<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-16T23:42:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கை வாட்டி வதைத்தாலும் அசராத இரும்பு மனம் கொண்ட டாப் 3 ராசிகள்! உங்க ராசி என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-sign-are-mentally-strong-person-1784217627"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-sign-are-mentally-strong-person-1784217627</id>
            <summary type="text">பொதுவாகவே வாழ்க்கையில் ஒரு காலகட்டம் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருந்தால், இன்னொரு காலம் துன்பமும் சவால்களும் நிறைந்தாக இருக்கும்.

மகிழ்ச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே வாழ்க்கையில் ஒரு காலகட்டம் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருந்தால், இன்னொரு காலம் துன்பமும் சவால்களும் நிறைந்தாக இருக்கும்.
</p><p>
மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்ளும் அனைவராலும் துன்பங்களையும் பிரச்சினைகளையும் தாங்கிக்கொண்டு வாழ்க்கையில் போராடி வெற்றிபெற முடிவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/531e1694-1988-4591-9331-5441f8793ae8/26-6a5908aa2b1d0.webp' /></p><p>
</p><p>
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் இந்த 3 ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கை எவ்வளவு பிரச்சினைகளை கொடுத்தாலும், திரும்பும் திசையெல்லாம் சவால்களை கொடுத்து வாட்டி வதைத்ததாலும், முகத்தில் புன்னகையுடன் அசால்ட்டாக சமாளிக்கும் இரும்பு மனம் கொண்டவர்களாக இருப்பார்களாம். </p><p>

அப்படிபட்ட அசாத்திய தன்னம்பிக்கை மற்றும் வலிய மனம் படைத்த ராசியினர் யார் யார் எனவும் அவர்களின் தனித்துவ குணங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/581377c1-512e-4469-8a24-f4add289a2b3/26-6a5908aaccffa.webp' /></p><p>ரிஷப ராசியில் பிறந்தவர்கள் லட்சிய வாதிகளாக இருப்பார்கள். சூழ்நிலைகள் குறித்து கவலைப்படாமல் தங்களின் இலக்கை நோக்கி முன்னேறும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.&nbsp;&nbsp;</p><p>இவர்கள் வாழ்க்கையில் பிரச்சினைக்கும் சவல்களுக்கும் பஞ்சமே இருக்காது. ஆனாலும் இவர்களின் முகத்தில் எப்போதும் புன்னகை நிச்சயம் இருக்கும். தங்களின் கஷ்டங்களை யாரிடமும் சொல்லிக்கொள்ள இவர்கள் விரும்பவே மாட்டார்கள்.</p><p>வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருந்தாலும், நேர்த்தியாக உடை&nbsp; அணிந்து பார்ப்பதற்கு&nbsp; சினிமா பிரபலம் போல் காட்சியளிப்பார்கள். இவர்களுக்கு பிரச்சினைகளை சமாளித்து வெற்றிப்பெறுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.</p><h2>துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0e4be19-6c5f-469d-b8b0-d81b3675a53b/26-6a5908ab7a575.webp' /></p><p>துலா ராசியில் பிறந்தவர்களின் மனம் ஒரு இரும்பு கோட்டை போல் வலிமையாக இருக்கும். இவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை காதில் வாங்கிக்கொண்டு கவலைப்டும் குணம் அற்றவர்களாக இருப்பார்கள். </p><p>

இவர்கள் கடினமான சூழ்நிலையிலும் தங்களின் தன்னம்பிக்கை,தைரியத்தை கைவிடுவது கிடையாது. யாராலும் இவர்களின் மனவலிமையை குறைக்க முடியாது.
</p><p>
பாதிப்பைத் தழுவுவது மீள்தன்மையை அதிகரிக்கும் என்ற கோட்பாடு இவர்களின் தாராக மந்திரமாக இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினை வந்தாலும், நிதானத்துடன் கையாளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28d7ce0a-156c-4b04-a560-425f5ecac517/26-6a5908ac2f9b8.webp' /></p><p></p><p>சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் பிறப்பிலேயே உறுதியான மனமும் தலைமைத்துவ குணங்களும் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p>இவர்கள் வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தலும் பார்ப்பவர்கள் கண்களுக்கு எப்போதும் வசீகரமாக தோற்றமளிப்பார்கள்.</p><p>இவர்களை அவமதித்தவர்கள் முன்னிலையில் சிறப்பாக வாழ்ந்து காட்டும் வரையில் ஓயவே மாட்டார்கள். எவ்வளவு பெரிய சவாலையும் புன்னகையுடன் எதிர்கொள்ளும் ஒரு அசாத்திய தைரியம் இவர்களிடம் இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[காரசாரமான நெத்திலி மீன் தொக்கு செய்வது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tasty-nethili-meen-thokku-recipe-in-tamil-1784220029"></link>
            <id>https://manithan.com/article/tasty-nethili-meen-thokku-recipe-in-tamil-1784220029</id>
            <summary type="text">நெத்திலி மீன் என்றாலும் சரி, கருவாடு என்றாலும் சரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். மேலும் இதில் அதிக முள்ளும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெத்திலி மீன் என்றாலும் சரி, கருவாடு என்றாலும் சரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். மேலும் இதில் அதிக முள்ளும் இருக்காது என்பது ஒரு ப்ளஸ்...</p><p>மீன் சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது, மீனில் பல சுவையான மீன் வகைகள் உண்டு. அதிலும் சிறியதாக இருக்கும் நெத்திலி மீன் என்றால் சொல்லவா வேண்டும், சிறியதாக இருந்தாலும் அதன் சுவை அலாதி தான். நெத்திலி மீன் என்றாலும் சரி, கருவாடு என்றாலும் சரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். மேலும் இதில் அதிக முள்ளும் இருக்காது என்பது ஒரு ப்ளஸ்.</p><p>அந்தவகையில் நெத்திலி மீன் கொண்டு செய்யப்படும் தொக்கு அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த நெத்திலி மீன் தொக்கை சாம்பார், ரசம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fff32047-61ed-4259-acb3-14bb3d3ee093/26-6a590e4650eb8.webp' /></p><h2>தேவையான பொருட்கள் :</h2><p>நெத்திலி மீன்
புளி கரைசல் - 4 டேபிள் ஸ்பூன்<br>பூண்டு பற்கள் - 2
<br>மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
<br>மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
<br>கொத்தமல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
<br>வெந்தயம் - 1 டீஸ்பூன்<br>&nbsp;எண்ணெய் - தேவையான அளவு
<br>கறிவேப்பிலை - சிறிதளவு
<br>உப்பு - தேவையான அளவு</p><h3>அரைக்க தேவையானவை :</h3><p>சின்ன வெங்காயம் - 20 முதல் 25
<br>பழுத்த தக்காளி - 2<br>&nbsp;பச்சை மிளகாய் - 2
<br>பூண்டு பற்கள் - 10<br>&nbsp;மிளகு - 1 டீஸ்பூன்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c2a018a-933e-4362-8410-e2f334e9c54f/26-6a590e47028e6.webp' /></p><h2>செய்முறை</h2><p>அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், பழுத்த தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.</p><p>தற்போது அடுப்பில் கடாய் வைத்து 1/4 கப் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வெந்தயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும்வரை வதக்கி பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.</p><p>மசாலாவில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கிய பின்னர் அதில் புளி கரைசலை ஊற்றி கிளறி சமைக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca77b4bf-76c9-4039-bac6-cb94dacd2778/26-6a590e47a7482.webp' /></p><p>மசாலாக்கள் கெட்டியாக தொக்கு பதத்திற்கு மாறியவுடன் அதில் நன்றாக அலசிய நெத்திலி மீனை சேர்த்து கலந்து வேகவிடவும்.
பின்னர் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடாயை மூடி வைத்து 5-8 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.</p><p>மீன் நன்கு மென்மையாக வெந்து தொக்கு பதத்திற்கு மாறியவுடன் அதில் சிறிதளவு கறிவேப்பிலையை சேர்த்து மிதமான தீயில் பிரட்டி எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான நெத்திலி மீன் தொக்கு சாப்பிட ரெடி...</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> FOLLOW NOW</b></a>&nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T17:45:40+00:00</updated>
        </entry>
    </feed>
