<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-12T11:48:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுரையீரலை தாக்கும் நிமோனியா! இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/pneumonia-in-tamil-1649573563"></link>
            <id>https://manithan.com/article/pneumonia-in-tamil-1649573563</id>
            <summary type="text">நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் கடுமையான தொற்று நோயாகும். இது ஒரு நுரையீரலையோ அல்லது இரு நுரையீரல்களையோ பாதிக்கலாம். நுரையீரலின் காற்றுப்பைகள் (அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் கடுமையான தொற்று நோயாகும். இது ஒரு நுரையீரலையோ அல்லது இரு நுரையீரல்களையோ பாதிக்கலாம்.</p><p> நுரையீரலின் காற்றுப்பைகள் (அல்வியோலி) திரவம் அல்லது சீழால் நிரம்புவதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவு குறையலாம்.

நிமோனியா வருவதற்கான காரணங்கள்
வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e8bfafd-6620-4156-8c6c-21b840341e7a/26-6a53701c3a1ed.webp' /></p><p>பாதிக்கப்பட்டவர் இருமுதல் அல்லது தும்முதல் மூலம் பரவும் கிருமிகள்.
அசுத்தமான சூழல் மற்றும் மாசுபட்ட பொருட்கள்.
வென்டிலேட்டர் சிகிச்சை பெறுபவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>முக்கிய அறிகுறிகள்
</h2><p>சுவாசிக்கும்போது அல்லது இருமும்போது மார்பு வலி</p><p>
சளியுடன் இருமல்
</p><p>காய்ச்சல் மற்றும் அதிக வியர்வை
</p><p>மூச்சுத்திணறல்
சோர்வு மற்றும் பசியின்மை</p><p>
குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e15639d-a43b-48ae-be1e-00f03ab85736/26-6a53701cde994.webp' /></p><p><b>யாருக்கு அதிக ஆபத்து?</b></p><p>2 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
65 வயதுக்கு மேற்பட்டவர்கள்
கீமோதெரபி சிகிச்சை பெறுபவர்கள்
நுரையீரல் நோய் உள்ளவர்கள்
நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் அல்லது நீண்டகால மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள்</p><p>
இவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று அறிகுறிகள் இருந்தால்கூட உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.</p><p>[W3JBDD ]</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">எப்படி கண்டறிவது?</span></p><p>
ரத்தப் பரிசோதனை
மார்பு எக்ஸ்-ரே
சளி மாதிரி பரிசோதனை
கடுமையான நிலைகளில் ப்ரோன்கோஸ்கோபி (Bronchoscopy) பரிசோதனை.</p><p><b>வீட்டில் செய்யக்கூடிய பராமரிப்பு
</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51245d3a-b8f6-4e37-9a70-ab670fae9a22/26-6a5371473844b.webp' /></p><p></p><p><b></b></p><p>
மருத்துவரின் சிகிச்சைக்கு துணையாக மட்டுமே பின்வரும் முறைகளைப் பயன்படுத்தலாம்:
</p><p>
தினமும் பூண்டு சாப்பிடடுவது நிவாரணம் கொடுக்கும்.</p><p>சூடான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம்.</p><p>
வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து பருகலாம்.
</p><p>கற்பூர எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் கலந்து நெஞ்சில் தடவலாம்.
</p><p>ஆப்பிள், கீரை, கேரட், பீட்ரூட் போன்ற சத்தான உணவுகளை தினசரி உணவில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T10:50:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Sunday Special: அட்டகாசமான ஆட்டுக் குடல் குழம்பு.. இப்படி செய்து பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-make-healthy-kudal-kulambu-recipe-1783843071"></link>
            <id>https://manithan.com/article/how-to-make-healthy-kudal-kulambu-recipe-1783843071</id>
            <summary type="text">இன்றைய ஸ்பெஷலாக ஆட்டுக்குடல் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.பொதுவாக வாரத்தின் இறுதி நாட்களில் அசைவ உணவுகள் தான் பெரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய ஸ்பெஷலாக ஆட்டுக்குடல் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p>பொதுவாக வாரத்தின் இறுதி நாட்களில் அசைவ உணவுகள் தான் பெரும்பாலான வீடுகளில் சமைப்பது வழக்கமாக இருக்கும். மட்டன், சிக்கன், மீன் வகைகள் என்று சமைத்தால் அசைவ பிரியர்களுக்கு கொண்டாட்டமாகவே இருக்கும்.</p><p>இந்நிலையல் இட்லி, சாதம் இவற்றிற்கு ஏற்ற வகையில் குடல் குழம்பு எ்வவாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e39f981c-3390-4eb2-94a0-2892bea04de6/26-6a534ba407245.webp' /></p><h2>தேவையான பொருட்கள்</h2><p>&nbsp;தண்ணீர் - 2 லிட்டர் <br>உப்பு - 2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;சுத்தம் செய்த ஆட்டு குடல் - 1 கிலோ </p><h4>வறுத்து அரைப்பதற்கு... </h4><p>&nbsp;எண்ணெய் - 2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;பட்டை - 2 துண்டு&nbsp;<br>&nbsp;கிராம்பு - 6&nbsp;<br>&nbsp;அன்னாசிப்பூ - 1&nbsp;<br>&nbsp;கல்பாசி - சிறிது <br>மிளகு - 2 டீஸ்பூன்<br>&nbsp;சோம்பு - 1 டீஸ்பூன்<br>&nbsp;சீரகம் - 1 டீஸ்பூன் <br>சின்ன வெங்காயம் - 8<br>கறிவேப்பிலை - சிறிது <br>துருவிய தேங்காய் - 1 கப் </p><h4>குழம்பு தாளிப்பதற்கு.. </h4><p>எண்ணெய் - 3 டீஸ்பூன் <br>கடுகு - 1 டீஸ்பூன் <br>சின்ன வெங்காயம் - 2 கப் (பொடியாக நறுக்கியது) <br>கறிவேப்பிலை - 1 கொத்து&nbsp;<br>&nbsp;பச்சை மிளகாய் - 2 <br>இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;தக்காளி - 2 (நறுக்கியது) <br>உப்பு - சுவைக்கேற்ப <br>குழம்பு மிளகாய் தூள் - 5 டேபிள் ஸ்பூன் <br>மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;அரைத்த தேங்காய் விழுது&nbsp;<br>&nbsp;தண்ணீர் - தேவையான அளவு&nbsp;<br>&nbsp;சுத்தம் செய்த குடல் <br>கொத்தமல்லி - சிறிது&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9ab12f1-accb-45b2-9c25-3f159d8cbca5/26-6a534ba4aa212.webp' /></p><h2>செய்முறை</h2><p>முதலில் ஆட்டுக்குடலை சுடுதண்ணீர் போட்டு நன்றாக சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.&nbsp;</p><p> </p><p>பாத்திரம் ஒன்றில் தண்ணீர் சேர்த்து அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, தண்ணீர் கொதித்தும் குடலை சேர்த்து அடுப்பினை அணைத்துவிடவும்.</p><p>10 நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டிவிட்டு, குடலை தனியாக எடுத்து வைக்கவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி, மிளகு, சோம்பு, சீரகம் சேர்த்து வதக்கவும்.</p><p>பின்பு நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, அடுப்பை அணைத்துவிட்டு அதில் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி குளிர வைக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca662ca-7646-4b37-96dc-76009230c335/26-6a534ba55a05a.webp' /><br></p><p>மிக்ஸியில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், கடுகு சேர்த்து தாளிக்கவும்.</p><p>வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.&nbsp;</p><p>பின்பு குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்த குடலையும் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் போட்டு வேகவிடவும்.&nbsp;</p><p>கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான குடல் குழம்பு தயார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T10:33:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல துயரங்களைத் தாங்கி இசையில் சாதித்தவர் ஜானகி – இளையராஜா வெளியிட்ட உருக்கமான இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/singer-janaki-death-ilaiyaraaja-mourns-video-viral-1783843442"></link>
            <id>https://manithan.com/article/singer-janaki-death-ilaiyaraaja-mourns-video-viral-1783843442</id>
            <summary type="text">புகழ்பெற்ற பாடகி ஜானகி அம்மாவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக இசையமைப்பாளர் இளையராஜா தனது இரங்கலை தெரிவித்து காணொளியொன்றை வெளியிட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>புகழ்பெற்ற பாடகி ஜானகி அம்மாவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக இசையமைப்பாளர் இளையராஜா தனது இரங்கலை தெரிவித்து காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் இளையராஜா உருக்கமாக பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f49408fd-e808-4831-97fc-4646fcfcf6c1/26-6a535ec40a7d8.webp' /></p><p></p><h2>இளையராஜாவின் உருக்கமான பதிவு&nbsp;</h2><p>
</p><p>
அதில் அவர், “மதிப்பிற்குரிய பாடகி ஜானகி அம்மா காலமான செய்தி மிகவும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியது. </p><p>தனது சொந்த வாழ்க்கையில் தாங்க முடியாத பல துயரங்களையும், வேதனையான நிகழ்வுகளையும் எதிர்கொண்டு அவர் வாழ்ந்தார் என்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், உலகின் பல தலைசிறந்த இசையமைப்பாளர்கள் மற்றும் கலை மேதைகளின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு துயரங்கள் நிறைந்திருந்ததாகக் கூறிய இளையராஜா, ஜானகி அம்மாவின் இசைத் திறமையைப் பாராட்டினார்.</p><p>

“ஒவ்வொரு பாடலிலும் தனது அபாரமான திறமையை அவர் நிரூபித்துள்ளார். எந்தப் பாடலாக இருந்தாலும் அதை சிறப்பாக வெளிப்படுத்துவதற்காக அவர் மிகவும் கடினமாக உழைப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9375762-cdc1-4f91-98cd-09fa911c9f43/26-6a535ec4b23aa.webp' /></p><p></p><p> நான் ஒரு பாடலை எப்படி சிறப்பாக உருவாக்க வேண்டும் என்று நினைத்து உழைப்பேனோ, அதே அளவுக்கு அதைவிட அதிக அர்ப்பணிப்புடன் பாடலை மெருகேற்றுவார். </p><p>அவரது உழைப்பு ஈடு இணையற்றது” என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.

