<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-22T14:23:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vijay-son-jason-sanjay-has-spoken-about-mom-dad-1787405983"></link>
            <id>https://manithan.com/article/vijay-son-jason-sanjay-has-spoken-about-mom-dad-1787405983</id>
            <summary type="text">jason sanjay : முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்த பேட்டியில்,&amp;nbsp; தான் மேற்கொண்ட ஒரு ஆபத்தான பயணம் குறித்த தகவலை மிகவும் சாதார...</summary>
            <content type="html"><![CDATA[<p>jason sanjay : முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்த பேட்டியில்,&nbsp; தான் மேற்கொண்ட ஒரு ஆபத்தான பயணம் குறித்த தகவலை மிகவும் சாதாரணமாக பகிர்ந்துள்ளார். ஆனால், அவர் கூறிய அந்த அனுபவம் தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><h2>ஜேசன் சஞ்சய் பேட்டி</h2><p>விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/459743f3-c09d-4164-9f50-b67db0542cfe/26-6a89adc91ee3a.webp' /></p><p> </p><p>ஆக்ஷன் அட்வெஞ்சர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பல்வேறு ஊடகங்களுக்கு ஜேசன் சஞ்சய் பேட்டி அளித்து வருகிறார். </p><p>அந்த வகையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.</p><p><b>

“என்னை தேடாதீர்கள்” என அம்மாவிடம் கூறிவிட்டு...</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33604b56-967d-4dd6-98da-a7f0d5ea1b24/26-6a89adca75bc4.webp' /><b></b></p><p>
தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட ஒரு பயணம் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், “வெளிநாட்டில் இருந்து நண்பன் ஒருவன் வந்திருந்தான். நாங்கள் நண்பர்கள் அனைவரும் அவனது வீட்டில் தங்கப்போகிறோம் என்று திட்டமிட்டிருந்தோம். சென்னையில்தான் இருப்பேன், ஆனால் என்னைத் தேடாதீர்கள் என்று எனது அம்மாவிடம் கூறிவிட்டு, கேரளா எல்லையில் உள்ள ஒரு ஊருக்கு சென்றுவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர்கள் தங்கியிருந்த தனியார் இடத்திற்கு மிக அருகிலேயே புலிகள் சரணாலயம் ஒன்று இருந்ததாகவும் சஞ்சய் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a167921a-fbcf-4c51-9aa2-f8b4510c657d/26-6a89adcb26e07.webp' /></p><p></p><p>
</p><p>
இந்த பயணத்தின் போதுதான் எதிர்பாராத விதமாக அவரது அம்மாவிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது.ஆனால், அந்த அழைப்பை சஞ்சய் எடுக்கவில்லை.</p><p>இதனால் அவருக்கு மலையாளத்தில் பிசி டோன் கேட்டுள்ளது.

அதன்பிறகுதான், தான் கேரளாவுக்குச் சென்றிருப்பது தனது அம்மாவுக்கு தெரிந்துவிட்டதாக சஞ்சய் கூறியுள்ளார்.

இதனால் பயந்துபோன அவர், சென்னை திரும்பும் வரை செல்போனை தொடவே இல்லை என தெரிவித்துள்ளார்.</p><h2><b>

100 மீட்டர் தூரத்தில் சிறுத்தை!
</b></h2><p>இந்த பயணத்தின்போது தங்களுக்கு ஏற்பட்ட மற்றொரு அதிர்ச்சியான சம்பவத்தையும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்துள்ளார்.

“அந்த பயணத்தின்போது ஒருநாள் நாங்கள் சிறுத்தையை பார்த்தோம். எங்களிடமிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் தான் அந்த சிறுத்தை இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de0cb94-d987-4779-8c08-8187b06d65e6/26-6a89adcbcaf02.webp' /></p><p> </p><p>அதன்பிறகு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டோம்” என சஞ்சய் தெரிவித்துள்ளார்.

தான் இதுபோன்று ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது தனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இருப்பினும், “அப்படி யோசித்துக்கொண்டே இருந்தால் இயற்கையின் அழகை ரசிக்கவே முடியாது. எனவே, நான் செய்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என தனது நிலைப்பாட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, ஜேசன் சஞ்சயிடம் அவரது முதல் சம்பளம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலும் தற்போது கவனம் பெற்றுள்ளது.

வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தபோது கால்டன் சினிமாஸ் என்ற திரையரங்கில் கேசியராக பணியாற்றியதாக சஞ்சய் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e70c9f92-1b63-4586-8b3b-efd6557f3950/26-6a89adcc7b5db.webp' /></p><p></p><p>
</p><p>
அந்த திரையரங்கில் மிகவும் பழைய திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சில நேரங்களில் திரைப்படத்தை பார்ப்பதற்காக யாருமே திரையரங்கிற்கு வரமாட்டார்கள் என்றும், அப்போது தான் மட்டும் அங்கு அமர்ந்து அந்த திரைப்படத்தை பார்க்கத் தொடங்கிவிடுவேன் என்றும் சஞ்சய் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், அந்த திரையரங்கில் பணியாற்றியது தனது வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>&nbsp;‘சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராக தனது புதிய பயணத்தை தொடங்க உள்ள ஜேசன் சஞ்சயின் இந்த அனுபவங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T14:17:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூரம் நட்சத்திரத்தில் சூரியன்: தொழில் நிலையில் அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-transit-in-pooram-who-get-carrier-growth-money-1787402343"></link>
            <id>https://manithan.com/article/sun-transit-in-pooram-who-get-carrier-growth-money-1787402343</id>
            <summary type="text">நவகிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், தலைமைத்துவம், ஆத்மா, தந்தை, அரசு வேலை, அதிகாரம் மற்றும் தன்னம்பிக்கையின் காரணியாவார். சூரியன் மாதம் ஒருமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், தலைமைத்துவம், ஆத்மா, தந்தை, அரசு வேலை, அதிகாரம் மற்றும் தன்னம்பிக்கையின் காரணியாவார். சூரியன் மாதம் ஒருமுறை ராசியையும், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். </p><p>அவரது நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் சமீபத்தில் தனது சொந்த ராசியில் நுழைந்த நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி பூரம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1274b11-bffc-42a7-9c81-8935b0ed8a1e/26-6a899d644c64d.webp' /></p><p> </p><p>பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் என்பதால், அழகு, காதல், செல்வம் மற்றும் செழிப்பு தொடர்பான பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.இந்த நட்சத்திரப் பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலும் காணப்படும். </p><p>குறிப்பாக 3 ராசிக்காரர்கள் சூரியனின் இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர்.அப்படி சூரியபகவானின் ஆசியால் பலனடையப்போகும் 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc8b1879-3496-41aa-9202-a3f491791d07/26-6a899d6500347.webp' /></p><h2>
</h2><p>சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும். குறிப்பாக, பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். </p><p>அதேபோல், புதிய பொறுப்புகளும் தேடி வரலாம். இதன் மூலம் அலுவலகத்தில் உங்களின் திறமையும், மதிப்பும் வெளிப்படும்.</p><p>

நிதி நிலைமையைப் பொறுத்தவரை, இந்த காலகட்டம் சிறப்பாக அமையக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் மற்றும் வேலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றிகரமாக நிறைவேறும் </p><p>தொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து, அதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.</p><h2>

துலாம்</h2><p></p><h2>
</h2><p>ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும் சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.</p><p>இந்த காலகட்டத்தில் செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக சிக்கித் தவித்த பணம் மீண்டும் கைக்கு வந்து சேரலாம். இதனால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.</p><p>

வணிகத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் நல்ல வருமானத்தைப் பெற்றுத் தரக்கூடும். </p><p>பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இதன் காரணமாக முக்கியமான பணிகளை சிரமமின்றி முடித்து, அலுவலகத்தில் நல்ல பெயரைப் பெற முடியும்.

மேலும், தந்தை வழி அல்லது பரம்பரை சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம்.</p><p> சிலருக்கு இதன் மூலம் எதிர்பாராத நிதி ஆதாயமும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில், இந்த பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் காலமாக அமையலாம்.
</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c2cb1fd-71c6-4cfd-961e-a140347e56ff/26-6a899dfbe3981.webp' /></p><p></p><p>ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும் சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்றுத் தரும்.</p><p>இதுவரை வேலை அல்லது தொழில் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்திருந்தால், அவற்றுக்கு படிப்படியாக தீர்வு கிடைக்கத் தொடங்கும்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். </p><p>அதேபோல், எதிர்பாராத சில நிதி ஆதாயங்களும் கிடைக்கக்கூடும். ஏற்கனவே முதலீடு செய்திருப்பவர்களுக்கு அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் பொருளாதார நிலை மேலும் வலுப்பெறலாம்.</p><p>

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகலாம். சிலருக்கு தங்களது வசதிக்கேற்ற புதிய வாகனம் வாங்கும் யோகமும் அமையும்.</p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:03:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[vendakkai mor kulambu : ஆரோக்கியம் தரும் வெண்டைக்காய் மோர் குழம்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tasty-and-healthy-vendakkai-mor-kulambu-recipe-1787393421"></link>
            <id>https://manithan.com/article/tasty-and-healthy-vendakkai-mor-kulambu-recipe-1787393421</id>
            <summary type="text">vendakkai mor kulambu : வெண்டைக்காய் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் தனித்துவமான சுவை தான் ஆனால், சுவையைத் தாண்டி பல்வேறு ஊட்டச்சத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>vendakkai mor kulambu : வெண்டைக்காய் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் தனித்துவமான சுவை தான் ஆனால், சுவையைத் தாண்டி பல்வேறு ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ள ஒரு காய்கறி இது. </p><p>குறிப்பாக, வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதுடன், மலச்சிக்கலைத் தவிர்த்து குடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் துணைபுரிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f88ccb5-b128-42a3-aade-133fac6d92c1/26-6a89868178960.webp' /></p><p>
வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், புரதம், சிறிதளவு கொழுப்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. </p><p>மேலும், நார்ச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால், வயிறு நிறைந்த உணர்வைத் தருவதற்கும், சமச்சீரான உணவுமுறையின் ஒரு பகுதியாக உடல் எடையை நிர்வகிக்க உதவுவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கலாம்.</p><p>

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் எனக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3298bc5a-c9f9-4870-999c-d0ebc54e8418/26-6a8986843ce28.webp' /></p><p></p><p> </p><p>அதே நேரத்தில், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சீராகப் பராமரிக்க உதவும் உணவுமுறையில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளுக்கு முக்கிய இடம் உண்டு. </p><p>எனவே, சுவையையும் ஆரோக்கியத்தையும் ஒருசேர விரும்புபவர்கள் வெண்டைக்காயை தங்களது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
</p><p>
இத்தனை சிறப்புகளைக் கொண்ட வெண்டைக்காயை வைத்து, வழக்கமான குழம்புகளுக்கு சற்று வித்தியாசமாகவும், நாவில் நீர் ஊறச் செய்யும் சுவையுடனும் ஒரு அருமையான வெண்டைக்காய் மோர் குழம்பு எப்படி வெய்யலாம் என இந்த பதிவி்ல் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4f81696-02b8-4c58-a9e3-b4d082b0e6de/26-6a8986822ab04.webp' /></p><h2>தேவையான பொருட்கள்
</h2><p>தயிர் - தேவையான அளவு
</p><p>வெண்டைக்காய் - ¼ கிலோ
</p><p>துருவிய தேங்காய் – தேவையான அளவு</p><p>
புளி – நெல்லிக்காய் அளவு
</p><p>கொத்தமல்லி&nbsp; – சிறிதளவு</p><p>துவரம் பருப்பு – 100 கிராம்
</p><p>கடலைப் பருப்பு – 100 கிராம்</p><p>
பச்சை மிளகாய் – 6
</p><p>இஞ்சி – ஒரு துண்டு
</p><p>வத்தல் – 6
</p><p>சீரகம் – 10 கிராம்</p><p>
மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்
</p><p>பெருங்காயம் – தேவையான அளவு
</p><p>உப்பு – தேவையான அளவு</p><p><b>
தாளிக்க தேவையானவை
</b></p><p>தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு</p><p>
கடுகு – 1 ஸ்பூன்
</p><p>கருவேப்பிலை – சிறிதளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a547b8c-73d2-45bf-91ae-0781a8ef89a3/26-6a898682d71bd.webp' /></p><h2>
செய்முறை</h2><p>
முதலில் ஒரு பாத்திரத்தில் கொத்தமல்லி விதைகள், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, சீரகம் மற்றும் வத்தல் ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குறைந்தது 1 மணி நேரம் ஊறவைக்கவும்.</p><p>

