<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-14T08:45:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[Fridgeல் சிவலிங்கம்: படையெடுக்கும் மக்கள் கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sivalinga-in-fridge-viral-news-1784018113"></link>
            <id>https://manithan.com/article/sivalinga-in-fridge-viral-news-1784018113</id>
            <summary type="text">ஆக்ராவில் உள்ள வீட்டொன்றில் இயற்கையாக தோன்றிய பனிக்கட்டி அமைப்பு சிவலிங்கம் போன்று இருப்பதாக கருதி அப்பகுதி மக்கள் வழிபடத் தொடங்கியுள்ளனர்.

அமர்நாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆக்ராவில் உள்ள வீட்டொன்றில் இயற்கையாக தோன்றிய பனிக்கட்டி அமைப்பு சிவலிங்கம் போன்று இருப்பதாக கருதி அப்பகுதி மக்கள் வழிபடத் தொடங்கியுள்ளனர்.
</p><p>
அமர்நாத் யாத்திரை நடைபெற்றும் வரும் வேளையில் இந்த சம்பவம் அதிக கவனம் பெற்றுள்ளது.
</p><h2>
குளிர்சாதன பெட்டியில் சிவலிங்கம்
</h2><p>
ஆக்ராவை சேர்ந்த குடும்பத்தினர் தங்களது குளிர்சாதனப்பெட்டியை திறந்த போது விசித்திரமான பனிக்கட்டி அமைப்பை பார்த்துள்ளனர்.
</p><p>
அதனை கவனித்த போது சிவலிங்கம் போன்ற உருவ அமைப்புடன் ஒத்துப்போவதாக கருதியுள்ளனர்.</p><p>

இத்தகவல் அக்கம்பக்கத்தில் பரவியதும், மக்கள் அதனை காண குவியத்தொடங்கினர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KZ2227iUdZ0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>

ஜலாபிஷேக வழிபாடு
</h2><p>
சிலர் ஜலாபிஷேகம் செய்து வழிபாடு செய்யத் தொடங்கினர், ஹர் ஹர் மகாதேவ் என முழக்கமிட்டனர், மக்கள் கூடியதால் அந்த வீடு வழிபாட்டு தலமாகவே மாறிவிட்டது.
</p><p>
இத்தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாக, தானாக உருவான பனிக்கட்டியை மக்கள் இவ்வாறு சித்தரிப்பது முட்டாள்தனமானது என கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
</p><p>
அறிவியலை தாண்டி மக்கள் இதனை மதநம்பிக்கையின் அடிப்படையில் பார்க்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d468cd6e-3628-43ff-b071-3b85131fda4a/26-6a55f5cfdd760.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-14T08:39:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரப்பூர்வ சந்திப்பில் முதல்வர் விஜய்யின் க்யூட்டான செயல்... சமூக வலைதளங்களில் பரபரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijays-adorable-toy-car-moment-goes-viral-1784014538"></link>
            <id>https://manithan.com/article/cm-vijays-adorable-toy-car-moment-goes-viral-1784014538</id>
            <summary type="text">தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் விஜய், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிகம் பேசப்படும் முக்கிய நபர்களில் ஒருவராகத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் விஜய், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிகம் பேசப்படும் முக்கிய நபர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.அவரது அரசியல் நடவடிக்கைகள், நிர்வாக முடிவுகள் மற்றும் பல்வேறு அதிகாரப்பூர்வ சந்திப்புகள் தொடர்ந்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.</p><p> அதே நேரத்தில், அரசியல் நிகழ்வுகளைத் தாண்டி அவர் வெளிப்படுத்தும் இயல்பான அணுகுமுறை, எளிமையான நடத்தை மற்றும் கலகலப்பான தருணங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதுடன், அவ்வப்போது பேசுபொருளாகவும் மாறிவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b8ef322-6d8e-4611-8509-2398600a33e4/26-6a55ea0a49521.webp' /></p><p></p><h2>வைரல் வீடியோ</h2><p>இந்த நிலையில், வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான ‘வின்ஃபாஸ்ட்’ (VinFast) நிறுவனத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது முதல்வர் விஜய்க்கு மின்சார காரின் சிறிய மாதிரி பொம்மையை (Miniature model) பரிசாக வழங்கினார்.</p><p>குறித்த மாதிரி காரை வாங்கியதும், விஜய் மிகவும் மகிழ்ச்சியுடன் அதன் கதவுகளைத் திறந்து, நுணுக்கங்களை வியந்து சிறு குழந்தையைப் போல விளையாட்டாகப் பரிசோதித்த விஜய் வெளிப்படுத்திய ஒரு இயல்பான தருணம், அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், ரசிகர்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.</p><p></p><p>அரசியல் பணிகளுக்கு மத்தியில் அவரது எளிமையான அணுகுமுறையும், இயல்பான செயல்பாடுகளும் தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், குறித்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/CMVijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMVijay</a>&#39;s cute playtime with a Miniature Toy Car... 🤎🚗 <a href="https://t.co/dmrxMCbeO2">pic.twitter.com/dmrxMCbeO2</a></p>&mdash; 𝐒𝐚𝐤𝐭𝐡𝐢 𝐀𝐠𝐫𝐢 𝑻𝑽𝑲 (@mersal_sakthi03) <a href="https://x.com/mersal_sakthi03/status/2076631371959943585?ref_src=twsrc%5Etfw">July 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T08:07:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[45 வயது அம்மா - 21 வயது மகன்: ஒரே மேடையில் பட்டம் பெற்ற நெகிழ்ச்சி தருணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mom-and-son-21-graduate-together-at-iit-madras-1784011676"></link>
            <id>https://manithan.com/article/mom-and-son-21-graduate-together-at-iit-madras-1784011676</id>
            <summary type="text">ஒரு தாய் தனது மகனின் பட்டமளிப்பு விழாவைக் கண்டு பெருமைப்படுவது சாதாரண விஷயம். ஆனால், அதே மேடையில், அதே விழாவில், மகனுடன் சேர்ந்து பட்டம் பெற்றால்? இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு தாய் தனது மகனின் பட்டமளிப்பு விழாவைக் கண்டு பெருமைப்படுவது சாதாரண விஷயம். ஆனால், அதே மேடையில், அதே விழாவில், மகனுடன் சேர்ந்து பட்டம் பெற்றால்? இது எவ்வளவு பெரிய விடயம்.</p><p>குஜராத்தைச் சேர்ந்த ஜிகிஷா டெய்லர் (45), தனது மகன் ஆதித்யா கபாடியாவுடன் சேர்ந்து சென்னை ஐஐடி-யின் டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பை முடித்து, ஒரே பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுள்ளார்."கற்றலுக்கு வயது ஒரு தடையல்ல" என்பதை அவர்கள் வாழ்க்கையிலேயே நிரூபித்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20cd689b-c415-49ec-b936-e8bfb92aa447/26-6a55e25fdc373.webp' /></p><p></p><h2>சுவாரஸ்யமான பின்னணி</h2><p>
குஜராத்தின் பரூச் நகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 16 ஆண்டுகள் எலக்ட்ரானிக்ஸ் பேராசிரியராகப் பணியாற்றிய ஜிகிஷா, குடும்பச் சூழ்நிலை காரணமாக 2019-ல் தனது வேலையை விட்டு விலகினார்.</p><p>

அதே சமயம், 2021-ல் ஆதித்யா சென்னை ஐஐடி-யின் ஆன்லைன் டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பில் சேர்ந்தார். கொரோனா காலம் என்பதால் அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடந்தன.

"அந்த நேரத்தில் ஐஐடி, எம்ஐடி, ஸ்டான்போர்டு எதிலே சேர்ந்திருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள்தான். எனக்கு டேட்டா சயின்ஸ், ஏஐ மீது அதிக ஆர்வம் இருந்தது," என்று ஆதித்யா கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc7ca275-9f00-4975-8299-226be9aead8c/26-6a55e2608c335.webp' /></p><p>
</p><p>
ஆரம்பத்தில் வேறு ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்த அவர், பின்னர் சென்னை ஐஐடி இந்தப் படிப்பை முழுமையான பட்டப்படிப்பாக அங்கீகரித்ததும், அந்தக் கல்லூரியை விட்டு முழு கவனத்தையும் ஐஐடி படிப்பில் செலுத்தினார்.</p><p>

மகனைப் பார்த்து மாணவியான அம்மா

மகன் படித்துக் கொண்டிருந்த பாடங்களைப் பார்த்த ஜிகிஷாவுக்கும் டேட்டா சயின்ஸ் மீது ஆர்வம் ஏற்பட்டது. எலக்ட்ரானிக்ஸ் பின்னணி இருந்ததால் புள்ளியியல், கணினி அமைப்புகள் போன்ற பாடங்களைப் புரிந்துகொள்ள முடிந்துள்ளது. மேலும் மகனின் ஊக்கத்தால் 2022-ம் ஆண்டு அவரும் அதே படிப்பில் சேர்ந்தார்.</p><p>
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாணவியாக மாறுவது அவருக்கு எளிதாக இருக்கவில்லை.

"ஆரம்பத்தில் கணிதமும் புள்ளியியலும் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் சில வாரங்களில் அதற்கு பழகிவிட்டேன்," என தெரிவித்துள்ளார்.</p><p>ஜிகிஷாவின் தினசரி அட்டவணையும் படிப்புக்காக மாறியது. அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து காலை 7 மணிக்குள் படிப்பை முடித்துவிட்டு, வீட்டு வேலைகளை கவனித்த பிறகு மீண்டும் படிப்பில் ஈடுபட்டார். </p><p>ஐஐடி நடத்திய நேரலை வகுப்புகள், சந்தேக நிவர்த்தி அமர்வுகள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் அவருக்கு பெரும் ஆதரவாக இருந்தன.</p><p></p><h2>கேலி பேச்சுகளுக்கு பதில்</h2><p>
"இந்த வயதில் ஏன் படிக்கிறாய்? வேலைக்குப் போகப் போகிறாயா?" என்ற கேள்விகளை பலர் எழுப்பினாலும், ஜிகிஷா "புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வித்தியாசமான ஒன்றைச் செய்ய வேண்டும்." என எளிமையாக பதில் கொடுத்துள்ளார்.</p><p>இவரின் குடும்பத்தின் முழு ஆதரவுடன், படிப்பின் சவால்களை எதிர்கொண்டு அவர் தனது படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். ஒரே பாடத்தைப் படித்ததால் தாயும் மகனும் ஒருவருக்கொருவர் உதவியதுடன், நல்ல போட்டியிலும் ஈடுபட்டனர். ஆதித்யா தனது அனுபவத்தின் மூலம் ஆன்லைன் தேர்வுகள், விவா உள்ளிட்டவற்றில் தாய்க்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.</p><p>இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில், இருவரும் ஒரே நேரத்தில் மேடையேறி பட்டம் பெற்றது எதிர்பாராத சிறப்பு நிகழ்வாக அமைந்துள்ளது. இந்தக் நிகழ்வு கற்றலுக்கு வயது தடையல்ல; முயற்சி மற்றும் ஆதரவு இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதை மீண்டும் ஒரு முறை பறைசாற்றியுள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T07:17:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூலை 16 உருவாகும் பரிவர்த்தன யோகம்: இந்த ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போவது உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-moon-parivarthan-yog-on-16-july-who-get-luck-1784003853"></link>
            <id>https://manithan.com/article/sun-moon-parivarthan-yog-on-16-july-who-get-luck-1784003853</id>
            <summary type="text">ஜோதிடத்தின் படி, ஜூலை மாதம் மிகவும் சிறப்பான மாதமாகக் கருதப்படுகிறது. காரணம், இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, பல்வேறு யோக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தின் படி, ஜூலை மாதம் மிகவும் சிறப்பான மாதமாகக் கருதப்படுகிறது. காரணம், இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்</p><p>அந்த வகையில், ஜூலை 16 மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அன்று சூரியனும் சந்திரனும் தங்களது ராசிகளை மாற்றுகின்றன. சூரியன் கடக ராசிக்கும், சந்திரன் சிம்ம ராசிக்கும் பெயர்வதால், ராசி பரிவர்த்தன யோகம் உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e2d1d66-4504-4670-a0cd-99360a40965a/26-6a55c22c70e5b.webp' /></p><p> </p><p>இது கிரகங்களின் தனித்துவமான நிலைமையால் உருவாகும் சிறப்பு யோகமாகக் கருதப்படுகிறது.

இந்த பரிவர்த்தன யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளி்ன வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தினாலும், தொழில் மற்றும், பொருளாதார ரீதியில் உச்சகட்ட பலனை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில்&nbsp; பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28a367f6-6c6e-4cc6-92e7-8c350dd51ab1/26-6a55c22d21475.webp' /></p><p>

சூரியன்–சந்திரன் பரிவர்த்தன யோகத்தின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான காலகட்டம் உருவாக உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த முன்னேற்ற வாய்ப்புகள் இப்போது கைகூடும். </p><p>குறிப்பாக கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்றவர்கள் தங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல முடிவுகளைப் பெறும் வாய்ப்பு அதிகம். தொழில் புரிவோருக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.</p><p>
புதிய தொழில் அல்லது வியாபாரத்தை தொடங்க நினைப்பவர்கள் இந்த நேரத்தில் தைரியமாக முயற்சி மேற்கொண்டால் வெற்றி பெறலாம். பணியிடத்திலும் புதிய பொறுப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். </p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b98251a-cccc-450f-8f86-f1da62b66840/26-6a55c22dc7725.webp' /></p><p>
சூரியன்–சந்திரன் பரிவர்த்தன யோகம் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பல மாற்றங்களை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை மற்றும் செயல்திறன் அதிகரிப்பதால் எந்த காரியத்தையும் உற்சாகமாக செய்து முடிக்க முடியும்.</p><p>இதுவரை எடுத்த கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கத் தொடங்கும்.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, வருமானம் அதிகரிக்கும்.மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெறலாம்.</p><p> குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து, உறவினர்களின், குறிப்பாக உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1e7d65f-20f0-4ef6-b38b-e1937df6bc8d/26-6a55c22e761dd.webp' /></p><p>[AA8SF2K ]</p><p>சூரியன்–சந்திரன் பரிவர்த்தன யோகத்தின் அருளால் துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணியிடத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.</p><p>நீண்ட காலமாக மேற்கொண்ட உழைப்புக்கான அங்கீகாரமும் பலனும் இந்த காலத்தில் கிடைக்கக்கூடும். பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.</p><p>
வேலைப்பளு குறைவதால் மன அழுத்தமும் குறைந்து, புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும். போட்டித் தேர்வுகள் மற்றும் போட்டி சார்ந்த முயற்சிகளில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். திருமண&nbsp; வாழ்க்கையில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T06:03:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vijay-s-first-salary-was-rs-500-for-vetri-in-1984-1784006428"></link>
            <id>https://manithan.com/article/vijay-s-first-salary-was-rs-500-for-vetri-in-1984-1784006428</id>
            <summary type="text">முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் முதல் முதலில் வாங்கிய சம்பளம் குறித்த அவரின் தந்தை பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் தற்போது இணையத்தில் வைரலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் முதல் முதலில் வாங்கிய சம்பளம் குறித்த அவரின் தந்தை பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p><p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், அதிக வசூல் ஈட்டும் நட்சத்திரமாகவும் திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் விஜய். பல கோடி ரசிகர்களின் அன்பைப் பெற்றுள்ள அவர், இறுதியாக நடித்த ஜனநாயன் படத்துக்கு 220 கோடி சம்பளம் பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9831ff09-f0da-4c34-97bd-589898a775b1/26-6a55cfed0d91b.webp' /></p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">முதல் சம்பளம்&nbsp;</span></h2><p>ஆனால், தனது திரையுலகப் பயணத்தின் தொடக்கத்தில் அவர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் தகவலாக உள்ளது.
</p><p>
நடிகர் விஜய், பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. சிறுவயதிலேயே திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கியதன் மூலம் இன்று தமிழ் சினிமாவின் அழிக்க்க அடையாளமாக மாறியிருக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb7b4319-c2a4-4847-9f77-28e92034f8c5/26-6a55cfedb31b8.webp' /></p><p>ஆனால்&nbsp; விஜய், தனது முதல் திரைப்படத்திற்காக பெற்ற சம்பளம் வெறும் ரூ.500 மட்டுமே என்பதே பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

1984-ஆம் ஆண்டு வெளியான 'வெற்றி' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக விஜய் திரையுலகில் அறிமுகமானார். </p><p>இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான பி.எஸ். வீரப்பா தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு ரூ.500 சம்பளமாக வழங்கப்பட்டதாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது பழைய பேட்டியில் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2211aca3-ba44-4102-a2ad-dd925db375c0/26-6a55cfee61053.webp' /></p><p>
அதன்பிறகு 'நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய், 1992-ஆம் ஆண்டு வெளியான 'நாளைய தீர்ப்பு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும், தனது திறமையை நிரூபித்து தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி வசூல் நாயகனாக உருவெடுத்துள்ளார்.
</p><p>
மேலும், விஜய்யின் திரைப்பயணம் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களுக்கும் சாட்சியாக அமைந்துள்ளது. 1980-களில் பயன்படுத்தப்பட்ட ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பம் முதல், பின்னர் கலர் ஃபிலிம் காலம், தற்போது டிஜிட்டல் மற்றும் அதிநவீன திரைப்படத் தொழில்நுட்பங்கள் வரை பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைக் கண்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43875441-fde3-478a-8d2d-024d9873991a/26-6a55cfef0f6bb.webp' /></p><p></p><p>
வெறும் ரூ.500 சம்பளத்தில் தொடங்கிய விஜய்யின் திரைப்பயணம், இன்று இந்திய சினிமாவின் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகர்களில் ஒருவராக அவரை உயர்த்தியுள்ளது.</p><p>தற்போது சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி தமிழக முதல்வராக தனது பணியை சிறப்பாக செய்து வருகின்றார். விஜயின் இறுதி படமான ஜனநாயகன் விரைவில் திரைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T06:01:36+00:00</updated>
        </entry>
    </feed>
