<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-23T09:43:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்மத்தில் புதன் சஞ்சாரம்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-transit-in-leo-zodias-who-get-huge-luck-1787472423"></link>
            <id>https://manithan.com/article/mercury-transit-in-leo-zodias-who-get-huge-luck-1787472423</id>
            <summary type="text">Mercury Transit In Leo : ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றில் புத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mercury Transit In Leo : ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றில் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக புதன் கருதப்படுகிறார்.
</p><p>
சந்திரனுக்கு அடுத்தபடியாக குறுகிய காலத்தில் ராசி மாற்றம் செய்யும் புதன், மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். ஆகஸ்ட் 22 அன்று சிம்ம ராசிக்குள் நுழைந்த புதன், செப்டம்பர் 7 வரை அங்கு சஞ்சரிக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b18de083-d94a-4aaa-a2cc-9ae9bde6c3de/26-6a8ab47e9e449.webp' /></p><p></p><p> </p><p>சிம்ம ராசியின் அதிபதியான சூரியனும் அங்கு இருப்பதால், புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.

இதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் வேலை மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைப் பெறக்கூடும். </p><p>சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் புதனால் அதிக பலன் பெறப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c425aaa-fd11-4a57-b837-4d422e7ec8f4/26-6a8ab47f4dae5.webp' /></p><h2>
</h2><p>கடக ராசியின் 2-ம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால், நிதி நிலை மேம்படும். புதன் மற்றும் சூரியனின் அருளால் தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். </p><p>நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, உறவுகள் வலுப்படும்.</p><p>புதிய வழிகளில் வருமானம் கிடைப்பதற்கான வழிகள் திறக்கும். குறிப்பாக புதிய தொழில் தொடங்குவதற்கான நேரம் கூடிவரும்.</p><p>
</p><h2>
ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e066ef-3a2c-49c0-b95a-cb0d459bd8b8/26-6a8ab47ff357f.webp' /></p><p>
ரிஷப ராசியின் 4-ம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால், மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். புதாதித்ய ராஜயோகம் இருந்தால், புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கலாம். </p><p>பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் கடின உழைப்புக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்.</p><p>திருமண வாழ்வில் நீண்ட காலமாக இரு்நது வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.&nbsp;</p><p>
</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0799b863-9e61-4032-9b2a-63fedd23dd86/26-6a8ab480a3ea7.webp' /></p><p></p><h2>
</h2><p>மீன ராசியின் 6-ம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால், நீண்டகால உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம். </p><p>வெளிநாடு தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபமும், வியாபார விரிவாக்கத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். </p><p>சிக்கிய பணம் வந்து சேரும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரித்து, வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் திட்டங்களும் நிறைவேற வாய்ப்புள்ளது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T08:51:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைக்காட்சி சாகசத்தால் நினைவாற்றலை இழந்த வானம் பட நடிகை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jasmin-bhasin-suffers-memory-loss-after-accident-1787467318"></link>
            <id>https://manithan.com/article/jasmin-bhasin-suffers-memory-loss-after-accident-1787467318</id>
            <summary type="text">actress- asmin bhasin-lost her memory after accident : வானம்’ திரைப்படத்தில் சிம்புவின் காதலியாக நடித்த ஜாஸ்மின் பாசின், ஒரு விபத்துக்குப் பிறகு சுமார...</summary>
            <content type="html"><![CDATA[<p>actress- asmin bhasin-lost her memory after accident : வானம்’ திரைப்படத்தில் சிம்புவின் காதலியாக நடித்த ஜாஸ்மின் பாசின், ஒரு விபத்துக்குப் பிறகு சுமார் 72 மணி நேரம் தனது நினைவுகளை இழந்திருக்கிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><p>இந்த சம்பவம் எப்படி நடந்தது, அதன்பிறகு அவரது திரைப்பயணம் எப்படி மாறியது என்பது குறித்து&nbsp;ஜாஸ்மின் பாசின் பகிர்ந்துக்கொண்ட அனுபவம் பற்றி தவகலை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e5925aa-f8fa-4a0d-ae10-00c4e683378d/26-6a8a9fd48521c.webp' /></p><h2>நடிகை ஜாஸ்மின் பாசின்&nbsp;</h2><p>

