<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-14T18:40:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பீர் பாட்டில்களின் நிறத்திற்குப் பின்னால் இப்படி ஒரு காரணமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-are-most-beer-bottles-brown-or-green-1786719694"></link>
            <id>https://manithan.com/article/why-are-most-beer-bottles-brown-or-green-1786719694</id>
            <summary type="text">Why are most beer bottles brown or green : இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பீர், வெளிநாடுகளில் பல இடங்களில் சாதாரண பானமாகவே பார்க்கப்படுகிறது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Why are most beer bottles brown or green : இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பீர், வெளிநாடுகளில் பல இடங்களில் சாதாரண பானமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் வயது வரம்புக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இதை அருந்த அனுமதிக்கப்படுகிறார்கள். </p><p>பீரில் மற்ற சில மதுபானங்களைக் காட்டிலும் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதும், அதன் சுவையும் பலரைக் கவரும் காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6446ce80-8640-4ef9-bbfc-c056df611ab0/26-6a7f356e59192.webp' /></p><p>
ஆனால் பீர் குடிப்பது உடல் நலத்துக்கு தீங்கு என்பதையும் தாண்டி, அதை அடைத்து வைக்கும் பாட்டில்களின் நிறத்தை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?இதற்குப் பின்னால் சுவாரஸ்யமான ஒரு வரலாறு இருக்கிறது.இது&nbsp; குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஏன் பழுப்பு அல்லது பச்சை நிறத்தில் இருக்கின்றன?</span></p><p>தானியங்களில் உள்ள மாவுச்சத்தை நொதிக்கச் செய்வதன் மூலமாகவே பீர் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக இதற்குத் தேவையான மாவுச்சத்து பார்லி முளைக்கூழிலிருந்து பெறப்படுகிறது. அதேவேளை கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட தானியங்களும் சில வகை பீர்களில் பயன்படுத்தப்படுகின்றன.</p><p></p><p>பல பீர் வகைகளில் ஹாப்ஸ் (Hops) எனப்படும் தாவரத்தின் பூக்கள் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை பீருக்கு தனித்துவமான கசப்புச் சுவையை வழங்குவதோடு, இயற்கையான பாதுகாப்புப் பொருளாகவும் செயல்படுகின்றன.</p><p>சில பீர்களில் ஹாப்ஸுக்குப் பதிலாக மூலிகைகள், பழங்கள் உள்ளிட்டவையும் சுவையூட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96808578-c537-4940-b3ab-bcc5ab5d8095/26-6a7f356f0e3cc.webp' /></p><p>அப்படி பீர் தயாரிப்பின் ஆரம்பகாலங்களில், அது பெரும்பாலும் வெளிப்படையான கண்ணாடிப் பாட்டில்களில் அடைத்து விற்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு பெரிய பிரச்சினை இருந்தது.

சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் (UV rays) வெளிப்படையான கண்ணாடி வழியாக பீருக்குள் ஊடுருவும்போது, பீரில் உள்ள சில வேதிப்பொருட்களுடன் வினைபுரிகின்றன. இதனால் பீரின் சுவையும் மணமும் மாறக்கூடும்.</p><p>
இந்தப் பிரச்சினைக்கு தீர்வாகக் கண்டுபிடிக்கப்பட்டது தான் பழுப்பு நிற கண்ணாடிப் பாட்டில்கள்.

அடர்த்தியான பழுப்பு நிறக் கண்ணாடி சூரியனின் புற ஊதாக் கதிர்களை அதிகளவில் தடுத்து நிறுத்தியது. இதனால் பீரின் தரமும் சுவையும் நீண்ட நேரம் பாதுகாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b3987a2-64d8-48e5-8c61-901378b23cdc/26-6a7f356fb8c64.webp' /></p><p></p><p>பீர் உற்பத்தியாளர்களுக்கும் இது பெரிய நிம்மதியைக் கொடுத்தது.

ஆனால் வரலாறு மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போரின்போது பழுப்பு நிறக் கண்ணாடிப் பாட்டில்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.</p><p> இதனால் சில உற்பத்தியாளர்கள் மீண்டும் வெளிப்படையான பாட்டில்களைப் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவானது. ஆனால் அவற்றில் விற்கப்பட்ட பீரை வாடிக்கையாளர்கள் அவ்வளவாக விரும்பவில்லை.

இதற்கு ஒரு வித்தியாசமான தீர்வை உற்பத்தியாளர்கள் கண்டுபிடித்தனர்.</p><p>பச்சை நிறக் கண்ணாடிப் பாட்டில்களை பயன்படுத்தத் தொடங்கி, அவற்றில் விற்கப்படும் பீரை பிரீமியம் வகை பீர் என்ற தோற்றத்தில் சந்தைப்படுத்தினர். இதன் மூலம் பச்சை பாட்டில்களுக்கும் தனி அடையாளம் உருவானது.

அதன் பிறகு தான் பீர் உலகில் இரண்டு நிறங்கள் மிகவும் பிரபலமாகியதாக வரலாற்று சான்றுகள் காணப்படுகின்றன.&nbsp;<br></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T15:36:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தூங்குவதற்கு குற்ற உணர்ச்சி வேண்டாம்: மருத்துவர்கள் கூறும் முக்கிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/rest-is-not-laziness-it-is-how-your-body-recover-1786715194"></link>
            <id>https://manithan.com/article/rest-is-not-laziness-it-is-how-your-body-recover-1786715194</id>
            <summary type="text">Rest Is Not Laziness: தூங்குவதற்கு குற்ற உணர்ச்சி வேண்டாம்: பரபரப்பான நவீன வாழ்க்கை முறையில், ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவதற்குக்கூட பலர் குற்ற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Rest Is Not Laziness: தூங்குவதற்கு குற்ற உணர்ச்சி வேண்டாம்: பரபரப்பான நவீன வாழ்க்கை முறையில், ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவதற்குக்கூட பலர் குற்ற உணர்வுக்கு உள்ளாகின்றனர். </p><p>குறிப்பாக மாணவர்கள், பணிபுரிபவர்கள் மற்றும் குடும்பப் பொறுப்புகளைச் சுமப்பவர்கள், தூங்கி எழுந்தவுடன் அன்றைய வேலைகள், படிப்பு, இலக்குகள் என பலவற்றை நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a21b9ff3-53a4-44cf-b267-bde2360d23b8/26-6a7f26fb5537a.webp' /></p><p>ஆனால், தூக்கம் என்பது நேரத்தை வீணடிப்பதல்ல; உடலையும் மூளையையும் சீராக இயங்கச் செய்யும் அடிப்படைத் தேவையாகும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். </p><p>உடல் ஆரோக்கியம் மாத்திரமன்றி உள ஆரோக்க்கியதுக்கும் சீரான தூக்கம் இன்றியமையாது. தூக்கம் ஆடம்பரம் அல்ல; அது உயிர்வாழ்வதற்கும், உடல் மற்றும் மனநலத்தைப் பாதுகாப்பதற்கும் அவசியமான ஒன்றாகும்.</p><p></p><h2>போதுமான&nbsp; தூக்கம் ஏன் அவசியம்?&nbsp;</h2><p> போதுமான தூக்கம் கிடைக்கும்போது மூளையின் செயல்பாடுகள் சீராகி, நினைவாற்றல், கவனம், கற்றல் திறன், முடிவெடுக்கும் திறன் போன்றவை மேம்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9de30e1-9ff7-47d2-837f-4083b0cd9298/26-6a7f26fc0857f.webp' /></p><p>அதேபோல், உடலுக்கும் தேவையான ஓய்வு கிடைப்பதால் அடுத்த நாளை சுறுசுறுப்பாக எதிர்கொள்ள முடிகிறது.

எப்போதும் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருப்பதையே வெற்றியின் அடையாளமாகவும், ஓய்வு எடுப்பதைச் சோம்பேறித்தனமாகவும் கருதுவது தவறான பார்வை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.</p><p> தொடர்ந்து வேலை செய்வதால் மட்டுமே அதிக உற்பத்தித்திறன் கிடைக்கும் என்பது உண்மையல்ல. உடலுக்கும் மூளைக்கும் தேவையான ஓய்வை வழங்குவது, அடுத்த நாள் சிறப்பாகச் செயல்படுவதற்கான முதலீடாகவே பார்க்கப்பட வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae356492-499a-418d-b6d1-1ac0e367d330/26-6a7f26fcaccc8.webp' /></p><p>
மேலும், படுக்கைக்குச் செல்வதற்கு முன் மறுநாள் செய்ய வேண்டிய பணிகளை ஒரு பட்டியலாக எழுதிவைப்பது மனதில் ஓடும் எண்ணங்களையும் பதற்றத்தையும் குறைக்க உதவும். இதனால், “இதை மறந்துவிடக்கூடாது”, “நாளை இந்த வேலையை எப்படிச் செய்வது?” போன்ற எண்ணங்களுடன் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியும்.
</p><p>
ஒவ்வொருவருக்கும் தூக்கத் தேவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, மற்றவர்களின் சுறுசுறுப்பு அல்லது அவர்கள் தூங்கும் நேரத்தை நம்முடன் ஒப்பிடாமல், நமது உடலுக்கு உண்மையில் தேவையான ஓய்வை வழங்குவது முக்கியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60311eb1-15ed-4ea4-b540-b62f0dd6ee69/26-6a7f26fd5dd03.webp' /></p><p></p><p> </p><p>முக்கிமாக தூங்குவதற்காக குற்ற உணர்வு கொள்ள வேண்டிய அவசியமில்லை.

