<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-05T08:34:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக தாய்ப்பால் வாரம் 2026: குழந்தைக்கு முதல் தடுப்பூசியான சீம்பாலின் முக்கியத்துவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/world-breastfeeding-week-benefits-of-colostrum-1785916361"></link>
            <id>https://manithan.com/article/world-breastfeeding-week-benefits-of-colostrum-1785916361</id>
            <summary type="text">world breastfeedingweek : ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை உலகம் முழுவதும் ‘உலக தாய்ப்பால் வாரம்’&amp;nbsp; கடைப்பிடிக்கப்படுகிறது. புதிதாகப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>world breastfeedingweek : ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை உலகம் முழுவதும் ‘உலக தாய்ப்பால் வாரம்’&nbsp; கடைப்பிடிக்கப்படுகிறது. </p><p>புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியம், வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த வாரத்தின் முக்கிய நோக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7c74062-08e7-4922-81bf-34a5104e6939/26-6a72f11e9fdbb.webp' /></p><h2>

சீம்பால் என்றால் என்ன?
</h2><p>குழந்தை பிறந்த பிறகு தாயின் மார்பகங்களில் இருந்து முதன்முதலாக சுரக்கும் அடர்த்தியான மஞ்சள் நிறப் பால் சீம்பால் எனப்படுகிறது. அளவில் குறைவாக இருந்தாலும், இது சாதாரண பால் அல்ல; புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலுக்குத் தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்துகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்ட இயற்கையின் அற்புதமான உணவாகும்.
</p><p>
பிறந்த குழந்தையின் சிறிய வயிற்றுக்கு ஏற்ற வகையில் மிகச் சரியான அளவில் உருவாகும் சீம்பால், குழந்தையின் வாழ்க்கையின் முதல் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. இதனால்தான் மருத்துவர்கள் இதனை “இயற்கையின் முதல் தடுப்பூசி” என்று குறிப்பிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3afcc665-5fff-41ac-a623-6d2d599ab68c/26-6a72f11f581ba.webp' /></p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சீம்பாலின் முக்கிய நன்மைகள்</span></p><p><b>இயற்கையின் முதல் தடுப்பூசி
</b></p><p>சீம்பாலில் அதிக அளவில் காணப்படும் Immunoglobulin A (IgA) எனப்படும் நோய் எதிர்ப்பு புரதம், குழந்தையின் குடல் மற்றும் சுவாசப் பாதைகளில் பாதுகாப்புப் படலமாக செயல்படுகிறது. இதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட கிருமிகளின் தாக்குதலிலிருந்து குழந்தையை பாதுகாக்க உதவுகிறது.</p><p>
பிறந்த உடனேயே குழந்தைக்கு கிடைக்கும் இந்த இயற்கையான பாதுகாப்பு, அதன் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக வளர்வதற்கு அடித்தளமாக அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7ca30dd-add9-4060-ab9c-47a3e295a280/26-6a72f1200859b.webp' /></p><p><b>குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான வளர்ச்சி
</b></p><p>பிறந்த குழந்தையின் செரிமான மண்டலம் மிகவும் மென்மையான நிலையில் இருக்கும். சீம்பாலில் உள்ள சிறப்பு ஊட்டச்சத்துகள் குழந்தையின் குடல் சுவர்களை வலுப்படுத்தி, ஆரோக்கியமான குடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.</p><p>

மேலும், குழந்தையின் உடல் தாய்ப்பாலை எளிதாக ஏற்றுக்கொள்ளும் வகையில் செரிமான அமைப்பை தயார் செய்கிறது.</p><p><b>மஞ்சள் காமாலை ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும்</b></p><p>
பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலையைத் தடுப்பதிலும் சீம்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இயற்கையான லேசான மலமிளக்கியாக செயல்பட்டு, குழந்தையின் முதல் மலமான மெகோனியம் (Meconium) வெளியேற உதவுகிறது.

இதன் மூலம் உடலில் தேங்கக்கூடிய பிலிரூபின் அளவு குறைந்து, மஞ்சள் காமாலை ஏற்படும் வாய்ப்பு குறைய உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0b62efe-5bb6-4f48-b7c0-608f407dce68/26-6a72f120ad530.webp' /></p><p>
</p><p><b>மூளை, கண் பார்வை மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும்</b></p><p>
சீம்பாலில் உள்ள வைட்டமின் A, வைட்டமின் E, வைட்டமின் K, துத்தநாகம் (Zinc) உள்ளிட்ட அத்தியாவசிய சத்துகள் குழந்தையின் கண் பார்வை, மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு தேவையான ஆதரவை வழங்குகின்றன.

குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சியில் இந்த ஊட்டச்சத்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
</p><p><b>குழந்தையின் வயிற்றுக்கு ஏற்ற உயர்தர உணவு</b></p><p>
சீம்பாலில் உள்ள புரதச்சத்துகள் உயர்தரமானவை. அதே நேரத்தில், கொழுப்பு அளவு குறைவாக இருப்பதால் புதிதாகப் பிறந்த குழந்தையின் மென்மையான வயிற்றில் எளிதாக செரிமானமாகிறது.
</p><p>
குழந்தையின் தேவைக்கேற்ற வகையில் இயற்கையால் உருவாக்கப்பட்ட முழுமையான முதல் உணவாக சீம்பால் விளங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6219c456-6097-4332-b4f7-1f71aab2d9d5/26-6a72f1215c6d1.webp' /></p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">முதல் ஒரு மணி நேரம் ஏன் முக்கியம்?</span></h2><p>மருத்துவர்கள் கூறுவதன்படி, குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரம் “தங்க நேரம்” (Golden Hour) எனப்படுகிறது. இந்த முக்கியமான நேரத்திற்குள் குழந்தைக்கு தாய்ப்பால், குறிப்பாக சீம்பால் வழங்குவது அதன் வாழ்நாள் ஆரோக்கியத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.</p><p>சில இடங்களில் நிலவும் தவறான நம்பிக்கைகள் காரணமாக சீம்பாலை பிழிந்து அகற்றும் பழக்கம் காணப்படுகிறது. ஆனால், குழந்தைக்கு மிகவும் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த அரிய உணவை ஒருபோதும் வீணாக்கக் கூடாது என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். </p><p>தாய்ப்பால் என்பது குழந்தைக்கு கிடைக்கும் முதல் உணவு மட்டுமல்ல; அது அன்பு, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தின் முதல் பரிசாகும். எனவே, குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் சீம்பால் வழங்கி, ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:16:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Gold Price Today August 5: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் முழு விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/aug-5th-gold-rate-in-chenai-1785914027"></link>
            <id>https://manithan.com/article/aug-5th-gold-rate-in-chenai-1785914027</id>
            <summary type="text">Today Gold Price :&amp;nbsp; ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் விலை கணிசமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Today Gold Price :&nbsp; ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் விலை கணிசமாக குறைந்த நிலையில், நேற்று&nbsp; (ஆகஸ்ட் 4) மீண்டும் தங்கம் விலை சரிவை சந்தித்தது.</p><p>

நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200 ஆகவும், ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.1,05,600 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b636d21-c9d8-4abe-95c1-b485d42feb98/26-6a72e562e9681.webp' /></p><p></p><h2>இன்றைய நிலவரம்</h2><p>

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 5) தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.13,360 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34d3d7a5-bcef-4f19-8e83-ba61b6b0a5fd/26-6a72e5639c2d2.webp' /></p><p>

