<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-05T15:41:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவல் பழத்தில் பாம்பின் விஷமா? சிறுவனின் உயிரை பறித்தது எது? மருத்துவர் பரூக் அப்துல்லா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/doctor-explains-snake-poison-in-jamun-fruit-1788609053"></link>
            <id>https://manithan.com/article/doctor-explains-snake-poison-in-jamun-fruit-1788609053</id>
            <summary type="text">மருத்துவரின் பதிவு இதோ,இலங்கையில் 
மட்டக்களப்பு ஊரில், பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை சாப்பிட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருத்துவரின் பதிவு இதோ,</p><p>இலங்கையில் 
மட்டக்களப்பு ஊரில், பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை சாப்பிட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக செய்தி வருகிறது.
</p><p>நேற்று மாலை வீட்டிற்கு அருகிலுள்ள நாவல் மரத்தில் இருந்து நிலத்தில் விழுந்த பழத்தை எடுத்து சாப்பிட்ட சிறுவன், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
</p><p>உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்டதே உயிரிழப்புக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>அன்னாரை இழந்து வாடும் அவர்தம் பெற்றோர் உற்றார் உறவினருக்கு ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ffarookabdulla1988%2Fposts%2Fpfbid02bRY2BRwNoxTuiafTxXPNuixgXnjvfHHma26ktPckWvhDYZkHuJareVDBHwBfxw36l&show_text=true&width=500" width="500" height="673" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe><br></p><p> 
உண்மையில் 
பாம்பு பழங்களில் விஷத்தை ஏற்றுமா? 
அப்படியே பாம்பின் விஷம் பழங்களில் இருந்தாலும் அவற்றை உண்பதால் மனிதர்களுக்கு மரணம் ஏற்படுமா? இரண்டுக்கும் இல்லை என்பதே பதில்.</p><p>
பாம்புகள் தாவரப்பட்சினிகளோ பழமுண்ணிகளோ அன்று. 
அவை மாமிசத்தை மட்டுமே உண்டு பிழைக்கும் மாமிசப்பட்சினிகள். </p><p>
தவளைகள், கொரித்து உண்பவை, பறவைகள், மீன்கள், பூச்சிகள் இவற்றை மட்டுமே உண்ணும் வகையில் அவற்றின் ஜீரண மண்டலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. </p><p>
எனவே, நாவல் பழத்தை அவை உண்ணாது. 
முதல் தர்க்கமே பிழையானது. 
சரி ஒருவேளை தெரியாமல் அறியாமல் 
தனது விஷத்தை பழத்தில் அது இறக்கி வைத்திருந்தாலும் 
அந்த விஷம் என்பது புரதமும் பல்வேறு வகை நொதிகளும் அடங்கிய கலவையாகும்.</p><p> 
அந்த விஷத்தை 
தனது விஷப் பற்கள் மூலம் ஊசி போட்டு எதிரி விலங்கிற்குள் ஏற்றி ரத்தத்தில் கலக்கச் செய்தால் மட்டுமே விஷத்தன்மை இருக்கும். </p><p>
மற்றபடி பாம்பின் விஷத்தை மனிதர்கள் பருகினாலும் மனிதர்களுக்கு விஷம் ஏறாது. 
காரணம், நமது இரைப்பையில் இருக்கும் 
வீரியமான ஹைட்ரோ குளோரிக் அமிலம் 
பாம்பின் நஞ்சை முழுவதுமாக செரித்து விடும். </p><p>
ஒருவேளை வாய் பகுதியில் ஈறுகளில் காயம் இருந்து அதன் வழியாக உள்ளே சென்று ரத்தத்தில் கலந்தால் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்த முடியும். </p><p>
மற்றபடி பாம்பின் விஷம் ஏறிய பழம் அதை சாப்பிட்டதால் சிறுவன் மரணம் என்பது அறிவியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் 
பிழையானது 
பிரேதப் பரிசோதனை முடிவுகள் மட்டுமே உண்மையை வெளிக் கூறும் எனினும் 
சிறுவனின் இறப்பிற்கு பின்வரும் விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.
</p><p>நாவல் மரத்தில் பழங்களைப் பறிக்கும் போது நிஜமாகவே அங்கு நரம்பு மண்டலத்தைத் தாக்கி சில நிமிடங்களில் மரணத்தைக் கொண்டு வரும் நாகப்பாம்பு உள்ளிட்ட பாம்பு கடித்திருக்கலாம். 
பல நேரங்களில் பாம்பு கடித்த பற்கள் வெளியே தெரியாமலும் இருக்கலாம். </p><p>
பாம்பு கடித்ததை முள் தைத்ததாக சிறுவன் தவறாக எண்ணி நேரத்தை வீணடித்திருக்கலாம். அல்லது 
காலதாமதம் ஆனதால் சுவாசத்திற்கு தேவையான தசைகள் செயலிழந்து மரணித்திருக்கலாம். </p><p>
இரண்டாவது வாய்ப்பு 
அந்த மரத்தில் இருந்த குழவி அல்லது கட்டெறும்பு ஆகியவை கடித்து அதனால் அதி தீவிர ஒவ்வாமை (ANAPHYLAXIS) ஏற்பட்டு அதனால் மூச்சுக் குழாய் சுருங்கி மரணம் சம்பவித்திருக்கலாம். </p><p>
மூன்றாவது வாய்ப்பு 
மரத்தில் இருந்து கீழே விழுந்து அதனால் பின் மண்டையில் / கழுத்து தண்டு வட எலும்பு அடிபட்டு மூர்ச்சையாகி மரணம் சம்பவித்திருக்கலாம். பிரேதப் பரிசோதனை யில் மட்டுமே இவை தெரிய வரலாம். </p><p>
நான்காவது வாய்ப்பு 
அந்த சிறுவனுக்கு ஏற்கனவே இருந்த இதயம் சார்ந்த பாதிப்புகள் தீவிரமடைந்து அதனாலும் மரணம் சம்பவித்திருக்க சிறிய வாய்ப்புண்டு.</p><p> 
பாம்புகள் பழங்களையோ 
காய்கறிகளையோ தீண்டாது. 
அது அவற்றின் உணவன்று 
இது நம்மிடையே உள்ள மூடநம்பிக்கையாகும். </p><p>இன்னும் ஒரு மூடநம்பிக்கை உண்டு
வெள்ளரிக்காய், புடலங்காய் உள்ளிட்டவை 
திடீரென ரொம்ப கசக்கும். 
உடனே நம் பெற்றோர் " பாம்பு வாய் வைத்திருக்கும். சாப்பிடாத" என்பார்கள். </p><p>
உண்மையில் அவற்றில் பாம்பு வாய் வைப்பதில்லை. 
மாறாக வெள்ளரிக்காய், புடலங்காய் உள்ளிட்டவை குக்குர்பிட்டேசியே (Cucurbitaceae) குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகள் ஆகும். </p><p>
வேறு விலங்குகள் சாப்பிடக் கூடாது 
தாங்கள் இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த இனம் 
குக்குர்பிட்டேசின் எனும் நச்சுப் பொருளை 
சுரக்கும். </p><p>
இந்த குக்குர்பிட்டேசினை அதி வெயில், நீர் தேவையான அளவு போதாமை, மண் வளம் குன்றும் போது சற்று அளவுக்கு அதிகமாக உருவாக்கும். </p><p>
அதனால் அந்த காய்கறிகளில் அதிக கசப்புத் தன்மை இருக்கும். 
இந்த காய்கறிகளை சாப்பிட்டால் 
வயிற்றுப் போக்கு வாந்தி உள்ளிட்ட உணவு ஒவ்வாமை நிகழ்வுகள் ஏற்படும். </p><p>
இதற்கும் பாம்புகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 
பாம்புகள் எப்போது தனது நஞ்சை உபயோகிக்கும்? </p><p>
பிற விலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டு 
தங்களை பாதுகாக்கவும் 
தங்களின் இரைகளை மூர்ச்சையாக்கவும் மட்டுமே நஞ்சை உபயோகிக்கும் 
மற்றபடி பழங்கள், காய்கறிகள் என்று தங்கள் உணவில்லாதவற்றில் நஞ்சை வீணாக்காது. </p><p>
பழங்கள் / காய்கறிகளில் பாம்பு வாய் வைக்கும், நஞ்சு கக்கும் என்பதில் அறிவியல் இல்லை.&nbsp;</p><p>நன்றி&nbsp;</p><p>பரூக் அப்துல்லா<br>பொது நல மருத்துவர்<br>சிவகங்கை</p>]]></content>
            <updated>2026-09-05T11:53:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளபளப்பான சருமத்திற்கு அரிசியை பயன்படுத்தும் 3 சிறந்த வழிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/3-ways-to-use-rice-for-sking-glowing-1788598958"></link>
            <id>https://manithan.com/article/3-ways-to-use-rice-for-sking-glowing-1788598958</id>
            <summary type="text">பொதுவாக, எல்லோருமே சரும பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதில் அரிசி மிக நீண்ட காலமாகவே சரும பராமரிப்பு ஒரு சிறந்த மற்றும் இயற்கை பொருளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, எல்லோருமே சரும பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதில் அரிசி மிக நீண்ட காலமாகவே சரும பராமரிப்பு ஒரு சிறந்த மற்றும் இயற்கை பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக கொரியன் பியூட்டி முறைகள் தற்பொழுது பிரபலம் அடைந்து வருகின்றது.</p><p> அதனால் சரும பராமரிப்பில் அரிசியின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. 
அதாவது அரிசியில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட், வைட்டமின் மற்றும் சருமத்தை அமைதிப்படுத்தும் சேர்மங்கள் நம்முடைய சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவுகிறது.</p><p> மேலும், அரிசியை ஊற வைத்து அல்லது வேகவைத்து கிடைக்கும் அரிசி நீர், அரிசி மாவு மற்றும் புளிக்க வைக்கப்பட்ட அரிசி சாறு போன்ற பல்வேறு வடிவங்களில் நாம் சரும பராமரிப்புக்கு பயன்படுத்தலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ec06f7e-713e-4ea2-a98d-61a771ac0b67/26-6a9bdab02b8c6.webp' /></p><p></p><p>
</p><p>

அதை பயன்படுத்துகின்ற பொழுது சருமத்தில் ஏற்படும் எரிச்சலை குறைக்கவும் மந்தமான தோற்றத்தை போக்கவும் சருமத்திற்கு பாதுகாப்பை கொடுக்கிறது.

இந்த அரிசி ஒரு மென்மையான இயற்கை உரிப்பு பொருளாகவும் செயல்படுகிறது. </p><p>அதனால், நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைக்க உதவுகிறது. 

இந்த அரிசியை எப்பேர்பட்ட சரும வகைகளுக்கு நாம் பயன்படுத்தலாம். அந்த வகையில், நாம் இந்த அரிசியை கொண்டு முகத்தை பொலிவு படுத்தக்கூடிய ஒரு 3 முறை பற்றி பார்ப்போம்.</p><h3>&nbsp; 1. அரிசி நீர்:</h3><p>அரிசி நீர் என்பது சரும பராமரிப்பில் அதிக நன்மைகளை வழங்க கூடிய இடம். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றத் தடுப்புப் பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் சருமத்தின் பொலிவையும் தன்மையையும் படிப்படியாக மேம்படுத்துகிறது. </p><p>அரிசியை தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது வேகவைத்தால் கிடைக்கக்கூடிய நீரை வடிகட்டி எடுத்துக்கொண்டு அதனை இரண்டு முதல் மூன்று நாட்கள் புளிக்க வைக்கலாம். பிறகு புளிக்க வைக்கும் முறையில் சில இயற்கை சத்துக்கள் ஆக்ஸிஜனேற்றத் தடுப்புப் பொருட்களின் அளவு அதிகரிக்கக்கூடும்.</p><p>
பிறகு, தயாரான அரிசி நீரை ஒரு சுத்தமான பாட்டிலில் சேமித்து முகத்தில் தினமும் தெளித்து பயன்படுத்தலாம். இது நமக்கு புத்துணர்ச்சியையும் சருமத்தை ஈரப்பதத்துடனும் வைப்பதற்கு உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb200a12-8852-4863-998a-e03f81716fc4/26-6a9bdab0db201.webp' /></p><h3> 

