<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-15T14:42:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[viral photos: விஜய் கொடி ஏற்றிய முதல் சுதந்திர தின விழா : முதல் வரிசையில் திரிஷா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijay-1st-independence-day-trisha-joined-1786798321"></link>
            <id>https://manithan.com/article/cm-vijay-1st-independence-day-trisha-joined-1786798321</id>
            <summary type="text">independence day viral phtos:&amp;nbsp; இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, தமிழ்நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>independence day viral phtos:&nbsp; இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும் சுதந்திர தின நிகழ்வுகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.</p><p>

சென்னையில் உள்ள புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு, தனது பதவிக்காலத்தில் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/592d6d99-099e-416c-9ca7-a5d55eb94da2/26-6a8069bf9a862.webp' /></p><p></p><h2>முதல்வராக விஜயின் முதல் சுதந்திர தின விழா</h2><p>
</p><p>
தேசியக் கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் புனித ஜோர்ஜ் கோட்டைக்கு வருகை தந்தார். அங்கு அவரை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வரவேற்றதுடன், நிகழ்வில் கலந்துகொண்டிருந்த உயர் அதிகாரிகளையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார். முப்படையினர், சிறப்பு பொலிஸ் படையினர் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவுகள் அணிவகுத்து முதலமைச்சருக்கு மரியாதை செலுத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eab6fc3a-c574-4d77-82f8-0092c1e334e4/26-6a8069c04b07a.webp' /></p><p>
</p><p>
பின்னர், திறந்தவெளி வாகனத்தில் சென்று அணிவகுப்பில் பங்கேற்றிருந்த பொலிஸ் மற்றும் படைப் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து புனித ஜோர்ஜ் கோட்டையின் கொத்தளத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக் கொடி பட்டொளி வீச, அங்கு திரண்டிருந்தவர்கள் மரியாதை செலுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a24aa35e-ef6a-44cb-b297-c2c1ddf37102/26-6a8069c0ef1fd.webp' /></p><p></p><h2>கவனம் ஈர்த்த த்ரிஷா</h2><p> </p><p>இதனையடுத்து சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிலையில், சுதந்திர தின நிகழ்வில் நடிகை திரிஷா முதல் வரிசையில் அமர்ந்திருந்தத புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/506a2d11-1a75-4ac0-9daa-6e5aaee0d7b9/26-6a8069bee5b3f.webp' /></p><p> மேலும், முதலமைச்சர் விஜயின் பெற்றோரும் அவருடன் அமர்ந்திருந்துக்கும் த்ரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருவதுடன் இணையத்தில் புதிய சர்ச்சையையும் கிளப்பி வருகின்றது.</p><p>விஜய்யின் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபர்கள் பங்கேற்ற போதிலும், அவரது குழந்தைகள் ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா ஆகியோர் இந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்த்க்கது.</p><p>&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T13:29:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி–குரு சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/saturn-jupiter-navpanchama-rajyoga-who-get-luck-1786790927"></link>
            <id>https://manithan.com/article/saturn-jupiter-navpanchama-rajyoga-who-get-luck-1786790927</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில், சனி பகவான் கர்மாவிற்கும், நீதிக்கும் உரிய கிரகமாகக் கருதப்படுகிறார். மற்ற கிரகங்களுடன் ஒப்பிடும் போது சனிபகவான் மெதுவாக நகரக்கூடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில், சனி பகவான் கர்மாவிற்கும், நீதிக்கும் உரிய கிரகமாகக் கருதப்படுகிறார். மற்ற கிரகங்களுடன் ஒப்பிடும் போது சனிபகவான் மெதுவாக நகரக்கூடியவராவார். சனிபகவான் ஒவ்வொரு ராசியிலும் ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் தங்கியிருப்பார். </p><p>தற்போது மீன ராசியில் வக்ர கதியில் இருக்கும் சனிபகவான், டிசம்பர் 11 அன்று நேரடி இயக்கத்திற்குத் திரும்புவார். இந்த காலகட்டத்தில் அவர் பல முக்கிய கிரகச் சேர்க்கைகளை உருவாக்குவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6a507a1-449a-4e78-afe1-84eec1bb2687/26-6a8051257ddd4.webp' /></p><p></p><p>
செப்டம்பர் மாதத்தில் சனிபகவான் மற்றும் குருபகவான் ஆகிய கிரகங்கள் இணைந்து 'நவபஞ்சம ராஜயோகத்தை' உருவாக்குகின்றன.இந்த சக்திவாய்ந்த ராஜயோகம் ஜோதிடத்தில் பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றாகும்.</p><p> இந்த அரிய கிரக அமைப்பானது இந்த 3 ராசிக்காரர்களுக்குத் தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில், அமோகமான சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f74ccfd6-3d32-4bec-9e37-db2c37295a9b/26-6a80512631066.webp' /></p><p> கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைத் தரும். தடைப்பட்ட திட்டங்கள் வேகம் பெறுவதுடன், வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் கிடைக்க்கும்.</p><p> சட்ட விஷயங்களில் வெற்றி, எதிரிகளை சமாளிக்கும் திறன், வியாபாரத்தில் முன்னேற்றம் ஆகியவை அமையும். பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் எதிர்பாராத பணவரவு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. கடந்தகால முதலீடுகளின் மூலம் லாபம் கிடைக்கும்.</p><h2>துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08de9e7f-f40e-487e-ae9e-f13f0174ef5b/26-6a805126d8b8a.webp' /></p><p>சனி–குரு சேர்க்கை துலாம் ராசிக்காரர்களின் தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.</p><p> புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், தொழில் சவால்கள் குறைந்து முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.</p><p>நிதி நிலை மேம்படுவதுடன் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கான வாய்ப்புகளும் அமையும். புதிய தொடக்கங்களுக்கு ஏற்ற காலமாக இது அமையும்.
</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/713b4376-98d8-438e-8a9a-2109622cb331/26-6a8051278be69.webp' /></p><p></p><p>மீன ராசிக்காரர்களுக்கு லக்னத்தில் சனியும், ஐந்தாம் வீட்டில் குருவும் அமைவது நற்பலன்களைத் தரும். உயர்கல்வி, தொழில் முடிவுகள், நிதி வளர்ச்சி மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படலாம். </p><p>வெற்றியை நோக்கிய பயணம் வேகம் பெறுவதுடன், நிதி நிலையும் வலுப்பெறும். வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் சாதிக்கக்கூடிய காலமாக இது அமையும். குறிப்பான நிதி நிலையில் இதுவரையில் இல்லாத முன்னேற்றம் உண்டாகும்.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T11:44:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்மா இறந்த செய்தி கேட்டும் 5 ஷாட்களை முடித்து கொடுத்த ராதிகா! நெகிழ்ச்சியில் படக்குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vas-team-open-radhikaas-dedication-towards-cinema-1786785078"></link>
            <id>https://manithan.com/article/vas-team-open-radhikaas-dedication-towards-cinema-1786785078</id>
            <summary type="text">radhikaas dedication towards cinema : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>radhikaas dedication towards cinema : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் அளித்துள்ள புரமோஷனல் பேட்டியில் நடிகை ராதிகாவின் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு குறித்து பகிர்ந்துள்ள விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.&nbsp;</p><h2>ராதிகாவின் நெகிழ்ச்சி செயல்&nbsp; &nbsp;&nbsp;</h2><p>படத்தின் முக்கியமான காமெடி காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது, ராதிகாவின் தாயார் உயிரிழந்த செய்தி அவருக்கு கிடைத்துள்ளது. அப்போது காட்சியில் இன்னும் ஐந்து ஷாட்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்ததால், அதனை முடித்துவிட்டு செல்லலாமா என ராதிகா இயக்குநர் வெங்கியிடம் கேட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21c4152c-3c34-4810-8f4f-7e63d0865ff9/26-6a8032e0a5f27.webp' /></p><p></p><p>இதுகுறித்து இயக்குநர் வெங்கி கூறுகையில், தாயார் இறந்த செய்தி கிடைத்த நிலையிலும், காட்சியை முடித்துவிட்டு செல்ல ராதிகா விரும்பியதாகவும், அந்த நேரத்தில் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>நடிகை மமிதா பைஜூவும் ராதிகாவின் மனநிலையை நினைத்து மிகவும் வேதனைப்பட்டதாகக் கூறியுள்ளார். தன் தாயைப் பற்றி ராதிகா படப்பிடிப்பின்போது பலமுறை பகிர்ந்துகொண்டதாகவும், அந்தச் செய்தி கிடைத்த பிறகும் அவர் முழு ஈடுபாட்டுடன் காமெடி காட்சியில் நடித்தது தன்னை நெகிழச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db2115b3-4408-4d93-b395-586475c58bd5/26-6a8032e156b73.webp' /></p><p>
நடிகர் சூர்யா, தாயாருக்கும் தான் சார்ந்துள்ள கலைக்கும் ராதிகா அளிக்கும் சமமான மரியாதையே இப்படிப்பட்ட அர்ப்பணிப்புக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து ராதிகா கூறுகையில், அந்தக் காட்சியின் 85 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்ததாகவும், மீதமிருந்த ஐந்து ஷாட்களை முடிக்காமல் சென்றால் மீண்டும் இரண்டு மாதங்கள் கழித்தே அதனை படமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d269eaf-bd0a-4c24-97e1-9b437b33fcaa/26-6a8032e231ae8.webp' /></p><p></p><p> </p><p>மேலும், அதே உணர்வை மீண்டும் கொண்டு வந்து நடிப்பது சாத்தியமற்றதாக இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக, தன் தாயார் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தபோதும், “நீ கிளம்பி ஷூட்டிங் போ” என்று தன்னை அனுப்பி வைத்ததாக ராதிகா தெரிவித்துள்ளார். </p><p>தாயை இழந்த துயரத்திலும், அவர் கூறிய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து படப்பிடிப்பை நிறைவு செய்த ராதிகாவின் அர்ப்பணிப்பு தற்போது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T09:43:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து வங்கியில் முடங்கிய 31 டன் தங்கம் - விடுவிக்க கோரும் நாடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venezuela-demands-gold-return-bank-england-1786781588"></link>
            <id>https://manithan.com/article/venezuela-demands-gold-return-bank-england-1786781588</id>
            <summary type="text">Venezuela wants its gold back from Bank of England : இங்கிலாந்து வங்கியின் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ள சுமார் 31 மெட்ரிக் டன் வெனிசுலாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Venezuela wants its gold back from Bank of England : இங்கிலாந்து வங்கியின் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ள சுமார் 31 மெட்ரிக் டன் வெனிசுலாவின் தங்கத்தை, மீண்டும் வழங்குமாறு வெனிசுலா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.</p><p> சுமார் 4 பில்லியன் டொலர் மதிப்புடைய இந்தத் தங்கத்தை, அண்மைய இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க பயன்படுத்த விரும்புவதாக இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பணவீக்கம் 575.9 சதவீதம்&nbsp;&nbsp;</h2><p>முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் தேர்தல் சட்டபூர்வமானது அல்ல என்ற பிரித்தானியாவின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து, இந்தத் தங்கத்தை விடுவிப்பது தொடர்பாக பல ஆண்டுகளாக சட்டப் பிரச்சினை நீடித்து வருகிறது.</p><p> இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடுகளைப் புனரமைத்தல், சுகாதாரம், மின்சாரம் மற்றும் இடிபாடுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்கு தங்கத்தின் மதிப்பைப் பயன்படுத்த வெனிசுலா முயற்சித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/247bf8b4-a648-4552-833d-ff5ce400df0f/26-6a8024e72d0dd.webp' /></p><p>

நீண்டகால பொருளாதார நெருக்கடி, நிர்வாகச் சீர்கேடு, ஊழல் மற்றும் அமெரிக்கத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவில், ஜூலை மாத பணவீக்கம் 19.9 சதவீதமாகவும், ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 575.9 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
ஜூன் 24ஆம் தேதி ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களில் 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 16,740 பேர் காயமடைந்ததாகவும், 17,907 பேர் வீடுகளை இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bf4381a-f41a-4d63-8649-328bf8796ee9/26-6a8024e815b7f.webp' /></p><p></p><p>மொத்தமாக 68 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 லட்சம் பேருக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

“இந்தத் தங்கம் எங்கள் மக்களுக்குச் சொந்தமானது; பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அது பயன்படுத்தப்பட வேண்டும்” என&nbsp;ஜனாதிபதி ரோட்ரிக்ஸ் வலியுறுத்தியுள்ளார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T09:03:39+00:00</updated>
        </entry>
    </feed>