சிம்பு நடிப்பில் வெளியான ‘வானம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஜாஸ்மின் பாசின். படத்தில் சிம்புவின் பணக்கார காதலியாக சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும், அவரது அழகும் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. </p><p>குறிப்பாக, அவரை மையமாக வைத்து இடம்பெற்ற ‘எவன் டி உன்ன பெத்தான்’ பாடல் அப்போது நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் இன்றுவரையில் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இருந்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/877d9d82-535e-473f-851c-32d9ee37991a/26-6a8a9fd5365e4.webp' /></p><p></p><p>

‘வானம்’ படத்துக்குப் பிறகு தமிழில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் தொடரவில்லை. அதன்பிறகு இந்தி தொலைக்காட்சி உலகில் கவனம் செலுத்திய ஜாஸ்மின், சீரியல்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.</p><p> ‘தில் சே தில் தக்’ தொடர் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்தது. தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். ‘பிக்பாஸ்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.</p><p>

இந்நிலையில், ‘கத்ரோன் கே கில்லாடி’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஜாஸ்மினுக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு சாகசப் பணியின் போது உயரத்தில் இருந்து நீரில் குதித்தபோது, அவரது தலையில் அடிபட்டடுள்ளது.உடனடியாக அவரை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c3a4e41-7dad-4b96-bc6c-bd18e9d5b856/26-6a8a9fd5da0f7.webp' /></p><h2>
72 மணி நேரம் என்ன நடந்தது என்றே தெரியாது!</h2><p>
இந்த விபத்து குறித்து சமீபத்தில் பேசிய ஜாஸ்மின், விபத்து நடந்த நாளில் இருந்து அடுத்த 72 மணி நேரம் வரை தனக்கு என்ன நடந்தது என்பதே நினைவில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.</p><p>

அந்த நேரத்தில் தன்னைச் சுற்றி நடந்த சம்பவங்கள் எதுவும் நினைவில் இல்லாமல் இருந்ததாகவும், பின்னர் தான் விபத்து குறித்து தெரிந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c92e595-6a39-4549-ad31-0e22786baa75/26-6a8a9fd68a9d2.webp' /></p><p></p><p> மூளையில் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக தற்காலிக நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் ஜாஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>ஒரு விபத்து காரணமாக 72 மணி நேரம் தனது வாழ்க்கையில் நடந்ததையே நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போன அனுபவம், ஜாஸ்மினின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவமாகவே அமைந்துள்ளது. குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T07:23:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேரலை : வெகு விமர்சையாக நடைபெறும் நல்லூர் கந்தசுவாமி ஆலய 7ஆம் நாள் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/nallur-temple-annual-festival-2026-live-1787462982"></link>
            <id>https://manithan.com/article/nallur-temple-annual-festival-2026-live-1787462982</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்பும், ஆன்மிகப் பெருமையும் கொண்ட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருவிழா, கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி பாரம்பரிய முறைப்படி கொடியேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்பும், ஆன்மிகப் பெருமையும் கொண்ட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருவிழா, கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி பாரம்பரிய முறைப்படி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமானது.</p><p><b>7ஆம் நாள் திருவிழா நேரலை</b></p><p>

