<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-17T07:27:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[நரம்பில் ஏறிய பாம்பின் விஷம்: தம்பியை காப்பாற்ற அண்ணனின் பாசப்போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/brothers-150-slaps-save-sibling-snake-bite-1786949859"></link>
            <id>https://manithan.com/article/brothers-150-slaps-save-sibling-snake-bite-1786949859</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் தம்பியை காப்பாற்ற அண்ணன் போராடிய செயல் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.உத்தரபிரதேசத்தின் ஹார்டோய் மாவட்டத்தை சேர்ந்தவர் அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் தம்பியை காப்பாற்ற அண்ணன் போராடிய செயல் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><p>உத்தரபிரதேசத்தின் ஹார்டோய் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்(வயது 21), சமீபத்தில் வயலில் வைக்கோல் கட்டுகளை எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக பாம்பு தீண்டியுள்ளது.
</p><p>
இதனால் அவருக்கு விஷம் வேகமாக பரவியதால் மயக்கம் அடையத் தொடங்கினார், இதனை கவனித்த அவரது அண்ணன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/370c3240-eaaa-4cb6-9f8b-1f984bf9575e/26-6a82b1f48de0f.webp' /><br></p><p>

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஷம் நரம்பு மண்டலத்தை பாதித்துள்ளதால் சுயநினைவை இழக்கக்கூடும் என எச்சரித்துள்ளனர், மேலும் தூங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.
</p><p>
இதனால் பதறிப்போன அண்ணன் ஒரு மணிநேரத்துக்கு மேலாக தம்பியை தூங்கவிடாமல் பார்த்துக்கொண்டார், அவர் கண்ணை மூடும்போதெல்லாம் கன்னத்தில் அறைந்து எழுப்பிக்கொண்டே இருந்தார்.
</p><p>
அந்நேரத்தில் மருத்துவரின் தீவிர சிகிச்சையால் அருண் உயிர்பிழைத்தார், தம்பியை காப்பாற்ற அண்ணன் சுமார் 150 முறை அவர் கன்னத்தில் அறைந்தார், அவரது பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களை நெகிழவைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cab980c-b6ab-4b2d-9432-faf12b635259/26-6a82b1f3dcf25.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-17T07:02:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தைரியமாக இருங்க! த்ரிஷாவுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்- ஏன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/trisha-attend-cm-event-in-independence-day-1786940838"></link>
            <id>https://manithan.com/article/trisha-attend-cm-event-in-independence-day-1786940838</id>
            <summary type="text">முதலமைச்சர் விஜய் பங்கேற்று கொடியேற்றிய சுதந்திர தினவிழாவில் பங்கேற்றார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன்.

முதல் வரிசையில் அவர் அமர்ந்திருக்க விஜய் சல்யூட் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதலமைச்சர் விஜய் பங்கேற்று கொடியேற்றிய சுதந்திர தினவிழாவில் பங்கேற்றார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன்.
</p><p>
முதல் வரிசையில் அவர் அமர்ந்திருக்க விஜய் சல்யூட் அடிக்க பதிலுக்கு த்ரிஷாவும் சல்யூட் அடித்தார், இந்த வீடியோ காட்சிகள் வைரலாகின.
</p><p>
அத்துடன் த்ரிஷா அன்றைய தினம் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட கமெண்டுகள் குவிந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab0c2089-9d02-4323-b31f-7541aa2efd11/26-6a828e5eeedc5.webp' /><br></p><p>
</p><p>
உங்களை யார் முதல் வரிசையில் அமரவைத்தது? நீங்கள் ஏன் வந்தீர்கள்? எங்க அண்ணாவை விட்டுவிடுங்கள் என பலதரப்பட்ட எதிர்மறையான கமெண்டுகள் குவிந்தது.
</p><p>
இந்நிலையில் இவருக்கு ஆதரவாகவும் கமெண்டுகள் பதிவாகிறது, முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு அவ்வளவு எளிதில் அழைப்பு இல்லாமல் யாரும் வரமுடியாது, முறையான அழைப்பு இருந்ததால் மட்டுமே அவர் வந்துள்ளார், த்ரிஷாவை குறை கூறுவதை நிறுத்துங்கள் என கூறுகின்றனர்.
</p><p>
அத்துடன் தைரியமாக இருங்கள், குறை சொல்வதை கண்டுகொள்ளாதீர்கள் எனவும் ஹார்ட்டுகளை பறக்கவிட்டுள்ளனர்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b63c1abb-d5d9-42de-8b36-321147ad7a01/26-6a828e5fa0352.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-17T04:30:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணமகனின் வலது பக்கம் மணமகள் அமர்வது ஏன்? பலரும் அறியாத ஜோதிட காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/do-you-know-bride-sitting-right-side-of-groom-1765959976"></link>
            <id>https://manithan.com/article/do-you-know-bride-sitting-right-side-of-groom-1765959976</id>
            <summary type="text">திருமணத்தின் போது மணமகனின் வலதுபக்கத்தில் மணமகளை ஏன் அமர வைக்கின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.வலது பக்கத்தில் மணமகள்இந்து மதத்தின் படி த...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருமணத்தின் போது மணமகனின் வலதுபக்கத்தில் மணமகளை ஏன் அமர வைக்கின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>வலது பக்கத்தில் மணமகள்</h2><p>இந்து மதத்தின் படி திருமணத்தில் பல சடங்குகள் பின்பற்றப்படுகின்றது. பெரும்பாலும் மணமக்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுகின்றது.</p><p>மேலும் இந்து மதத்தில் உள்ள மரபுகள், திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கும் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் அளிப்பதாக நம்பப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5d1cac5-4c77-4cbc-98fa-f7b9947faa0f/25-6942c743dc2e0.webp' /></p><p>இந்து வேதத்தில் மனைவி வாமாங்கினி என்று அழைக்கப்படுகின்றது. மேலும் கணவரின் வலது பக்கத்தில், மணமகளின் இடது பக்கம் என்பதால் இதயத்திற்கு அருகே இருப்பதாக ஒரு உணர்வு காணப்படும் நிலையில், இதனால் தான் மணமகனின் வலதுபுறத்தில் அமர வைக்கின்றனர்.<br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c117fc5-1252-4f41-9c5b-d4a2154087fa/25-6942c74479296.webp' /></p><p>மணமகளின் இதயத்திற்கு அருகில் மணமகன் இருப்பதால் அதிக நெருக்கமாகவும், எப்பொழுதும் அன்பில் நிலைத்திருப்பார்கள் என்பதையும் குறிக்கின்றது.</p><p>ஆனால் சாஸ்திரங்களின் படி லட்சுமி தேவி விஷ்ணுவின் வலது பக்கத்தில் அமர்ந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது.<br></p><p>அதுமட்டுமல்லாமல் அர்த்தநாரீஸ்வரரிலும் இந்த வடிவத்தை நாம் காணமுடிவதுடன், சிவனும், பார்வதியும் ஒரே உடலில் இரண்டு பகுதிகளாகத் தோன்றுவதையும் குறிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1086898-33d8-4768-b673-d5e2510fde67/25-6942c745166fc.webp' /></p><p>பண்டிதர்களின் கூற்றின்படி, கணவரின் வீட்டிற்குள் நுழைந்த மணமகள் அவரது வலது பக்கத்தில் அமர்ந்திருப்பது நல்ல அதிர்ஷ்டமாகவும், நிதி ஆதாயத்திற்கான நிகழ்வாகவும் பார்க்கப்படுகின்றது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T03:30:33+00:00</updated>
        </entry>
    </feed>
