<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-01T17:51:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவி, குழந்தையை பிரிந்த பிரதீப் ஆண்டனி.. உருக்கமான பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bigg-boss-pradeep-antony-separates-from-wife-1788276406"></link>
            <id>https://manithan.com/article/bigg-boss-pradeep-antony-separates-from-wife-1788276406</id>
            <summary type="text">பிக் பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி குழந்தையை பிரிந்து மிகுந்த துயரில் இருப்பதாக வெளியிட்டுள்ள உருக்கமாக பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.பிரதீப் ஆண்டனிதமிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி குழந்தையை பிரிந்து மிகுந்த துயரில் இருப்பதாக வெளியிட்டுள்ள உருக்கமாக பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><h2>பிரதீப் ஆண்டனி</h2><p>தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘அருவி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், அதன்பிறகு ‘வாழ்’ திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d54a99f4-4d85-46ba-b98f-6a83a877cf59/26-6a96f3d77a817.webp' /></p><p></p><p>

நடிகர் கவினின் நெருங்கிய நண்பராகவும் அறியப்படும் பிரதீப் ஆண்டனி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஏற்கனவே திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிதான் அவரை அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது.</p><p>

நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி வெளிப்படையாகப் பேசிய விதமும், தனது கருத்துகளை தயக்கமின்றி முன்வைத்த விதமும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.</p><p> </p><p>அதே நேரத்தில், அவரது செயல்பாடுகள் நிகழ்ச்சிக்குள் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தின.

குறிப்பாக, சில பெண் போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனி மீது புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. </p><p>இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிரதீப்புக்கு ரெட் கார்டு வழங்கி வெளியேற்றப்பட்ட முடிவு அப்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. பலரும் பிக்பாஸ் குழுவின் முடிவுக்கு எதிராக தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e710ef7-88f5-4be5-bd73-a694d7f0c81c/26-6a96f3d82befa.webp' /></p><p> பிரதீப்பை வெளியேற்றியது தவறான முடிவு என்றும், அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.
</p><h2>மனைவி குழந்தையை பிரிந்தது ஏன்?&nbsp;</h2><p>பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதீப் ஆண்டனி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். கடந்த 2024ஆம் ஆண்டு பூஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு தனது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வந்த பிரதீப்புக்கு, கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
</p><p>
குழந்தை பிறந்த செய்தி பிரதீப்பின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான ஒரு பதிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e5e0646-0a8b-47f1-a140-29780764f4a4/26-6a96f3d8d1cd0.webp' /></p><h2>உருக்கமான&nbsp; பதிவு&nbsp;</h2><p>
</p><p>பிரதீப் ஆண்டனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், தனது மனைவி மற்றும் குழந்தையை பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு குறித்து அவர் அந்த பதிவில் உருக்கமாக பேசியுள்ளார். </p><p>ஒரு நல்ல குடும்பத்தை அமைத்துக்கொண்டு, தனது குழந்தைக்கு சிறந்த தந்தையாக வாழ வேண்டும் என்பதுதான் தனது வாழ்நாளின் மிகப்பெரிய கனவு என்று பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது இணைந்து வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64106227-c16e-4e02-aaaf-7dc0e90cc3cb/26-6a96f3d9848d4.webp' /></p><p></p><p>
</p><p>
மேலும், தனது குழந்தையின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பதாகக் கூறியுள்ள பிரதீப், குழந்தையை பிரிந்திருப்பது தனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>“ஒவ்வொரு நொடியும் என் குழந்தையை ரொம்பவே மிஸ் பண்றேன்” என்று அவர் தனது பதிவில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதீப்பின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. </p><p>குடும்ப வாழ்க்கை குறித்து பிரதீப் ஆண்டனி வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வரும் நிலையில், அவரது தற்போதைய நிலை குறித்து ரசிகர்கள் பலரும் வருத்தத்தையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u> <a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T15:49:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மற்றவர்களை கட்டுப்படுத்துவதில் கில்லாடிகளான டாப் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-are-most-controlling-1788268741"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-are-most-controlling-1788268741</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, கல்வி, தொழில் உட்பட அவர்களின் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, கல்வி, தொழில் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.</p><p>அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில்&nbsp; பிறந்தவர்கள் மற்றவர்களை அடக்கியாளும் ஆளுமையையும் சிறந்த தலைமைத்துவ குணங்களையும் பிறப்பிலேயே கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/788105af-45d2-4341-a878-c796157d251c/26-6a96e4fe5f602.webp' /></p><p></p><p>அப்படி அனைவரையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் படு கில்லாடிகளாக திகழும் டாப் 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">விருச்சிகம்</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fa86bcd-156b-49e1-89d2-ec71f8373260/26-6a96e4ff13630.webp' /></p><p>விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பிலேயே அதிக அதிகார வேட்கையும், தங்களது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வலுவான எண்ணமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p>இருப்பினும், அவர்கள் தங்களது நோக்கங்களையும் எண்ணங்களையும் வெளிப்படையாக மற்றவர்களிடம் கூறுவதைவிட, அவற்றை மனதிற்குள் வைத்துக்கொண்டு செயல்படுவதையே அதிகம் விரும்புவார்கள்.
</p><p>
மாற்றம், சக்தி மற்றும் ஆற்றலுடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படும் செவ்வாயின் ஆதிக்கம் இவர்களுக்கு இருப்பதால், பிறரை வழிநடத்துவது, சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுவது மற்றும் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்துவது போன்ற விஷயங்களில் இயல்பான ஆர்வம் இருக்கும்.
</p><h2>மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee06360e-f028-4e89-a51c-fd79755294de/26-6a96e4ffc3b35.webp' /></p><p>
மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் வெற்றி, முன்னேற்றம் மற்றும் சாதனைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டால், அதை அடையும் வரை பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்படுவார்கள்.</p><p>இந்த வெற்றிக்கான தீவிர விருப்பம் சில நேரங்களில் மற்றவர்களின் மீது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் செலுத்த வேண்டும் என்ற எண்ணமாக வெளிப்படலாம்.
</p><p>
ஒழுக்கம், பொறுப்பு மற்றும் அதிகாரத்துடன் தொடர்புடைய சனிபகவானால் ஆளப்படும் மகர ராசிக்காரர்கள், எந்தவொரு விஷயத்தையும் அவசரமாக அணுகாமல், திட்டமிட்டு செயல்படுவார்கள். மற்றவர்களை அடக்கியாளும் ஆளுமை இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff021ba7-3840-429f-9f11-7432a032f60d/26-6a96e50077932.webp' /></p><p></p><h2>
</h2><p>சிம்ம ராசிக்காரர்கள் தங்களது தைரியம், தன்னம்பிக்கை மற்றும் கம்பீரமான அணுகுமுறைக்காகப் பெயர் பெற்றவர்கள். அவர்களின் வசீகரமான வெளித்தோற்றத்திற்குப் பின்னால், அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் தங்களது கையில் வைத்திருக்க வேண்டும் என்ற வலுவான விருப்பமும் இருக்கும்.</p><p>
கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இயல்பிலேயே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். </p><p>ஒரு குழுவில் இருந்தாலும், குடும்பத்தில் இருந்தாலும் அல்லது பணியிடத்தில் இருந்தாலும், தங்களது கருத்துக்கு மதிப்பு கிடைக்க வேண்டும் என்றும், தாங்கள் முக்கியமான நபராகக் கருதப்பட வேண்டும் என்றும் விரும்புவார்கள்.
</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T14:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள் பாதுகாப்பு: ஆண்களுக்கும் சிறுவயதிலிருந்தே விழிப்புணர்வு தேவை - நடிகை ரேவதி ஓபக் டாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-revathi-open-talk-about-women-safety-1788263295"></link>
            <id>https://manithan.com/article/actress-revathi-open-talk-about-women-safety-1788263295</id>
            <summary type="text">பெண்களின் முன்னேற்றம், விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து பேசுவதைவிட, முதலில் ஆண்களுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே பெண்கள் பாதுகாப்பு கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்களின் முன்னேற்றம், விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து பேசுவதைவிட, முதலில் ஆண்களுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நடிகை ரேவதி தெரிவித்த கருத்து தற்போது இணையத்தில் கவகம் ஈர்த்து வருகின்றது.&nbsp;</p><p>
‘பாரத் சோகா கக்காய்’ அறக்கட்டளை சார்பில், ‘பெண்களின் நூற்றாண்டு என்னிடம் இருந்து தொடங்குகிறது விழிப்புணர்வில் இருந்து செயல்பாட்டுக்கு’ என்ற தலைப்பில் 6-வது மகளிர் கருத்தரங்கம் சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் நேற்று நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deaaf04c-b45e-4a63-a687-ccd51d8b7842/26-6a96c0e1da0e6.webp' /></p><p>

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை ரேவதி, ‘வரசக்தி ஹவுசிங் பைனான்ஸ்’ நிறுவன இயக்குநர் கல்பனா சங்கர், ‘யெய்ன் உடான்’ நிறுவனர் வேதிகா அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p><h2>நடிகை ரேவதியின் கருத்து&nbsp;</h2><p>

நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரேவதி கூறியதாவது:

“பெண்கள் கல்வி, பொருளாதாரம், விண்வெளி ஆய்வு என பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனைகளைப் படைத்து வருகின்றனர். ஆனால், பெண்களின் பாதுகாப்பு என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. </p><p>சமூக வலைதளங்களில் தினமும் பல்வேறு சம்பவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.

பெண்களின் முன்னேற்றம் மற்றும் விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதைவிட, முதலில் ஆண்களுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே பெண்களை மதிப்பது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d326cc-c00b-4f27-ad39-8057456d1925/26-6a96c0e28c268.webp' /></p><p></p><p>
</p><p>
பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் நிலையில், படித்த குடும்பங்களில்கூட குடும்ப வன்முறை தொடர்ந்து கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.

பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல. பெண்களை ஆண்களைவிட உயர்வாகக் கருதுவதோ, ஆண்களை வெறுப்பதோ பெண்ணியம் கிடையாது.பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் பாதுகாப்பான சூழல் அவசியம்” என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>மாற்றம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e108b79e-3786-44d6-aa2b-167c09dd8ea7/26-6a96c0e347ccb.webp' /></p><p></p><p>அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரேவதி, “சினிமா உட்பட அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளன.</p><p> அந்த வாய்ப்புகளைப் பெண்கள் சிறப்பாகப் பயன்படுத்தி, தங்களது திறமையின் மூலம் முன்னேறி வருகின்றனர். ஆனால், சமூகத்தில் பெண்களின் நிலையை உண்மையாக மாற்ற வேண்டுமெனில், அதற்கான மாற்றம் வீடுகளிலிருந்தே தொடங்க வேண்டும். </p><p>வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என பெண்கள் இயங்கும் அனைத்து இடங்களிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://manithan.com/article/which-river-flows-backwards-in-india-1788259700" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T12:38:22+00:00</updated>
        </entry>
    </feed>
