<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-27T11:45:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழும் கிராம மக்கள்.., எங்கு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/nepals-kidney-valley-village-in-tamil-1785149559"></link>
            <id>https://manithan.com/article/nepals-kidney-valley-village-in-tamil-1785149559</id>
            <summary type="text">பொதுவாக, மனித உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. 

மனிதர்களால் ஒரு சிறுநீரகம் இல்லாவிட்டாலும் மற்றொரு சிறுநீரகத்தின் உதவியுடன் உயிர் வாழ முடியும். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, மனித உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. </p><p>

மனிதர்களால் ஒரு சிறுநீரகம் இல்லாவிட்டாலும் மற்றொரு சிறுநீரகத்தின் உதவியுடன் உயிர் வாழ முடியும். </p><p>

இதனால் சிலர் தங்களின் சிறுநீரகத்தை விற்கும் சம்பவங்கள் நடக்கின்றன. </p><p>

ஆனால், நேபாளத்தில் உள்ள ஒரு கிராமம் சிறுநீரக விற்பனை காரணமாக உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27234fa6-a609-4342-86bd-06f111cb43ea/26-6a67387a5900a.webp' /></p><p>நேபாளத்தின் காவ்ரேபிளாஞ்சோக் மாவட்டத்தில் உள்ள ஹோக்ஸே கிராமம், சிறுநீரகப் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.</p><p> 

இந்த கிராமத்தில் உள்ள பல குடும்பங்களில் குறைந்தது ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.&nbsp;</p><p>கடும் வறுமை, கடன் மற்றும் அடிப்படை தேவைகளுக்கான பணத் தேவை காரணமாக பலர் சிறுநீரகத்தை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். </p><p>

இதனை பயன்படுத்தி கொண்ட தரகர்கள், கிராம மக்களை ஏமாற்றி சட்டவிரோதமாக சிறுநீரகங்களை அகற்றி விற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29fee24d-c9db-413a-9496-a976ea60e573/26-6a67387b094e8.webp' /></p><p>

பல கிராம மக்கள் தங்கள் சிறுநீரகங்களை 20,000 முதல் 70,000 நேபாள ரூபாய் வரை விற்றதாகக் கூறப்படுகிறது.</p><p> 

இதன்மூலம் உறுப்பு கடத்தல் கும்பல்கள் குறைந்த விலையில் சிறுநீரகங்களைப் பெற்று அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>முடி மற்றும் நகங்களைப் போல சிறுநீரகமும் மீண்டும் வளரும் என்று கூறி, தரகர்கள் மக்களை ஏமாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4f04c5c-99f4-47f9-81f0-d951fd413c82/26-6a67387bb86c7.webp' /></p><p>மருத்துவ அறிவு மற்றும் கல்வியறிவு இல்லாததால் பலர் இந்தப் பொய்யை நம்பி சிறுநீரகத்தை விற்றதாகக் கூறப்படுகிறது.</p><p>

சிறுநீரகத்தை விற்பது நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. </p><p>

மேலும், சட்டவிரோத அறுவை சிகிச்சைகள் காரணமாக பலர் உடல்நலக் குறைபாடுகள், மருத்துவ சிக்கல்கள், உளவியல் பாதிப்புகளை சந்தித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-07-27T11:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியர்.., வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/zomato-delivery-agent-on-horse-rides-in-chennai-1785132882"></link>
            <id>https://manithan.com/article/zomato-delivery-agent-on-horse-rides-in-chennai-1785132882</id>
            <summary type="text">சென்னையில், குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குதிரையில் சென்று உணவு டெலிவரி

சென...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையில், குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
</p><h2>
குதிரையில் சென்று உணவு டெலிவரி
</h2><p>
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பலவாக்கம் பகுதியில், ஜொமாட்டோ ஊழியர் ஒருவர் உணவு பார்சல்களுடன் வெள்ளை நிறக் குதிரையில் சென்றுள்ளார்.
</p><p>பொதுவாக உணவு டெலிவரி ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வது வழக்கம்.</p><p> </p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Zomato delivery partner spotted delivering food on horseback in Chennai&#39;s suburban areas. <a href="https://t.co/Vyj1A3c3UB">pic.twitter.com/Vyj1A3c3UB</a></p>&mdash; Vignesh Theni (@Vignesh_twitz) <a href="https://x.com/Vignesh_twitz/status/2081216255751836132?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>ஆனால், இந்த ஊழியர் குதிரையில் கம்பீரமாகச் சென்றது அந்த வழியாகச் சென்ற பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
</p><p>
இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். </p><p>

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


</p>]]></content>
            <updated>2026-07-27T08:20:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் வைர தலைநகரம் எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-is-the-diamond-city-of-india-in-tamil-1785138605"></link>
            <id>https://manithan.com/article/which-is-the-diamond-city-of-india-in-tamil-1785138605</id>
            <summary type="text">வைரம் என்பது பூமியின் ஆழத்தில் அதிக அழுத்தத்தால் உருவாகும் மிகக் கடினமான தூய கரிமம் ஆகும். 

இது அதன் ஒளிரும் தன்மை, உறுதி மற்றும் பட்டை தீட்டப்படும...</summary>
            <content type="html"><![CDATA[<p>வைரம் என்பது பூமியின் ஆழத்தில் அதிக அழுத்தத்தால் உருவாகும் மிகக் கடினமான தூய கரிமம் ஆகும். </p><p>

இது அதன் ஒளிரும் தன்மை, உறுதி மற்றும் பட்டை தீட்டப்படும் அழகுக்காக அறியப்படுகிறது.
</p><p>
அந்தவகையில், இந்தியாவின் வைர தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
</p><p>

அதன்படி, குஜராத்தில் உள்ள சூரத் நகரம், வைர வெட்டுதல் மற்றும் மெருகூட்டுதல் தொழிலுக்காக “இந்தியாவின் வைர தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>உலகளாவிய வைர வர்த்தகத்தில் சூரத் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல், உலகின் பெரும்பாலான வைரங்கள் சூரத்தில் பதப்படுத்தப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f85b9a7-aa72-47c8-9dbd-011ec655038e/26-6a67123f45455.webp' /></p><p>உலகின் சுமார் 90 சதவீத பட்டை வைரங்கள் சர்வதேச நகைச் சந்தைகளை அடைவதற்கு முன்பு சூரத் நகருக்கு வருகின்றன. </p><p>

இங்கு அவை வெட்டப்பட்டு, மெருகூட்டப்பட்டு, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.&nbsp;</p><p>சூரத்தின் வைரத் தொழில் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. </p><p>

வைர வெட்டுதல் ஆலைகள் முதல் ஏற்றுமதி நிறுவனங்கள் வரை உள்ள தொழில்கள் நகரம் முழுவதும் உள்ள வணிகங்களுக்குப் பயனளிக்கிறது. </p><p>

சூரத் நகரில் உள்ள திறமையான வைர கைவினைஞர்கள், வைரங்களை மிகுந்த துல்லியத்துடன் வெட்டி மெருகூட்டுகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bfe58c9-d6f4-4cd7-b057-c56417d46eb8/26-6a67124012891.webp' /></p><p>பலர் இந்தத் தொழிலை தங்கள் குடும்பத்தினரிடமிருந்து தலைமுறை தலைமுறையாக கற்றுக்கொண்டுள்ளனர்.
</p><p>
வைரங்களைத் தவிர, சூரத் நகரம் ஜவுளித் தொழிலுக்கும் மிகவும் பிரபலமானது.</p><p> 

வைர மற்றும் ஜவுளித் தொழில்களின் வளர்ச்சியால், சூரத் குஜராத்தின் முக்கிய வர்த்தக மையமாக உருவெடுத்துள்ளது.
</p><p>
உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக அலுவலக வளாகங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘சூரத் டைமண்ட் போர்ஸ்’ உள்ளிட்ட நவீன திட்டங்கள் நகரின் வர்த்தக வளர்ச்சிக்கு உதவி வருகின்றன.
</p><p>
இதன் மூலம், சர்வதேச வைரத் தொழிலில் சூரத் தொடர்ந்து முன்னணி நகரமாக திகழ்கிறது.</p>]]></content>
            <updated>2026-07-27T07:30:37+00:00</updated>
        </entry>
    </feed>
