Technology: வாட்ஸ் அப்பில் இந்த சேவைகளை பயன்படுத்த இனிமேல் கட்டணமா?
தற்காலத்தில் சமூக ஊடகங்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வாட்ஸ்அப்பிற்கு இருக்கும் மவுசு குறையவே இல்லை.அதன் தேவை இன்றியமையாதது.
ஆனால் தற்போது வாட்ஸ்அப்பில் சந்தா செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வாட்ஸ்அப் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மெட்டாவின் புதிய அறிவிப்பு
நாளொன்றுக்கு 150 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதாக அறியப்படுகின்றது. இந்நிலையில், அந்த தளத்தை வணிகமயமாக மாற்ற மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன் பிரகாரம் பயனர்கள் ஸ்டேட்டஸ் மற்றும் சேனல்களை சந்தா செலுத்தி பார்க்கும் வசதியை அமல்படுத்துவது என மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
சேனல்களை எல்லோராலும் கட்டணம் செலுத்தாமல் பார்க்க முடியும் என்றாலும், எந்த தகவலை சந்தாதாரர்களுக்கு மட்டும் வழங்கலாம் என அதன் அட்மின் முடிவு செய்வார்.
அதேநேரம், பயனர்களின் தனிப்பட்ட தகவல் தொடர்பில் எந்தவொரு தலையீடும் இருக்காது என்றும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் முறை தொடரும் என்றும் மெட்டா தரப்பில் இருந்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை ஒளிபரப்ப மெட்டா நறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன் மூலம் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் வணிக வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என்றும் மெட்டா கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் விற்பனை செய்ய மாட்டோம் என மெட்டா நிறுவனம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |