கோபத்தில் மிருகத்தையே மிஞ்சிவிடும் 3 ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் கோபம் வருவது மிகவும் இயல்பான விடயம் தான். தங்களுக்கு பிடிக்காத அல்லது எரிச்சலூட்டு சூழ்நிலைகளில் இந்த உணர்வு ஏற்படுவது வழக்கம்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மூர்கத்தனமாக கோபப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

இவர்களின் கோபம் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அப்படி கோபத்தில் தன்னிலை மறந்து ஆபத்தான மிருகத்தை போல் நடந்துக்கொள்ளும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசியினர் இயல்பாகவே சிறிய விடயங்களுக்கும் அதிகமாக கோப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் கோபம் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எல்லை மீறியதாக இருக்கும்.
ஒரு பருவமழை புயலைப் போல, அவர்களின் கோபங்கள் திடீரென வெடித்து, அவர்களின் திடீர் உணர்ச்சியால் தூண்டப்படும்.அதன் போது பாதிப்புகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.
இவர்களின் சாதாரண கோபமே ஆபத்தானதாக இருக்கும் என்பதால் இவர்கள் கோபத்தில் இருக்கும் போது வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. இவர்களின் கோபத்தை இவர்களால் மாத்திரமே ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.
சிம்மம்

அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக திகழும் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் இயல்பாகவே மற்றவர்களை அடக்கி ஆளும் ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களால் கட்டுப்படுத்தப்படும் போது, இவர்களின் கோபம் ஒரு எரிமலை வெடிப்பை போல் ஆபத்தானதாக இருக்கும்.
இவர்கள் கோபத்தில் என்ன செய்கின்றார்கள் என்பதை அவர்களாலேயே அறிய முடியாத அளவுக்கு கோபப்படுவார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.
விருச்சிகம்

மர்மமான இயல்புக்கும் ரகசிய ஆற்றலுக்கும் பெயர் பெற்றவர்களாக அறியப்படும் விருச்சிக ராசியினர், எளிதில் தங்களின் உயர்வுகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்த மாட்டார்கள்.
ஆகால் இவர்கள் கடலின் படுகுழியைப் போல ஆழமான உணர்ச்சிகளைக் கொண்டுள்ளனர். அவர்களின் அமைதியான வெளிப்புறத்தின் கீழ் ஒரு புயல் போன்ற கோபம் இருக்கும். அது வெளிப்படும் போது ஆபத்து மிகவும் மோசமாகதாக இருக்கும்.
ஒரு மூர்க்கத்தனத்துடன் கோபப்படும் இவர்களால், இவர்களுக்கு நெருக்கமானவர்களே கூட மோசமாக பாதிக்கப்படலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |