<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-27T17:57:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்மன் கோவிலில் மறந்தும் செய்யக்கூடாத 5 தவறுகள்.., என்னென்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/5-things-never-do-even-by-mistake-in-amman-temples-1785155868"></link>
            <id>https://manithan.com/article/5-things-never-do-even-by-mistake-in-amman-temples-1785155868</id>
            <summary type="text">ஆடி மாதம் மட்டுமின்றி அனைத்து மாதங்களிலும், குறிப்பாக வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பலரும் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர். 

அம்மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் மட்டுமின்றி அனைத்து மாதங்களிலும், குறிப்பாக வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பலரும் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர். </p><p>

அம்மன் கோவில்களில் சில முக்கியமான மரபுகள் உள்ளன. அவற்றை முறையாகப் பின்பற்றி வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.</p><p>

அதன்படி, அம்மன் கோவிலுக்கு செல்லும்போது சில தவறுகளை செய்யக்கூடாது என ஆன்மிக நம்பிக்கைகள் கூறுகின்றன.</p><p> 

அந்தவகையில், அம்மன் கோவிலுக்கு சென்றால் மறந்தும் செய்யக்கூடாத 5 முக்கிய தவறுகள் குறித்து பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b8d23ac-31e6-467f-9db8-1e6f6ddefe00/26-6a67511ec3e32.webp' /></p><h3>1. கோவில் வாசல் படியை மிதிக்கக் கூடாது</h3><p>

அம்மன் கோவிலுக்குள் நுழையும்போது வாசலில் இருக்கும் படியை மிதிக்காமல் தாண்டிச் செல்ல வேண்டும் என்பது மரபு. அந்தப் படியில் காவல் தெய்வங்கள் இருப்பதால், படியை மிதிப்பது அவமரியாதையாகக் கருதப்படுகிறது.</p><h3>

2. அம்மனை கண்களை மூடி வழிபடக் கூடாது</h3><p>

மாரியம்மன், காளியம்மன், துர்க்கை அம்மன் போன்ற தெய்வங்களை வழிபடும்போது அம்மனின் திருமேனியை பார்த்து வழிபட வேண்டும் என கூறப்படுகிறது.</p><h3> 

3. எலுமிச்சை விளக்கை எங்கு வேண்டுமானாலும் ஏற்றக் கூடாது
</h3><p>
அம்மன் கோவில்களில் வேண்டுதலுக்காக ஏற்றப்படும் எலுமிச்சை விளக்கை கோவில் பிரகாரத்தில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் மட்டுமே எலுமிச்சை விளக்கை ஏற்ற வேண்டும் என்பது வழக்கம்.</p><h3>

4. கொடிமரம் மற்றும் பலிபீடத்தின் நிழலை மிதிக்கக் கூடாது
</h3><p>
கோவிலில் உள்ள கொடிமரம், பலிபீடம் மற்றும் ராஜகோபுரத்தின் நிழலை மிதிக்கக் கூடாது என்பது ஆன்மிக நம்பிக்கை. </p><h2>

5. தவறான திசையில் வலம் வரக்கூடாது
</h2><p>
அம்பாள் சன்னதியை ஆகம விதிகளுக்கு மாறாக தவறான திசையில் சுற்றி வரக்கூடாது என கூறப்படுகிறது. மேலும், அம்மன் கோவில்களில் 5 முறை வலம் வந்து வழிபடுவது சிறப்பானது என்ற நம்பிக்கை உள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T16:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுநீரகக் கல் உள்ளவர்கள் தக்காளி சாப்பிடலாமா? மருத்துவரின் கூற்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/health-can-eating-tomatoes-cause-kidney-stones-1785154307"></link>
            <id>https://manithan.com/article/health-can-eating-tomatoes-cause-kidney-stones-1785154307</id>
            <summary type="text">சிறுநீரகக் கற்கள் என்பவை சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகள் கடினமான படிகங்களாக மாறுவதாகும். 

