<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-24T08:29:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசம்: யாருக்கெல்லாம் கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/3-gas-cylinder-free-scheme-in-tamilnadu-1787556148"></link>
            <id>https://manithan.com/article/3-gas-cylinder-free-scheme-in-tamilnadu-1787556148</id>
            <summary type="text">3 Gas Cylinder Free Scheme in Tamilnadu: அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>3 Gas Cylinder Free Scheme in Tamilnadu: அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.</p><h2>முதலமைச்சர் விஜய் அதிரடி</h2><p>
</p><p>
2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது, குடிநீர் வழங்கல்துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ்வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QbblpgN31ao" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இன்று காலை கூட்டம் தொடங்கியதும் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
</p><p>
அதில் பெண்களின் முன்னேற்றத்தை முதன்மையாக கொண்டு நமது அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, சிங்கப்பெண் உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.</p><h2>அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்</h2><p> 

குடும்பதலைவி பயன்பெறும் வகையில் அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் செயல்படுத்தப்படுகிறது, முதற்கட்டமாக மூன்று சிலிண்டர் வழங்கப்படும், சிலிண்டருக்கான தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
</p><p>
ஜனவரி மாதம் தை பொங்கல் முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும், ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வரை வருமானம் பெறுவோரின் குடும்பத்தினர் பயன்பெறுவர் என அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9421e810-64ad-4ddf-bc19-f3db5b3af8ff/26-6a8bf28bad267.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:28:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோஜா செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க எப்சம் உப்பு பயன்படுத்தலாமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/can-we-use-epsom-salt-for-rose-flower-planting-1787483815"></link>
            <id>https://manithan.com/article/can-we-use-epsom-salt-for-rose-flower-planting-1787483815</id>
            <summary type="text">எல்லோருடைய வீடுகளிலும் ரோஜா செடி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதாவது, ரோஜாவில் இருக்கக்கூடிய நறுமணமும் அழகிலும் மயங்காதவர்கள் நிச்சயம...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்லோருடைய வீடுகளிலும் ரோஜா செடி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதாவது, ரோஜாவில் இருக்கக்கூடிய நறுமணமும் அழகிலும் மயங்காதவர்கள் நிச்சயம் யாரும் இருக்க முடியாது. ஆனால், ஒரு சிலர் அவர்களுடைய தோட்டத்தில் செய்யக்கூடிய சிறிய தவறினால் அவர்களுடைய ரோஜா செடி பெரிய அளவில் வளர்வதில்லை. </p><p>அதனால், பூக்கள் பூக்காத நிலை மற்றும் செடியின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது போன்றவை ஏற்படுகிறது. இவ்வாறான தோட்ட பிரச்சனைகளுக்கு இயற்கை மற்றும் எளிய தீர்வு தான் எப்சம் உப்பு.</p><h3> 
ரோஜா செடிகளுக்கு எப்சம் உப்பு ஏன் அவசியம்:
</h3><p>மெக்னீசியம் சல்பேட் என்று அழைக்கக்கூடிய எப்சம் உப்பில் மெக்னீசியம் மற்றும் சல்பர் ஆகிய இரண்டு முக்கியமான சத்துக்கள் நிறைந்திருக்கிறது. அதனால் தாவரங்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான இலைகளுக்கும் பெரிதாக உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91cc8a53-feed-4c0c-b329-9a8cf00d9efa/26-6a8ad6a8dde71.webp' /></p><p>நம்முடைய இலைகளில் குளோரோஃபில் உற்பத்தியை அதிகரித்து அவை இலைகளை அடர் பச்சையாக மாற்ற உதவுகிறது.<br></p><p>அதோடு செடிகள் மண்ணிலிருந்து பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் போன்ற பிற சத்துக்களை எளிதில் உறிஞ்சவும் உதவுகிறது. செடியின் அடிப்பகுதியில் இருந்து புதிய தண்டுகள் வளரவும் மற்றும் துளர்கள் வளர தூண்டுகிறது.மேலும், இந்த எப்சம் உப்பை செடியில் இரண்டு வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.</p><h3>
முதல் முறை:</h3><p>எப்சம் உப்பை செடியின் அடிப்பகுதியை சுற்றிலும் சமமாக தூவிக் கொள்ள வேண்டும். ஆனால், தண்டில் நேரடியாக படுவதை தவிர்க்க வேண்டும். தண்டிலிருந்து சில அங்குலங்கள் தள்ளி பரப்ப வேண்டும். அதேபோல், ஒரு சிறிய மண்வெட்டி அல்லது தோட்ட கருவியை பயன்படுத்தி எப்சம் உப்பு மேலிருக்கும்மண்ணுடன் லேசாக கலக்குமாறு கிளறி விட வேண்டும்.</p><p> பிறகு உப்பு மண்ணில் நன்றாக கரைந்து வேர்களுக்கு செல்வதற்காக, பயன்பாட்டிற்கு பிறகு செடிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். செடிகள் வளரும் பருவத்தில் இருக்கும் பொழுது மாதத்தில் ஒரு முறை இதை செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d37ab1f-634b-4e2a-ab2e-93651823caa6/26-6a8ad6a99d54d.webp' /></p><h3>
 இரண்டாம் முறை:
</h3><p> ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் உப்பு நன்றாக கரைத்துக் கொண்டு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அதை ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு வெயில் இல்லாத காலை நேரத்தில் அல்லது மாலையில் கிளைகளின் மீது நன்கு படுமாறு அதனை தெளிக்க வேண்டும். இதை மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஒருமுறை செய்யலாம்.
</p><h3> கவனிக்க வேண்டியவை:
</h3><p> கடும் வெயில் காலம் அல்லது வறட்சியான கால நிலையின் பொழுது எப்சம் உப்பு பயன்படுத்துவதை நாம் தவிர்ப்பது நல்லது. காரணம், அதிகப்படியான வெப்பமும் வளர்ச்சியும் இது கூடுதல் அழுத்தத்தை கொடுக்கக்கூடும். அதே சமயம், இந்த எப்சம் உப்பை அளவிற்க்கு அதிகமாக பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். அது மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களின் சமநிலையில் பாதிக்க செய்யும்.</p><p> உங்களுடைய தோட்டத்து மண்ணில் ஏற்கனவே தேவையான அளவு மெக்னீசியம் இருந்தால் எப்சம் உப்பு உங்களுக்கு தேவைப்படாது.
 அதனால், மண்ணை பரிசோதித்து கொள்வது அவசியம். குறிப்பாக ரோஜா செடிகளுக்கு தினமும் குறைந்தது ஆறு மணி முதல் நேரடி சூரிய ஒளி கிடைக்க செய்யுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/210ad470-98c9-417c-8ea4-7f1f5e774a58/26-6a8ad6aa4e906.webp' /></p><p>பூக்கள் பூத்து முடித்தவுடன் செடியின் காய்ந்த கிளைகளை கத்தரித்து விடுவது புதிய துளிர்களை வர வழிவகுக்கும். ​2017ல் Frontiers in Plant Science இதழில் வெளியான ஒரு ஆய்வின்படி, ரோஜா செடிகள் உள்ள மெக்னீசியம் சல்பேட் கரைசலை இலைகளில் தெளிக்கும்பொழுது பூக்களின் உற்பத்தி 26 சதவீதம் முதல் 38 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது.<br></p><p> அதாவது மெக்னீசியம் சத்து தாவரங்களில் ஒட்டுமொத்த செயல் திறனை மேம்படுத்தி நமக்கு அதிகம் பூக்கள் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T07:11:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூனைக்கு CFO பதவி! பலரது கவனத்தை ஈர்த்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ginger-cat-gets-a-job-title-cfo-mumbai-metro-1787548725"></link>
            <id>https://manithan.com/article/ginger-cat-gets-a-job-title-cfo-mumbai-metro-1787548725</id>
            <summary type="text">Chief Feline Officer Cat Mumbai Metro: மும்பை மெட்ரோவின் 7வது வழிதடத்தில் குண்டவாலி மெட்ரோ நிலைய நுழைவாயிலில் பூனைக்கு CFO கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chief Feline Officer Cat Mumbai Metro: மும்பை மெட்ரோவின் 7வது வழிதடத்தில் குண்டவாலி மெட்ரோ நிலைய நுழைவாயிலில் பூனைக்கு CFO கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2>
 பூனைக்கு CFO கௌரவ பதவி</h2><p>கடந்த பல மாதங்களாக நுழைவாயிலில் அமர்ந்துள்ள பூனை பலருக்கும் பரீட்சியமாகிவிட்டன.

இதன் அமைதியான தோற்றம் காரணமாக பலரும் அதை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட வைரலானது.
</p><p>
இந்நிலையில் சந்தேஷ் சாமந்த் என்பவர் பூனையை படமெடுத்து மெட்ரோ நிர்வாகத்திடம், ”அன்பான உயிருக்கு பதவியை வழங்குங்கள் என்றும் ஊதியம் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும்” குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39502c7-354c-4802-8e03-9c2c7ed4c939/26-6a8bd4c2b63fa.webp' /><br></p><h2>மெட்ரோ நிர்வாகம் பதிவு</h2><p>
</p><p>
இதனை ஏற்றுக்கொண்ட மும்பை மெட்ரோ நிர்வாகம் பூனைக்கு CFO பதவியை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

மேலும் நிலையத்தை ஆய்வு செய்வது, பயணிகளை கண்காணிப்பது போன்ற பொறுப்புகள் அளிக்கப்படுவதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f81b3fa5-fb34-4fa0-99b2-e604f7fe4cda/26-6a8bd4c367a93.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-24T05:21:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரத்த சோகை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய முள் இல்லாத மீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/best-fish-for-anemic-patients-to-eat-1787483281"></link>
            <id>https://manithan.com/article/best-fish-for-anemic-patients-to-eat-1787483281</id>
            <summary type="text">பலருக்கும் சரியான ஊட்டச்சத்து இல்லாமையால் ரத்த சோகை ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில், ரத்த சோகை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய மீன் வகைகளை பற்றி பார்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலருக்கும் சரியான ஊட்டச்சத்து இல்லாமையால் ரத்த சோகை ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில், ரத்த சோகை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய மீன் வகைகளை பற்றி பார்ப்போம். மிகவும் எளிதான தோற்றத்தில் மற்றும் நீளமான உடல் அமைப்பை கொண்ட ஒரு மீன் நமக்கு ஏற்படுகின்ற ரத்த சோகை ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவியாக இருக்கிறது.</p><p> இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ள ஒரு ஆரோக்கியமான மீன்தான் செல்வ முரல் மீன்.
இது உருளை வடிவ உடலையும் கூர்மையான ஊசி போன்ற நீண்ட தாடகைளையும் கொண்ட ஒரு தனித்துவமான கடல் மீன் வகையாகும். இதனுடைய மேல் பகுதியில் பளபளப்பான சாம்பல் அல்லது நீல நிறத்திலும் அடிவயிற்று பகுதி வெள்ளி நிறத்திலும் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e06b2ad-eee8-4bc1-8ecd-5db9eec6ef10/26-6a8ad4936ec23.webp' /></p><p></p><p> அந்த வகையில், இந்த மீன்களை நாம் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
 இந்த மீன்களை நாம் சாப்பிடுகின்ற பொழுது நம்முடைய உடல் திசுக்களை புதுப்பிக்கவும் தசை வளர்ச்சியை மேம்படுத்துவதோடு நமக்கு தேவையான உயர்தர புரோட்டீன்கள் இந்த மீனில் நிறைந்துள்ளது. </p><p>ஆதலால், வளரும் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இது சிறந்த உணவாகும். அதே போல், இந்த மீன்களில் ஆரோக்கியமற்ற கெட்ட கொழுப்புகள் இல்லை. அதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ளலாம். </p><p>இந்த மீனில் உள்ள ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதுடன் நமக்கு மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்கிறது. மேலும், இவை நம்முடைய நினைவாற்றலை அதிகரிப்பதோடு சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. </p><p>வைட்டமின் டி கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் அதிகளவில் இருப்பதால் நம்முடைய பற்கள் வலுவாக்குவதோடு எலும்பு தேய்மானம் மூட்டு வலி போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. 
அதோடு, இந்த மீனில் இருக்கக்கூடிய செலினியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45542699-a106-4969-a76b-2814db127f3f/26-6a8ad494289af.webp' /></p><p></p><p> </p><p>இந்த செல்வ முரல் மீனின் சதை பகுதி மிகவும் மென்மையாக இருக்கும். ஆதலால், இவை எளிதில் ஜீரணம் ஆகிவிடும். செரிமான கோளாறு பிரச்சனைகள் உள்ளவர்கள் மூலநோய் உள்ளவர்கள் இந்த மீனை பயமின்றி எடுத்துக் கொள்ளலாம். அதைப்போல், சுவாச நோய் உள்ளவர்களும் முரல் மீனை அளவோடு சாப்பிடலாம். </p><p>காரணம், இதில இருக்கக்கூடிய உயர் தர புரதம் உடல் வலிமை மற்றும் தசை பராமரிப்புக்கு உதவுகிறது. இருப்பினும் மீன் ஒவ்வாமை இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இந்த செல்வ முரல் மீனானது சுவையிலும் சிறந்தது. அதே நேரம், மிக குறைந்த முட்களையும் கொண்டுள்ளது. அதனால் குழந்தைகள் இதனை பயமின்றி சாப்பிடலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T04:01:24+00:00</updated>
        </entry>
    </feed>
