<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-01T17:55:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்த நிலையிலும் உண்மையை மட்டுமே பேச விரும்பும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-are-always-speaks-the-truth-1785586222"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-are-always-speaks-the-truth-1785586222</id>
            <summary type="text">ஒருவரின் பிறப்பு ராசி அவர்களின் ஆளுமை, சிந்தனை முறை, உறவுகள், பொருளாதார அணுகுமுறை மற்றும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருவரின் பிறப்பு ராசி அவர்களின் ஆளுமை, சிந்தனை முறை, உறவுகள், பொருளாதார அணுகுமுறை மற்றும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஜோதிடத்தில் பரவலாக காணப்படுகிறது. </p><p>பலர் தங்களின் ராசி சார்ந்த குணாதிசயங்களை ஆர்வத்துடன் அறிந்து கொள்கின்றனர்.

அந்த வகையில், சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே உண்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என கணிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/139afa17-8cbc-4df5-9f07-494a6feed04a/26-6a6dec25c90a0.webp' /></p><p>அப்படி&nbsp; சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும்,&nbsp; உண்மையையே பேச விரும்பும் குணம் கொண்ட ராசியினர் யார் யார் என பார்க்கலாம்.</p><p></p><h2>தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8154fcb5-8fac-4be5-8d72-00a2901d4f6f/26-6a6dec2679bbb.webp' /></p><p>தனுசு ராசியில் பிறந்தவர்கள் உண்மையை மதிக்கும் குணம் கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். எப்போதும் நேர்மையான அணுகுமுறையையே கடைப்பிடிக்க முயற்சிப்பார்கள். </p><p>சில நேரங்களில் உண்மையை மிகவும் வெளிப்படையாகச் சொல்வதால் மற்றவர்களின் மனம் புண்படலாம். இருப்பினும், பொய்யாக நடித்து ஒருவரை மகிழ்விப்பதை விட உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதே இவர்களின் எண்ணமாக இருக்கும்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3fa9a80-fcb3-419d-ad72-20f13231e385/26-6a6dec2729178.webp' /></p><p>கடக ராசிக்காரர்கள் இயல்பாகவே ஒரு அரசனுக்கு இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p>அவர்களின் பேசும் பாணி தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கும். அவர்கள் எப்போதும் இதயத்திலிருந்து பேசுவார்கள். </p><p>இவர்கள் தங்களுக்கு உண்மையாக இருக்க விரும்புவதால் அவர்கள் நேர்மையானவர்களாகவும் அறியப்படுகின்றார்கள். இவர்கள் தங்களிகன் உயிரை விடவும் உண்மைக்கு அதிக முக்கியத்துவம் மற்றும் மரியாதை கொடுப்பவர்களாக இருப்பார்கள்.</p><h2>மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a19c5852-a080-4a5b-b476-e0e9a8705fb9/26-6a6dec27ccf14.webp' /></p><p></p><p>மீன ராசியில் பிறந்தவர்கள் தங்களின் இரக்க குணத்துக்கும் அமைதிக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களை சீண்டினால் முகத்துக்கு நேராகவே மற்றவர்கள் தவறுகள் குறித்து சொல்லிவிடுவார்கள்.<br></p><p>
இவர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்களை அதிகம் மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பாத போதும் கூட மற்றவர்களுக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T14:07:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 வயதில் தாய் - தனது 7 மாத குழந்தைக்காக சட்டப் போராட்டம் நடத்திய சிறுமி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/13-year-old-mother-case-to-get-her-7-month-baby-1785591623"></link>
            <id>https://manithan.com/article/13-year-old-mother-case-to-get-her-7-month-baby-1785591623</id>
            <summary type="text">கைகளில் தனது 7 மாதக் குழந்தையை ஏந்தியபடி, கேமராவை நோக்கி மென்மையாகச் சிரித்துக்கொண்டிருக்கும் இந்தச் சிறுமியின் பெயர் ஜூய். அந்தப் புன்னகைக்குப் பின்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைகளில் தனது 7 மாதக் குழந்தையை ஏந்தியபடி, கேமராவை நோக்கி மென்மையாகச் சிரித்துக்கொண்டிருக்கும் இந்தச் சிறுமியின் பெயர் ஜூய். அந்தப் புன்னகைக்குப் பின்னால், பலராலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வேதனையும் போராட்டமும் நிறைந்த வாழ்க்கைக் கதை மறைந்திருக்கிறது.</p><p>

ஜூய்க்கு தற்போது வெறும் 13 வயது மட்டுமே. ஆனால், அவரது கைகளில் இருக்கும் அந்தக் குழந்தை அவருடையது தான். இவ்வளவு இளம் வயதிலேயே தாய்மையின் பொறுப்பை ஏற்றதோடு, தனது குழந்தையை மீண்டும் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b9ba88b-86df-4f1b-be60-c1be2be241d7/26-6a6dfb820009f.webp' /></p><p></p><p>

தகவல்களின்படி, பங்களதேஷை சேர்ந்த&nbsp; ஜூய் 11 வயதாக இருந்தபோது, Facebook மூலம் 22 வயதுடைய ஷகிப் மியாவுடன் அறிமுகமானார். பின்னர் அந்த அறிமுகம் திருமணத்தில் முடிந்தது. திருமணமாகி ஓராண்டுக்குப் பிறகு, அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.
</p><p>
ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. குழந்தை பிறந்த சில காலத்திலேயே, ஜூயை அவரது கணவரும் மாமியாரும் வீட்டை விட்டு வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. அதைவிட வேதனையானது, தனது பச்சிளம் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டதுதான்.</p><p>

ஒரு தாய்க்கு தனது குழந்தையிலிருந்து பிரிந்து வாழ்வது எவ்வளவு பெரிய மனவேதனை என்பதை&nbsp; வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தனது குழந்தையை மீண்டும் அணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஜூய் சட்டத்தின் உதவியை நாடினார்.</p><p></p><p> நீதிமன்றத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தனது குழந்தையைத் திரும்பப் பெறுவதற்காக போராடினார்.

இறுதியில், அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது. நீதிமன்றத்தின் தலையீட்டின் மூலம், அந்த 7 மாதக் குழந்தை மீண்டும் ஜூயிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p>இந்தச் சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுகிறது. தாயன்புக்கு வயது என்ற வரம்பே கிடையாது. தாய் பதின்ம வயதுப் பெண்ணாக இருந்தாலும், முதிர்ந்த பெண்ணாக இருந்தாலும், தனது குழந்தையின் மீது கொண்ட அன்பும் பாசமும் ஒன்றுதான்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">13-year-old mother goes to court to get her 7-month-old baby back!!<br><br>This girl&#39;s name is Jui. Although Jui is 13 years old, the baby that Jui is holding in her arms and smiling sweetly in front of the camera is Jui&#39;s 7-month-old baby.<br><br>Jui married 22-year-old Shakib Mia after… <a href="https://t.co/z3A1YlG5tl">pic.twitter.com/z3A1YlG5tl</a></p>&mdash; मृदुल눈 (@shayari_in_) <a href="https://x.com/shayari_in_/status/2083064259366522892?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T13:58:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/health-benefits-of-eating-guava-every-day-1785499506"></link>
            <id>https://manithan.com/article/health-benefits-of-eating-guava-every-day-1785499506</id>
            <summary type="text">பழங்கள் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. 

அவற்றில் விலைக்குறைவாகவும், அதிக சத்துக்கள் கொண்டதாகவும் இருக்கும் பழம் கொய்யாப்பழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழங்கள் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.</p><p> 

அவற்றில் விலைக்குறைவாகவும், அதிக சத்துக்கள் கொண்டதாகவும் இருக்கும் பழம் கொய்யாப்பழம்.
</p><p>
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.
</p><p>தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது பல்வேறு உடல்நல நன்மைகளை அளிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h3>வைட்டமின் சி நிறைந்தது</h3><p>

கொய்யாப்பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட சுமார் 4 மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11b906e8-0e78-42ef-bf61-df114762af18/26-6a6c8f7479770.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><h3>
அசிடிட்டி குறையும்
</h3><p>
அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை குறைக்க கொய்யாப்பழம் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கிறது.</p><h3>

இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்
</h3><p>
கொய்யாப்பழத்தில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18192357-1117-46c2-b76c-3622b55ac444/26-6a6df8c27ec88.webp' />&nbsp;<br></p><p>
</p><h3>
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
</h3><p>
கொய்யாப்பழத்தின் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், இரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்க உதவுகிறது.
</p><h3>
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்</h3><p>

இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய செல்களை சேதத்திலிருந்து பாதுகாத்து, இதய நோய் அபாயத்தையும் குறைக்க உதவுகின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19da3275-2b74-4102-9ddc-a9b7c39171a5/26-6a6df8c348182.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-01T13:47:11+00:00</updated>
        </entry>
    </feed>
