<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-06T12:40:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI போலி விளம்பரங்கள்: ரூ.15 கோடி இழப்பீடு கோரி நீதிமன்றம் சென்ற நடிகை ஸ்ருதி ஹாசன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/shruti-haasan-files-15-crore-lawsuit-against-ai-ad-1786011782"></link>
            <id>https://manithan.com/article/shruti-haasan-files-15-crore-lawsuit-against-ai-ad-1786011782</id>
            <summary type="text">Shruti Haasan : செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், பிரபலங்களின் புகைப்படங்கள், குரல் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்தி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shruti Haasan : செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், பிரபலங்களின் புகைப்படங்கள், குரல் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்தி போலி விளம்பரங்கள் உருவாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக நடிகை ஸ்ருதி ஹாசன் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><h2> நடிகை ஸ்ருதி ஹாசன் வழக்கு</h2><p>

தனது பெயர், புகைப்படம் மற்றும் அடையாளத்தை அனுமதியின்றி பயன்படுத்தி, ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் போலி விளம்பரங்கள் வெளியிடப்படுவதாகக் குற்றம்சாட்டி, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஸ்ருதி ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad7213f9-e791-4578-bac4-a33b07fcfa11/26-6a7464f8de28e.webp' /></p><p></p><p>சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கு ஏற்பட்ட நற்பெயர் மற்றும் வணிக மதிப்பு பாதிப்புக்காக ரூ.15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.</p><p>
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரபலங்கள் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை பரிந்துரைப்பது போலவும், அவர்கள் நடித்ததே இல்லாத விளம்பரங்களில் தோன்றுவது போலவும் சித்தரித்து சமூக வலைதளங்களில் போலி விளம்பரங்கள் பரப்பப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a65d684c-c0a8-4a7b-b01f-08703ebb0041/26-6a7464f991b7a.webp' /></p><p> இதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, பிரபலங்களின் நற்பெயர் மற்றும் வணிக மதிப்பும் பாதிக்கப்படுகிறது.</p><p>

குறிப்பாக நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குரல்கள் இணையத்தில் எளிதாகக் கிடைப்பதால், அவற்றை பயன்படுத்தி போலி விளம்பரங்களை உருவாக்குவது மேலும் எளிதாகியுள்ளது.அந்த வகையில், இந்த மோசடியின் சமீபத்திய பாதிக்கப்பட்டவராக நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84b42e62-d9cc-4ced-b83b-99a957d549ee/26-6a7464fa4526d.webp' /></p><p></p><p>
இதற்கு முன்பும் நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் சல்மான் கான் மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள், தங்களது பெயர் மற்றும் அடையாளத்தை அனுமதியின்றி பயன்படுத்துவதைத் தடுக்க நீதிமன்றங்களை நாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:47:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவில் விழுந்து நொறுங்கிய SpaceX ராக்கெட்: 8,690 கி.மீ வேக மோதலால் உருவான புதிய பள்ளம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/spacex-rocket-crashes-into-moon-creates-new-crater-1786005568"></link>
            <id>https://manithan.com/article/spacex-rocket-crashes-into-moon-creates-new-crater-1786005568</id>
            <summary type="text">Defunct SpaceX rocket : எலான் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டின் மேல் பகுதி, மணிக்கு சுமார் 8,690 கி.மீ வேகத்தில் நிலவின் மேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Defunct SpaceX rocket : எலான் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டின் மேல் பகுதி, மணிக்கு சுமார் 8,690 கி.மீ வேகத்தில் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைராலாகி வருகின்றது.</p><p>சுமார் 4,000 கிலோ எடையுள்ள இந்த ராக்கெட் பாகம் மோதியதில், நிலவில் 20 முதல் 30 மீட்டர் அகலமுள்ள புதிய பள்ளம் உருவாகியுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffffec71-300c-434b-bc1f-5e3974f01122/26-6a744e7f3a7e4.webp' /></p><p></p><h2>நிலவில் ஏற்பட்ட பள்ளம்</h2><p>கடந்த 2025 ஜனவரியில் நிலவு ஆய்வு விண்கலங்களை அனுப்பிய பால்கன் 9 ராக்கெட்டின் இரண்டாம் பகுதி, தனது பணியை முடித்த பின்னர் விண்வெளியில் கட்டுப்பாடின்றி சுற்றி வந்தது. </p><p>சூரியனின் ஈர்ப்பு விசை உள்ளிட்ட காரணங்களால் அதன் பாதை மாறி, இறுதியில் நிலவை நோக்கி நகர்ந்து மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

நிலவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ‘ஐன்ஸ்டீன் பள்ளம்’ அருகே இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. சுமார் 3 டன் டி.என்.டி வெடிப்புக்கு சமமான சக்தியுடன் ஏற்பட்ட தாக்கத்தால், நிலவின் மேற்பரப்பில் இருந்து தூசிகளும் பாறைத் துகள்களும் விண்வெளியில் சிதறியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a382ef-3087-4ed4-8d80-152c18470bd8/26-6a744e7fe0286.webp' /></p><p></p><p>

இந்தச் சம்பவம் பூமிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என்று நாசா உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், செயற்கை விண்வெளிப் பொருட்கள் நிலவில் மோதும் போது ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.</p><p>

நாசாவின் ‘லூனார் ரீகானைசன்ஸ் ஆர்பிட்டர்’ செயற்கைக்கோள் மூலம் உருவான புதிய பள்ளம் மற்றும் நிலவின் மேற்பரப்பு மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/eMjhOtsNVM">pic.twitter.com/eMjhOtsNVM</a></p>&mdash; Elon Musk (@elonmusk) <a href="https://x.com/elonmusk/status/2085183860489552115?ref_src=twsrc%5Etfw">August 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T09:09:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்த்த மகள்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/daughters-watch-fathers-funeral-via-video-call-1786000670"></link>
            <id>https://manithan.com/article/daughters-watch-fathers-funeral-via-video-call-1786000670</id>
            <summary type="text">Daughters attend father’s funeral on video call : மும்பையைச் சேர்ந்த சிவ்சரண் ராம் ரத்தன் குப்தாவின் வாழ்க்கை முழுவதும் அவரது மூன்று மகள்களைச் சுற்றிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Daughters attend father’s funeral on video call : மும்பையைச் சேர்ந்த சிவ்சரண் ராம் ரத்தன் குப்தாவின் வாழ்க்கை முழுவதும் அவரது மூன்று மகள்களைச் சுற்றியே அமைந்திருந்தது. </p><p>அவர்களை வளர்ப்பது, நல்ல கல்வி அளிப்பது, வாழ்க்கையில் முன்னேற்றம் அடையச் செய்வது, திருமணம் செய்து வைப்பது என தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மகள்களுக்காகவே அர்ப்பணித்தார்.</p><p>

குப்தாவுக்கு மூன்று மகள்கள். அவர்களில் இருவர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். மூவருக்கும் திருமணம் முடிந்து, அவர்கள் தங்களது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c443638e-736d-47f0-85d9-bf83212c1f78/26-6a743a8c40e73.webp' /></p><p></p><p>ஒரு காலத்தில் மனைவியுடன் ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த குப்தா, சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்தார். அதன்பிறகு தனிமையில் வாழ்ந்து வந்த அவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்த்த மகள்கள்</h2><p>நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார் குப்தாவின் மறைவு குறித்து மும்பை, நேபாளம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் வசித்து வந்த அவரது மூன்று மகள்களுக்கும் முதியோர் இல்ல நிர்வாகம் தகவல் தெரிவித்தது.ஆனால், நேரில் வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்க தங்களுக்கு முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.</p><p>
இதனால், தந்தையின் இறுதி நிகழ்வில் அவர்கள் நேரடியாக கலந்துகொள்ள முடியாமல், காணொளி அழைப்பு மூலம் தொலைவில் இருந்து பங்கேற்றனர்.முதியோர் இல்ல நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் சிவ்சரணின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.</p><p><b>இதுகுறித்து முதியோர் இல்ல நிர்வாகி ஆனந்த் குமார் கூறுகையில்,</b></p><p>“சிவ்சரண் தனது மகள்களுடன் தொலைபேசி மூலம் அடிக்கடி பேசி வந்தார்.அவரிடம் ஒரு செல்போன் இருந்தது. அதன் மூலமாகவே மகள்களுடன் தொடர்பில் இருந்தார். </p><p>ஆனால், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு, மகள்களின் தொலைபேசி அழைப்புகள் குறைந்து, பின்னர் முற்றிலும் நின்றுவிட்டன.

சிவ்சரணின் உடல்நிலை மோசமடைந்து வருவதை அவரது இறப்புக்கு சுமார் 20 நாட்களுக்கு முன்பே மகள்களிடம் தெரிவித்தோம்.</p><p>அவரை வந்து பார்க்குமாறும் கூறினோம். ஆனால், அவர்களால் வர முடியவில்லை.

அவர் உயிரிழந்த பிறகு, மீண்டும் மகள்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் சோனிபட் வந்தால் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக தெரிவித்தோம்.</p><p></p><p> </p><p>ஆனால், பயணம் செய்து வருவதற்கு தங்களுக்கு நேரமில்லை என்று அவர்கள் கூறிவிட்டனர். பின்னர், அவர்கள் வீடியோ அழைப்பு மூலம் இறுதிச் சடங்கில் இணைந்தனர்” என்றார்.

நேபாளத்தில் ஆசிரியராக பணியாற்றும் அனிதா, தனது தந்தையின் இறுதிச் சடங்குகளை முறையாக நடத்துமாறு கேட்டுக்கொண்டு, அதற்காக இணையவழியில் ரூ.5,100 அனுப்பினார்.</p><p>தகனச் சடங்கு முடிந்த பிறகு, நிகழ்வின் காணொளிகளை தங்களுக்கு அனுப்புமாறும் மகள்கள் கேட்டுக்கொண்டனர். இறுதிச் சடங்கு நடைபெறும் நேரத்தில், அவர்களில் ஒருவர், “இதற்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? எங்களுக்கு சாப்பிடவும் குளிக்கவும் வேண்டியுள்ளது” என்று கேட்டதாக நிர்வாகி தெரிவித்தார்.
</p><p>
முதலில், தந்தையின் அஸ்தியை தங்களிடம் ஒப்படைக்குமாறு குடும்பத்தினர் கேட்டிருந்தனர். ஆனால், பின்னர் சோனிபட் நகருக்கு நேரில் வர இயலாது என்று கூறிய அவர்கள், அந்த அஸ்தியை கங்கை நதியில் கரைத்துவிடுமாறு முதியோர் இல்ல நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டனர்.
</p><p>
வாழ்நாள் முழுவதும் மகள்களின் எதிர்காலத்திற்காக உழைத்த ஒரு தந்தையின் இறுதி பயணம், அவர்களது நேரடி வருகையின்றி முடிவடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b style=""><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T08:00:41+00:00</updated>
        </entry>
    </feed>
