<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-21T13:40:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாகபட்டிணம்: ஆசிரியை அடித்து சிறுவன் இறந்த துயர் நிகழ்வு: மருத்துவர் சொல்வது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-really-happend-in-vizag-school-kid-death-1787314316"></link>
            <id>https://manithan.com/article/what-really-happend-in-vizag-school-kid-death-1787314316</id>
            <summary type="text">நேற்றைய தினம் விசாகப்பட்டிணத்தில் ஒரு ஆசிரியை அடித்து சிறுவன் உயிர் இழந்த சம்பவம் எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்துகிறது. அதைப்போல், அவை பல கேள்விகளையும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றைய தினம் விசாகப்பட்டிணத்தில் ஒரு ஆசிரியை அடித்து சிறுவன் உயிர் இழந்த சம்பவம் எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்துகிறது. அதைப்போல், அவை பல கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது. ஒவ்வொருவர் மனதிலும் எதற்காக அந்த சிறுவன் இறந்தான்? என்ற பல குழப்பங்கள் சூழ்ந்து உள்ளது. </p><p>அந்த சிறுவன் ஆசிரியர் அடித்த அந்த ஒரு நொடியில் உயிர் இழந்திருக்க கூடுமா?அல்லது என்ன நடந்திருக்க கூடும் என்பதை பற்றி சிவகங்கை மருத்துவர் ஒருவர் தெளிவாக விளக்கம் கொடுக்கிறார். அதை தெரிந்து கொள்வோம்.</p><p></p><p> </p><p> 

அவர் கூறுவதாவது,
</p><p>
ஆந்திர மாநிலம் விசாகபட்டிணம் நகரத்தில்
ஆசிரியை ஒருவர் அடித்ததில் மயங்கி விழுந்து சிறுவன் உயிரிழிந்திருப்பது ஆழ்ந்த கவலையையும் பலரின் கவனத்தையும் கோரியிருக்கிறது. சிசிடிவியில் பதிவான நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது
ஆசிரியை வரிசையில் வரும் மாணவர்களில் ஒருவரின் 
ஆடைகளைக் களைய முற்படுகிறார்
அடுத்து அவனை கன்னத்தில் அறைகிறார் 
சிறுவன் மூர்ச்சையாகி முன்னோக்கி விழுகிறான். </p><p>
அடுத்து அவன் மரணமடைந்தான் என்ற செய்தி வருகிறது. 
இந்த நிகழ்வை விளக்கமாகப் பார்ப்போம்
மாணவ மாணவிகளை ஆடைகளைக் களைவது உள்ளிட்ட தண்டனைகள் உளவியல் ரீதியாக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை.</p><p> 
பள்ளிகள் / வீடுகளில் ஏதேனும் தவறு செய்து விட்டால் குழந்தைகளின் ஆடைகளைக் களைந்து அவர்களை நிர்வாணப்படுத்தி தண்டனை கொடுப்பது 
கொடுமையானது. 
அது அவர்களின் மனதில் பெரிய வடுக்களை ஏற்படுத்தும் செயலாகும்.
</p><p>இங்கே இதை எழுதும் நானும் அதற்கு விதிவிலக்கல்ல. 
ஆரம்ப பள்ளி காலங்களில் மேல் சட்டையைக் கழட்டி சக மாணவ மாணவிகள் முன் அவமானப்படுத்தி கொடுக்கும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன். </p><p>
இன்னும் நினைவில் உள்ளது. 
இது தவறானது. 
ஆபத்தானது. 
ஆழ்மன வக்கிரங்களை வெளிக்கொணரும் கொடுஞ்செயல். 
போக்சோ சட்டங்கள் அமல்படுத்தப்படும் இக்காலத்தில் இது போன்ற அவமானப்படுத்தப்படுத்தும் உளவியல் ரீதியான தண்டனைகள் தவறானவை.</p><p> 
எப்போதும் ஆசிரியரோ 
பெற்றோரோ தங்களது ஆழ்மன வக்கிரங்களையும் , பொது சமூகத்தில் அடக்கி வைத்த மிருகத்தனத்தையும் கட்டவிழ்த்து விட்டு கழிவறக்கம் செய்யும் இடமாக குழந்தைகளையும் சிறார் சிறுமியரையும் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும். 
ஒருவரிடம் மாற்றம் கொண்டு வர அன்பை விட சிறந்த ஆயுதம் ஏதுமில்லை. 
அன்பினால் ஆகாதது.</p><p> வேறொன்றினாலும் ஆகாது. 
சிறார் சிறுமியரை திருத்தும் நோக்கில் தரப்படும் தண்டனைகள் என்பவை அவர்களுக்கு வழி ஏற்படுத்துவதாக அமைய வேண்டுமே அன்றி வலி ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது.</p><p> 
புத்தகப்பையுடன் எல்நினோ வெயிலில் 
மைதானத்தை பத்து முறை சுற்றி வரக் கூறுவது 
வகுப்புக்கு வெளியே ஆயிரம் முறை உக்கி போடக்கூறுவது 
சக மாணவ மாணவிகள் முன் 
அரை நிர்வாணப் படுத்தி அவனாமப்படுத்துவது 
போன்றவை தண்டனைகள் அல்ல. </p><p>
ஆழ்மன வக்கிரங்கள் ஆகும். 
பெற்றோரும் கூட தாங்கள் எங்குமே காட்ட முடியாத கோபத்தைக் கொட்டும் குப்பைத் தொட்டிகளாக குழந்தைகளை நினைப்பது எவ்வளவு பெரிய தவறு. 
அன்பைக் காட்டி 
தப்பும் தவறும் செய்யும் போது
அதட்டி திட்டி 
லேசாக கொஞ்சம் சினத்தையும் அவ்வப்போது காட்டி வளர்ப்பது நல்ல வளர்ப்பு முறை. </p><p>
மாறாக ஒரே கொஞ்சல்ஸ் 
நல்ல செல்லம் 
எதிர்த்து பேச ஆளே இல்லை என்ற அளவில் வளர்த்தாலும் பிள்ளை கெட்டு விடும். 
இரண்டுக்கும் இடையே சரிசம நிலையை உருவாக்கி அதன் படியே பிள்ளைகளை வளர்க்க வேண்டும். </p><p>
ஆசிரியர்களும் தங்களின் பணி என்ன? 
தாங்கள் எதற்கு குழந்தைகளிடம் தேவையற்ற சினத்தைக் காட்டுகிறோம் என்று சிந்திக்க வேண்டும் 
சரி இந்த நிகழ்வுக்கு வருவோம் 
அந்த ஆசிரியரை ஒன்றாம் வகுப்பு மாணவனை கன்னத்தில் அறைகிறார்.</p><p> 
உடனே அவன் சுருண்டு விழுகிறான் 
அந்த மாணவன் தான் ஏற்கனவே அச்சத்தில் நடுங்கி அழுகிறானே 
அவனை அறையவும் வேண்டுமா? 
கபாலம், முகம் ,வயிறு, நெஞ்சாங்கூடு ஆகிய பகுதிகள் மிகவும் ஆபத்தானவை. </p><p>
அங்கே அடி வாங்கும் போது திடீரென மூளை ஸ்தம்பித்து மூர்ச்சை நிலை ஏற்படலாம். 
குழந்தைக்கு ஏற்கனவே இதயம் சார்ந்த பிறவிக் குறைபாடு ஏதேனும் இருந்திருக்கலாம். அதுவரை அது வெளியே தெரியாமல் இருந்திருக்கலாம்.
அதிகமான மன மற்றும் உடல் அழுத்தம் ( அழுது கொண்டே இருந்தது) 
காரணமாக ஏற்கனவே குழந்தை சோர்வாகி இருந்திருக்கலாம்.</p><p></p><p> 
முதலில் குழந்தைகளை நீண்ட நேரம் நிற்க வைப்பதே நல்லதல்ல.
அதிலும் வெயிலில் நிற்க வைப்பது ஆபத்தானது. 
