<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-10T17:00:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 சுக்கிரன் பெயர்ச்சி: அடுத்த 64 நாட்கள் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காலம் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/2026-sept-02-sukiran-peyarchi-astrology-prediction-1786354626"></link>
            <id>https://manithan.com/article/2026-sept-02-sukiran-peyarchi-astrology-prediction-1786354626</id>
            <summary type="text">ஜோதிட ரீதியாக சுக்கிர பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவர் தான் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி, ஆனந்தம் வழங்கக்கூடியவர். இவர் 30 நாட்களுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட ரீதியாக சுக்கிர பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவர் தான் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி, ஆனந்தம் வழங்கக்கூடியவர். இவர் 30 நாட்களுக்கு ஒரு முறை அவருடைய ராசியை மாற்றுகிறார். கட்டாயமாக இந்த மாற்றங்கள் 12 ராசிகளுக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கும். </p><p>அந்த வகையில், செப்டம்பர் இரண்டாம் தேதி துலாம் ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். சுக்கிர பகவானுடைய சொந்த ராசியின் பெயர்ச்சி மிக பெரிய அளவில் 12 ராசிகளுக்கும் ஒரு தாக்கத்தை கொடுக்கும். பொதுவாக, சுக்கிரன் 28 நாட்கள் ஒரு ராசிகள் இருப்பார். இந்த முறை 64 நாட்கள் இருக்க போகிறார். </p><p>அக்டோபர் மூன்றாம் தேதி சுக்கிரன் துலாம் ராசி, வக்கிரமடைகிறார். இதனால் 4 ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/666f17ad-d9db-4f45-bcb2-baf84b1f9200/26-6a799bc4271e2.webp' /></p><p></p><p>
</p><h3> மேஷம்:
</h3><p>
 இவர்களுக்கு இந்த காலகட்டம் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பணம் கைகளுக்கு வந்து சேர போகிறது. அதிர்ஷ்டம் மற்றும் செல்வாக்கு உயரும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். இழந்த சொத்துக்களை எல்லாம் மீட்டெடுப்பீர்கள். வேலையில் நிம்மதி உண்டாகும்.
</p><h3> மிதுனம்:
</h3><p> இவர்களுக்கு இந்த காலகட்டம் வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். சவாலான விஷயங்களையும் நீங்கள் எளிதாக செய்து வெற்றி பெறுவீர்கள். கௌரவ பதவிகள் உங்களைத் தேடி வரும்.</p><p></p><p>
</p><h3> தனுசு:
</h3><p> இவர்களுக்கு இந்த காலகட்டம் வீடுகளில் நற்செய்தி வந்து சேரும். ஒரு சிலருக்கு பொன் பொருள் நகை ஆடம்பரமான வாழ்க்கை அமையும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் மட்டும் கவனத்தோடு இருந்துவிட்டால் இவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும்.
</p><h3> கும்பம்:
</h3><p> இவர்களுக்கு இந்த காலகட்டம் மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். இருப்பினும் இவர்கள் பெயருக்கு சில கெடுதல் வர நேரலாம் என்பதால் முடிந்தவரை நட்பு வட்டாரங்களிலும் புதிய நட்புகளிலும் கவனமாக இருங்கள். பூர்வீக சொத்துக்கள் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T15:36:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் சூரிய உதயத்தை பார்க்கும் முதல் அழகான கிராமம் எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/dong-village-is-the-india-1st-place-to-see-sunrise-1786359062"></link>
            <id>https://manithan.com/article/dong-village-is-the-india-1st-place-to-see-sunrise-1786359062</id>
            <summary type="text">இந்த உலகத்தில் சூரியன் ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு நேரத்தில் உதிக்கிறது. அந்த வகையில், இந்தியாவில் சூரிய உதயத்தை பார்க்கும் முதல் அழகான கிராமம் எது தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த உலகத்தில் சூரியன் ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு நேரத்தில் உதிக்கிறது. அந்த வகையில், இந்தியாவில் சூரிய உதயத்தை பார்க்கும் முதல் அழகான கிராமம் எது தெரியுமா? அதைப்பற்றி பார்ப்போம்.</p><p> 
 இந்தியாவில் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கக் கூடிய அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் அஞ்சா மாவட்டத்தில் உள்ள டோங் என்ற சிறிய கிராமமே நாட்டில் தினசரி சூரிய உதயத்தை காணுகின்ற சிறப்பை பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/106b76e7-3d2b-4808-bf1a-b22798c889cf/26-6a79ad1c32654.webp' /></p><p></p><p> </p><p>இந்தியா சீனா மற்றும் மியான்மர் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் முக்கோண பகுதிக்கு அருகில் அமைந்துள்ள இந்த கிராமம் இயற்கை எழில் சூழ்ந்த மலைகளாலும் பள்ளத்தாக்குகளாலும் சூழப்பட்ட ஒரு மறைக்கப்பட்ட பொக்கிஷமாகவே உள்ளது. இங்கே கோடைகாலங்களில் காலை 4.30 மணிக்கு சூரிய பகவான் உதித்து விடுகிறார்.</p><p>கடல் மட்டத்திலிருந்து சுமார் 1240 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கிராமத்திற்கு செல்ல வாலாங் என்ற பகுதியிலிருந்து சிறிய மலைப்பயணம் நாம் மேற்கொள்ள வேண்டும். இந்த பயணத்தில் நாம் லோகித் மற்றும் சதி ஆகிய நதிகள் ஒன்று சேரக்கூடிய சங்கமத்தை பார்க்கலாம்.</p><p> 2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கின்படி இந்த கிராமத்தில் பழங்குடியினரை சேர்ந்த சுமார் 15 நபர்கள் மட்டுமே வசித்து வருவதாக தெரியவந்துள்ளது. இவர்களின் எளிய வாழ்க்கை முறையும் இவர்களுடைய அழகான புன்னகையும் சுற்றுலா செல்லக்கூடிய மக்களை வெகுவாக கவர்வது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/094132a0-b4bd-4700-9a25-67e5267fafd4/26-6a79ad1ce7b99.webp' /></p><p></p><p> </p><p>அடர்ந்த காடுகள் பணி சூழ்ந்த மலை சிகரங்கள் மற்றும் அமைதியான சூழல் நிறைந்த இந்த டோங்கு கிராமம் இயற்கை விரும்பக் கூடிய நபர்களுக்கும் புகைப்பட கலைஞர்களுக்கும் ஒரு சிறந்த இடமாகவே இருக்கும். </p><p>இங்கு பயணிகள் முதலில் தேஸு அல்லது திப்ருகர் அடைந்து பிறகு அங்கிருந்துதான் அவர்கள் டோங்க கிராமத்தை சென்றடைய முடியும். மேலும், அருணாச்சல பிரதேசத்திற்குள் நாம் செல்வதற்கு இந்திய குடிமக்களுக்கு உள்வரி அனுமதிச்சீட்டு கட்டாயம் வேண்டும். </p><p>அதிகளவு சுற்றுலாப் பயணிகளின் வருகை இங்கு இல்லாததால் இங்கு இயற்கை தூய்மையுடனும் அழகுடனும் விளங்குவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-10T11:34:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட மர்ம கோவில்.. 6 மணிக்கு மேல் இங்கு அனுமதியில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/madhyapradesh-kakanmath-temple-mystery-and-history-1786350773"></link>
            <id>https://manithan.com/article/madhyapradesh-kakanmath-temple-mystery-and-history-1786350773</id>
            <summary type="text">இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு சிவாலயம் பெய்களால் கட்டப்பட்டு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதை பற்றி இப்பொழுது நாம் விரிவாக பார்க்கலாம். நம்முடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு சிவாலயம் பெய்களால் கட்டப்பட்டு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதை பற்றி இப்பொழுது நாம் விரிவாக பார்க்கலாம். நம்முடைய இந்தியா கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமியாக பார்க்கப்படுகிறது. </p><p>அதாவது குக் கிராமங்கள் துவங்கி பெரிய பெரிய நகரங்கள் வரை சிறப்புமிக்க பல்வேறு ஆலயங்களும் அதற்கு பின்னால் மிகப்பெரிய அளவில் வரலாறுகளும் உள்ளது. அந்த வகையில், பல அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டுள்ளது தான் கக்கன்மாத் சிவன் கோவில்.இந்த கோவில் பேய்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. </p><p>கக்கன் மாத் என்கின்ற கோவில் மத்திய பிரதேசத்தில் குவாலியர் நகரத்திலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிகோனியாவில் அமைந்திருக்கும் கோவிலாகும். சிவபெருமானுக்காக கட்டப்பட்ட இந்த ஆலயம் மத்திய பிரதேசத்திற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க கூடிய ஒரு முக்கியமான ஆலயங்களில் ஒன்று.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1da38077-85c2-4db7-9461-122c4a019cad/26-6a798cb68a9db.webp' /></p><p></p><p> </p><p>இந்த கோயில் சுமார் 115 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலை புனித ஆலயம் என்று அழைப்பதை விட மர்ம கோவை என்று பலரும் கூறுகின்றனர். காரணம், அறிஞர்களே குழம்பும் வகையில் இந்த கோவிலில் சில விஷயங்கள் நடக்குமாம்.</p><p> பொதுவாக, எந்த கோவிலாக இருந்தாலும் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி அதில் இருக்கும் சந்துக்கள் பூசி தான் கட்டப்படும். ஆனால், இந்த கோவிலில் கற்களால் மட்டும் கட்டப்பட்டிருக்கிறது. இதில் சுண்ணாம்பு சிமெண்ட் என எதுவும் பயன்படுத்தவில்லை. </p><p>பலருக்கும் அது எப்படி கலவைகள் எதுவும் இல்லாமல் பெரும் கற்களால் ஆலயம் கட்டப்பட்டு இருக்கும் என்று கேள்விகள் குழப்பங்கள் வருகிறது. இதற்கான விடையை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். </p><p>அதாவது, எந்த பசையும் போட்டு கட்டப்படவில்லை என்றாலும் பல நூறு ஆண்டுகளைக் கடந்து பல வெள்ளம், புயல், காற்று, நிலநடுக்கம் எல்லாம் பார்த்து அருகில் இருக்கக்கூடிய கட்டிடங்கள் அழிந்தும் அவையெல்லாம் கடந்து இன்று கம்பீரமாக நிற்கக்கூடிய ஆலயமாக இது விளங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b06dd6b9-1f57-48d9-b199-8b7a25dc0683/26-6a798cb74148e.webp' /></p><p></p><p> </p><p>இந்த கோவிலை பற்றி பல்வேறு முக்கிய கதைகள் சொல்லப்படுகிறது. அந்த வகையில், 11 ஆம் நூற்றாண்டில் கச்சபகத&nbsp;வம்சத்தை சேர்ந்த மன்னன் கீர்த்திராஜாவின் மனைவி ககன்வதி, தீவிர சிவபக்தையாக இருந்துள்ளார். இவருடைய வேண்டுகோளின் படி பதினோராம் நூற்றாண்டில் இந்த பிரம்மாண்ட சிவன் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>இப்படி இருக்க, மறுபுறம் இந்த கோவிலை தனக்காக கட்ட சொல்லி பேய்களுக்கு சிவபெருமான் கட்டளை இட்டதாகவும் இவற்றை பூதங்கள் சேர்ந்து கட்டியதாகவும் இந்த பகுதி மக்களால் நம்பப்படுகிறது.</p><p> இதில் வரும் கதைகளின் அடிப்படையில் ஒரே இரவில் கட்டி முடிக்க வேண்டும் என்பதால் பேய்கள் இந்த கோவிலை அசுர பலம் கொண்டு கட்டியதாகவும், விடியற்காலை நேரங்களில் பேய்களுக்கு சக்தி குறைந்துவிடும் என்பதால் அவர்கள் அவைகள் அப்படியே கோவிலின் பணிகளை அரைகுறையாக விட்டுவிட்டு மறைந்து இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. </p><p>இந்த கோயில் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 6 மணிக்கு மூடப்படுகிறது. அதற்குமேல் கோவிலுக்குள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், இந்த ஆலயம் சுற்றி பார்ப்பதற்கு ஒரு மணி நேரமாவது தேவைப்படும் என்று சொல்கின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T11:30:57+00:00</updated>
        </entry>
    </feed>
