<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-20T17:46:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரிய வகை பன்றி முக தவளைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/pig-faced-purple-frog-tn-launches-new-mission-1784544668"></link>
            <id>https://manithan.com/article/pig-faced-purple-frog-tn-launches-new-mission-1784544668</id>
            <summary type="text">பன்றி முக தவளைகள் மொத்தமும் அழிந்துவிடாமல் பாதுகாக்க தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது.

பன்றி முக தவளைகள்இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பன்றி முக தவளைகள் மொத்தமும் அழிந்துவிடாமல் பாதுகாக்க தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது.
</p><h2>
பன்றி முக தவளைகள்</h2><p>இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய உயிரினம் ஊதா தவளை.</p><p>

இந்த தவளையின் மூக்கு பன்றியின் முகம் போல கூர்மையாக இருப்பதால், இது பன்றி முக தவளை என்றும் அழைக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77524a7a-10fe-4d6d-be05-3df37f38e28e/26-6a5dfe622cc04.webp' /></p><p>

தடித்த உடலமைப்பைக் கொண்ட இந்த தவளைகள், டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p>இந்த தவளைகள் தங்களது வாழ்நாளில் 95 சதவீதத்துக்கும் அதிகமான நேரத்தை பூமிக்கடியில் சுமார் 1.3 முதல் 3.7 மீட்டர் ஆழத்தில் கழிக்கின்றன. </p><p>

ஆண்டுக்கு சுமார் 2 வாரங்கள் மட்டுமே, பருவமழைக் காலத்தில் இனப்பெருக்கத்திற்காக பூமிக்கு மேலே வருகின்றன.</p><h2>தமிழக அரசு திட்டம்
</h2><p>
காடுகள் அழிப்பு மற்றும் மனிதர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக இந்த தவளைகளின் வாழ்விடங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. </p><p>

இந்நிலையில், இந்த அரிய வகை தவளைகள் முற்றிலும் அழிந்துவிடாமல் பாதுகாக்க தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8de0c49e-44d8-4c21-aebb-971a2858550e/26-6a5dfe6316d7d.webp' /></p><p>முதற்கட்டமாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த தவளைகள் தற்போது எங்கு வாழ்கின்றன என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.</p><p>

மேலும், அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பது குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><p>அழியும் நிலையில் உள்ள அரிய உயிரினங்களின் பாதுகாப்புப் பட்டியலில் இந்த தவளைகளையும் சேர்க்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T17:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல நடிகரை பிரேக் அப் செய்தாரா நடிகை அனுபமா? வெளியிட்ட பதிவால் குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-anupama-post-for-break-up-her-husband-1784561702"></link>
            <id>https://manithan.com/article/actress-anupama-post-for-break-up-her-husband-1784561702</id>
            <summary type="text">நடிகை அனுபமா தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவினால் நடிகர் ஒருவரிடமிருந்து பிரேக் அப் ஆகியுள்ளதாக சிலர் கூறிவருகின்றார்.நடிகை அனுபமாதென்னிந்திய திரைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை அனுபமா தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவினால் நடிகர் ஒருவரிடமிருந்து பிரேக் அப் ஆகியுள்ளதாக சிலர் கூறிவருகின்றார்.</p><h2>நடிகை அனுபமா</h2><p>தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவரான அனுபமா, பிரபல நடிகருடன் பழகி வருவதாக கூறப்பட்டது. மலையாள நடிகையான இவர், பிரேமம் படத்தின் மூலமாக அறிமுகமானார்.</p><p>இவர் பிரபல நடிகர் ஒருவரைக் காதலித்து வருவதாக கூறப்பட்டது. குறித்த நடிகரும் இவரும் படத்தில் சேர்ந்து நடித்தது முதல் காதலிப்பதாக கூறப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f72e2a4-b51b-4513-a78a-8e439ca4664b/26-6a5e47fc301b7.webp' /><br></p><p>ரசிகர்கள் என்னதான் பல கேள்விகளை எழுப்பினாலும் தங்களுக்குள் இருக்கும் உறவினைக் குறித்து வெளிப்படையாக கூறியது இல்லை.</p><p>சில மாதங்கள் இவ்வாறு கடந்த நிலையில் தற்போது அனுபமாவின் சமீபத்திய பதிவு மற்றும் கேப்ஷன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p>அவர் போட்டுள்ள ரீல் ஒன்றில், பூவுடன் இருப்பது, அலைகளுடன் விளையாடு, ஊஞ்சல் ஆடுவது என்று பல தருணங்களை போட்டிருந்தார்.</p><p>இதற்கு அவர் பதிவிட்டிருந்த கேப்ஷன், சில சமயங்களில், நிம்மதியை அடைய பயனற்ற பாதைகளைக் கைவிட வேண்டியிருக்கும். இன்று, அந்த நிம்மதி என்னைத் தேடி வந்துள்ளது. இன்றிலிருந்து, என் குரலை நானே தேர்ந்தெடுக்கிறேன். என் வாழ்க்கையை நானே தேர்ந்தெடுக்கிறேன். இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை” என்று கூறப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/076d7195-4b7a-486c-a3fe-1cb2ac74729d/26-6a5e47fcd8575.webp' /></p><p></p><h2>நடிகரை பிரிந்துவிட்டாரா?</h2><p>மேலும், மிக நீண்ட காலமாக நான் சொல்ல விரும்பிய விடயம் இருக்கின்றது என்றாலும், ஆனால் அதனை கூறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.</p><p>தனக்கு துணையாக நின்றதற்கும், தன் மீது நம்பிக்கை வைத்ததற்கும், என் வாழ்க்கையை மிக அன்பால் நிரப்பியதற்கும் நன்றி... தனக்கு தேவைப்பட்ட தருணத்தில் செய்தியும், பிரார்த்தனையும் அன்பான செயலும் தன்னை வந்தடைந்தது. தன்னை மீண்டும் தனக்கே அனுப்பிய பிரபஞ்சத்திற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் புகைப்படத்தினையும் பதிவிட்டு சில வார்த்தைகளை கூறியுள்ள நிலையில், இதனை அவதானித்த ரசிகர்கள் பிரேக் அப் உண்மையாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.&nbsp;&nbsp;<br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62e2635f-705b-4461-b122-ab972162ce9e/26-6a5e47fd8d906.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T16:20:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-prepare-tasty-paneer-biryani-at-home-1784558143"></link>
            <id>https://manithan.com/article/how-to-prepare-tasty-paneer-biryani-at-home-1784558143</id>
            <summary type="text">Paneer Biryani Recipe In Tamil: தினமும் மதிய வேளையில் சாம்பார், குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? மதிய நேரத்தில் சிம்பிளாக, அதே சமயம் வாய்க்கு ரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Paneer Biryani Recipe In Tamil: தினமும் மதிய வேளையில் சாம்பார், குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? மதிய நேரத்தில் சிம்பிளாக, அதே சமயம் வாய்க்கு ருசியான ஒரு சமையலை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீரும், காய்கறிகளும் இருந்தால், அவற்றைக் கொண்டு பன்னீர் பிரியாணியை செய்யுங்கள். இந்த பிரியாணியை பிள்ளைகளுக்கு லன்ச் பாக்ஸிலும் வைத்துக் கொடுக்கலாம். இந்த பிரியாணி குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

</p><p>உங்களுக்கு பன்னீர் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4da77887-4115-45b6-82fb-683c6e6aaf1e/26-6a5e34cdece28.webp' /></p><h2>தேவையான பொருட்கள்: </h2><h3>ஊற வைப்பதற்கு...&nbsp;</h3><p> பன்னீர் - 400 கிராம்<br>மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;உப்பு - 1 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;சாட் மசாலா - 1 டீஸ்பூன் </p><h3>பிரியாணி தாளிப்பதற்கு... </h3><p>எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்&nbsp;<br>&nbsp;நெய் - 2 டேபிள் ஸ்பூன் <br>பட்டை - 2 துண்டு <br>கிராம்பு - 5&nbsp;<br>&nbsp;ஏலக்காய் - 3&nbsp;<br>&nbsp;பிரியாணி இலை - 2&nbsp;<br>&nbsp;பெரிய வெங்காயம் - 3 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)<br>இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் <br>பச்சை மிளகாய் - 3<br>பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)<br>&nbsp;பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)&nbsp;<br>&nbsp;கேரட் - 1 கப் (பொடியாக நறுக்கியது)&nbsp;<br>&nbsp;பச்சை பட்டாணி - 1 கப்&nbsp;<br>&nbsp;குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) <br>உப்பு - சுவைக்கேற்ப <br>மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் <br>மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் <br>மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;சீரகத் தூள் - 1 டீஸ்பூன்<br>&nbsp;கரம் மசாலா - 1 டீஸ்பூன் <br>ஊற வைத்த பன்னீர்&nbsp;<br>&nbsp;புதினா - 1 கையளவு <br>கொத்தமல்லி - 1 கையளவு <br>தண்ணீர் - 2 கப்<br>&nbsp;பாசுமதி அரிசி - 1 கப் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2e52be1-8641-42ed-b999-1fc971ff33e8/26-6a5e34cea0b5a.webp' /></p><h2>செய்முறை: </h2><p>முதலில் ஒரு பாத்திரத்தில் பன்னீரை சற்று பெரிய துண்டுகளாக்கி எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சாட் மசாலாவை சேர்த்து பிரட்டி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். </p><p>பின்னர் பிரியாணி செய்ய ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். </p><p>அதன் பின் அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். </p><p>பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51523853-0f71-4437-bf08-d6519a4f545e/26-6a5e34cf52b72.webp' /></p><p>அடுத்து அதில் நறுக்கிய பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி, குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 3 நிமிடம் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.&nbsp;</p><p>பின்னர் அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.&nbsp;</p><p> அதன் பின் மூடியைத் திறந்து அதில் பன்னீரை சேர்த்து கிளறி, புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். </p><p>அடுத்து அதில் 2 கப் நீரை ஊற்றி, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், 1/2 மணிநேரம் ஊற வைத்த பாசுமதி அரிசியை நீரில் கழுவிவிட்டு சேர்த்து கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.&nbsp;</p><p> அதன் பின் அடுப்பை அணைத்துவிட்டு 15 நிமிடம் அப்படியே தம் போட வேண்டும். * 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கிளறினால், சுவையான பன்னீர் பிரியாணி தயார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; &nbsp;&nbsp;</b></a><br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T14:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழுகை சுற்றி வளைத்து நின்ற பாம்பு... சட்டென யோசித்து செய்த காரியத்தை பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/snake-wrap-eagle-last-minute-twist-viral-video-1784554044"></link>
            <id>https://manithan.com/article/snake-wrap-eagle-last-minute-twist-viral-video-1784554044</id>
            <summary type="text">கழுகு ஒன்றின் உடம்பினை பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டு தவிக்கவிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.கழுகை சுற்றிவளைத்த பாம்புபொதுவாக கழுகு பாம்புகளை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கழுகு ஒன்றின் உடம்பினை பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டு தவிக்கவிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p><h2>கழுகை சுற்றிவளைத்த பாம்பு</h2><p>பொதுவாக கழுகு பாம்புகளை வேட்டையாடுவதை தான் நாம் அதிகமாக அவதானித்திருப்போம். ஆனால் இங்குள்ள காணொளி சற்று விசித்திரமாக இருந்தள்ளது.</p><p>ஆம் கழுகு ஒன்றின் உடம்பினை பாம்பு சுற்றி வளைத்துள்ளது. குறித்த கழுகின் அருகில் மற்றொரு கழுகும் அவதானித்துக் கொண்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59aae79b-5ad1-4e7b-83c0-80eba944f902/26-6a5e2738b81e7.webp' /></p><p>ஆனால் பாம்பின் பிடியில் உள்ள கழுகு எந்தவொரு பதற்றமும் கொள்ளாமல் குறித்த பாம்பை இரண்டு, மூன்று முறை தனது அலகால் கொத்துகின்றது.</p><p></p><p>ஒரு கட்டத்தில் பாம்பின் பிடி சற்று தளர்ந்து போகவே கழுகு சட்டென தனது உடம்பினை தூக்கியுள்ளது. கழுகு சட்டென யோசித்து உடனடியாக தனது ஆக்ஷனில் இறங்கிள்ளது பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><p><b><a href="https://www.instagram.com/reel/Da-iFWqJ7QK/?utm_source=ig_web_copy_link&amp;igsh=MzRlODBiNWFlZA==" target="_blank">காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...</a></b></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T13:48:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்து 2வது முறை கோல்டன் பூட்.., எம்பாப்பே பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-much-money-did-kylian-mbappe-get-for-winning-1784539305"></link>
            <id>https://manithan.com/article/how-much-money-did-kylian-mbappe-get-for-winning-1784539305</id>
            <summary type="text">2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

எம்பாப்பே புதிய சாதனை 

உலகக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
</p><h2>
எம்பாப்பே புதிய சாதனை</h2><p> 

உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து இரண்டு தொடர்களில் தங்கக் காலணி விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை எம்பாப்பே பெற்றுள்ளார்.
</p><p>
இந்தத் தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய எம்பாப்பே 10 கோல்களை அடித்தார். மேலும், 4 கோல்களுக்கு உதவியும் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30521d4a-bcb4-426a-af99-3ad4823e49eb/26-6a5de9a22949a.webp' /></p><p> 

இதன் மூலம் அதிக கோல்கள் அடித்த வீரருக்கான தங்கக் காலணி விருதை அவர் வென்றார்.
</p><p>2022 கத்தார் உலகக்கோப்பையில் 8 கோல்களுடன் தங்கக் காலணி வென்ற எம்பாப்பே, 2026 உலகக்கோப்பையிலும் 10 கோல்களுடன் மீண்டும் அந்த விருதை வென்றுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி 8 கோல்கள் மற்றும் 4 அசிஸ்ட்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.&nbsp;&nbsp;</p><h2>

பரிசுத்தொகை எவ்வளவு?</h2><p>
இந்த தங்கக் காலணி முழுவதும் பித்தளையால் தயாரிக்கப்பட்டு, அதன் மேல் தங்க முலாம் பூசப்படுகிறது.</p><p>

அதன் உலோக மதிப்பு சில லட்சங்கள் மட்டுமே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
</p><p>
முன்னணி விளையாட்டு நிறுவனங்கள் தங்கக் காலணி வெல்லும் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் விளம்பர ஒப்பந்தங்களை வழங்கும். </p><p>மேலும், பல நாடுகள் மற்றும் கிளப் அணிகள் உலகக்கோப்பையில் தங்கக் காலணி வெல்லும் தங்கள் நாட்டு வீரர்களுக்கு ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை சிறப்புப் போனஸ் தொகையாக வழங்குகின்றன.</p><h2><br></h2>]]></content>
            <updated>2026-07-20T12:10:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்கும் ராசிக்காரங்க யார் யார்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/these-4-zodiac-signs-silent-achievers-1784538978"></link>
            <id>https://manithan.com/article/these-4-zodiac-signs-silent-achievers-1784538978</id>
            <summary type="text">சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்கும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணம் உண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்கும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p>ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணம் உண்டு. அந்த வகையில் சிறிய காரியத்தை கூட மிகப்பெரியதாக விளம்பரப்படுத்துபவர்களும் உள்ளனர்.</p><p></p><p>ஆனால் சில ராசியினர் எவ்வளவு பெரிய காரியம் என்றாலும் அதனை ஆரவாரப்படுத்தவே மாட்டார்கள். அதனை வெளியே காட்டாமல், அமைதியாக சாதனை படைப்பார்கள்.</p><p>அதாவது பதுங்கி பாயும் புலி போன்று பல நபர்கள் சரியான நேரம் வரும் போதுதான் தனது விஸ்வரூபத்தினைக் காட்டி எதிரிகளைத் திணறடிக்கும் ராசியினர் யார் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0b549b5-2230-4d51-99be-410a1733dc7f/26-6a5e0dbe606ee.webp' /></p><h2>ரிஷபம்</h2><p>விடாமுயற்சியின் சிகரமாக இருக்கும் ரிஷப ராசியினர் சுக்கிரனை அதிபதியாக கொண்டவர்கள். வெளித்தோற்றத்திற்கு மிகவும் அமைதியானவராகவும், மென்மையானவராகவும் இருப்பார்கள்.</p><p>இவர்களிடம் எவ்விதமான வீண் ஆரவாரமும் காட்டாமல், மனஉறுதிக்கு இவர்களுக்கு இமயநிலைக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள்.</p><p>ஜோதிடத்தில் ரிஷபம் என்பது ஒரு ஸ்திர ராசி மற்றும் நில தத்துவம் கொண்டதாகும். பொறுமை, நிதானம் இவர்களிடம் அதிகமாக இருப்பதுடன், இலக்கை நோக்கி இவர்கள் ஆமை வேகத்தில் செல்வது போன்று தெரிந்தாலும் முடிவில் கில்லியாக இருப்பார்கள்.</p><p>எந்தவொரு பின்னடைவிலும் சோர்ந்து போகாத இவர்கள், சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தையும், சொத்துக்களையும் சேர்த்து கம்பீரமாக நிற்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3044f64-74f0-4a78-995e-8ac1aa388a8e/26-6a5e0dbf116af.webp' /></p><h2>கடகம் </h2><p>சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசியினர் உணர்ச்சிப்பூர்வமான வியூகவாதியாகவும், மென்மையான இதயம் படைத்தவராகவும், உணர்ச்சிவசப்படுத்துபவராகவும் இருப்பதுடன், அசாத்திய நிர்வாக திறமையை கொண்டுள்ளதுடன், ரகசியங்களை காக்கும் குணம் கொண்டவர்கள்.</p><p>கடகம் என்பது சர ராசி மற்றும் நீர் தத்துவம் கொண்டது ஆகும். நீர் எப்படி பாறை இடுக்கிலும் தனக்கான வழியை கண்டுபிடிக்குமோ, அதே போன்று தனது தடைகளை தாண்டி செல்வார்களாம்.</p><p>அதுமட்டுமின்றி நண்டு எவ்வாறு தனது இரையை கவ்விப் பிடிக்குமோ, அதே போன்று தொழில் மற்றும் வியாபார உத்திகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே வைத்திருப்பார்கள்.</p><p>இவர்களின் மனநிலையில் என்ன இருக்கின்றது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எந்த நேரத்தில் எந்த காரியத்தை செய்ய வேண்டும் என்ற தெளிவு இவர்களிடம் இருக்குமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02e347cd-b4f5-4d82-be77-2750dab24655/26-6a5e0dbfbaee4.webp' /></p><h2>துலாம் </h2><p>சுக்கிரனின் மற்றொரு வீடான துலாம் ராசியினர் தந்திரமான ராஜதந்திரிகளாக இருப்பார்கள். தராசை குறியீடாக வைத்திருக்கும் இவர்கள் சண்டை, வீண் விவாதத்தினை விரும்புவதில்லை.&nbsp;</p><p>எந்த சூழ்நிலையையும் புன்னகையுடனும், அமைதியுடனும் எதிர்கொள்ளும் இவர்களின் வியூகம் வேறு மாதிரியாக இருக்குமாம். துலாம் என்பது காற்று தத்துவம் கொண்ட ராசியாகும். இனிமையான பேச்சு மற்றும் நிதானம் இவர்களின் மிகப்பெரிய ஆயுதம் ஆகும்.</p><p>ஒரு காரியத்தை முடிக்க வேண்டுமென்றால் காரியத்தை அமைதியாக இருந்து சாதிப்பார்கள். வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். பலவீனங்களை ஒருபோதும் வெளியில் காட்டிக் கொள்ளாத இவர்கள் எந்தவொரு போட்டியிலும், நேரடியாக மோதாமல் ராஜதந்திரமாக செயல்பட்டு காய் நகர்த்துவார்கள்.</p><p>இறுதி போட்டியில் எதிர்பாராத நேரத்தில் முதலிடத்தினை பிடித்து ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e876b2e-3534-477e-80c9-03848f5b6133/26-6a5e0dc087df8.webp' /></p><h2>தனுசு </h2><p>நவகிரகங்களின் குருவான வியாழனை அதிபதியாக கொண்ட தனுசு ராசியினர் இலக்கை நோக்கி செயல்படுவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.&nbsp;</p><p>பார்ப்பதற்கு கலகலப்பாகவும், விளையாட்டாகவும் இருப்பது போன்று தோன்றும் இவர்களின் கவனம் எப்பொழுதும் இலக்கின் மீதுதான் இருக்குமாம்.</p><p>தனுசு என்பது உபய ராசி மற்றும் நெருப்பு தத்துவம் கொண்டதுடன், அசாத்தியமான அறிவுக்கூர்மை மற்றும் தொலைநோக்கு பார்வையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p>தேவையற்ற விடயங்களில் தங்களது ஆற்றலை வீணடிக்காத இவர்கள், தங்களது அறிவையும், திறமையையும் வளர்த்துக் கொள்வதில் தீவிரமாக இருப்பார்கள்.</p><p>தாங்கள் நினைத்த காரியத்தை சரியான தருணத்தில் கச்சிதமாக செய்து முடிக்கும் இவர்களின் வெற்றி என்பது திடீரென தோன்றும் வானத்து நட்சத்திரம் போன்று பிரகாசமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f835a84-5afc-4277-be0a-20da1d132d03/26-6a5e0dc18714e.webp' /></p><p><i><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></i>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T12:00:04+00:00</updated>
        </entry>
    </feed>
