இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் தொழிலில் கொடிகட்டி பறப்பது உறுதி! ஏன்னு தெரியுமா?
தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திர முறைகளுள் ஒன்று தான் எண்கணித சாஸ்திரம். நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன.
எண்களால் வாழ வைக்கவும் முடியும்.அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அதன் பிரகாரம் ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறுவதாகும்.

அந்தவகையில், எண் கணிதத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில தேதிகளில் பிறக்கும் பெண்கள் வணிகத்தில் சிறந்து விளங்குவதற்கான இயல்பான குணாதிசயங்களுடன் சிலர் பிறக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தலைமைப் பண்பு, படைப்பாற்றல் மற்றும் வணிகத் திறனைக் கொண்டிருப்பதாகவும், வெற்றிகரமான தொழில் முயற்சிகளைத் தொடங்கும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதாகவும் எண் கணித நிபுணர்கள் நம்புகின்றனர்.
இந்த பதிவில் எந்தெந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பவர்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எண் 1

அனைத்து மாதங்களிலும் 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே தலைமைத்துவப் பண்புகள் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் சுதந்திரமாகச் சிந்திப்பவர்கள், உயர்ந்த இலக்குகளைக் கொண்டவர்கள் மற்றும் சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்வவர்கள்.
எண் கணிதத்தின்படி, இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கிரகங்களின் அரசனாகக் கருதப்படும் சூரியனால் ஆளப்படுகிறார்கள்.
இதன் காரணமாக அவர்கள் முடிவெடுக்கும் திறன் மிக்கவர்களாகவும், தொழில்முனைவோராக வெற்றி பெறக்கூடியவர்களாகவும் திகழ்கிறார்கள்.
எண் 5

அனைத்து மாதங்களிலும் 5, 14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் அறிவு மற்றும் தகவல் தொடர்பின் கிரகமான புதனால் ஆளப்படுகிறார்கள்.
புதிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படும் திறன் இவர்களிடம் அதிகமாக இருக்கும். இதனால் தொழில் மற்றும் வணிக உலகில் அவர்கள் வலிமையான சக்திகளாக உருவெடுக்கிறார்கள்.
இவர்கள் பொதுவாக படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், நெகிழ்வுத்தன்மை கொண்டவர்களாகவும், சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
எண் 8

அனைத்து மாதங்களிலும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் நிதி மேலாண்மைக்கான கிரகமான சனிபகவானால் ஆளப்படுகிறார்கள்.
இவர்கள் புதிய தொழில்களைத் தொடங்கி, அவற்றை நீண்ட காலம் வெற்றிகரமாக நடத்தும் பொறுமையையும் உறுதியையும் கொண்டிருப்பார்கள்.
கடின உழைப்பும், திட்டமிடும் திறனும் இவர்களை வணிக உலகில் தனித்துவமான இடத்தைப் பெறச் செய்கின்றன.இவர்களிடம் சிறந்த நிதி முகாமைத்துவ குணங்கள் இயல்பாகவே இருக்கும்.
எண் 3

அனைத்து மாதங்களிலும் 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் ஞானம், வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் கிரகமான குருபகவானால் ஆளப்படுகிறார்கள்.
இவர்கள் வலுவான நிர்வாகத் திறன்களைக் கொண்டவர்களாக இருப்பதுடன், மற்றவர்களுக்கு ஊக்கமளித்து வெற்றிகரமான நிறுவனங்களையும் தொழில்களையும் உருவாக்கும் திறன் பெற்றவர்களாகவும் திகழ்கிறார்கள்.
இவர்களின் தலைமைத்துவ குணங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை, இவர்களை சிறந்த தொழில் அதிபர்களாக மாற்றுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |