கடனை திருப்பி கேட்ட பெண்: மயக்க நிலையில் இளைஞர் செய்த திடுக்கிடும் செயல்
இந்தியாவில் கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை அவரது குழந்தைகளையும் கொலை செய்த வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தின் குச்சா சாதுரம் பகுதியில் சந்தோஷ் ரத்தோர் என்பவரின் உறவுக்கார பெண் ரேகா என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
வாங்கிய பணத்தினை சரியான நேரத்தில் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததால், ரேகா அவரிடம் பலமுறை கேட்டுள்ளதுடன், பொது இடத்தில் வைத்தும் கேட்டு அவமானப்படுத்தியுள்ளார்.
இதனால் கோபத்தில் உச்சத்தில் இருந்த சந்தோஷ் ரேகாவை பழிவாங்க நேரம் பார்த்து, கடந்த 21ம் தேதி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு மயக்க மருந்து கலந்த தேநீரை அவருக்கும் அவரது மூன்று குழந்தைகளுக்கும் கொடுத்து, மயங்கிய பின்பு அவர்களை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பின்பு, வீட்டிலிருந்து பணம், நகை, லேப்டாப், மொபைல் என அனைத்தையும் கொள்ளையடித்துவிட்டு தப்பியுள்ளார்.
தகவல் அறிந்த பொலிசார் அங்கிருந்த சிசிடிவி கமெராவின் உதவியுடன் குற்றவாளி சந்தோஷனைக் கைது செய்துள்ளனர்.