<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-02T08:51:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஞ்சயை பார்த்து கண்கலங்கினேன் - ரவி மோகன் விவகாரத்தில் சுஜாதா விஜயகுமார் உருக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ravi-mohan-mother-in-law-open-up-family-issue-1785656921"></link>
            <id>https://manithan.com/article/ravi-mohan-mother-in-law-open-up-family-issue-1785656921</id>
            <summary type="text">நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களிலும், திரையுலக வட்டாரங்களிலும் அதிகம் பேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களிலும், திரையுலக வட்டாரங்களிலும் அதிகம் பேசப்படும் விஷயமாக இருந்து வருகிறது. </p><p>நீதிமன்ற நடவடிக்கைகள், ஜீவனாம்சம் தொடர்பான விவாதம், குழந்தைகளை சந்திக்கும் உரிமை, பாடகி கெனிஷா பிரான்சிஸின் பெயர் அடிக்கடி சர்ச்சையில் இழுக்கப்படுவது என இந்த விவகாரம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9181b17-b85d-46e3-ad52-9a36725b408c/26-6a6efda673d18.webp' /></p><p></p><h2>சுஜாதா விஜயகுமார் ஓபன் டாக்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
இந்த சூழலில், ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி இணையத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக அந்த பேட்டியில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுப் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c9246c2-b2cf-4115-89f5-8d9f23048c8a/26-6a6efda7c91cd.webp' /></p><p>
</p><p>
பேட்டியில் பேசிய சுஜாதா விஜயகுமார், சமீபத்தில் ஜேசன் சஞ்சய் அளித்த ஒரு நேர்காணலை பார்த்ததாக கூறினார். அதில், தனது தந்தையைப் பற்றி சஞ்சய் மிகுந்த மரியாதையுடனும் பெருமையுடனும் பேசிய விதம் தன்னை மிகவும் நெகிழச் செய்ததாகவும், அதைப் பார்த்தபோது கண்கலங்கியதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1706341-28c7-457b-b435-a2fbbe242816/26-6a6efda722731.webp' /></p><p>

"கணவன்–மனைவிக்குள் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், பிள்ளைகள் தங்கள் தந்தை மீது அன்பும் மரியாதையும் வைத்திருக்க வேண்டும். சஞ்சய் பேசிய விதம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு," என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதையடுத்து, தனது பேரன்கள் தொடர்பாக சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் சுஜாதா விஜயகுமார் பகிர்ந்துகொண்டார். அவரது குறிப்பிடுகையில், சுமார் 15 நாட்களுக்கு முன்பு தனது பேரன் வெளிநாட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக பாஸ்போர்ட் ஆவணங்களில் ரவி மோகனின் கையெழுத்து தேவைப்பட்டதாக தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/594a27ac-cca7-47ba-a5df-a482b598b34d/26-6a6efda8788eb.webp' /></p><p>
அதற்காக ரவி மோகனை தொடர்புகொண்டபோது, முதலில் வருவதாக கூறியதாகவும், பின்னர் அவரது தொலைபேசியில் இருந்து நீண்ட குறுஞ்செய்தி ஒன்று வந்ததாகவும் அவர் கூறினார். அந்த செய்தியில், "நான் ஏன் உதவ வேண்டும்? நான் என்ன ஏடிஎம் மெஷினா?" என்ற பொருளில் எழுதப்பட்டிருந்ததாகவும், அதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.
</p><p>
ஆனால், அந்த குறுஞ்செய்தியை நேரடியாக ரவி மோகனே அனுப்பியிருப்பார் என்று தாம் நம்பவில்லை என்றும், அவருடன் இருப்பவர்கள்தான் அதை அனுப்பியிருக்கலாம் என்று தனிப்பட்ட சந்தேகத்தை அவர் வெளிப்படுத்தினார்.

மேலும், பாடகி கெனிஷா பிரான்சிஸை குறிப்பிட்டும் சுஜாதா விஜயகுமார் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bc6fcdc-25b4-4966-8dde-e77de38faf5b/26-6a6efda9278f7.webp' /></p><h2>அந்த பெண்ணுடன் தான் இருக்கின்றார்...</h2><p> அவரது கூற்றுப்படி, கெனிஷா தற்போது கூட ரவி மோகனுடன் இருப்பதாகவும், வெளியில் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்ற தோற்றம் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.</p><p> மேலும், குழந்தைகளை சந்திக்கும் சூழலில் ஒரு ஹீலர் உடன் இருக்க வேண்டும் என்று ரவி தரப்பில்&nbsp; கூறப்படுவதாகவும், அப்படிப்பட்ட சூழலில் குழந்தைகள் எப்படி இயல்பாக செல்வார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார். குறித்த பேட்டி&nbsp; தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1ba5d54-c8e4-4b2c-be38-50a48a58d884/26-6a6efda9cc543.webp' /></p><p></p><p> ரவி மோகன்–ஆர்த்தி விவகாரத்தில் கெனிஷாவின் பெயர் ஏற்கனவே பலமுறை பேசப்பட்டது. அதற்கு அவர் முன்னதாகவே மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும், ரவி மோகனிடம் இருந்து விலகப் போவதாகவும், ஊடக வெளிச்சத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
</p><p>
இந்நிலையில், சுஜாதா விஜயகுமார் மீண்டும் கெனிஷா குறித்து கருத்து தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அதேபோல், ஜேசன் சஞ்சயை எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட அவரது பேச்சும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T08:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சியா விதை நீர்: இரண்டு வாரங்களுக்கு குடிச்சா கடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/benefits-of-soaking-chia-seeds-in-water-1785650344"></link>
            <id>https://manithan.com/article/benefits-of-soaking-chia-seeds-in-water-1785650344</id>
            <summary type="text">சமீப காலமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்புபவர்களிடையே சியா விதைகளை தண்ணீரில் அல்லது தேங்காய் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீப காலமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்புபவர்களிடையே சியா விதைகளை தண்ணீரில் அல்லது தேங்காய் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் பழக்கம் மிகவும் பிரபலமாகி வருகிறது.
</p><p>
சிறியதாகத் தோன்றும் இந்த விதைகள், உடலுக்குத் தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சியா விதைகள், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fad5e22e-a442-4a5d-9900-ee164c36b03f/26-6a6ee475a2d90.webp' /></p><p></p><p> இந்த எளிய பானத்தை தினசரி உணவுப் பழக்கத்தில் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் முக்கிய நன்மைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.</p><h2>ஆரோக்கிய நன்மைகள்&nbsp;</h2><p>
</p><p><b>
1. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது -&nbsp;</b>உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு சியா விதை தண்ணீர் ஒரு சிறந்த துணையாக இருக்கும். </p><p>சியா விதைகளில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், அவை தண்ணீரை உறிஞ்சி ஜெல்லி போன்ற அமைப்பாக மாறுகின்றன.</p><p> இதனால் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

இதன் காரணமாக அடிக்கடி பசி எடுப்பது குறையும்</p><p> தேவையற்ற சிற்றுண்டிகளைத் தவிர்க்க முடிவதால், தினசரி கலோரி உட்கொள்ளும் அளவும் குறையக்கூடும். இதனால் ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40afa092-438b-4e55-a551-42b8506b6065/26-6a6ee47655484.webp' /></p><p><b>

2. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது -</b>சியா விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த தாவர மூலமாகக் கருதப்படுகின்றன. இந்த அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை உடலால் தானாக உருவாக்க முடியாது.எனவே, உணவின் மூலமாகவே அவற்றைப் பெற வேண்டியுள்ளது.</p><p>
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. நீண்டகால அழற்சி, இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
</p><p>
மேலும், இவை டிரைகிளிசரைடு அளவைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கவும் உதவக்கூடும். </p><p>இதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தி, மாரடைப்பு மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2f3c64e-e8f5-4ae9-9612-183b7a3c470b/26-6a6ee4770870b.webp' /></p><p>
</p><p><b>
3. உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது - </b>சியா விதைகளை சாதாரண தண்ணீரில் ஊறவைத்தும் பருகலாம். அதேபோல், தேங்காய் நீரில் ஊறவைத்து அருந்துவதும் சிறந்த தேர்வாகும்.

தேங்காய் நீரில் பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் போன்ற இயற்கை எலக்ட்ரோலைட்டுகள் அதிகளவில் உள்ளன.</p><p>இவை உடலின் திரவச் சமநிலையைப் பராமரிக்கவும், தசைகளின் இயல்பான செயல்பாட்டை ஆதரிக்கவும், உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் உதவுகின்றன.
</p><p>
குறிப்பாக உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது அதிக வெப்பமான காலநிலையில் உடலில் இழக்கும் நீர்ச்சத்தையும் தாதுக்களையும் மீண்டும் நிரப்ப இந்த கலவை பயனுள்ளதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/227b8f54-ecf7-4a56-bdcb-8256ca9986e3/26-6a6ee477ae31f.webp' /></p><p></p><p><b>

4. இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது -</b> சியா விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, உணவு செரிமானமாகும் வேகத்தை மெதுவாக்குகிறது. </p><p>இதன் காரணமாக உணவுக்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை ஓரளவு கட்டுப்படுத்த உதவுகிறது.
</p><p>
இதனால் இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் அல்லது நீரிழிவு நோயாளிகள், மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனையுடன் சியா விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது இரத்தச் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவக்கூடும்.</p><p><b>குறிப்பு - </b>இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தும் முன்னர் உரிய மருத்துவ ஆலோசனை பெற்றதன் பின்னர் பயன்படுத்துவதே நல்லது.</p><p><iframe width="325" height="578" src="https://www.youtube.com/embed/0HjOIFLUDuY" title="2 வாரம் தொடர்ந்து Chia Seeds குடிச்சா என்ன ஆகும்? 😱 | Chia Seeds Benefits in Tamil" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T06:34:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: நிதி நிலையில் ஏற்றம் பெறும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-transit-in-gemini-on-today-who-get-benefits-1785645794"></link>
            <id>https://manithan.com/article/mars-transit-in-gemini-on-today-who-get-benefits-1785645794</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் தளபதி என்று போற்றப்படும் செவ்வாய், தைரியம், வீரியம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் தளபதி என்று போற்றப்படும் செவ்வாய், தைரியம், வீரியம், ஆற்றல், உற்சாகம், செயல்திறன் மற்றும் போரின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.</p><p> ஒருவரின் வாழ்க்கையில் முன்னேற்றம், போட்டிகளில் வெற்றி, தன்னம்பிக்கை மற்றும் செயல்பாட்டு திறன் ஆகியவற்றில் செவ்வாயின் நிலை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட ரீதியில் நம்பப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dde6bd9c-18c9-4d9c-8da7-7402121785c7/26-6a6ed0273e1d4.webp' /></p><p></p><p>அதனால், செவ்வாயின் ராசி மாற்றம் அல்லது இயக்கத்தில் ஏற்படும் எந்த மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க பலன்களையும் மாற்றங்களையும் உருவாக்கும் என நம்பப்படுகிறது</p><p>இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்திலேயே செவ்வாய் தனது ராசியை மாற்ற உள்ளார். ஆகஸ்ட் 2ஆம் தேதியான இன்று புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்குள் செவ்வாய் பிரவேசிக்கிறார். ஜோதிடக் கணிப்பின்படி, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகப் பெயர்ச்சியாகக் கருதப்படுகிறது. </p><p>இதன் தாக்கம் 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும், தொழில் மற்றும் நிதி ரீதியில் அதிகளிவில் சாதக நன்மைகளை பெறப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc39a88-7e2c-4cc9-8de4-3acbaef8fea4/26-6a6ed027e8844.webp' /></p><p> செவ்வாய் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலம். கடன் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும், சேமிப்பு உயரும். </p><p>பணியிடத்தில் பாராட்டு, சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள், முதலீட்டில் லாபம், குடும்ப மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.</p><h2>

மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01378238-af17-4180-9d0b-fc4c390f5fd0/26-6a6ed0289ec4e.webp' /></p><p>புதன் ஆதிக்கம் கொண்ட மிதுன ராசிக்கு இந்த பெயர்ச்சி தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும். முயற்சிகளுக்கு அதிர்ஷ்டம் துணையாக இருக்கும்.</p><p> மேலதிகாரிகளின் ஆதரவு, பழைய உழைப்புக்கு பலன், பயண வாய்ப்புகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5decd384-5bf4-4466-824b-776dcfb9d064/26-6a6ed02964013.webp' /></p><p> துலாம் ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலம். வியாபாரத்தில் நல்ல வருமானம், பணியில் பதவி உயர்வு கிடைக்கலாம். தம்பதியர் உறவு மேம்படும். </p><p>சட்ட விவகாரங்களில் சாதகமான முடிவு, வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு, தொழில் தொடர்பான பயணங்களால் கூடுதல் லாபம் கிடைக்கும்.</p><h2>

கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2edc3f81-0c05-41f2-b5fb-f0c795f65c73/26-6a6ed02a1a817.webp' /></p><p></p><p>செவ்வாய் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் நீண்டநாள் நிலுவைப் பணிகள் வெற்றிகரமாக முடியும். வெளிநாட்டில் படிக்க விரும்புவோருக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும்.</p><p>மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மொத்தத்தில் முன்னேற்றமும் நிம்மதியும் நிறைந்த காலமாக இருக்கும். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T05:39:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி மாதத்தில் வேப்பிலை மஞ்சள் வழிபாட்டின் ரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/aadi-velli-pooja-benefits-in-tamil-1785500979"></link>
            <id>https://manithan.com/article/aadi-velli-pooja-benefits-in-tamil-1785500979</id>
            <summary type="text">ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.

இந்த மாதத்தில் அம்மனின் சக்தி இரு மடங்காக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்காலத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.
</p><p>
இந்த மாதத்தில் அம்மனின் சக்தி இரு மடங்காக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.</p><p>

இக்காலத்தில் ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் மற்றும் ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் அம்மன் வழிபாடு சிறப்பிக்கப்படுகிறது.</p><p>

அம்மனுக்குக் கூழ், களி மற்றும் முளைப்பாரி படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
</p><p>
மேலும், சர்க்கரை பொங்கல் மற்றும் பால் பாயசம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.</p><p>

ஆடி மாதத்தில் அம்மனை வழிபட வேப்பிலையும் மஞ்சளும் மிகவும் முக்கியமானவை.
</p><p>
இவை நோய்களில் இருந்து காப்பதோடு, வீதிற்கு நேர்மறை ஆற்றலையும் தருகின்றன.
</p><p>
அந்தவகையில், ஆடி மாதத்தில் வேப்பிலை மஞ்சள் வழிபாட்டின் ரகசியம் குறித்து ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1_BAPeWLUkk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-02T05:15:42+00:00</updated>
        </entry>
    </feed>
