<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-03T20:33:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருஷ்ண ஜெயந்திக்கு என்ன செய்யணும் என்ன செய்ய கூடாதுன்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-to-do-and-not-to-do-on-krishna-janmashtami-1788450538"></link>
            <id>https://manithan.com/article/what-to-do-and-not-to-do-on-krishna-janmashtami-1788450538</id>
            <summary type="text">மும்மூர்த்திகளுள் ஒருவரான மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இதனை கோகுலாஷ்டமி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மும்மூர்த்திகளுள் ஒருவரான மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. </p><p>இதனை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றும் அழைப்பர்.

இந்து மத நம்பிக்கைகளின்படி, பகவான் கிருஷ்ணர் ஆவணி மாத கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d02a195c-a9f7-4c1a-af70-8dd835211215/26-6a99a0ba88189.webp' /></p><p></p><p> </p><p>அந்த வகையில், இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.

மதுரா நகர சிறைச்சாலையில் தேவகி–வசுதேவர் தம்பதிக்கு மகனாக கிருஷ்ணர் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன.</p><p> பொதுவாக அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் ஒரே நாளில் வராது. ஆனால் இந்த ஆண்டு இரண்டும் ஒரே நாளில் அமைவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு அழகு பார்ப்பது வழக்கம்.</p><p> </p><p>மேலும், கிருஷ்ணருக்கு பிடித்த அவல், வெண்ணெய் உள்ளிட்டவற்றைக் கொண்டு பலகாரங்கள் செய்து படைத்து பூஜை செய்து வழிபடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7939c54b-ed1a-4791-b795-81651863b076/26-6a99a0bb3e41e.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி நாளில் என்னென்ன செய்ய வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பலருக்கும் சரியாகத் தெரிவதில்லை. நாளைய தினம் கிருஷ்ண ஜெயந்தியன்று கடைப்பிடிக்க வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><p><b>வீட்டை சுத்தம் செய்யவும்
</b></p><p>கிருஷ்ண ஜெயந்திக்கு முன்னதாக வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை அழகாக அலங்கரித்துக் கொள்ளவும். வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வருவதால், வியாழக்கிழமையே வீட்டை பெருக்கி, துடைத்து சுத்தம் செய்து விடுவது நல்லது. இந்த தினத்தில் வீட்டை சுத்தம் செய்வது கூடாது.&nbsp;</p><p><b>
கிருஷ்ணரின் பாதங்களை வரையவும்</b></p><p>
கிருஷ்ண ஜெயந்தியின் முக்கிய வழக்கங்களில் ஒன்று, குட்டி கிருஷ்ணர் வீட்டிற்குள் வருவது போல் பாதங்களை வரைவதாகும். பச்சரிசி மாவை நீரில் கரைத்து, வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணரின் பாதங்களை வரையலாம். இந்த தினத்தில் பூஜை அறையை அலங்கரிக்காமல் இருப்பது அசுபம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0feab5e6-80e6-48c3-84e6-842eb3f2978d/26-6a99a0bbea1f5.webp' /></p><p><b>
கிருஷ்ணரின் படங்கள் அல்லது சிலைகளை அலங்கரிக்கவும்
</b></p><p>வீட்டில் உள்ள கிருஷ்ணரின் படங்கள் அல்லது சிலைகளை பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கலாம்.கிருஷ்ணருக்கு பிடித்ததாகக் கருதப்படும் பால் பொருட்களைக் கொண்டு பலகாரங்கள் செய்து படைத்து, சிறப்பு பூஜை செய்து வழிபடலாம்.நேரம் இல்லையெனில், வெண்ணெய், அவல் மற்றும் வெல்லம் ஆகியவற்றை படைத்து வழிபடலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3801cf26-c7e9-4c98-a2b2-1460f5313e6e/26-6a99a0bc9da4a.webp' /></p><p></p><p><b>
எப்போது பூஜை செய்ய வேண்டும்?</b></p><p>
கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாகக் கருதப்படுவதால், வடஇந்தியாவில் நள்ளிரவில் பூஜை செய்வது வழக்கம். தமிழ்நாட்டில் பொதுவாக மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு விளக்கேற்றி, பிரசாதங்களைப் படைத்து கிருஷ்ணரை மனதார வழிபடுவது சகல செல்வ செழிப்பையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T16:31:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசி பெண்கள் முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம்! உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiacs-women-cant-forget-their-ex-boyfriend-1788446792"></link>
            <id>https://manithan.com/article/which-zodiacs-women-cant-forget-their-ex-boyfriend-1788446792</id>
            <summary type="text">பொதுவாகவே அனைவரின் வாழ்க்கையிலும் காதல் என்பது மறுக்க முடியாத, ஆழமான மற்றும் வலிமையான உணர்வாகும். காதல் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, நம்பிக்கை, எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே அனைவரின் வாழ்க்கையிலும் காதல் என்பது மறுக்க முடியாத, ஆழமான மற்றும் வலிமையான உணர்வாகும். காதல் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற பல அழகான உணர்வுகளை ஏற்படுத்தக்கூடியது.</p><p> ஆனால், எல்லா காதல் உறவுகளும் இறுதியில் வெற்றிகரமாகத் திருமணம் அல்லது நிரந்தரமான உறவில் முடிவதில்லை. சில காதல்கள் எதிர்பாராத காரணங்களால் தோல்வியடைந்து, பிரிவில் முடிவடைகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e842fbc6-dba8-4680-9365-f9dae4a2feb0/26-6a999324689d4.webp' /></p><p>
எவ்வளவு ஆழமான மற்றும் வலிமையான காதலாக இருந்தாலும், ஒரு உறவு முடிவடைந்த பிறகு அதிலேயே சிக்கிக்கொண்டு வாழ்க்கையைத் தேக்கி வைப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. </p><p>ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களுடைய கடந்த கால காதல் மற்றும் முன்னாள் துணையின் நினைவுகளை எளிதில் விட்டுவிட முடியாதவர்களாக இருப்பார்களாம்.&nbsp;</p><p>மற்றவர்களுடன் ஒப்பிடும்போது சில ராசிப் பெண்கள் தங்களுடைய முன்னாள் காதல் உறவுகளை மறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். </p><p>அப்படி தங்களுடைய முன்னாள் காதலையும் கடந்த கால உறவுகளையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாமல் வாழ்க்கை முழுவதும் நினைவுகளை சுமந்தப்படி வாழும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/808667cf-e641-4c9c-bc05-e51993c8c92e/26-6a9993251a20a.webp' /></p><h2>
</h2><p>கடக ராசிப் பெண்கள் உணர்ச்சிகளின் அதிபதியான சந்திரனால் ஆளப்படுவதால் இவர்களின் காதல் மிகவும் உண்மையானதாகவும் ஆழமானதாகவும் இருக்கும்.&nbsp;</p><p>அவர்களின் காதல் தோல்வியில் முடிந்தால் அவர்களின் இதயம் அதிலிருந்து மீண்டு வர அதிக காலம் எடுக்கும்.அவர்களின் நினைவுகள் பெரும்பாலும் பழைய காதலலை சுற்றியே இருக்கும்.&nbsp;</p><p>இவர்களி்ன் நிலையை சுற்றியே இருக்கும். அதை சுற்றியே இருக்கும், மேலும் அவர்கள் கடந்த காலத் தருணங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கலாம். </p><h2>விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69b40757-c01f-45d4-ad89-3036fb9a2a2d/26-6a999325c0091.webp' /></p><p></p><p>
விருச்சிக ராசிப் பெண்கள் தீவிரமானவர்கள் மற்றும் தீவிர ஆர்வம் கொண்ட பெண்களாக அறியப்படுகின்றார்கள். அவர்கள் எந்தவொரு விஷயத்தையும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்இ</p><p>குறிப்பாக கடந்த கால நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைத்து கஷ்டப்படுவார்கள். குறிப்பான முன்னாள் காதலனின் நினைவுகுள் இவர்களை பாடாய் படுத்தும்.&nbsp;</p><p>அவர்கள் நம்பிக்கைக்கும் உறவுக்கும் அதிக மதிப்பு கொடுப்பதால், ஒருவர் அவர்களை விட்டுப் பிரிந்து செல்லும்போது அவர்கள் அதை துரோகமாகக் கருதுவார்கள். அதனால் மறப்பது மிகுந்த வலியை கொடுக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dd893f9-2a02-4e71-b21c-43fd59d0de24/26-6a99932677030.webp' /></p><p></p><p>
ரிஷப ராசிப் பெண்கள் தங்கள் காதல் உறவுகளில் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் முக்கிய விடயமாக கருதுவார்கள்.&nbsp;</p><p>மாற்றங்களை விரும்பாத இவர்களுக்கு, உறவு முறிவு என்பது மிகுந்த மன உளைச்சலையும் மறக்கவே முடியாத வலியையும் கொடுக்கும்.&nbsp;</p><p> இழப்பை ஏற்றுக்கொள்வது இவர்களுக்குக் கடினம் என்பதால், அந்த உறவு முறிந்த பிறகும் மீண்டும் இணையக்கூடும் என்ற நம்பிக்கையில் காலத்தை கடக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><p><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><b><br></b></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p><br><p><br></p><br><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T15:33:12+00:00</updated>
        </entry>
    </feed>
