ஓடும் ரயிலில் இளம்பெண் கண்ட காட்சி: மறுநிமிடமே உயிரிழந்த சோகம்
தமிழகத்தில் ஓடும் ரயிலில் தந்தை அடிவாங்கிய காட்சியை அவதானித்த இளம்பெண் மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் காமாட்சி ராஜன். இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு 3 வயதில் உமேஸ்பவின் என்கிற மகன் உள்ளார்.
இந்நிலையில் திருமணம் முடிந்த தனது தங்கையை மறுவீட்டுக்கு அழைத்து வருவதற்காக மகேஸ்வரி தனது தந்தை அண்ணாமலை, தாய் கல்யாணி ஆகியோருடன் ரயிலில் திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்துள்ளார்.
அப்பொழுது செங்கல்பட்டு ஸ்டேஷனில் ஏறிய 4 பேர் அண்ணாமலையின் இடத்தில் அமர்ந்து கொண்டு தகராறு செய்துள்ளனர்.
குறித்த நபர்களிடம் தந்தைக்காக மகேஷ்வரியும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், குறித்த நபர்கள் அண்ணாமலையை தாக்க தொடங்கியுள்ளனர்.
இதனை அவதானித்த மகேஷ்வரி மயங்கி கீழே விழுந்து மூச்சு, பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து இரயில் டிக்கெட் பரிசோதகர் உதவியுடன் ஏற்கனவே தயாராக இருந்த ஆம்புலன்சில் மகேஸ்வரியை ஏற்றி சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மகேஷ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதை கேட்ட அண்ணாமலை, இவரது மனைவி கல்யாணி ஆகிய 2 பேரும் கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.