<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-08T13:38:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜயின் வெற்றிப் பயணத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய 3 விடயங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actor-to-cm-vijay-success-secrets-1786193719"></link>
            <id>https://manithan.com/article/actor-to-cm-vijay-success-secrets-1786193719</id>
            <summary type="text">Vijay Success Secrets: வெற்றி என்பது ஒரே நாளில் கிடைத்துவிடும் விஷயம் அல்ல. அதன் பின்னால் பல ஆண்டுகளின் உழைப்பு, ஒழுக்கம், பொறுமை மற்றும் நேர்மறையான ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vijay Success Secrets: வெற்றி என்பது ஒரே நாளில் கிடைத்துவிடும் விஷயம் அல்ல. அதன் பின்னால் பல ஆண்டுகளின் உழைப்பு, ஒழுக்கம், பொறுமை மற்றும் நேர்மறையான சிந்தனை இருக்கும்.</p><p>

அந்தவகையில், ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனது திறமையாலும் விடாமுயற்ச்சியாலும் உச்ச நட்சத்திரமதக உயர்ந்தவர் தளபதி விஜய். எந்த அரசியல் பின்னணியியும் இல்லாமல் இன்று தமிநாட்டுக்கே முதல்வராகி சாதித்து காட்டியிருக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e303ff2-e90d-4704-82f7-c8299fc495a2/26-6a7729e2c0c2e.webp' /></p><p>அவருடைய சதனைகளையும், வளர்ச்சியையும் பார்க்கும்போது, அவருடைய வளர்ச்சிக்குப் பின்னால் பல முக்கியமான விஷயங்கள் இருப்பதை உணர முடியும். அதில் நம்முடைய வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருக்கும் 3 முக்கியமான விஷயங்களைப் பார்க்கலாம்.</p><p><iframe width="315" height="576" src="https://www.youtube.com/embed/jRmQnZcOlVQ" title="விஜய்யின் 3 வெற்றி ரகசியங்கள்! 🔥 Vijay Success Secrets Revealed! #Shorts" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p><b>
 ஒழுக்கம் மற்றும் நேர மேலாண்மை</b></p><p>ஒரு இலக்கை அடைய திறமை மட்டும் போதாது. அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிக்க ஒழுக்கம் மிகவும் அவசியம்.

நேரத்தை சரியாகப் பயன்படுத்துவது, செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு செய்வது, பொறுப்புகளைத் தவிர்க்காமல் இருப்பது போன்ற சிறிய பழக்கங்களே நாளடைவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

நமக்கு ஒரு நாளில் 24 மணி நேரம்தான். ஆனால் அந்த நேரத்தை யார் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் அவர்களின் வாழ்க்கையில் வித்தியாசத்தை உருவாக்குகிறது.</p><p><b>
கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி&nbsp;</b></p><p>திறமை இருந்தாலும் அதை வளர்க்க தொடர்ந்து உழைப்பு தேவை.வெற்றியைப் பெறும் மனிதர்களின் பின்னால், மற்றவர்கள் பார்க்காத பல மணி நேர உழைப்பு இருக்கும். தோல்விகள் வந்தாலும் மீண்டும் முயற்சி செய்வது, விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவது, தன்னுடைய திறமையை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வது தான் நீண்ட கால வெற்றிக்கு அடித்தளம்.

நாம் இன்று செய்யும் சிறிய முயற்சிகள் நாளை பெரிய பலன்களாக மாறலாம்.
</p><p><b>


நேர்மறை சிந்தனை
</b></p><p>வாழ்க்கையில் பிரச்சனைகள் வராமல் இருக்காது. ஆனால் அந்தப் பிரச்சனைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.“என்னால் முடியாது” என்று நினைப்பதற்குப் பதிலாக,முயற்சி செய்து பார்க்கலாம்என்று நினைக்கும் மனப்பான்மை வெற்றிக்கு இன்றியமையாதது. </p><p>

நேர்மறை சிந்தனை என்பது பிரச்சனைகள் இல்லை என்று நினைப்பது அல்ல. பிரச்சனைகள் இருந்தாலும், அவற்றை சமாளிக்க நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவதுதான். இதனை விஜய் தனது வாழ்க்கையில் சரியாக கடைப்பிடித்து வருகின்றார் என்பதை அவருடன் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்களும் பேட்டிகளில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்து.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T13:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 11ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: தொழில் நிலையில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-moon-creates-gajkesari-rajyog-who-get-luck-1786187770"></link>
            <id>https://manithan.com/article/jupiter-moon-creates-gajkesari-rajyog-who-get-luck-1786187770</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்,&amp;nbsp; மனதின் காரகனாகக் கருதப்படுபவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் மட்டுமே இருப்பதால், அடிக்கடி ராசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்,&nbsp; மனதின் காரகனாகக் கருதப்படுபவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் மட்டுமே இருப்பதால், அடிக்கடி ராசியை மாற்றி, மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப, அசுப யோகங்களை உருவாக்கி 12 ராசிகளின் வாழ்ககையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.</p><p>
அந்த வகையில், ஆகஸ்ட் 11ஆம் தேதி சந்திரன் கடக ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே கடகத்தில் குரு பகவான் பயணித்து வருவதால், சந்திரன்–குரு சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af9550ea-acba-4cbf-b41f-9c22a8f081e4/26-6a77150326af5.webp' /></p><p></p><p>அத்துடன் சூரியன் மற்றும் புதனும் கடகத்தில் இருப்பதால் சதுர்கிரக யோகம், புதாதித்ய ராஜயோகம், ஹன்ஸ் ராஜயோகம் உள்ளிட்ட பல சுபயோகங்களும் உருவாகின்றன.</p><p>குறிப்பாக இந்த கஜகேசரி ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும், இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கவுள்ளதாக கணிக்ப்பட்டுள்ளது. அப்படி அதிகளவில் சாதக பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d93f1fd-a791-49bb-b2ad-6ab46e1b44ff/26-6a771503cd8d9.webp' /></p><p>கடக ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டம் பல வகையிலும் சாதகமானதாக அமையப் போகிறது. கடக ராசியின் முதல் வீட்டில் குரு மற்றும் சந்திரன் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. </p><p>இந்த யோகம் உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதுடன், வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும்.

பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக கிடைக்க வாய்ப்புள்ளது. </p><p>குறிப்பாக பணிபுரிபவர்களுக்கு இந்தக் காலம் மிகவும் சிறப்பாக அமையும். அலுவலகத்தில் உங்கள் திறமை மற்றும் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலாம். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.</p><h2>கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/202c7ad7-8ee5-48fd-9138-f3b50472e265/26-6a7715047df54.webp' /></p><p></p><h2>
</h2><p>கன்னி ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் மிகவும் மங்களகரமானதாக அமையப் போகிறது. கன்னி ராசியின் 11-வது வீட்டில் குரு-சந்திர சேர்க்கை ஏற்படுவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. </p><p>இதன் மூலம் பொருளாதாரம், தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக நிதி நிலைமை வழக்கத்தைவிட சிறப்பாக இருக்கும். </p><p>நீண்ட காலமாக சிக்கித் தவித்த பணம் எதிர்பாராத நேரத்தில் கைக்கு வந்து சேரும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்து, மனதில் நிம்மதி ஏற்படும்.வியாபாரிகளுக்கும் இந்தக் காலம் லாபகரமானதாக இருக்கும்.</p><h2>மீனம்
</h2><p>மீன ராசிக்காரர்களுக்கும் இந்தக் காலகட்டம் மிகவும் சிறப்பான பலன்களை வழங்கக்கூடியதாக உள்ளது. மீன ராசியின் 5-வது வீட்டில் குரு மற்றும் சந்திரன் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. </p><p>இதன் காரணமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவு பல்வேறு விஷயங்களில் கிடைக்கக்கூடும்.

குறிப்பாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சூழல் உருவாகும். </p><p>ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கும் வேலையில் மாற்றம், புதிய பொறுப்பு அல்லது எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமை வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u>&nbsp;</b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T11:39:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sangeetha-next-move-after-withdraws-divorce-case-1786173933"></link>
            <id>https://manithan.com/article/sangeetha-next-move-after-withdraws-divorce-case-1786173933</id>
            <summary type="text">தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கடந்த சில காலமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கடந்த சில காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதன் தொடர்ச்சியாக, கணவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததார்.</p><p>
இந்த மனு தொடர்பான விசாரணையின்போது, இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு முதலில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bfb2816-0209-4a2c-9dd5-a9cfa931019b/26-6a76e37065a5f.webp' /></p><p> ஆனால், அந்த நாளில் விஜய்யும் சங்கீதாவும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், வழக்கு மீண்டும் ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜூன் 15ஆம் தேதியும் இருவரும் ஆஜராகாத நிலையில், வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. </p><p>இதனிடையே, நேற்று மதியம் 12.20 மணியளவில் இந்த விவாகரத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த முறை சங்கீதா முதல்முறையாக வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரானதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca7e7f1c-ace5-46b8-afd8-138739aca047/26-6a76e37115e42.webp' /></p><p></p><p> விசாரணையின்போது சுமார் 20 நிமிடங்கள் தனது தரப்பு வாதங்களை அவர் முன்வைத்தார். பின்னர், முக்கிய திருப்பமாக, தான் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.</p><p>

இதையடுத்து, விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா தாக்கல் செய்திருந்த மனு திரும்பப் பெறப்பட்ட நிலையில், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்ததாக தகவல் வெளியானது.</p><h2>விஜய்யுடன் மீண்டும் இணைவாரா?&nbsp;</h2><p>
விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையே சங்கீதா தற்போது வாபஸ் பெற்றிருப்பது, விஜய்–சங்கீதா குடும்ப வாழ்க்கை குறித்த பல்வேறு கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. </p><p>குறிப்பாக, இருவரும் மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளார்களா? அல்லது விவாகரத்து வழக்கை மட்டுமே வாபஸ் பெற்றுவிட்டு, தொடர்ந்து தனித்தனியாக வாழ்கிறார்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a1667fa-b085-4392-b08f-b70e377bb4e5/26-6a76e371c0a0d.webp' /></p><p>
</p><p>
மகன் ஜேசன் பேட்டி ஏற்படுத்திய எதிர்பார்ப்பு
இதற்கிடையே, அண்மையில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விஜய் மற்றும் சங்கீதா குறித்து அவர்களது மகன் ஜேசன் நல்லவிதமாக பேசியிருந்தார்.</p><p>இந்த நிலையில், தற்போது சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றிருப்பது, குடும்பத்தில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் தொடர்பாக புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>மற்றொரு புறம், சங்கீதா தற்போது லண்டனில் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், அவர் மீண்டும் சென்னைக்கு திரும்புவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2f1a69d-7e85-445d-b3a3-d93d1d9685ab/26-6a76e3727408c.webp' /></p><p></p><p>விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, குடும்பத்தைக் கவனிக்காதவர் என்ற ரீதியில் முன்வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களுக்கு சஞ்சயின் பேச்சும், இப்போது சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்ற முடிவும் முற்றுப்புள்ளி வைத்துள்ளன.&nbsp;</p><p>
</p><p>எனினும், சங்கீதாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அவரது தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஆகஸ்ட் 25 அன்று விஜய் - சங்கீதா தம்பதியரின் 27-வது திருமண நாள் வரவுள்ள நிலையில், அவர்கள் மீண்டும் இணைந்து சுமுகமாக வாழ வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe width="315" height="576" src="https://www.youtube.com/embed/08OlX1ET9To" title="விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது! 🛑 | Vijay Sangeetha Update" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p>]]></content>
            <updated>2026-08-08T09:48:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வமகள் சேமிப்பு திட்டம்.., மாதம் ரூ.3,000 சேமித்தால் எவ்வளவு கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sukanya-samriddhi-yojana-details-in-tamil-1786181847"></link>
            <id>https://manithan.com/article/sukanya-samriddhi-yojana-details-in-tamil-1786181847</id>
            <summary type="text">பெண் குழந்தைகளின் எதிர்கால நிதி தேவைகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் முக்கியமான சிறுசேமிப்புத் திட்டங்களில் ஒன்று செல்வமகள் சேமிப்புத் திட்டம்....</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண் குழந்தைகளின் எதிர்கால நிதி தேவைகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் முக்கியமான சிறுசேமிப்புத் திட்டங்களில் ஒன்று செல்வமகள் சேமிப்புத் திட்டம்.
</p><p>
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் முதலீடு செய்யலாம். </p><p>

ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். தற்போது இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.&nbsp;</p><p>10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f822183-2c58-4b58-a717-e062639a9237/26-6a76f9b430784.webp' /></p><p>கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை பணம் செலுத்த வேண்டும். ஆனால், கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகே கணக்கு முதிர்வடையும்.</p><p> 

15 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் செலுத்த வேண்டியதில்லை என்றாலும், கணக்கில் விதிகளின்படி வட்டி தொடர்ந்து சேரும்.
</p><p>
பெண் குழந்தையின் உயர்கல்வி போன்ற தேவைகளுக்காக இத்திட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட அளவு தொகையைப் பெறலாம்.
</p><p>
செல்வமகள் சேமிப்புத் திட்டம் EEE வகையைச் சேர்ந்த சேமிப்புத் திட்டமாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45b04bc7-daad-4749-a9a1-4488e28ca0ce/26-6a76f9b366126.webp' /></p><p>இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80Cன் கீழ், விதிகளுக்கு உட்பட்டு வரிச்சலுகை கிடைக்கும். </p><p>

மேலும், கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு உள்ளது.
</p><p>
இத்திட்டத்தில், மாதம் ரூ.3,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் மொத்தம் ரூ.5.40 லட்சம் முதலீடு செய்யப்படும்.
</p><p>
இந்தத் தொகை 21 ஆண்டுகளில் சுமார் ரூ.17.23 லட்சமாக மாறும். இதில் சுமார் ரூ.11.83 லட்சம் வட்டியாக கிடைக்கும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T09:46:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் விலையில் மீண்டும் அதிரடி ஏற்றம் - சவரனுக்கு ரூ.1,720 உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/august-8th-2026-gold-and-silver-price-in-chennai-1786177341"></link>
            <id>https://manithan.com/article/august-8th-2026-gold-and-silver-price-in-chennai-1786177341</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்க விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

நேற்று, ஆகஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்க விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p>

நேற்று, ஆகஸ்ட் 7-ஆம் தேதி, தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,750-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e79cf7ec-cc18-443a-8732-5630ee88913f/26-6a76ea7408a1c.webp' /></p><p></p><h2>இன்றைய நிலவரம்&nbsp;</h2><p>

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 8) 22 காரட் தங்கத்தின் விலை ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.215 அதிகரித்து ரூ.13,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,720 உயர்ந்து ரூ.1,11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம், தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நகை வாங்கத் திட்டமிடுபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5342539-7295-444b-a096-f8f0be690487/26-6a76ea74b0a29.webp' /></p><p> குறிப்பாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1.11 லட்சத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

18 காரட் தங்கம் விலை
18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது.</p><p> ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.11,780-க்கும், ஒரு சவரன் ரூ.94,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 18 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.65 உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரு சவரன் விலை ரூ.520 அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81cc747c-e5a3-4d87-8648-ae901bd66765/26-6a76ea7562a5b.webp' /></p><p></p><p>

வெள்ளி விலையில் மாற்றமில்லை
மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T08:38:25+00:00</updated>
        </entry>
    </feed>
