<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-13T18:43:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் Stunning போட்டோஷூட்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/keerthy-suresh-look-at-toronto-film-festival-1789313570"></link>
            <id>https://manithan.com/article/keerthy-suresh-look-at-toronto-film-festival-1789313570</id>
            <summary type="text">தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். </p><p>ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே, சர்வதேச அளவில் இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afa57800-af4c-4ea8-921d-c188cc6fd760/26-6aa6c4fdcddd2.webp' /></p><p></p><p> </p><p>குறிப்பாக, டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் (Toronto International Film Festival) ‘டோரதி’ திரைப்படம் திரையிடப்பட்டதுடன், அங்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
</p><p>
இந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், தனது அழகும், ஸ்டைலும் மிளிரும் வகையில் எடுத்துக்கொண்ட Stunning போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.</p><p></p><p>வித்தியாசமான லுக்கில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T15:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகரின் அருளைப் பெற சதுர்த்தி நாளில் இதை படைத்து வழிபடுங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-are-some-auspicious-things-to-do-on-chaturthi-1789305338"></link>
            <id>https://manithan.com/article/what-are-some-auspicious-things-to-do-on-chaturthi-1789305338</id>
            <summary type="text">Ganesh Chaturthi 2026: இந்து மதத்தின் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படும் விநாயகரின் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தில் பல்வேறு வகையான சுவையான நைவேத்தியங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ganesh Chaturthi 2026: இந்து மதத்தின் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படும் விநாயகரின் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தில் பல்வேறு வகையான சுவையான நைவேத்தியங்களைப் படைத்து, அவருடைய அருளைப் பெறுவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
</p><p>
அந்த வகையில், நாளைய தினம் (செப்டெம்பர் 14) சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இனிப்பு மற்றும் பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை விநாயகருக்குப் படைத்து வழிபடுவது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு முக்கியமான வழிபாட்டு முறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49a7d0d0-a84a-46c8-b8d1-b8d2602aa7c1/26-6aa6a8a0abce5.webp' /></p><p></p><p>
</p><p>
ஆனால், விநாயகரின் அருளைப் பெறுவதற்கு கொழுக்கட்டை மட்டும் போதுமானதல்ல. விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிரியமானதாகக் கருதப்படும் மேலும் சில புனிதமான பொருட்களும் உள்ளன. </p><p>

அந்தப் பொருட்களை விநாயகர் சதுர்த்தி நாளில் முறைப்படி அவருக்குப் படைத்து, பக்தியுடன் வழிபடுவதன் மூலம் விநாயகரின் அருளையும், ஆசீர்வாதத்தையும் பெறலாம் என்று சாஸ்திரங்கள் மற்றும் ஆன்மிக நம்பிக்கைகள் கூறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/954906f3-eef8-4f7a-bae2-1ca1ac22e423/26-6aa6a8a15d06d.webp' /></p><p>
</p><p>
விநாயகரை வழிபடும்போது பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்துவமான ஆன்மிக முக்கியத்துவம் இருப்பதாகவும், அவை நம் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, வெற்றி, தடையின்மை உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்கும் எனவும் நம்பப்படுகிறது.
</p><p>
அப்படி, விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்ததாகக் கருதப்படும் அந்தப் புனிதமான பொருட்கள் என்னென்ன? அவற்றை எவ்வாறு படைத்து வழிபட வேண்டும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;&nbsp;</p><h2>கொழுக்கட்டை</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af199356-5e94-4cca-8838-c9d4f8ba8c03/26-6aa6a8a216e57.webp' /></p><p>
வட இந்தியாவில் மோதகம் என்று அழைக்கப்படும் கொழுக்கட்டை இல்லாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நிறைவு பெறாது. இது விநாயகருக்கு மிகவும் பிடித்த இனிப்பு என்பதால், அன்றைய தினம் அவருக்கு கட்டாயம் படைக்கப்படுகிறது. அரிசி மாவினால் செய்யப்பட்ட கொழுக்கட்டையின் உள்ளே தேங்காய் மற்றும் வெல்லம் நிரப்பப்படும். விநாயகரை வழிபடும்போது மோதகம் படைப்பது வழிபாட்டை முழுமையாக்கும் என நம்பப்படுகிறது.</p><h2>

அருகம்புல்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f215a52-0b4f-4d31-a27d-29578f5a5d99/26-6aa6a8a2bd2be.webp' /></p><h2>
</h2><p>விநாயகருக்குப் பிடித்த பொருட்களில் அருகம்புல்லும் ஒன்று. வயல்வெளிகளில் இயல்பாக வளரும் இந்த மூன்று கிளைகளைக் கொண்ட புல்லைப் பற்றிய சுவாரஸ்யமான கதை ஒன்றும் உள்ளது. தேவர்களைத் துன்புறுத்திய அனலாசுரன் என்ற அரக்கனை விநாயகர் விழுங்கியபோது, கடுமையான வயிற்று எரிச்சலால் அவதிப்பட்டார். அப்போது முனிவர்கள் அவருக்கு அருகம்புல்லைச் சமர்ப்பித்தனர். அதனால் அவரது எரிச்சல் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் அருகம்புல் விநாயகருக்கு மிகவும் பிடித்தமானதாக மாறியது.
</p><h2>
சாமந்திப் பூ</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23aeedb0-a54c-4cd5-b9d8-f3ba861cd928/26-6aa6a8a3708e9.webp' /></p><h2>
</h2><p>விநாயகர் சதுர்த்தியன்று வீட்டிற்கு விநாயகர் சிலையை எடுத்து வரும்போது, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறச் சாமந்திப் பூக்களால் அலங்கரிப்பது வழக்கம். விநாயகருக்குச் சாமந்திப் பூக்கள் மிகவும் பிடிக்கும் என்பதால், பல கோவில்களில் அவருக்கு சாமந்திப் பூ மற்றும் அருகம்புல் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன.
</p><h2>
சங்கு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/704361b9-83df-428d-afc4-9332210433a7/26-6aa6a8a42658b.webp' /></p><h2>
</h2><p>நான்கு கைகளைக் கொண்ட விநாயகரின் ஒரு கையில் சங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. பல இந்துப் பண்டிகைகள் சங்கு முழக்கத்துடன் தொடங்குவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி பூஜையின்போதும் சங்கு முழங்குவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. சங்கு நாதம் தீய சக்திகளை விரட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
</p><h2>
தேங்காய், வாழைப்பழம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/114b06df-5c4a-4863-824b-d6b0ccd7bd2c/26-6aa6a8a4cf681.webp' /></p><h2>
</h2><p>தேங்காயும் வாழைப்பழமும் விநாயகருக்குப் பிடித்தமான படையல்களில் அடங்கும். யானை முகத்தைக் கொண்ட விநாயகருக்கு வாழைப்பழங்கள் மற்றும் வாழை மரத்தின் அனைத்துப் பாகங்களும் விருப்பமானவை என நம்பப்படுகிறது. அதனால், அவரது சிலைகள் பெரும்பாலும் வாழை இலைகள் மற்றும் வாழைத்தண்டுகளால் அலங்கரிக்கப்படுகின்றன.</p><h2>

எருக்கம் பூ</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c254ce97-370f-44b0-b62d-e4350220091d/26-6aa6a8a58700a.webp' /></p><p></p><h2>
</h2><p>எருக்கம் பூ எதிர்மறை ஆற்றலை நீக்கும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது. விநாயகருக்கு எருக்கம் பூ மாலை சாற்றி வழிபட்டால், பக்தர்களுக்கு நல்ல ஆரோக்கியமும் நோயற்ற வாழ்வும் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இந்த பொருட்களை படைத்து விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் வழிப்பாடு செய்வதால் வாழ்வில் சகல துன்பங்களும் நீங்கி செல்ல செழிப்பு பெருகும் என்று நம்ப்படுகின்றது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T14:22:16+00:00</updated>
        </entry>
    </feed>
