<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-30T12:32:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட் வீரரின் மகன் : அவுஸ்திரேலியாவில் விளையாட அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/australia-approve-transgender-anaya-bangar-to-play-1788065858"></link>
            <id>https://manithan.com/article/australia-approve-transgender-anaya-bangar-to-play-1788065858</id>
            <summary type="text">trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட் விளையாட அவுஸ்திரேலியா&amp;nbsp; அனுமதி வழங்கியுள்ளது.அனயா பங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட் விளையாட அவுஸ்திரேலியா&nbsp; அனுமதி வழங்கியுள்ளது.</p><h2>அனயா பங்கர்</h2><p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் பங்கர், தற்போது அனயா பங்கர் என்ற பெயரில் திருநங்கை பெண்ணாக மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5654ddb1-a21d-492f-aa2b-adc3cda1b15f/26-6a93bd8717103.webp' /></p><p></p><p>
</p><p>
மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) அனுமதி கோரியிருந்த நிலையில், அங்கிருந்து பதில் கிடைக்காததால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பை அவர் அணுகியுள்ளார்.</p><p> இதையடுத்து, அவுஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனயாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd1066d8-3c5a-47a7-959c-be9ae8609830/26-6a93bd87bd400.webp' /></p><p>

கிரிக்கெட்டில் இருந்து பாலின மாற்றப் பயணம்
2001 முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சஞ்சய் பங்கரின் மகனான ஆர்யன், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
</p><p>
2023ஆம் ஆண்டு, தான் பெண்ணாக மாற விரும்புவதாக வெளிப்படையாக தெரிவித்த அவர், அதற்கான ஹார்மோன் சிகிச்சையை மேற்கொண்டார். தொடர்ந்து பாலின மாற்ற சிகிச்சைகளை மேற்கொண்டு, தனது பெயரையும் அனயா பங்கர் என மாற்றிக்கொண்டார்.</p><p>

இதையடுத்து மகளிர் கிரிக்கெட்டில் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடரும் நோக்கில் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20800c02-f590-4eea-b149-d3c957776424/26-6a93bd886e244.webp' /></p><p>

அவுஸ்திரேலியாவில் புதிய வாய்ப்பு
மகளிர் கிரிக்கெட்டில், குறிப்பாக அவுஸ்திரேலியாவின் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அனயா விருப்பம் தெரிவித்திருந்தார். </p><p>இதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு தற்போது வழங்கியுள்ளது.

எனினும், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தகுதி தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விதிமுறைகள் தொடர்ந்து அமலில் உள்ளன.
</p><p>
ஆண் பருவமடைதலை அடைந்த திருநங்கை பெண்கள், உயர்மட்ட மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதைத் தடுக்கும் விதிமுறைகளை ஐசிசி 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bedfbd37-9168-4dbe-96fc-f40609ebb5f4/26-6a93bd891fb77.webp' /></p><p></p><p>
</p><p>
டெஸ்டோஸ்டிரோன் அளவு முக்கியம்
ஐசிசி விதிமுறைகளின்படி, உயர்மட்ட மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்குத் தகுதி பெற, சம்பந்தப்பட்ட வீராங்கனையின் இரத்தத்தில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்தது 12 மாதங்களுக்கு 10 nmol/L-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
</p><p>
அனயாவின் உயர்மட்ட கிரிக்கெட் தகுதி தொடர்பான முடிவு, அவரது டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே அமையும்.

இதுகுறித்து கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நேர்மை பிரிவுத் தலைவர் ஜாக்கி பார்ட்ரிட்ஜ் கூறுகையில், 2027 மார்ச் மாதத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே அனயாவின் உயர்மட்ட கிரிக்கெட் தகுதி தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, 2027 மார்ச் மாதம் வரை அவுஸ்திரேலியாவின் மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களில் நடைபெறும் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் அனயா தொடர்ந்து பங்கேற்கத் தகுதியுடையவராக இருப்பார்.
</p><p>
இதன் மூலம், இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய ஆர்யன் பங்கர், அனயா பங்கர் என்ற புதிய அடையாளத்துடன் மகளிர் கிரிக்கெட்டில் தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T12:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளம்: ஆபத்து வருவதற்கு முன் சுதாரித்த ஆசிரியர்: காப்பாற்றப்பட்ட 1,643 உயிர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/nepal-floods-headmaster-saves-1643-students-1788089324"></link>
            <id>https://manithan.com/article/nepal-floods-headmaster-saves-1643-students-1788089324</id>
            <summary type="text">எதிர்பாராத ஆபத்தான சூழ்நிலைகளில், சரியான நேரத்தில் எடுக்கப்படும் ஒரு சிறிய முடிவுகூட எத்தனை உயிர்களைக் காப்பாற்றும் என்பதற்கு நேபாளத்தைச் சேர்ந்த ராஜே...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்பாராத ஆபத்தான சூழ்நிலைகளில், சரியான நேரத்தில் எடுக்கப்படும் ஒரு சிறிய முடிவுகூட எத்தனை உயிர்களைக் காப்பாற்றும் என்பதற்கு நேபாளத்தைச் சேர்ந்த ராஜேந்திர ததாபி ஒரு சிறந்த உதாரணமாகியிருக்கிறார்.
</p><p>
கடந்த 26-ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கோரமான இயற்கைப் பேரிடருக்கு மத்தியில், தனது சமயோசிதமான சிந்தனையாலும், துரிதமான நடவடிக்கையாலும் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் ராஜேந்திர ததாபி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/706858c2-4e28-4b24-8acf-008d8cda545d/26-6a9417c222c82.webp' /></p><p></p><h2>தலைமையாசிரியரின் விரைவான முடிவு&nbsp;</h2><p>
</p><p>
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் அமைந்துள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக ராஜேந்திர ததாபி பணியாற்றி வருகிறார்.</p><p> பள்ளிக்கு அருகே பாயும் திரிசூலி ஆற்றில் கடந்த 26-ஆம் தேதி திடீரென கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தின் தீவிரம் குறித்து தன்னுடைய நண்பர் மூலம் தகவல் கிடைத்தவுடன், நிலைமையின் ஆபத்தை உணர்ந்த ததாபி, அடுத்த நொடியே செயல்படத் தொடங்கினார்.</p><p>முதலில் பள்ளி மணியை அடித்து, பள்ளியில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் தாமதமின்றி பாதுகாப்பான, உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88111768-df2f-45d9-adb5-27a1bcd091d9/26-6a9417c2c85d1.webp' /></p><p>
அதோடு நின்றுவிடாமல், பள்ளிப் பேருந்துகளின் ஓட்டுநர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வராமல் அவரவர் வீடுகளிலேயே பாதுகாப்பாக இறக்கிவிடுமாறு தெரிவித்துள்ளார்.</p><p>

அந்த நேரத்தில், ஒரு பள்ளிப் பேருந்து மட்டும் திரிசூலி ஆற்றின் பாலத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. நிலைமையை அறிந்த ததாபி, அந்தப் பேருந்தின் ஓட்டுநரையும் உடனடியாகத் தொடர்புகொண்டு, எப்படியாவது பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p>

அவரது அந்த ஒரு தொலைபேசி அழைப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை அடுத்த சில நிமிடங்களிலேயே நடந்த சம்பவம் உணர்த்தியது. பேருந்து பாலத்தைக் கடந்து சென்ற சில நிமிடங்களிலேயே, அந்தப் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c213354a-021b-4016-83ff-2499c76dc20c/26-6a9417c37dfe0.webp' /></p><p></p><p>
</p><p>
இதற்குப் பிறகு நிகழ்ந்த சம்பவம் இன்னும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. மூன்று அடுக்குகளைக் கொண்ட பள்ளிக் கட்டடமே அடுத்த சில நிமிடங்களில் வெள்ளநீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடித்துச் செல்லப்பட்டது.&nbsp;</p><p>ஆபத்து வருவதற்கு முன்பே மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பியதுடன், பள்ளிப் பேருந்தில் சென்றுகொண்டிருந்த மாணவர்களையும் உரிய நேரத்தில் எச்சரித்து காப்பாற்றியிருந்தார்.

