<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-08T09:32:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் விலையில் மீண்டும் அதிரடி ஏற்றம் - சவரனுக்கு ரூ.1,720 உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/august-8th-2026-gold-and-silver-price-in-chennai-1786177341"></link>
            <id>https://manithan.com/article/august-8th-2026-gold-and-silver-price-in-chennai-1786177341</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்க விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

நேற்று, ஆகஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்க விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p>

நேற்று, ஆகஸ்ட் 7-ஆம் தேதி, தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,750-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e79cf7ec-cc18-443a-8732-5630ee88913f/26-6a76ea7408a1c.webp' /></p><p></p><h2>இன்றைய நிலவரம்&nbsp;</h2><p>

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 8) 22 காரட் தங்கத்தின் விலை ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.215 அதிகரித்து ரூ.13,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,720 உயர்ந்து ரூ.1,11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம், தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நகை வாங்கத் திட்டமிடுபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5342539-7295-444b-a096-f8f0be690487/26-6a76ea74b0a29.webp' /></p><p> குறிப்பாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1.11 லட்சத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

18 காரட் தங்கம் விலை
18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது.</p><p> ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.11,780-க்கும், ஒரு சவரன் ரூ.94,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 18 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.65 உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரு சவரன் விலை ரூ.520 அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81cc747c-e5a3-4d87-8648-ae901bd66765/26-6a76ea7562a5b.webp' /></p><p></p><p>

வெள்ளி விலையில் மாற்றமில்லை
மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T08:38:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sangeetha-next-move-after-withdraws-divorce-case-1786173933"></link>
            <id>https://manithan.com/article/sangeetha-next-move-after-withdraws-divorce-case-1786173933</id>
            <summary type="text">தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கடந்த சில காலமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கடந்த சில காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதன் தொடர்ச்சியாக, கணவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததார்.</p><p>
இந்த மனு தொடர்பான விசாரணையின்போது, இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு முதலில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bfb2816-0209-4a2c-9dd5-a9cfa931019b/26-6a76e37065a5f.webp' /></p><p> ஆனால், அந்த நாளில் விஜய்யும் சங்கீதாவும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், வழக்கு மீண்டும் ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜூன் 15ஆம் தேதியும் இருவரும் ஆஜராகாத நிலையில், வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. </p><p>இதனிடையே, நேற்று மதியம் 12.20 மணியளவில் இந்த விவாகரத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த முறை சங்கீதா முதல்முறையாக வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரானதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca7e7f1c-ace5-46b8-afd8-138739aca047/26-6a76e37115e42.webp' /></p><p></p><p> விசாரணையின்போது சுமார் 20 நிமிடங்கள் தனது தரப்பு வாதங்களை அவர் முன்வைத்தார். பின்னர், முக்கிய திருப்பமாக, தான் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.</p><p>

இதையடுத்து, விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா தாக்கல் செய்திருந்த மனு திரும்பப் பெறப்பட்ட நிலையில், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்ததாக தகவல் வெளியானது.</p><h2>விஜய்யுடன் மீண்டும் இணைவாரா?&nbsp;</h2><p>
விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையே சங்கீதா தற்போது வாபஸ் பெற்றிருப்பது, விஜய்–சங்கீதா குடும்ப வாழ்க்கை குறித்த பல்வேறு கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. </p><p>குறிப்பாக, இருவரும் மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளார்களா? அல்லது விவாகரத்து வழக்கை மட்டுமே வாபஸ் பெற்றுவிட்டு, தொடர்ந்து தனித்தனியாக வாழ்கிறார்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a1667fa-b085-4392-b08f-b70e377bb4e5/26-6a76e371c0a0d.webp' /></p><p>
</p><p>
மகன் ஜேசன் பேட்டி ஏற்படுத்திய எதிர்பார்ப்பு
இதற்கிடையே, அண்மையில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விஜய் மற்றும் சங்கீதா குறித்து அவர்களது மகன் ஜேசன் நல்லவிதமாக பேசியிருந்தார்.</p><p>இந்த நிலையில், தற்போது சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றிருப்பது, குடும்பத்தில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் தொடர்பாக புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>மற்றொரு புறம், சங்கீதா தற்போது லண்டனில் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், அவர் மீண்டும் சென்னைக்கு திரும்புவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2f1a69d-7e85-445d-b3a3-d93d1d9685ab/26-6a76e3727408c.webp' /></p><p></p><p>விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, குடும்பத்தைக் கவனிக்காதவர் என்ற ரீதியில் முன்வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களுக்கு சஞ்சயின் பேச்சும், இப்போது சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்ற முடிவும் முற்றுப்புள்ளி வைத்துள்ளன.&nbsp;</p><p>
</p><p>எனினும், சங்கீதாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அவரது தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஆகஸ்ட் 25 அன்று விஜய் - சங்கீதா தம்பதியரின் 27-வது திருமண நாள் வரவுள்ள நிலையில், அவர்கள் மீண்டும் இணைந்து சுமுகமாக வாழ வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T08:07:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actor-mohan-sharma-old-age-home-drama-revealed-1786167789"></link>
            <id>https://manithan.com/article/actor-mohan-sharma-old-age-home-drama-revealed-1786167789</id>
            <summary type="text">kutty padmini slams actor mohan-sharma : 70, 80-களில் மலையாளத் திரையுலகில் வெளியான பிரபலமான ‘சட்டகாரி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் 170 க்...</summary>
            <content type="html"><![CDATA[<p>kutty padmini slams actor mohan-sharma : 70, 80-களில் மலையாளத் திரையுலகில் வெளியான பிரபலமான ‘சட்டகாரி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் 170 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்&nbsp;மூத்த நடிகர் மோகன் சர்மா.</p><p>மேலும் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து, இயக்கி, ஒரு காலத்தில் புகழிலும் பணத்திலும் உச்சத்தில் இருந்த மோகன் சர்மா, சமீபத்தில் அளித்த பேட்டி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>

“ஒரு காலத்தில் போயஸ் கார்டனில் வாழ்ந்த எனது வாழ்க்கை இன்று இப்படி ஆகிவிட்டது. உடல்நிலை சரியில்லாமல், மாத்திரை வாங்கக்கூட பணமில்லாத நிலையில் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறேன்” என்று அவர் கண்ணீருடன் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் அனுதாபத்தை பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a48a7585-adb8-417f-a3d7-490d27763b2b/26-6a76cf724663a.webp' /></p><h2>உண்மையை உடைத்த&nbsp; குட்டி பத்மினி&nbsp;</h2><p>
இந்தப் பேட்டிக்கு பதிலளிக்கும் விதமாக, நடிகை குட்டி பத்மினி வெளியிட்ட வீடியோவில் பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
</p><p><b>குட்டி பத்மினி குறிப்பிடுகையில்,&nbsp;</b></p><p>மோகன் சர்மா தனது பேட்டியில், தென்னிந்திய பிலிம் சேம்பர் தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், தனது தகவலின்படி, கடந்த ஆண்டுதான் பிலிம் சேம்பர் சார்பில் அவருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டதாக குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f56873-16c0-45d6-9a7e-b02b948cf373/26-6a76cf72eb08d.webp' /></p><p>
“பணத்தையும் பெற்றுக்கொண்டு, யாருமே எனக்கு உதவவில்லை என்று எப்படி சொல்ல முடிகிறது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

“போயஸ் கார்டன் வீடு யாருடைய பணத்தில் வாங்கப்பட்டது?”
மோகன் சர்மா தனது பழைய வாழ்க்கையை நினைவுகூரும்போது குறிப்பிட்டதாகக் கூறப்படும் போயஸ் கார்டன் வீடு குறித்தும் குட்டி பத்மினி பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.</p><p>
நடிகை லஷ்மியை மோகன் சர்மா திருமணம் செய்து வாழ்ந்த காலகட்டத்தில், அந்த வீட்டை வாங்குவதற்காக லஷ்மி தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அந்த வீடு தனது பெயரில் வாங்கப்பட்டதாகவும் குட்டி பத்மினி குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25cb7d1b-d1c4-497e-9ef4-839ebde76e71/26-6a76cf739d3a7.webp' /></p><p></p><p>
“வெயில், மழை பாராமல் உழைத்து சம்பாதித்த பணத்தை லஷ்மி கொடுத்தார். ஆனால் அந்தப் பணத்தில் வாங்கப்பட்ட வீட்டை தனது பெயரில் பதிவு செய்துகொண்டார்” என குட்டிபத்மினி தெரிவித்துள்ளார்.</p><h2>
மூன்று திருமணங்கள்</h2><p>மேலும், இந்த விஷயம் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் லஷ்மிக்கு தெரியவந்ததாகவும் குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், லஷ்மி இதுவரை மோகன் சர்மாவைப் பற்றி பகிரங்கமாக தவறாகப் பேசியதில்லை என்றும், அதே நேரத்தில் மோகன் சர்மா தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கு லஷ்மியே காரணம் என பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
லஷ்மியைப் பிரிந்த பின்னர் மோகன் சர்மா இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து பெற்றதாகவும், அதன் பிறகு சாந்தி என்ற பரதநாட்டியக் கலைஞரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டதாகவும் குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.
</p><p>
மூன்றாவது மனைவியான சாந்தியிடமும் குடும்ப வன்முறை மற்றும் பணம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாக சாந்தியும் அவரைப் பிரிந்து சென்றதாக அவர் கூறுகிறார்.

இவ்வாறு மூன்று பெண்களின் வாழ்க்கையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக மோகன் சர்மா மீது குட்டி பத்மினி பல்வேறு&nbsp; குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/922ff9b3-4eb4-4560-ba30-a04ad49d5ea0/26-6a76cf745220f.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">இது முற்றிலும் பொய்...&nbsp;</span></h2><p>
</p><p>“சாப்பாட்டுக்கே வழியில்லை, மருந்து வாங்கக்கூட பணமில்லை என்று சொல்கிறார். ஆனால் அவர் அணிந்திருக்கும் செருப்பின் விலை ரூ.6,000” என்று கூறியுள்ள குட்டி பத்மினி, “இது எப்படி சாத்தியம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

தொடர்ந்து, மோகன் சர்மா கூறியதாக வெளியான தகவல்களை “நாடகம்” மற்றும் “அண்டப் புளுகு” என கடுமையாக விமர்சித்த அவர், மூன்று பெண்களின் வாழ்க்கையைப் பாதித்ததாகக் கூறப்படும் செயல்களுக்கு ஒருநாள் அவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61dc8c2e-3bd0-4aa7-9519-bd4ec538084c/26-6a76cf750689d.webp' /></p><p></p><p> </p><p>மேலும் தமிஜழக முதலமைச்சர் விஜயிடம் உதவி கேட்டடிருப்பதும் மக்களின் கவனத்தை ஈர்க்கத்தான், அனதாபத்தை பெறத்தான் விஜய் விதவி செய்தாலும் காலம் கடந்தபின் அவரையும் குறை கூறுார் என&nbsp;மோகன் சர்மா குறித்து பல குற்றச்சாட்டுககளை முன்வைத்து பேசியுள்ளார் .குட்டி பத்மினியின்&nbsp; இந்த பேட்டி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T07:07:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[pattani masala : உடல் எடை குறைக்க உதவும் கேரளா ஸ்டைல் பச்சை பட்டாணி கிரேவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/heathy-and-tasty-kerala-style-pattani-masala-1786163104"></link>
            <id>https://manithan.com/article/heathy-and-tasty-kerala-style-pattani-masala-1786163104</id>
            <summary type="text">pattani masala heath benefits : பொதுவாக எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பச்சை பட்டாணியில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருந்தாலும், கலோரிகள் குறைவாகவே உள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>pattani masala heath benefits : பொதுவாக எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பச்சை பட்டாணியில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருந்தாலும், கலோரிகள் குறைவாகவே உள்ளன. மேலும், நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் ஏ, கே, மாங்கனீஸ், இரும்புச்சத்து, போலேட், தயமின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.</p><p>

இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், மலச்சிக்கலையும் குறைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a2bf60f-4e5a-48e1-b7b7-caee4b06662b/26-6a76bd43435d3.webp' /></p><p> </p><p>குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கும் இது சிறந்த உணவாகும்.
</p><p>
மேலும், பச்சை பட்டாணியில் உள்ள நியாசின் மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கவும் உதவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9f12d22-8cf3-4d83-99f1-2101319abe55/26-6a76bd43e8826.webp' /></p><p>
</p><p>
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பச்சை பட்டாணியை வைத்து, அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான கேரளா ஸ்டைல் பட்டாணி கிரேவி செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><h2>தேவையான பொருட்கள்</h2><p>2 கப் பச்சை பட்டாணி</p><p>
2 பெரிய வெங்காயம், நறுக்கியது</p><p>
2 தக்காளி, நறுக்கியது</p><p>
2 பல் பூண்டு
</p><p>1 இன்ச் இஞ்சி
</p><p>2 ஸ்பூன் மல்லி விதைகள்</p><p>
5 வர மிளகாய்</p><p>
1 கப் தேங்காய்ப்பால்</p><p>
3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
</p><p>தேவையான அளவு உப்பு
</p><p>தேவையான அளவு தண்ணீர்
</p><p>சிறிதளவு கொத்தமல்லி இலை, நறுக்கியது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e77d004-66ca-4c2d-ad50-0e99556f31af/26-6a76bd4499d8d.webp' /></p><p></p><p>
</p><h2>செய்முறை</h2><p>
முதலில் பட்டாணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் நன்றாக வேகவைத்து வைத்துக் கொள்ளவும்.
</p><p>பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் மல்லி விதைகள் மற்றும் வர மிளகாயைச் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்கவும். பின்னர் அதை ஆறவைத்து, பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.</p><p>