தொடர்ந்து 25 தினங்கள் நடைபெறவுள்ள இப்பெருவிழாவில், நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில், இன்று 7ஆம் நாள் திருவிழா வெகு விமர்சையாக இடம்பெற்று வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dacd2a3-783f-4e0b-84ea-dff3bb22b8c6/26-6a8a8930ae339.webp' /></p><p>
</p><p>
பல நூற்றாண்டுகளாகப் பேணப்பட்டு வரும் சமய மற்றும் கலாசார மரபுகளுக்கு அமைய இடம்பெறும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா, இலங்கையின் தமிழர் பண்பாடு மற்றும் சைவ சமய பாரம்பரியத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.
</p><p>
ஆலயத்தை நோக்கி திரளும் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கந்தப்பெருமானை தரிசித்து, தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். </p><p>திருவிழா வீதியெங்கும் ஒலிக்கும் நாதஸ்வர இசையும், பக்தர்களின் “அரோகரா” கோஷமும், விழாவின் ஆன்மிகச் சிறப்பை மேலும் அதிகரித்து வருகின்றன.
</p><p>
பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வரும் இந்தப் பாரம்பரியப் பெருவிழாவின் 7ஆம் திருவிழா நிகழ்வுகளை, நல்லூர் கந்தசுவாமி பெருமானின் அருள்தரிசனத்துடன் இந்தக் காணொளி வாயிலாக நேரலையில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vQU-0yrOQO4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T05:46:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரக நிலைகள் சொல்லும் 7 நாள் பலன்கள்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/weekly-horoscope-for-23-august-2026-to-29-august-1787460374"></link>
            <id>https://manithan.com/article/weekly-horoscope-for-23-august-2026-to-29-august-1787460374</id>
            <summary type="text">நம் வாழ்வில் எதிர்பாராத விதமாக ஏற்படும் நல்லது, கெட்டது என பல்வேறு நிகழ்வுகளுக்கு நமது ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலைகள் முக்கிய பங்கு வகிப்பதாக ஜோதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம் வாழ்வில் எதிர்பாராத விதமாக ஏற்படும் நல்லது, கெட்டது என பல்வேறு நிகழ்வுகளுக்கு நமது ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலைகள் முக்கிய பங்கு வகிப்பதாக ஜோதிடத்தில் தொன்று தொற்று நம்பப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>குறிப்பாக, கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் நிலைப்பாடுகள் ஒவ்வொரு ராசியினரின் வாழ்க்கையிலும் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

அந்த வகையில், அடுத்த 7 நாட்கள் உங்கள் ராசிக்கு எப்படி அமையப் போகிறது?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17e25de8-d06f-48fe-8b88-552c8e5783f7/26-6a8a817a8d0ef.webp' /></p><p> </p><p>இந்த வாரத்தில் தொழில், பணவரவு, குடும்பம், உறவுகள், ஆரோக்கியம் உள்ளிட்ட விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுமா? அல்லது சில சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகுமா என்பதை தெரிந்து கொள்ள பெரும்பலானவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும்.</p><p>அந்தவகையில், 2026 ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 29 வரை உள்ள காலகட்டத்திற்கான 12 ராசிக்காரர்களின் வார ராசிபலன்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p>
இந்த ஒரு வார காலத்தில் உங்கள் ராசிக்கு சாதகமாக அமையக்கூடிய விஷயங்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய அம்சங்கள் என்ன, எந்த விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e568229-9cea-4442-9248-4d3072bccbbd/26-6a8a817b3e2bb.webp' /></p><p></p><h2>12 ராசிகளுக்குமாக வார ராசி பலன்கள்</h2><p><b>மேஷம்
</b></p><p>வாரத்தின் தொடக்கத்தில் சில தடைகள் இருந்தாலும், இறுதியில் வெற்றியும் லாபமும் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு தைரியத்தை அதிகரிக்கும். </p><p>தொழிலில் முன்னேற்றமும் முதலீட்டு வாய்ப்புகளும் இருக்கும்; ஆனால் ஆபத்தான முதலீடுகளைத் தவிர்க்கவும். ஆரோக்கியமும் உறவுகளும் சாதகமாக இருக்கும்.
</p><p><b>
ரிஷபம்
</b></p><p>எந்த வேலையிலும் கவனக்குறைவைத் தவிர்க்க வேண்டும். சிறிய தவறும் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தலாம். வேலைப்பளு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். </p><p>வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.</p><p><b>
மிதுனம்</b></p><p>
இந்த வாரம் வேலை, தொழில் என அனைத்திலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.</p><p> பதவி உயர்வு அல்லது இடமாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமும், நிதி நிலையில் முன்னேற்றமும் ஏற்படும்.</p><p><b>

கடகம்
</b></p><p>முன்னேற்றமும் வெற்றியும் நிறைந்த வாரமாக இருக்கும். நிலுவைப் பணிகள் முடிவடையும், எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். </p><p>தொழிலில் பாராட்டும், மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. உடல்நிலையும் சாதகமாக இருக்கும்.
</p><p><b>
சிம்மம்</b></p><p>
இந்த வாரம் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியும். முக்கிய பணிகளை பிறரிடம் ஒப்படைப்பதைத் தவிர்க்கவும். </p><p>திடீர் செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பேசும்போது கவனமாக இருக்கவும்; சொத்து விவகாரங்களில் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/717daaf4-cdd8-48b7-9848-88ff3503aef5/26-6a8a817be0a40.webp' /></p><p><b>

