p><h2>ஜானகியின் சொத்துமதிப்பு&nbsp; &nbsp;</h2><p>

60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய எஸ். ஜானகி, தனது காலத்தில் முன்னணி பாடகியாக இருந்தார்.&nbsp;&nbsp;</p><p>ஊடகத் தகவல்களின்படி, எஸ். ஜானகியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.537 கோடி என கூறப்படுகிறது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3533e175-b0fe-403e-92d6-1e02090658e0/26-6a54869ba6324.webp' /></p><p>அவர் சினிமாவில் சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதியை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. </p><p>

சென்னையின் முக்கியப் பகுதிகளில் வாங்கப்பட்ட நிலங்கள் தற்போது நூற்றுக்கணக்கான கோடிகளை எட்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>ஆனால், இவ்வளவு சொத்துகள் இருந்தும் அவர் தனது இறுதி நாட்களில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">என்ன காரணம்?&nbsp;</span></h2><p>
1938ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த எஸ். ஜானகி, திருமணத்திற்குப் பிறகு சென்னையில் குடியேறினார்.</p><p> </p><p>கணவர் மற்றும் மகன் மரணத்திற்கு பிறகு மைசூரில் வசித்த ஜானகி, உடல்நலக் குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்.&nbsp;&nbsp;</p><p>மைசூரில் ஒரு ரசிகரின் வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்தார். போகடி பகுதியில் உள்ள வீட்டில் ரசிகர் பவ்யா அவரை கவனித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51bfbaf2-16b9-4fdf-9ebe-9122cf400716/26-6a54869c71a1d.webp' />&nbsp;&nbsp;</p><p>

இதனைதொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஒரு பண்ணை வீட்டை வாங்கியிருந்தாலும், இறுதி வரை வாடகை வீட்டில்தான் வசித்தார்.</p><p>

கடைசி இரண்டு ஆண்டுகளில் ஆன்மிகத்தில் அதிக கவனம் செலுத்திய எஸ். ஜானகி, மைசூரில் உள்ள பல கோவில்களுக்கு சென்று வழிபட்டு வந்தார்.</p><p>இந்நிலையில், அவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் உயிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-13T08:15:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[Vazhakkai Coconut Fry: வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vazhakkai-coconut-fry-receipe-in-tamil-1783926791"></link>
            <id>https://manithan.com/article/vazhakkai-coconut-fry-receipe-in-tamil-1783926791</id>
            <summary type="text">வாழைக்காய் மற்றும் தேங்காய் கொண்டு சுவையான வறுவல் செய்வது எப்படி என பார்க்கலாம்.தேவையான பொருட்கள் 

வாழைக்காய் - 2 வெங்காயம் - 1 பூண்டு - 7 பற்கள்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாழைக்காய் மற்றும் தேங்காய் கொண்டு சுவையான வறுவல் செய்வது எப்படி என பார்க்கலாம்.</p><h2>தேவையான பொருட்கள் </h2><p>

வாழைக்காய் - 2 <br>வெங்காயம் - 1 <br>பூண்டு - 7 பற்கள்
<br>துருவிய தேங்காய் - 1/2 கப் <br>எண்ணெய் - 1 டீஸ்பூன் <br>கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
<br>மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், தனியா தூள்- தேவையான அளவு
<br>சீரகம் - 1 டீஸ்பூன் <br>கடுகு - 1 டீஸ்பூன் <br>காய்ந்த மிளகாய் - 2 <br>பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன் <br>உப்பு - தேவையான அளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b85b2a08-b3be-4fbb-a1ad-1a28b58a5635/26-6a54918d49fe1.webp' /><br></p><p>
</p><h2>
செய்முறை</h2><p> 

வாழைக்காயை சுத்தம் செய்து விட்டு குக்கரில் தோளோடு சேர்த்து வேக விடவும்.
</p><p>
2 விசில் வந்த பின்னர் தோலை நீக்கிவிட்டு நறுக்கி கொள்ளவும்.
</p><p>
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு சேர்த்து தாளிக்கவும், காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் சேர்க்கவும்.
</p><p>
வதங்கிய பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், பொன்னிறமாக வந்த பிறகு இடித்து போட்டு பூண்டை சேர்க்கவும்.
</p><p>
பச்சை வாசனை போன பின்னர் மசாலா பொடிகள் சேர்த்து உப்பு சேர்த்து கிளறி விடவும்.
</p><p>
பின்னர் வேகவைத்த வாழைக்காயை சேர்த்து கலந்து விடவும், 2 நிமிடம் அப்படியே விட்டு விடலாம். </p><p>கடைசியாக துருவிய தேங்காய், கருவேப்பிலை சேர்த்து கிளறினால் வாழைக்காய் தேங்காய் வருவல் தயார்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3008e5e3-2d18-4167-a0aa-acead5d70cc5/26-6a54918dee223.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-13T07:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் அலைக்குள் சிக்கிய அனுஷ்கா: பத்திரமாக மீட்ட போலிசார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/anushka-rescued-in-chennai-marina-beach-1783912898"></link>
            <id>https://manithan.com/article/anushka-rescued-in-chennai-marina-beach-1783912898</id>
            <summary type="text">சென்னை மெரினாவில் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணான அனுஷ்காவை கடலோர காவல் படையின் மெரினா உயிர்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை மெரினாவில் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணான அனுஷ்காவை கடலோர காவல் படையின் மெரினா உயிர்காக்கும் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.</p><h2>கடல் அலையில் சிக்கினார்</h2><p>

உக்ரைனை சேர்ந்த அனுஷ்கா(வயது 24) இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார், இங்கே பல்வேறு மாநிலங்களை சுற்றிப்பார்த்துவிட்டு சென்னையில் வந்து தங்கியுள்ளார்.
</p><p>
மெரினா கடற்கரைக்கு சென்ற போது கடலில் குளித்துக் கொண்டிருந்தார், அப்போது ராட்சத அலை வந்ததும் அவர் அலையால் உள்ளே இழுக்கப்பட்டு சுமார் 100 மீற்றர் தூரம் வரை கடலுக்குள் சென்று தத்தளித்தார்.</p><h2>இளம்பெண்ணை மீட்ட குழுவினர்</h2><p>
</p><p>
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
</p><p>
உடனடியாக விரைந்து வந்த குழுவினர் கடலுக்குள் சென்று அனுஷ்காவை பத்திரமாக மீட்டனர்.</p><p>

தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு பத்திரமாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் போலிசார் அனுப்பி வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f738d3a-2bc0-4b44-ad63-e5cc380914ff/26-6a545a4c7032a.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-13T06:10:31+00:00</updated>
        </entry>
    </feed>
