<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-06T17:36:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் வரும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்.., பழைய காகித நோட்டுகள் செல்லுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/plastic-rs-10-rs-20-notes-soon-1786017341"></link>
            <id>https://manithan.com/article/plastic-rs-10-rs-20-notes-soon-1786017341</id>
            <summary type="text">இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை காகிதத்துக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்களில் அச்சிடும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி முன்னெடுத்து வருகிறது.

முதற்கட்டமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை காகிதத்துக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்களில் அச்சிடும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி முன்னெடுத்து வருகிறது.
</p><p>
முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிட்டு, அடுத்த ஆண்டு சோதனை அடிப்படையில் புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

இதற்காக 100 கோடி ரூ.10 நோட்டுகள் மற்றும் 100 கோடி ரூ.20 நோட்டுகள் அச்சிடப்பட உள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.3,000 கோடியாக இருக்கும்.
</p><p>
பிளாஸ்டிக் நோட்டுகளுக்கான சோதனையை தொடங்க ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63004b6b-c6a0-4662-80dd-7e5e2641695e/26-6a7476405ee5e.webp' /></p><p>இதனால் தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் உடனடியாக நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p>

இந்நிலையில், தற்போது பயன்பாட்டில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>

சோதனை முயற்சியாக பிளாஸ்டிக் நோட்டுகள், காகித நோட்டுகளுடன் சேர்த்தே புழக்கத்தில் விடப்படும்.
</p><p>
இந்த முயற்சி வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் பிளாஸ்டிக் நோட்டுகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8befc73a-72b5-47d7-9c81-b2b8bd26c34a/26-6a74763fa4cdf.webp' /></p><p>

ரூ.10 மற்றும் ரூ.20 போன்ற குறைந்த மதிப்புள்ள நோட்டுகள் அடிக்கடி கைமாறுவதால் விரைவில் சேதமடைவதால், நீண்ட காலம் நீடித்து எளிதில் பாதிக்கப்படாத பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>பிளாஸ்டிக் நோட்டுகளை தயாரிக்க ஆரம்பத்தில் செலவு அதிகமாக இருந்தாலும், அவை நீண்ட காலம் பயன்பாட்டில் இருப்பதால் அச்சிடும் செலவை குறையும்.
</p><p>
மேலும், பிளாஸ்டிக் நோட்டுகளில் அதிக பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க முடியும் என்பதால் கள்ளநோட்டுகளைத் தடுக்கவும் உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T16:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடீஸ்வர யோகம் கிடைக்க எந்த பூஜை செய்ய வேண்டும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/millionaire-yogam-in-tamil-1786020113"></link>
            <id>https://manithan.com/article/millionaire-yogam-in-tamil-1786020113</id>
            <summary type="text">வீட்டில் பணவரவு அதிகரிக்கவும், செல்வம் பெருகவும் ஆன்மீகத்தில் சில எளிய வழிமுறைகள் மற்றும் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. 

வெள்ளிக்கிழமை வழிபாடு, தீப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீட்டில் பணவரவு அதிகரிக்கவும், செல்வம் பெருகவும் ஆன்மீகத்தில் சில எளிய வழிமுறைகள் மற்றும் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. </p><p>

வெள்ளிக்கிழமை வழிபாடு, தீபம் ஏற்றுதல் மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் எளிய செயல்கள் மூலம் மகாலட்சுமி அருள் பெறலாம்.
</p><p>
அதன்படி, வெள்ளிக்கிழமைகளில் தாயார் மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சாற்றி வழிபாடு செய்யலாம்.
</p><p>
வீட்டின் பூஜை அறையில் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். பர்ஸில் அல்லது பீரோவில் பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய் வைக்கலாம்.</p><p>

குபேர மூலைக்கு தீபம் காட்டி வழிபாடு நடத்துவது, மஹாலட்சுமி ஸ்தோத்திரம் மற்றும் கன்கதார ஸ்தோத்திரம் படிக்கலாம்.</p><p>
மேலும், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏழைகளுக்கு தானம் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.
</p><p>
அந்தவகையில், வீட்டில் பணவரவை அதிகரிக்க சில ஆன்மிக குறிப்புகளை ஜோதிடர் மீனாட்சி தேவி பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AnxLjgfTLLg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-06T16:54:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழும் உயிரினம்.., எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-living-creature-has-the-longest-lifespan-1786004937"></link>
            <id>https://manithan.com/article/which-living-creature-has-the-longest-lifespan-1786004937</id>
            <summary type="text">பொதுவாக மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 80 ஆண்டுகள். 

ஆனால், பூமியில் சில விலங்குகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்றன.

அந்தவகையில், உல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 80 ஆண்டுகள். </p><p>

ஆனால், பூமியில் சில விலங்குகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்றன.
</p><p>
அந்தவகையில், உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழும் உயிரினம் எது என்பது குறித்து பார்க்கலாம்.</p><p>

அதன்படி, உலகிலேயே அதிக ஆண்டுகள் அதாவது 150 ஆண்டுகள் வரை வாழக்கூடிய விலங்கு ஆமை.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3dffb8b-7d3b-4e6a-a6d2-d966098dc040/26-6a7445ccbe659.webp' />
</p><p>
குறிப்பாக சில பெரிய நில ஆமை இனங்கள் 100 முதல் 150 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p>உலகின் பழமையான உயிரினங்களில் ஒன்றான ஆமைகளின் மூதாதையர் டைனோசர் காலத்தில் இருந்து பல பேரழிவுகளில் தப்பி இந்த பூமியில் வசித்து வருகின்றன.</p><p>
ஆமைகள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த உலகில் வாழ்கின்றன.
</p><p>
ஆமைகள் நீண்ட காலம் வாழ முக்கிய காரணம் அவற்றின் மெதுவான வளர்சிதை மாற்றம். 

அவை குறைந்த ஆற்றலை பயன்படுத்தி அமைதியான வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2850d6d5-909b-4517-b308-58c3b673c006/26-6a7445cbe4c18.webp' /></p><p>
ஆமைகளின் வலிமையான ஓடு, அதனை தாக்கும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. 

ஆபத்து ஏற்படும்போது தலை மற்றும் கால்களை ஓட்டிற்குள் இழுத்து உயிர் பிழைக்கிறது.
</p><p>
பெரும்பாலான நில ஆமைகள் புல், இலைகள், பழங்கள் உள்ளிட்ட தாவர உணவுகளை சாப்பிடுகின்றன.</p><p> 

ஆமை ஓடுகள், அதன் உடலின் இன்றியமையாத பாகம். ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட சராசரியாக50 எலும்புகளால் ஆனது ஆமை ஓடு.
</p><p>

அவற்றின் எளிய வாழ்க்கை முறையும் ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் நீண்ட ஆயுளுக்கு உதவுகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-06T16:53:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகு - செவ்வாய் சேர்க்கையால் உருவான நவபஞ்சம ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-rahu-forms-navapanchama-yoga-who-get-luck-1786020880"></link>
            <id>https://manithan.com/article/mars-rahu-forms-navapanchama-yoga-who-get-luck-1786020880</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திர நிலைகளை மாற்றிக்கொண்டு நகர்கின்றன. இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திர நிலைகளை மாற்றிக்கொண்டு நகர்கின்றன. இந்த கிரகப் பெயர்ச்சிகள் ஒவ்வொன்றும் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p> அதேபோல், சில நேரங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து சக்திவாய்ந்த யோகங்களையும் உருவாக்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/663d222b-5177-4bff-b1e6-9ef3dde60e74/26-6a7498b486675.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய் கிரகம், ஆகஸ்ட் 02-ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைந்து, ராகுவுடன் இணைந்ததன் மூலம் 'நவபஞ்சம ராஜயோகத்தை' உருவாக்கியுள்ளது.ஜோதிட சாஸ்திரத்தின் கணிப்பின்படி, இந்த அரிய கிரகக் கூட்டணி செப்டம்பர் 18, 2026 வரை நீடிக்கும்.</p><p> இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலித்தாலும், தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில், பல்வேறு வகையிலும் சாதக பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2600319-400a-46eb-87ed-5ee380897fc5/26-6a7498b54c5a2.webp' /></p><h2>
</h2><p>செவ்வாய் மேஷ ராசியின் அதிபதி என்பதால், இந்த யோகம் மேஷ ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். </p><p>முதலீடுகள், பங்குச் சந்தை போன்றவற்றில் நீண்டகாலமாக எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுடன் சாதனைகள் படைக்கும் வாய்ப்பு உருவாகும். </p><p>புதிய வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.&nbsp;</p><h2>

மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d2588fd-7710-491b-b694-b530b3214038/26-6a7498b5f2fd3.webp' /></p><h2>
</h2><p>செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழைவதால், மிதுன ராசியினருக்கு புதிய உற்சாகமும் தெளிவான முடிவெடுக்கும் திறனும் கிடைக்கும். </p><p>இந்த காலகட்டத்தில் தொழில், வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.</p><p> புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும், வேலை மாற்ற விரும்புபவர்களுக்கும் இது சிறந்த காலமாக இருக்கும். குடும்ப உறவுகள், குறிப்பாக சகோதரர், சகோதரிகளுடனான பிணைப்பு வலுப்படும். வீடு, நிலம் போன்ற சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும்.</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a2f0b05-2fdc-4580-a247-f747ba95b151/26-6a7498b6a6726.webp' /></p><p></p><h2>
</h2><p>துலாம் ராசியினருக்கு இந்த ராஜயோகம் வேலை மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். பணியில் புதிய பொறுப்புகள், நிதி முன்னேற்றம் மற்றும் எதிர்பாராத பண வரவு கிடைக்கலாம். </p><p>நீண்டநாள் இருந்த பண நெருக்கடிகள் குறையும். இதுவரை தாமதமாக இருந்த முக்கிய வேலைகளை வெற்றிகரமாக முடிக்க ஏற்ற சூழல் உருவாகும். </p><p>இந்த காலம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் தரக்கூடியதாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையவும், காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T14:23:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[10-ம் வகுப்பு படிக்கும்போதே சினிமாவில் அறிமுகமான த்ரிஷா! உண்மையை பகிர்ந்த இயக்குநர் பிரவீன் காந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/director-praveen-gandhi-talk-trisha-introduction-1786017315"></link>
            <id>https://manithan.com/article/director-praveen-gandhi-talk-trisha-introduction-1786017315</id>
            <summary type="text">Trisha cinema introduction : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் நடிகை த்ரிஷாவின் சினிமா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trisha cinema introduction : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் நடிகை த்ரிஷாவின் சினிமா பயணம் எப்படி தொடங்கியது என்பது குறித்து இயக்குநர் பிரவீன் காந்தி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.</p><h2>த்ரிஷாவுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது?</h2><p>

கடந்த 1999-ம் ஆண்டு பிரவீன் காந்தி இயக்கத்தில், பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ‘ஜோடி’ திரைப்படத்தின் மூலமே த்ரிஷா தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1a4c1ea-f881-4809-a5ae-44b579097c55/26-6a747dd572612.webp' /></p><p></p><p>அந்த வாய்ப்பு அவருக்கு எப்படி கிடைத்தது? அதன்பிறகு ‘லேசா லேசா’ திரைப்படத்தில் நடித்தது எப்படி? என்பது குறித்து அவர் அளித்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றது.</p><h2>இயக்குநர் பிரவீன் காந்தி பேட்டி&nbsp;</h2><p>
இதுகுறித்து பேசிய பிரவீன் காந்தி, “ஜோடி படத்தின் படப்பிடிப்பு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் த்ரிஷா சர்ச் பார்க் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். </p><p>10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடுமுறையில் இருந்ததால், படத்தில் வந்து நடித்துக் கொடுத்தார்.

படத்தில் நாயகியுடன் இடம்பெறும் காட்சிகளுக்காக அழகான இளம் பெண்கள் தேவைப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c94e31bf-677b-46ed-a71b-d49be9872c9a/26-6a747dd626509.webp' /></p><p> </p><p>அப்போது தாரா உமேஷ் என்பவர் மூலம் த்ரிஷா எனக்கு அறிமுகமானார். அவரைப் பார்த்தவுடனே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உண்மையில், அவருக்கு ஒரு பெரிய கதாபாத்திரத்தையே கொடுக்கலாம் என்று நினைத்தேன். அவருக்கு விருப்பம் இருந்தால் அந்த வாய்ப்பை வழங்க தயாராக இருந்தேன்.</p><p>ஆனால், அப்போது அவருக்கு அதில் ஆர்வம் இல்லை,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “த்ரிஷா சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோ, திட்டமோ வைத்து வரவில்லை. சினிமா எப்படி இருக்கும், நல்லதா, கெட்டதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a29b65c5-73de-4d89-be8f-610f06bbca05/26-6a747dd6cde6f.webp' /></p><p></p><p>அவரது தாயாரும் அதைப் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கத்திலேயே அவரை அனுப்பி வைத்தார். ஜாலியாக வந்து நடித்த அந்தப் பெண், பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தது ஆச்சரியமான விஷயம்.
</p><p>
ஜோடி படத்தில் நடித்த அனுபவம்தான் அவருக்கு சினிமா மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு நான் இயக்குநர் பிரியதர்ஷனிடம் த்ரிஷாவைப் பற்றி கூறினேன். அதன் மூலம் ‘லேசா லேசா’ திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56494af6-1f47-4fee-8e3b-57de9a5c8ca3/26-6a747dd78836f.webp' /></p><p>
</p><p>
பலரும் நினைப்பது போல மாடலிங் மூலம் த்ரிஷா சினிமாவுக்கு வரவில்லை. முதலில் ஜோடி படத்தில் நடித்தார். அதன் பிறகுதான் மாடலிங் துறையில் கவனம் செலுத்தினார். பின்னர் ‘மிஸ் சென்னை’ பட்டத்தை வென்றார். அதன் பிறகு சன் டிவியிலும் தோன்றினார். அதன் பின்னரே முழுநேர நடிகையாக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார்,” என்று பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T12:51:39+00:00</updated>
        </entry>
    </feed>
