<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-12T11:19:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தயிரை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-long-we-can-store-curd-in-fridge-1789205781"></link>
            <id>https://manithan.com/article/how-long-we-can-store-curd-in-fridge-1789205781</id>
            <summary type="text">தயிர் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான உணவாக இருக்கிறது. இதனை நாம் சாதத்தில் கலந்தும், ரைத்தாவாகவும், மோர் லஸ்ஸி என பல வகைகளில் எடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>தயிர் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான உணவாக இருக்கிறது. இதனை நாம் சாதத்தில் கலந்தும், ரைத்தாவாகவும், மோர் லஸ்ஸி என பல வகைகளில் எடுத்துக் கொள்கிறோம். மேலும், புரோபயாடிக் (Probiotics) சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த தயிர் நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு செரிமானத்தை எளிதாக்குகிறது. </p><p>மேலும், இதைத் தவிர பாதுகாப்பதற்கு பலரும் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதுண்டு. ஆனால், ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடிய தயிர் கெட்டுப்போகாதா? எத்தனை நாட்கள் பாதுகாப்பாக இருக்கும் போன்ற பல்வேறு கேள்விகள் நமக்கு வருகிறது. அதை பற்றி பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d098b0a1-b7f4-46c2-b5a1-2b02623d279f/26-6aa51d170bc23.webp' /></p><p></p><h3>பிரிட்ஜில் வைப்பதால் தயிர் கெட்டுப்போவதை தடுக்க முடியுமா?
</h3><p>
பொதுவாக, நம்மில் பலரும் தயிரை ஃப்ரிட்ஜில் வைப்பதால் அது கெட்டுப் போகாது என்று எண்ணுவதுண்டு. உண்மையில் குளிர்சாதன பெட்டி பாக்டீரியாக்கள் உடைய செயல்பாட்டை மெதுவாக்குமே தவிர்த்து அதை முழுமையாக தடுத்து நிறுத்துவதில்லை.</p><p> Egypt National Research Centre வெளியிட்ட ஆய்வின்படி, "பிரிட்ஜில் வைக்கப்படும் அதனுடைய அமிலத்தன்மை மற்றும் நுண்ணுயிர் தரத்தில் படிப்படியான மாற்றங்களை சந்திக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் குளிர் சாதன பெட்டியில் நாம் தயிரை வைத்திருந்தாலும் காலப்போக்கில் அதனுடைய சுவை பதம் மற்றும் சத்துக்கள் மாறுபடலாம் என்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/957ad94a-da43-47c2-a08e-476013db4dcb/26-6aa51d17b8b3f.webp' /></p><h3>பிரிட்ஜில் தயிரை எவ்வளவு நாட்கள் வைக்கலாம்?</h3><h3>

1. பாக்கெட் தயிர்: </h3><p>
கடைகளில் இருக்கக்கூடிய தயிர் ஒவ்வொன்றுக்கும் காலாவதி தேதி குறிப்பிட்டு இருப்பார்கள். அந்த தேதிக்கு உட்பட்ட நாளில் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
</p><h3>
2. வீட்டில் தயாரிக்கும் தயிர்:</h3><p> 
வீடுகளில் தயாரிக்க கூடிய தயிரை மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் பயன்படுத்துவது மிக சிறப்பு. இது எந்த வகையான பால், உறை மோர் மற்றும் ஃப்ரிட்ஜின் வெப்ப நிலைகளை குறித்து மாறப்படுகிறது. சில நாட்கள் கடந்தாலும் வீட்டு தயிர் அளவுக்கு அதிகமாக புளித்து விடும். அதனால் வயிற்று உபாதைகளில் ஏற்படுத்தலாம்.&nbsp;&nbsp;</p><h3>தயிரின் மேல் இருக்கும் தண்ணீர் கெட்டுவிட்டதற்கான அறிகுறியா? </h3><p>குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடிய தயிரின் மேல் சேரும் தண்ணீரில் தான் 'Whey' எனப்படும் சத்துக்கள் உள்ளன. தண்ணீரில் புரோட்டின் வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன. இந்த தண்ணீர் நிற்பதால் தயிர் கெட்டுவிட்டது என்று அர்த்தம் இல்லை. தயிரை சாப்பிடுவதற்கு முன்பாக இந்த நீரை நன்றாக கலந்து பிறகு சாப்பிடலாம். ஆனால், துர்நாற்றம் அடித்தால் அல்லது தயிரில் பூஞ்சை 
வளர்ந்திருந்தாலோ, உடனடியாக அகற்றி விடுவது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21368bdf-f790-4437-861d-97016631f054/26-6aa51d186f577.webp' /></p><p></p><h3>தயிரை கெடாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்:
</h3><p>
1. பிரிட்ஜ் உட்புற ஷெல்ப் தயிரை சேமித்து வைக்க வேண்டும். கதவு பகுதிகளில் வைப்பதே தவிர்ப்பதை நல்லது. கதவு அடிக்கடி திறக்கப்படுவதால் வெப்பநிலை மாறுபடலாம். இதனால் தயிர் சீக்கிரம் புளித்து விடும்.
</p><p>

2. தயிரை வெளியே எடுக்கும் போது சுத்தமான மற்றும் ஈரம் இல்லாத கரண்டியை பயன்படுத்துவது நல்லது. ஈரமான கரண்டிகள் தேவையில்லாத பாக்டீரியாக்களை உருவாக்கி தயிரை விரைவில் கெட்டுப் போக செய்யும்.</p><p> 

3. மேலும், காற்று புகாத இருக்குமான மூடியை கொண்ட பாத்திரங்களில் தயிரை வைக்க வேண்டும். இது பிரிட்ஜில் இருக்கக்கூடிய உணவுகளில் வாசனைகள் தயிரில் கலப்பதை தடுத்துவிடும்.</p><p> 

4. பிளாஸ்டிக் பாத்திரங்களுக்குப் பதிலாக மண் பானைகள், கண்ணாடிப் பாத்திரங்கள் அல்லது தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில் தயிரை வைப்பது நீண்ட நேரம் கெடாமல் பாதுகாக்கும். </p><p>

5. சில வீடுகளில் செய்யக்கூடிய தயிரில் சிறிய பச்சை மிளகாய் அல்லது தேங்காய் துண்டை போட்டு வைப்பது பார்க்கலாம். இது தயிர் அதிகமாக புளிப்பதை தடுப்பதோடு அதன் புத்துணர்வியைத் தக்கவைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec6ac61-ac39-4913-8490-9a15d74f40a1/26-6aa51d1937261.webp' /></p><h3>தயிர் கெட்டுபோனது என்பதை குறிக்கும் அறிகுறிகள் என்ன?<br>

நிறம் மாற்றம்: </h3><p>

புதிய தயிர் நல்ல வெள்ளை அல்லது மங்கலான கிரீம் நிறத்தில் இருக்கும். அங்கு பச்சை அல்லது கருப்பு நிற புள்ளிகள் வந்தால் அங்கு பூஞ்சை அல்லது பாக்டீரியா வந்துவிட்டது என்று அர்த்தம்.</p><p> அதேபோல், தயிர் அதிகமாக வழவழப்பாக மாறினாலோ அல்லது திடீரென தண்ணீராக பிரிந்து கட்டிகட்டிகளாக மாறினாலோ அது கெட்டிருக்க வாய்ப்புள்ளது. </p><p>தயிர் இயற்கையாகவே லேசான புளிப்பு வாசனை கொண்டிருக்கும். அது அழுகிய வாசனை, ஆல்கஹால் வாசனை அல்லது தாங்க முடியாத நாற்றமடித்தால் உடனடியாக அகற்றி விடுவது நல்லது. </p><h3>

அறிய வேண்டியவை:
</h3><p>பிரிட்ஜில் வைக்கக்கூடிய தயிர் அதனுடைய ஆயுளை நீடிக்குமே தவிர என்றென்றும் கெடாமல் பாதுகாப்பதில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T11:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 கண்களுடன் அதிசய தேங்காய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/coconut-found-with-4-eyes-1789205120"></link>
            <id>https://manithan.com/article/coconut-found-with-4-eyes-1789205120</id>
            <summary type="text">கேரளாவின் பாலக்காட்டில் 4 கண்களுடன் காணப்பட்ட தேங்காயை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

பாலக்காடு மாவட்டம் மண்ணம்பட்டா பகுதியை சேர்ந்தவர் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவின் பாலக்காட்டில் 4 கண்களுடன் காணப்பட்ட தேங்காயை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.
</p><p>
பாலக்காடு மாவட்டம் மண்ணம்பட்டா பகுதியை சேர்ந்தவர் ஜெயராம், ராணுவ அதிகாரியாக இருக்கிறார்.
</p><p>
இவரது வீட்டில் உள்ள தேங்காய் மரத்தில் பறிக்கப்பட்ட காய் ஒன்று மற்றதை விட வித்தியாசமாக இருந்துள்ளது.</p><p>

வெளிப்புறத்தில் நான்கு கண்களுடன் உள்புறத்தில் 2 சிறிய தேங்காய் காணப்பட்டது, வித்தியாசமாக இருந்த தேங்காயை பார்க்க அப்பகுதி மக்கள் குவிந்ததால் பரபரப்பானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8667f0d0-064c-4b7c-ab68-7795d38ec3f0/26-6aa51a819236e.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-12T09:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவு உணவு சாப்பாட்டுக்கு பின்னர் 10 நிமிட நடைப்பயிற்சி அவசியம் ஏன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/10-mins-walking-after-eating-1789197041"></link>
            <id>https://manithan.com/article/10-mins-walking-after-eating-1789197041</id>
            <summary type="text">10 Mins Walking After Eating: இன்றைய காலகட்டத்தில் இரவு உணவை பெரும்பாலானவர்கள் தாமதமாக சாப்பிடுகின்றனர், அதுவும் மிட் நைட் பிரியாணி பல நகரங்களில் டிரெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>10 Mins Walking After Eating: இன்றைய காலகட்டத்தில் இரவு உணவை பெரும்பாலானவர்கள் தாமதமாக சாப்பிடுகின்றனர், அதுவும் மிட் நைட் பிரியாணி பல நகரங்களில் டிரெண்டாகி வருகிறது.
</p><p>
ருசிக்காக அதை சாப்பிட்டாலும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் அதிகம்.
</p><p>
இரவு உணவு என்பது 7-8 மணிக்குள் சாப்பிட்டு முடித்தாக வேண்டும், இதுவே ஆரோக்கியமான பழக்கம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
</p><p>
அதிலும் முக்கியமாக இரவு உணவை முடித்தபின், அப்படியே அமர்ந்திருக்காமல் குறைந்தது 10 நிமிடமாவது மிதமான நடைப்பயிற்சி செய்தாக வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac11038f-03d3-4abf-af40-9e4f735b8561/26-6aa4fc7a05255.webp' /><br></p><p>

இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?
</p><p>
இரவு உணவை முடித்தவுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும், அதாவது கார்போஹைட்ரேட்டுகள் செரிமானம் ஆகும் போது குளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கத் தொடங்குகிறது.
</p><p>
உணவின் அளவு, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் ஆகியவற்றை பொறுத்து சர்க்கரை அளவு அதிகபட்சத்தை அடையும் நேரம் மாறுபடலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c996452-a427-4b76-bac2-30c7b93e3167/26-6aa4fc7951ed3.webp' /><br></p><p>

அதுவே நாம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது தசைகள் தொடர்ந்து வேலை செய்வதால் அதற்கு தேவையான ஆற்றலை நம் உடல் எடுத்துக்கொள்ளும்.
</p><p>
இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது குறையும், இதற்காக வேகமாக நடப்பதோ ஓடுவதோ அவசியமில்லை, மிதமான நடைப்பயிற்சியே போதுமானது.</p><p>

உணவை முடித்தபின்னர் 10 நிமிடங்கள் காத்திருந்து மிதமான நடைப்பயிற்சியை தொடங்கலாம்.<br></p>]]></content>
            <updated>2026-09-12T07:17:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறைந்த சாலமன் பாப்பையாவின் நிறைவேறாத கடைசி ஆசை என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/solomon-pappaiah-last-wish-before-death-1789192341"></link>
            <id>https://manithan.com/article/solomon-pappaiah-last-wish-before-death-1789192341</id>
            <summary type="text">தமிழ் பேராசிரியர் பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான சாலமன் பாப்பையா பற்றி தமிழ்நாட்டில் தெரியாத நபர்களையே இல்லை. அவரின் பேச்சு பலரும் ரசிக்கும் படியும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேராசிரியர் பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான சாலமன் பாப்பையா பற்றி தமிழ்நாட்டில் தெரியாத நபர்களையே இல்லை. அவரின் பேச்சு பலரும் ரசிக்கும் படியும் சிந்திக்கும் படியும் இருக்கும். அவர் தற்பொழுது வயது மூப்பின் காரணமாக 91 வயதில் காலமாக இருக்கிறார். </p><p>இதற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சாலமன் பாப்பையா அவர்கள் மகாகவி சுப்பிரமணியர் பாரதியார் மறைந்த அதே தினத்தில் உயிரிழந்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சாலமன் பாப்பையாவிற்கு மகாகவி பாரதி குறித்து நிறைவேறாத கடைசி ஆசை ஒன்றும் இருந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c92cbc-4cfa-47f8-8845-3d992aa18b63/26-6aa4e896a0702.webp' /></p><p></p><p> </p><p>அதை தொடர்பாக அவருடைய உதவியாளர் பேசியுள்ளார்.


சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசையை குறித்து அவருடைய உதவியாளர் ராஜா அவர்கள் பேசுகிற பொழுது பேராசிரியர் சாலமன் பாப்பையா 1965 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார்.</p><p> அவருக்கு வயது தற்போது 91. 3 தினங்களுக்கு முன்பாக விநாயகர் சதுர்த்திக்கு பட்டிமன்றம் நடந்தது அதற்காக அவர் சிவகாசி வந்திருக்கிறார் நன்றாக இருந்துள்ளார் நேற்று இரவு சற்று தூக்கம் வராமல் தவித்திருக்கிறார் இன்று காலை அவரால் மூச்சு விடவே முடியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். </p><p>மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது அவர்கள் அப்போலோ அழைத்து செல்ல சொன்னார்கள். அப்போலோ சென்ற பொழுது மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளார்கள். அவர்கள் சாலமன் பாப்பையா அவர்கள் நம்மை விட்டு பிரிந்த அந்த துயரச் செய்தி தெரிவித்ததாக அவர் சொல்கிறார். </p><p>முக்கியமாக அதைவிட முக்கியமாக சாலமன் பாப்பையா அவர்கள் கிறிஸ்துவராக பிறப்பெடுத்திருந்தாலும் அவர் சாதி மத வேறுபாடுகளை கடந்து வாழ்ந்ததால் தன்னுடைய உடலை அவர் இந்திய சட்ட முறைப்படி தகனம் செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்திருக்கிறார். அதன்படியே அவருடைய உடல் தகனம் செய்யப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6de99a31-968c-41a1-b22b-d1a077438352/26-6aa4e89759cdd.webp' /></p><p></p><p> </p><p>மேலும், சாலமன் பாப்பையா பிறந்து வளர்ந்த வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாரதியார் குறித்து ஒரு நூல் எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு அது எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அதுதான் அவருடைய கடைசி ஆசையாகவும் இருந்தது.</p><p>பாரதியாருடைய வரலாற்றை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அது நிறைவேறும் முன்னதாகவே அவர் காலமாகி இருப்பது மிகுந்த வேதனையை தெரிவிப்பதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-12T06:24:04+00:00</updated>
        </entry>
    </feed>
