ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள்... தீவிபத்தில் சிக்கி 10 குழந்தைகள் பரிதாப பலி
மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
7 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டனர். அங்குள்ள பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் நள்ளிரவு 2 மணிக்கு இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் என்றாலும் 10 குழந்தைகள் உயிரோடு கருகினர். தீ விபத்து நேரிட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.