<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-21T11:27:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசியினரின் கோபம் மிகவும் ஆபத்தானதாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-who-cant-control-their-anger-1784620057"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-who-cant-control-their-anger-1784620057</id>
            <summary type="text">மனிதனின் மிகப்பெரிய பகைவன் அவர்களின் சொந்த கோபமே என்று அறிஞர்களும், பழமையான நூல்களும் குறிப்பிடுகின்றன. ஒரு கண நேரத்தில் வெளிப்படும் கோபம் கூட ஒருவரின...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனிதனின் மிகப்பெரிய பகைவன் அவர்களின் சொந்த கோபமே என்று அறிஞர்களும், பழமையான நூல்களும் குறிப்பிடுகின்றன. ஒரு கண நேரத்தில் வெளிப்படும் கோபம் கூட ஒருவரின் வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. </p><p>கோபம் மிகப்பெரிய சாதனைகளையும் உறவுகளையும் அழிக்கும் சக்தியாக மாறக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் நெருப்பைப் போலவே கட்டுப்பாடற்ற கோபமும் அழிவை ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cbfeeae-c14e-4d70-9129-e7575f6e036e/26-6a5f38d406d45.webp' /></p><p>ஜோதிட நம்பிக்கைகளின்படி, கோபம் என்பது நெருப்பைப் போன்ற தீவிரமான உணர்வாக கருதப்படுகிறது. இது செவ்வாய் மற்றும் சூரியன் போன்ற கிரகங்களின் தாக்கத்தால் உருவாகும் ஒரு குணமாக சிலர் நம்புகின்றனர்.</p><p>அந்தவகையில் மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே கோபம் வரும் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களின் கோபம் கட்டுப்பாடற்றதாகவும் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். அப்படி மிருகத்தையே மிஞ்சும் அளவுக்கு மூர்க்கத்தனமான கோபப்படும் டாப் 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01de6e3c-5480-4735-83ce-f9c29e31154e/26-6a5f38d4ad093.webp' /></p><p></p><h2>
</h2><p>சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையும் கம்பீரமும் கொண்டவர்கள். ஆனால் அவர்களின் ஈகோ பாதிக்கப்படும்போது, சிறிய விஷயங்கள்கூட பெரிய மோதலாக மாறும். கட்டுப்படுத்தப்படாத கோபம் அவர்களுக்கும், அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.&nbsp;</p><p>இவர்கள் இயல்பிலேயே தங்களுக்கு மரியாதையும் அதிக முக்கியத்துமும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காத போது இவர்களின் கோபம் மிகவும் மூர்க்கத்தனமாக இருக்கும்.</p><h2> கடகம்
</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a764e1bb-902e-4471-979d-822411530fb0/26-6a5f395a0a0b4.webp' /></p><p>சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்கள் அன்பும் உணர்ச்சியும் நிறைந்தவர்கள். ஆனால் தங்கள் மனக்கசப்புகளை வெளிப்படுத்தாமல் அடக்கி வைத்தால், ஒருகட்டத்தில் அது தீவிரமான கோபமாக வெடிக்கலாம்.&nbsp;</p><p>இந்த ராசியினர் சாதாரணமாக மிகவும் பாசமும் இரக்கமும் நிறைந்தவர்க இருப்பார்கள்.ஆனால் இவர்களுக்கு நம்பிக்கை துரோகம் நடப்பதை அறிந்தால் இவர்களின் கோபம் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானதாக இருக்கும்.&nbsp;</p><h2> விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8e9ad50-e7c0-4c13-af37-d11f9858b176/26-6a5f38d55c3a3.webp' /></p><p></p><h2>
</h2><p>செவ்வாயின் தாக்கம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமான உணர்வுகளும் உறுதியான குணமும் கொண்டவர்கள். </p><p>துரோகம் அல்லது மனவேதனையை சந்திக்கும் போது, அவர்களின் கோபம் ஆழமானதாகவும் தீவிரமானதாகவும் வெளிப்படலாம்.</p>]]></content>
            <updated>2026-07-21T10:43:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்ன ஆச்சு நடிகர் சல்மான் கானுக்கு? ஸ்டைலாக இருந்தவர் வயதானவராக மாறியுள்ளதால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actor-salman-khans-new-look-fans-very-shock-1784625102"></link>
            <id>https://manithan.com/article/actor-salman-khans-new-look-fans-very-shock-1784625102</id>
            <summary type="text">பாலிவுட் நடிகரான சல்மான் கான் தற்போதைய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் சல்மான் கான்பாலிவுட் சினிமாவில் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலிவுட் நடிகரான சல்மான் கான் தற்போதைய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நடிகர் சல்மான் கான்</h2><p>பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சல்மான் கான், தனது உடம்பை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்.</p><p>இந்நிலையில் தற்போது சல்மானின் காணொளி ஒன்று வெளியாகி, இது சல்மான் கான் தானா? என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44c8c5a-a9cd-4a02-9ddb-e7eff18fed7d/26-6a5f42b09ae39.webp' /></p><p>மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்ட சல்மான, மிகவும் வயதான தோற்றத்துடன், சோர்வாகவும் வந்துள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</p><p>தற்போது இவருக்கு 60 வயதாகும் நிலையில், ஜிம் சென்று தனது உடலை இளமையாகவே வைத்திருந்தார். இந்நிலையில் சல்மானின் இந்த தோற்றத்தினை பார்த்த ரசிகர்கள் புதிய படத்திற்கு மேக் ஓவராக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>ஆனால் மற்றும் சிலர் வயதானதால் தற்போது முகத்தில் தெரிய ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் சல்மான் கானின் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.</p><p>நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களிடம் வழக்கம் போன்று நகைச்சுவையாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள்.. அந்த ஒரு கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்... நான் பதில் சொல்ல மாட்டேன் என்று கூறி அங்கிருந்தவர்களையும் சிரிக்க வைத்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">What happened to Salman Khan?? At first I thought it&#39;s not him but saw shera too there <br><br>He is ageing like Dharmendra. <a href="https://t.co/u52EZHx4KX">pic.twitter.com/u52EZHx4KX</a></p>&mdash; Gagan Choudhary (@trigguuuu) <a href="https://x.com/trigguuuu/status/2078655720351047750?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T10:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Today Gold Rate: தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை... இன்று சவரன் எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gold-rate-july-21-2026-india-and-srilanka-1784622006"></link>
            <id>https://manithan.com/article/gold-rate-july-21-2026-india-and-srilanka-1784622006</id>
            <summary type="text">ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</p><h2>இன்றைய தங்கம் விலை
</h2><p>ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ 13,150 ஆகவும் சவரன், ரூ.1,05,200 ஆகவும் இருந்து வந்தது.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, 13,220 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 5600 அதிகரித்து, 1,05,760 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
</p><p>இதே போன்று வெள்ளியின் விலையில் சற்று அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ. 240.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,40,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81c784f7-82a2-441c-8ede-67d0f7d969e0/26-6a5f2bb8352ba.webp' /></p><p>
</p><h2>
இலங்கையில் தங்கம் விலை
</h2><p>இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,66,240 அதுவே கிராமிற்கு ரூ.45,780க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,35,760க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 41,970க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு&nbsp;597.39 LKR என்றும் ஒரு அவுன்ஸ 18,580.85 LKR என்று விற்பனை ஆகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dac8fe1-8a17-4076-8a26-b01366fc635a/26-6a5f2bb8ddb45.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T08:20:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை காக்கும் காளான் பட்டாணி மசாலா ! எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tasty-and-healthy-mushroom-pattani-masala-recipe-1784615662"></link>
            <id>https://manithan.com/article/tasty-and-healthy-mushroom-pattani-masala-recipe-1784615662</id>
            <summary type="text">அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களும் ரசிக்கும் சைவ உணவுகளில் காளான் தனக்கென ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இறைச்சியைப் போன்ற தனித்துவமான சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களும் ரசிக்கும் சைவ உணவுகளில் காளான் தனக்கென ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இறைச்சியைப் போன்ற தனித்துவமான சுவை மற்றும் மென்மையான அமைப்பைக் கொண்ட காளான், பலரின் விருப்பமான உணவுப் பொருளாக காணப்படுகின்றது..
</p><p>
சுவை மட்டுமல்லாமல், காளானில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக ரிபோஃப்ளேவின் (Vitamin B2), நியாசின் (Vitamin B3), பாந்தோத்தேனிக் அமிலம் (Vitamin B5), பயோட்டின் (Vitamin B7) போன்ற முக்கியமான பி-வகை வைட்டமின்கள் இதில் காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d3cc99c-97d1-4759-b556-6f7fef4d4843/26-6a5f1d4acb1fd.webp' /></p><p>இந்த வைட்டமின்கள் உடலில் ஆற்றல் உற்பத்தி மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கு உதவுவதுடன், நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாடு மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.</p><p>
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட காளானுடன், புரதச்சத்து நிறைந்த பட்டாணியையும் சேர்த்து சுவையும் சத்தும் நிறைந்த அற்புதமான காளான் பட்டாணி மசாலா எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.அதனை சாதம், ரொட்டி, சப்பாத்தி, நாண் என இந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டாலும் சுவை பக்காவாக இருக்கும்.</p><p></p><h2>தேவையான பொருட்கள்</h2><p>½ கப் வேகவைத்த பச்சை பட்டாணி</p><p>

200 கிராம் காளான்</p><p> 2 ஸ்பூன் நெய்</p><p>
½ ஸ்பூன் சீரகம்</p><p>
1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்</p><p>
1 பச்சை மிளகாய் (கீறியது)
</p><p>1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது</p><p>
½ கப் அரைத்த தக்காளி
</p><p>தேவையான அளவு உப்பு</p><p>1 ஸ்பூன் கரம் மசாலா</p><p>
¼ ஸ்பூன் மஞ்சள் தூள்</p><p>
1 ஸ்பூன் மல்லித் தூள்</p><p>
1 ஸ்பூன் மிளகாய் தூள்</p><p>
2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dacc5f07-021e-4892-af08-f468b9d3cfe4/26-6a5f1d4b7b141.webp' /></p><p>
</p><h2>செய்முறை</h2><p> முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நன்றாகக் கழுவி நறுக்கி வைத்துக்கொள்ளவும். தக்காளியை அரைத்து விழுதாக தயார் செய்து கொள்ள வேண்டும்.</p><p>
காளான்களையும் சுத்தம் செய்து தனியாக வைத்துக்கொள்ளவும். மசாலாவில் சேர்க்கும் போது அவற்றை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளலாம்.</p><p>

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் சீரகம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4138167-5046-442b-af97-cd4233c908d3/26-6a5f1d4c2c7f9.webp' /></p><p></p><p>

அடுத்து இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து, அதன் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். பின்னர் அரைத்த தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.</p><p>இப்போது கரம் மசாலா, மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை நீங்கி நல்ல மணம் வரும் வரை வதக்கவும்.</p><p>

அதன்பின் வேகவைத்த பட்டாணி மற்றும் நறுக்கிய காளானை சேர்த்து, மிதமான தீயில் 4 முதல் 5 நிமிடங்கள் வதக்கவும். மூடி வைத்து, காளான் மென்மையாகும் வரை குறைந்த தீயில் வேகவிடவும்.</p><p> இடையிடையே கிளறி விடவும்.

காளான் வேகும்போது அதிலிருந்து தண்ணீர் வெளியேறும் என்பதால் அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. </p><p>காளான் நன்றாக வெந்ததும் மூடியைத் திறந்து, அதிக தீயில் ஒரு நிமிடம் கிளறி வதக்கவும்.

கிரேவி தேவையான அளவு கெட்டியானதும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கிளறிவிட்டு இறக்கினால், அவ்வளவு தான் சுவையான காளான் பட்டாணி மசாலா தயார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p> </p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T07:18:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகளை பெற்றெடுத்த வெளிநாட்டு பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/australia-woman-gives-birth-to-quadruplet-girls-1784615325"></link>
            <id>https://manithan.com/article/australia-woman-gives-birth-to-quadruplet-girls-1784615325</id>
            <summary type="text">&amp;nbsp;ஆஸ்திரேலியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஒரே இரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆஸ்திரேலியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
</p><p>
குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஒரே இரவில் தங்கள் குடும்பத்தின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகவும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.</p><p>

ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது இவர்களது குடும்பத்தினரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது, இதனால் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் இணையவழி நிதி திரட்டும் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
</p><p>
அதாவது அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பாக அழைத்து சென்றுவர வாகனம் ஒன்று தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ce9f589-2592-487d-9b6b-3076b2a41bb5/26-6a5f1276db9e2.webp' /><br></p><p>
</p><p>
10 இருக்கைகள் கொண்டு வாகனம் வாங்குவதற்காக பிரசாரத்தை தொடங்கியுள்ளனர், நான்கு பெண் குழந்தைகள் பிறந்தது வரப்பிரசாதம் என்ற போதிலும் நிதிச்சுமையும் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.
</p><p>
அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதை தாண்டி போக்குவரத்து வசதியும் மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
</p><p>
பிபிசி செய்தியின் படி, பச்சிளம் குழந்தைகளை பராமரிக்க நண்பர்களும் ஆதரவாளர்களும் துணையாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
</p><p>
சமூகவலைத்தளங்களில் பலரும் பெற்றோருக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.<br></p>]]></content>
            <updated>2026-07-21T06:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் காலையில் ஒரு கப் சீரக தண்ணீர்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/health-benefits-of-drinking-cumin-water-every-day-1784613523"></link>
            <id>https://manithan.com/article/health-benefits-of-drinking-cumin-water-every-day-1784613523</id>
            <summary type="text">மருத்துவ மூலிகையாநா சீரகம் வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. 