அதே பாத்திரத்தில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57e8b93f-3e45-4ff9-898e-40551384d853/26-6a76bd454b18b.webp' /></p><p>பிறகு நறுக்கிய தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து, தக்காளி நன்றாக குழையும் வரை வதக்கவும்.இந்தக் கலவையை ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.</p><p>
இப்போது அதே கடாயில் மீதமுள்ள 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி, அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்க்கவும்.மசாலா நன்றாக வதங்கியதும், முன்பு அரைத்து வைத்துள்ள மல்லி விதை–வர மிளகாய் பொடியைச் சேர்க்கவும்.</p><p>

மசாலாவிலிருந்து நல்ல மணம் வரும் வரை சுமார் 5 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.

பின்னர் வேகவைத்த பட்டாணி, தேவையான அளவு உப்பு மற்றும் சுமார் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து, பட்டாணி மென்மையாகும் வரை கொதிக்கவிடவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d17e73ec-8d10-4f3a-bbae-2c2ff53614b6/26-6a76bd45ef2d0.webp' /></p><p></p><p>
பட்டாணி நன்றாக வெந்ததும் தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். தேங்காய்ப்பால் சேர்த்த பிறகு தீயைக் குறைத்து, குழம்பை மெதுவாகக் கொதிக்கவிடவும். </p><p>அதிகமாகக் கொதிக்கவிடாமல், தேவையான பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கினால், அவ்வளவு தான் சுவையான கேரளா ஸ்டைல் பட்டாணி மசாலா தயார். சாதம், சப்பாத்தி, அப்பம் அல்லது பரோட்டாவுக்கு இந்த ரெசிபி பக்காவாக பொருந்தும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:23:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் ஒரு கப் கிராம்பு நீர்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/health-benefits-of-drink-clove-water-1785932796"></link>
            <id>https://manithan.com/article/health-benefits-of-drink-clove-water-1785932796</id>
            <summary type="text">கிராம்பு சமையலில் பயன்படுத்தப்படும் முக்கிய மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். 

சிறிய அளவில் இருந்தாலும், இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிராம்பு சமையலில் பயன்படுத்தப்படும் முக்கிய மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். </p><p>

சிறிய அளவில் இருந்தாலும், இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.</p><p> 

கிராம்பை நீரில் ஊறவைத்து அந்த நீரைக் குடிப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f839a48-a6b7-4c5d-be8e-0525dbd5a4a8/26-6a732bfe51962.webp' />
</p><p>
அதேபோல், கிராம்பு எண்ணெயில் உள்ள யூஜினால் என்றப்பொருள் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது பல்வலி மற்றும் ஈறு வலியைப் போக்கப் பயன்படுகிறது. </p><p>மேலும்,&nbsp;இந்த எண்ணெய் கிருமி நாசினியாக செயல்பட்டு பாக்டீரியாவை அழிக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மூட்டு வலியை தணிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab6d7f05-aa91-4ed4-b826-3a4e1c44f04b/26-6a732bff02d5c.webp' />&nbsp;&nbsp;</p><p>அந்தவகையில், தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரைக் குடித்தால் உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.&nbsp;</p><h2>கிடைக்கும் நன்மைகள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0ef74b-bd93-4af2-819a-d51cf126f4f7/26-6a742c29f217f.webp' /></p><p><b> 

