<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-09T15:56:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரு உதயம் 2026: ஆகஸ்ட் 10 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், பதவி, புகழ் தேடி வரும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-rises-in-cancer-on-august-who-get-luck-1786285914"></link>
            <id>https://manithan.com/article/jupiter-rises-in-cancer-on-august-who-get-luck-1786285914</id>
            <summary type="text">நவகிரகங்களில் குருபகவான் மிகவும் மங்களகரமான கிரகமாகவும், தேவர்களின் குருவாகவும் கருதப்படுகிறார். குருபகவானின் பெயர்ச்சி, அஸ்தமனம், உதயம் போன்ற இயக்க ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் குருபகவான் மிகவும் மங்களகரமான கிரகமாகவும், தேவர்களின் குருவாகவும் கருதப்படுகிறார். குருபகவானின் பெயர்ச்சி, அஸ்தமனம், உதயம் போன்ற இயக்க மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் சாதகமான மற்றும் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும்.</p><p>

தற்போது, குருபகவான் தனது உச்ச ராசியான கடகத்தில் அஸ்தமன நிலையில் இருப்பதால், ஜோதிட ரீதியாக அவரது பலம் குறைந்துள்ளது.இந்நிலையில், 2026 ஆகஸ்ட் 10-ஆம் தேதி கடக ராசியில் குருபகவான் உதயமாகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc76bea6-0aae-43aa-a74b-3397816f56de/26-6a7895809552a.webp' /></p><p>ஏற்கனவே குருபகவான் ‘ஹம்ஸ மகாபுருஷ ராஜயோகத்தை’ உருவாக்கியுள்ள நிலையில், அவரது உதயம் மேலும் குருவின் பலத்தை அதிகரிக்கும். இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் அதிகளவில் சாதக நன்மைகளை பெறப்போகும் ராசிகள் யார் யார் என விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/706c9572-d019-48e6-8d21-845abdb66ac0/26-6a7895814a172.webp' /></p><p>
கடக ராசியில் குருபகவான் முதல் வீட்டில் உதயமாவதால் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும். </p><p>வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.</p><p> எதிர்காலத்தில் நன்மை தரக்கூடிய புதிய தொடர்புகள் கிடைக்கும். உங்கள் ஆளுமைக்கு அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கும்.நிதிநிலை நீண்ட காலத்திற்கு நிலையாக இருப்பதுடன், ஆரோக்கியமும் சாதகமாக இருக்கும். </p><p>தொழிலில் திருப்தி ஏற்படுவதுடன், வியாபாரிகளுக்கு ஒப்பந்தங்கள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். போட்டியாளர்களை சமாளிக்கும் திறன் அதிகரிக்கும்.&nbsp;</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71800a91-1cfa-4ecd-8c5b-c655cc71d671/26-6a78958201298.webp' /></p><h2>
</h2><p>கன்னி ராசிக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குருபகவான் உதயமாகிறார். ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குப் பிறகு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கலாம். </p><p>வருமானம் கணிசமாக அதிகரிக்கும் வியாபாரிகள் நல்ல லாபம் ஈட்டுவார்கள். இந்த காலகட்டத்தில் சுறுசுறுப்பும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். </p><p>இதனால் நீண்ட நாட்களாக இருந்து வந்த பல்வேறு பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குருவின் இந்த மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு பல சிக்கல்களில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்கும்.
</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4932eba2-8074-4e53-b42a-8bcb9d49a4f8/26-6a789582aa073.webp' /></p><p></p><p>தனுசு ராசிக்காரர்களுக்கு ஆயுள் மற்றும் திடீர் லாபத்தின் 8ஆம் வீட்டில் குருபகவான் உதயமாகிறார். இந்த காலகட்டத்தில் செல்வம் பெருகும் வாய்ப்புள்ளது.</p><p> முதலீடுகளும் நல்ல பலனைத் தரும். இலக்குகளை அடைவதில் வேகம் அதிகரிக்கும். செல்வாக்கு மிக்கவர்களுடன் ஏற்படும் தொடர்புகள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை கொண்டு வரலாம்.</p><p>

அங்கீகாரமும் புகழும் தேடி வரும். குருபகவானின் உதயம் உறவுகளில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். இதன் மூலம் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T14:58:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Skincare Tips : முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்க எளிய இயற்கை வழிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/best-home-remedy-for-black-heads-from-your-face-1786278229"></link>
            <id>https://manithan.com/article/best-home-remedy-for-black-heads-from-your-face-1786278229</id>
            <summary type="text">Simple Skincare Tips : பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் தங்களை அழகாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Simple Skincare Tips : பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் தங்களை அழகாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இயல்பானதே. குறிப்பாக, பெண்கள் தங்களது சருமப் பராமரிப்பிலும் அழகை மேம்படுத்துவதிலும் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.
</p><p>
ஆனால் இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு, தூசி மற்றும் அழுக்கு, போதிய தூக்கமின்மை, மன அழுத்தம், சீரற்ற உணவுப் பழக்கம் போன்ற பல காரணிகளால் சருமம் தனது இயற்கையான பொலிவை இழக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af894a19-c08e-473e-8724-273852d8dc18/26-6a787510a6050.webp' /></p><h2>இயற்கை முறையில் சரும பொலிவு&nbsp;</h2><p> </p><p>அதுமட்டுமின்றி, சிலருக்கு சருமத்திற்கு பொருந்தாத அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும் பல்வேறு சருமப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

அவ்வாறான பிரச்சினைகளில் முகம் மற்றும் குறிப்பாக மூக்கு, கன்னம் போன்ற பகுதிகளில் காணப்படும் கரும்புள்ளிகள் (Blackheads) முக்கியமான ஒன்றாகும்.</p><p> இவை முகத்தின் தோற்றத்தை பாதிப்பதுடன், சருமம் சீரற்றதாகவும் அழுக்காகவும் தோன்றச் செய்யலாம்.

கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கு சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பு, இறந்த சரும செல்கள் தேங்குதல் மற்றும் சருமத் துளைகள் அடைபடுதல் போன்ற காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2892b70e-1e5a-4272-bd34-477fd8a7072e/26-6a78751168cdd.webp' /></p><p>எனவே, அவற்றை அகற்றுவதற்காக கடுமையான முறைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சருமத்திற்கு ஏற்ற மென்மையான பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவது முக்கியம்.
</p><p>
வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கக்கூடிய சில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி சருமத்தை எவ்வாறு பராமரிக்கலாம்? கரும்புள்ளிகள் அதிகரிக்காமல் இருக்க என்னென்ன பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்? மேலும், முகத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.</p><p><iframe width="315" height="576" src="https://www.youtube.com/embed/xALB9yyvCzM" title="முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க எளிய வழி! 💫 Simple Skincare Tips" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T12:40:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை இருந்தால் நேரடி சந்திப்பு– சரத்குமாரின் புதிய யோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/meet-me-if-you-tattoo-nattamai-family-sarathkumar-1786272342"></link>
            <id>https://manithan.com/article/meet-me-if-you-tattoo-nattamai-family-sarathkumar-1786272342</id>
            <summary type="text">sarathkumar : ‘நாட்டாமை குடும்பம்’ என்ற பெயரில் பச்சை குத்திக் கொள்வது தங்களது அடையாளமாக இருக்கும் என்றும், அவ்வாறு பச்சை குத்திக் கொண்டால் தன்னை எளித...</summary>
            <content type="html"><![CDATA[<p>sarathkumar : ‘நாட்டாமை குடும்பம்’ என்ற பெயரில் பச்சை குத்திக் கொள்வது தங்களது அடையாளமாக இருக்கும் என்றும், அவ்வாறு பச்சை குத்திக் கொண்டால் தன்னை எளிதாக நேரடியாக சந்திக்கலாம் என்றும் நடிகர் சரத்குமார் பேசியிருப்பது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.</p><h2>பச்சை இருந்தால் நேரடி சந்திப்பு</h2><p>நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அவரது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சரத்குமார் கலந்து கொண்டு தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6c41756-8ce7-4db1-b232-7dbeaa74105a/26-6a785fee733b7.webp' /></p><p></p><p>
அப்போது பேசிய அவர், ‘நாட்டாமை குடும்பம்’ என்ற பெயரில் பச்சை குத்திக் கொள்வது தங்களது குடும்ப அடையாளமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
</p><p>
இதுகுறித்து அவர் பேசுகையில், “‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை குத்திக் கொள்வது நமது அடையாளம். நமது குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் இது ஒரு குடும்ப அடையாளமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது” என்று கூறினார்.
</p><p>
மேலும், தன்னை சந்திக்க விரும்பும் ஆதரவாளர்களுக்கு எளிதான அணுகலை ஏற்படுத்தும் வகையில் இந்த அடையாளத்தை பயன்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

“நமது குடும்பத்தில் உள்ளவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு கிரீன் கார்டு போன்று ஒன்றை வழங்கலாம் என நினைத்தேன். ஆனால், பச்சை குத்திக் கொண்டால் நமது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளமாக அது இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35d68c17-de36-4ad8-8b6e-d8986f8059d3/26-6a785fef23aaa.webp' /></p><p></p><p> கையில் அந்த பச்சை இருந்தால் என்னை எளிதில் நேரடியாக சந்திக்கலாம்” என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பச்சை குத்திக் கொள்வது யாருக்கும் கட்டாயம் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.</p><p> விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே, உரிய மருத்துவர் ஆலோசனையைப் பெற்று பச்சை குத்திக் கொள்ளலாம் என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
</p><p>
சரத்குமாரின் இந்தப் பேச்சு தொடர்பான காணொளி மற்றும் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், ‘நாட்டாமை குடும்பம்’ என்ற அடையாளத்தை உருவாக்குவது தொடர்பான அவரது கருத்து இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><iframe width="315" height="576" src="https://www.youtube.com/embed/4e5JD1MP-Nw" title="ஒரே திருமணத்தில் இத்தனை இரட்டையர்களா? 😱 Kerala Twin Wedding! | viral short" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p>]]></content>
            <updated>2026-08-09T11:14:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/chettinad-ennai-kathirikai-kulambu-recipe-in-tamil-1786175121"></link>
            <id>https://manithan.com/article/chettinad-ennai-kathirikai-kulambu-recipe-in-tamil-1786175121</id>
            <summary type="text">கத்திரிக்காய் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை கொண்டுள்ளது. 

இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் உள்ளது.கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கத்திரிக்காய் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை கொண்டுள்ளது.</p><p> 

இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் உள்ளது.</p><p>கத்திரிக்காய் வைத்து செய்யப்படும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/144094d6-1ac6-4cc3-b80d-f2b053466846/26-6a76fb6cf2a5e.webp' /></p><p>
அந்தவகையில், சுவையான செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.&nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">தேவையான பொருட்கள்</span></h2><ul><li>

கத்திரிக்காய்- 8 </li><li>
எண்ணெய- ½ கப்</li><li>
கடுகு- ½ ஸ்பூன் </li><li>
வெந்தயம்- ¼ ஸ்பூன் </li><li>
சீரகம்- ½ ஸ்பூன் </li><li>
பெருங்காயத்தூள- ½ ஸ்பூன் </li><li>
சிறிய வெங்காயம்- 2 கப் </li><li>
பூண்டு- 6 பல் </li><li>
தக்காளி- 2 </li><li>
மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்</li><li> 
மிளகாய் தூள்- 2 ஸ்பூன் </li><li>
மல்லி தூள்- 2 ஸ்பூன் </li><li>
புளிச்சாறு- ¼ கப் </li><li>
வெல்லம்- 1 ஸ்பூன் </li><li>
கறிவேப்பிலை- 1 கொத்து </li><li>
உப்பு- தேவையான அளவு</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29d6100a-9262-4d2f-8e44-05a751c3f4cf/26-6a76fade57f2f.webp' />&nbsp;&nbsp;</p><h2> 

 செய்முறை
</h2><p>
முதலில் கத்திரிக்காயை காம்புடன் சேர்த்து குறுக்கே நாலு பாகங்களாக செட்டிக்கொள்ளவும்.
</p><p>
அடுத்து ஒரு தட்டில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், புளிச்சாறு, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை பேஸ்ட் போல் கலந்துக்கொள்ளவும்.
</p><p>
பின் இந்த பேஸ்ட்டை வெட்டிவைத்துள்ள கத்திரிக்காயின் உள்ளே தடவிக்கொள்ளவும்.</p><p>
</p><p>இதற்கடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி மசாலா தடவிய கத்தரிக்காய்களை வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.</p><p>

பின்னர் அதே கடாயில் கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சிறிய வெங்காயம் ஆகிவற்றை வதக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/391d2790-569e-4e63-abbb-103ec0139fc0/26-6a76fafe5426d.webp' />&nbsp;&nbsp;</p><p>

அடுத்து நசுக்கிய பூண்டு, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, புளிச்சாறு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.</p><p>

கொதிகின்ற குழம்பில் வறுத்த கத்திரிக்காய்களை சேர்த்து பதினைந்து நிமிடத்திற்கு மூடியபோட்டு வேகவைக்கவும். </p><p>

இறுதியாக இதில் வெல்லம் சேர்த்து கலந்து இறக்கினால் செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்</p>]]></content>
            <updated>2026-08-09T11:13:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீங்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடும் நபரா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/benefits-of-eating-banana-for-45-days-1786192349"></link>
            <id>https://manithan.com/article/benefits-of-eating-banana-for-45-days-1786192349</id>
            <summary type="text">நம்முடைய உணவு பழக்க வழக்கங்களில் ஒரு சிலர் தினமும் வாழைப்பழம் எடுத்துக் கொள்வது உண்டு. அந்த வகையில், தொடர்ந்து ஒருவர் 45 நாட்களுக்கு வாழைப்பழம் சாப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம்முடைய உணவு பழக்க வழக்கங்களில் ஒரு சிலர் தினமும் வாழைப்பழம் எடுத்துக் கொள்வது உண்டு. அந்த வகையில், தொடர்ந்து ஒருவர் 45 நாட்களுக்கு வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
</p><p> பொதுவாக, வாழைப்பழம் என்பது பசியை போக்குவதற்காக நிறைய நபர்கள் சாப்பிடும் ஒரு உணவாகவே உள்ளது. காலை நேரங்களில் உணவு எடுத்துக் கொள்ள நேரமில்லாத காரணத்தினால் வாழைப்பழம் சாப்பிட்டு அவர்கள் வயிற்றை நிரப்பி கொண்டு போவதை நாம் பார்க்க முடிகிறது. அது மட்டுமில்லாமல் வாழைப்பழம் வருடத்தில் எல்லா நாட்களும் கிடைக்கக்கூடிய பழமாகவும் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f51c41c6-164e-4b06-980f-3e305bd6cd6e/26-6a7721df90172.webp' /></p><p>குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை வேண்டாம் என்று சொல்வதில்லை. அது மட்டும் இல்லாமல் வாழைப்பழத்தில் உடலுக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும் கிடைக்கிறது. அந்த வகையில், ஒருவர் 45 நாட்கள் தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு வருகின்ற பொழுது அவர்களுக்கு உடலில் நிறைய மாற்றங்கள் நடக்கிறது.</p><p></p><p>அந்த வகையில், United States Department of Agriculture (USDA)கூற்றின்படி 100 கிராம் பழுத்த வாழைப்பழத்தில் 89 கலோரிகள், 0.33 கிராம் கொழுப்பு, 1 மில்லிகிராம் சோடியம், 22.80 கிராம் கார்போஹைட்ரேட், 2.60 நார்ச்சத்து, 1.09 கிராம் புரதம், 358 மில்லி கிராம் பொட்டாசியம் ஆகியவை இருப்பதாக சொல்லப்படுகிறது. </p><p>இதில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது. மேலும், இயற்கை சர்க்கரை கார்போஹைட்ரேட்டும் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குவதாக சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77fb4ffe-8f8f-47d0-bc53-798732a4c1c6/26-6a7721e04b0c5.webp' /></p><p>அதனால் காலை உணவாகவும் உடற்பயிற்சிக்கு பின்னர் அல்லது முன்னதாக சிற்றுண்டி ஆக சாப்பிடுவது சிறந்த உணவாக கருதப்படுகிறது. குறிப்பாக, செரோடோனின் என சொல்லப்படும் ஹார்மோன் சுரப்பை இது தூண்டி,நம்முடைய மனநிலையை இது சீராக வைக்கிறது.</p><p>தொடர்ந்து ஒருவர் 45 நாட்கள் வாழைப்பழத்தை சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுக்கு அதன் ஊட்டச்சத்துக்கள் சீரான ரத்த அழுத்தத்திற்கும் மேம்பட்ட செரிமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கு நல்ல சத்துக்கள் கொடுக்கிறது. </p><p>இருப்பினும் அதிக கலோரி உள்ளவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடும் போதும் கூடுதல் கலோரியை உடலில் எடுத்துக் கொள்ளும் என்பதால் எடை அதிகரிக்கலாம்.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T11:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேஷ ராசிக்கான வாழ்நாள் பலன்கள் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mesham-rasipalan-in-tamil-1786269628"></link>
            <id>https://manithan.com/article/mesham-rasipalan-in-tamil-1786269628</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுக்கும் உரிய பொதுவான வாழ்நாள் குணநலன்கள், பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் அவர்களின் பிறப்பு நட்சத்திரம் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுக்கும் உரிய பொதுவான வாழ்நாள் குணநலன்கள், பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் அவர்களின் பிறப்பு நட்சத்திரம் மற்றும் ராசி அடிப்படையில் அமைகின்றன. </p><p>

மனிதர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களின் லக்னம் மற்றும் ராசியில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.
</p><p>
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் ராசிக்குரிய அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட கிழமை என தனித்தனியாக இருக்கும்.
</p><p>
அதேபோல், ஒவ்வொரு ராசிக்கும் நல்ல குணங்கள் என்றும் சில இருக்கும், எதிர்மறை குணங்கள் என்றும் சில இருக்கும்.</p><p>

ஒவ்வொரு ராசியின் வாழ்நாள் பலன்கள் என்பது&nbsp;அவர்களின் படிப்பு, திருமணம், தொழில், வேலை, குழந்தை,&nbsp;பணம், யோகம் உள்ளிட்டவை ஆகும்.
</p><p>
அந்தவகையில், மேஷ ராசிக்கான வாழ்நாள் பலன்கள் குறித்து ஜோதிடர் முத்துக்குமாரி இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xefEG8DUnDI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-09T11:12:14+00:00</updated>
        </entry>
    </feed>