பாடகி ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்றும், அவரது குரலும், இசைப் பங்களிப்பும் என்றும் நினைவுகூரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>

“அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என தனது இரங்கல் செய்தியில் இளையராஜா தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/HHG6pRVU3G">pic.twitter.com/HHG6pRVU3G</a></p>&mdash; Ilaiyaraaja (@ilaiyaraaja) <a href="https://x.com/ilaiyaraaja/status/2076164570369155555?ref_src=twsrc%5Etfw">July 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g">FOLLOW NOW</a></u></b><a>&nbsp;</a> &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T09:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/guruaditya-rajyog-after-12-years-who-get-huge-luck-1783840164"></link>
            <id>https://manithan.com/article/guruaditya-rajyog-after-12-years-who-get-huge-luck-1783840164</id>
            <summary type="text">ஜோதிடத்தின் படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுவதன் மூலம் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தின் படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுவதன் மூலம் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.&nbsp;</p><p>அந்தவகையில், நவகிரகங்களின் தலைவனாகக் கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசி மாறுவார். தேவர்களின் குருவான குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ராசி மாறுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55f7c95d-f4a9-4ab1-bc99-4e9206bdbc28/26-6a534700e6ed7.webp' /></p><p></p><p>தற்போது தனது உச்ச ராசியான கடகத்தில் பயணித்து வரும் குரு பகவானுடன், ஜூலை 16 அன்று சூரியனும் கடக ராசியில் இணைகிறார்.இந்த சேர்க்கையால் மங்களகரமான குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகி, ஆகஸ்ட் 17 வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும், சில ராசிக்காரர்கள் செல்வம், முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்களை அதிகமாக பெறவுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8a49e9a-fa06-47cb-a3a8-c0dedd43131f/26-6a5347019b10e.webp' /></p><h2>
</h2><p>
மேஷ ராசியின் 4-வது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் தாக்கத்தால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படப்போகின்றது.</p><p>திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால், நீண்ட நாட்களாக இருந்த பொருளாதார சிக்கல்கள் நீங்கி பணவரவு அதிகரிக்கும்.</p><p>
வேலை மற்றும் தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் நீண்ட தூர பயணங்கள் புதிய வாய்ப்புகளையும் நல்ல வருமானத்தையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.</p><p>அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைத்து, எடுத்த முயற்சிகளில் வெற்றி எளிதில் கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் தங்களின் கடின உழைப்பிற்கான அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெறுவார்கள்.

சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.&nbsp;</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9587dc20-8e08-40f0-80e7-0ca465a7a249/26-6a5347024b3aa.webp' /></p><p>
மிதுன ராசியின் 2-வது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது.</p><p>குறிப்பாக நிதி நிலைமை மேம்பட்டு, வருமானத்தை அதிகரிக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

எந்த ஒரு பணியையும் திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம் நல்ல வெற்றியை அடைய முடியும். </p><p>தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். மாணவர்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் கல்வி சார்ந்த முயற்சிகளில் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள்.சமூகத்தில் மதிப்பு, மரியாதை மற்றும் கௌரவம் உயரக்கூடும்.</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4824d49b-a726-4b04-bb5b-5abebb5df726/26-6a534702ef369.webp' /></p><p></p><h2>
</h2><p>
சிம்ம ராசியின் 12-வது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல புதிய அனுபவங்களும் மாற்றங்களும் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி, உறவுகளில் நல்லிணக்கம் அதிகரிக்கும்.</p><p>
நிதி நிலைமை வலுவடையக்கூடும். எதிர்பாராத வழிகளில் பணவரவு கிடைக்கும் வாய்ப்பும், நீண்ட நாட்களாக இருந்த கடன் அல்லது பொருளாதார சுமைகள் குறையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.</p><p>
வாழ்க்கைத் துணையுடனான உறவு மேலும் வலுப்பெறும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வமும் வாய்ப்புகளும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்த்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T08:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;இந்திய இசை உலகிற்கு பேரிழப்பு&quot; - எஸ். ஜானகிக்கு முதல்வர் விஜய் உருக்கமான அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijay-pay-heartfelt-tribute-to-s-janaki-1783835261"></link>
            <id>https://manithan.com/article/cm-vijay-pay-heartfelt-tribute-to-s-janaki-1783835261</id>
            <summary type="text">பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி, ஜூலை 11 அன்று மாலை 7.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். </p><p>அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e563f4f-babd-44db-8f55-139fe9f15790/26-6a532e3ae322d.webp' /></p><p>

இந்த நிலையில், முன்னாள் நடிகரும் தற்போதைய&nbsp; தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>முதலமைச்சர் விஜய் இரங்கல்&nbsp;</h2><p>
</p><p>
அதில், "இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.</p><p>

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d583318f-28c5-432f-83d8-99548c7683a8/26-6a532e3b94d4c.webp' /></p><p></p><p>தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்திய அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.

எஸ். ஜானகி அவர்களின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.</p><p>அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.<br><br>தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2075974677194064297?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T06:07:23+00:00</updated>
        </entry>
    </feed>
