<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-16T09:29:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் ஓபன் டாக்.. இணையத்தில் வைரல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/shriya-saran-open-talk-about-tamilnadu-cm-vijay-1786863558"></link>
            <id>https://manithan.com/article/shriya-saran-open-talk-about-tamilnadu-cm-vijay-1786863558</id>
            <summary type="text">shriya sarantalk about cm vijay : நடிகை ஸ்ரேயா சரண் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் குறித்து சமீபபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.முதலமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>shriya sarantalk about cm vijay : நடிகை ஸ்ரேயா சரண் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் குறித்து சமீபபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><h2>முதலமைச்சர் விஜய்&nbsp;</h2><p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், கடந்த 2024-ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கி தனக்கென ஒரு கட்சியை தொடங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92d120c2-4ab1-4092-8db1-751ab971f61d/26-6a816f3cdd7c7.webp' /></p><p></p><p> </p><p>மக்கள் மத்தியில் கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து, இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று வரலாற்று சாதனை படைத்துள்ளதுடன் ஆட்சியும் சிறப்பாக நடத்தி வருகின்றார்.</p><p> இதையடுத்து, திரையுலகைச் சேர்ந்த பலரும் விஜய்யின் அரசியல் பயணம் மற்றும் ஆட்சி குறித்து தங்களது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.</p><p>
</p><p>
அந்த வகையில், பிரபல நடிகை ஸ்ரேயா சரண், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி குறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாக விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdd56d5e-2585-44f3-a7ec-4c711a7dccdd/26-6a816f3d8fda2.webp' /></p><h2>விஜய்யை பாராட்டிய ஸ்ரேயா சரண்
</h2><p>ஸ்ரேயா சரண் பேசுகையில், “தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார். மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், அவர் மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் இருப்பது பாராட்டுக்குரியது. </p><p>மக்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டு வருகிறார்.

மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர் செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c2e36cc-4516-4ff8-b4dc-1249194fe939/26-6a816f3e43170.webp' /></p><p></p><p>மேலும், “இனி வரும் காலங்களிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் பயணம் மிகவும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்” என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.&nbsp; இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a> </a><b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b><a>&nbsp; </a>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T08:36:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Koundampalayam Chicken: சன்டே ஸ்பெஷல் கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு... ரெசிபி இதோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tasty-koundampalayam-chicken-kuzhambu-recipe-1786859317"></link>
            <id>https://manithan.com/article/tasty-koundampalayam-chicken-kuzhambu-recipe-1786859317</id>
            <summary type="text">Koundampalayam Chicken curry: ஞாயிற்றுக்கிழமை என்றாலே பல வீடுகளில் அசைவ விருந்து என்பது தவிர்க்க முடியாத ஒரு வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, சிக்கன் இல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Koundampalayam Chicken curry: ஞாயிற்றுக்கிழமை என்றாலே பல வீடுகளில் அசைவ விருந்து என்பது தவிர்க்க முடியாத ஒரு வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, சிக்கன் இல்லாமல் சண்டே மதிய உணவு முழுமையடையாது என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.</p><p> வாரம் முழுவதும் வேலை, பள்ளி என பரபரப்பாக இருக்கும் குடும்பத்தினர், ஞாயிற்றுக்கிழமை மதிய உணவை ஒன்றாக அமர்ந்து ரசித்து சாப்பிடுவதும் ஒரு சிறிய கொண்டாட்டமாகவே மாறிவிடுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bb13817-ba3b-4a1f-8e1c-b655680ccd8a/26-6a815479844c5.webp' /></p><p>

இன்றும் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கத் திட்டமிட்டுள்ளீர்களா?எப்போதும் செய்வது போல சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் அல்லது சிக்கன் 65 என ஒரே மாதிரியான உணவுகளைச் செய்வதற்குப் பதிலாக, இந்த முறை குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தும் வகையில் சற்று வித்தியாசமான, மணமணக்கும் மற்றும் சுவையான சிக்கன் சைடு டிஷ் ஒன்றைச் செய்து பார்க்கலாம்.
</p><p>
அதுவும் அதிக சிரமம் இல்லாமல், வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய ஒரு சிறப்பான, ‘கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு’ செய்முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0590cc9b-eaea-43ef-b4b9-238b9dc07074/26-6a815478d0269.webp' /></p><p></p><h2>தேவையான பொருட்கள்
</h2><p>சிக்கன் – ¾ கிலோ
</p><p>பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
</p><p>சின்ன வெங்காயம் – 100 கிராம்</p><p>தக்காளி – 1 (நறுக்கியது)
</p><p>பூண்டு – 10 பல்</p><p>
இஞ்சி – சிறிய துண்டு
</p><p>சீரகம் – 1 டீஸ்பூன்
</p><p>சோம்பு – ½ டீஸ்பூன்
</p><p>மிளகு – ½ டீஸ்பூன்</p><p>
பட்டை – 2 துண்டு
</p><p>கிராம்பு – 4
</p><p>கறிவேப்பிலை – சிறிதளவு</p><p>
கொத்தமல்லி – சிறிதளவு
</p><p>மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்</p><p>
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்</p><p>
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்</p><p>
தேங்காய் – ½ மூடி (துருவியது)
</p><p>உப்பு – தேவையான அளவு
</p><p>நல்லெண்ணெய் – தேவையான அளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c33bcb1-ee12-4a85-b32e-f5efae531897/26-6a81547a39122.webp' /></p><h2>
செய்முறை</h2><p>
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.</p><p>
வெங்காயம் ஓரளவு வதங்கியதும் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அணைக்கவும். இதை சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e566f29-9846-4e81-8c50-b1273de310fd/26-6a81547ade81b.webp' /></p><p>
ஆறியதும் வதக்கிய கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.</p><p>

அடுத்து அதே பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67b48eff-5f8a-4562-ac98-5d95e87cefdb/26-6a81547b93bef.webp' /></p><p></p><p> பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அது நன்றாக மென்மையாகும் வரை வதக்கவும்.</p><p>

தக்காளி நன்றாக வதங்கியதும் கழுவி சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து நன்றாகக் கிளறி வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, மூடி வைத்து சுமார் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
</p><p>
பின்னர் மூடியைத் திறந்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்த்து நன்றாகக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மீண்டும் மூடி வைத்து 10–15 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிட வேண்டும்.</p><p>
சிக்கன் நன்றாக வெந்து, குழம்பு தேவையான பதத்திற்கு வந்ததும் மூடியைத் திறக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை கிளறி அடுப்பை அணைத்தால், அவ்வளவுதான்! சுவையான, மணமணக்கும் கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T06:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... அடுத்த 7 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி அமைய போகுது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/weekly-horoscope-for-16-august-2026-to-22-august-1786854870"></link>
            <id>https://manithan.com/article/weekly-horoscope-for-16-august-2026-to-22-august-1786854870</id>
            <summary type="text">Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள் அனைத்தும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளுடன் தொடர்புடையவை என்று தொன்று தொட்டு&amp;nbsp; ஜோதிடத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள் அனைத்தும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளுடன் தொடர்புடையவை என்று தொன்று தொட்டு&nbsp; ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. </p><p>அந்த வகையில், அடுத்த 7 நாட்கள் 12 ராசிக்காரர்களுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் எவ்வாறு அமையப் போகிறது என்பதை&nbsp; ஜோதிட&nbsp; நிபுணர்கள் கணித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba4b79d7-d45c-4c33-95ff-bf3787ad3e11/26-6a814465bbeaa.webp' /></p><p>அதன் பிரகாரம்,&nbsp; 2026 ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 22 வரை உள்ள காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்து விரிவான வார ராசிபலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>12 ராசிகளுக்குமான சிறப்பு கணிப்பு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0cea2b4-cbff-484c-8cb0-da4f7cc3300f/26-6a814467473ae.webp' /></p><p><b>மேஷம்
</b></p><p>இந்த வாரம் நிதி இழப்பு, அவதூறு போன்றவற்றைத் தவிர்க்க குறுக்குவழிகளை நாட வேண்டாம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.</p><p> வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது கவனம் தேவை. செலவுகள் வருமானத்தை விட அதிகரிக்கலாம். மாணவர்கள் வெற்றிக்காக கூடுதல் உழைப்பு தேவை.</p><p><b>
ரிஷபம்
</b></p><p>இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்கும். வீட்டிலும் உறவுகளிலும் பதற்றம் ஏற்படலாம்; வாழ்க்கைத்துணையின் உணர்வுகளை மதிப்பது அவசியம். வியாபாரத்தில் தடைகள், பணிச்சுமை மற்றும் நிதி நெருக்கடி ஏற்படலாம். அவசர முதலீடுகளைத் தவிர்த்து, பொறுமையுடன் செயல்படுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.</p><p><b>

மிதுனம்
</b></p><p>மகிழ்ச்சியான வாரமாக அமையும். செல்வாக்கு மிக்கவர்கள் அல்லது நண்பர்களின் உதவியால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். </p><p>நீண்ட தூரப் பயணம் நற்பலன் தரும். வாரத்தின் பிற்பகுதியில் நிதிநிலை மேம்படும்; புதிய வருமான வாய்ப்புகளும் உருவாகும். மாணவர்கள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவார்கள். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.</p><p>
</p><p><b>
கடகம்
</b></p><p>இந்த வாரம் திட்டமிட்டு உழைத்தால் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியும் லாபமும் கிடைக்கும். சோம்பலைத் தவிர்த்து கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். </p><p>பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்; நிலுவைப் பணிகளும் முடியும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.</p><p></p><p><b>சிம்மம்</b></p><p>சற்று சவாலான வாரமாக இருக்கும். பணியிடத்தில் பொறுப்புகளும் பிரச்சினைகளும் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், வாரத்தின் நடுப்பகுதியில் நிதி ரீதியில் முன்னேற்றம் ஏற்படும்.</p><p>ஆபத்தான முதலீடுகளைத் தவிர்த்து, ஒப்பந்தங்களை நன்கு ஆராய்ந்து முடிவெடுக்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்திலும் சில கருத்து வேறுபாடுகள் உருவாகி பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/602909c3-7649-419b-b14d-1432d5201b95/26-6a814467ea2d0.webp' /></p><p><b>
கன்னி</b></p><p>
அதிர்ஷ்டமான வாரம். தொழில், வியாபாரம் மற்றும் நிதியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வருமானம் அதிகரிக்கவும், பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. </p><p>வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். சொத்து விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பெற்றோர் மற்றும் வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். அவசர முடிவுகளை மட்டும் தவிர்ப்பது நல்லது.</p><p><b>

துலாம்
</b></p><p>மற்றவர்களுடன் பழகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வாரம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை அவசரப்படாமல் எடுக்கவும்.</p><p>முதலீடு செய்யும் முன் நம்பகமானவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. பயணங்கள் போக வேண்டிய சூழல் உருவாகும். உறவுகளில் சுமாரான நிலையே காணப்படும்.
</p><p><b>
விருச்சிகம்
</b></p><p>நிம்மதியான வாரமாக அமையும். நண்பர்கள் அல்லது செல்வாக்கு மிக்கவர்களின் உதவியால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.</p><p> நிதி பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. நீண்ட தூரப் பயணம் நற்பலன் தரும். வாரத்தின் பிற்பகுதியில் நிதிநிலை மேம்படும்; புதிய வருமான வாய்ப்புகளும் உருவாகும். மாணவர்கள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.</p><p><b>
தனுசு
</b></p><p>சற்று போராட்டம் நிறைந்த வாரமாக இருக்கலாம்.பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மோதலாக மாற வாய்புள்ளது. எனவே வாக்குவபாதங்களை தவிர்ப்பது நல்லது.&nbsp;</p><p>கடின உழைப்புக்கேற்ற பலன் தாமதமாகலாம். நிதி விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும்; செலவுகளும் அதிகரிக்கலாம். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதுடன், உடல்நலத்திலும் கவனம் செலுத்துங்கள்.</p><p><b>
மகரம்
</b></p><p>அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும் வாரம். கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் வெற்றியையும் லாபத்தையும் தரும். வேலை செய்பவர்களுக்கு பெரிய பொறுப்புகள் அல்லது பதவி கிடைக்கும்.</p><p> வருமானமும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/896f43f8-f2a4-44cd-a27b-34f5d49f93ce/26-6a8144689d751.webp' /></p><p></p><p>
</p><p><b>
கும்பம்
</b></p><p>பணியிடத்தில் மரியாதையும் முன்னேற்றமும் அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன், சிக்கிய பணமும் திரும்பக் கிடைக்கும்.</p><p> குடும்ப உறவுகளில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், குடும்பத்தினரின் கருத்துகளை மதிக்கவும். குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.</p><p><b>

மீனம்
</b></p><p>சிறப்பான வாரமாக அமையும். வருமானம் அதிகரித்து, பொருளாதார பிரச்சினைகள் குறையும்; சேமிப்பும் அதிகரிக்கும். வேலை மாற்றத்துக்கு ஏற்ற காலம் இது.</p><p> சிலருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். பங்குச் சந்தை முதலீட்டில் கவனம் தேவை. குடும்பத்தில் திருமணம் தொடர்பான நல்ல செய்திகள் வரலாம். வாழ்க்கைத்துணையுடன் உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கிய விடயத்தில் கவனம் தேவை.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T05:02:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்மா இறந்த செய்தி கேட்டும் 5 ஷாட்களை முடித்து கொடுத்த ராதிகா! நெகிழ்ச்சியில் படக்குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vas-team-open-radhikaas-dedication-towards-cinema-1786785078"></link>
            <id>https://manithan.com/article/vas-team-open-radhikaas-dedication-towards-cinema-1786785078</id>
            <summary type="text">radhikaas dedication towards cinema : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>radhikaas dedication towards cinema : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் அளித்துள்ள புரமோஷனல் பேட்டியில் நடிகை ராதிகாவின் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு குறித்து பகிர்ந்துள்ள விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.&nbsp;</p><h2>ராதிகாவின் நெகிழ்ச்சி செயல்&nbsp; &nbsp;&nbsp;</h2><p>படத்தின் முக்கியமான காமெடி காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது, ராதிகாவின் தாயார் உயிரிழந்த செய்தி அவருக்கு கிடைத்துள்ளது. அப்போது காட்சியில் இன்னும் ஐந்து ஷாட்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்ததால், அதனை முடித்துவிட்டு செல்லலாமா என ராதிகா இயக்குநர் வெங்கியிடம் கேட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21c4152c-3c34-4810-8f4f-7e63d0865ff9/26-6a8032e0a5f27.webp' /></p><p></p><p>இதுகுறித்து இயக்குநர் வெங்கி கூறுகையில், தாயார் இறந்த செய்தி கிடைத்த நிலையிலும், காட்சியை முடித்துவிட்டு செல்ல ராதிகா விரும்பியதாகவும், அந்த நேரத்தில் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>நடிகை மமிதா பைஜூவும் ராதிகாவின் மனநிலையை நினைத்து மிகவும் வேதனைப்பட்டதாகக் கூறியுள்ளார். தன் தாயைப் பற்றி ராதிகா படப்பிடிப்பின்போது பலமுறை பகிர்ந்துகொண்டதாகவும், அந்தச் செய்தி கிடைத்த பிறகும் அவர் முழு ஈடுபாட்டுடன் காமெடி காட்சியில் நடித்தது தன்னை நெகிழச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db2115b3-4408-4d93-b395-586475c58bd5/26-6a8032e156b73.webp' /></p><p>
நடிகர் சூர்யா, தாயாருக்கும் தான் சார்ந்துள்ள கலைக்கும் ராதிகா அளிக்கும் சமமான மரியாதையே இப்படிப்பட்ட அர்ப்பணிப்புக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து ராதிகா கூறுகையில், அந்தக் காட்சியின் 85 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்ததாகவும், மீதமிருந்த ஐந்து ஷாட்களை முடிக்காமல் சென்றால் மீண்டும் இரண்டு மாதங்கள் கழித்தே அதனை படமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d269eaf-bd0a-4c24-97e1-9b437b33fcaa/26-6a8032e231ae8.webp' /></p><p></p><p> </p><p>மேலும், அதே உணர்வை மீண்டும் கொண்டு வந்து நடிப்பது சாத்தியமற்றதாக இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக, தன் தாயார் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தபோதும், “நீ கிளம்பி ஷூட்டிங் போ” என்று தன்னை அனுப்பி வைத்ததாக ராதிகா தெரிவித்துள்ளார். </p><p>தாயை இழந்த துயரத்திலும், அவர் கூறிய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து படப்பிடிப்பை நிறைவு செய்த ராதிகாவின் அர்ப்பணிப்பு தற்போது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T04:19:07+00:00</updated>
        </entry>
    </feed>
