சிவன் கோவிலில் நந்தியின் காதில் ஏன் கிசுகிசுக்கிறார்கள்? பின்னணி காரணம் தெரியுமா?
இந்தியாவில் ஆயிரக்கணக்கான சிவபெருமான் கோவில்கள் உள்ளன. கோவில்களின் அமைப்பு மாறினாலும், சிவபெருமானுக்கு முன் நந்தி அமர்ந்திருப்பது மட்டும் எந்த கோவிலிலும் மாறாத சிறப்பாகும்.
சிவனை வழிபடும் போது, நந்தியின் காதில் நமது வேண்டுதல்களைச் சொல்லும் வழக்கம் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது. அதற்கு என்ன காரணம் என்று தெரியாமலேயே பெரும்பாலானவர்கள் பின்பற்றுகின்றார்கள்.

என்ன காரணம்?
ஆனால், நேரடியாக சிவபெருமானிடம் வேண்டாமல், நந்தியின் காதில் ஏன் வேண்டுதல்களைச் சொல்கிறோம் என்ற கேள்வி பலருக்கும் எழும். இதற்கான விளக்கம் புராணங்களிலும் சைவ ஆகமங்களிலும் காணப்படுகிறது.
புராணங்களின்படி, நந்தி சிவபெருமானின் மிகச் சிறந்த பக்தரும், கைலாயத்தின் வாயிற்காவலரும் ஆவார். நந்தியின் அனுமதியின்றி சிவபெருமானை அணுக முடியாது என்பதால், பெரும்பாலான சிவாலயங்களில் அவர் சிவனை நோக்கி அமர்ந்திருப்பார்.

அவர் பக்தி, விசுவாசம், வலிமை மற்றும் ஞானத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறார். சிவபுராணத்தின்படி, சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது, தேவர்களின் வேண்டுகோள்களை நந்திதேவரே அவரிடம் எடுத்துச் சென்றார். அதனால், பக்தர்களின் வேண்டுதல்களையும் நந்தி சிவபெருமானிடம் சேர்ப்பார் என்ற நம்பிக்கை உருவானது.
இதன் காரணமாகவே பக்தர்கள் நந்தியின் காதில் மெதுவாக தங்கள் விருப்பங்களைச் சொல்கிறார்கள். ஆன்மீக ரீதியாக, நந்தி ஜீவாத்மாவையும், சிவபெருமான் பரமாத்மாவையும் குறிக்கிறார்.

நந்தியின் காதில் வேண்டுதலைச் சொல்வது, இறைவனிடம் முழுமையாகச் சரணடைவதையும், அவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைப்பதையும் உணர்த்துகிறது.
மேலும், ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் ஆன்மீக அதிர்வு உண்டு; அதை நந்தி சிவபெருமானிடம் சேர்ப்பார் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. எனவே, நந்தியின் காதில் வேண்டுதலைச் சொல்வது ஒரு பழக்கமாக மட்டும் அல்ல; அது பக்தி, பொறுமை, நம்பிக்கை மற்றும் முழுமையான சரணாகதியின் அடையாளமாகக் பார்க்கப்படுகின்றமை குறிப்பி்டத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |