<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-08-01T15:58:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்த நிலையிலும் உண்மையை மட்டுமே பேச விரும்பும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-are-always-speaks-the-truth-1785586222"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-are-always-speaks-the-truth-1785586222</id>
            <summary type="text">ஒருவரின் பிறப்பு ராசி அவர்களின் ஆளுமை, சிந்தனை முறை, உறவுகள், பொருளாதார அணுகுமுறை மற்றும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருவரின் பிறப்பு ராசி அவர்களின் ஆளுமை, சிந்தனை முறை, உறவுகள், பொருளாதார அணுகுமுறை மற்றும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஜோதிடத்தில் பரவலாக காணப்படுகிறது. </p><p>பலர் தங்களின் ராசி சார்ந்த குணாதிசயங்களை ஆர்வத்துடன் அறிந்து கொள்கின்றனர்.

அந்த வகையில், சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே உண்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என கணிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/139afa17-8cbc-4df5-9f07-494a6feed04a/26-6a6dec25c90a0.webp' /></p><p>அப்படி&nbsp; சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும்,&nbsp; உண்மையையே பேச விரும்பும் குணம் கொண்ட ராசியினர் யார் யார் என பார்க்கலாம்.</p><p></p><h2>தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8154fcb5-8fac-4be5-8d72-00a2901d4f6f/26-6a6dec2679bbb.webp' /></p><p>தனுசு ராசியில் பிறந்தவர்கள் உண்மையை மதிக்கும் குணம் கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். எப்போதும் நேர்மையான அணுகுமுறையையே கடைப்பிடிக்க முயற்சிப்பார்கள். </p><p>சில நேரங்களில் உண்மையை மிகவும் வெளிப்படையாகச் சொல்வதால் மற்றவர்களின் மனம் புண்படலாம். இருப்பினும், பொய்யாக நடித்து ஒருவரை மகிழ்விப்பதை விட உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதே இவர்களின் எண்ணமாக இருக்கும்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3fa9a80-fcb3-419d-ad72-20f13231e385/26-6a6dec2729178.webp' /></p><p>கடக ராசிக்காரர்கள் இயல்பாகவே ஒரு அரசனுக்கு இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p>அவர்களின் பேசும் பாணி தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கும். அவர்கள் எப்போதும் இதயத்திலிருந்து பேசுவார்கள். </p><p>இவர்கள் தங்களுக்கு உண்மையாக இருக்க விரும்புவதால் அவர்கள் நேர்மையானவர்களாகவும் அறியப்படுகின்றார்கள். இவர்கள் தங்களிகன் உயிரை விடவும் உண்மைக்கு அதிக முக்கியத்துவம் மற்றும் மரியாதை கொடுப்பவர்களாக இருப்பார்கள்.</p><h2>மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a19c5852-a080-4a5b-b476-e0e9a8705fb9/26-6a6dec27ccf14.webp' /></p><p></p><p>மீன ராசியில் பிறந்தவர்கள் தங்களின் இரக்க குணத்துக்கும் அமைதிக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களை சீண்டினால் முகத்துக்கு நேராகவே மற்றவர்கள் தவறுகள் குறித்து சொல்லிவிடுவார்கள்.<br></p><p>
இவர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்களை அதிகம் மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பாத போதும் கூட மற்றவர்களுக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T14:07:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 வயதில் தாய் - தனது 7 மாத குழந்தைக்காக சட்டப் போராட்டம் நடத்திய சிறுமி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/13-year-old-mother-case-to-get-her-7-month-baby-1785591623"></link>
            <id>https://manithan.com/article/13-year-old-mother-case-to-get-her-7-month-baby-1785591623</id>
            <summary type="text">கைகளில் தனது 7 மாதக் குழந்தையை ஏந்தியபடி, கேமராவை நோக்கி மென்மையாகச் சிரித்துக்கொண்டிருக்கும் இந்தச் சிறுமியின் பெயர் ஜூய். அந்தப் புன்னகைக்குப் பின்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைகளில் தனது 7 மாதக் குழந்தையை ஏந்தியபடி, கேமராவை நோக்கி மென்மையாகச் சிரித்துக்கொண்டிருக்கும் இந்தச் சிறுமியின் பெயர் ஜூய். அந்தப் புன்னகைக்குப் பின்னால், பலராலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வேதனையும் போராட்டமும் நிறைந்த வாழ்க்கைக் கதை மறைந்திருக்கிறது.</p><p>