 2. சரும பொலிவிற்கு :
</h3><p>அரிசியை நன்றாக அரைத்து அதனுடன் கடலை மாவு அல்லது தயிர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் தயாரிக்கலாம். வீட்டிலேயே தயாரிக்க கூடிய இந்த பேஸ்ட் நமக்கு சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை அகற்றுவதோடு சருமத்திற்கு நல்ல ஊட்டச்சத்து அளிக்கிறது. </p><p>அதோடு அதில் இருக்கக்கூடிய கடலை மாவு சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்குகிறது. </p><p>தயிர் நம்முடைய சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. இந்த கலவையை நாம் முகத்தில் சீராக தடவி சிறிது நேரம் கழித்து தண்ணீரால் மெதுவாக கழுவலாம். பிறகு நம்முடைய முகம் பொலிவாக இருப்பதையும் புத்துணர்ச்சி இருப்பதையும் பார்க்க முடியும். </p><h3>

3. அரிசி நீர் ஐஸ் கட்டிகள்:</h3><p>
கோடை காலங்களில் அரிசி நீரில் தயாரிக்கப்படும் அந்த ஐஸ் கட்டிகள் முகத்திற்கு குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் சருமத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதற்கு முதலில் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அந்த நீரை வடிகட்டி நம்முடைய ஐஸ் கட்டி தயாரிக்க கூடிய அந்த தட்டில் ஊற்றி ஊற வைக்கலாம். </p><p>பிறகு உறைந்த அந்த ஐஸ்கட்டியை நேரடியாக முகத்தில் தேய்க்காமல் அதற்கு பதிலாக மென்மையான துணியில் சுற்றி உதட்டில் மெதுவாக பயன்படுத்துவது 

குளிர்ச்சியான தன்மை முகத்தில் ஏற்படக்கூடிய வீக்கத்தையும் சருமத்திற்கு தற்காலிகமான புத்துணர்ச்சிகளையும் கொடுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b6f4cdb-b748-489b-8926-418f687fd757/26-6a9bdab19453c.webp' /></p><p></p><h3> 

முக்கியக் குறிப்பு:
</h3><p>இவையெல்லாம் இயற்கையான பொருட்கள் என்றாலும் அனைவரது சருமமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆதலால் எந்த ஒரு பொருளையும் பயன்படுத்துவதற்கு முன்னதாக சிறியதாக ஒரு பகுதியில் பயன்படுத்தி பரிசோதனை செய்த பிறகு முகத்தில் நீங்கள் முழுவதுமாக பயன்படுத்தலாம்.</p><p> மேலும், வீடுகளில் தயாரிக்கும் அரிசி நீர் போன்ற பொருட்களை நீண்ட நாட்கள் சேமித்து வைக்காமல் சுத்தமான முறையில் குறுகிய நாட்களுக்குள் பயன்படுத்துவது பாதுகாப்பை கொடுக்கும். வெறும் சரும பராமரிப்பு மட்டும் எப்பொழுதும் பாதுகாக்காது. </p><p>போதுமான தண்ணீர் சுத்தமான உணவு சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாத்தல் ஆரோக்கிய உணவுகள் எடுத்துக் கொள்ளுதல் தேவை இல்லாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகுதல் இவையெல்லாம் முறையாக பின்பற்றும் பொழுது தான் நாம் நினைத்த சருமத்தை அடைய முடியும்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T11:30:40+00:00</updated>
        </entry>
    </feed>
