<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-06T22:41:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் வரும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்.., பழைய காகித நோட்டுகள் செல்லுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/plastic-rs-10-rs-20-notes-soon-1786017341"></link>
            <id>https://manithan.com/article/plastic-rs-10-rs-20-notes-soon-1786017341</id>
            <summary type="text">இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை காகிதத்துக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்களில் அச்சிடும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி முன்னெடுத்து வருகிறது.

முதற்கட்டமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை காகிதத்துக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்களில் அச்சிடும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி முன்னெடுத்து வருகிறது.
</p><p>
முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிட்டு, அடுத்த ஆண்டு சோதனை அடிப்படையில் புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

இதற்காக 100 கோடி ரூ.10 நோட்டுகள் மற்றும் 100 கோடி ரூ.20 நோட்டுகள் அச்சிடப்பட உள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.3,000 கோடியாக இருக்கும்.
</p><p>
பிளாஸ்டிக் நோட்டுகளுக்கான சோதனையை தொடங்க ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63004b6b-c6a0-4662-80dd-7e5e2641695e/26-6a7476405ee5e.webp' /></p><p>இதனால் தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் உடனடியாக நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p>

இந்நிலையில், தற்போது பயன்பாட்டில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>

சோதனை முயற்சியாக பிளாஸ்டிக் நோட்டுகள், காகித நோட்டுகளுடன் சேர்த்தே புழக்கத்தில் விடப்படும்.
</p><p>
இந்த முயற்சி வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் பிளாஸ்டிக் நோட்டுகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8befc73a-72b5-47d7-9c81-b2b8bd26c34a/26-6a74763fa4cdf.webp' /></p><p>

ரூ.10 மற்றும் ரூ.20 போன்ற குறைந்த மதிப்புள்ள நோட்டுகள் அடிக்கடி கைமாறுவதால் விரைவில் சேதமடைவதால், நீண்ட காலம் நீடித்து எளிதில் பாதிக்கப்படாத பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>பிளாஸ்டிக் நோட்டுகளை தயாரிக்க ஆரம்பத்தில் செலவு அதிகமாக இருந்தாலும், அவை நீண்ட காலம் பயன்பாட்டில் இருப்பதால் அச்சிடும் செலவை குறையும்.
</p><p>
மேலும், பிளாஸ்டிக் நோட்டுகளில் அதிக பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க முடியும் என்பதால் கள்ளநோட்டுகளைத் தடுக்கவும் உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T16:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடீஸ்வர யோகம் கிடைக்க எந்த பூஜை செய்ய வேண்டும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/millionaire-yogam-in-tamil-1786020113"></link>
            <id>https://manithan.com/article/millionaire-yogam-in-tamil-1786020113</id>
            <summary type="text">வீட்டில் பணவரவு அதிகரிக்கவும், செல்வம் பெருகவும் ஆன்மீகத்தில் சில எளிய வழிமுறைகள் மற்றும் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. 

வெள்ளிக்கிழமை வழிபாடு, தீப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீட்டில் பணவரவு அதிகரிக்கவும், செல்வம் பெருகவும் ஆன்மீகத்தில் சில எளிய வழிமுறைகள் மற்றும் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. </p><p>

வெள்ளிக்கிழமை வழிபாடு, தீபம் ஏற்றுதல் மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் எளிய செயல்கள் மூலம் மகாலட்சுமி அருள் பெறலாம்.
</p><p>
அதன்படி, வெள்ளிக்கிழமைகளில் தாயார் மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சாற்றி வழிபாடு செய்யலாம்.
</p><p>
வீட்டின் பூஜை அறையில் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். பர்ஸில் அல்லது பீரோவில் பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய் வைக்கலாம்.</p><p>

குபேர மூலைக்கு தீபம் காட்டி வழிபாடு நடத்துவது, மஹாலட்சுமி ஸ்தோத்திரம் மற்றும் கன்கதார ஸ்தோத்திரம் படிக்கலாம்.</p><p>
மேலும், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏழைகளுக்கு தானம் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.
</p><p>
அந்தவகையில், வீட்டில் பணவரவை அதிகரிக்க சில ஆன்மிக குறிப்புகளை ஜோதிடர் மீனாட்சி தேவி பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AnxLjgfTLLg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-06T16:54:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழும் உயிரினம்.., எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-living-creature-has-the-longest-lifespan-1786004937"></link>
            <id>https://manithan.com/article/which-living-creature-has-the-longest-lifespan-1786004937</id>
            <summary type="text">பொதுவாக மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 80 ஆண்டுகள். 

ஆனால், பூமியில் சில விலங்குகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்றன.

அந்தவகையில், உல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 80 ஆண்டுகள். </p><p>

ஆனால், பூமியில் சில விலங்குகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்றன.
</p><p>
அந்தவகையில், உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழும் உயிரினம் எது என்பது குறித்து பார்க்கலாம்.</p><p>

அதன்படி, உலகிலேயே அதிக ஆண்டுகள் அதாவது 150 ஆண்டுகள் வரை வாழக்கூடிய விலங்கு ஆமை.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3dffb8b-7d3b-4e6a-a6d2-d966098dc040/26-6a7445ccbe659.webp' />
</p><p>
குறிப்பாக சில பெரிய நில ஆமை இனங்கள் 100 முதல் 150 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p>உலகின் பழமையான உயிரினங்களில் ஒன்றான ஆமைகளின் மூதாதையர் டைனோசர் காலத்தில் இருந்து பல பேரழிவுகளில் தப்பி இந்த பூமியில் வசித்து வருகின்றன.</p><p>
ஆமைகள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த உலகில் வாழ்கின்றன.
</p><p>
ஆமைகள் நீண்ட காலம் வாழ முக்கிய காரணம் அவற்றின் மெதுவான வளர்சிதை மாற்றம். 

அவை குறைந்த ஆற்றலை பயன்படுத்தி அமைதியான வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2850d6d5-909b-4517-b308-58c3b673c006/26-6a7445cbe4c18.webp' /></p><p>
ஆமைகளின் வலிமையான ஓடு, அதனை தாக்கும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. 

ஆபத்து ஏற்படும்போது தலை மற்றும் கால்களை ஓட்டிற்குள் இழுத்து உயிர் பிழைக்கிறது.
</p><p>
பெரும்பாலான நில ஆமைகள் புல், இலைகள், பழங்கள் உள்ளிட்ட தாவர உணவுகளை சாப்பிடுகின்றன.</p><p> 

ஆமை ஓடுகள், அதன் உடலின் இன்றியமையாத பாகம். ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட சராசரியாக50 எலும்புகளால் ஆனது ஆமை ஓடு.
</p><p>

அவற்றின் எளிய வாழ்க்கை முறையும் ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் நீண்ட ஆயுளுக்கு உதவுகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-06T16:53:42+00:00</updated>
        </entry>
    </feed>