இவை போதிய தண்ணீர் குடிக்காமல் இருத்தல், அதிக உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறுநீரகக் கற்கள் என்பவை சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகள் கடினமான படிகங்களாக மாறுவதாகும். </p><p>

இவை போதிய தண்ணீர் குடிக்காமல் இருத்தல், அதிக உப்பு உணவுகள் மற்றும் மரபுவழி காரணங்களால் உருவாகின்றன.
</p><p>
குறிப்பாக, இளைஞர்களிடையே சிறுநீரகக் கற்கள் அதிகரித்து வருவதால் உணவு விஷயத்தில் பலரும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.</p><p>

சிறுநீரகக் கல் உள்ளவர்கள் தக்காளி சாப்பிடக்கூடாது என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது.
</p><h2>
மருத்துவரின் கூற்று</h2><p>இதுகுறித்து சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் அமரேந்திர பதக் கூறுகையில், சிறுநீரகக் கற்களில் கால்சியம் ஆக்சலேட் கற்களே மிகவும் பொதுவானவை. </p><p>

தக்காளியில் சிறிதளவு ஆக்சலேட் இருந்தாலும், சிறுநீரகக் கல் உள்ளவர்கள் தக்காளியை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1b7f1c-4e7a-4a2a-bbb9-9ebf806d2e7f/26-6a674b06558af.webp' /></p><p>மிதமான அளவில் தக்காளி சாப்பிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், அடிக்கடி கால்சியம் ஆக்சலேட் கற்கள் உருவாகும் நபர்கள் தங்கள் உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும்.&nbsp;</p><p>போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, அதிக உப்பு உட்கொள்வது, அதிக ஆக்சலேட் உள்ள உணவுகளை சாப்பிடுவது, பரம்பரை காரணிகள் மற்றும் சில உடல்நலப் பிரச்சனைகள் சிறுநீரகக் கற்களுக்கு காரணமாக இருக்கலாம்.
</p><p>
உடலில் நீர்ச்சத்து குறையும்போது சிறுநீர் அடர்த்தியாகி, அதில் உள்ள தாதுக்கள் படிந்து கற்கள் உருவாகலாம். </p><h2>

செய்ய வேண்டியவை
</h2><p>
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரகக் கற்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. </p><p>

அதிக உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களை அதிகமாக உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.</p><p>

ஒவ்வொரு நபருக்கும் சிறுநீரகக் கற்களின் காரணமும், கல் வகையும் மாறுபடும் என்பதால் மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் உணவு முறையைத் தீர்மானிப்பது அவசியம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad00ce1d-d491-4835-997c-dc0d64f773f4/26-6a674b05a3fc0.webp' /></p><p>மேலும், தக்காளியில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் லைக்கோபீன் போன்ற சத்துக்கள் உள்ளன.</p><p> 

எனவே, சிறுநீரகக் கல் உள்ளவர்கள் தக்காளியை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை, அளவோடு சாப்பிடுவதுடன், தனிப்பட்ட உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.</p>]]></content>
            <updated>2026-07-27T15:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[எத்தனை நாட்கள் கோவிலுக்கு சென்றால் என்ன பலன் கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/visiting-temple-daily-spiritual-benefits-1785065206"></link>
            <id>https://manithan.com/article/visiting-temple-daily-spiritual-benefits-1785065206</id>
            <summary type="text">பொதுவாக கோவிலுக்கு சென்று வழிபடுவதால் மன அமைதியும், நேர்மறை எண்ணங்களும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. 

தினமும் கோவிலுக்கு செல்வது சாத்தியமில்லாதவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக கோவிலுக்கு சென்று வழிபடுவதால் மன அமைதியும், நேர்மறை எண்ணங்களும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.</p><p> 

தினமும் கோவிலுக்கு செல்வது சாத்தியமில்லாதவர்கள், முக்கிய நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.</p><p> 

இறை நம்பிக்கையுடன் கோவிலுக்கு சென்று வழிபடுவதால் நினைத்த காரியம் நடக்கும் என்று நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dcdd052-0358-4e91-835b-c36b17936ffa/26-6a65eef8a34c5.webp' /></p><p>

அதேபோல், தினமும் ஒரே கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
</p><p>
இருப்பினும், தொடர்ந்து குறிப்பிட்ட நாட்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என ஆன்மீக நம்பிக்கைகள் கூறுகின்றன.
</p><p>
அந்தவகையில், தொடர்ந்து கோவிலுக்கு செல்வதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.&nbsp;</p><p><b>7 நாட்கள் –</b> தடைப்பட்ட திருமணம் கைகூடும்.</p><p><b>
9 நாட்கள் – </b>தரித்திரம் விலகும்.
</p><p><b>11 நாட்கள் – </b>கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.</p><p><b>
15 நாட்கள் –</b> நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
</p><p><b>21 நாட்கள் – </b>குழந்தைச் செல்வம் கிடைக்கும்.
</p><p><b>ஒரு மாதம் –</b> அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும்.
</p><p><b>48 நாட்கள் (ஒரு மண்டலம்) – </b>ஆன்மீக பலன்கள் கிடைக்கும்.</p><p><b>
108 நாட்கள் – </b>தேவேந்திர பூஜை செய்த பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.</p><p><b>
1008 நாட்கள் – </b>அஸ்வமேத யாகம் செய்த பலனும், முக்தியும் கிடைக்கும் என ஆன்மீக நம்பிக்கை உள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T14:03:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழும் கிராம மக்கள்.., எங்கு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/nepals-kidney-valley-village-in-tamil-1785149559"></link>
            <id>https://manithan.com/article/nepals-kidney-valley-village-in-tamil-1785149559</id>
            <summary type="text">பொதுவாக, மனித உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. 

மனிதர்களால் ஒரு சிறுநீரகம் இல்லாவிட்டாலும் மற்றொரு சிறுநீரகத்தின் உதவியுடன் உயிர் வாழ முடியும். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, மனித உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. </p><p>

மனிதர்களால் ஒரு சிறுநீரகம் இல்லாவிட்டாலும் மற்றொரு சிறுநீரகத்தின் உதவியுடன் உயிர் வாழ முடியும். </p><p>

இதனால் சிலர் தங்களின் சிறுநீரகத்தை விற்கும் சம்பவங்கள் நடக்கின்றன. </p><p>

ஆனால், நேபாளத்தில் உள்ள ஒரு கிராமம் சிறுநீரக விற்பனை காரணமாக உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27234fa6-a609-4342-86bd-06f111cb43ea/26-6a67387a5900a.webp' /></p><p>நேபாளத்தின் காவ்ரேபிளாஞ்சோக் மாவட்டத்தில் உள்ள ஹோக்ஸே கிராமம், சிறுநீரகப் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.</p><p> 

இந்த கிராமத்தில் உள்ள பல குடும்பங்களில் குறைந்தது ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.&nbsp;</p><p>கடும் வறுமை, கடன் மற்றும் அடிப்படை தேவைகளுக்கான பணத் தேவை காரணமாக பலர் சிறுநீரகத்தை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். </p><p>

இதனை பயன்படுத்தி கொண்ட தரகர்கள், கிராம மக்களை ஏமாற்றி சட்டவிரோதமாக சிறுநீரகங்களை அகற்றி விற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29fee24d-c9db-413a-9496-a976ea60e573/26-6a67387b094e8.webp' /></p><p>

பல கிராம மக்கள் தங்கள் சிறுநீரகங்களை 20,000 முதல் 70,000 நேபாள ரூபாய் வரை விற்றதாகக் கூறப்படுகிறது.</p><p> 

இதன்மூலம் உறுப்பு கடத்தல் கும்பல்கள் குறைந்த விலையில் சிறுநீரகங்களைப் பெற்று அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>முடி மற்றும் நகங்களைப் போல சிறுநீரகமும் மீண்டும் வளரும் என்று கூறி, தரகர்கள் மக்களை ஏமாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4f04c5c-99f4-47f9-81f0-d951fd413c82/26-6a67387bb86c7.webp' /></p><p>மருத்துவ அறிவு மற்றும் கல்வியறிவு இல்லாததால் பலர் இந்தப் பொய்யை நம்பி சிறுநீரகத்தை விற்றதாகக் கூறப்படுகிறது.</p><p>

சிறுநீரகத்தை விற்பது நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. </p><p>

மேலும், சட்டவிரோத அறுவை சிகிச்சைகள் காரணமாக பலர் உடல்நலக் குறைபாடுகள், மருத்துவ சிக்கல்கள், உளவியல் பாதிப்புகளை சந்தித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-07-27T14:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதுவும் ஒரு Gen Z வார்த்தையா? அர்த்தம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/famous-gen-z-words-meaning-in-tamil-1785156650"></link>
            <id>https://manithan.com/article/famous-gen-z-words-meaning-in-tamil-1785156650</id>
            <summary type="text">தற்போது இளைஞர்கள் மத்தியில் Gen Z வார்த்தைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் புதிய புதிய Gen Z வார்த்தைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது இளைஞர்கள் மத்தியில் Gen Z வார்த்தைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
</p><p>
கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் புதிய புதிய Gen Z வார்த்தைகள் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமடைந்து, இளைஞர்களின் அன்றாட பேச்சில் இடம்பிடித்து வருகின்றன.</p><p>முன்னர் சாதாரணமாக பயன்படுத்தப்பட்ட பல வார்த்தைகள், காலப்போக்கில் புதிய அர்த்தங்களுடன் Gen Z ஸ்டைல் வார்த்தைகளாக மாறியுள்ளன.</p><p></p><p>
</p><p>
ஒருவரை பாராட்டுவது, கிண்டல் செய்வது, அலட்சியப்படுத்துவது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது என ஒவ்வொரு சூழலுக்கும் தனித்தனி Gen Z வார்த்தைகள் உருவாகியுள்ளன.
</p><p>
அத்துடன், பலர் இவை Gen Z வார்த்தைகள் என்பதையே அறியாமல் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.
</p><p>
அந்த வகையில், தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் Gen Z வார்த்தைகள் என்னென்ன? அவற்றின் உண்மையான அர்த்தம் என்ன? என்பதை கீழே உள்ள காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><iframe width="463" height="823" src="https://www.youtube.com/embed/6HN59xN9Uw4" title="Gen Z வார்த்தைகளின் உண்மையான அர்த்தம்! 🤯 | Gen Z Slang Words Explained in Tamil #shorts" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T13:53:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலில் அடியெடுத்து வைக்கும் நடிகர் தனுஷ்?- அவரே கொடுத்த ஹின்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actor-dhanush-political-entry-speech-spark-fans-1785152908"></link>
            <id>https://manithan.com/article/actor-dhanush-political-entry-speech-spark-fans-1785152908</id>
            <summary type="text">நடிகர் தனுஷ் வரும் 28ஆம் தேதி தனது 48வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். 

