<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-05T19:54:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் சூர்யாவை விட 3 மடங்கு அதிகம் சம்பாதித்தேன்- நடிகை ஜோதிகா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/i-earned-3-times-more-than-suriya-actress-jyothika-1785934989"></link>
            <id>https://manithan.com/article/i-earned-3-times-more-than-suriya-actress-jyothika-1785934989</id>
            <summary type="text">தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வருகின்றனர். 

ஒருவரின் வளர்ச்சிக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வருகின்றனர். </p><p>

ஒருவரின் வளர்ச்சிக்கு மற்றொருவர் உறுதுணையாக இருப்பதை பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
2003ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க படத்தின் போது, ஜோதிகா முன்னணி நடிகையாக இருந்தார்.</p><p> 

அப்போது சூர்யாவை அந்தப் படத்தில் நடிக்க பரிந்துரைத்தது ஜோதிகாதான் என அவர் முன்பே தெரிவித்திருந்தார்.</p><p> </p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894f91ef-698c-4dee-bfa3-82dd18795f8a/26-6a73348f680cb.webp' /></p><p>இந்நிலையில், சூர்யா - ஜோதிகா அண்மையில் ஆங்கில யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p> 

அதில் "என் சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் சூர்யாவை விட நான் மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கினேன். தற்போது நான் அவரைவிட சுமார் 30 மடங்கு குறைவாக சம்பளம் வாங்குகிறேன்" என்று ஜோதிகா நகைச்சுவையாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f07aaa2c-7c25-4a5d-84b0-9d78fea425bc/26-6a73576fdc90b.webp' /><br></p><p> </p><p>

மேலும், "சூர்யா ஒரு நல்ல மனிதர், நல்ல கணவர். வீட்டில் எப்போதும் சமத்துவத்தையே கடைப்பிடிப்பார். நான் சமையல் செய்தால் அவரும் வந்து உதவுவார், குழந்தைகளை வளர்ப்பது முதல் விடுமுறைக்குச் செல்வது வரை எல்லா முடிவுகளையும் இருவரும் சேர்ந்து எடுப்போம். ஒருவரின் வளர்ச்சியை மற்றொருவர் மனதார மகிழ்ச்சியுடன் பார்க்கிறோம்" என்று ஜோதிகா பகிர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2224243-a61f-481e-9a4f-8651b2d50682/26-6a735770bcc7c.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-05T15:32:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026-27 தமிழ்நாடு பட்ஜெட்.., மாணவர்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tamil-nadu-budget-2026-for-education-departments-1785926412"></link>
            <id>https://manithan.com/article/tamil-nadu-budget-2026-for-education-departments-1785926412</id>
            <summary type="text">2026-27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

59 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026-27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
</p><p>
59 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக, அதிமுக அல்லாத கட்சியாக தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
</p><p>
இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>

மேலும், மாணவர்கள் மற்றும் கல்வித்துறைக்கான பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6dIwL7m8fsw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மாணவர்களுக்கான அறிவிப்புகள்</span><br></p><p>சூப்பர் க்ளீன் - சூப்பர் கேம்பஸ் திட்டம் 10,000 பள்ளிகளில் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு.
</p><p>
3,734 அரசு பள்ளிகள் ரூ.2,132 கோடியில் நவீனப்படுத்தப்படும்.</p><p>

காமராஜர் பெயரில் நவீன உண்டு, உறைவிட வசதியுடன் சிறப்பு பள்ளிகள் தொடங்கப்படும்.
</p><p>
9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகங்கள் வழங்க ரூ.122 கோடி ஒதுக்கீடு.
</p><p>
5 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் சைக்கிள் வழங்க ரூ.277 கோடி ஒதுக்கீடு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14579f91-ed8d-43b7-bdbd-43c739487225/26-6a73133f1eb9c.webp' />&nbsp;&nbsp;<br></p><p>கல்லூரி மாணவர்களுக்கான வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு.</p><p>

மாணவர் விடுதி வசதிகளை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு.
</p><p>
காமராசர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.இதற்காக ரூ.710 கோடி ஒதுக்கீடு.</p><p>

2031க்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) திறன் பயிற்சி வழங்கப்படும்.
</p><p>
அரசு நூலகங்கள் டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடி ஒதுக்கீடு.
</p><p>
SSC, RRB, IBPS போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையங்கள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களிலும் அமைக்கப்படும். இதற்காக ரூ.3.38 கோடி ஒதுக்கீடு.
</p><p>
10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு.
</p><p>
5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.90 கோடியில் தொடங்கப்படும்.
</p><p>
பள்ளிப் பாடத்திட்டம் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AEQtNahUvog" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-05T15:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் மாத ராசிபலன்.., 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/august-month-rasi-palan-in-tamil-1785929905"></link>
            <id>https://manithan.com/article/august-month-rasi-palan-in-tamil-1785929905</id>
            <summary type="text">டாரட் என்பது எதிர்காலத்தைக் கணிக்கவும், மனதிற்கு வழிகாட்டவும் பயன்படுத்தப்படும் 78 சிறப்பு அட்டைகள் அடங்கிய தொகுப்பாகும். 

இதில் உள்ள குறியீடுகள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>டாரட் என்பது எதிர்காலத்தைக் கணிக்கவும், மனதிற்கு வழிகாட்டவும் பயன்படுத்தப்படும் 78 சிறப்பு அட்டைகள் அடங்கிய தொகுப்பாகும்.</p><p> 

இதில் உள்ள குறியீடுகள் மற்றும் படங்களின் மூலம் ஒருவரின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றி விளக்கப்படுகிறது.</p><p>

பாரம்பரிய ஜோதிடம் போல இது கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல, இது உள்ளுணர்வு மற்றும் குறியீட்டு விளக்கங்களை நம்பியுள்ளது.
</p><p>
இது மேஜர் அர்கானா (22 அட்டைகள்) மற்றும் மைனர் அர்கானா (56 அட்டைகள்) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp; மேஜர் அர்கானா அட்டைகள் வாழ்க்கையின் முக்கிய மாற்றங்கள் மற்றும் ஆன்மீக பாடங்களைக் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது.</p><p>

மைனர் அர்கானா அட்டைகள் அன்றாட நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளைக் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது.
</p><p>
அந்தவகையில், ஆகஸ்ட் மாதம் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று டாரட் வாசிப்பாளர் சாரா இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/H9RuW6V1kuA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-05T15:25:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Philippines : 10 ஆண்டுகள் படுக்கைக்கு அடியில் இருந்த பல கோடி மதிப்புள்ள அரிய முத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/fisherman-found-giant-100-million-pearl-1785934636"></link>
            <id>https://manithan.com/article/fisherman-found-giant-100-million-pearl-1785934636</id>
            <summary type="text"> Philippines : பிலிப்பைன்ஸின் பளவான் தீவைச் சேர்ந்த ஒரு மீனவர், 2006ஆம் ஆண்டு கடலில் கண்டெடுத்த 34 கிலோ எடையுள்ள மிகப்பெரிய இயற்கை முத்தை அதன் உண்மையா...</summary>
            <content type="html"><![CDATA[<p> Philippines : பிலிப்பைன்ஸின் பளவான் தீவைச் சேர்ந்த ஒரு மீனவர், 2006ஆம் ஆண்டு கடலில் கண்டெடுத்த 34 கிலோ எடையுள்ள மிகப்பெரிய இயற்கை முத்தை அதன் உண்மையான மதிப்பு தெரியாமல் சுமார் 10 ஆண்டுகள் தனது வீட்டில் படுக்கைக்கு அடியில் அதிர்ஷ்டப் பொருளாக வைத்திருந்தார்&nbsp; என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?&nbsp;</p><p>கடந்த 2006ஆம் ஆண்டு, பளவான் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடல் சிப்பிக்குள் சிக்கியிருந்த இந்தப் பிரம்மாண்ட முத்தை அந்த மீனவர் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. அதன் அரிய தன்மையை அறியாத அவர், அதை தனக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் பொருளாக நம்பி, தனது வீட்டில் படுக்கைக்கு அடியில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3572addc-1867-4eb6-aca0-cf0a3d431c36/26-6a7336ed2bc34.webp' /></p><h2>உலகின் மிகப்பெரிய இயற்கை முத்து</h2><p>

இந்த அரிய முத்து சுமார் 2.2 அடி (67 செ.மீ) நீளம், 1 அடி (30 செ.மீ) அகலம் மற்றும் 34 கிலோ எடை கொண்டதாகும். இதன் அளவும் எடையும் உலகின் மிகப்பெரிய இயற்கை முத்துகளில் ஒன்றாக இதைத் தனித்துவமாக்குகின்றன.
</p><p>
இந்நிலையில், மீனவரின் வீடு தீ விபத்தில் சேதமடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பொருளை அவர் பாதுகாப்பு கருதி உள்ளூர் சுற்றுலா அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அப்போது அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், அது மிகவும் அரிய மற்றும் விலைமதிப்பற்ற இயற்கை முத்து என்பது தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf21c009-7f00-4115-9622-866a750accb8/26-6a7336edd34f9.webp' /></p><p>

இந்த முத்தின் மதிப்பு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது தோராயமாக 950 கோடி மதிப்புள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிப்பட்ட இந்த விடயம் தற்போது சமூக ஊடகங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றது.</p><p><iframe width="315" height="576" src="https://www.youtube.com/embed/5mKZ30fioco" title="10 ஆண்டுகள் படுக்கையறையில் புதைந்து கிடந்த புதையல்..!😱 | உலகையே வியக்க வைத்த கதை!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T14:15:00+00:00</updated>
        </entry>
    </feed>
