கார் விபத்து சம்பவம்..3 பிரிவின் கீழ் யாஷிகா மீது வழக்குப்பதிவு.. இறந்த தோழி யார்?
நள்ளிரவு 1 மணியளவில், கிழக்கு கடற்கரை சாலையில் நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துள்ளாகி, தோழி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவில், இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமனாவர் யாஷிகா ஆனந்த். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு, நடிகர் மகத்துடன் காதல் வயப்பட்டு சர்ச்சையில் சிக்கி வெளியேறினார். '
எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆன்ந்த கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிடுவது வழக்கம்.
இதனிடையே நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார், மேலும், இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான பவானி என்பவர் படுகாயமடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில், விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், மோசமாக கார் ஓட்டி, உயிரிழப்பு ஏற்படுத்தியதாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.
அதிவேகமாக கார் ஓட்டியது, விபத்துக்குள்ளாக்கியது, உயிரிழப்பு ஏற்படுத்தியது 279, 337, 304 என மூன்று பிரிவின்ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், விபத்தில் உயிரிழந்த பவானிதேவியின் உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தகவல் சினிமா வட்டாரத்தினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது,.