<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-29T09:06:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாபா பாணியில் நாவூரும் சுவையில் முட்டை பட்டாணி மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tasty-egg-pattani-masala-recipe-in-tamil-1785313154"></link>
            <id>https://manithan.com/article/tasty-egg-pattani-masala-recipe-in-tamil-1785313154</id>
            <summary type="text">பொதுவாக அனைவரும் எளிதில் வாங்கக்கூடிய, குறைந்த விலையில் கிடைக்கும் சத்தான உணவுப் பொருட்களின் பட்டியலில் முட்டைக்கு எப்போதும் முக்கியமான இடம் உண்டு. கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக அனைவரும் எளிதில் வாங்கக்கூடிய, குறைந்த விலையில் கிடைக்கும் சத்தான உணவுப் பொருட்களின் பட்டியலில் முட்டைக்கு எப்போதும் முக்கியமான இடம் உண்டு. </p><p>குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் முட்டை, உடலுக்குத் தேவையான உயர்தர புரதச்சத்தை வழங்கும் சிறந்த உணவாக விளங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89a94dfd-6772-4fa4-8782-607523f37284/26-6a69c133bf91b.webp' /></p><p></p><p>
முட்டையில் உள்ள புரதம் உடல் தசைகளின் வளர்ச்சிக்கும், செல்களின் சீரமைப்புக்கும் உதவுவதுடன், உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கும் ஆதரவாக அமைகிறது. </p><p>மேலும் இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எலும்புகளின் வலிமை, கூந்தல் வளர்ச்சி, இதய ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவை பாதுகாக்க உதவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c31101bf-cf85-426c-a976-e0e6eeb55c43/26-6a69c1346d991.webp' /></p><p>
</p><p>அந்தவகையில், அன்றாட உணவில் இடம்பெறும் முட்டையை சற்று வித்தியாசமான முறையில், சுவை நிறைந்த தாபா பாணியில் மசாலா சுவையும் பட்டாணியின் தனித்துவமான சுவையும் இணைந்த முட்டை பட்டாணி மசாலாவை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>தேவையான பொருட்கள்
</h2><p><b>முட்டையை வறுக்க தேவையானவை</b></p><p>6 வேகவைத்த முட்டைகள்</p><p>
1 ஸ்பூன் எண்ணெய்</p><p>
¼ ஸ்பூன் மஞ்சள் தூள்</p><p>
½ ஸ்பூன் காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89ea6c79-3455-40cf-928c-6dfe05c36f86/26-6a69c1351d72b.webp' /></p><p><b>
மசாலா தயாரிக்க தேவையானவை&nbsp;</b></p><p> 2 ஸ்பூன் நெய்
</p><p>2 ஸ்பூன் எண்ணெய்
</p><p>1 கப் நறுக்கிய வெங்காயம்</p><p>
1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது</p><p>
2 நறுக்கிய பச்சை மிளகாய்</p><p>
1 கப் அரைத்த புதிய தக்காளி விழுது
</p><p>2 ஸ்பூன் மல்லித் தூள்</p><p>
½ ஸ்பூன் மஞ்சள் தூள்</p><p>
1 ஸ்பூன் காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்
</p><p>½ ஸ்பூன் சீரகத் தூள்
</p><p>தேவையான அளவு உப்பு</p><p>
1 ஸ்பூன் கடலை மாவு</p><p>
½ கப் வேகவைத்த பச்சை பட்டாணி</p><p>
1 ஸ்பூன் கசூரி மேத்தி</p><p>
½ ஸ்பூன் கரம் மசாலா</p><p> தூள்
1 ஸ்பூன் எலுமிச்சை சாறு</p><p>
2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b446be14-7028-4dab-b87e-298dc2f0b201/26-6a69c135bee5a.webp' /></p><h2>
செய்முறை
</h2><p>முதலில் முட்டைகளை வேகவைத்து, தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். முட்டையின் மேல் கத்தியால் லேசாக சிறிய கீறல்கள் போடவும். இதனால் மசாலாவின் சுவை முட்டைக்குள் நன்றாக ஊறும்.</p><p>