சீரகத்தில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருத்துவ மூலிகையாநா சீரகம் வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. </p><p>

சீரகத்தில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளன.
</p><p>
சீரக தண்ணீர் ஒரு சிறந்த இயற்கை பானமாகும். 

தினமும் காலையில் சீரக தண்ணீரை குடிப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும்.
</p><p>
அந்தவகையில், தினமும் காலையில் ஒரு கப் சீரக தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caf154af-c5e9-445f-bf25-0cd2cf711432/26-6a5f0c2242927.webp' /></p><h2>என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?</h2><p><b>நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்-</b> சீரகத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.</p><p><b>
செரிமானத்தை மேம்படுத்தும்-&nbsp;</b> சீரகத் தண்ணீர் செரிமானத்தை மேம்படுத்த உதவும். அஜீரணம், வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவும்.<b>&nbsp;</b></p><p><b>அழற்சியைக் குறைக்க உதவும்-&nbsp; </b>சீரகத்தில் உள்ள சில இயற்கை சேர்மங்கள் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவும்.</p><p> வயிற்று வலி மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகளைக் குறைக்கவும் இது உதவும்.
</p><p><b>
மாதவிடாய் சுழற்சிக்கு உதவும்-</b>

சீரகத் தண்ணீர் மாதவிடாய் சுழற்சியை சீராக வைத்திருக்க உதவும். </p><p><b>

சரும ஆரோக்கியத்திற்கு நல்லது- </b>சீரகத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்திற்கு உதவும். இது சருமத்திற்கு இயற்கையான பொலிவை அளிக்கவும், முன்கூட்டிய வயதான தோற்றத்தைத் தடுக்கவும் உதவும். </p><p><b>

முகப்பருவை குறைக்க உதவும்-&nbsp;</b> சீரகத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும். இதனால் முகப்பரு பிரச்சினை குறைய வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69ab00ac-bc0d-4ce8-9d81-b53df845e855/26-6a5f0c6206ced.webp' /></p><p>
</p><p><b>
முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்- </b>சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு உதவும். மேலும், சீரகத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலை ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடும்.
</p><p><b>
இதய ஆரோக்கியத்திற்கு உதவும்-&nbsp;</b>
சீரகத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். மேலும், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
</p><p><b>
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்-&nbsp;</b>
சீரகத் தண்ணீர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். ஆனால், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் சீரகத்தை அதிகமாக உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
</p><p><b>
இரத்த சோகையைத் தடுக்க உதவும்-</b>&nbsp; சீரகத்தில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உருவாக்கத்திற்கு உதவுகிறது. இதனால், இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையை கட்டுப்படுத்துவதில் சீரகம் உதவக்கூடும்.</p>]]></content>
            <updated>2026-07-21T06:18:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் சதீஷின் தந்தை காலமானார்... சோகத்தில் திரையுலகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/comedian-sathishs-father-passed-away-1784610845"></link>
            <id>https://manithan.com/article/comedian-sathishs-father-passed-away-1784610845</id>
            <summary type="text">தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சதீஷ். தனது இயல்பான நடிப்பு, துல்லியமான டைமிங் காமெடி மற்றும் தனித்துவமான வசன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சதீஷ். தனது இயல்பான நடிப்பு, துல்லியமான டைமிங் காமெடி மற்றும் தனித்துவமான வசன உச்சரிப்பின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். </p><p>பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், தற்போது நகைச்சுவை கதாபாத்திரங்களைத் தாண்டி கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fb9bca9-5e68-4033-89a0-29d0f8940c36/26-6a5f03a6c8bdb.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">சதீஷின் தந்தை காலமானார்&nbsp;&nbsp;</span></h2><p>

இந்த நிலையில், நடிகர் சதீஷின் தந்தை காலமானார் என்ற சோகச் செய்தி வெளியாகியுள்ளது. அவரது மறைவு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0e129bd-2d06-4897-a38d-e5468b893db0/26-6a5f03a622a3b.webp' /></p><p>
தற்போது, சதீஷின் தந்தையின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த தகவல் அறிந்த உறவினர்கள், நண்பர்கள், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று&nbsp; அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T05:29:20+00:00</updated>
        </entry>
    </feed>