கன்னி</b></p><p>
சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும் வாரம். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கலாம் அல்லது வியாபாரத்தில் புதிய முயற்சிகள் லாபம் தரலாம்.</p><p> நீண்ட நாள் ஆசை நிறைவேறும் வாய்ப்புள்ளது. வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெற்று, குடும்பப் பிரச்சினைகள் தீரும். ஒட்டுமொத்தமாக வெற்றி மற்றும் செழிப்பு நிறைந்த வாரமாக இருக்கும்.</p><p><b>

துலாம்</b></p><p>
வேலையில் எதிர்பார்த்த வெற்றியும் லாபமும் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதுடன், தொழிலில் இருந்த தடைகளும் நீங்கும். </p><p>பணியாளர்களுக்கு பதவி உயர்வு அல்லது வெகுமதி கிடைக்கலாம்.காதல் உறவில் இருந்த பிரச்சினைகள் தீரும்; திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.</p><p><b>

விருச்சிகம்</b></p><p>
பரபரப்பான வாரமாக இருக்கும். தொடக்கத்தில் செலவுகள் அதிகரிக்கலாம்; திடீர் பயணமும் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் தேவையற்ற பேச்சு, விமர்சனங்களைத் தவிர்த்து இலக்கில் கவனம் செலுத்துங்கள்.குடும்பத்தினரிடமும், காதல் உறவிலும் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/024c343a-df29-4cef-bd3d-a2aacd09b71f/26-6a8a817c91fcd.webp' /></p><p></p><p><b>
தனுசு
</b></p><p>சற்று குழப்பமான மனநிலை ஏற்படலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் நம்பகமானவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.</p><p> உடல்நலத்தில் கவனம் தேவை. வேலையில் தடைகள் மற்றும் எதிரிகளின் இடையூறுகள் ஏற்படலாம். வேலை தேடுபவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். நிதி விஷயங்களிலும் கவனம் அவசியம்.
</p><p><b>
மகரம்</b></p><p>
கடந்த வாரத்தை விட இந்த வாரம் சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிப்பதால் நம்பிக்கை அதிகரிக்கும். </p><p>உழைப்புக்கு பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளின் உதவியால் லாபம் கிடைக்கலாம். குடும்பத்திலும் காதல், திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலவும்.</p><p><b>

கும்பம்</b></p><p>
சாதகமான பலன்கள் நிறைந்த வாரம். தொடக்கத்தில் இருந்த தடைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. </p><p>தொழிலில் லாபம், சிக்கிய பணம் கைக்கு வருதல் போன்ற நிதி முன்னேற்றங்கள் ஏற்படும். வேலைப்பளு அதிகரித்தாலும் குடும்ப ஆதரவும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் இருக்கும்.
</p><p><b>
மீனம்
</b></p><p>வாரத்தின் முதல் பாதியில் சில வேலைத் தடைகள் இருந்தாலும், பிற்பகுதியில் அவற்றுக்கு தீர்வு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.</p><p>வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறலாம். வெளிநாடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டமும் நலம் விரும்பிகளின் ஆதரவும் சேர்ந்து கடினமான பணிகளையும் எளிதாக முடிக்க உதவும். உறவுகளும் சாதகமாக இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T05:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vijay-son-jason-sanjay-has-spoken-about-mom-dad-1787405983"></link>
            <id>https://manithan.com/article/vijay-son-jason-sanjay-has-spoken-about-mom-dad-1787405983</id>
            <summary type="text">jason sanjay : முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்த பேட்டியில்,&amp;nbsp; தான் மேற்கொண்ட ஒரு ஆபத்தான பயணம் குறித்த தகவலை மிகவும் சாதார...</summary>
            <content type="html"><![CDATA[<p>jason sanjay : முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்த பேட்டியில்,&nbsp; தான் மேற்கொண்ட ஒரு ஆபத்தான பயணம் குறித்த தகவலை மிகவும் சாதாரணமாக பகிர்ந்துள்ளார். ஆனால், அவர் கூறிய அந்த அனுபவம் தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><h2>ஜேசன் சஞ்சய் பேட்டி</h2><p>விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/459743f3-c09d-4164-9f50-b67db0542cfe/26-6a89adc91ee3a.webp' /></p><p> </p><p>ஆக்ஷன் அட்வெஞ்சர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பல்வேறு ஊடகங்களுக்கு ஜேசன் சஞ்சய் பேட்டி அளித்து வருகிறார். </p><p>அந்த வகையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.</p><p><b>

“என்னை தேடாதீர்கள்” என அம்மாவிடம் கூறிவிட்டு...</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33604b56-967d-4dd6-98da-a7f0d5ea1b24/26-6a89adca75bc4.webp' /><b></b></p><p>
தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட ஒரு பயணம் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், “வெளிநாட்டில் இருந்து நண்பன் ஒருவன் வந்திருந்தான். நாங்கள் நண்பர்கள் அனைவரும் அவனது வீட்டில் தங்கப்போகிறோம் என்று திட்டமிட்டிருந்தோம். சென்னையில்தான் இருப்பேன், ஆனால் என்னைத் தேடாதீர்கள் என்று எனது அம்மாவிடம் கூறிவிட்டு, கேரளா எல்லையில் உள்ள ஒரு ஊருக்கு சென்றுவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர்கள் தங்கியிருந்த தனியார் இடத்திற்கு மிக அருகிலேயே புலிகள் சரணாலயம் ஒன்று இருந்ததாகவும் சஞ்சய் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a167921a-fbcf-4c51-9aa2-f8b4510c657d/26-6a89adcb26e07.webp' /></p><p></p><p>
</p><p>
இந்த பயணத்தின் போதுதான் எதிர்பாராத விதமாக அவரது அம்மாவிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது.ஆனால், அந்த அழைப்பை சஞ்சய் எடுக்கவில்லை.</p><p>இதனால் அவருக்கு மலையாளத்தில் பிசி டோன் கேட்டுள்ளது.

அதன்பிறகுதான், தான் கேரளாவுக்குச் சென்றிருப்பது தனது அம்மாவுக்கு தெரிந்துவிட்டதாக சஞ்சய் கூறியுள்ளார்.

இதனால் பயந்துபோன அவர், சென்னை திரும்பும் வரை செல்போனை தொடவே இல்லை என தெரிவித்துள்ளார்.</p><h2><b>

100 மீட்டர் தூரத்தில் சிறுத்தை!
</b></h2><p>இந்த பயணத்தின்போது தங்களுக்கு ஏற்பட்ட மற்றொரு அதிர்ச்சியான சம்பவத்தையும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்துள்ளார்.

“அந்த பயணத்தின்போது ஒருநாள் நாங்கள் சிறுத்தையை பார்த்தோம். எங்களிடமிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் தான் அந்த சிறுத்தை இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de0cb94-d987-4779-8c08-8187b06d65e6/26-6a89adcbcaf02.webp' /></p><p> </p><p>அதன்பிறகு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டோம்” என சஞ்சய் தெரிவித்துள்ளார்.

தான் இதுபோன்று ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது தனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இருப்பினும், “அப்படி யோசித்துக்கொண்டே இருந்தால் இயற்கையின் அழகை ரசிக்கவே முடியாது. எனவே, நான் செய்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என தனது நிலைப்பாட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, ஜேசன் சஞ்சயிடம் அவரது முதல் சம்பளம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலும் தற்போது கவனம் பெற்றுள்ளது.

வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தபோது கால்டன் சினிமாஸ் என்ற திரையரங்கில் கேசியராக பணியாற்றியதாக சஞ்சய் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e70c9f92-1b63-4586-8b3b-efd6557f3950/26-6a89adcc7b5db.webp' /></p><p></p><p>
</p><p>
அந்த திரையரங்கில் மிகவும் பழைய திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சில நேரங்களில் திரைப்படத்தை பார்ப்பதற்காக யாருமே திரையரங்கிற்கு வரமாட்டார்கள் என்றும், அப்போது தான் மட்டும் அங்கு அமர்ந்து அந்த திரைப்படத்தை பார்க்கத் தொடங்கிவிடுவேன் என்றும் சஞ்சய் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், அந்த திரையரங்கில் பணியாற்றியது தனது வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>&nbsp;‘சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராக தனது புதிய பயணத்தை தொடங்க உள்ள ஜேசன் சஞ்சயின் இந்த அனுபவங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T05:21:30+00:00</updated>
        </entry>
    </feed>