நன்றாக ஊறியதும், அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.</p><p>

அடுத்து புளியை சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாகக் கரைத்து, புளிக் கரைசலை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் புளிக் கரைசலை ஊற்றவும்.</p><p>அதனுடன் நறுக்கிய வெண்டைக்காய், சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வெண்டைக்காய் நன்றாக வேகும் வரை சமைக்கவும். வெந்ததும் அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.</p><p>

இப்போது தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கடைந்து கொள்ளவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96a0a538-7cf6-4d3a-a079-114d1bb1d87c/26-6a89868388a72.webp' /></p><p></p><p>அதில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தயார் செய்து வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றவும். அதில் வேகவைத்த வெண்டைக்காயையும் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.
</p><p>
மோர் குழம்பு நன்றாக சூடாகி மேலே நுரை வரத் தொடங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும். மோர் குழம்பை அதிகமாகக் கொதிக்கவிடக்கூடாது.
</p><p>
இறுதியாக, ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இந்தத் தாளிப்பை மோர் குழம்பில் ஊற்றி நன்றாகக் கலந்துவிட்டு இறக்கினால் அவ்வளவு தான்சுவையான, மணமிக்க வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:28:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: எந்த ராசிகளுக்கு பாதிப்பு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/lunar-eclipse-2026-which-zodiac-have-to-be-careful-1787388321"></link>
            <id>https://manithan.com/article/lunar-eclipse-2026-which-zodiac-have-to-be-careful-1787388321</id>
            <summary type="text">சந்திர கிரகணம் ஒரு அற்புதமான வானியல் நிகழ்வாக மட்டுமல்லாமல், ஜோதிட ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சந்திர கிரகணம் ஒரு அற்புதமான வானியல் நிகழ்வாக மட்டுமல்லாமல், ஜோதிட ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் இறுதி சந்திர கிரகணம் ஆகஸ்ட் 28 அன்று நிகழவுள்ளது.</p><p> இது ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருந்தாலும், நிலவின் 96.2 சதவீதம் பூமியின் அடர்ந்த நிழலுக்குள் செல்லும் என்பதால், தீவிரமான கிரகணமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dfd5b1b-cc0a-42e4-93b2-d182e56ac576/26-6a8967beb7916.webp' /></p><p></p><p>
</p><p>
இந்திய நேரப்படி காலை 9:42 மணிக்கு கிரகணம் நிகழ்வதால், இதை நம்மால் நேரடியாகப் பார்க்க முடியாது.

ஆகஸ்ட் 28ஆம் தேதி நிகழும் இந்த சந்திர கிரகணம் கும்ப ராசி மற்றும் சதயம் நட்சத்திரத்தில் அமைகிறது. </p><p>ஜோதிடத்தின் அடிப்படையில், இந்த கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><h2>கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397f7ba2-48cf-4d29-ab0e-3c1f9e56305e/26-6a8967bf6ff56.webp' /></p><h2>
</h2><p>கும்ப ராசிக்காரர்கள் இந்த கிரகணத்தின் தாக்கத்தை நேரடியாக உணர வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p>னதில் அமைதியின்மை நிலவி, முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிரமம் இருக்கலாம். எனவே எந்த வேலையையும் அவசரப்படாமல் செய்வது நல்லது.</p><p> உடல்நிலையிலும் கவனம் தேவை.

இந்த நேரத்தில் பேச்சில் கடுமை அதிகரித்து, குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் வார்த்தைகளி்ல் கவம் தேவை.</p><p>திருமண வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலையில்லாதவர்கள் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிட்டாலும், முயற்சியை கைவிடாமல் இருப்பது அவசியம்.</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acfbef18-3d0e-4eab-b1c9-75e0b81cf7f3/26-6a8967c02431e.webp' /></p><h2>
</h2><p>கும்பம் சிம்ம ராசிக்கு நேர் எதிரான ராசி என்பதால், சிம்ம ராசிக்காரர்கள் உறவுகள், கூட்டாண்மைகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை சந்திக்கலாம். </p><p>கோபத்தில் முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்; இல்லையெனில் சிக்கல்கள் ஏற்படலாம்.

சமூகத்தில் உங்கள் நற்பெயர் பாதிக்கப்படுவதற்கும், சில எதிர்பாராத சம்பவங்களை சந்திப்பதற்கும் வாய்ப்புள்ளது. அலுவலகச் சூழலும் பாதகமாக இருக்கும்.</p><p>வியாபாரத்தில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காமல் வருமானப் பற்றாக்குறை ஏற்படலாம். பண இழப்பு ஏற்பட்டாலும், மாத இறுதியில் நிலைமை சீராகும் வாய்ப்பு உள்ளது.
</p><h2>
ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6283384c-ed5f-4f42-849c-fb5894e69720/26-6a8967c0c9c6e.webp' /></p><p></p><p>
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் இந்த சந்திர கிரகணத்தால் சில சவால்களை சந்திக்கலாம். புதிய முதலீடுகள் அல்லது நிதி சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன், அனைத்தையும் ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்வது நல்லது. </p><p>நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்; உங்கள் திறமையும் குறைத்து மதிப்பிடப்படலாம்.

வேலையில் மாற்றம் அல்லது விருப்பமில்லாத இடமாற்றம் ஏற்பட நேரிடும்.</p><p> வியாபாரத்தில் சரியான திட்டமிடல் அவசியம்; இல்லையெனில் லாப வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். நீண்ட பயணங்களில் பண இழப்பு ஏற்படலாம் அல்லது ஏற்கனவே கடன் கொடுத்த பணத்தை திரும்பப் பெறுவதில் சிக்கல் நிலை காணப்படும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; </b>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T09:11:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் அஸ்தமனம்: செப்டம்பர் 18 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-combust-who-get-huge-luck-1787373822"></link>
            <id>https://manithan.com/article/mercury-combust-who-get-huge-luck-1787373822</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அந்தவகையில், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அந்தவகையில், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன்.</p><p> இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.சந்திரனுக்கு அடுத்தபடியாக குறுகிய காலத்தில் ராசிகளை கடக்கும் புதன், அவ்வப்போது வக்ரம் மற்றும் அஸ்தமன நிலையிலும் பயணிப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f501372c-4f6d-4942-80fe-7db88a98c7b1/26-6a893059aebb0.webp' /></p><p> எனவே புதனின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது புதன் அஸ்தமன நிலையில் உள்ளார். இந்த நிலையில் செப்டம்பர் 18-ம் தேதி வரை இருப்பார்.</p><p> அஸ்தமன நிலையில் புதன் பலவீனமாக இருப்பதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏற்படும். </p><p>சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் இந்த தாக்கம் அமையலாம். எனவே தற்போது புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால், எந்த ராசிக்காரர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.&nbsp;</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdc862a7-9b6b-4da8-ba8a-b62ee2bfee71/26-6a89305a6034b.webp' /></p><h2>
</h2><p>புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால், மேஷ ராசிக்காரர்கள் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் உங்கள் வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு வாக்குவாதங்கள் ஏற்படலாம். எனவே பேச்சில் கவனம் தேவை. </p><p>வேலை அழுத்தம் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளை அவசரமாக எடுக்காமல், பொறுமையுடன் செயல்படுவது நல்லது.</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08a01053-ce5a-4a0d-8c55-6c84db1012da/26-6a89305b13528.webp' /></p><p>
புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால், பண விஷயங்களில் கன்னி ராசிக்காரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிதி பரிவர்த்தனைகள் மற்றும் பெரிய முதலீடுகளில் அவசரப்பட வேண்டாம். </p><p>வணிகர்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் ஆவணங்களை முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும். செப்டம்பர் 18 வரை பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2e12766-d050-49a7-95b2-ab5700f2b476/26-6a89305bb9a04.webp' /></p><p></p><p>சிம்ம ராசிக்காரர்கள் தொழில் மற்றும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. பணியிடத்தில் சக ஊழியர்கள் அல்லது உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.</p><p> எனவே அவசர முடிவுகளைத் தவிர்த்து, அமைதியாகச் செயல்படுங்கள். அலுவலகத் தகராறுகளை பெரிதுபடுத்தாமல், கவனத்துடன் முடிவெடுப்பது நல்லது. பெரிய முடிவுகளை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது சிறப்பு&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T08:46:13+00:00</updated>
        </entry>
    </feed>
