<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <id>https://manithan.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://manithan.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/mn/img/logo.png</logo>
            <updated>2026-07-18T21:11:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகு-கேது பிடியில் இருந்து விடுபடும் கிரகங்கள்: இனி இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/six-planets-released-from-rahu-ketu-who-get-luck-1784391079"></link>
            <id>https://manithan.com/article/six-planets-released-from-rahu-ketu-who-get-luck-1784391079</id>
            <summary type="text">ஜோதிடக் கணிப்பின்படி, ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கின்றனர். சூரியன், குரு, சந்திரன் கடகத்திலும், செவ்வாய் ரிஷபத்திலும், புதன் மிதுன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடக் கணிப்பின்படி, ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கின்றனர். சூரியன், குரு, சந்திரன் கடகத்திலும், செவ்வாய் ரிஷபத்திலும், புதன் மிதுனத்திலும், சுக்கிரன் சிம்மத்திலும், சனி மீனத்திலும் உள்ளனர்.
</p><p>
தற்போது கிரகங்கள் ராகு-கேதுவுக்கு இடையில் பயணிப்பதால், சில ராசிக்காரர்களுக்கு தடைகள் மற்றும் எதிர்பாராத சவால்கள் ஏற்பட்டிருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0076fc43-8cab-468f-a536-a2c286f1335c/26-6a5bac65165e4.webp' /></p><p>இந்நிலையில், ஜூலை 19ஆம் தேதி சந்திரன் சிம்மத்திலிருந்து கன்னிக்கு பெயர்ச்சி அடைவதால் ராகு-கேதுவின் தாக்கம் குறையும் எனக் கூறப்படுகிறது.</p><p>

இந்த சந்திரப் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் நிலையில், சில ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றம், நிதி வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. ஜூலை 19 முதல் ராகு-கேதுவின் தாக்கத்திலிருந்து விடுபட்டு பலன் பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.</p><p></p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cee242bd-afc2-475d-8ddd-882c969c482d/26-6a5bac65bbd0d.webp' /></p><h2>
</h2><p>ராகு-கேதுவின் தாக்கத்தில் இருந்து சந்திரன் விலகுவதால், இதுவரை பேச்சு தொடர்பாக ஏற்பட்டுவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.</p><p>பணியிடத்தில் மனக்குழப்பம் இல்லாமல் தெளிவான முடிவுகளை எடுத்து, செயல்பட முடியும். உடன்பிறந்தவர்களுடனான உறவு மேலும் வலுப்படும். குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.</p><p> தொழில் துறையில் நல்ல முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் காணக்கூடிய காலமாக அமையும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவான சிந்தனை ஏற்படும்.
</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d20465-c640-4fb8-9401-01bd77c19d85/26-6a5bac666ce7a.webp' /></p><h2>
</h2><p>ராகு-கேதுவின் பிடியில் இருந்து சந்திரன் வெளியே வருவதால், இதுவரை மன அழுத்தம் மற்றும் குழப்பங்களை சந்தித்து வந்த கடக ராசிக்காரர்களுக்கு நிம்மதி கிடைக்கும். </p><p>குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முடிவுகளை எடுப்பதில் இருந்த தயக்கம் நீங்கி, இனி தெளிவாகவும் தைரியமாகவும் செயல்படுவீர்கள்.</p><p>பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய வழிகளில் வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் தானாக உருவாகும்.&nbsp;</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21802827-0f56-4182-bbfa-3af3da06f6ca/26-6a5bac671d664.webp' /></p><p></p><p>
ராகு-கேதுவின் தாக்கத்தில் இருந்து சந்திரன் விலகுவதால், பணியிடத்தில் இதுவரை எதிர்கொண்ட சிரமங்கள் குறையும். </p><p>மன அழுத்தம் நீங்கி, நிம்மதி அதிகரிக்கும். குடும்பம் மற்றும் வேலை சார்ந்த பொறுப்புகளை திறம்பட கையாளும் திறன் அதிகரிக்கும்.</p><p>பணம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, வருமான வாய்ப்புகள் மேம்பட்டு நிதிநிலை சிறப்பாகும். நீண்ட கால கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் தொகை கணக்கெடுப்பு.., இணையத்தில் சுயமாக பதிவு செய்வது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/census-procedures-for-self-registering-online-1784377713"></link>
            <id>https://manithan.com/article/census-procedures-for-self-registering-online-1784377713</id>
            <summary type="text">தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டம் நேற்று தொடங்கியது. 

2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டம் நேற்று தொடங்கியது. </p><p>

2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. </p><p>

இதற்கு முன்னதாக வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் குறித்த கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
</p><p>
இந்த கணக்கெடுப்பில் பொதுமக்கள் நேரடியாகவும், இணையதளம் மூலம் சுயமாகவும் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fc06912-9ed7-4a24-94f1-d234088014de/26-6a5b7174c12dd.webp' /></p><h2>சுய கணக்கெடுப்பு செய்வது எப்படி?
</h2><p>
முதலில் <a href="https://se.census.gov.in/" target="_blank"><b>se.census.gov.in </b></a>என்ற இணையதளத்திற்கு சென்று, உங்கள் மாநிலத்தை தேர்ந்தெடுத்து கேப்சாவை உள்ளிட வேண்டும்.</p><p>

அதன்பிறகு குடும்பத்தலைவரின் பெயர், 10 இலக்க மொபைல் எண் மற்றும் விருப்பம் இருந்தால் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.&nbsp;</p><p>ஒரு குடும்பத்திற்கு ஒரு மொபைல் எண் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
</p><p>
பின்னர் விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து, மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை உள்ளிட வேண்டும்.</p><p> 

அதன்பிறகு மாவட்டம், அஞ்சல் குறியீடு, கிராமம் அல்லது நகரம் மற்றும் பகுதி ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58af468a-04b1-4ca2-90a6-8f6a1145e37e/26-6a5b71741b9eb.webp' /></p><p>தொடர்ந்து வரைபடத்தில் உங்கள் குடியிருப்பை சரியாகக் கண்டறிந்து, சிவப்பு குறியீட்டை சரியான இடத்தில் வைத்து இருப்பிடத்தை உறுதிப்படுத்த வேண்டும்.</p><p>

அதன்பிறகு வீடு மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான கேள்வித்தாளை பூர்த்தி செய்ய வேண்டும். பின் இவற்றை சரிபார்த்து, தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.</p><p>பின்னர் தகவல்களை வரைவு நிலையில் சேமிக்கலாம் அல்லது இறுதியாக சமர்ப்பிக்கலாம். சமர்ப்பித்த பிறகு, மொபைல் எண்ணுக்கு எஸ்.இ. ஐ.டி. குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.</p><p>

கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போது, அந்த எஸ்.இ. ஐ.டியை அவரிடம் தெரிவிக்க வேண்டும்.</p><p> அவர் பதிவு செய்த தகவல்களை சரிபார்த்து, தேவைப்பட்டால் திருத்தங்களை மேற்கொள்வார்.&nbsp;</p><p>இந்த வழிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் இணையதளம் மூலம் தங்களது சுய கணக்கெடுப்பை பதிவு செய்யலாம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T16:00:30+00:00</updated>
        </entry>
    </feed>
