பணத்தால் ஒருபோதும் மகிழ்சியை வாங்க முடியாது! காரணம் இது தான்
பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் பணம் பற்றிய பார்வைகள் வெவ்வேறு தன்மையுடையதாக இருக்கும். பணத்தேவை அதிகம் இருப்பவர்கள் எப்போதும் வாழ்வில் முக்கியம் பணம் மட்டுமே என்ற கருத்துடையவர்களாக இருப்பார்கள்.
ஆனால் உலக பணக்காரர்களின் பணம் பற்றிய கருத்து முற்றிலும் வேறுப்பட்டதாக இருக்கும். இவர்களிடம் கேட்டால் பணம் தால் சந்தோஷத்தை வாங்க முடியாது என்று சொல்லுவார்கள். இது ஏன் நிகழ்கின்றது என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா?

ஆம், உண்மையில் இந்த இரண்டு தரப்பினரின் கருதும் அவர்களின் அனுபவத்தில் சரியானது தான். ஆனால் பணம் இல்லாதவர்களால் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. காரணம் இவர்களின் ஆசைகளையும், தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முக முக்கியமானது பணம் தான்.
அப்படியானால் பணக்காரர்களுக்கு ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள பணம் தேவையில்லையா என்று இப்போது நிச்சயம் ஒரு கேள்வி எழுந்திருக்கும். இங்கு தான் ஒரு விடயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்.

நாம் தேவைக்கு மீறி பணம் இருக்கும் போது நாம் ஆசைப்பட்ட அனைத்தையும் எளிதில் வாங்க முடிவதால், நாம் ஆசைப்பட்ட விடயத்தால் நாம் மகிழ்சியடைவது குறைந்துவிடுகின்றது.
பொருளாதாரம் ஒரு கவலையாகவே இல்லாத அளவுக்கு பணக்காரனாக மாறுவது சொர்க்கம் போலத் தெரிகிறது. ஆனால் அந்த நிலையை அடைந்தவுடன் பணம் பற்றிய கருத்து மாற்றமடைந்தே தீரும்.

இது குறித்துபொருளாதார நிபுணர் வில்லியம் டாசன் (william dowson)கூறுகையில், தேவைக்கு அதிகமான பணம் சம்பாதிப்பது உண்மையில் ஒரு சாபம் என்கின்றார்.
பணம் ஒரு கவலையாக இருப்பதை நிறுத்தும்போது, சம்பாதிப்பது, அடைவது மற்றும் பொருட்களை மதிப்பிடுவதில் உள்ள மகிழ்ச்சி மெதுவாக மறைந்துவிடும் என்பதே உண்மை.

நாம் நினைத்த எதையும் அடைய முடியும் என்ற நிலையில், இந்த பொருள் அல்லது சேவை மீதான பற்று முற்றிலும் மறைந்துவிடுகின்றது.
சில நேரங்களில் துரத்தல் பிடிப்பதை விட அதிக மகிழ்ச்சியைத் தருகிறது என்கின்றார். அதாவது நாம் அடைய நினைப்பதை வாழ்க்கை முழுவதும் துரத்துவதில் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே இருக்கின்றது.அதனால் தான் பணக்காரர்கள் பணத்தில் மகிழ்ச்சியில்லை என குறிப்பிடுகின்றார்கள்.

இது பொரும்பாலானவர்களுக்கு பொய் சொல்வதை போல் தோன்றினாலும் இதுவே உண்மை. பொருளாதாரம் பற்றிய கவலையை மனிதன் இழக்கும் போதே மனிதன் வாழ்வின் மகிழ்சியும் குறைய ஆரம்பிக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |