<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-18T14:23:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குப்பையையே டன் கணக்கில் இறக்குமதி செய்யும் ஸ்வீடன் - காரணம் என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-much-waste-does-sweden-recycle-1787060662"></link>
            <id>https://manithan.com/article/how-much-waste-does-sweden-recycle-1787060662</id>
            <summary type="text">குப்பை மேலாண்மையில் இந்தியா கடந்த காலங்களை விட முன்னேற்றம் கண்டிருந்தாலும், இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உலகின் சுத்தமான நாடுகளின் பட்டிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>குப்பை மேலாண்மையில் இந்தியா கடந்த காலங்களை விட முன்னேற்றம் கண்டிருந்தாலும், இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உலகின் சுத்தமான நாடுகளின் பட்டியலில் எஸ்டோனியா முதலிடத்தில் இருக்கும் நிலையில், இந்தியா 177 நாடுகளில் 176வது இடத்தில் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>
ஆனால், இதற்கு முற்றிலும் மாறுபட்ட நாடாக ஸ்வீடன் உள்ளது. உலகின் மிகவும் சுத்தமான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்வீடன், மற்ற நாடுகளிடமிருந்து குப்பையையே இறக்குமதி செய்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbd4c617-8218-4069-b6c3-7fbdd6f1a4ea/26-6a84678b8867d.webp' /></p><p></p><p>மிகவும் சுத்தமான நாடுகளின் பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கும்&nbsp;ஸ்வீடன் ஏன் குப்பைகளை மற்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கின்றது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;</p><h2> ஏன் தெரியுமா?
</h2><p>
ஸ்வீடனில் குப்பை வெறும் கழிவாகப் பார்க்கப்படுவதில்லை. மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை நவீன ‘கழிவிலிருந்து ஆற்றல்’ (Waste-to-Energy) ஆலைகளில் அதிக வெப்பநிலையில் எரித்து, அதிலிருந்து வெப்பமும் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.</p><p>

குறிப்பாக, கழிவுகளை எரிப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி தண்ணீர் சூடாக்கப்படுகிறது. பின்னர் நிலத்தடிக் குழாய்கள் மூலம் இந்த வெப்பம் வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c20dd0e-9aea-4fc4-a414-15e899da6967/26-6a84678c3c944.webp' /></p><p> கடுமையான குளிர்காலத்திலும் வீடுகளை வெப்பமாக வைத்திருக்க இந்த அமைப்பு உதவுகிறது.

அதேபோல், உருவாகும் வெப்பத்தின் மூலம் நீராவி தயாரிக்கப்பட்டு டர்பைன்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.
</p><p>
கழிவுகளை எரித்த பிறகு கிடைக்கும் சாம்பல் உள்ளிட்ட சில எஞ்சிய பொருட்களும் பிரித்தெடுக்கப்பட்டு, சாலை கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd4edce0-a75e-456a-af68-8f71f68ad8b2/26-6a84678ce872a.webp' /></p><p>

இதனால், குப்பையை அனுப்பும் நாடுகளுக்கு குப்பைக் கிடங்குகளின் சுமை குறைகிறது. அதே நேரத்தில், ஸ்வீடனுக்கு தனது ஆற்றல் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்குத் தேவையான கழிவுகள் கிடைக்கின்றன. </p><p>சில சந்தர்ப்பங்களில், கழிவுகளை எடுத்துக்கொள்வதற்காக ஸ்வீடனுக்கு பணமும் வழங்கப்படுகிறது.

எனினும், ஸ்வீடனின் வெற்றிக்கு குப்பையை எரிப்பது மட்டுமே காரணமல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cb7d328-42cc-484c-b2e3-7494b9130fa2/26-6a84678d9a164.webp' /></p><p></p><p> </p><p>கழிவுகளைக் குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி, கழிவுகளைப் பிரித்தல் மற்றும் இறுதியாகப் பயன்படுத்த முடியாத கழிவுகளிலிருந்து ஆற்றலை மீட்டெடுத்தல் ஆகியவை அதன் கழிவு மேலாண்மை முறையின் முக்கிய அம்சங்களாகும்.</p><p>

குப்பையை ஒரு சுமையாகப் பார்க்காமல், சரியான தொழில்நுட்பத்துடன் வளமாக மாற்ற முடியும் என்பதற்கு ஸ்வீடன் ஒரு சிறந்த உதாரணமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T14:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bigg-boss-the-common-man-priya-varshini-goes-viral-1787055809"></link>
            <id>https://manithan.com/article/bigg-boss-the-common-man-priya-varshini-goes-viral-1787055809</id>
            <summary type="text">பிக் பாஸ் தி காமன்மேன் நிகழ்ச்சி கடந்த 16ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பொது மக்களையும் போட்டியாளர்களாக தேர்வு செய்வதாக கூறப்பட்ட இந்த நிகழ்ச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் தி காமன்மேன் நிகழ்ச்சி கடந்த 16ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பொது மக்களையும் போட்டியாளர்களாக தேர்வு செய்வதாக கூறப்பட்ட இந்த நிகழ்ச்சி, தொடங்கிய முதல் நாளிலேயே பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.</p><h2>பிக் பாஸ் தி காமன்மேன்&nbsp;</h2><p>

முதலில், 50 போட்டியாளர்களை இரண்டு பேருந்துகளில் அழைத்துச் சென்று, விசில் அடித்ததும் போட்டி போட்டு பேருந்தில் ஏற வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc5c698-1731-4816-a5e6-9f0c789177ef/26-6a84536936f05.webp' /></p><p>சாதாரண மக்களை இவ்வாறு நடத்துவது ஏன் என பலரும் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே, போட்டியாளர் பிரிய வர்ஷினி நைட்டி அணிந்து வந்ததும் சர்ச்சையானது.</p><p> இது ஷூட்டிங் என்பதால் வேறு உடையில் வருமாறு நடுவர்கள் கூறிய நிலையில், தான் நைட்டியில் வருவது குறித்து ஏற்கனவே அனுமதி கேட்டதாகவும், அதற்கு சம்மதம் தெரிவித்திருந்ததாகவும் பிரிய வர்ஷினி கூறினார்.
</p><p>
“நைட்டி அணிவது கொலைக் குற்றமா? நான் என்ன பிறந்தமேனியாகவா வந்தேன்?” எனக் கேள்வி எழுப்பிய அவர், தன்னை தேர்வு செய்யவில்லை என்றால் பரவாயில்லை என்றும் தெரிவித்தார்.இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb5871c9-80d8-44b2-9a02-0f70079b18f9/26-6a84536a90e94.webp' /></p><h2>பிரிய வர்ஷினி&nbsp; பேச்சு வைரல்</h2><p>
இதுகுறித்து பேசிய பிரிய வர்ஷினி, “காமன்மேன் என பெயர் வைத்துவிட்டு உண்மையான காமன்மேன்களை தேர்வு செய்வதில்லை. </p><p>நைட்டியில் வருவதற்கு முன்பே அனுமதி கேட்டிருந்தேன். நைட்டி கூடாது என முன்பே கூறியிருந்தால் வேறு உடையில் வந்திருப்பேன். என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திக் கொண்டது போல் இருக்கிறது” என குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d972f8be-e1db-432a-abfd-8c0b113ab065/26-6a845369dca43.webp' /></p><p>
மேலும், நிகழ்ச்சியில் ஆரி, மாயா உள்ளிட்டோர் பேசிய விதம் தனக்கு பிடிக்கவில்லை என்றும், அந்த காட்சிகளை முழுமையாக ஒளிபரப்புமாறு விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டாருக்கு சவால் விடுவதாகவும் அவர் கூறினார்.
</p><p>
பிரிய வர்ஷினியின் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அவரை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பியிருந்தால் நல்ல கன்டென்ட் கிடைத்திருக்கும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
இதற்கிடையே, பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வென்ற பாலாஜி முருகதாஸ், “ஆடிஷனுக்காக கண்ணியத்தை விடுவதா? சுயமரியாதை முக்கியம்” என தனது எக்ஸ் பதிவில் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது இணையத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T12:45:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு இனி பொற்காலம் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/shani-nakshatra-peyarchi-who-get-huge-luck-1787047907"></link>
            <id>https://manithan.com/article/shani-nakshatra-peyarchi-who-get-huge-luck-1787047907</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் சனி பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர் சனி பகவான். மகரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் சனி பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர் சனி பகவான். </p><p>மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியான இவர், ஒரு ராசியில் சுமார் 2½ ஆண்டுகள் பயணிப்பதுடன் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba22f15b-1b18-4a7a-ab27-ad96ab350443/26-6a8433c81980c.webp' /></p><p></p><p>

தற்போது மீன ராசியில் பயணித்து வரும் சனி பகவான், ஆகஸ்ட் 20 ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைந்து, அக்டோபர் 9 ஆம் தேதி வரை அங்கு இருப்பார். ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் என்பதால், இந்த சனி நட்சத்திரப் பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.</p><p>

குறிப்பாக, 3 ராசிக்காரர்கள் இந்தப் பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிகழும் சனி நட்சத்திரப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a071571-e6b8-4668-9dc4-533f09aefd99/26-6a8433c8c379b.webp' /></p><h2>
</h2><p>சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பல்வேறு நல்ல பலன்களைத் தரக்கூடும். குறிப்பாக, பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற எதிர்பார்த்த முன்னேற்றங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.</p><p> சிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த விரும்பிய இடமாற்றமும் கிடைக்கலாம்.

வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் நல்ல லாபம் கிடைக்கும். </p><p>புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும் சூழலும் அமையும். மேலும், நீண்ட காலமாக சிக்கித் தவித்துக் கொண்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்பும் உள்ளது.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7cc86aa-159f-4784-9382-379d1c831f72/26-6a8433c97421d.webp' /></p><p>
சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை கொடுக்கப்போகின்றது.</p><p>நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த பணிகள் ஒவ்வொன்றாக வெற்றிகரமாக நிறைவேறும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
</p><p>
புதிய வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். இதுவரை சந்தித்து வந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு படிப்படியாக தீர்வு கிடைக்கும்.&nbsp;</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecc72a70-214d-45a1-8dd3-cf5b017982b2/26-6a8433ca3065d.webp' /></p><p></p><p>
சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் சாதகமான காலகட்டம் தொடங்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பணப் பிரச்சனைகள் குறைந்து, பொருளாதார நிலை மேம்படும்.</p><p>

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளிலிருந்தும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. </p><p>பரம்பரை சொத்துகள் தொடர்பாக நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து, சொத்துகள் கைக்கு வரும் யோகம் காணப்படுகின்றது. நிதி நிலையில் கணிசமான உயர்வு உண்டாகும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u> <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:18:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாக்சிக் வெற்றிக்காக நயன்தாரா மொட்டை அடித்தாரா! வெளியான புகைப்படங்களின் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/did-nayanthara-shave-her-head-for-toxic-success-1787045853"></link>
            <id>https://manithan.com/article/did-nayanthara-shave-her-head-for-toxic-success-1787045853</id>
            <summary type="text">Nayanthara: ‘டாக்சிக்’ படத்தின் வெற்றிக்காக திருப்பதி கோவிலில் நயன்தாரா மொட்டை அடித்ததாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தை ஆக்கிரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nayanthara: ‘டாக்சிக்’ படத்தின் வெற்றிக்காக திருப்பதி கோவிலில் நயன்தாரா மொட்டை அடித்ததாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வந்த நிலையில்,&nbsp; அவை உண்மையான புகைப்படங்கள் அல்ல; நயன்தாராவின் பழைய திருப்பதி புகைப்படத்தை எடிட் செய்து பகிர்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><h2>நயன்தாரா மொட்டை அடித்தாரா?</h2><p>யஷ், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள டாக்சிக் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா மொட்டை அடித்துக் கொண்டதாகக் கூறி இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a2d37db-166c-4dc2-bebd-5070497a234b/26-6a842ab5a3f94.webp' /></p><p></p><p> புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும், “படத்துக்காக நயன்தாரா இப்படி ஒரு வேண்டுதலா?” என்று ஆச்சரியமடைந்தனர். ஆனால், இந்தப் புகைப்படங்கள், கடந்த ஏப்ரல் மாதம் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தபோது நயன்தாரா எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எடுத்து எடிட் செய்யப்பட்டுளது தற்போது தெரியவற்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bed9a222-50f9-4710-ae3c-e1895c79a245/26-6a842ab7b01b8.webp' /></p><p>தற்போதைய காலகட்டத்தில் AI மற்றும் பல்வேறு புகைப்பட எடிட்டிங் தொழில்நுட்பங்கள் மூலம் ஒருவரது தோற்றத்தையே எளிதாக மாற்றிவிட முடிகிறது. அந்த வகையில் உருவாக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் உண்மையானவை போலவே தோன்றுவதால், பலரும் அவற்றை நம்பி பகிர்ந்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/435bc449-c47e-4ca6-b5c9-b03f658d2cc6/26-6a842ab657d17.webp' /></p><p></p><p>இதற்கிடையே, கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ள டாக்சிக் திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பும் வலுத்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4174327-a18c-425e-a15b-e3ae61360d84/26-6a842ab709d81.webp' /></p><p>படத்தில் யஷின் சகோதரியாக நயன்தாரா நடித்திருப்பதாகவும், இதற்காக அவருக்கு சுமார் ரூ.15 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் கீது மோகன்தாஸும், நயன்தாராவும் நல்ல நண்பர்கள் என்பதால், இந்தக் கூட்டணி குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:05:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று ஒரு சவரன் எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/august-18th-2026-gold-and-silver-price-in-chennai-1787040820"></link>
            <id>https://manithan.com/article/august-18th-2026-gold-and-silver-price-in-chennai-1787040820</id>
            <summary type="text">today Gold and silver price :ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>today Gold and silver price :ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக மாற்றங்கள் பதிவாகி வரும் நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.</p><p>

நேற்று (ஆகஸ்ட் 17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,270-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.1,14,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9e1b5f9-a611-498f-8d73-5915b224988b/26-6a84182a43306.webp' /></p><p></p><h2>இன்றைய நிலவரம்&nbsp;</h2><p>

இந்நிலையில், இன்று 22 காரட் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.14,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.160 அதிகரித்து ரூ.1,14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48ac148a-7d15-4e46-8251-b3eacd918295/26-6a84182aebd82.webp' /></p><p> </p><p>18 காரட் தங்கத்தின் விலை
18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று உயர்வு காணப்படுகிறது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.20 அதிகரித்து ரூ.12,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் 18 காரட் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.96,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e34fb40b-b017-42d5-bbae-ca1f65f66b84/26-6a84182b9ec95.webp' /></p><p></p><p>
வெள்ளி விலையில் மாற்றமில்லை
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T08:33:37+00:00</updated>
        </entry>
    </feed>
