<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-04T14:01:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/lung-cancer-early-signs-in-tamil-1785842420"></link>
            <id>https://manithan.com/article/lung-cancer-early-signs-in-tamil-1785842420</id>
            <summary type="text">நுரையீரல் புற்றுநோய் உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது. 

நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரலில் உள்ள செல்களின் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுரையீரல் புற்றுநோய் உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது. </p><p>

நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரலில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும்.</p><p>

புகைபிடித்தல், நச்சு வாயுக்கள் மற்றும் மரபியல் காரணங்களால் இது ஏற்படுகிறது. </p><p>

ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகள் சாதாரண சுவாச பிரச்சினைகளைப் போல இருப்பதால், பலருக்கு நோய் தாமதமாகவே கண்டறியப்படுகிறது.</p><p>
</p><p>ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றால், குணமடையும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>
அந்தவகையில், நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.</p><h2>யாருக்கு அதிக ஆபத்து?</h2><p>

நேரடியாக அல்லது மறைமுகமாக புகைப்பிடிக்கும் புகைக்கு ஆளாகுபவர்கள்.
</p><p>
காற்று மாசுபாடு, அஸ்பெஸ்டாஸ், சிலிக்கா போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களுடன் பணிபுரிபவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/890bc0a4-5796-464a-a129-a726359740ff/26-6a71cb7449984.webp' />
</p><p>
நச்சு வாயுக்களுக்கு அடிக்கடி ஆளாகுபவர்கள்.
</p><p>
குடும்பத்தில் நுரையீரல் புற்றுநோய் வரலாறு உள்ளவர்கள்.
</p><p>
நீண்டகால நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள்.
</p><h2>
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
</h2><ul><li>
மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல்.
</li><li>
இருமலுடன் ரத்தம் வருதல்.
</li><li>
காரணமின்றி உடல் எடை குறைதல் மற்றும் பசி குறைதல்.
</li><li>
நெஞ்சுவலி அல்லது மூச்சுத்திணறல்.
</li><li>
மீண்டும் மீண்டும் நெஞ்சுத் தொற்று ஏற்படுதல்.
</li><li>
தொடர்ந்து குரல் கரகரப்பாக இருப்பது அல்லது அதிக சோர்வு.</li></ul><h2>தடுப்பது எப்படி?
</h2><ul><li>புகைப்பிடிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும்.</li><li>
பிறர் புகையை சுவாசிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
</li><li>காற்று மாசுபாடு மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
</li><li>நீடித்த இருமல் அல்லது சுவாசப் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.</li></ul>]]></content>
            <updated>2026-08-04T13:14:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாருக்கெல்லாம் ஜாதகம் பார்ப்பது வேலை செய்யாது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/when-should-you-check-horoscope-1785844935"></link>
            <id>https://manithan.com/article/when-should-you-check-horoscope-1785844935</id>
            <summary type="text">ஜாதகம் என்பது ஒருவர் பிறந்த நேரத்தில் வானத்தில் உள்ள கோள்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையை காட்டும் ஒரு வரைபடம் அல்லது ஆவணம் ஆகும். 

இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜாதகம் என்பது ஒருவர் பிறந்த நேரத்தில் வானத்தில் உள்ள கோள்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையை காட்டும் ஒரு வரைபடம் அல்லது ஆவணம் ஆகும். </p><p>

இது ராசி கட்டங்கள், லக்னம் மற்றும் ஒன்பது கோள்களின் அமைப்பைக் கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை கணிக்கப் பயன்படுகிறது.
</p><p>
ஜாதகம் பார்ப்பது என்பது ஒருவர் பிறந்த நேரம், தேதி மற்றும் இடத்தை வைத்து கிரகங்களின் நிலைகளை கணிப்பதாகும்.</p><p>

ஆன்லைன் தளங்கள் மூலம் துல்லியமான ஜாதகக் கட்டம் மற்றும் பலன்களை உடனடியாகப் பெறலாம்.
</p><p>
அந்தவகையில், ஜாதகம் பார்ப்பது குறித்த சில தகவல்களை ஜோதிடர் யோகி ஜெயபிரகாஷ் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uOjS6mw3RVI" width="640" height="360" class="note-video-clip"></iframe> &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T12:10:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழைப்பழத் தோலுடன் பேக்கிங் சோடா.., எப்படி பயன்படுத்தலாம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/banana-peels-and-baking-soda-household-uses-1785838199"></link>
            <id>https://manithan.com/article/banana-peels-and-baking-soda-household-uses-1785838199</id>
            <summary type="text">வாழைப்பழத் தோலில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல சத்துகள் உள்ளன. 

2022ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வின்படி, வாழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாழைப்பழத் தோலில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல சத்துகள் உள்ளன. </p><p>

2022ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வின்படி, வாழைப்பழத் தோலை இயற்கை உரம் தயாரிக்கவும், கம்போஸ்ட் செய்யவும், கழிவுகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து வாழைப்பழத் தோலை 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்தால், அதில் இருக்கும் அழுக்கு, பூச்சிக்கொல்லி எச்சங்கள் மற்றும் மெழுகு படலம் நீங்க உதவும். </p><p>அந்தவகையில், வாழைப்பழத்தோல் மாற்று பேக்கிங் சோடாவை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41fe09a7-9c19-4ca1-b506-cd7893aa40cc/26-6a71bac7b8d39.webp' /></p><h2>1. கறைகளை சுத்தம் செய்யலாம்
</h2><p>
3 முதல் 5 வாழைப்பழத் தோல்களை சிறிய துண்டுகளாக நறுக்கி, 1 அல்லது 2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து பேஸ்ட் போல அரைக்கவும்.
</p><p>
இந்த பேஸ்ட்டை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்க் அல்லது பீங்கான் மேற்பரப்பில் தடவி, சில நிமிடங்கள் கழித்து கழுவினால் கறைகள் மற்றும் துர்நாற்றம் குறைய உதவும்.
</p><h2>
2. செடிகளுக்கு இயற்கை உரம்
</h2><p>
சுத்தம் செய்த வாழைப்பழத் தோல்களை சிறிய துண்டுகளாக நறுக்கி, செடிகளின் வேர்களுக்கு அருகில் மண்ணுக்குள் புதைத்து வைக்கலாம்.
</p><p>
இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் மெதுவாக மண்ணில் கலந்து செடிகளின் வளர்ச்சிக்கு உதவும்.
</p><h2>
3. குப்பைத் தொட்டி துர்நாற்றம் குறையும்
</h2><p>
வாழைப்பழத் தோல் - பேக்கிங் சோடா பேஸ்ட்டை குப்பைத் தொட்டியின் உள்ளே தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
</p><p>
மேலும், பேக்கிங் சோடாவால் சுத்தம் செய்யப்பட்ட உலர்ந்த வாழைப்பழத் தோல்களை குப்பைத் தொட்டியின் அடியில் வைத்தால் துர்நாற்றம் குறையவும், பழ ஈக்கள் வருவதும் குறையவும் உதவும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T10:32:40+00:00</updated>
        </entry>
    </feed>
