மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் துளியும் இல்லாத 3 ராசிகள்! உங்க ராசி என்ன?
பொதுவாக ஒரு மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை தீர்மாணிப்பதில், அவன் சமூகத்தில் எப்படி நடந்துக்கொள்கின்றான் என்பதும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஒருவன் மற்றவர்களிடம் நீண்ட நாட்களுக்கு நல்லவனாகவும் அல்லது கெட்டவனாகவும் நடிக்கவே முடியாது. ஒருவனுடைய இயல்பு குணம் நிச்சயம் ஒரு கட்டத்தில் வெளிவந்தே தீரும்.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் சமூகத்தவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்ற அக்களை துளியும் இல்லாதவர்களாக இருப்பார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் 12 ராசிகளில் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சற்றும் சிந்திக்காமல் தங்களின் குணத்தையும் பழக்கங்களையும் அப்படியே வெளிப்படுத்தும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்கள் தங்களின் வாழ்க்கையில் எல்லாவற்றையும் விடவும், சுதந்திரத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் மிகவும் அசல் சிந்தனையாளர்கள் என்பதால்தான் இணக்கம் அவர்களுக்கு மிகக் குறைந்த ஆர்வத்தையே தருகிறது. இவர்கள் மற்றவர்களுடன் இணக்கமான சூழலை உருவாக்கிக்கொள்ள ஒருபோதும் நடிக்க மாட்டார்கள்.
கும்ப ராசிக்காரர்கள் தனித்து நிற்க விரும்புகிறார்கள், மற்றவர்கள் செய்வதைப் பின்பற்றி செய்யும்போது நாம் தனித்து நிற்க மாட்டோம் என்ற கருத்தில் கும்ப ராசியினர் மிகவும் உறுதியாக இருப்பார்கள். மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்த ஒருபோதும் இவர்கள் சிந்திப்பது கிடையாது.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் குணம் அற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்கள் என்பதால் காரிய வாதிகளாக இருப்பார்களே தவிர மற்றவர்கள் கருத்து பற்றி சிறிதும் அக்கறை காட்ட மாட்டார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் கற்றுக்கொள்ளவும், தங்கள் மனதை விரிவுபடுத்தவும் விரும்புகிறார்கள். அவர்கள் மாற்றத்தையும், புதிய, முயற்சிக்கப்படாத முறைகளைப் பரிசோதிப்பதையும் விரும்புகிறார்கள்.
அதே சமயம் மற்றவர்கள் தங்களை பற்றி குறிப்பிடும் விமர்சனங்கள் பற்றி கண்டுக்கொள்ளவே மாட்டார்கள்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள். மர்மமான இயல்புக்கு ரகசியம் காப்பதற்கும் பெயர் பெற்ற இவர்கள் சமூகத்தின் கருத்துக்கு மதிப்பளிப்பது கிடையாது.
அவர்கள் வித்தியாசமானவர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள், அதை மறைக்க முயற்சிக்கவும் மாட்டார்கள். இவர்களின் குணத்தை இவர்கள் மற்றவர்களிடம் சொல்லி புரியவைக்க வேண்டிய அவவசியமே இருக்காது.
இவர்களுக்கு ஒரு இணக்கவாதியாக இருப்பது பிடிக்காது. அவர்களின் மையத்தில், தனித்துவமான விஷயங்கள்தான் அவர்களை சுவாரஸ்யமாக்குகின்றன என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே மற்றவர்களின் விமர்சனங்களை இவர்கள் மதிப்பதே கிடையாது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |