<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-25T04:06:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி மாதத்தில் அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/kanavu-palan-aadi-month-amman-dream-1784894549"></link>
            <id>https://manithan.com/article/kanavu-palan-aadi-month-amman-dream-1784894549</id>
            <summary type="text">ஆடி மாதம் அம்மனின் அருள் நிறைந்த மாதமாக கருதப்படுவதால், இந்த மாதத்தில் அம்மன் கனவில் வருவது மிகவும் சிறப்பானதாக நம்பப்படுகிறது.

அதன்படி, கனவில் அம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் அம்மனின் அருள் நிறைந்த மாதமாக கருதப்படுவதால், இந்த மாதத்தில் அம்மன் கனவில் வருவது மிகவும் சிறப்பானதாக நம்பப்படுகிறது.</p><p>

அதன்படி, கனவில் அம்மன் எந்த வடிவில் தோன்றுகிறார் என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.
</p><p>
அம்மன் சிரித்த முகத்துடன் இருப்பது போல, ஆசி வழங்குவது போல அல்லது கோயிலில் வீற்றிருப்பது போல கனவு கண்டால், தெய்வ அருள் கிடைக்கிறது என்று நம்பப்படுகிறது. </p><p>

மேலும், மனதில் இருக்கும் கவலை, பயம் மற்றும் குழப்பங்கள் விரைவில் நீங்கும் என்பதற்கான அறிகுறியாக நம்பப்படுகிறது.</p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cf7d3a3-9f25-4ea9-a41d-3f54ec81a4ee/26-6a63549f3839c.webp' />
</p><p>
அம்மன் கோயிலில் தீபம் எரிவது போல, பூக்கள் மற்றும் குங்குமம் இருப்பது போல கனவு கண்டால் வீட்டில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.</p><p>
</p><p>மேலும், மன அமைதி கிடைப்பதுடன், தெய்வ அருளால் மங்கள நிகழ்வுகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.</p><p>
 
அம்மன் சிலையை கனவில் கண்டால், நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. </p><p>

மேலும், தெய்வ அருள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்கும் என்பதற்கான அறிகுறியாக நம்பப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d10b0d1-d444-4d31-898b-c2feb8239237/26-6a635457d86eb.webp' /></p><p>ஆடி மாதத்தில் வேப்பிலை அல்லது வேப்ப மரத்தை கனவில் காண்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. </p><p>

மேலும், குலதெய்வத்தின் அருள் கிடைக்கும் என்றும், வாழ்க்கையில் மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான மாற்றங்கள் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.
</p><p>
அம்மன் கோயிலை கனவில் காண்பது அல்லது கோயிலுக்குள் செல்வது போல கனவு கண்டால், வாழ்க்கையில் இருந்த துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும் என்று நம்பப்படுகிறது.</p><p>

அம்மனுக்கு தீபாராதனை காட்டுவது போல அல்லது அம்மன் அலங்காரம் நடைபெறுவது போல கனவு கண்டால், விரைவில் சுபச் செய்திகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. </p><p>

மேலும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் கூடி வருவதற்கான அறிகுறியாகவும் இது கருதப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-25T04:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[59 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் சீமான்.., அவரது டயட் ரகசியம் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/59-year-old-ntk-seeman-fitness-secrets-1784884309"></link>
            <id>https://manithan.com/article/59-year-old-ntk-seeman-fitness-secrets-1784884309</id>
            <summary type="text">நடிகர், இயக்குநர், அரசியல்வாதி எனப் பல அடையாளங்களைக் கொண்ட 59 வயதாகும் சீமான், உணவு மற்றும் உடற்பயிற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.டயட் ரக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர், இயக்குநர், அரசியல்வாதி எனப் பல அடையாளங்களைக் கொண்ட 59 வயதாகும் சீமான், உணவு மற்றும் உடற்பயிற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.</p><h2>டயட் ரகசியம் என்ன?</h2><p>

இவர் காலை உணவாக குதிரைவாலி கஞ்சி, சாமை அடை, தினை கஞ்சி, தினை உப்புமா போன்ற சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்கிறார். </p><p>

சில நேரங்களில் இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளையும் சாப்பிடுகிறார் என்று கூறப்படுகிறது.</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04863eb4-82f0-4ecd-a7d0-d4980be9f541/26-6a632c57a6729.webp' /></p><p>உணவில் அரிசியின் அளவைக் குறைத்து, காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்கிறார். </p><p>

புரதச்சத்துக்காக முட்டை, சிக்கன், மீன் மற்றும் மாட்டுக்கறி உள்ளிட்டவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்கிறார்.
</p><p>
இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல், அத்திப்பழம், வெள்ளரி விதை, பேரிச்சை, வால்நட்ஸ், முந்திரி மற்றும் பப்பாளிச் சாறு போன்றவற்றை குறைந்த அளவில் எடுத்துக்கொள்கிறார்.
</p><p>
மேலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் தனது உடற்தகுதியை முறையாக பராமரித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42088887-5fc3-4aff-a8d1-65840c104a66/26-6a632c58569f2.webp' /></p><p>

மெஷின் புல்-டவுன், டம்பல்ஸ் மற்றும் கோர் பயிற்சிகள் உள்ளிட்ட வலிமை சார்ந்த உடற்பயிற்சிகளை அவர் மேற்கொள்கிறார்.</p><p>

மேலும், நீண்ட நேரம் நடக்கும் பழக்கத்தை அவர் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.

நடக்கும்போது தொடர்ந்து தண்ணீர் குடிக்கிறார்.</p><p> இதனால், உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கும் என்று செல்லப்படுகிறார்.
</p><p>
உணவு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் போதுமான தண்ணீர் ஆகியவற்றை தனது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகக் கொண்டிருப்பதே சீமானின் உடற்தகுதிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-25T02:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
