<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-28T13:23:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வழக்கு : மெட்டா ரூ.1.5 லட்சம் கோடி இழப்பீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/meta-to-pay-17-billion-in-teen-social-media-1787916627"></link>
            <id>https://manithan.com/article/meta-to-pay-17-billion-in-teen-social-media-1787916627</id>
            <summary type="text">ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்பாடு சிறார்களின் மனநலனைப் பாதிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், சுமார் ரூ.1.5 லட்சம் கோடி இழப்பீடு வழங்க மெட்டா நிறுவனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்பாடு சிறார்களின் மனநலனைப் பாதிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், சுமார் ரூ.1.5 லட்சம் கோடி இழப்பீடு வழங்க மெட்டா நிறுவனம் சம்மதித்துள்ளது.</p><p>

இந்தச் செயலிகளின் அதிகப்படியான பயன்பாடு பதின்ம வயதினரிடையே மன அழுத்தம் மற்றும் தீவிர மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும், பெற்றோர் அனுமதியின்றி சிறார்களின் தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்பட்டு AI மற்றும் மெஷின் லேர்னிங் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a07ac78c-483b-4435-b38b-29e1fd081272/26-6a91741e58911.webp' /></p><p></p><h2>2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த அனுமதி</h2><p>
</p><p>
அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. </p><p>மெட்டா வழங்கும் இழப்பீட்டுத் தொகை அமெரிக்க மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படவுள்ள நிலையில், அதிகபட்ச தொகையை கலிபோர்னியா பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e193c19-f4db-4300-8b2f-61951133933f/26-6a91741f08897.webp' /></p><p></p><p>
</p><p>
மேலும், சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தளங்களின் பயன்பாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் மெட்டா ஒப்புக்கொண்டுள்ளது. </p><p>அதன்படி, சிறார்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை நாளொன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும். பெற்றோர் அனுமதியின்றி நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படவுள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u style=""><b>FOLLOW NOW&nbsp;</b></u></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:43:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாலட்சுமி ராஜயோகம் தரும் அதிர்ஷ்டம்: செப்டம்பரில் பணமழை இந்த ராசிகளுக்கு தான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mahalakshmi-rajyog-in-september-who-get-wealth-1787908446"></link>
            <id>https://manithan.com/article/mahalakshmi-rajyog-in-september-who-get-wealth-1787908446</id>
            <summary type="text">ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் கிரக சேர்க்கைகளால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் கிரக சேர்க்கைகளால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்ப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p> ஒவ்வொரு மாதமும் கிரக நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கம் காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/823620bd-46b5-46a4-8693-bcf1eba721b2/26-6a9159a8af291.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், 2026ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. ஏனெனில் இம்மாதத்தில் பல யோகங்கள் உருவாகின்றன. </p><p>குறிப்பாக, செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மிகவும் மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது.
</p><p>
தற்போது கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.இந்நிலையில், செப்டம்பர் 05ஆம் தேதி மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் மிதுன ராசிக்குள் நுழைந்து செவ்வாயுடன் சேர்ந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.இந்த ராஜயோகம் செப்டம்பர் 07ஆம் தேதி வரை நீடிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baf0b951-d82a-4c67-bd1f-a156b3cedb38/26-6a9159a9667ff.webp' /></p><p>

இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நிதி நிலையில் உயர்வு, தொழிலில் முன்னேற்றம் மற்றும் எதிர்பாராத நல்ல மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது. அப்படி அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50e95e37-62f1-4d07-8c6e-2f1099c2bd93/26-6a9159aa267cf.webp' /></p><p></p><p>
மேஷ ராசியின் 3-வது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.&nbsp;</p><p>தொழிலில் முன்னேற்றமும், வணிகத்தில் நல்ல லாபம் தரும் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். வருமானம் மற்றும் நிதி நிலை உயரும்.முக்கியமாக, அதிக பணத்தை சேமிக்க முடியும்.</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2a5afc9-0d11-4f76-8261-dc8e4c8099c8/26-6a9159aae1d6e.webp' /></p><p>
கும்ப ராசியின் 5-வது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். </p><p>வருமானத்தை அதிகரிக்க புதிய வழிகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தம்பதிகளிடையே பிணைப்பும் அதிகரிக்கும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4f82cea-9516-4fa8-a9eb-6d0e77bdf275/26-6a9159ab95dc0.webp' /></p><p>
துலாம் ராசியின் 9-வது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பண விஷயங்களில் எதிர்பாராத நல்ல பலன்கள் கிடைக்கும்.</p><p>ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். பரம்பரை சொத்து மற்றும் குடும்பப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.</p><h2>

கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2e0b831-0756-408f-9437-71949a9ae517/26-6a9159ac4bfa9.webp' /></p><h2>
</h2><p>கன்னி ராசியின் 10-வது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.</p><p> புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் கனவு நனவாகலாம். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், மனக் குழப்பங்களும் நீங்கி தெளிவு பிறக்கும்.</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/280d9274-509b-40af-a1d7-1e4fc3ef5f9d/26-6a9159acf1ffe.webp' /></p><p></p><h2>
</h2><p>மிதுன ராசியின் முதல் வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். </p><p>பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலப் பிரச்சனைகள் தீரும். பண வரவு அதிகரித்து, பல வழிகளில் இருந்து பணம் சேரும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T10:04:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப் பேரழிவிலும் கொடூர கொள்ளை – சடலங்களில் இருந்து நகைகள் திருட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/men-stealing-dead-nepal-flood-victims-earrings-1787906183"></link>
            <id>https://manithan.com/article/men-stealing-dead-nepal-flood-victims-earrings-1787906183</id>
            <summary type="text">நேபாள வெள்ளம்: வெள்ளத்தில்&amp;nbsp; கடுமையாக பாதிக்கப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெள்ளம்: வெள்ளத்தில்&nbsp; கடுமையாக பாதிக்கப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>

இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுத்த ஒரு கும்பல், சடலங்களில் இருந்த நகைகளை திருடும் அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b5f0064-bb70-4a63-a04f-b557fb513174/26-6a914acc162f0.webp' /></p><p></p><h2>வைரலாகும் காணொளி</h2><p> </p><p>இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
சடலங்களை அவமதித்து, அவற்றில் இருந்த நகைகளை கொள்ளையடித்த உமேஷ் மற்றும் மதன் ஆகிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96524aaf-4488-451a-a18c-9348ffe99142/26-6a914accdb517.webp' /></p><p></p><p>
</p><p>
வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவில் ஏற்கனவே பெரும் இழப்புகளை சந்தித்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்களைக் கூட விட்டுவைக்காமல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நபர்கள் உள்ளனரா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ne" dir="ltr">मृतकको कानको मुन्द्रा चोरी गर्ने व्यक्तिहरु नियन्त्रणमा लिएको सम्बन्धमा । <a href="https://t.co/pnPlnQPn9j">pic.twitter.com/pnPlnQPn9j</a></p>&mdash; Nepal Police (@NepalPoliceHQ) <a href="https://x.com/NepalPoliceHQ/status/2092950217138339990?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T08:46:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவின் - நயன்தாரா கெமிஸ்ட்ரியில் கலக்கும் ‘ஹாய்’ - படத்தின் முழு விமர்சனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/kavin-and-nayanthara-s-hi-movie-review-in-tamil-1787900866"></link>
            <id>https://manithan.com/article/kavin-and-nayanthara-s-hi-movie-review-in-tamil-1787900866</id>
            <summary type="text">லலித் குமார், நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள ஹாய் படத்தை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கியுள்ளார். டாக்ஸிக் படத்தைத் தொடர்ந்துநயன்தாரா நடிப்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லலித் குமார், நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள ஹாய் படத்தை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கியுள்ளார். </p><p>டாக்ஸிக் படத்தைத் தொடர்ந்துநயன்தாரா நடிப்பில் ஹாய் படம் ஆகஸ்ட் 28ம் தேதியான இன்று வெளியாகியுள்ளது.&nbsp;Hi திரைப்படத்தின் திரை விமர்சனம் இதோ!</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dc879ec-278c-4b6c-81b1-c75d59b137ee/26-6a9139216ec16.webp' />&nbsp;</p><h2>Hi திரைப்படம் எப்படி உள்ளது?&nbsp;&nbsp;</h2><p>இந்த படமும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் போல வயது வித்தியாச காதல் படம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படியெல்லாம் இல்லை என்பது படத்தை பார்த்தவுடனே தெரிந்துக் கொள்ளும் அளவுக்கு நயன்தாராவும் கவினும் கெமிஸ்ட்ரியை செமையாக மேட்ச் செய்து நடித்துள்ளனர்.
</p><p>
ஸ்டார் படத்திற்கு பிறகு கவின் நடித்த கிஸ் மற்றும் மாஸ்க் படங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், நயன்தாராவுடன் இணைந்து அவர் நடித்துள்ள 'ஹாய்' திரைப்படம் டைட்டிலை போலவே ஃபீல் குட்டாக இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5730eaee-f002-4a36-ab83-2b1084a26d5a/26-6a913922237ee.webp' /></p><p><b>

ஹாய் கதைகளம்</b></p><p> காதலிக்கவும் திருமணம் செய்யவும் பெண்களே கிடைக்கவில்லை என்பதால் சூசைட் செய்யும் அளவுக்கு செல்லும் மயில்சாமி கேரக்டரில் கவின் பக்காவாக பொருந்தி நடித்துள்ளார். </p><p>கடன் பிரச்னையால் பிடிக்காத அதுவும் பெண்களை அடித்து துன்புறுத்தும் நபரை திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என ஊரை விட்டு ஓடி வரும் தேவயானியாக நயன்தாரா அழகில் ரசகுல்லாவாகவே அசத்துகிறார்.</p><p>

தேவயானியிடம் தனது காதலை சொல்ல வர, அவர் ஒரு மோசமான விஷயத்தை சொல்லி ஆண்களே இப்படித்தான் பார்த்த உடனே ஒரு பெண்ணிடம் லவ் சொல்றாங்க என நெத்தியடி பதில் சொல்ல, அப்புறம் கையில் வைத்திருந்த ரோஜாப்பூவை தூக்கிப் போட்டு விட்டு, அவரிடம் தோழனாகவே பழகுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a714c9fb-e842-4364-8f1b-49baaac9dc52/26-6a913922ca23b.webp' /></p><p>
</p><p>
ஒரு கட்டத்தில் தேவயானியை காப்பாற்ற, நாங்கள் இருவரும் காதலிக்கிறோம், அவர் வயிற்றில் என் குழந்தை வளருது என சொல்லி தேவயானியுடன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஏமாற்றும் மயில்சாமி கடைசி வரை தனது காதலை தேவயானியிடம் சொன்னாரா? திருமணத்தை நிறுத்த போட்ட டிராமாக்கள் என்ன ஆனது? என்பதை பார்க்கள் ஆவலாக உள்ள வகையில் கதை நகர்த்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>கோவை தமிழில் உருளை கண்ணாடியை அணிந்துக் கொண்டு முதல் பாதி முழுவதும் கவின் பேசுவதும் நடிப்பதும் பக்காவாக பொருந்தி போய் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.</p><p>ட்ரூத் ஆர் டேர் சவாலுக்காக நயன்தாராவும் கவினும் ரெட் லைட் ஏரியாவுக்குச் செல்லும் இடமெல்லாம் காமெடி செமையாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. முதல் பாதி முழுக்க இருவருக்கும் இடையேயான நட்பு எந்த நொடியில் காதலாக மாறுகிறது என்கிற தருணம் அருமை.</p><p> 2வது பாதியில் படம் அப்படியே தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் ஸ்டைலில் சேஞ்ச் ஓவர் ஆகிறது. இந்த படத்திலும் பாக்யராஜ் ஹீரோவோட அப்பாவாக நடித்து செம ஸ்கோர் செய்கிறார்.</p><p> "என்ன மட்டும் இல்லை, எனக்கு ஒன்னுன்னா எங்க அப்பா எல்லாரையும் அடிப்பார்" என வசனம் பேசிவிட்டு பாக்யராஜ் சாரை ஸ்கோர் செய்ய விட்ட இடம் சூப்பராக அமைந்துள்ளது.</p><p>பெயர் மட்டுமில்லை, ஆளே பரிசுத்தம் என தப்பாக நினைக்கும் நயன்தாராவுக்கு ஃபெப்சி விஜயன் சொல்லும் இடமெல்லாம் விசில் பறபக்கிறது.&nbsp;</p><p>சண்முகி டாக்டராக வந்து விட்டு விடிவி சொல்லும் சந்திரமுகி காமெடி, துருவ் விக்ரம் குரலில் கிளைமேக்ஸுக்கு முன்னதாக வரும் "குடிகார நெஞ்சு" பாடல் என ஏகப்பட்ட விஷயங்கள் படத்தை ஜாலியாகவும் ஃபீல் குட்டாகவும் கொண்டு செல்கிறது.