நுரையீரல் ஆரோக்கியம்: </b>கிராம்பு நீரை தொடர்ந்து 10 நாட்கள் குடித்தால், கிராம்பில் உள்ள யூஜினால் என்ற இயற்கைச் சேர்மம், நுரையீரலில் தேங்கியுள்ள சளி குறையவும், வீக்கம் தணியவும் உதவும். </p><p><b>

செரிமானம் மேம்படும்: </b>கிராம்பு நீர் செரிமான நொதிகளின் செயல்பாட்டை தூண்டி, உணவை எளிதில் செரிக்க உதவுகிறது. இதனால் வயிற்று உப்புசம் மற்றும் செரிமானக் கோளாறுகள் குறையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654c5c78-10d7-4410-9050-70f4551f4509/26-6a742c292e70b.webp' /></p><p><b>சரும ஆரோக்கியம்: </b>கிராம்பில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சரும செல்களைப் பாதுகாத்து, சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவுகின்றன. மேலும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் இது நன்மை தரும்.</p><p><b>
நல்ல தூக்கத்திற்கு உதவும்: </b>கிராம்பு நீரை குடிப்பது நரம்புகளை தளரச் செய்து, அமைதியான தூக்கத்திற்கு உதவக்கூடும். இதனால் தூக்கமின்மை பிரச்சனை குறையும்.</p>]]></content>
            <updated>2026-08-08T04:05:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[18 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன்- கேது அரிய சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-ketu-conjunction-in-leo-who-huge-get-luck-1786077831"></link>
            <id>https://manithan.com/article/sun-ketu-conjunction-in-leo-who-huge-get-luck-1786077831</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுபவர் சூரியன். இவர் மாதம் ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். சூரியனின் இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுபவர் சூரியன். இவர் மாதம் ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். </p><p>சூரியனின் இந்த ராசி மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு வகையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. தற்போது கடக ராசியில் பயணித்து வரும் சூரியன், ஆகஸ்ட் 17ஆம் தேதி தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5bbb6cb-978e-40a5-b665-1b51025f4906/26-6a756698591ff.webp' /></p><p>
</p><p>
சிம்மத்தில் ஏற்கனவே கேது பயணித்து வரும் நிலையில், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன்–கேது சேர்க்கை உருவாகிறது. </p><p>இந்த முக்கிய கிரகச் சேர்க்கை அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், வெற்றி, கௌரவம் மற்றும் எதிர்பார்த்த நல்ல பலன்களை வழங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அப்படி அதிக சாதக நன்மைகளை அனபவிக்கப்போகும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.</p><p></p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2039933b-f1ef-46fe-b9c2-bcc7175bfacd/26-6a7566990e246.webp' /></p><p>

சிம்ம ராசிக்காரர்களுக்கு முதல் வீட்டில் கேது - சூரியன் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த கிரகச் சேர்க்கை பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.</p><p>குறிப்பாக, தன்னம்பிக்கை அதிகரித்து, சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.</p><p>

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும். அதிர்ஷ்டம் பல விஷயங்களில் உங்களுக்கு துணையாக இருக்கும். நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9719a02d-b56d-482c-80d6-372c25b24300/26-6a756699b342e.webp' /></p><p>

கன்னி ராசிக்காரர்களுக்கு 12-ஆம் வீட்டில் கேது - சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது. இதன் தாக்கத்தால் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். </p><p>குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணியிடத்தில் நீங்கள் செய்த கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரமும் பலனும் கிடைக்கும்.

இதனால் தன்னம்பிக்கை அதிகரித்து, நிதி நிலையும் மேம்படும். </p><p>பொருளாதார ரீதியாக நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் முன்னேற்றமும் ஏற்படலாம். வியாபாரிகள் லாபம் காணும் சூழல் உருவாகும்.&nbsp;</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/337b4b91-4c2f-4a51-be6a-b96c0cab87db/26-6a75669a63adf.webp' /></p><p></p><h2>
</h2><p>
மகர ராசிக்காரர்களுக்கு 8-ஆம் வீட்டில் கேது - சூரியன் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் 17 முதல் அதிர்ஷ்டம் சாதகமாக அமையும்.</p><p>நீங்கள் மேற்கொள்ளும் பணிகளில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, வளர்ச்சிக்கான புதிய பாதைகள் திறக்கப்படலாம்.
</p><p>
நீண்ட காலமாக முடிவடையாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும்.நிதி நிலை மேம்பட்டு, வருமானமும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T04:05:43+00:00</updated>
        </entry>
    </feed>