மூச்சுவிடுவதற்கு எப்படி குற்ற உணர்வு தேவையில்லையோ, அதேபோல் தூங்குவதற்கும் குற்ற உணர்வு தேவையில்லை. </p><p>நல்ல தூக்கம் என்பது சோம்பேறித்தனத்தின் அடையாளம் அல்ல; ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், தெளிவான சிந்தனைக்கும், சிறந்த செயல்திறனுக்கும் அடிப்படையான விடயம் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T14:34:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் தான் சினிமாவின் மூத்த Gen Z! - 67 ஆண்டுகள் சினிமா பயணம் குறித்து கமல்ஹாசன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/kamalhaasan-post-about-his-66-years-cinema-journey-1786712110"></link>
            <id>https://manithan.com/article/kamalhaasan-post-about-his-66-years-cinema-journey-1786712110</id>
            <summary type="text">kamalhaasan 66-years cinema journey: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், கடந்த 1960ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>kamalhaasan 66-years cinema journey: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், கடந்த 1960ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். அந்த வகையில், திரைத்துறையில் நடிகராக தனது 66 ஆண்டுகளை நிறைவு செய்து, 67ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். </p><p>இதையொட்டி திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கமல்ஹாசன் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் சுவாரஸ்யமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02a0527e-cce1-4689-a6ab-1efc6d2d84a5/26-6a7f14dc46c94.webp' /></p><p></p><h2>கமல்ஹாசன் பதிவு&nbsp;</h2><p>
</p><p>
அதில் அவர், "திரைத்துறையில் எனது 67 ஆண்டுகாலப் பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ஆனால், இந்த 67 ஆண்டுகளில் உண்மையான கற்றல் என்று நான் கருதுவது சுமார் 20 ஆண்டுகளை மட்டுமே" எனத் தனது பயணத்தை சுயவிமர்சனத்துடன் திரும்பிப் பார்த்துள்ளார்.</p><p>

தொடர்ந்து, "மீதமுள்ள காலம், கழிவுநீர் ஓட்டத்தோடு அடித்துச் செல்லப்பட்டதைப் போன்றது. இருப்பினும், அதிலும் ஒரு நம்பிக்கை தரும் விஷயம் இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/994e6fc3-bc9a-4838-8c48-daa7d6b65bf4/26-6a7f14dcebf48.webp' /></p><p> </p><p>அந்த நீரோட்டம் எவ்வளவு இருண்டதாக இருந்தாலும், 'கூட்டுச் சினிமா' எனும் பேராற்றலில், அதாவது எல்லையற்ற கடலில், கலப்பதற்கான காத்திருப்புதான் அது. கலைஞர்களாகவும் ரசிகர்களாகவும் நாம் அனைவரும் அந்தக் கடலை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், "இத்துறையில் நான் கடந்த ஆண்டுகளை மக்கள் கணக்கிடுவதை நிறுத்திவிட்டு, வேறு இடங்களில் சிறந்த எண்களைத் தேடத் தொடங்குவதற்கு முன்பாகவே, அனுபவமாக நான் சேகரித்தவற்றை இன்னும் மேம்படுத்திக்கொள்ள முடியும் என நினைக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c1cd778-2be0-433b-af23-48a7b8e6a88e/26-6a7f14dd9fd19.webp' /></p><p></p><p>திரைப்பட உலகின் நீண்ட வரலாற்றையும் தனது பயணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துள்ள கமல்ஹாசன், 1895ஆம் ஆண்டு டிசம்பரில் லுமியர் சகோதரர்கள் முதல் பொதுத் திரைப்படக் காட்சியை நடத்தியதிலிருந்து, உலக சினிமா சுமார் 130 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
"அத்துறையின் ஒட்டுமொத்த வரலாற்றில் பாதிக்கும் மேலான காலமான 67 ஆண்டுகளை நான் கடந்துவிட்டேன் என்பதை என் குழுவினர் எனக்கு நினைவூட்டினர். இது உண்மையிலேயே வியக்க வைக்கும் விஷயம். </p><p>ஆயினும், எனது சொந்தக் கணக்கீட்டின்படி, உண்மையான கற்றலாக நான் கருதுவது சுமார் 20 ஆண்டுகளை மட்டுமே" எனக் கூறியுள்ளார்.

இறுதியில், தனது வழக்கமான நகைச்சுவை கலந்த பாணியில், "ஒருவேளை, சினிமாத் துறையின் 'Gen Z' பிரிவில் நான்தான் மிக மூத்தவனாக இருப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thanks to all who wished me well on my 67 years of cinema.<br><br>Out of those 67, I think I can only salvage about 20 years as my actual learning. The rest was going with the flow of the wastewater.<br><br>The uplifting hope is, however dark the waterway turns out to be, the wait for a…</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://x.com/ikamalhaasan/status/2087841974997201226?ref_src=twsrc%5Etfw">August 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T13:30:12+00:00</updated>
        </entry>
    </feed>