இதேபோல், 18 காரட் தங்கம் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.160 அதிகரித்து ரூ.11,175 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,280 உயர்ந்து ரூ.89,400 ஆகவும் உள்ளது.</p><p>வெள்ளி விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.240 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e72a51d-61e8-48a3-b6d3-4936384d02f1/26-6a72e5644e3a7.webp' /></p><p></p><p>
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், சந்தை நிலவரத்தைப் பொறுத்து தொடர்ந்து மாறக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T07:26:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனியின் நட்சத்திர மாற்றம்: ஆகஸ்ட் 20 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/saturn-transit-in-revati-nakshatra-who-get-luck-1785906814"></link>
            <id>https://manithan.com/article/saturn-transit-in-revati-nakshatra-who-get-luck-1785906814</id>
            <summary type="text">saturn transit : நவகிரகங்களில் சனிபகவான் மிகவும் சக்திவாய்ந்ததும், மெதுவாக நகரும் கிரகமாகவும் கருதப்படுகிறார். மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளை விட சனிபக...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>saturn transit : நவகிரகங்களில் சனிபகவான் மிகவும் சக்திவாய்ந்ததும், மெதுவாக நகரும் கிரகமாகவும் கருதப்படுகிறார். மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளை விட சனிபகவானின் இயக்கம் ஜோதிடத்தில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.</p><p>காரணம் சனி ஒருவருடைய கரும விளைகளுக்கு ஏற்ப பாரபட்சம் இன்றி அதற்கான தண்டனையை கொடுத்துவிடுவார். தற்போது சனிபகவான் மீன ராசியில், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb86faa5-dcd1-48cf-a20d-b736fb1a6c29/26-6a72cce4b7404.webp' /></p><p></p><p>சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்ல, நட்சத்திர மாற்றமும் ஜோதிட ரீதியாக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆகஸ்ட் 20ஆம் தேதி சனிபகவான் கடைசி நட்சத்திரமான ரேவதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார்.</p><p> அவர் அக்டோபர் 9ஆம் தேதி வரை அங்கு பயணிப்பார். சனிபகவான் புதனின் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிட கணிப்புகள் குறிப்பிடுகின்றன.&nbsp;</p><p>குறிப்பாக, சில ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் குறிப்பிடத்தக்க நன்மைகளையும் அதிர்ஷ்ட பலன்களையும் வழங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96cbc8d9-1067-4d5b-9581-cb7082c3ab5d/26-6a72cce56b099.webp' /></p><p>சனிபகவான் புதனின் நட்சத்திரத்திற்குள் நுழைவது மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். நிதி முன்னேற்றம், வெளிநாட்டு பயணம், உயர்கல்வி வாய்ப்புகள் கிடைக்கும்.</p><p> நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறி, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிம்மதியும் அதிகரிக்கும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e5bd9c9-f9ea-466f-a4e3-fac9312944ec/26-6a72cce61e751.webp' /></p><p>இந்த நட்சத்திர மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளை வழங்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும், ஆசைகள் நிறைவேறும்.</p><p>தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு, வணிக விரிவாக்கம் போன்ற வாய்ப்புகள் அமையும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்; காதல் வாழ்க்கையும் இனிமையாக அமையும்.
</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91df948c-08de-4365-acc5-6ad9e039a739/26-6a72cce6e88ee.webp' /></p><p></p><p> சனிபகவானின் நட்சத்திர மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு நேரடியாக நல்ல பலன்களை அளிக்கும். ஒத்திவைக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும்.</p><p> தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வழியில் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.&nbsp;</p><p>பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்களின் ஆதரவு வெற்றிக்கு துணையாக இருக்கும். வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு அமையலாம். குடும்பத்தில் நீண்டகால பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.</p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b><p></p><p><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T05:41:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Pradeep Rawat : கஜினி பட வில்லன் நடிகர் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ghajini-and-lagaan-villan-pradeep-rawat-passed-1785903940"></link>
            <id>https://manithan.com/article/ghajini-and-lagaan-villan-pradeep-rawat-passed-1785903940</id>
            <summary type="text">pradeep rawat : தென்னிந்திய சினிமாவில் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்ற மூத்த நடிகர் பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>pradeep rawat : தென்னிந்திய சினிமாவில் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்ற மூத்த நடிகர் பிரதீப் ராவத், ரத்தப் புற்றுநோய் காரணமாக 74 வயதில் காலமானார்.</p><p>

கடந்த ஐந்து ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரதீப் ராவத், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருகட்டத்தில் உடல்நலம் தேறி, நோயிலிருந்து மீண்டிருந்தார். எனினும், சில மாதங்களுக்கு முன்பு நோய் மீண்டும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/003ad8aa-1156-4d6b-9a21-d7c8c11491f6/26-6a72bf151fae1.webp' /></p><p>இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் நேற்று (4) மாலை அவர் உயிரிழந்ததாக அவரது மேலாளர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அவரது இறுதிச்சடங்குகள் புதன்கிழமை நடைபெறும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>பிரதீப் ராவத்தின் மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு திரைப்பட பிரபலங்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p><h2>நடிகர் பிரதீப் ராவத்&nbsp;</h2><p>
</p><p>1952 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி பிறந்த பிரதீப் ராவத், பி.ஆர். சோப்ரா தயாரித்த புகழ்பெற்ற மகாபாரதம் தொலைக்காட்சி தொடரில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d539fa6-d359-47f3-8972-424e9024382e/26-6a72bf15c43ec.webp' /></p><p>அதன்பின்னர் திரைப்பட உலகில் வலுவான வில்லன் நடிகராக உருவெடுத்து, பல மொழித் திரைப்படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.</p><p>

குறிப்பாக, லகான் திரைப்படத்தில் தேவா சிங் சோதி என்ற கதாபாத்திரத்திலும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த கஜினி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.தொடர்ந்து அஜித் நடித்த வீரம் திரைப்படத்திலும் முக்கிய வில்லனாக நடித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb0ca905-fee6-46a4-8858-71aea7d9dba0/26-6a72bf1674390.webp' /></p><p></p><p>
தமிழ், இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் போஜ்புரி திரைப்படங்களிலும் பல்வேறு வில்லன் கதாபாத்திரங்களில் தனது முத்திரையைப் பதித்த பிரதீப் ராவத், தனது தனித்துவமான குரல், வலுவான உடல்மொழி மற்றும் இயல்பான நடிப்பால் இந்திய திரையுலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பெற்றிருந்தார். அவரது மறைவு இந்திய திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T04:44:23+00:00</updated>
        </entry>
    </feed>
