சாணக்கிய நீதி: பெண்கள் இந்த விடயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாம்!
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும், ஒரு சிறந்த இராஜதந்திரியாகவும் மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிிரசித்தி பெற்றவர் தான் ஆச்சாரிய சாணக்கியர்.
சாணக்கியரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. சாணக்கியர் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.

சாணக்கிய நீதியில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் பெண்களை விட ஆண்கள் வலிமையானவர்களாகக் கருதப்பட்டாலும் உண்மையில் பல விஷயங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாகவே பார்க்கப்படுகின்றார்கள்.
அந்தவகையில், சாணக்கியர் தனது நூலில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கும் சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவை என்னென்ன என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

பொறுமை
ஆண்களை விட பெண்கள் பல மடங்கு பொறுமையுடன் செயல்படுவார்கள் என்று கூறப்படுகிறது. உணர்வுகளைப் புரிந்துகொள்வதிலும், சூழ்நிலைகளை சமநிலையாக கையாள்வதிலும் பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள். சாணக்கியரின் கருத்துப்படி, பெண்கள் பெரும்பாலும் எந்த சூழ்நிலையையும் அமைதியாகவும் பொறுமையாகவும் எதிர்கொள்வதால், “க்ஷமய தாரித்ரி” எனும் சிறப்பை பெறுகிறார்கள்.
புத்திக்கூர்மை
சாணக்கிய நீதியின் படி, பெண்கள் நுணுக்கமான சிந்தனையில் அதிக புத்திக்கூர்மை கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்.
முக்கிய முடிவுகளில் ஆண்கள் சில நேரங்களில் விரைவாக செயல்படலாம்; ஆனால் பெண்கள் நிலைமையை ஆழமாக ஆராய்ந்து, நுட்பமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள்.

விட்டுக்கொடுக்கும் தன்மை
உறவுகளை நிலைநிறுத்துவதில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. பல நேரங்களில் குடும்பம் மற்றும் உறவுகள் பாதிக்கப்படாமல் இருக்க பெண்கள் அதிகம் விட்டுக்கொடுக்கிறார்கள் என சாணக்கிய நீதியில் குறிப்பிடப்படுகின்றது.
கணவன்–மனைவி உறவு முதல் குடும்ப உறவுகள் வரை, கடினமான சூழல்களிலும் சமநிலையை பேணும் திறன் பெண்களிடம் அதிகமாக உள்ளது. இதனால் குடும்ப ஒற்றுமையையும் சமூக இணக்கத்தையும் காக்க அவர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள்.
முடிவெடுக்கும் திறன்
சிக்கலான சூழ்நிலைகளில் பெண்கள் அதிக சிந்தனையுடன் முடிவெடுக்கிறார்கள். அவசரமாக செயல்படுவதற்குப் பதிலாக, நிலைமையை முழுமையாக ஆராய்ந்து சரியான வழியைத் தேர்வு செய்வது அவர்களின் சிறப்பு.
இதனால் பல சிக்கல்கள் எளிதாக தீர்க்கப்படுகின்றன. இந்த குணத்திலும் ஆண்களை விடவும் பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றார்கள்.

பேச்சாற்றல்
பெண்களுக்கு பொதுவாக சிறந்த தொடர்பாடல் திறன் உள்ளது. தங்களது சொற்களால் மற்றவர்களை ஈர்க்கவும், சமாதானப்படுத்தவும் அவர்களுக்கு இயல்பு திறன் அதிகம்.
அதனால்தான் குடும்ப சூழலில் தாயின் பேச்சுக்கு குழந்தைகள் அதிகம் செவிமடுக்கிறார்கள்; அதேபோல், பல நேரங்களில் கணவர்களும் மனைவியின் கருத்துகளை மதித்து ஏற்றுக்கொள்கிறார்கள். பேசி புரியப்படுத்துவதில் ஆண்களை விட பெண்கள் எப்போதும் சிறந்தவர்களாகவே கருதப்படுகின்றார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |