<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-25T14:24:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் முக்கிய 5 நன்மைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/amazing-health-benefits-of-chewing-cloves-daily-1787659775"></link>
            <id>https://manithan.com/article/amazing-health-benefits-of-chewing-cloves-daily-1787659775</id>
            <summary type="text">amazing health benefits of chewing cloves : உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக நம் முன்னோர்கள் பின்பற்றிய பல இயற்கையான உணவுப் பழக்கங்கள் இன்றும் மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>amazing health benefits of chewing cloves : உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக நம் முன்னோர்கள் பின்பற்றிய பல இயற்கையான உணவுப் பழக்கங்கள் இன்றும் மக்களிடையே பிரபலமாக உள்ளன. </p><p>காலையில் எலுமிச்சை கலந்த நீர் குடிப்பது, வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் உட்கொள்வது போன்ற பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வரும் பழக்கங்களாக உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb8bb975-e3f7-48f4-9dd9-9dd885f2441c/26-6a8d936fad6d7.webp' /></p><p></p><p>அந்த வரிசையில், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கிராம்பை மென்று சாப்பிடும் பழக்கமும் பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது.
</p><p>உணவுக்கு மணமும் தனித்துவமான சுவையும் சேர்க்கும் கிராம்பு, பாரம்பரியமாக பல்வேறு உடல்நலப் பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a50a4c1-29a7-4ad8-a595-4a8e3ea0445b/26-6a8d937060828.webp' /></p><p>குறிப்பாக, கிராம்பை மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>1. வாய் ஆரோக்கியம் மேம்படும்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13821681-7984-4a3f-9d1c-b3be22f14a6c/26-6a8d937112d10.webp' /></p><p>கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகளில் ஒன்று, வாய் புத்துணர்ச்சியாகவும் துர்நாற்றமின்றியும் இருப்பது. இதில் உள்ள யூஜெனோல் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வாய் துர்நாற்றத்துக்குக் காரணமான கிருமிகளை எதிர்த்துப் போராடுவதுடன், ஈறு தொற்றுகளையும் குறைக்க உதவும்.</p><h2>2. செரிமானம் மேம்படும்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ffe6789-54ba-4603-9d1c-2ad16ee0f1a4/26-6a8d9371b9e22.webp' /></p><p></p><p>பல நூற்றாண்டுகளாக செரிமானப் பிரச்சனைகளைப் போக்க கிராம்பு பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராம்பில் உள்ள மருத்துவப் பண்புகள் செரிமான நொதிகளின் செயல்பாட்டைத் தூண்டி, நாம் உண்ணும் உணவைச் சிறப்பாகச் செரிக்க துணைப்புரியும்.</p><p>

குறிப்பாக, இதில் உள்ள யூஜெனோல் வயிற்றுப் புறணியைப் பாதுகாக்கவும், இரைப்பைப் புண்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவக்கூடும் என்று விலங்குகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p> இதை உறுதிப்படுத்த மனிதர்களிடம் மேலும் ஆய்வுகள் தேவைப்பட்டாலும், சீரான உணவின் ஒரு பகுதியாக கிராம்பைச் சேர்ப்பது செரிமான ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும்.
</p><h2>
3. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்தது</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b45b245c-811a-4462-9884-c87d10ad205e/26-6a8d93726c01d.webp' /></p><p>
மசாலாப் பொருட்களில் வலுவான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்தது என்றால், அதில் கிராம்பும் முக்கியமான ஒன்று. இதில் உள்ள யூஜெனோல் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்துக்குக் காரணமான தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன.
</p><p>
இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலில் ஏற்படும் வீக்கம், இதய நோய், நீரிழிவு உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுக்கு பங்களிக்கக்கூடும். எனவே, வலுவான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த கிராம்பை தினமும் 1–2 மென்று சாப்பிடுவது உடலில் உடனடியாக பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டாலும், தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது நீண்ட கால ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடும்.
</p><h2>
4. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/114ecbd0-4e16-4fbb-8ca7-2b9dcdf0f5cc/26-6a8d93731e250.webp' /></p><h2>
</h2><p>கிராம்பு இரத்த சர்க்கரை அளவைச் சீராக வைத்துக்கொள்ள உதவக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், சிறிய அளவிலான மனித ஆய்வுகள் மற்றும் விலங்கு ஆய்வுகளில், கிராம்பில் உள்ள சில சேர்மங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, உணவுக்குப் பிறகு ஏற்படும் இரத்த சர்க்கரை அதிகரிப்பைக் குறைக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.</p><p>

