<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-26T13:56:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடி உதிர்வை தடுக்க உதவும் சூறை மீன்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/health-benefits-of-eating-soorai-fish-in-tamil-1785049453"></link>
            <id>https://manithan.com/article/health-benefits-of-eating-soorai-fish-in-tamil-1785049453</id>
            <summary type="text">மீன் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் பி1...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீன் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
</p><p>
மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் பி12 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
</p><p>
அந்தவகையில், குறைந்த விலையில் கிடைக்கும் சூரை மீன் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது.
</p><p>
இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் சூரை மீன்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a2b2dc-97e7-4ec3-9063-619f6736dfdc/26-6a65b2049a45f.webp' /></p><p>சூரை மீனில் அதிகளவு புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12, நியாசின், செலினியம், வைட்டமின் பி6 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.&nbsp;</p><p>அதாவது, 85 கிராம் சூரை மீனில் சுமார் 21 கிராம் புரதம் இருப்பதாக கூறப்படுகிறது.
</p><p>
சூரை மீனில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. </p><p>

மேலும், நியாசின் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் முடி வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8bc7b22-ea65-4b34-8758-7cad7b01cc6f/26-6a65b2058300f.webp' /></p><p>இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவக்கூடும் என்பதால் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.</p><p>இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கண் ஆரோக்கியத்திற்கும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவக்கூடும் என கூறப்படுகிறது.
</p><p>
வஞ்சிரம் போன்ற விலை உயர்ந்த மீன்களுடன் ஒப்பிடும்போது, சூரை மீன் குறைந்த விலையில் கிடைக்கிறது.</p>]]></content>
            <updated>2026-07-26T13:23:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோதனைகளை சாதனைகளாக மாற்றும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/zodiacs-who-born-with-healing-power-1785059384"></link>
            <id>https://manithan.com/article/zodiacs-who-born-with-healing-power-1785059384</id>
            <summary type="text">மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இயல்பானவை. ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் சவால்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.ஆன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இயல்பானவை. ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் சவால்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.ஆனால், அந்த சூழ்நிலைகளிலும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் முன்னேறுபவர்களே வெற்றியை அடைகிறார்கள்.</p><p>ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் இந்த 3 ராசிகளில் பிறந்தவர்கள் சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் தங்களின் இலக்கில் குறியாக இருப்ந்து பழி சொன்னவர்கள் முன்னிலையிலும், அவமானப்படுத்தியவர்கள் மத்தியிலும் நிச்சம் சாதித்து காட்டுவார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c55bda63-ee5c-46a8-8aae-fbb0b24bbc02/26-6a65ddd6cfa59.webp' /></p><p>அப்படி பிறப்பிலே அதீத தன்னம்பிக்கையும், மன உறுதியும் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c687fe65-81ec-4e93-bc9f-0db360ab8374/26-6a65ddd77f999.webp' /></p><p>மகர ராசியில் பிறந்தவர்கள் ஒழுக்கத்தின் கிரகமான சனிபகவானால் ஆளப்படுவதால், இவர்களின் வாழ்வில் நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.</p><p> 

இந்த ராசியினர் தங்களுக்கு வலிகளை கொடுத்தவர்களுக்கும் துரோகம் செய்தவர்களுக்கு தங்களின் வெற்றியால் பதில் சொல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
</p><p>
இவர்களை சுற்றி இருக்கும் அனைவரும் இவர்களின் வளர்ச்சியை தடுக்க முயன்றாலும் தனிஒருவராக நின்று வாழ்வில் சாதித்துகாட்டு தைரியம் இவரை்களுக்கு இயல்பிலேயே இருக்கும்.&nbsp;</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c47b2e9e-2a98-4b21-b573-b2dbaa2608e6/26-6a65ddd82f9e9.webp' /></p><p>ரிஷப ராசியில் பிறந்தவர்கள்&nbsp; எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் தங்களின் தன்னம்பிக்கையை இழக்கவே மாட்டார்கள். </p><p>இவர்கள் வாழ்வில் அழுத்தம் என்பது புதியது அல்ல. இவர்கள் வலிகளை சுமந்துககொண்டே வாழ்வில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.&nbsp;</p><p>இவர்களை அவமானப்படுத்தினாலும் கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் இருந்து தங்களின் வெற்றியால் பதில் சொல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தேவையற்ற விவாதங்களில்&nbsp; இருந்து அமைதியாக விலகிவிடுவார்கள்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43bfbf4a-2075-4947-8ffb-7253d4c4f448/26-6a65ddd8d831f.webp' /></p><p></p><p>கடக ராசியினரிடம், இயல்பிலேயே&nbsp; அசாத்திய தைரியம் இருக்கும். 

இவர்கள் தங்கள் சுறுசுறுப்பான ஆற்றல் மற்றும் அச்சமற்ற மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
</p><p>
இவர்களுக்கு வலிகளை கொடுத்து வளர்ச்சியை தடுப்பது மிகவும் கடினமாக காரியமாக இருக்கும். இவர்கள் தங்களின் வலிகளை சாதனைகளாக மாற்றும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்.&nbsp;</p><p>இவர்களை மனதளவில் நொருக்கினாலும், அதனை தாங்களாகவே சரிப்படுத்திக்கொண்டு தங்களின் வெற்றியால், அவதூறு பேசியவர்கள் முகத்தில் கரியை பூசுவார்கள். இவர்களை&nbsp; தோற்கடிப்பது அசாத்தியம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T11:31:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆந்திரா பாணியில் காரசாரமான பச்சை மிளகாய் சிக்கன்... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/andhra-style-spicy-chilly-chicken-recipe-1785054944"></link>
            <id>https://manithan.com/article/andhra-style-spicy-chilly-chicken-recipe-1785054944</id>
            <summary type="text">பொதுவாகவே சிக்கன் எந்த விதமான முறையில் சமைத்தாலும், அதன் தனித்துவமான சுவை காரணமாக அசைவ உணவு பிரியர்களின் மனதில் எப்போதும் தனி இடத்தைப் பெற்றுள்ளது. வற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே சிக்கன் எந்த விதமான முறையில் சமைத்தாலும், அதன் தனித்துவமான சுவை காரணமாக அசைவ உணவு பிரியர்களின் மனதில் எப்போதும் தனி இடத்தைப் பெற்றுள்ளது. </p><p>வறுவல், குழம்பு, கிரேவி என பல்வேறு வகைகளில் சமைக்கப்படும் சிக்கன், ஒவ்வொரு முறையிலும் ஒரு புதிய சுவை அனுபவத்தை தரக்கூடியது. அதனால் தான் பெரும்பாலானோரின் விருப்பமான உணவுப் பட்டியலில் சிக்கன் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bc9d077-5f8e-4468-90d3-d3dd7ec3bd74/26-6a65c9d76f0c3.webp' /></p><p>

குறிப்பாக சிக்கனை காரசாரமான மசாலாக்களுடன் சமைக்கும்போது அதன் சுவையும் மணமும் மேலும் அதிகரித்து, உணவை இன்னும் சுவையாக மாற்றுகிறது. காரம் மற்றும் மசாலா கலந்த உணவுகளுக்கு புகழ்பெற்ற இடம் என்றால் அது ஆந்திரா தான்.</p><p>அந்தவகையில்,&nbsp; ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கனை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் எப்படி செய்வதென் இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8059cd45-07a9-4e9f-976d-091e95f488f2/26-6a65c9d82282e.webp' /></p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">தேவையானப் பொருட்கள்</span></h2><p>சிக்கன் - அரை கிலோ </p><p>பச்சை மிளகாய் - 20 (அரைத்தது) </p><p>நெய் - 2 தே.கரண்டி&nbsp;</p><p> எண்ணெய் - 1 தே.கரண்டி </p><p>இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2&nbsp;</p><p>மஞ்சள் தூள் - அரை தே.கரண்டி </p><p> தண்ணீர் - அரை கப்&nbsp;</p><p> சோயா சாஸ் - அரை தே.கரண்டி </p><p> வினிகர் - 1 தே.கரண்டி </p><p> சோள மாவு - 1 தே.கரண்டி</p><p> உப்பு - தேவையான அளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1352eb4d-a4a7-4d50-831c-04bd2274dd10/26-6a65c9d8cace7.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">செய்முறை</span></h2><p>முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும்,&nbsp; பச்சை மிளகாய் விழுது சேர்த்து சுமார் 3 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.&nbsp;</p><p>அதனையடுத்து நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் சிக்கனைச் சேர்த்து அடிக்கடி கிளறிவிட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.&nbsp;</p><p>பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இரண்டு நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e430ee8-bd4e-4e64-8f35-0350aad91f67/26-6a65c9d979e5f.webp' /></p><p></p><p>அதன் பின்பு தேவையான அளவு&nbsp; தண்ணீர் சேர்த்து, பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் நன்றான வேகவிட வேண்டும்.&nbsp;</p><p>பின்னர் சோயா சாஸ், வினிகர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.</p><p> </p><p>அதனையடுத்து சோளமாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி அதை சிக்கனில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.&nbsp;</p><p>மிதமான தீயில் வைத்து தண்ணீர் வற்றி கெட்டியாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.</p><p>பின்னர் நன்றாக வேக வைத்து சிக்கனை இறக்கினால் அவ்வளவு தான் ஆந்திரா பாணியில் சில்லி சிக்கன் தயார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T09:28:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன ராசியில் சனி வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசியிரை பிரச்சினைகள் வாட்டியெடுக்கப்போகுது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/saturns-july-2026-transit-who-get-extreme-bad-luck-1785045679"></link>
            <id>https://manithan.com/article/saturns-july-2026-transit-who-get-extreme-bad-luck-1785045679</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் வலிமைமிக்கதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான கிரகமாகக் கருதப்படுகிறார். சனியின் ஒவ்வொரு சஞ்சாரமும் மனிதர்களின் வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் வலிமைமிக்கதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான கிரகமாகக் கருதப்படுகிறார். </p><p>சனியின் ஒவ்வொரு சஞ்சாரமும் மனிதர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக, சனிபகவான் வக்ர சஞ்சாரம் மேற்கொள்ளும் காலம், சுயபரிசோதனை மற்றும் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கியமான காலகட்டமாக பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1db9f082-377b-47a9-a142-8aeed836f473/26-6a65a9dd5bd58.webp' /></p><p></p><p>அந்த வகையில், 2026 ஜூலை 29 அன்று சனிபகவான் மீன ராசியில் வக்ர சஞ்சாரம் அடைகிறார். இந்த காலகட்டம் கடந்த கால செயல்கள், நிறைவேற்றப்படாத பொறுப்புகள், கடமைகள், உடல்நல பழக்கங்கள் மற்றும் குடும்ப உறவுகள் குறித்து சிந்தித்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய காலகட்டமாகவே அமையும்.</p><p>&nbsp;சனி வக்ர பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தினாலும், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், நிதிநிலை என அனைத்திலும் பாரியளவில் சவால்களை சந்திக்கப்போகும் ராசியிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54ff5641-8642-49c7-a7d4-ae6379d286f6/26-6a65a9de0d82f.webp' /></p><p> கும்ப ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் கடைசி கட்டத்தில் உள்ளனர். இந்த காலத்தில் பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. </p><p>குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் எழலாம் என்பதால் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுப்படாமல் இருப்பது நல்லது. பொறுமையுடன் அணுகினால் தீர்வு காணலாம். </p><p>தொழில் மற்றும் வியாபாரத்தில் சில தடைகள் வரக்கூடும் என்பதால் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.புதிய முதலீடுகளில் கூடுதல் கவனட் தேவை. இந்த காலகட்டத்தில் புதிய முயற்ச்சிகளை தவிர்ப்பதே சிறப்பு.&nbsp;</p><h2>

மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77f75754-81d3-4f87-b4ea-d969bf16dea2/26-6a65a9decfea6.webp' /></p><p> மீன ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் இரண்டாவது கட்டத்தில் உள்ளனர். இந்த காலம் மன அழுத்தம், தன்னம்பிக்கை குறைவு மற்றும் உடல்நல கவனம் தேவைப்படும் காலமாக இருக்கலாம்.</p><p> கடந்த கால தவறுகளை சரிசெய்வது நல்லது. திருமண உறவுகள் மற்றும் குடும்ப உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க, தெளிவான பேச்சும் பொறுமையும் அவசியம்.</p><p>தொழில் விடயத்தில் பாரிய சிக்கல்களையும் நிதி இழப்புகளையும் சந்திக்க நேரிடலாம். பணத்தை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.&nbsp;</p><h2>

மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adc3fe90-6233-478e-a653-7cde2260bfe4/26-6a65a9df99a39.webp' /></p><p></p><p>மேஷ ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் முதல் கட்டத்தில் உள்ளனர். இந்த காலத்தில் அதிக செலவுகள், மன அழுத்தம் மற்றும் தனிமை உணர்வு ஏற்படலாம்.அவசர முடிவுகள் மற்றும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும்.</p><p>வேலைப் பளு அதிகரிக்கலாம் என்பதால் மன அமைதியை காக்க வேண்டும். நம்பிக்கையானவர்களுடன் மட்டுமே தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது நல்லது.</p><p>இந்த காலகட்டத்தில், புதிய சொத்துக்கள் வாங்குவது அல்லது புதிய முதலீடுகளை மேற்கொள்வது என்பவற்றை தவிர்த்துக்கொள்வது சிறப்பு.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T08:49:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழகு குறித்த கேள்விக்கு தெறி பதில் கொடுத்த நடிகை ராஷ்மிகா! குவியும் பாராட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/rashmika-mandanna-talk-about-real-beauty-1785050295"></link>
            <id>https://manithan.com/article/rashmika-mandanna-talk-about-real-beauty-1785050295</id>
            <summary type="text">தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்திய பேட்டியொன்றில் அழகு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதில், ரசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்திய பேட்டியொன்றில் அழகு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுள்ளதுடன் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.&nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">நடிகை ராஷ்மிகா</span></h2><p>

ரசிகர்களால் நேஷனல் கர்ஷ் என கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. 'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6baf6ecd-ff7b-4c99-8c5e-46b84fa5240f/26-6a65ba2b8c3c1.webp' /></p><p></p><p>
</p><p>
தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.</p><p>திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2316af0-115f-44b9-9111-d440af99a85b/26-6a65ba2c380be.webp' /></p><p>நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள்.</p><p>அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் சமீபத்தில் உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/251695a3-86e0-4b40-8688-448963f38688/26-6a65ba2cdac64.webp' /></p><p></p><p>திருமணத்தின் பின்னரும் ராஷ்மிகா சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றி அழகு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு&nbsp; அவர் கருத்துத் தெரிவிக்கையில்,</p><p> "உள்ளம் அழகானால் உடலும் அழகாகும். நாம் விதவிதமான ஆடைகளையோ அல்லது அழகு சாதனப் பொருட்களையோ பயன்படுத்தினாலும், நமது ஆழ்மனது தூய்மையாக இருந்தால் மட்டுமே நாம் உண்மையாக அழகாகத் தெரிவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adfea807-782e-43a4-ac43-9468f8f994a5/26-6a65ba2d86f99.webp' /></p><p>
எனவே, முடிந்தவரை மற்றவர்களுக்கு நல்லது செய்து வாழ்வோம். அதுவே நமது காலத்திற்குப் பிறகும் நம்மைப் பற்றிப் பேச வைக்கும்."என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.குறித்த கருத்து தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T08:27:16+00:00</updated>
        </entry>
    </feed>