இதயம் சார்ந்த பிரச்சனை + திடீர் உடல் &amp; மன அழுத்தம் + சோர்வு + கன்னத்தில் வாங்கி அடி என்று 
குழந்தை சரிந்துள்ளது.</p><p> 
இதய செயல் முடக்கம் ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு அதிகம். சிறார் சிறுமியருக்கு இதய ரத்த நாள அடைப்பு ( மாரடைப்பு) ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. 
உடனே சிபிஆர் முதலுதவி அளிக்கப்பட்டிருந்தால் குழந்தை பிழைக்க வாய்ப்பு இருந்திருக்கும். 
இங்கே ஆசிரியர் தெரிந்தே குழந்தையைக் கொன்றாரா? 
இல்லை. </p><p>எந்த ஆசிரியரும் அப்படிச் செய்வதில்லை. 
ஆனால் குழந்தையின் சுதந்திரத்தையும் 
வரம்புகளையும் மீறினாரா? என்றால் 
ஆம்.. 
அவர் குழந்தையிடம் காட்டப்படவே தேவையற்ற வன்முறையை கட்டவிழ்த்து விட்டு குழந்தையின் மரணத்திற்கு ஒரு காரணமாக அமைந்து விட்டார்.</p><p> 
இதற்கு அவரின் ஆழ்மன வக்கிரமும் 
தவறான தண்டனை முறைகளை வழங்கி
குழந்தையைத் திருத்தலாம் என்ற தவறான வழிநடத்தலும் 
வன்முறைப் பிரயோகமும் 
அந்தக் குழந்தையின் இறப்பிற்குப் காரணமாக அமைந்து விட்டது. 
இதே போன்று செய்யும் தாய்மார்களும் பெற்றோர்களும் தாத்தா பாட்டிமார்களும் 
நமது சமூகத்தில் உண்டு 
நாம் அனைவரும் திருந்துவோமாக..
</p><p>அன்பைக் கொண்டு ஆகாதது எதுவும் வேறெதைக் கொண்டு ஆகாது என்றுணர்வோம். 
திருத்துகிறேன் என்று நாம் குழந்தைகளுக்கு தரும் தண்டனைகளில் பெரும்பான்மை நம் ஆழ்மன வக்கிரக் கழிவுகளே அன்றி வேறில்லை 
உணர்ந்தால் தெளிவு பிறக்கும் 
மாற்றமும் பிறக்கும்</p><p> 
நன்றி</p><p> 
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/078b6fef-18dc-4bfa-9135-0e0e94e3b63a/26-6a88408e60f92.webp' /></p>]]></content>
            <updated>2026-08-21T12:39:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Onam Special: ஓணம் சத்யா கேரளாவின் பாரம்பரிய விருந்தில் உணவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-is-special-in-onam-sadhya-feast-1787309028"></link>
            <id>https://manithan.com/article/what-is-special-in-onam-sadhya-feast-1787309028</id>
            <summary type="text">கேரளாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஓணம் ஒன்று. அந்த ஓணம் பண்டிகை நாளில் இடம் பெறக்கூடிய ஓணம் சத்யா என்பது கேரளாவில் பாரம்பரிய உணவு விருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஓணம் ஒன்று. அந்த ஓணம் பண்டிகை நாளில் இடம் பெறக்கூடிய ஓணம் சத்யா என்பது கேரளாவில் பாரம்பரிய உணவு விருந்தாகும். மேலும், "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழிக்கு ஏற்ப ஓணம் பண்டிகையில் உணவுக்கும் விருந்தோம்பலுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. </p><p>மேலும், ஓணம் பண்டிகை சுமார் பத்து நாட்கள் கொண்டாட கூடிய ஒரு முக்கியமான பண்டிகையாகும். அதில் திருவோணம் நாளில் சத்யா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்றாக அமர்ந்து இந்த பாரம்பரிய விருந்தை மகிழ்ந்து உண்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09d461fa-30e0-4e97-bd24-45f0c03de4a2/26-6a882be6590f6.webp' /></p><p></p><p> </p><p>இந்த உணவு ஓணம் சத்யாவில் பலவிதமான சைவ உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. சாதம், பருப்பு, நெய், சாம்பார், ரசம், மோர் அவியல், தோரன், காலன், ஓலன், எரிசேரி, கூட்டு, பச்சடிக்கு செடி உள்ளிட்ட பல உணவு வகைகள் இதில் இடம் பெறுகிறது. </p><p>அதேபோல், இனிப்பு வகைகளில் அடை பிரதமன், பால், பாயாசம் உள்ளிட்ட பாயாசங்கள் முக்கிய இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சர்க்கரை புரட்டி, பப்படம், ஊறுகாய் உள்ளிட்டவையும் சத்யா விருந்து சுவையை இன்னும் அதிகரிக்கிறது. மற்றொரு சிறப்பு உணவு வாழை இலையில் தான் பரிமாறப்படுகிறது.</p><p> வாழை இலை உணவு பரிமாறும் பாரம்பரியம் கேரளாவின் கலாச்சாரத்துடன் நீண்ட காலமாக ஒன்றிணைந்தது. சத்யாவில் இடம்பெறும் உணவுகளில் தேங்காய் பால், தேங்காய், தயிர் மோர் போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebb0c29a-3929-4d12-83cb-ee8b6310a129/26-6a882be713775.webp' /></p><p></p><p> இதனால் ஓணம் சத்யா உணவுகளுக்கு தனித்துவமான கேரள சுவையும் மனமும் கிடைக்கிறது. அதை போல், பலவிதமான உணவுகள் இடம் பெறும் என்று ஓணம் சத்யாவில் செரிமானத்திற்கு உதவக்கூடிய வகைகள் இஞ்சி கறி, இஞ்சி புளி போன்ற உணவுகளும் சேர்க்கப்படுகிறது. </p><p>இவற்றில் உள்ள புளிப்பு காரம் மற்றும் நறுமணம் சத்யா விருந்தின் சுவையை மேலும் அதிகரிக்கிறது. முக்கியமாக ஓணம் சத்யா என்பது வெறும் உணவு விருந்து மட்டுமல்ல குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் என எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவை பகிர்ந்து கொள்வதின் வழியாக குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி அதோடு விருந்தோம்பலை வெளிப்படுத்தும் கேரளாவின் முக்கியமான பாரம்பரிய நிகழ்வாகவும் இது திகழ்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T11:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sowcar-janaki-dead-1787305007"></link>
            <id>https://manithan.com/article/sowcar-janaki-dead-1787305007</id>
            <summary type="text">Sowcar Janaki Dead: உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை சௌகார் ஜானகி காலமானார், அவருக்கு வயது 94.சௌகார் ஜா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sowcar Janaki Dead: உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை சௌகார் ஜானகி காலமானார், அவருக்கு வயது 94.</p><h2>சௌகார் ஜானகி மரணம்</h2><p>
</p><p>
1950, 60 களில் முன்னணி நாயகியாக வலம்வந்தார் சௌகார் ஜானகி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட பல இந்திய மொழிகளில் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c911f733-6b4c-42f7-a5df-40c35aea4a10/26-6a881cbe44d47.webp' /><br></p><p>தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். </p><p>இதனையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
</p><p>

2022ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca88194e-5d80-4fce-872d-66014af8595e/26-6a881cbeed292.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-21T09:39:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[healthy fig pickle recipe: மருத்துவக் குணங்கள் நிறைந்த அத்திக்காய் ஊறுகாய்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/amazing-health-benefits-of-cluster-fig-and-pickle-1787154456"></link>
            <id>https://manithan.com/article/amazing-health-benefits-of-cluster-fig-and-pickle-1787154456</id>
            <summary type="text">அத்தி மரத்தின் பட்டை, பிஞ்சு, காய், பழம் மற்றும் பால் ஆகியவை பாரம்பரியமாகப் பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளைக் கொண்டதாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அத்தி மரத்தின் பட்டை, பிஞ்சு, காய், பழம் மற்றும் பால் ஆகியவை பாரம்பரியமாகப் பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளைக் கொண்டதாகக் கருதப்படுகின்றன. </p><p>குறிப்பாக, அத்திப்பட்டை, அத்திப்பிஞ்சு மற்றும் அத்திக்காய் ஆகியவை சதை மற்றும் நரம்புகளைச் சுருங்கச் செய்யும் தன்மை கொண்டதாகவும், அத்திப்பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம் மற்றும் பால் ஆகியவை உடல் வலிமைக்கும்&nbsp; இனப்பெருக்க உறுப்புகள் வலிமைபெறவும் உதவுவதாகவும் பாரம்பரிய மருத்துவக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc366ea8-281d-4eea-92e0-3390bbbb5edf/26-6a8730df33724.webp' /></p><p></p><p>மேலும், சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு காரணமாக ஏற்படும் அதிக தாகம், நாவறட்சி மற்றும் உடல் வெப்பம் போன்ற பல்வேறு பிரச்சினைகளைக் குறைக்க அத்தி பயன்படுவதாகக் கூறப்படுகிறது.</p><p> இரத்தத்தைச் சுத்தப்படுத்துதல், மூட்டு வீக்கம் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சினைகளைக் குறைத்தல், நீரிழிவு காரணமாக ஏற்படும் புண்களை ஆற்ற உதவுதல் போன்ற மருத்துவப் பயன்களும் அத்திக்கு இருப்பதாக பாரம்பரிய மருத்துவத்தில் குறிப்பிடப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dde3e918-bb7c-4be7-929d-aefe6f80078f/26-6a8730dfd74eb.webp' /></p><p>இவ்வாறு பல்வேறு மருத்துவப் பயன்பாடுகள் கொண்டதாகக் கருதப்படும் அத்திக்காயை சுவையான உணவாகவும் நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். </p><p>குறிப்பாக, அத்திக்காயைக் கொண்டு தயாரிக்கப்படும் ஊறுகாய் சுவையில் நாவூரச் செய்வதோடு, அத்திக்காயை ஒரு வித்தியாசமான முறையில் உணவில் சேர்க்கும் சிறந்த வழியாகவும் அமைகிறது.</p><p>

அப்படிப்பட்ட மருத்துவப் பாரம்பரியமும், தனித்துவமான சுவையும் கொண்ட அத்திக்காயில் நாவூரும் சுவையில் அசத்தலான ஊறுகாய் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33b2a166-f2da-4e3a-8c43-efcc2c2620c0/26-6a8730e08dfde.webp' /></p><h2>தேவையான பொருட்கள்
</h2><p>அத்திக்காய் – ¼ கிலோ
</p><p>காய்ந்த மிளகாய் – 50 கிராம்
</p><p>மிளகு – 5 கிராம்
</p><p>தனியா – 5 கிராம்</p><p>
மஞ்சள் – 5 கிராம்
</p><p>ஓமம் – 5 கிராம்
</p><p>பெருங்காயம் – 5 கிராம்
</p><p>உப்பு – தேவையான அளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/374c02ee-817a-4c32-baf7-c9a0edc6087a/26-6a8730e13d6ba.webp' /></p><p></p><h2>செய்முறை</h2><p>
முதலில், அத்திக்காயைத் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் அவற்றை நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.</p><p>அதனையடுத்து, அத்திக்காயின் காம்பை நீக்கி, இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய அத்திக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
</p><p>
பின்னர், இந்தக் கலவையை நன்கு சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் இருக்கும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதன் வாயை சுத்தமான துணியால் கட்டி மூடி வைக்க வேண்டும்.&nbsp;</p><p> பாத்திரத்தை தொடர்ந்து ஒரு வாரம் வரை வெயிலில் வைத்து ஊறவிடவும்.

ஒரு வாரத்திற்குப் பிறகு ஊறுகாய் நன்கு பதமாகியதும் எடுத்தால், ஆரோக்கிய நன்மைகளும், மருத்துவ பயன்களும் நிறைந்த அத்திக்காய் ஊறுகாய் தயார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T08:00:21+00:00</updated>
        </entry>
    </feed>