இருப்பினும், கிராம்பை ஒருபோதும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளுக்கு மாற்றாகக் கருதக்கூடாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் கிராம்பை எடுத்துக்கொள்ளத் தொடங்குவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறப்பு.&nbsp;</p><h2>5.அழற்சியை எதிர்த்துப் போராட உதவும்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd5eb5cb-3714-488f-b272-29bee42661fd/26-6a8d9373c77de.webp' /></p><p>
நாள்பட்ட அழற்சி ஆர்த்ரிடிஸ், இதய நோய் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளுடன் தொடர்புடையது. கிராம்பில் உள்ள யூஜெனோல் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.&nbsp; </p><p>உணவின் ஒரு பகுதியாக கிராம்பைச் சேர்ப்பது&nbsp; ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் என்றாலும் ஏற்கனவே வேறு நோய்களுக்கு மருத்து பாவித்து வருபவர்கள் தினசரி கராம்பு எடுத்து கொள்ளும் முன்னர் மருத்துவரிடம் ஆலோசித்து பயன்படுத்துவதே சிறந்தது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T13:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியன் - கேது சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: சவால்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ketu-sun-conjunction-in-leo-who-have-to-be-careful-1787654724"></link>
            <id>https://manithan.com/article/ketu-sun-conjunction-in-leo-who-have-to-be-careful-1787654724</id>
            <summary type="text">Ketu-Sun Conjunction In Leo : வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில், ஆகஸ்ட் 17ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ketu-Sun Conjunction In Leo : வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைந்தார்.</p><p> ஏற்கனவே சிம்மத்தில் கேது பயணித்து வருவதால், சூரியன்–கேது சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இந்த சேர்க்கை செப்டம்பர் 18ஆம் தேதி வரை நீடிக்கும்.

சூரியன் மற்றும் கேது ஒரே ராசியில் இணைவதால், ஜோதிடத்தின் படி கிரகண யோகம் உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c38b8d77-b1d7-43ed-977d-a777b5cb5a92/26-6a8d788695f99.webp' /></p><p></p><p> </p><p>இதனால் சிலருக்கு தன்னம்பிக்கை குறைவு, பணியிடத்தில் பிரச்சனைகள், இலக்குகளை அடைவதில் தடைகள் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படலாம். </p><p>எனவே, இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

அப்படியானால், கேது -சூரிய சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.&nbsp;</p><h2>விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44552de6-9992-4ece-8c73-cc4aa0b50143/26-6a8d7887482c6.webp' /></p><h2>
</h2><p>விருச்சிக ராசியின் 10-ஆம் வீட்டில் கேது-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் பணியிடத்தில் உயர் அதிகாரிகள் அல்லது சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும்.</p><p> இல்லையெனில் வேலையில் பிரச்சனைகள் ஏற்பட்டு, வேலை இழக்கும் சூழலும் உருவாகலாம். அவசரம் அல்லது கோபத்தில் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.</p><p>பெரிய முதலீடுகளை நன்கு ஆராய்ந்து செய்வதுடன், பண விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் எதிர்ப்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும்.</p><h2>

கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cedd5568-fbd2-4c2e-bd20-d28891da0163/26-6a8d7888092f6.webp' /></p><p>
கும்ப ராசியின் 7-ஆம் வீட்டில் கேது-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். </p><p>ஈகோ பிரச்சனைகளால் வணிக கூட்டாளியுடன் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். </p><p>வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், செலவுகளைக் கட்டுப்படுத்துவதும் அவசியம்.நிதி விடயங்களில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.&nbsp;</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8a4c819-e5af-4189-b07f-d96eaf8d29aa/26-6a8d7888b0e65.webp' /></p><p></p><h2>
</h2><p>மகர ராசியின் 8-ஆம் வீட்டில் கேது-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். </p><p>நீதிமன்ற வழக்குகள் தாமதமாகலாம். எதிர்பாராத செலவுகள் அதிகரித்து, பட்ஜெட் சீர்குலைய வாய்ப்புள்ளது. சில சமயங்களில் கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம். எனவே பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.</p><p>பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாக வாய்புள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T11:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலனின் காரை 3400 முத்தங்களால் அலங்கரித்த காதலி! காவல்துறை அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gfriend-leaves-3-400-kiss-bfriends-car-police-fine-1787646035"></link>
            <id>https://manithan.com/article/gfriend-leaves-3-400-kiss-bfriends-car-police-fine-1787646035</id>
            <summary type="text">மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில், தனது காதலனின் காரை உதட்டுச் சாயத்தால் பதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முத்தக் குறியீடுகளால் அலங்கரித்த சம்பவம் சமூக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில், தனது காதலனின் காரை உதட்டுச் சாயத்தால் பதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முத்தக் குறியீடுகளால் அலங்கரித்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற நிலையில், தற்போது காவல்துறை நடவடிக்கையும் எடுத்துள்ளது.</p><h2>காதலியின் 3,400 முத்தங்கள்</h2><p>
</p><p>
காதலனின் காரின் மீது உதட்டுச் சாயத்துடன் சுமார் 3,400 முத்தக் குறியீடுகளை பதித்ததற்காக, காரின் உரிமையாளரான ஆதித்யா சிகர்வாருக்கு காவல்துறை ரூ.5,500 அபராதம் விதித்துள்ளது. மேலும், காரின் மீது பதிக்கப்பட்டிருந்த அனைத்து முத்தக் குறியீடுகளையும் அழிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7218555e-3410-4fba-b084-db5f45d32f3a/26-6a8d56e50266a.webp' /></p><p></p><p>

கடந்த இரண்டு நாள்களாக, குவாலியர் நகரின் மையப் பகுதியில் உதட்டுச் சாயத்தால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான முத்தக் குறியீடுகளுடன் கார் ஒன்று வலம் வந்தது. இதனைப் பலரும் ஆர்வத்துடன் கவனித்த நிலையில், அந்தக் காரின் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.</p><p>குறித்த காணொளி காவல்துறையினரின் கவனத்துக்கும் சென்றதைத் தொடர்ந்து, காரின் உரிமையாளரும், அந்த இளம் பெண்ணின் காதலனுமான ஆதித்யா சிகர்வாரை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b95fb5ae-7f01-4153-a654-a06a36897494/26-6a8d56e5ad2ff.webp' /></p><p>அப்போது, காரின் தோற்றம் மற்றும் வடிவத்தில் மாற்றம் செய்ததாகக் கூறி, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அவருக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதுகுறித்து ஆதித்யா சிகர்வார் கூறுகையில், “என்னுடைய காதலி சுமார் மூன்றரை மணி நேரம் செலவழித்து காரின் மீது 3,400 முத்தக் குறியீடுகளை பதித்தார்.பின்னர், அதனை விடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்திலும் வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/263c8cf5-d723-421a-aac3-2651b9177765/26-6a8d56e65ffc9.webp' /></p><p></p><p>

இவ்வாறு காரை அலங்கரிப்பது சட்டப்படி விதிமீறல் என்பது எனக்குத் தெரியாது. காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, காரின் மீது இருந்த அனைத்து முத்தக் குறியீடுகளையும் அழித்துவிட்டேன்.</p><p>மேலும், விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் செலுத்திவிட்டேன்.

 சட்டத்தை மீறும் செயலை ஒருபோதும் யாரும் செய்யக்க்கூடாது என்று தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:14:20+00:00</updated>
        </entry>
    </feed>
