<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-04T17:58:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆட்டோ ஓட்டும் சுப்ரமணியபுரம் திரைப்பட நடிகர்.., வைரலாகும் புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/subramaniapuram-actor-marimuthu-life-changed-1785847369"></link>
            <id>https://manithan.com/article/subramaniapuram-actor-marimuthu-life-changed-1785847369</id>
            <summary type="text">கடந்த 2008ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் டும்கான் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 2008ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.</p><p>

இந்தப் படத்தில் டும்கான் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மாரிமுத்து. படத்தில் மைக் செட் அமைக்கும் தொழிலாளியாக அவர் நடித்திருந்தார்.
</p><p>
மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து, சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfc4dc84-db41-4614-bb46-79d79338b8b7/26-6a71de4b1e9de.webp' /></p><p>மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர், லைட் மற்றும் மைக் செட் அமைக்கும் வேலை செய்து வந்துள்ளார்.
</p><p>
அப்போது அவரை பார்த்த சசிகுமார், சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது.</p><p>

பல கோணங்களில் புகைப்படம் எடுத்த படக்குழு, பின்னர் அவரை தொடர்புகொண்டு படத்தில் நடிக்க அழைத்துள்ளது.</p><p>

மாரிமுத்துவின் கதாபாத்திரம் படத்தின் முக்கிய திருப்பமாக அமைந்தாலும், அதன் பிறகு அவருக்கு எதிர்பார்த்த அளவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8196453-07cb-4cc7-a851-ffef78d31a08/26-6a71de4bc1c1a.webp' /></p><p>வாழ்க்கையை நடத்த ரேடியோ கடையில் வேலை பார்த்ததுடன், பின்னர் ஆட்டோ ஓட்டியும் வருமானம் ஈட்டியுள்ளார். </p><p>

ஒரு கட்டத்தில் ஆட்டோ பழுதடைந்ததால் அதை சரிசெய்ய கூட பணம் இல்லாமல் சிரமப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
தற்போது ஆட்டோவை மீண்டும் சரிசெய்து ஓட்டும் அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. </p><p>

சமீபத்திய தோற்றத்தில் அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருப்பதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T15:18:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/lung-cancer-early-signs-in-tamil-1785842420"></link>
            <id>https://manithan.com/article/lung-cancer-early-signs-in-tamil-1785842420</id>
            <summary type="text">நுரையீரல் புற்றுநோய் உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது. 

நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரலில் உள்ள செல்களின் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுரையீரல் புற்றுநோய் உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது. </p><p>

நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரலில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும்.</p><p>

புகைபிடித்தல், நச்சு வாயுக்கள் மற்றும் மரபியல் காரணங்களால் இது ஏற்படுகிறது. </p><p>

ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகள் சாதாரண சுவாச பிரச்சினைகளைப் போல இருப்பதால், பலருக்கு நோய் தாமதமாகவே கண்டறியப்படுகிறது.</p><p>
</p><p>ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றால், குணமடையும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>
அந்தவகையில், நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.</p><h2>யாருக்கு அதிக ஆபத்து?</h2><p>

நேரடியாக அல்லது மறைமுகமாக புகைப்பிடிக்கும் புகைக்கு ஆளாகுபவர்கள்.
</p><p>
காற்று மாசுபாடு, அஸ்பெஸ்டாஸ், சிலிக்கா போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களுடன் பணிபுரிபவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/890bc0a4-5796-464a-a129-a726359740ff/26-6a71cb7449984.webp' />
</p><p>
நச்சு வாயுக்களுக்கு அடிக்கடி ஆளாகுபவர்கள்.
</p><p>
குடும்பத்தில் நுரையீரல் புற்றுநோய் வரலாறு உள்ளவர்கள்.
</p><p>
நீண்டகால நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள்.
</p><h2>
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
</h2><ul><li>
மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல்.
</li><li>
இருமலுடன் ரத்தம் வருதல்.
</li><li>
காரணமின்றி உடல் எடை குறைதல் மற்றும் பசி குறைதல்.
</li><li>
நெஞ்சுவலி அல்லது மூச்சுத்திணறல்.
</li><li>
மீண்டும் மீண்டும் நெஞ்சுத் தொற்று ஏற்படுதல்.
</li><li>
தொடர்ந்து குரல் கரகரப்பாக இருப்பது அல்லது அதிக சோர்வு.</li></ul><h2>தடுப்பது எப்படி?
</h2><ul><li>புகைப்பிடிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும்.</li><li>
பிறர் புகையை சுவாசிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
</li><li>காற்று மாசுபாடு மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
</li><li>நீடித்த இருமல் அல்லது சுவாசப் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.</li></ul>]]></content>
            <updated>2026-08-04T13:14:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாருக்கெல்லாம் ஜாதகம் பார்ப்பது வேலை செய்யாது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/when-should-you-check-horoscope-1785844935"></link>
            <id>https://manithan.com/article/when-should-you-check-horoscope-1785844935</id>
            <summary type="text">ஜாதகம் என்பது ஒருவர் பிறந்த நேரத்தில் வானத்தில் உள்ள கோள்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையை காட்டும் ஒரு வரைபடம் அல்லது ஆவணம் ஆகும். 

இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜாதகம் என்பது ஒருவர் பிறந்த நேரத்தில் வானத்தில் உள்ள கோள்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையை காட்டும் ஒரு வரைபடம் அல்லது ஆவணம் ஆகும். </p><p>

இது ராசி கட்டங்கள், லக்னம் மற்றும் ஒன்பது கோள்களின் அமைப்பைக் கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை கணிக்கப் பயன்படுகிறது.
</p><p>
ஜாதகம் பார்ப்பது என்பது ஒருவர் பிறந்த நேரம், தேதி மற்றும் இடத்தை வைத்து கிரகங்களின் நிலைகளை கணிப்பதாகும்.</p><p>

ஆன்லைன் தளங்கள் மூலம் துல்லியமான ஜாதகக் கட்டம் மற்றும் பலன்களை உடனடியாகப் பெறலாம்.
</p><p>
அந்தவகையில், ஜாதகம் பார்ப்பது குறித்த சில தகவல்களை ஜோதிடர் யோகி ஜெயபிரகாஷ் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uOjS6mw3RVI" width="640" height="360" class="note-video-clip"></iframe> &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T12:10:48+00:00</updated>
        </entry>
    </feed>
