<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-20T17:19:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தக்காளியை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் 7 முக்கிய நன்மைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/amazing-benefits-of-eating-one-raw-tomato-daily-1789915920"></link>
            <id>https://manithan.com/article/amazing-benefits-of-eating-one-raw-tomato-daily-1789915920</id>
            <summary type="text">குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் காய்கறிகளின் பட்டியவில் தக்காளி நிச்சயம் முக்கிய இடம் பிடித்துவிடும். அறிவியலின் பிரகாரம் இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் காய்கறிகளின் பட்டியவில் தக்காளி நிச்சயம் முக்கிய இடம் பிடித்துவிடும். அறிவியலின் பிரகாரம் இது ஒரு பழவகையாகவே அறியப்படுகின்றது.
</p><p>
இது பார்ப்பதற்கு எவ்வளவுக்கு அழகாக இருக்கின்றதோ அதைவிட பல மடங்கு ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளமையே இதன் சிறப்பம்சம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf152276-5e86-49fb-b61a-54a14ae8962f/26-6aaffc57844fc.webp' /></p><p>நம் அன்றாட உணவில் எளிதாக சேர்த்துக்கொள்ளக்கூடிய காய்கறிகளில் தக்காளியும் ஒன்று. சாலட், சாண்ட்விச் அல்லது உணவுடன் சேர்த்து தக்காளியை பச்சையாக சாப்பிடுவது பல்வேறு ஊட்டச்சத்துகளைப் பெற உதவும்.</p><p>குறிப்பாக இதில் வைட்டமின் C, பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் லைகோபின் போன்ற முக்கியமான சத்துக்கள் உள்ளன.தக்காளியை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கக்கூடிய முக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பாரக்கலாம்.</p><p></p><p><b>இதய ஆரோக்கியம்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30b3b91a-a7a9-4dac-bff7-1ed115bfc5b3/26-6aaffc583827a.webp' /><b></b></p><p>

தக்காளியில் உள்ள லைகோபின் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடும். குறிப்பாக பொட்டாசியம் உடலில் ரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உணவுமுறையின் ஒரு பகுதியாக தக்காளியை சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்துக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்க்கும்.</p><p><b>சரும ஆரோக்கியம்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c37056c-681d-48a3-9660-1d0a7e4d24a4/26-6aaffc5995f5c.webp' /></p><p>
தக்காளியில் உள்ள வைட்டமின் C உள்ளிட்ட ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சரும செல்களைப் பாதுகாக்கவும், சருமத்தின் இயல்பான ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகின்றன.&nbsp;</p><p><b>செரிமானம்&nbsp;</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e01ec02-f466-4bf5-91dd-6b86ea1f2e1c/26-6aaffc58dfcd3.webp' /><b></b></p><p>
தக்காளியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உள்ளதால், இது சீரான செரிமானத்திற்கு உதவக்கூடும். போதுமான நார்ச்சத்து உட்கொள்வது மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் குடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கும் உதவுகிறது.</p><p><b>நோய் எதிர்ப்பு ஆற்றல்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d73ea560-d0a1-474d-a7ee-2c8f1229219b/26-6aaffc5a4caa2.webp' /><b></b></p><p>
தக்காளியில் உள்ள வைட்டமின் C, உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு தேவையான முக்கியமான சத்துகளில் ஒன்றாகும். எனவே தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்வது சமச்சீரான உணவுமுறையின் ஒரு பகுதியாக நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்திற்கும் துணைப்புரியும்.</p><p><b>&nbsp;ஆன்டி-ஆக்சிடன்ட்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6759a5e5-8798-4a5b-b958-f401bebd5769/26-6aaffc5b031fe.webp' /><b></b></p><p><b> </b></p><p>தக்காளியில் காணப்படும் லைகோபின் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உடலில் உருவாகும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன. சில ஆய்வுகளில் தக்காளி மற்றும் லைகோபின் உட்கொள்ளுதல் சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p><b>உடல் எடை கட்டுப்பாடு&nbsp;</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5861323-51d7-477f-8003-7dd1dc953cee/26-6aaffc5bae74c.webp' /><b></b></p><p>

தக்காளியில் கலோரிகள் குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்கள் அதை சாலட் அல்லது உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் தக்காளியை மட்டும் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒட்டுமொத்த உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியும் இதில் முக்கியம்.</p><p><b>கண் ஆரோக்கியம்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e965a3fd-6f2a-4800-a615-a8464999bc88/26-6aaffc5c625ef.webp' /></p><p></p><p><b></b></p><p>உதவும்

தக்காளியில் வைட்டமின் A-க்கு தேவையான கரோட்டினாய்டுகள் மற்றும் லூட்டின் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை கண்களின் இயல்பான ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.</p><p>மொத்தத்தில், தக்காளி ஒரு சத்தான காய்கறி.அதை தினசரி உணவில் அளவோடு சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான உணவுமுறைக்கு நல்ல பங்களிப்பாக இருக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T15:45:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள் - மீண்டும் பேசுபொருளான விஜய் சேதுபதியின் பேச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/again-vijay-sethupathi-talk-about-criticism-in-bb-1789913611"></link>
            <id>https://manithan.com/article/again-vijay-sethupathi-talk-about-criticism-in-bb-1789913611</id>
            <summary type="text">பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஏற்கனவே பேசிய கருத்துகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும்விமர்சனம் வந்தால் அதை எதிர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஏற்கனவே பேசிய கருத்துகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும்விமர்சனம் வந்தால் அதை எதிர்கொள்ள வேண்டும்; விமர்சனத்தை எதிர்கொள்வதுதான் முதிர்ச்சியின் அடையாளம் என்ற கருத்தை தெரிவித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.</p><h2>விஜய் சேதுபதி சர்ச்சை கருத்து&nbsp;</h2><p>
</p><p>
கமல்ஹாசனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் 10வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார்.

சமீபத்திய நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி, தலைமைத்துவம், வாக்குறுதிகள், பொறுப்பு உள்ளிட்டவை குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/307a49ea-a1ef-43d8-85e3-43b392d29544/26-6aafed41155b7.webp' /></p><p></p><p>இதனைத் தொடர்ந்து, அவர் தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சித்ததாக சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் விஜய் சேதுபதிக்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன.</p><h2>மீண்டும் வைரலான பேச்சு</h2><p>
இதையடுத்து, தனது முந்தைய கருத்து குறித்து விளக்கம் அளித்த விஜய் சேதுபதி, அந்தப் பேச்சு பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை மட்டுமே குறிப்பதாகவும், அதனை வேறு விதமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d69ee41-4991-49a0-808e-ab707a217b2c/26-6aafed41bcecc.webp' /></p><p></p><p>
</p><p>
இந்நிலையில், இந்த வார நிகழ்ச்சியிலும் விஜய் சேதுபதி பேசிய ஒரு கருத்து மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போட்டியாளர்களிடம் பேசும்போது, விமர்சனம் வந்தால் அதை எதிர்கொள்ள வேண்டும்; விமர்சனத்தை எதிர்கொள்வதுதான் முதிர்ச்சியின் அடையாளம் என்ற கருத்தை விஜய் சேதுபதி தெரிவித்தார்.
</p><p>
இந்தப் பேச்சைத் தொடர்ந்து மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. ஒரு தரப்பினர், இது போட்டியாளர்களுக்கு அவர் வழங்கிய பொதுவான அறிவுரை என்றும், மற்றொரு தரப்பினர், கடந்த வாரம் ஏற்பட்ட சர்ச்சையின் பின்னணியில் இந்தக் கருத்தையும் பார்க்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
</p><p>
இதனால், விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சும் தற்போது சமூக வலைதளங்களில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரு தரப்பினரிடையே விவாதப் பொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>
</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T14:43:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sivaji-ganesan-elder-daughter-shanthi-passed-away-1789886624"></link>
            <id>https://manithan.com/article/sivaji-ganesan-elder-daughter-shanthi-passed-away-1789886624</id>
            <summary type="text">நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு சிவாஜி கணேசனின் குடும்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு சிவாஜி கணேசனின் குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
</h2><p>தமிழ் சினிமாவில் நடிப்பின் உச்சமாகக் கருதப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தனது தனித்துவமான நடிப்புத் திறன், குரல் வளம், வசன உச்சரிப்பு மற்றும் கதாபாத்திரங்களை வெளிப்படுத்தும் விதம் ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த ரசிகர்களால் இன்றளவும் அவரது நடிப்பு போற்றப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36534c79-53fd-4105-9eb5-c8bf940f1801/26-6aaf83bf69770.webp' /></p><p></p><h2>
சிவாஜி கணேசனின் குடும்பம்
</h2><p>சிவாஜி கணேசன் - கமலா கணேசன் தம்பதியினருக்கு ராம்குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகளாக சாந்தி நாராயணசாமி இருந்தார்.
</p><p>
தனது மூத்த மகள் சாந்தியின் பெயரை நினைவுகூரும் வகையில், சென்னை அண்ணாசாலையில் சிவாஜி கணேசன் ஒரு திரையரங்கையும் கட்டியிருந்தார்.இதன் மூலம் சாந்தியின் பெயர் அவரது குடும்பத்துடனும், திரையுலகுடனும் நெருக்கமாக இணைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa97a7bb-280f-4417-898b-62a88c2df270/26-6aaf83c01e83f.webp' /></p><p>
</p><p>சாந்தி நாராயணசாமி குடும்பப் பின்னணியைக் கொண்டவராக மட்டுமின்றி, திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார்.</p><p>சிவாஜி கணேசன் நடிப்பில் 1974-ஆம் ஆண்டு வெளியான ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தை அவர் தயாரித்திருந்தார். காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் சிவாஜி கணேசனின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.சாந்தி நாராயணசாமியின் கணவர் நாராயணசாமி. இவர்களுக்கு சத்யலட்சுமி என்ற மகள் உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6a1346b-75c9-4dca-9f3b-2ee2ea17773a/26-6aaf83c0c97f7.webp' /></p><p></p><h2>
சாந்தி நாராயணசாமி மறைவு</h2><p>இந்த நிலையில், சிவாஜி கணேசனின் மூத்த மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார்.
</p><p>
அவரது மறைவுச் செய்தி சிவாஜி கணேசனின் குடும்பத்தினரையும், அவருக்கு நெருக்கமானவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. </p><p>திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்துடன் தொடர்புடைய முக்கியமான நபராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட சாந்தி நாராயணசாமியின் மறைவு குடும்பத்தினருக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T13:57:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புரட்டாசி மாத கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/purattasi-rasipalan-2026-who-get-huge-luck-1789908146"></link>
            <id>https://manithan.com/article/purattasi-rasipalan-2026-who-get-huge-luck-1789908146</id>
            <summary type="text">தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், புனிதமானதுமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், புனிதமானதுமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்து, விரதம், வழிபாடு, பூஜை போன்ற ஆன்மிகச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.</p><p> பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்புப் பெற்ற இந்த மாதம், மன அமைதி, பக்தி மற்றும் ஆன்மிக சிந்தனையை வளர்க்கும் காலமாகவும் பலரால் கருதப்படுகிறது.

ஆன்மிக ரீதியாக மட்டுமல்லாமல், ஜோதிட ரீதியாகவும் புரட்டாசி மாதம் மிகவும் முக்கியமானதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c04cf47d-8c7c-4b86-9559-4ff888665f6c/26-6aafde0b97fb4.webp' /></p><p> </p><p>இந்த மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் நிலைமாற்றங்கள், ஒவ்வொரு ராசியினரின் வாழ்க்கையிலும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.
</p><p>
புரட்டாசி மாதத்தில் குருபகவான் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.அதேபோல், சுக்கிரனும் கேதுவும் சிம்ம ராசியில் சஞ்சரிக்கின்றனர். மேலும், சூரியன் கன்னி ராசியில் புதனுடன் இணைந்து புதாதித்திய யோகத்தை உருவாக்குகிறார்.</p><p> </p><p>இந்த கிரக நிலைகள் காரணமாக தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள் மற்றும் தனிப்பட்ட முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் இருக்கலாம் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் கூடுதல் சாதகமான பலன்களை வழங்கும் காலமாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>அப்படி புரட்டாசி மாதம் முழுவதும் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd8f88f-0d94-4d00-a70c-872e6c93418b/26-6aafde0c4c344.webp' /></p><h2>
</h2><p>மேஷ ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் சிறப்பாக அமையும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சரியான நேரத்தில் நிறைவேறும். </p><p>செவ்வாயின் அருளால் தைரியமும் உற்சாகமும் அதிகரிக்கும். வாழ்க்கையின் பல துறைகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். மாதத்தின் நடுப்பகுதியில் குருபகவானின் அருளால் குறிப்பிடத்தக்க நிதி ஆதாயம் கிடைக்கலாம்.</p><p> கடனாகக் கொடுத்த பணம் எதிர்பாராத விதமாக திரும்பக் கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும், பழைய கடன்களையும் அடைக்க முடியும்.வணிக விரிவாக்கத் திட்டங்கள் நிறைவேறும்.

உறவுகளைப் பொறுத்தவரை மாதம் சாதகமாக இருக்கும்.</p><p>காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.</p><h2>

ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe06674c-b9ff-44a9-9b92-a7af48dd94d6/26-6aafde0d01cd7.webp' /></p><p>
ரிஷப ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் நல்ல வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். ராசி அதிபதியான சுக்கிரன் நான்காம் இடத்தில் கேதுவுடன் இணைந்திருப்பதால், முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். </p><p>கடின உழைப்புக்கான பலன்களை முழுமையாகப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

சரியான வாய்ப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் செல்வத்தை அதிகரிக்கலாம்.</p><p> சுக்கிரனின் அருளால் வருமானம் உயரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணியில் கடின உழைப்புக்குப் பதவி உயர்வும், மரியாதையும் கிடைக்கும்.</p><p>இதனால் நிதி நிலை வலுப்படும். முதலீடுகள் மற்றும் நண்பர்களின் உதவியால் நீண்டகால ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/601f5ddf-2eb3-437e-8181-cfa532bad0c9/26-6aafde0dae99e.webp' /></p><p>
துலாம் ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைத் திறக்கும்.குருபகவானின் அருள் முழுமையாகக் கிடைக்கும். </p><p>வெற்றியை நோக்கிய பயணம் வேகமடையும்; நிதி நிலையும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையின் பல துறைகளிலும் முன்னேற்றம் காண்பீர்கள்.மகிழ்ச்சியான தருணங்கள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அன்பும் அமைதியும் நிலவும்.</p><p> நீண்டகால ஆசைகளை நிறைவேற்ற இது ஏற்ற காலமாகும். கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள்.திட்டமிட்ட பணிகள் சரியான நேரத்தில் முடியும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துவது முக்கியம்.</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3585644e-10fc-4779-b091-9cc6d052d0d4/26-6aafde0e6c1db.webp' /></p><p></p><h2>
</h2><p>மீன ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் பல நல்ல யோகங்கள் நிறைந்ததாக இருக்கும். வருமானம் அதிகரிக்கலாம்; எதிர்பாராத நிதி ஆதாயங்களுக்கும் வாய்ப்புள்ளது.</p><p> நீண்ட நாட்களாக இருந்த நிதிச் சிக்கல்கள் குறையும். நீண்டகால ஆசைகளில் பல நிறைவேறலாம்.

திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும். </p><p>வாழ்க்கைத் துணைக்கு ஆச்சரியப் பரிசுகள் வழங்கும் வாய்ப்பும் ஏற்படலாம். இந்த மாதம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமையும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நண்பர்களுடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் உருவாகலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T13:34:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம்! ஆய்வில் தெரியவந்த உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/new-wild-cat-species-discovered-after-100-years-1789901925"></link>
            <id>https://manithan.com/article/new-wild-cat-species-discovered-after-100-years-1789901925</id>
            <summary type="text">100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய பூனை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய பூனை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பொலிவியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த ஆச்சரியமான கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.</p><p>தென்அமெரிக்கா நாடான பொலிவியாவில், கடந்த 2017-ஆம் ஆண்டு, காட்டுப்பகுதி அருகே சாலையோரத்தில் இருந்த குட்டி பூனையை உள்ளூர் வாசி ஒருவர் வீட்டிற்கு கொண்டு சென்று வளர்த்தார். ஒரு சில நாட்களிலேயே அதன் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த உள்ளூர் வாசி, பூனை குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baeb3775-1d8d-488c-913e-c248efdf1f96/26-6aafc1b605a56.webp' /></p><p> </p><p>அதனை தொடர்ந்து, பொலிவியாவில் பணியாற்றிய உயிரியல் நிபுணரும் National Geographic Explorer-ஆகவும் இருந்த பவுலா நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸுக்கு, அங்குள்ள உள்ளூர் வனவிலங்கு சரணாலயத்தில் வித்தியாசமான தோற்றம் கொண்ட பூனை ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்தது.</p><p></p><p>
</p><p>
சுமார் ஒரு வருடத்துக்குப் பின்னர், அது காட்டுப் பூனை என்பதை உறுதி செய்த அவர், அந்த விலங்கை வனவிலங்கு சரணாலயத்தில் ஒப்படைத்தார். </p><p>அதனை நேரில் பார்வையிட்டபோது, ஏற்கனவே அறியப்பட்ட காட்டுப் பூனைகளிலிருந்து அதன் தோற்றம் குறிப்பிடத்தக்க வகையில் மாறுபட்டிருப்பதை அவர் கவனித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf31a41f-8cc1-4f9b-afe2-2915b68da658/26-6aafc1b6adbce.webp' /></p><p>
</p><p>
சிறிய சுருங்கிய முகம், குட்டையான வட்டமான காதுகள், நீண்ட மீசைகள் மற்றும் சிறுத்தையைப் போன்ற உடல் புள்ளிகள் என பல தனித்துவமான அம்சங்கள் அந்தப் பூனைக்கு இருந்தன. இதனால் ஆச்சரியமடைந்த நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ், அந்தப் பூனையை சுமார் 100 புகைப்படங்கள் எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
</p><h2>
ஆரம்பத்தில் ஏற்பட்ட குழப்பம்
</h2><p>முதற்கட்ட ஆய்வுகளில், இந்தப் பூனை ஏற்கனவே அறிவியலால் அடையாளம் காணப்பட்ட Leopardus tigrinus இனத்தைச் சேர்ந்ததாகவே விஞ்ஞானிகள் கருதினர். </p><p>இந்த இனத்திற்கு Tigrina, Oncilla, Tigrillo மற்றும் Little Spotted Cat உள்ளிட்ட பல பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகள் மற்றும் மரபணு பகுப்பாய்வுகளின் பின்னர், இந்தப் பூனை ஏற்கனவே அறியப்பட்ட இனத்தைச் சேர்ந்ததல்ல என்பது தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6ee9bb7-7ae9-4719-80f2-03cbac042ee5/26-6aafc1b761d1f.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து, இது அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத தனித்துவமான புதிய பூனை இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><h2>ஆய்வில் வெளியான தகவல்</h2><p>பூனை குடும்பத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் புதிய இனமாக அறிவிக்கப்படும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாக இது அமைந்துள்ளது. </p><p>இதன் மூலம், உலகின் பல பகுதிகளில் இன்னும் அறிவியலால் முழுமையாக அடையாளம் காணப்படாத வனவிலங்குகள் இருக்கக்கூடும் என்பதும் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0bbb315-90e6-4a4c-b99b-d4df6c6fdafc/26-6aafc1b8157d3.webp' /></p><p></p><p>
</p><p>
இந்த புதிய பூனை இனம் தொடர்பான ஆய்வு Current Biology என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு அறிவியலுக்கே புதிதான ஒரு பூனை இனம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, வனவிலங்கு ஆராய்ச்சித் துறையில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T11:21:45+00:00</updated>
        </entry>
    </feed>
