<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-22T03:23:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வக்ர நிலையிலிருந்து மீண்ட புதன்... பணம், பதவி என அதிர்ஷ்டம் பெறும் ராசி யார் யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-direct-big-changes-these-zodiac-sign-1784654021"></link>
            <id>https://manithan.com/article/mercury-direct-big-changes-these-zodiac-sign-1784654021</id>
            <summary type="text">வக்ர நிலையிலிருந்த புதன் நேர்கதியில் பயணிக்க தொடங்கியுள்ளதால், மிதுனம், கன்னி மற்றும் கும்ப ராசியினரின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்படுமாம்.நேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வக்ர நிலையிலிருந்த புதன் நேர்கதியில் பயணிக்க தொடங்கியுள்ளதால், மிதுனம், கன்னி மற்றும் கும்ப ராசியினரின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்படுமாம்.</p><h2>நேர்கதியில் புதன்</h2><p> ஜோதிடத்தில் புதன் கிரகமானது அறிவு, பேச்சுத் திறன், தொழில், வியாபாரம் இவற்றினை கட்டுப்படுத்துவதாக கருதப்படுகின்றார். கடந்த சில வாரங்களாக வக்ர நிலையிலிருந்த புதன் 2026ம் ஆண்டு மீண்டும் நேர்கதியில் பயணிக்க தொடங்கியுள்ளார்.</p><p>இதனால் சில ராசியினரின் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றது. குறிப்பாக மிதுனம், கன்னி மற்றும் கும்ப ராசியினருக்கு இந்த மாற்றம் பல புதிய வாய்ப்புகளையும், முன்னேற்றத்தினையும் அளிக்குமாம். ஆனாலும் எந்த முடிவையும் கவனமாக எடுப்பது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25259b3e-b608-4843-a32e-72b435828b55/26-6a602cb6861fd.webp' /></p><p></p><h2>மிதுனம்</h2><p>புதனின் ஆதிக்க ராசியாக இருக்கும் மிதுனமானது இந்த நிலையினால் பல நன்மையினை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகள் மீண்டும் வேமாக முடியும்.&nbsp;</p><p>தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரமும் கிடைக்கும். கருத்து வேறுபாடுகள் குடும்பத்தில் குறையும்.</p><p>புதிய முதலீடு குறித்து யோசிப்பீர்கள். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பெற்று முடிவெடுப்பது மிகவும் நல்லது. கல்வியில் மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f729d99-b3f0-411b-bd3b-5ed5d47dcb4d/26-6a602cb73560f.webp' /></p><h2>கன்னி
</h2><p>கன்னி ராசிக்கு புதனின் இந்த நிலையினால் பல சாதகமான பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பாத்திருந்த பதவி மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கும்.</p><p>வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதுடன், வெளிநாட்டு பயணம் அல்லது புதிய ஒப்பந்தங்கள் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியாக மாறும்.</p><p>ஆனாலும், பண விஷயங்களில் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் சிறிய கவனக்குறைவு கூட ஏற்பட வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad1eb467-d446-4715-9172-2e7268623def/26-6a602cb7d8fab.webp' /></p><h2>கும்பம்
</h2><p>கும்ப ராசியினருக்கு புதனின் இந்த மாற்றத்தால் புதிய மாற்றங்கள் ஏற்படுவதுடன், புதிய நண்பர்கள் மற்றும் தொழில் தொடர்புகள் உருவாகும்.</p><p>நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள், திட்டங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். சொத்து தொடர்பான விடயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.</p><p>பணவரவு அதிகரித்தாலும், தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியமாகும். குடும்பத்துடன் நேரத்தினை செலவு செய்வதால் உறவுகள் வலுப்படும்.</p><p>இவ்வாறு பலன்கள் காணப்பட்டாலும் எந்தவொரு முடிவையும் முழுமையாக ஜோதிடத்தினை நம்பி எடுக்கக்கூடாது. குறிப்பாக பணம் மற்றும் குடும்ப தொடர்பான முடிவுகளை அனுபவம் மற்றும் நடைமுறை சூழ்நிலையைக் கொண்டு தான் எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b542974-9ff7-4a6c-be5b-c14ab47ab81e/26-6a602cb88a990.webp' /></p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T02:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[செட்டிநாடு உருளைக்கிழங்கு அடை... மாலை நேரத்திற்கான அருமையான ஸ்நாக்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-prepare-tasy-healthy-urulaikilangu-adai-1784648156"></link>
            <id>https://manithan.com/article/how-to-prepare-tasy-healthy-urulaikilangu-adai-1784648156</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ்நாடு சுவையான உணவுகளுக்கு பெயர் பெற்றது. மதுரை, காரைக்குடி போன்ற இடங்கள் உணவுக்கு பிரசித்தி பெற்றவையாக இருந்தாலும், ஒவ்வொரு பிராந்தியத்திற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ்நாடு சுவையான உணவுகளுக்கு பெயர் பெற்றது. மதுரை, காரைக்குடி போன்ற இடங்கள் உணவுக்கு பிரசித்தி பெற்றவையாக இருந்தாலும், ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பிரசித்தி பெற்ற சில உணவுகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் செட்டிநாட்டின் பல புகழ்பெற்ற உணவுகளில் அடை தோசை மிகவும் பிரபலமானதாகும்.</p><p>தினமும் இட்லி, தோசை போன்ற உணவுகளையே சாப்பிட்டு சலித்துப் போனவர்களுக்கு இந்த உருளைக்கிழங்கு அடை வித்தியாசமானதாக சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். இந்த உருளைக்கிழங்கு அடையை காலை அல்லது இரவு உணவாகவும் சாப்பிடலாம் அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். இதில் கூடுதல் சிறப்பு இதற்கு சைடிஷ் எதுவுமே தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்.

</p><p>உங்களுக்கு செட்டிநாடு ஸ்பெஷல் உருளைக்கிழங்கு அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு உருளைக்கிழங்கு அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/046195db-ef03-4ba1-9176-f0068734df17/26-6a5f95005eebb.webp' /></p><h2>தேவையான பொருட்கள்</h2><p>அரிசி - 2 கப் <br>கடலைப்பருப்பு - 1 கப் <br>மசூர் பருப்பு - 1.5 கப் <br>உளுத்தம் பருப்பு <br>1/2 கப் - காய்ந்த மிளகாய்&nbsp;<br>&nbsp;2 - பச்சை மிளகாய்&nbsp;<br>&nbsp;2 - மிளகு - 1 ஸ்பூன்<br>மிளகுத்தூள் - 1 ஸ்பூன்<br>&nbsp;உப்பு - தேவையான அளவு <br>பெருங்காயம் - 2 சிட்டிகை <br>கறிவேப்பிலை - சிறிதளவு&nbsp;<br>&nbsp;எண்ணெய் - தேவையான அளவு<br>உருளைக்கிழங்கு - 2 (மெல்லியதாக நறுக்கியது)</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ddf06c-56a4-42f4-aae5-002f97feef9f/26-6a5f9501132c0.webp' /></p><h2>செய்முறை</h2><p>அரிசி, பருப்பு வகைகள் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாகக் கழுவி, 3-4 மணி நேரம் ஊறவைக்கவும்.

</p><p>ஊறியதும் அதனுடன் வர மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் மிளகு பிற பொருட்களுடன் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.&nbsp;</p><p> மாவு குறைந்தது 5-6 மணி நேரம் புளிக்கட்டும். பின்னர் இதில் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.&nbsp;</p><p> அடுப்பில் தோசைக்கல்லை வைத்துச் சூடாக்கவும். கல் சூடானதும் சிறிது எண்ணெய் தடவி, பாதியாக வெட்டிய வெங்காயத்தைக் கொண்டு தேய்க்கவும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/633e3479-2849-4e73-824c-7a7ca7954f80/26-6a5f9501b632f.webp' /></p><p> இப்போது நறுக்கிய உருளைக்கிழங்குத் துண்டுகளை மாவில் நனைத்து, தோசைக்கல்லில் வட்ட வடிவில் அடுக்கவும்.&nbsp;</p><p> உருளைக்கிழங்குத் துண்டுகளைச் சரியாகச் சீரமைத்து வைத்துவிட்டு, இடைவெளிகளை மாவு கொண்டு நிரப்பிச் சரியான வட்ட வடிவத்தை உருவாக்கவும்.</p><p> அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி, ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும்.ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் வேகவைக்கத் திருப்பிப் போடவும். மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.&nbsp;</p><p> இருபுறமும் வெந்ததும் இதை தட்டிற்கு மாற்றவும். இதே போல அடுத்தடுத்த உருளைக்கிழங்குகளை சுடவும். இதை காரமான சட்னியுடன் பரிமாறலாம் இல்லையெனில் அப்படியே சாப்பிடலாம்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></a><br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T01:05:16+00:00</updated>
        </entry>
    </feed>
