<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-08T14:26:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசி பெண்கள் எதிலும் தனித்துவ ரசனை கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-women-have-great-taste-1788871765"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-women-have-great-taste-1788871765</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான குணங்கள் இருக்கும். சிலர் வாழ்க்கையில் கிடைப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான குணங்கள் இருக்கும். சிலர் வாழ்க்கையில் கிடைப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் சிலரோ தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள்.
</p><p>
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிகளில் பிறந்த பெண்கள் தனித்துவமான ரசனை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் அணியும் உடை, பேசும் விதம், வீட்டை அலங்கரிக்கும் முறை, வழங்கும் பரிசு என அனைத்திலும் அவர்களின் ரசனை வெளிப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deef5c4e-9158-4e23-a4a1-a1a9028e320f/26-6aa00bfe3c1d3.webp' /></p><p>
</p><p>
அவர்களின் இயல்பான அழகியல் உணர்வு, எது அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் சிறப்பாக&nbsp; வெளிப்படும். அப்படிப்பட்ட தனித்துவமான ரசனை கொண்ட பெண்கள் எந்தெந்த ராசியினர் இவர்களிடம் நிச்சயம் இருக்கும் சில முக்கிய குணங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.&nbsp;</p><p></p><h2>துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a34bfed4-7cfa-4379-ad49-598b75a6d41e/26-6aa00bfee2ed7.webp' /></p><h2>
</h2><p>அழகு மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிப் பெண்கள்,&nbsp; நேர்த்தி மற்றும் வசீகரத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.</p><p>அவர்கள் தேர்ந்தெடுக்கும் அனைத்திலும் நளினமும் ஸ்டைலும் வெளிப்படும். உடைகள் முதல் உரையாடல்கள் வரை அனைத்தையும் நேர்த்தியாகக் கையாளத் தெரிந்தவர்கள். </p><p>நிறங்களின் தெரிவு, வீட்டு அலங்காரத்தில் இவர்களுக்கு இயற்கையான ரசனை இருக்கும்.அது அவர்களின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும்.</p><h2>

ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5117d83c-1b43-4aaf-85f8-8a5d8167402b/26-6aa00bff97fcf.webp' /></p><p>
சுக்கிரனால் ஆளப்படும் மற்றொரு ராசியான ரிஷபப் பெண்கள், அழகு மற்றும் தனிப்பட்ட இன்பங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.&nbsp;</p><p>அழகான உடைகள், நல்ல உணவு, இனிமையான இசை, ஆடம்பரப் பொருட்கள் என வாழ்க்கையின் சிறந்த விஷயங்களை தேர்ந்தெடுப்பதில் இவர்களை மிஞ்ச ஆளே கிடையாது.</p><p> அவர்களின் ரசனை தனித்துவமானதாக இருந்தாலும், அளவுக்கு மீறிய ஆடம்பரத்தை விரும்பமாட்டார்கள். சிறந்த சமையல், அழகான அலங்காரம் மற்றும் தனித்துவமான ஸ்டைல் ஆகியவற்றில் திறமை கொண்டவர்கள். </p><p>அளவைவிட தரத்திற்கும், தற்காலிக ட்ரெண்டுகளைவிட காலத்தால் அழியாத நேர்த்திக்கும்&nbsp; இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4236bb2f-4460-44c8-9b29-76e597d9771c/26-6aa00c0048864.webp' /></p><p></p><h2>
</h2><p>சிம்ம ராசிப் பெண்கள் பிரகாசிப்பதற்காகவே பிறந்தவர்கள். கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படுவதால், தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலான தேர்வுகளால் இயல்பாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். </p><p>ஃபேஷன் தேர்வுகள்,&nbsp; அலங்காரம் அல்லது வாழ்க்கைமுறை என எதிலும் தங்களுக்கென தனித்துவமான ஸ்டைலை வைத்திருப்பார்கள்.</p><p>பிரகாசமான நிறங்கள், துணிச்சலான வடிவமைப்புகள் மற்றும் கவர்ச்சியான ஆபரணங்கள் மூலம் தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துவதில் இவர்கள் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.&nbsp;</p><h2>
மீனம்</h2><p>
மீன ராசிப் பெண்கள் ஆழ்ந்த படைப்பாற்றலும் காதல் உணர்வும் கொண்டவர்கள். கனவுகள் மற்றும் கற்பனையுடன் தொடர்புடைய நெப்டியூனின் தாக்கத்தால்,&nbsp; எந்த விடயத்திலும் மற்றவர்கள் காணாத அழகை இவர்கள் உணர்வார்கள்.</p><p>அவர்களின் ரசனை மென்மையானதும், கனவுமயமானதும், கலைநயம் மிக்கதுமாக இருக்கும். ஆடைகள், பழங்காலப் பொருட்கள், வீட்டு அலங்காரம், ஓவியம் அல்லது கவிதை என அவர்கள் செய்யும் அனைத்திலும் ஒரு தனித்துவமான கலைநயம் இருக்கும்.</p><p>அவர்களின் ரசனை இதயத்திலிருந்து வெளிப்படுவதால், அது மற்றவர்களையும் எளிதில் வசீகரிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T13:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகையே இணைத்த அதிசயம் - இன்டர்நெட்டை உருவாக்கியவர் யார்ன்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/who-invented-the-internet-the-world-wide-web-1788865574"></link>
            <id>https://manithan.com/article/who-invented-the-internet-the-world-wide-web-1788865574</id>
            <summary type="text">இன்றைய உலகில் இணையம் நமது அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டது. தகவல் தொடர்பு, கல்வி, வணிகம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய உலகில் இணையம் நமது அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டது. தகவல் தொடர்பு, கல்வி, வணிகம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் இணையத்தைச் சார்ந்தே உள்ளன. இணையத்தை தவிர்த்து தற்கால வாழ்க்கையை கற்பனை கூட செய்யமுடியாது என்றால் மிகையாகாது.&nbsp;</p><p> ஆனால், இணையம் எப்போது உருவானது, அதை கண்டுபிடித்தவர் யார் என்பது&nbsp; குறித்து பலருக்கும் தெரியாது. இணையம் உருவாக்கப்பட்ட சுவாரஸ்ய பின்னணி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d726773-c08f-418e-a013-e06ac5a57860/26-6a9ff78d59278.webp' /></p><h2>இணையம்&nbsp; கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?</h2><p>
இணையம் ஒரு தனி விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல.பல விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் நீண்டகால முயற்சிகளின் விளைவாக அது உருவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1ee8199-7dcd-45a9-9e30-ff4020fcc7e0/26-6a9ff78e0c952.webp' /></p><p>இருப்பினும் இந்த உருவாக்கத்திற்கு அடிப்படை வடிவமைப்பை உருவாக்கிய முக்கிய நபராக வின்டன் செர்ஃப் (Vinton Cerf) விளங்குகிறார்.</p><p>வின்டன் கிரே செர்ஃப் (Vinton Gray Cerf) 1943ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே அறிவியல் மற்றும் கணிதத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். </p><p>அவருக்கு கேள்வித் திறனில் சிறிய குறைபாடு இருந்தபோதிலும், அதனை தடையாக எண்ணாமல், 'கணினிகள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாற முடியுமா?' என்ற கேள்வி எழுந்தது.&nbsp; இந்த சிந்தனையே பின்னாளில் இன்டர்நெட்டின் உருவாக்கத்திற்கு வி்த்திட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c496d6e-da7f-4b1f-b700-220f6ec35b98/26-6a9ff78eb8d94.webp' /></p><p></p><p> 1900-களின் தொடக்கத்திலேயே நிகோலா டெஸ்லா உலகளாவிய வயர்லெஸ் தகவல் தொடர்பு அமைப்பு குறித்து தொலைநோக்குப் பார்வையை முன்வைத்திருந்தார்.</p><p>
1960-களில் கணினி வலைப்பின்னல்கள் மூலம் தகவல்களைப் பகிரும் நடைமுறை முயற்சிகள் தொடங்கின. இதன் முக்கிய முன்னேற்றமாக, அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஆதரவுடன் Advanced Research Projects Agency Network (ARPANET) உருவாக்கப்பட்டது.</p><p>1969 அக்டோபர் 29 அன்று, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திற்கு முதல் தகவல் அனுப்பப்பட்டது. இது இணையத்தின் ஆரம்பகால செயல்பாட்டு வடிவமாகக் கருதப்படுகிறது.
</p><p>
பின்னர் ராபர்ட் கான் மற்றும் வின்டன் செர்ஃப் ஆகியோரின் முயற்சியால் பல்வேறு கணினி வலைப்பின்னல்களுக்கு இடையே தகவல்களைப் பரிமாறுவதற்கான TCP/IP தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. </p><p>1983 ஜனவரி 1 அன்று ARPANET இந்த முறையை ஏற்றுக்கொண்டது. இந்த நாள் நவீன இணையத்தின் தொடக்க நாளாகப் பொதுவாகக் கருதப்படுகின்றது.</p><h2>World Wide Web என்றால் என்ன?</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27df6b94-e37b-4b96-9c16-4ce93838838e/26-6a9ff97c00f96.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, World Wide Web (WWW) என்பது இணையத்துடன் ஒன்றல்ல. 1990-ல் டிம் பெர்னர்ஸ்-லீ உருவாக்கிய WWW, இணையத்தில் உள்ள தகவல்களை வலைத்தளங்கள் மற்றும் ஹைப்பர்டெக்ஸ்ட் இணைப்புகள் மூலம் எளிதாக அணுகுவதற்கான ஒரு அமைப்பாகும்.</p><p>
</p><p>
இந்தியாவில் பொது மக்களுக்கான இணையச் சேவை 1995 ஆகஸ்ட் 15 அன்று VSNL மூலம் தொடங்கப்பட்டது. அப்போது இணைய சேவை மிகவும் விலை உயர்ந்ததாகவும் வேகம் குறைவாகவும் இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/428c4c66-399e-48b2-b5a6-39f32c2bc477/26-6a9ff97cd2a8b.webp' /></p><p></p><p> </p><p>9.6 kbps இணைப்புக்கே ஆண்டுக்கு சுமார் ரூ.15,000 செலவாகியதால், ஆரம்பத்தில் இணைய வசதி பெரும்பாலும் பெரிய நிறுவனங்கள் மற்றும் வசதி படைத்தவர்களுக்கே கிடைத்தது.
</p><p>
இவ்வாறு பல ஆண்டுகளாக நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவாக உருவான இணையம், இன்று உலகையே இணைக்கும் மிகப்பெரிய தகவல் தொடர்பு வலையமைப்பாக வளர்ச்சிகண்டுள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T12:03:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்ம ராசிக்குள் நுழையும் குரு: தொழிலில் கொடிகட்டி பறக்கப்போகும் 4 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-transit-in-leo-who-get-career-growth-1788857115"></link>
            <id>https://manithan.com/article/jupiter-transit-in-leo-who-get-career-growth-1788857115</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களும், ஆற்றல்மிக்க கிரகங்களின் சேர்க்கையால் உருவாகு ராஜயோகங்களும் அனைத்து ராசிகளின்...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களும், ஆற்றல்மிக்க கிரகங்களின் சேர்க்கையால் உருவாகு ராஜயோகங்களும் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.</p><p>அந்தகையில், தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், வளர்ச்சி, முன்னேற்றம், அறிவு, அதிர்ஷ்டம், செல்வம், கல்வி, குழந்தைகள் மற்றும் தொழிலின் காரணியாக விளங்குகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89649c46-0123-4623-abd1-08f498fd6a1c/26-6a9fd78232d51.webp' /></p><p>இவர் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவதுடன், சனி, ராகு, கேதுவுக்கு அடுத்தபடியாக நீண்ட காலம் ஒரு ராசியில் பயணிப்பவர்.

தற்போது உச்ச ராசியான கடகத்தில் பயணிக்கும் குரு பகவான், அக்டோபர் 31-ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்து, ஜனவரி 25, 2027 வரை அங்கு இருப்பார்.</p><p> பின்னர் வக்ர நிலையில் மீண்டும் கடக ராசியை அடைவார்.

சிம்ம ராசிக்குள் குரு நுழைவதால் அனைத்து ராசிகளிலும் தாக்கம் காணப்பட்டாலும், குறிப்பாக&nbsp; இந்த 4 ராசிக்காரர்கள் குருவின் அருளால் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p>[HP4OC7K ]</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மேஷம்</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3111e19-bdcc-465b-89af-2ab0ea98a78c/26-6a9fd782da31f.webp' /></p><h2>
</h2><p>குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் மேஷ ராசியின் 5-ஆவது வீட்டிற்குச் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். </p><p>குறிப்பாக, வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.</p><p> மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். நிதி ரீதியாகவும் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக, ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.</p><h2>

கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e04e66a-2ca1-4c66-9374-d8cb0c1ad15c/26-6a9fd7838c419.webp' /></p><h2>
</h2><p>குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் கடக ராசியின் 2-ஆவது வீட்டிற்குச் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும்.&nbsp;</p><p>குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, மகிழ்ச்சியும், வியாபாரத்தில் வருமானமும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் தானாகவே அமையும்.</p><p>மேலும், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களின் நட்பு கிடைக்கலாம். அந்த நட்பின் மூலம் நிதி நிலையில் வளர்ச்சியடையக்கூடிய&nbsp; வாய்ப்பு உருவாகும்.&nbsp;</p><h2>துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aed0bf6-fbce-4d89-9d07-f726c423fbda/26-6a9fd78446a32.webp' /></p><p></p><h2>
</h2><p>குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் துலாம் ராசியின் 11-ஆவது வீட்டிற்குச் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல நல்ல பலன்களைப் பெறுவார்கள். </p><p>குறிப்பாக, வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியாகவும் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வியாபாரத்தில் உருவாகும் புதிய தொடர்புகள் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.மொத்தத்தில், தொழில் மற்றும் நிதி ரீதியாக சிறப்பான காலமாக இருக்கும்.</p><h2>
சிம்மம்
</h2><p>குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் சிம்ம ராசியின் முதல் வீட்டிற்குச் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.</p><p> தலைமைத்துவ திறன்களும் மேம்படும். குருவின் அருளால் சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.வேலை அல்லது தொழிலில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.</p><p>வருமானத்திலும் நல்ல உயர்வு கிடைக்கும். நிதி ரீதியாக அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும். குரு பகவானின் ஆசியால் பணப் பிரச்சனைகள் குறைந்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.</p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;</b>&nbsp;&nbsp;<p></p><p><br><b></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T09:40:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பை பை அப்பா... என சிரித்தபடி ஆற்றில் குதித்த இளம்பெண்! என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bye-papa-before-21-year-old-woman-jumps-into-river-1788840972"></link>
            <id>https://manithan.com/article/bye-papa-before-21-year-old-woman-jumps-into-river-1788840972</id>
            <summary type="text">ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில், 21 வயதான பாயல் தேவி என்ற இளம்பெண், தனது தந்தையிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோதே, “பை பை அப்பா” என்று சிரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில், 21 வயதான பாயல் தேவி என்ற இளம்பெண், தனது தந்தையிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோதே, “பை பை அப்பா” என்று சிரித்தபடி பாலத்தில் இருந்து செனாப் ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
</p><h2>நடந்தது என்ன?&nbsp;</h2><p>உள்ளூர் திருவிழாவுக்குச் சென்றிருந்த பாயல், உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவரை சந்திக்கப் போவதாகவும் தனது தந்தை கிருஷ்ண லாலிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c87b297-0288-4b85-bb82-17810566ed30/26-6a9f8ea17d3fb.webp' /></p><p></p><p> </p><p>மருத்துவர் இல்லாததால், கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் பைக்கில் வீடு திரும்பியபோது, அவரது துப்பட்டா எதிர்பாராதவிதமாக பைக்கின் சக்கரத்தில் சிக்கியுள்ளது. வாகனத்தை நிறுத்தி துப்பட்டாவை எடுக்க முயன்ற நேரத்தில், பாயல் திடீரென அருகிலிருந்த பாலத்தை நோக்கி ஓடியுள்ளார்.</p><p>&nbsp;“நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்” என்று கூறியபடி அவர் பாலத்தை நோக்கி ஓடியதால், அங்கிருந்த பொதுமக்கள் அவரைத் தடுத்து சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். இதையடுத்து, அவருடன் வந்த நபர் செய்வதறியாது, பாயலின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>
தந்தை தொலைபேசியில் மகளிடம் காரணம் குறித்து கேட்டபோது, “யாரும் எனக்கு எதுவும் செய்யவில்லை. இது என் வாழ்க்கை. என் மனம் இப்படித்தான் செல்ல வேண்டும் என்று சொல்கிறது” என பாயல் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e955eac1-8ab6-4743-8930-6e867e6ad279/26-6a9f8ea231f70.webp' /></p><p> தந்தை அவரை சமாதானப்படுத்த முயன்றுகொண்டிருந்தபோதே, “பை பை அப்பா” என்று சிரித்தபடி கூறிவிட்டு, பிரேம் நகர் அருகேயுள்ள பாலத்தில் இருந்து செனாப் ஆற்றில் குதித்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றைய தினம் சுமார்&nbsp; 2 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.</p><p>பாயல் பாலத்தில் நிற்பதும், பொதுமக்கள் அவரைத் தடுக்க முயல்வதும், அவர் சிரித்தபடி கையசைப்பதும் உள்ளிட்ட காட்சிகள் வீடியோவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f934ce-680d-48e1-9eca-6a7efe62af24/26-6a9f8ea2dc638.webp' /></p><p></p><p>
</p><p>
பாயல் ஆற்றில் குதித்ததும், போலீசார், மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து தேடுதல் பணியைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பதற்கான தெளிவான காரணமும் இதுவரை தெரியவில்லை. சிரித்தபடி பொதுமக்களிடம் கையசைத்துக்கொண்டிருந்த இளம்பெண் சில நிமிடங்களிலேயே ஆற்றில் குதித்த சம்பவம், அவரது குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T09:12:27+00:00</updated>
        </entry>
    </feed>
