<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-28T13:48:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்லீரலை அமைதியாக பாதிக்கும் ஹெபடைடிஸ்! ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/world-hepatitis-day-2026-early-warning-symptoms-1785242098"></link>
            <id>https://manithan.com/article/world-hepatitis-day-2026-early-warning-symptoms-1785242098</id>
            <summary type="text">தற்போது பலரும் அடிக்கடி அதிகப்படியான உடல் சோர்வை அனுபவித்து வருகின்றனர். இதற்கு பரபரப்பான வாழ்க்கை முறை, அதிகமான பணிச்சுமை, மன அழுத்தம், போதிய தூக்கமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது பலரும் அடிக்கடி அதிகப்படியான உடல் சோர்வை அனுபவித்து வருகின்றனர். இதற்கு பரபரப்பான வாழ்க்கை முறை, அதிகமான பணிச்சுமை, மன அழுத்தம், போதிய தூக்கமின்மை, சீரற்ற உணவுப் பழக்கம் போன்றவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. </p><p>பொதுவாக இத்தகைய காரணங்களால் ஏற்படும் உடல் சோர்வு, போதுமான ஓய்வு எடுத்த பிறகோ அல்லது வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்களை மேற்கொண்ட பிறகோ குறைந்து விடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2e6db00-003a-46bd-8892-6f8b8fa72242/26-6a68a8bca4a2b.webp' /></p><p></p><p>

ஆனால், எவ்வளவு நேரம் ஓய்வெடுத்தாலும் உடல் சோர்வு நீங்காமல் தொடர்ந்து இருந்தால், அதை சாதாரண பிரச்சனையாகக் கருதக் கூடாது. </p><p>அது உடலில் மறைந்திருக்கும் தீவிரமான உடல்நலக் கோளாறின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக, அது ஹெபடைடிஸ் (Hepatitis) எனப்படும் கல்லீரல் நோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும்.</p><p>

ஹெபடைடிஸ் என்பது உடலின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றான கல்லீரலில் ஏற்படும் அழற்சி ஆகும். இந்த நோய் ஆரம்ப நிலையில் பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமல் அமைதியாக கல்லீரலை பாதிக்கத் தொடங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfbaf996-8a01-4580-ac6f-b606b08f937f/26-6a68a8bd54e4b.webp' /></p><p> இதனால் பலருக்கு நோய் இருப்பதே தெரியாமல் போகும். ஆனால், நோய் தீவிரமடையும் போது கல்லீரல் கடுமையாக சேதமடைந்து பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும் வெளிப்படையான அறிகுறிகளையும் ஏற்படுத்தக்கூடும்.</p><p>

ஹெபடைடிஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் தேதி உலக ஹெபடைடிஸ் தினம் (World Hepatitis Day) அனுசரிக்கப்படுகிறது.</p><p> இந்த நாளின் மூலம், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியம், தடுப்பூசி, பரிசோதனை மற்றும் சரியான சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ebf8340-4831-4b97-b083-2f1d9da96651/26-6a68a8be09cd4.webp' /></p><p> எனவே, உலக ஹெபடைடிஸ் தினத்தை முன்னிட்டு, ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாத ஹெபடைடிஸின்&nbsp; ஆரம்பகால அறிகுறிகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.</p><h2>முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகள்</h2><p><b>உடல் சோர்வு</b>: போதுமான ஓய்வுக்குப் பிறகும் காரணமின்றி தொடர்ந்து சோர்வாக இருந்தால், அது கல்லீரல் அழற்சியின் அறிகுறியாக இருக்கலாம்.
</p><p><b>
பசியின்மை:</b> திடீரென உணவின் மீது விருப்பம் குறைவது, ஹெபடைடிஸால் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதால் ஏற்படலாம்.
</p><p><b>
குமட்டல் மற்றும் வாந்தி:</b> உணவு சாப்பிட்ட பிறகு அடிக்கடி குமட்டல் அல்லது வாந்தி ஏற்பட்டால், கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டிருக்கலாம்.
</p><p><b>
அடர் நிற சிறுநீர்: </b>போதுமான தண்ணீர் குடித்தும் சிறுநீர் அடர் நிறத்தில் இருந்தாலோ, கண்கள் மற்றும் தோல் மஞ்சள் நிறமாக மாறினாலோ, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
</p><p><b>
வலது மேல் வயிற்று வலி:</b> வலது விலா எலும்புக்குக் கீழே தொடர்ந்து வலி அல்லது அசௌகரியம் இருந்தால், அது கல்லீரல் அழற்சியின் அறிகுறியாக இருக்கலாம்.</p><p><b>

சரும அரிப்பு:</b> காரணமின்றி, குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமாக சரும அரிப்பு ஏற்பட்டால், அது கல்லீரல் பிரச்சினையைக் குறிக்கலாம்.
</p><p><b>
காய்ச்சல் மற்றும் உடல்வலி:</b> லேசான காய்ச்சல், தசை வலி, தலைவலி மற்றும் உடல் சோர்வு போன்றவை ஆரம்பகால வைரஸ் ஹெபடைடிஸின் அறிகுறிகளாக இருக்கலாம்.
</p><p><b>
எளிதில் இரத்தக்கசிவு அல்லது காயம்</b>: அடிக்கடி சிராய்ப்பு, ஈறுகளில் இரத்தக்கசிவு போன்றவை ஏற்பட்டால், கல்லீரல் இரத்தம் உறைய தேவையான புரதங்களை போதுமான அளவில் உற்பத்தி செய்யாததன் அறிகுறியாக இருக்கலாம். மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் அதனை அலட்சியப்படுத்தாது அவசியம் முறையாக மருத்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c5b226c-0b48-47ab-a04f-09bcb61e6dc1/26-6a68a8beaf155.webp' /></p><p></p><p><b>யாருக்கெல்லாம் ஹெபடைடிஸ் வருவதற்கான அபாயம் அதிகம்?</b></p><p>&nbsp;பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பில் ஈடுபடுபவர்கள்.
</p><p>அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்கள்.</p><p>
உடல் பருமன் அல்லது கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) நோய் உள்ளவர்கள்.
</p><p>ஊசிகள் அல்லது சிரிஞ்சுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்துபவர்கள்.
</p><p>சுகாதார வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளுக்குப்&nbsp; அடிக்கடி பயணம் செய்பவர்கள்.</p><p>
ஹெபடைடிஸ் தொற்று உள்ளவரின் இரத்தம் அல்லது உடல் திரவங்களுடன் பாதுகாப்பின்றி தொடர்பு கொள்பவர்கள். ஆகியோருக்கு&nbsp;ஹெபடைடிஸ் வருவதற்கான வாய்ப்பு சற்று அதிகம்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T13:04:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-transit-uthiram-nakshatra-who-get-bad-luck-1785221607"></link>
            <id>https://manithan.com/article/venus-transit-uthiram-nakshatra-who-get-bad-luck-1785221607</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக போற்றப்படும் கிரகம் சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு போன்றவற்றின் காரகனாக விளங்கும் சுக்கிரன், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக போற்றப்படும் கிரகம் சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு போன்றவற்றின் காரகனாக விளங்கும் சுக்கிரன், மனிதர்களின் வாழ்க்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார்.
</p><p>
ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், மாதந்தோறும் தனது ராசியை மாற்றுவதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e549fe3-0092-465e-ab3e-c3d17ead15cb/26-6a685c50ac3b5.webp' /></p><p> </p><p>தற்போது சூரியனின் ஆட்சி ராசியான சிம்மத்தில் பயணித்து வரும் சுக்கிரன், ஜூலை 29 ஆம் தேதி சூரியனுக்குரிய&nbsp; உத்திரம் நட்சத்திரத்திற்குள் நுழைய உள்ளார்.</p><p> ஜோதிடக் கணிப்புகளின்படி, சூரியனும் சுக்கிரனும் இயல்பில் பகைமை கொண்ட கிரகங்களாகக் கருதப்படுவதால், இந்த நட்சத்திர மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளில் வாழ்வில் அதிக சவால்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்தவகையில், சுக்கிரன் பெயர்ச்சி காலகட்டத்தில், ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a523731-e234-4cfc-96a9-6378c93179f1/26-6a685c515e70f.webp' /></p><p>

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் செலவுகள் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. </p><p>அதனால் பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்தினால் நிதி நெருக்கடியைத் தவிர்க்க முடியும். </p><p>அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மேலும், இந்தக் காலத்தில் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது பாதுகாப்பானதாக இருக்கும்.</p><h2>

மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb624315-ab42-4fa0-a206-fc7a4e563d2c/26-6a685c520f13b.webp' /></p><p>

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டிய காலம் இது. </p><p>குடும்பத்தினருடன் சிறிய விஷயங்களுக்குக் கூட மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உறவுகளை கவனமாக கையாள வேண்டும்.</p><p> பேசும் வார்த்தைகளில் நிதானம் கடைப்பிடிப்பது பல பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். புதிய முதலீடுகளை மேற்கொள்ள நினைத்தால், அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பெற்ற பிறகே முடிவு எடுப்பது நல்லது.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f95bdea-7141-4ef4-a7ea-42d5dfdb0164/26-6a685c52b484b.webp' /></p><h2>
</h2><p>
சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். குறிப்பாக அகங்காரம் அல்லது அதீத தன்னம்பிக்கை வேலைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.</p><p> பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்ல ஒத்துழைப்பை பேணுவது அவசியம். இல்லையெனில் தேவையற்ற சிரமங்கள் உருவாகலாம். </p><p>காதல் வாழ்க்கையிலும் தவறான புரிதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கவனம் செலுத்துவது நல்லது.
</p><h2>
விருச்சிகம்</h2><p>[55PFRN</p><p></p><p>

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். </p><p>குறிப்பாக கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பணப் பரிவர்த்தனைகளில் மிகுந்த கவனம் அவசியம். </p><p>முடிந்தவரை முக்கியமான பரிவர்த்தனைகளை ஒத்திவைப்பது நல்லது. வேலை தொடர்பாக தேவையில்லாத பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம். </p><p>அவை நிதி இழப்பையும் உடல் சோர்வையும் ஏற்படுத்தும் என்பதால், பயணங்களைத் திட்டமிட்டு மேற்கொள்வது சிறந்தது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T12:36:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட அதிசயக் கோவில்! எங்குள்ளது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/whtch-indian-temple-built-with-40-000-kg-of-ghee-1785039530"></link>
            <id>https://manithan.com/article/whtch-indian-temple-built-with-40-000-kg-of-ghee-1785039530</id>
            <summary type="text">பொதுவாகவே மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா என்பது அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த ஒரு தனித்துவமான நாடு. இங்கு இலட்சக்கணக்கான கோவில்கள் உள்ளன. அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா என்பது அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த ஒரு தனித்துவமான நாடு.</p><p> இங்கு இலட்சக்கணக்கான கோவில்கள் உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கான கோவில்கள் தங்களின் கட்டிடக்கலை, வரலாறு, மர்மங்கள் மற்றும் நம்ப முடியாத சிறப்புகளுக்கு பெயர்பெற்றவை என்றால் மிகையாகாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3376286b-e2b3-4fe5-84a4-67da367c0658/26-6a658f3c22600.webp' /></p><p></p><p>அவற்றில் சில கோவில்கள் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற கதைகளையும் அதிசயங்களையும் தன்னுள் சுமந்தபடி கம்பீரமாக நிற்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு கோவில் ராஜஸ்தானின் பாலைவன நகரமான பிகானேரில் அமைந்துள்ளது.</p><h2>நெய்யால்&nbsp; கட்டப்பட்டதா?&nbsp;</h2><p> தண்ணீர் பற்றாக்குறை நிலவிய காலத்தில், ஒரு துளி தண்ணீர்கூட பயன்படுத்தாமல், சுமார் 40,000 கிலோ தூய நெய்யைக் கொண்டு கட்டப்பட்ட 550 ஆண்டுகள் பழமையான கோவில் என்று சொன்னால் நம்புவீர்களா? </p><p>அதுவே 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பண்டசார் சமணக் கோவில். இந்தியாவின் சிறந்த கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்தக் கோவில் ராஜஸ்தானின் பிகானேரில் அமைந்துள்ள பண்டசார் சமணக் கோவில் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0648c16-f80e-45b1-9a8c-1da82a0815f7/26-6a658f3cc6470.webp' /></p><p> </p><p>கோவிலைக் கட்டுவதற்கான சுண்ணாம்பு கலவையைத் தயாரிக்கும்போது தண்ணீருக்குப் பதிலாக சுமார் 40,000 கிலோ தூய நெய் பயன்படுத்தப்பட்டதாகப் பல தலைமுறைகளாகக் கூறப்பட்டு வருகிறது. இதுவே இந்தக் கோவிலின் மிகப் பெரிய சிறப்பாகக் கருதப்படுகிறது.</p><p>ஆனால் இதைவிட வியப்பூட்டும் மற்றொரு நம்பிக்கையும் உள்ளது. கோடைக்காலத்தில் வெப்பநிலை மிகவும் அதிகரிக்கும் நாட்களில், இந்தக் கோவிலின் பழமையான கல் தரைப்பகுதிகளில் இருந்து நெய் போன்ற பசை வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fefb14e-1722-4212-bcbe-ff7e4a789239/26-6a658f3d741dd.webp' /></p><p></p><p>இதற்கான உறுதியான அறிவியல் ஆதாரம் இதுவரை இல்லை என்றாலும், இந்த நம்பிக்கை இன்று வரை பலரின் ஆச்சரியத்தைத் தூண்டி வருகிறது.

வரலாறு, பொறியியல், நாட்டுப்புறக் கதைகள் என எந்தக் கோணத்தில் பார்த்தாலும், இந்தக் கோவில் ராஜஸ்தானின் முக்கியமான கலாச்சார மற்றும் பாரம்பரியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T12:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்ஸ்டாகிராமில் ராகுல்காந்தியை பின்னுக்கு தள்ளிய முதலமைச்சர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijay-187-million-followers-on-instagram-1785232155"></link>
            <id>https://manithan.com/article/cm-vijay-187-million-followers-on-instagram-1785232155</id>
            <summary type="text">இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

தங்களது திறமைகளை வெளிப்படுத்த பலரும் வீடியோக்களை பதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.</p><p> 

தங்களது திறமைகளை வெளிப்படுத்த பலரும் வீடியோக்களை பதிவிட்டு வருவதால், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் வருமானமும் அதிகரித்து வருகிறது.
</p><p>
அதேபோல், இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களையும் அதிக அளவில் பின்தொடர்கின்றனர்.</p><p>

உலக அளவில் பிரதமர் மோடியை இன்ஸ்டாகிராமில் 10.2 கோடி பேர் பின்தொடர்கின்றனர். 

மத்திய அமைச்சர் அமித் ஷாவை 3.22 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a490a3af-3521-4acc-bd48-f1cd612a8e7a/26-6a687b1dd49eb.webp' /></p><p>எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை 1.47 கோடி பேர் பின்தொடர்ந்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது.
</p><p>
மஜ்லீஸ் தலைவர் ஓவைசியை 1.25 கோடி பேரும், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தியை தலா 40 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். </p><p>

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 23 லட்சம் பேர் பின்தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இன்ஸ்டாகிராம் தற்போது அரசியல் பிரசாரத்திற்கான முக்கிய தளமாக மாறியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T10:46:26+00:00</updated>
        </entry>
    </feed>