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்த எண்ணெயை ஊற்றி&nbsp; மிதமான தீயில் சூடாக்கி, அதில் மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கந்துக்கொள்ள வேண்டும்.</p><p> பின்னர் முட்டைகளைச் சேர்த்து, எல்லா பக்கங்களிலும் லேசாக பழுப்பு நிறமாகும் வரை நன்றாக வறுக்கவும். வறுத்த முட்டைகளை ஒரு தட்டில் எடுத்து வைக்த்துக்கொள்ள வேண்டும்.அதே பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.</p><p>அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70861d68-f652-41a8-88d7-5906916ad1dd/26-6a69c1366e7c3.webp' /></p><p></p><p>
</p><p>
அடுத்து அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு கிளறி, தக்காளி நன்றாக சமைந்து எண்ணெய் பிரியும் வரை வதக்க</p><p>பிறகு மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், உப்பு மற்றும் கடலை மாவு சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.</p><p>
மசாலாவின் பச்சை வாசனை நீங்கியதும், வேகவைத்த பச்சை பட்டாணி, வறுத்த முட்டைகள் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி, மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.</p><p>பின்னர் பாத்திரத்தை மூடி வைத்து, பட்டாணி மென்மையாகும் வரை வேகவிட்டு,&nbsp; இடையிடையே கிளறி விடவும்.</p><p>

இறுதியாக கசூரி மேத்தி, கரம் மசாலா தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.&nbsp; நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கினால் அவ்வளவு தான், அசத்தல் சுவையில்,&nbsp; பட்டாணி முட்டை மசாலா தயார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T09:02:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெளுத்தி மீன்களில் நேரடியாகப் பரவும் புற்றுநோய்! மனிதர்களுக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/reveals-transmissible-cancer-in-wild-catfish-1785308390"></link>
            <id>https://manithan.com/article/reveals-transmissible-cancer-in-wild-catfish-1785308390</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா–கனடா எல்லையில் அமைந்துள்ள மெம்ஃப்ரேமாகோக் (Memphremagog) ஏரியில் வாழும் காட்டு கெளுத்தி மீன்களில், ஒரு மீனிடமிருந்து மற்றொரு மீனுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா–கனடா எல்லையில் அமைந்துள்ள மெம்ஃப்ரேமாகோக் (Memphremagog) ஏரியில் வாழும் காட்டு கெளுத்தி மீன்களில், ஒரு மீனிடமிருந்து மற்றொரு மீனுக்கு நேரடியாகப் பரவும் அரிய வகை புற்றுநோய் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். </p><p>புகழ்பெற்ற Nature அறிவியல் இதழில் வெளியான இந்த ஆய்வு, நன்னீர் உயிரினங்களில் நேரடியாகப் பரவும் புற்றுநோய் கண்டறியப்பட்ட முதல் நிகழ்வாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/133097e9-16c9-4c17-ba47-b1624176f2cf/26-6a69a89c43387.webp' /></p><p>

2012ஆம் ஆண்டு இந்த ஏரியில், உடலில் கருப்பு நிறக் கட்டிகளுடன் காணப்பட்ட கெளுத்தி மீன்களை ஆய்வாளர்கள் கவனிக்கத் தொடங்கினர். சில ஆண்டுகளுக்குள், அங்கு வாழும் 25 முதல் 40 சதவீத மீன்களுக்கு மெலனோமா வகை புற்றுநோய்க் கட்டிகள் உருவானது கண்டறியப்பட்டது.</p><p></p><h2>ஆய்வில் வெளியான தகவல்</h2><p>
</p><p>
ஆரம்பத்தில் ரசாயன மாசுபாடு அல்லது வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், மரபணு ஆய்வுகள் வேறு உண்மையை வெளிப்படுத்தின. இந்த நோய் வைரஸ் அல்லது பாக்டீரியாவால் ஏற்படவில்லை; மாறாக, உயிருடன் இருக்கும் புற்றுநோய் செல்களே ஒரு மீனிடமிருந்து மற்றொரு மீனுக்கு நேரடியாகப் பரவும் “குளோனல் கேன்சர்” வகையைச் சேர்ந்தது என நிரூபிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e486f5d-7b91-4d71-a4a1-7406ec20c953/26-6a69a89ce8839.webp' /></p><p>
இதுவரை நாய்கள், டாஸ்மேனியன் டெவில்ஸ் மற்றும் சில கடல் சிப்பி இனங்களில் மட்டுமே இத்தகைய நேரடியாகப் பரவும் புற்றுநோய் கண்டறியப்பட்டிருந்த நிலையில், தற்போது கெளுத்தி மீன்களில் கண்டறியப்பட்டுள்ள இது, உலகில் அறியப்பட்ட நான்காவது வகையாகப் பதிவாகியுள்ளது.</p><p>

இந்தப் புற்றுநோய் மீன்களின் வாய் பகுதி, மீசைகள் மற்றும் தோலில் கட்டிகளாக உருவாகிறது. இதனால் அவற்றின் உணவு தேடும் திறன் பாதிக்கப்பட்டாலும், ஏரியில் போதுமான உணவு கிடைப்பதால் அவை தொடர்ந்து உயிர்வாழ முடிகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4230ed4a-0f4a-4b4a-aa2e-4813f2ff6d28/26-6a69a89d985cb.webp' /></p><p></p><h2>மனிதர்களுக்கு ஆபத்ததா?&nbsp;</h2><p>

தற்போது இந்த நோயின் தாக்கம் மெம்ஃப்ரேமாகோக் ஏரியைத் தாண்டி நியூயார்க், பென்சில்வேனியா உள்ளிட்ட பகுதிகளிலும் காணப்படுகின்றது.மீன் பிடிப்பவர்கள் பயன்படுத்தும் தூண்டில்கள் அல்லது படகுகள் மூலமாக இந்த செல்கள் மற்ற ஏரிகளுக்கும் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதன் பரவலைக் கண்காணிக்க Fishbrain என்ற செயலி மூலம் ஆய்வாளர்கள் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.</p><p> </p><p>இது முற்றிலும் மீன்களுக்கு இடையே மட்டுமே நிகழும் ஒரு உயிரியல் நிகழ்வாகும். உயிரினத் தடை (Species Barrier) மற்றும் மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி காரணமாக, இந்த மீன்களைப் பிடிப்பதாலோ அல்லது சமைத்து உண்பதாலோ மனிதர்களுக்குப் புற்றுநோய் பரவாது என்பதை மருத்துவ வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளாமர் ரூட்டுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/keerthy-suresh-item-song-in-paradise-movie-1785302381"></link>
            <id>https://manithan.com/article/keerthy-suresh-item-song-in-paradise-movie-1785302381</id>
            <summary type="text">நானியின் நடிப்பில் உருவாகிவரும், பாரடைஸ் திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஸ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.நடிகை கீர்த்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நானியின் நடிப்பில் உருவாகிவரும், பாரடைஸ் திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஸ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">நடிகை கீர்த்தி</span></h2><p> சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் திருமணத்துக்கு பின்னரும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் கீர்த்தி சுரேஷ்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89dd93a3-5336-43ec-8211-06c5d2ddb588/26-6a6990a6442a9.webp' /></p><p></p><p>பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகியிருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d488263f-719e-43fc-ae18-e7a8e3f8b372/26-6a6990a6f38d1.webp' /></p><p>கடந்த ஆண்டு, தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்தின் பின்னரும் அதே ஈடுபாட்டுடன் சினிமாவில் நடித்து வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5d82c2b-032b-4e46-a28d-45ddc5c8b0a3/26-6a6990a7a516b.webp' /></p><p>குறிப்பாக பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்த பிறகு, நடிகை கீர்த்தி சுரேஷின் திரைமுகமும், கதாபாத்திரத் தேர்வுகளும் மெல்ல மாறி வருவதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/766ad1e4-8760-49e1-8b2a-39921690f820/26-6a6990a85a219.webp' /></p><p></p><p>முன்பை விட கிளாமரான தோற்றத்தில் அவர் பல நிகழ்ச்சிகளிலும், போட்டோஷூட்களிலும் தோன்றத் தொடங்கியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p><b>

ஒரு பாடலுக்கு டான்ஸ்?</b></p><p>இந்நிலையில், தற்போது தெலுங்கில் நானி நடித்து வரும் The Paradise படத்தில் ஒரு பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் கிளாமர் ஆக டான்ஸ் ஆட ஒப்பந்தமாகியிருப்பதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f3c13b5-d953-44b0-bfe8-7c273d6adc48/26-6a69916ce3f05.webp' /></p><p>

கீர்த்தி சுரேஷ் கிளாமராக டான்ஸ் ஆட ஒப்புக்கொண்டதாக வெளியாகி இருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T05:38:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[56 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய ராஜயோகம்.. குரு பூர்ணிமாவில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/guru-purnima-2026-3-rajyoga-after-who-get-luck-1785299580"></link>
            <id>https://manithan.com/article/guru-purnima-2026-3-rajyoga-after-who-get-luck-1785299580</id>
            <summary type="text">வேத நாட்காட்டியின்படி, இந்த ஆண்டின் குரு பூர்ணிமா இன்றைய தினம் ஜூலை 29 ஆம் தேதி நிகழ்கின்றது. ஜோதிட ரீதியாகப் பார்த்தால், இந்த ஆண்டின் குரு பூர்ணிமா ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத நாட்காட்டியின்படி, இந்த ஆண்டின் குரு பூர்ணிமா இன்றைய தினம் ஜூலை 29 ஆம் தேதி நிகழ்கின்றது. ஜோதிட ரீதியாகப் பார்த்தால், இந்த ஆண்டின் குரு பூர்ணிமா மிகவும் அரிய மற்றும் சக்தி வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது.</p><p> காரணம், இந்த நாளில் ஒரே நேரத்தில் பல சுப யோகங்கள் உருவாகுவதுதான்.

குறிப்பாக, சூரியனும் புதனும் இணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. அதேவேளையில், குரு பகவான் தனது உச்ச ராசியான கடகத்தில் அமர்ந்திருப்பதால் ஹன்ஸ் ராஜயோகம் அமைகிறது. மேலும், சனியின் சாதகமான நிலையால் சச ராஜயோகம் உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a292cade-5e9e-4bcc-a04d-00825a66d9a0/26-6a69882ebacb1.webp' /></p><p></p><p>இவ்வாறு, ஒரே நாளில் இந்த மூன்று ராஜயோகங்களும் ஒன்றாக அமைவது சுமார் 56 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிய ஜோதிட நிகழ்வாகக் கூறப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் பிரதிபலித்தாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்கள் குரு பூர்ணிமா நாளில் அதிர்ஷ்டமும், முன்னேற்றமும், சிறப்பான பலன்களும் பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>

அப்படியானால், குரு பூர்ணிமா நாளில் உருவாகும் இந்த மூன்று ராஜயோகங்களால் அதிக நன்மை பெறும் அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/012e7187-e6a5-45c0-b1f2-b6388033f189/26-6a69882f6c364.webp' /></p><p>குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களின் தாக்கத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான காலம் அமையும். நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும். </p><p>தொழிலதிபர்களுக்கு வளர்ச்சியை நோக்கி புதிய வாய்ப்புகள் உருவாகும். புதிய முதலீடுகளை செய்ய நினைப்பவர்களுக்கு இது சிறந்த நேரமாக இருக்கும். </p><p>பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதோடு, சிலருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. குறிப்பாக இந்த காலகட்டம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.</p><h2>

கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ba14198-6fb1-4272-8bd4-7544d8b85065/26-6a69883026cce.webp' /></p><p>3 ராஜயோகங்களின் பலனால் கும்ப ராசிக்காரர்கள் பணியிடத்தில் சந்தித்து வந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். அனுபவம் வாய்ந்த பெரியவர்களின் ஆலோசனையை பின்பற்றினால், குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும்.</p><p> வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கி, பல்வேறு வழிகளில் இருந்து பண வரவு அதிகரிக்கும். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.</p><p>நீண்ட கால கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த நீண்ட கால தடைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.</p><h2>

மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50acdefc-5469-4abc-a4d0-94449bca2034/26-6a698830d32c4.webp' /></p><p></p><p> குரு பூர்ணிமா நாளில் உருவாகும் இந்த 3 ராஜயோகங்கள் மகர ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கு உரிய பலனைத் தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.</p><p> நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்படும். முன்பு செய்த முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.</p><p> பணியிடத்தில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றி, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இதனால் உங்கள் நிதி நிலையும் மேலும் வலுவடையும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T04:58:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/health-benefits-of-drinking-amla-juice-in-tamil-1785241953"></link>
            <id>https://manithan.com/article/health-benefits-of-drinking-amla-juice-in-tamil-1785241953</id>
            <summary type="text">நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. 

இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. </p><p>

இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
</p><p>
அந்தவகையில், தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
</p><p>
அதன்படி, தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மேலும், மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்க உதவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca277a0-e125-4e63-8115-f5eb0b60e813/26-6a68a16928a97.webp' /></p><p>நெல்லிக்காய் ஜூஸில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
</p><p>
மேலும், இந்த ஜூஸ் இயற்கையான டிடாக்ஸ் பானமாக செயல்பட்டு உடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
</p><p>
அதேபோல், இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செரிமானத்தை மேம்படுத்தி, குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலை குறைக்க உதவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9d6c6d6-9509-4588-96be-0dce89b5c34f/26-6a68a16876adf.webp' /></p><p>

குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு நெல்லிக்காய் ஜூஸ் சிறந்தது. இதில் உள்ள வைட்டமின் சி வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
</p><p>
நெல்லிக்காய் ஜூஸ் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.
</p><p>
மேலும், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சருமத்திற்கும் நல்ல பொலிவை அதிகரிக்கவும், சருமம் இளமையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.</p>]]></content>
            <updated>2026-07-29T03:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவை நிறைந்த சப்பாத்தி கள்ளி பழம்.., என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/health-benefits-of-eating-chapati-kalli-fruit-1785236359"></link>
            <id>https://manithan.com/article/health-benefits-of-eating-chapati-kalli-fruit-1785236359</id>
            <summary type="text">சப்பாத்தி கள்ளி பழம் இந்தியாவின் கிவி என்றும் அழைக்கப்படுகிறது. 

சிவப்பு நிறத்தில், இனிப்பு சுவையுடன் இருக்கும் இந்தப் பழம் வறண்ட பகுதிகளில் அதிகம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்பாத்தி கள்ளி பழம் இந்தியாவின் கிவி என்றும் அழைக்கப்படுகிறது. 

சிவப்பு நிறத்தில், இனிப்பு சுவையுடன் இருக்கும் இந்தப் பழம் வறண்ட பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. </p><p>

ஆடு, மாடு மேய்க்கும் விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் இதை புத்துணர்ச்சி தரும் உணவாக பயன்படுத்தி வருகின்றனர்.</p><p>

இந்தப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.</p><p>

சப்பாத்தி கள்ளி பழத்தின் மேற்பகுதியில் சிறிய முட்கள் அதிகமாக இருக்கும் என்பதால் தோலை நீக்கிவிட்டே சாப்பிட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d77b6f57-4659-43ef-a728-a6f23cf41c1b/26-6a688c6f0e8d1.webp' /></p><p> 

இந்தப் பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது.</p><p> 

மேலும், கொலஸ்ட்ராலை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவக்கூடும்.

நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை குறைக்க, குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க&nbsp;உதவுகிறது. </p><p>
சில பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்க இந்தப் பழம் உதவும் என்று கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df77935c-6746-44b6-8f39-20db0de908ff/26-6a688c6fc3536.webp' /></p><p>

அதேபோல், பிசிஓடி (PCOD) மற்றும் கருப்பை நீர்க்கட்டிகளை குறைக்க உதவும், கருமுட்டை வளர்ச்சியை மேம்படுத்தும், குழந்தைப்பேறுக்கு உதவும் என்றும் சொல்லப்படுகிறது.</p><p>மேலும், இந்தப் பழம் ஆண்களின் விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று சிலர் கூறுகின்றனர். </p><p>

சப்பாத்தி கள்ளி பழம் சத்துக்கள் நிறைந்த பழமாக இருந்தாலும், நோய்களுக்கு சிகிச்சையாக பயன்படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது முக்கியம்.</p>]]></content>
            <updated>2026-07-29T03:34:23+00:00</updated>
        </entry>
    </feed>