சமீபத்தில் ராயன் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதும், கேப்டன் மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் தனுஷ் வரும் 28ஆம் தேதி தனது 48வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். </p><p>

சமீபத்தில் ராயன் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதும், கேப்டன் மில்லர் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் தனுஷுக்கு அறிவிக்கப்பட்டது.
</p><p>
இதனிடையே, தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. </p><p>

அவரது ரசிகர் மன்றத்துக்கான புதிய கொடி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcf9aef2-c899-4445-b211-94535a0e59ef/26-6a674617651fd.webp' /></p><p>

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ரசிகர் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.</p><p> 

இதில் கலந்துகொண்ட தனுஷ், ரசிகர்கள் தங்களைச் சுற்றியுள்ள மக்களின் பிரச்சினைகளை கவனித்து, அவர்களுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
</p><p>
மேலும், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்ய ரசிகர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p> </p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Dhanush?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Dhanush</a> gives a Strong hint about his Political Entry:<br><br>&quot;So many people have gathered in one place.. This kind of unity has a power..💪 You need to give that unity a purpose.. Not just through audio launches and meet ups. Join hands and do more welfare work.. Do whatever you can…</p>&mdash; Laxmi Kanth (@iammoviebuff007) <a href="https://x.com/iammoviebuff007/status/2081407645572063497?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>தனுஷின் இந்த பேச்சு, அவரது அரசியல் பயணத்திற்கான தொடக்கமாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>

இதனிடையே, தனுஷின் அரசியல் வருகை குறித்து அவரது தந்தை கஸ்தூரி ராஜாவிடம் கேட்கப்பட்டபோது, "அரசியலுக்கு வருவது தனுஷின் தனிப்பட்ட முடிவு. அவர் கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும், இல்லையென்றால் இருக்கட்டும். அது குறித்து நான் எதுவும் கேட்க மாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T12:45:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களின் அழகை கெடுக்கும் கருவளையம் - செலவே இல்லாமல் சரிச் செய்வது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-remove-dark-circles-simple-tips-1785155791"></link>
            <id>https://manithan.com/article/how-to-remove-dark-circles-simple-tips-1785155791</id>
            <summary type="text">கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் (Dark Circles) என்பது இன்று பலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது.

போதிய தூக்கமின்மை, அதிக மனஅழுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் (Dark Circles) என்பது இன்று பலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது.</p><p>

போதிய தூக்கமின்மை, அதிக மனஅழுத்தம், நீண்ட நேரம் கணினி மற்றும் மொபைல் போன் பயன்படுத்துவது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது.</p><p>

முன்பு பெண்களிடம் அதிகம் காணப்பட்ட இந்த பிரச்சினை, தற்போது ஆண்களிடமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>
நாம் அன்றாடம் செய்யும் சில சிறிய தவறுகள்கூட கண்களைச் சுற்றி கருவளையம் உருவாக முக்கிய காரணமாக இருக்கலாம்.</p><p>

அப்படியானால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தை மருந்துகள் இல்லாமலேயே எளிய இயற்கை வழிமுறைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் எவ்வாறு குறைக்கலாம் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.</p><p><iframe width="463" height="823" src="https://www.youtube.com/embed/Gxm93M4un5I" title="கண்களை சுற்றி கருவளையமா? இத கண்டிப்பா பாருங்க! 😱 | Dark Circles Tips Tamil" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:38:13+00:00</updated>
        </entry>
    </feed>
