கேலிக்கு கணவன் சொன்ன வார்த்தை - விபரீத முடிவில் மனைவி... அப்படி என்ன சொன்னார்?
லக்னோவில் ராகுல் சிங் உருவக்கேலியாக ஒரு வார்த்தை சொன்னதால் மாடலிங் ஆர்வத்தில் இருந்த அவரது மனைவி தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
கணவன் மனைவி
உத்தர பிரதேசத்தில் உருவக்கேலி செய்த கோபத்தில் மாடலிங் பெண் ஒருவர், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.
உத்தர பிரதேம் மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் ராகுல் சிங்.இவரது மனைவிக்கு 28 வயதாகும் நிலையில் மாடலிங் துறையில் தன்னை ஈடுபடுத்தி பிஸியாக இருந்துள்ளார்.
இந்த தம்பதி தங்கள் உறவினர் வீட்டீற்கு அன்று சென்றுள்ளனர். அப்போது சாப்பிட்டு எ்லாம் முடித்தவுடன் எல்லோரும் ஹாலில் ஒன்று சேர்ந்துள்ளனர்.

அப்போது, கணவர் விளையாட்டாக ஒரு வார்த்தை கூறியுள்ளார். அப்போது மனைவியின் கண்கள் சிவந்து உடனே, கோபித்துக் கொண்டு தனது படுக்கை அறைக்கு ஓடி சென்றுள்ளார்.
இப்படி ஓடி சென்ற பெண் சரி அவளே சரியாகி வருவாள் என நினைத்து யாரும் சென்று அவனை சமாதானப்படுத்தவில்லை. சரி என்று விட்டுள்ளனர். பின்னர் இரவு உணவு சாப்பிட ஒரு மணி நேரம் கழித்து அவரை அழைத்துள்ளனர்.
ஆனால், பெட் ரூமுக்குள் இருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை. இதனால் குடும்பத்தினர் சந்தேகப்ட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் விரைவாக அந்த வீட்டிற்கு வந்து அந்த ரூமின் கதவை எடைத்துள்ளனர்.

அங்கு, தன்னு சிங் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்தை கண்டு ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் எறைந்து போனது. முதல் கட்ட விசாரணையில், கணவன் உருவக்கேலி செய்ததால் இளம்பெண் விபரீத முடிவு எடுத்தார் என தெரிய வந்துள்ளது.
போலீசார் விசாரித்ததன் அடிப்படையில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது ராகுல் சிங், விளையாட்டாக தனது மனைவியை குரங்கு என கிண்டல் செய்துள்ளார். ஆனால், மாடலிங் துறையில் சாதிக்கும் எண்ணத்ததுடன் இருந்ததால் குரங்கு என்ற வார்த்தை அவரை காயப்படுத்தி உள்ளது.

குடும்பத்தினர் முன்னிலையில் தன்னை உருவக்கேலி செய்யும் வகையில் குரங்குடன் ஒப்பிட்டு பேசியதால் கடும் மனை உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
ஒற்றை சொல்லால் தனது கனவை கலைக்கும் வகையில் கணவன் பேசியதால், விரக்தியில் தன் உயிரை மாய்த்து கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து பெண் வீட்டார் புகார் ஏதும் போலீசாருக்கு கொடுக்கவில்லை. இருந்தபோதும், தற்கொலைக்கான தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.