<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-09-16T20:24:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இட்லி, தோசைக்கு செம காம்பினேஷன்... பெங்களூர் பாணி தேங்காய் சட்னி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bangalore-style-tasty-coconut-chutney-1789567246"></link>
            <id>https://manithan.com/article/bangalore-style-tasty-coconut-chutney-1789567246</id>
            <summary type="text">Bangalore Hotel Style Coconut Chutney : தென்னிந்திய உணவு வகைகள் என்றாலே, இட்லி, தோசை, வடை போன்ற பாரம்பரிய உணவுகளுடன் இணைந்து நினைவுக்கு வருவது சுவையான...</summary>
            <content type="html"><![CDATA[<p>Bangalore Hotel Style Coconut Chutney : தென்னிந்திய உணவு வகைகள் என்றாலே, இட்லி, தோசை, வடை போன்ற பாரம்பரிய உணவுகளுடன் இணைந்து நினைவுக்கு வருவது சுவையான சட்னி வகைகள்தான். </p><p>குறிப்பாக, தேங்காய் சட்னிக்கு தென்னிந்திய சமையலில் தனி முக்கியத்துவம் உண்டு. எளிமையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதுடன், அதன் மணமும், மென்மையான சுவையும் பலரது உணவு மேசையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad4ebfa8-9756-40a3-bf1d-18be97b4ee05/26-6aaaaa48dded2.webp' /></p><p>
</p><p>
தேங்காய் சட்னி இன்று தென்னிந்தியாவைத் தாண்டி உலகின் பல பகுதிகளிலும் விரும்பி சுவைக்கப்படும்&nbsp; சைட்டிஷ்சாக திகழ்கின்றது.</p><p>அதேவேளை, இதனைத் தயாரிக்கும் முறையும் பயன்படுத்தப்படும் பொருட்களும் பிராந்தியத்திற்கு ஏற்ப சிறிய அளவில் மாறுபடுகின்றன.ஒவ்வொரு பகுதியினரும் தங்களுக்கே உரிய பாணியில் தேங்காய் சட்னியைத் தயாரித்து, அதற்கு தனித்துவமான சுவையை வழங்குகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4361111c-db46-4b2a-af59-fabcf7c826e3/26-6aaaaa4998d0f.webp' /></p><p></p><p>
அந்த வகையில், பெங்களூர் பாணியில் மணமும் சுவையும் நிறைந்த, வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கக்கூடிய தேங்காய் சட்னியை எவ்வாறு செய்வது என்பதை இந்தப் பதிவில் விரிவாக</p><h2>தேவையான பொருட்கள்</h2><p>
தேங்காய் துருவல் – ½ கப்
</p><p>
பொட்டுக்கடலை – ¼ கப்
</p><p>
பச்சை மிளகாய் – 3முதல் 5
</p><p>
புளி – சிறிய துண்டு
</p><p>
சீரகம் – ¼ தேக்கரண்டி
</p><p>
பூண்டு – 2 பற்கள்
</p><p>
கறிவேப்பிலை – 1 கொத்து
</p><p>
புதினா – சிறிதளவு
</p><p>
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
</p><p>
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
</p><p>
உப்பு – தேவைக்கேற்ப
</p><p>
சர்க்கரை – ஒரு சிட்டிகை
</p><p>
தண்ணீர் – தேவையான அளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9da8b298-b372-4088-98d4-22d97866e5e6/26-6aaaaa4a4e031.webp' /></p><p><b>

தாளிக்க:
</b></p><p>
எண்ணெய் – 1 தேக்கரண்டி</p><p>

கடுகு – ½ தேக்கரண்டி
</p><p>
உளுந்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
</p><p>
வர மிளகாய் – 1
</p><h2>
செய்முறை
</h2><p>முதலில் மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு, புளி, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
</p><p>
அதனுடன் மஞ்சள் தூள், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ள வேண்டும்.

சட்னியை மிகவும் மையாக அரைக்காமல், சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்தால் சுவையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/233ab32b-c7d1-42ce-972f-f9ece0cea324/26-6aaaaa4b00f4a.webp' /></p><p> </p><p>கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவை லேசாகத் தெரியும் அளவுக்கு அரைத்தாலே போதுமானது.

அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள். சட்னி மிகவும் கெட்டியாக இருந்தால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம்.</p><p>

அடுத்து ஒரு சிறிய பாத்திரத்தைஅடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.</p><p></p><p> கடுகு நன்றாகப் பொரிந்து, உளுந்தம் பருப்பு பொன்னிறமாக வந்ததும் இந்தத் தாளிப்பை சட்னியின் மீது ஊற்றிவிடுங்கள்.

அவ்வளவுதான், சுவையான பெங்களூர் பாணி தேங்காய் சட்னி தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T15:00:10+00:00</updated>
        </entry>
    </feed>