இதன் மூலம், 1,643 மாணவர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக உள்ளனர்.
</p><p>
ஒரு பேரிடர் நேரத்தில் பதற்றமடையாமல், கிடைத்த தகவலை சரியாகப் புரிந்துகொண்டு, சில நிமிடங்களுக்குள் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்த ராஜேந்திர ததாபியின் செயல்பாடு உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
</p><p>
சில நேரங்களில் உயிருக்கும் மரணத்துக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் சில நிமிடங்களாக மட்டுமே இருக்கலாம். அந்த சில நிமிடங்களில் எடுக்கப்படும் சரியான முடிவுதான் நூற்றுக்கணக்கான உயிர்களின் விதியை மாற்றியுள்ளது.</p><p>அந்த வகையில், ‘விதியை மதியால் வெல்லலாம்’ என்ற பழமொழிக்கு ராஜேந்திர ததாபியின் செயல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T11:45:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய்–புதன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகம்: செப்டம்பர் 01முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-mars-forms-labha-drishti-yoga-who-get-luck-1788081388"></link>
            <id>https://manithan.com/article/mercury-mars-forms-labha-drishti-yoga-who-get-luck-1788081388</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறுவதால், ஜோதிட ரீதியாக செப்டம்பர் மாதம் முக்கியமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறுவதால், ஜோதிட ரீதியாக செப்டம்பர் மாதம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த கிரக மாற்றங்களின் மூலம் சில சக்திவாய்ந்த ராஜயோகங்களும் உருவாக உள்ளன.
</p><p>
செப்டம்பர் 1ஆம் தேதி செவ்வாய் மற்றும் புதன் இணைந்து லாப திருஷ்டி யோகத்தை உருவாக்க உள்ளன. ஜோதிட சாஸ்திரப்படி, இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 60 டிகிரி கோணத்தில் அமைந்தால் லாப திருஷ்டி யோகம் உருவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/596011e3-661d-4337-91d6-7b9cc8eae2af/26-6a94005b3050e.webp' /></p><p></p><p> இது சக்திவாய்ந்த பஞ்ச யோகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

செவ்வாய்-புதன் இணைவால் உருவாகும் இந்த யோகத்தின் பலன்கள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் கிடைத்தாலும், சில ராசிக்காரர்கள் கூடுதல் அதிர்ஷ்டத்தையும் நன்மைகளையும் அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் எவை என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2c44e6f-0ed5-439b-986a-7712cbaa4bd9/26-6a94005be07f3.webp' /></p><p>
செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். பொருளாதார ரீதியாக இது சிறப்பான காலமாக இருக்கும்.</p><p> கடந்த காலத்தில் தடைப்பட்ட வேலைகளை மீண்டும் வெற்றிகரமாகத் தொடங்கலாம். பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.&nbsp;</p><p>அவை சவாலாக இருந்தாலும், திறமையை நிரூபிக்கும் வாய்ப்பாக அமையும்.

புதிய முதலீடுகளை மேற்கொள்ள இது ஏற்ற காலம். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி லாபம் பெறலாம்.&nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மிதுனம்</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f0fb856-22b0-46de-b32f-70ca02d6c936/26-6a94005c94741.webp' /></p><p>மிதுன ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் எதிர்பாராத நன்மைகளைப் பெறப்போகிறார்கள். சமூகத்தில் அங்கீகாரமும் மரியாதையும் அதிகரிக்கும். </p><p>நீண்டகாலமாக இருந்து வந்த நிதிச் சிக்கல்கள் முடிவுக்கு வருவதுடன், பல ஆசைகளும் நிறைவேறும்.

திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை மூலம் நல்ல செய்தி தேடி வரும்.</p><p> உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகளுக்கு பெரிய லாபம் கிடைக்கும்.</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/734b1e85-b7e2-4578-9d1a-a9b01cbbe54f/26-6a94005d46002.webp' /></p><p></p><h2>
</h2><p>கன்னி ராசிக்காரர்களுக்கு இது வெற்றிகள் குவியும் காலமாக இருக்கும். நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். </p><p>லாப திருஷ்டி யோகம் நிதி ஸ்திரத்தன்மையையும் சமூக அந்தஸ்தையும் அதிகரிக்கக்கூடும்.

புதிய கார் அல்லது வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இது ஏற்ற காலம். </p><p>திருமணமானவர்களின் உறவில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படுவதுடன், மன நிம்மதியும் அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த யோகம் வாழ்க்கையில் வெற்றி, ஸ்திரத்தன்மை மற்றும் மகிழ்ச்சியைத் தரும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T10:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க இறக்குமதி வரி 15% இல் இருந்து 6%-ஆக குறையுமா? மத்திய அரசு ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gold-import-tax-cut-will-the-price-drop-1788077555"></link>
            <id>https://manithan.com/article/gold-import-tax-cut-will-the-price-drop-1788077555</id>
            <summary type="text">Tax Reduction: தங்கத்தின் இறக்குமதி வரியை தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து மீண்டும் 6 சதவீதமாகக் குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p></p><p><b>Tax Reduction: </b>தங்கத்தின் இறக்குமதி வரியை தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து மீண்டும் 6 சதவீதமாகக் குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> இறக்குமதி வரி உயர்வால் சட்டவிரோத தங்கக் கடத்தல் அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் தங்க வர்த்தகத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42353d3d-f762-4b7c-9c54-065efc147045/26-6a93ed0a26f19.webp' /></p><p>கடந்த மே மாதத்தில் ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.</p><p>இதன் தாக்கமாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் அழுத்தம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, நாட்டின் அந்நியச் செலாவணி வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அத்தியாவசியமற்ற தங்கக் கொள்முதலை குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.&nbsp;</p><p>

இதன் தொடர்ச்சியாக, தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அதன் இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/666fa9ff-260a-4215-abcb-1f15376ca5a9/26-6a93ed0acbd3c.webp' /></p><p> </p><p>வரி உயர்வின் நோக்கம் தங்க இறக்குமதியை குறைப்பதாக இருந்தாலும், அதனால் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்ததுடன், சட்டவிரோதமாக தங்கத்தை நாட்டுக்குள் கொண்டு வரும் கடத்தல் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.</p><h2>தங்கக் கடத்தலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை</h2><p>
</p><p>
இதனால், சட்டப்பூர்வமான தங்க இறக்குமதியை ஊக்குவிக்கும் வகையிலும், கடத்தலை கட்டுப்படுத்தும் வகையிலும் இறக்குமதி வரியை மீண்டும் குறைக்க வேண்டும் என நகைத் தொழில் துறையினர் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
</p><p>
இந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, தங்கத்தின் இறக்குமதி வரியை தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து மீண்டும் 6 சதவீதமாகக் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. </p><p>அவ்வாறு வரி குறைக்கப்பட்டால், தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca8467d4-7026-4a23-904b-661f6c698af3/26-6a93ed0b80ff4.webp' /></p><p></p><p>

மேலும், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளில் வெள்ளி முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவதால், வெள்ளி மீதான இறக்குமதி வரியையும் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

தங்கத்தின் இறக்குமதி வரி மீண்டும் 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டால், அதன் தாக்கம் சந்தை விலையிலும் பிரதிபலிக்கலாம். இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் ரூ.10,000 வரை குறைய வாய்ப்புள்ளதாக சில நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e9bc480-b53d-474d-a723-184e8de1c6d4/26-6a93ed0c31725.webp' /></p><p> </p>மேலும், மின்னணு சாதனத் தயாரிப்புகளுக்கு வெள்ளி முக்கியத் தேவையாக உள்ளதால், வெள்ளி மீதான வரியும் குறைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.&nbsp;<p></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p></p><p><br></p><p><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T08:47:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பெயர்ச்சியால் பொற்காலம் தொடங்கும் 3 ராசிகள்: பணவரவும் வெற்றியும் அதிகரிக்கும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-transit-in-virgo-who-get-huge-luck-1788070073"></link>
            <id>https://manithan.com/article/mercury-transit-in-virgo-who-get-huge-luck-1788070073</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுபவர் புதன். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுபவர் புதன். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், குறுகிய காலத்திலேயே தனது நிலையை மாற்றக்கூடியவர். </p><p>தற்போது புதன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில், செப்டம்பர் 07 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான கன்னிக்குள் நுழைகிறார். சுமார் 1 ஆண்டுக்குப் பிறகு புதன் தனது சொந்த ராசிக்கு திரும்புவதால், பத்ர ராஜயோகம் உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dd2c9cd-e133-4907-b05e-aac6a7e9a48f/26-6a93d788a947d.webp' /></p><p> பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான இந்த யோகம், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.எனினும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தின் மூலம் நல்ல வெற்றி, புகழ், பணம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைப் பெறவுள்ளனர். </p><p>அப்படி செப்டம்பர் 07 ஆம் தேதி புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c11c4239-ec82-49b6-959e-83f54ac94eb5/26-6a93d7895d38f.webp' /></p><p></p><p>
மேஷ ராசியின் 6-வது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். </p><p>பணியில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. </p><p>மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும்.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dce3e29-905c-44cf-9ac7-17238435e8dc/26-6a93d78a0e33f.webp' /></p><p>
சிம்ம ராசியின் 2-வது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். </p><p>வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.</p><p> குறிப்பாக, புதனின் அருளால் புதிய தொழிலைத் தொடங்கும் முடிவையும் எடுக்கக்கூடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
</p><h2>தனுசு&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ffd4fea-bf66-4060-afe6-a7c7a30f4c06/26-6a93d78ab45a1.webp' /></p><p></p><p>தனுசு ராசியின் 10-வது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் நீண்ட காலமாக மேற்கொண்ட கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.</p><p>அதேசமயம், நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்கும்.</p><p> புதிய முதலீடுகளை மேற்கொண்டாலும் நல்ல வருமானம் கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த பணிகள் மீண்டும் தொடங்கி வெற்றிகரமாக நிறைவடையும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;.</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T07:11:24+00:00</updated>
        </entry>
    </feed>
