விமானங்கள் பறக்கும் போது வானில் வெள்ளை கோடுகள் தெரிவது ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே வானில் விமானங்கள் பறப்பதை ரசிப்பதற்கு அனைவருமே விரும்புவார்கள். வானில் விமானத்தின் சத்தம் கேட்டவுடன் குழந்தைகள் மட்டமன்றி பெரியவர்களும் கூட ஆர்வமாக வெளியில் வந்து பார்ப்பது வழக்கம் தான்.
இந்தளவுக்கு வானில் விமானம் பறப்பதை பார்ப்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த விடயமாக இருக்கின்றது. இப்படி ஜெட் விமானங்கள் வானில் கடந்து செல்லும் போது வெள்ளை நிறத்தில் கோடுகள் தென்படுவதை நாம் கவனித்திருப்போம்.
இந்த கோடுகள் விமானங்களில் இருந்து வெளிவரும் புகை என்று தான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த வெள்ளை கோடுகள் உண்மையில் எதனால் ஏற்படுகின்றது என இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
என்ன காரணம்?
விமானத்தில் இருந்து புகை வெளியாவது கிடையாது.ஜெட் போன்ற அதிவேக இன்ஜின் கொண்ட விமானங்களில் இருந்து நீராவி வெளிவருகிறது.
இந்த நீராவி வானின் குளிர்ந்த காற்றுடன் கலந்து பனித்துளியாக மாறி நமக்கு வெள்ளை கோடுகளாக காட்சியளிக்கின்றன.
அதிவேகமாக செல்லும் ஜெட் விமானங்கள் சூடான நீராவியை வெளியேற்றும் போது காற்று உள்ள குளிர்ச்சியால் உறைந்து போய் இவ்வாறு காட்சியளிக்கின்றன. குளிர்ச்சியான சூழல் இல்லாதபோது இவ்வாறு வெள்ளை கோடுகள் வானில் தென்படாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |