பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் குணங்களில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பணத்தை தேடி ஓடவேண்டிய அவசியமே இருக்காது. இவர்கள் இயல்பாகவே பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி இயல்பாகவே பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் சக்தி கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் அழகு மற்றும் செல்வத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால்,இவர்கள் இருக்கும் இடத்தில் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது.
இவர்கள் பணத்தின் மதிப்பை நன்கு உணர்ந்தவர்களாக இருப்பார்கள். பணத்திற்காக கடினமாக உழைப்பதற்குப் பதிலாக, அதை எளிதாக எப்படி சம்பாதிப்பது என்ற கலை இவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.
இவர்கள் பணம் பணம் என அதன் பின்னால் ஓடாமல், பிடித்த வேலையை செய்து சந்தோஷமாக பணத்தை வரவேற்பதால், இவர்களிடம் பணம் பெருகிக்கொண்டே இருக்கும்.
சிம்மம்
சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசியினர், வாழ்க்கையில் பிரகாசிக்கிறார்கள், மக்களைப் போலவே பணமும் இயல்பாகவே அவர்களிடம் ஈர்க்கப்படும். இவர்கள் இருக்கும் இடத்தில் செல்வ செழிப்புக்கு குறைவே இருக்காது.
இவர்கள் தங்கள் திறமைகளை பணமாக மாற்றுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்களின் அதிர்ஷ்டம் குறைந்த முயற்சியிலேயே இவர்களுக்கு அதிக பணத்தை கொடுக்கும்.
ஆனால் இவர்கள் ஒருபோதும் பணத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் தங்களை நம்புகிறார்கள், இது மற்றவர்களையும் அவர்களை நம்ப வைக்கிறது.அதனால் இவர்களை தேடி பணமும் வெற்றியும் தானாகவே வரும்.
மீனம்
மீனம் ராசியினர் அதீத கற்பனை திறன் கொண்டவர்களாக இருப்பார்பார்கள். அவர்களின் கனவு வாழ்க்கையை நிச்சயம் நிஜமாக மாற்றும் வல்லமை இவர்களிடம் இருக்கும். அவர்களே நம்பா விட்டாலும் அதிர்ஷ்டம் எப்போதும் அவர்களைப் பின்தொடரும்.
இந்த ராசிக்கு பிரபஞ்சத்துடன் ஆழமான தொடர்பு காணப்படுவதால், பணம் உட்பட அவர்களுக்குத் தேவைப்படும் அனைத்தும் தானாக கிடைக்கும்.
இவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் பணத்துக்கு தட்டுபாடு இருக்காது. இவர்கள் பணத்தை நோக்கி ஓடுவதற்கு பதிலாக பணத்தை ஈர்கின்றார்கள். இவர்களிடம் காணப்படும் பிரபஞ்ச சக்தி இவர்களின் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள துணைப்புரியும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |