<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-03T03:55:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டன் போன் பயன்படுத்தும் ஜனநாயகன் இயக்குநர் ஹெச்.வினோத்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/reason-why-h-vinoth-only-uses-keypad-mobile-1785502193"></link>
            <id>https://manithan.com/article/reason-why-h-vinoth-only-uses-keypad-mobile-1785502193</id>
            <summary type="text">இயக்குநர் ஹெச்.வினோத் தான் பட்டன் போன் பயன்படுத்துவதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். என்ன காரணம் தெரியுமா?விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான ஜனநாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் ஹெச்.வினோத் தான் பட்டன் போன் பயன்படுத்துவதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.</p><p> </p><h2>என்ன காரணம் தெரியுமா?</h2><p>விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான ஜனநாயகன் படத்தை இயக்கிய ஹெச்.வினோத், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பல்வேறு செய்தி சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.
</p><p>
அந்த பேட்டியில், கதை எழுதும்போது தனிமையான இடங்களுக்கு சென்று ஸ்மார்ட்போனை பயன்படுத்த மாட்டீர்களா என்று கேட்கப்பட்டது.</p><p>

மேலும், சிலருக்கு தொழில் காரணமாக ஸ்மார்ட்போன் அவசியம். உதாரணமாக, ஜி-பே போன்ற வசதிகளை பயன்படுத்த வேண்டியவர்களுக்கு அது தேவை. ஆனால் எனக்கு அப்படி இல்லை. அதனால் என்னால் ஸ்மார்ட்போன் இல்லாமலும் இருக்க முடியும் என்று கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4237a39e-f30e-45bd-9ad3-e0c7be94907b/26-6a6c9a28c353b.webp' /></p><p>இன்று ஒரு ஏழை மனிதருக்குக் கூட வேலைக்காக ஸ்மார்ட்போன் தேவைப்படுகிறது. 

எனவே ஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நான் பெருமையாக நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், ஸ்மார்ட்போன் இல்லாமல் இருந்தால் என் நேரத்தை சேமிக்க முடிகிறது. போன் இருந்தால் தெரியாமலேயே ஏதாவது பார்த்துக்கொண்டே நேரம் செல்கிறது. நேரத்தின் மதிப்பு வயதாகும்போதுதான் நன்றாக புரிகிறது என்று ஹெச்.வினோத் கூறினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kQX9tb129Ss" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-03T03:43:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி வெள்ளிக்கிழமைகள்.., எந்த வெள்ளிக்கிழமை எந்த அம்மனை வழிபட வேண்டும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-amman-form-to-worship-on-each-aadi-velli-1785496507"></link>
            <id>https://manithan.com/article/which-amman-form-to-worship-on-each-aadi-velli-1785496507</id>
            <summary type="text">ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. 

இந்த மாதத்தில் அம்மனின் சக்தி இரு மடங்காக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

ஆடி மாதத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. </p><p>

இந்த மாதத்தில் அம்மனின் சக்தி இரு மடங்காக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. </p><p>

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அம்மன் வடிவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.&nbsp;</p><h2>ஆடி முதல் வெள்ளி- சொர்ணாம்பிகை</h2><p>

முதல் ஆடி வெள்ளிக்கிழமை சொர்ணாம்பிகை அம்மனுக்கு உகந்த நாள். இந்த நாளில் அம்மனை வழிபட்டால் வீட்டில் செல்வ வளம் பெருகும். கடன் பிரச்சனைகள் குறையும். தங்கம் சேர வேண்டும், அடமானத்தில் உள்ள நகைகளை மீட்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த அம்மனை வழிபடலாம்.
</p><h2>
ஆடி இரண்டாம் வெள்ளி- அங்காளம்மன்
</h2><p>
இரண்டாம் ஆடி வெள்ளிக்கிழமை அங்காளம்மனுக்கு உகந்தது. இந்த நாளில் வழிபட்டால் புத்திக்கூர்மை, தைரியம் மற்றும் மனவலிமை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலும் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c34293a-7bee-495f-a4f0-36f0af601fa6/26-6a6c8439b2f03.webp' /></p><p>
</p><h2>
ஆடி மூன்றாம் வெள்ளி- காளிகாம்பாள்
</h2><p>
மூன்றாம் ஆடி வெள்ளிக்கிழமை காளிகாம்பாளை வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. இந்த வழிபாடு ஆரோக்கியம், தைரியம் மற்றும் வெற்றியை வழங்கும் என்று கூறப்படுகிறது. செல்வ வளமும் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
</p><h2>
ஆடி நான்காம் வெள்ளி- காமாட்சி அம்மன்
</h2><p>
நான்காம் ஆடி வெள்ளிக்கிழமை காமாட்சி அம்மனை வழிபட ஏற்ற நாள். இந்த நாளில் வழிபட்டால் தீய சக்திகள் விலகும். திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
</p><h2>
ஆடி ஐந்தாம் வெள்ளி- மகாலட்சுமி, பராசக்தி
</h2><p>
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமி, பராசக்தி மற்றும் குலதெய்வத்துடன் தொடர்புடைய பெண் தெய்வங்களை வழிபட ஏற்ற நாளாகும். மாலையில் ஐந்து முக விளக்கு ஏற்றி வழிபட்டால் செல்வம், ஐஸ்வர்யம் பெருகும் என்று நம்பப்படுகிறது. பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் வீட்டில் மகிழ்ச்சியும் வளமும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-03T03:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[Fenugreek for Diabetes: சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஒரு விதை போதும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/fenugreek-seeds-and-its-benefits-for-diabetic-1785493895"></link>
            <id>https://manithan.com/article/fenugreek-seeds-and-its-benefits-for-diabetic-1785493895</id>
            <summary type="text">சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் நல்ல தேர்வாக இருக்கும் என்று சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.சர்க்கரை நோய்சர்க்கரை நோயாளிகளுக்கு மலச்சிக்கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் நல்ல தேர்வாக இருக்கும் என்று சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.</p><h2>சர்க்கரை நோய்</h2><p>சர்க்கரை நோயாளிகளுக்கு மலச்சிக்கல், எடை குறைப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம்.</p><p>இரத்த சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும் ஒரு நிலை ஆகும்.
</p><p>
இது இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் அதனை பயன்படுத்தாதபோது ஏற்படுகிறது.
</p><p>
உணவு கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.</p><p>

அந்தவகையில், சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் நல்ல தேர்வாக இருக்கும் என்று சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdc2383e-a59b-4fb8-8644-9a7173dea4f1/26-6a6c798a515c3.webp' /></p><h2>வெந்தயம்</h2><p>அதன்படி, ஒரு கைப்பிடி வெந்தயத்தை பொடியாக அரைத்து, தினமும் அரை டீஸ்பூன் அளவு தண்ணீரில் கலந்து குடிக்கலாம். </p><p>

இதை காலையில் வெறும் வயிற்றில் அல்லது மதிய உணவுக்கு முன் எடுத்துக்கொள்ளலாம். </p><p>

வெந்தயத்தில் உள்ள கரையும் நார்ச்சத்து இதய நலனுக்கு உதவுகிறது. கரையாத நார்ச்சத்து மலச்சிக்கலை குறைத்து, குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.
</p><p>தினமும் சுமார் 10 கிராம் வெந்தயம் எடுத்துக்கொள்வதால் நார்ச்சத்து கிடைத்து, மலச்சிக்கல் குறைய உதவும் என்று மருத்துவர் கூறுகிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb22694b-89c9-44fa-b3b4-aa856a340ce7/26-6a6c79899f18c.webp' /></p><p>நீண்ட காலமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், செரிமானத்தை கட்டுப்படுத்தும் நரம்புகள் பாதிக்கும். 

இதனால் குடல் இயக்கம் மெதுவாகி, மலம் கடினமாகி மலச்சிக்கல் ஏற்படுகிறது.
</p><p>
வெந்தயத்தில் உள்ள காலக்டோமேனன் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து, உணவு செரிமான வேகத்தை குறைத்து, ரத்தத்தில் சர்க்கரை திடீரென உயர்வதைத் தடுக்க உதவுகிறது.
</p><p>
வெந்தயத்தில் உள்ள சில அமினோ அமிலங்கள், இன்சுலின் சுரப்பை ஊக்குவித்து, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.</p><p> 

மேலும், இது கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்க உதவுகிறது.</p><p>

ஏற்கனவே நீரிழிவு மருந்துகள் அல்லது இன்சுலின் பயன்படுத்துபவர்கள், வெந்தயத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T03:32:24+00:00</updated>
        </entry>
    </feed>