</p><p>கவின், நயன்தாரா, ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு என நடிகர்களின் தேர்வே இந்த படத்தை கச்சிதமாக காப்பாற்றியுள்ளது. கணபதி இல்லை தளபதி, உயிருள்ளவரை உஷா என ஏகப்பட்ட சினிமா ரெஃபரன்ஸுகளும் கதைக்கு பிளஸ் ஆக அமைந்துள்ளன. </p><p>ஜென் மார்ட்டின் இசையில் ரசகுல்லா பாடலும் குடிகார நெஞ்சு பாடலும் இமிடியேட் ஹிட்டாக மாறிவிடுகிறது. பின்னணி இசை காமெடி காட்சிகளில் சிரிக்கவும், எமோஷனல் காட்சியில் ஃபீல் பண்ணவும் வைத்துள்ள விதம் சிறப்பு. </p><p>ரஜினி, கமல் எல்லாம் தேவையில்லை மயில்சாமி போதும் என சொல்லும் இடம் ஒருத்தன் உண்மையாக அன்பு செலுத்தினாலே பெண்களுக்கு பிடிக்கும் என்கிற விஷயத்தை கடத்த இயக்குநர் பண்ண விஷயம் பாராட்டுக்குரியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51a28f8b-c74b-4ae9-a4ed-62d005efa017/26-6a9139237bc55.webp' /></p><p>
</p><p><b>
மைனஸ் என்ன?&nbsp;</b></p><p> முதல் பாதியில் சில இடங்களில் இடம் பெற்ற டிராமாக்கள் பெரிதாக ஒட்டவில்லை என்றாலும், ஃபிரெஷ்ஷாக இருந்தது. படத்தின் பலமே 2வது பாதி தான். </p><p>ஆனால், முதல் பாதியில் வந்த மயில்சாமி 2வது பாதியில் பல இடங்களில் கவினாகவே வந்து செல்வது போன்ற உணர்வு ஏற்படுவதும் நயன்தாரா வெள்ளந்தியாக இருக்க பிரபு தான் காரணம் என்று சிம்பிளாக கடந்து செல்வது பெரிதாக கனெக்ட் ஆகவில்லை.கிளைமேக்ஸ் காட்சியில் சுஹாசினி வரும் இடங்களும் இன்னமும் பெட்டராக ஸ்டேஜிங் செய்திருக்கலாம்.</p><p>மொத்த்த்தில்&nbsp; இந்த வாரம் வெளியான டாக்ஸிக் படத்தில் கங்காவா இந்த நயன்தாரா என வாயை பிளக்க வைக்கும் அளவுக்கு செம அழகாக நடித்துள்ளார். </p><p>யாரடி நீ மோகினி படத்தில் அவருக்கு ரெட் சாரி தான் அழகா சூட் ஆகும் என தனுஷ் சொல்வது போல இங்கே ஒயிட் சுடிதார் குறித்து கவின் சொல்லும் இடமெல்லாம் க்யூட்டாக உள்ளது. சுருக்கமாக சொன்னால் ஒரு ஃபீல் குட் படமாகவே இந்த ஹாய் படம் அழகாக உருவாகியுள்ளது. தாராளமாக தியேட்டரில் சென்று பார்க்கலாம்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:31:07+00:00</updated>
        </entry>
    </feed>
