<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-08T05:01:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பை பை அப்பா... என சிரித்தபடி ஆற்றில் குதித்த இளம்பெண்! என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bye-papa-before-21-year-old-woman-jumps-into-river-1788840972"></link>
            <id>https://manithan.com/article/bye-papa-before-21-year-old-woman-jumps-into-river-1788840972</id>
            <summary type="text">ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில், 21 வயதான பாயல் தேவி என்ற இளம்பெண், தனது தந்தையிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோதே, “பை பை அப்பா” என்று சிரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில், 21 வயதான பாயல் தேவி என்ற இளம்பெண், தனது தந்தையிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோதே, “பை பை அப்பா” என்று சிரித்தபடி பாலத்தில் இருந்து செனாப் ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
</p><h2>நடந்தது என்ன?&nbsp;</h2><p>உள்ளூர் திருவிழாவுக்குச் சென்றிருந்த பாயல், உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவரை சந்திக்கப் போவதாகவும் தனது தந்தை கிருஷ்ண லாலிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c87b297-0288-4b85-bb82-17810566ed30/26-6a9f8ea17d3fb.webp' /></p><p></p><p> </p><p>மருத்துவர் இல்லாததால், கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் பைக்கில் வீடு திரும்பியபோது, அவரது துப்பட்டா எதிர்பாராதவிதமாக பைக்கின் சக்கரத்தில் சிக்கியுள்ளது. வாகனத்தை நிறுத்தி துப்பட்டாவை எடுக்க முயன்ற நேரத்தில், பாயல் திடீரென அருகிலிருந்த பாலத்தை நோக்கி ஓடியுள்ளார்.</p><p>&nbsp;“நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்” என்று கூறியபடி அவர் பாலத்தை நோக்கி ஓடியதால், அங்கிருந்த பொதுமக்கள் அவரைத் தடுத்து சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். இதையடுத்து, அவருடன் வந்த நபர் செய்வதறியாது, பாயலின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>
தந்தை தொலைபேசியில் மகளிடம் காரணம் குறித்து கேட்டபோது, “யாரும் எனக்கு எதுவும் செய்யவில்லை. இது என் வாழ்க்கை. என் மனம் இப்படித்தான் செல்ல வேண்டும் என்று சொல்கிறது” என பாயல் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e955eac1-8ab6-4743-8930-6e867e6ad279/26-6a9f8ea231f70.webp' /></p><p> தந்தை அவரை சமாதானப்படுத்த முயன்றுகொண்டிருந்தபோதே, “பை பை அப்பா” என்று சிரித்தபடி கூறிவிட்டு, பிரேம் நகர் அருகேயுள்ள பாலத்தில் இருந்து செனாப் ஆற்றில் குதித்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றைய தினம் சுமார்&nbsp; 2 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.</p><p>பாயல் பாலத்தில் நிற்பதும், பொதுமக்கள் அவரைத் தடுக்க முயல்வதும், அவர் சிரித்தபடி கையசைப்பதும் உள்ளிட்ட காட்சிகள் வீடியோவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f934ce-680d-48e1-9eca-6a7efe62af24/26-6a9f8ea2dc638.webp' /></p><p></p><p>
</p><p>
பாயல் ஆற்றில் குதித்ததும், போலீசார், மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து தேடுதல் பணியைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பதற்கான தெளிவான காரணமும் இதுவரை தெரியவில்லை. சிரித்தபடி பொதுமக்களிடம் கையசைத்துக்கொண்டிருந்த இளம்பெண் சில நிமிடங்களிலேயே ஆற்றில் குதித்த சம்பவம், அவரது குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ஆண்டுகளின் பின் கடகத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-moon-make-gajkesari-rajyog-who-get-luck-1788793295"></link>
            <id>https://manithan.com/article/jupiter-moon-make-gajkesari-rajyog-who-get-luck-1788793295</id>
            <summary type="text">ஜோதிடத்தில் மனம், தாய்மை மற்றும் உணர்ச்சிகளின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் மட்டுமே பயணிப்பதால், கிரகங்களிலேயே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் மனம், தாய்மை மற்றும் உணர்ச்சிகளின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் மட்டுமே பயணிப்பதால், கிரகங்களிலேயே மிக வேகமாக ராசி மாறுபவர்.
</p><p>
செப்டம்பர் 07 அன்று சந்திரன் தனது சொந்த ராசியான கடகத்தில் நுழைகிறார். ஏற்கனவே அறிவு, அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் செழிப்பின் காரணியான குரு பகவான் கடகத்தில் பயணித்து வருவதால், சந்திரன்-குரு சேர்க்கையால் மங்களகரமான கஜகேசரி யோகம் உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3c0fc67-d652-4cbc-b5e8-541d426449ac/26-6a9ed6c776652.webp' /></p><p></p><p>
</p><p>
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடகத்தில் இணையும் சந்திரன்-குருவின் இந்த கஜகேசரி ராஜயோகம் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீடிக்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக நான்கு ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.
</p><p>அப்படி 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடகத்தில் உருவாகும் இந்த கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் நான்கு ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ccf4c7-835f-41d3-9a55-a0010a820678/26-6a9ed6c82b92d.webp' /></p><p></p><h2>
</h2><p>மேஷ ராசியின் 4-ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வீடு, சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள்.</p><p> குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு அதிகரிப்பதன் மூலம், நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.</p><p>புதிய வருமானத்துக்கான வழிகள் தானாக உருவாகும். நீண்ட கால கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கு அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்.</p><p>
</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9127910-ccde-409a-b83c-34d2051ca190/26-6a9ed6c8d3b72.webp' /></p><h2>
</h2><p>கடக ராசியின் முதல் வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை, மதிப்பு, மரியாதை, கௌரவம் போன்றவை வழக்கத்தைவிட அதிகரிக்கும்.</p><p> திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமண வாழ்க்கை இனிமையாக இருப்பதுடன் மகிழ்ச்சியாக தருணங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்பு அமையும்.</p><p>பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும்.</p><h2>

விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05d067ef-f6e6-4934-aed0-bc077144fd70/26-6a9ed6c9891a3.webp' /></p><p>
விருச்சிக ராசியின் 9-ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த வேலைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவார்கள். </p><p>ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதோடு, ஆன்மீகப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். மேலும், வேலை தொடர்பான பயணங்களையும் மேற்கொள்ள நேரிடும். </p><p>இந்தப் பயணங்களின் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதிய வருமான வழிகள் உருவாகும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c3db0ae-86c2-4da9-b754-01fad36b6bf1/26-6a9ed6ca3da6a.webp' /></p><p>மீன ராசியின் 5-ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.</p><p>எழுத்து மற்றும் ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்கள் நல்ல மதிப்பையும், மரியாதையையும் பெறுவதோடு, சிறப்பான வெற்றியையும் பெறுவார்கள். </p><p>பங்குச் சந்தை மற்றும் முதலீடுகள் மூலம் எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:02:31+00:00</updated>
        </entry>
    </feed>