ஜூய்க்கு தற்போது வெறும் 13 வயது மட்டுமே. ஆனால், அவரது கைகளில் இருக்கும் அந்தக் குழந்தை அவருடையது தான். இவ்வளவு இளம் வயதிலேயே தாய்மையின் பொறுப்பை ஏற்றதோடு, தனது குழந்தையை மீண்டும் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b9ba88b-86df-4f1b-be60-c1be2be241d7/26-6a6dfb820009f.webp' /></p><p></p><p>

தகவல்களின்படி, பங்களதேஷை சேர்ந்த&nbsp; ஜூய் 11 வயதாக இருந்தபோது, Facebook மூலம் 22 வயதுடைய ஷகிப் மியாவுடன் அறிமுகமானார். பின்னர் அந்த அறிமுகம் திருமணத்தில் முடிந்தது. திருமணமாகி ஓராண்டுக்குப் பிறகு, அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.
</p><p>
ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. குழந்தை பிறந்த சில காலத்திலேயே, ஜூயை அவரது கணவரும் மாமியாரும் வீட்டை விட்டு வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. அதைவிட வேதனையானது, தனது பச்சிளம் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டதுதான்.</p><p>

ஒரு தாய்க்கு தனது குழந்தையிலிருந்து பிரிந்து வாழ்வது எவ்வளவு பெரிய மனவேதனை என்பதை&nbsp; வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தனது குழந்தையை மீண்டும் அணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஜூய் சட்டத்தின் உதவியை நாடினார்.</p><p></p><p> நீதிமன்றத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தனது குழந்தையைத் திரும்பப் பெறுவதற்காக போராடினார்.

இறுதியில், அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது. நீதிமன்றத்தின் தலையீட்டின் மூலம், அந்த 7 மாதக் குழந்தை மீண்டும் ஜூயிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p>இந்தச் சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுகிறது. தாயன்புக்கு வயது என்ற வரம்பே கிடையாது. தாய் பதின்ம வயதுப் பெண்ணாக இருந்தாலும், முதிர்ந்த பெண்ணாக இருந்தாலும், தனது குழந்தையின் மீது கொண்ட அன்பும் பாசமும் ஒன்றுதான்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">13-year-old mother goes to court to get her 7-month-old baby back!!<br><br>This girl&#39;s name is Jui. Although Jui is 13 years old, the baby that Jui is holding in her arms and smiling sweetly in front of the camera is Jui&#39;s 7-month-old baby.<br><br>Jui married 22-year-old Shakib Mia after… <a href="https://t.co/z3A1YlG5tl">pic.twitter.com/z3A1YlG5tl</a></p>&mdash; मृदुल눈 (@shayari_in_) <a href="https://x.com/shayari_in_/status/2083064259366522892?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T13:58:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/health-benefits-of-eating-guava-every-day-1785499506"></link>
            <id>https://manithan.com/article/health-benefits-of-eating-guava-every-day-1785499506</id>
            <summary type="text">பழங்கள் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. 

அவற்றில் விலைக்குறைவாகவும், அதிக சத்துக்கள் கொண்டதாகவும் இருக்கும் பழம் கொய்யாப்பழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழங்கள் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.</p><p> 

அவற்றில் விலைக்குறைவாகவும், அதிக சத்துக்கள் கொண்டதாகவும் இருக்கும் பழம் கொய்யாப்பழம்.
</p><p>
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.
</p><p>தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது பல்வேறு உடல்நல நன்மைகளை அளிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h3>வைட்டமின் சி நிறைந்தது</h3><p>

கொய்யாப்பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட சுமார் 4 மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11b906e8-0e78-42ef-bf61-df114762af18/26-6a6c8f7479770.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><h3>
அசிடிட்டி குறையும்
</h3><p>
அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை குறைக்க கொய்யாப்பழம் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கிறது.</p><h3>

இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்
</h3><p>
கொய்யாப்பழத்தில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18192357-1117-46c2-b76c-3622b55ac444/26-6a6df8c27ec88.webp' />&nbsp;<br></p><p>
</p><h3>
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
</h3><p>
கொய்யாப்பழத்தின் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், இரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்க உதவுகிறது.
</p><h3>
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்</h3><p>

இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய செல்களை சேதத்திலிருந்து பாதுகாத்து, இதய நோய் அபாயத்தையும் குறைக்க உதவுகின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19da3275-2b74-4102-9ddc-a9b7c39171a5/26-6a6df8c348182.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-01T13:47:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜயை பெருமையாகப் பேசிய மகன் ஜேசன் சஞ்சய் - வைரலாகும் பேட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jason-sanjay-talk-about-dad-cm-vijay-viral-1785580087"></link>
            <id>https://manithan.com/article/jason-sanjay-talk-about-dad-cm-vijay-viral-1785580087</id>
            <summary type="text">தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல ஆண்டுகள் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த விஜய், தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல ஆண்டுகள் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த விஜய், தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். அரசியலில் முழு கவனம் செலுத்தி வரும் அவரின் குடும்பத்தினரும் அவ்வப்போது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
</p><p>இந்நிலையில், விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், நடிகராக அல்லாமல் இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவரது இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e17d0ee3-cd8e-4948-97e8-34f8aaac1a1c/26-6a6dcd3800025.webp' /></p><p></p><p> </p><p>இந்தப் படம் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஜேசன் சஞ்சய் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.</p><h2>அப்பாதான் என் முதல் தேர்வு</h2><p>அவ்வகையில், ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் சுவாரஸ்யமான கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது.

அதில், "உங்கள் பெயரைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், 'சிக்மா' படத்தைப் பார்த்துவிட்டு, 'தம்பி, வாங்க... ஹாலிவுட்டில் ஒரு படம் பண்ணலாம்' என்று அழைத்தால், இந்தியாவில் இருந்து எந்த நடிகரை அவருடன் இணைத்து அழைத்துச் செல்வீர்கள்?" என்று கேட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1902053-5ae3-44f7-bae4-e4d79c3258da/26-6a6dcd38aa688.webp' /></p><p>
</p><p>
இதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த ஜேசன் சஞ்சய், "எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அப்பாதான் (விஜய்). அவர்கள் இருவரும் இணைந்தால் அது மிகச் சிறப்பான கூட்டணியாக இருக்கும். நான் இப்போது சொன்ன இந்தப் பதிலை நடிகர் ஜேசன் ஸ்டேதம் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்," என்று சிரித்தபடியே தெரிவித்தார்.
</p><p>
அதே பேட்டியில், தனது சிறுவயது நினைவுகளையும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் சென்னை நகரில் நடைபெற்றபோது, தனது தந்தை விஜய்யின் தோளில் அமர்ந்தபடி போட்டியை ரசித்த அனுபவம் இன்னும் மறக்க முடியாத நினைவாக இருப்பதாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13278a07-4656-4271-96ae-095c3f013b18/26-6a6dcd3958f1f.webp' /></p><p></p><p>தனது குழந்தைப் பருவ அனுபவங்களையும், தந்தையுடனான பாசப்பிணைப்பையும் அவர் அப்போது மனம் திறந்து பகிர்ந்துகொண்டார். தனது தந்தை விஜய் பற்றி ஜேசன் சஞ்சய் பெருமையாக கூறியவை சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகின்றது.</p><p>விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து&nbsp; கேட்டு மனு தாக்கல் செய்ததையடுத்து விஜய்க்கும் அவரின் பிள்ளைகளுக்கும் இடையே உறவு கசப்பாக மாறியுள்ளதாக&nbsp; சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,&nbsp; ஜேசன் சஞ்சய் இவ்வாறு பேசியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T10:54:17+00:00</updated>
        </entry>
    </feed>
