மே 15- பின் வாட்ஸ் அப்பின் நிலை என்ன? கடும் எதிர்ப்பில் பயனாளர்கள்; அதிர்ச்சி விளக்கம்!
கடந்த சில மாதங்களுக்கு முன் வாட்ஸ் அப் நிறுவன புதிய பிரைவசி நெறிமுறைகளை பயனாளிகள் வரும் 15 ம் தேதிக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்திருந்தது.
அப்படி இல்லையெனில் வாட்ஸ் ஆப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என கூறியிருந்தது. இதனால், பயனாளர்கள் பலரும் டெலிகிராம் மற்றும், சிக்னல் செயலிக்கு மாறி வந்தனர்.
அதன்பின்பு, வாட்ஸ் அப் நிறுவனம் பதில் அளிக்கும் வகையில், வாட்ஸ்அப் தனது பிரைவசி கொள்கைக்கு விளக்கம் அளித்தது.
இந்நிலையில், பயனாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததால், மே 15 பிறகு வாட்ஸ் அப் நிறுவனம் புதிய நெறிமுறைகளை பயனாளிகள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பாதிப்பு ஏற்படாது என அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள புதிய தகவலில், பிரைவசி நெறிமுறை கெடு தள்ளிவைக்கப்படுவதை உணர்த்தினாலும், நெறிமுறைகளை ஏற்க பயனாளிகளை மறைமுகமாக வாட்ஸ் அப் நிர்பந்திக்கிறது.
அதாவதும் நிபந்தனைகளை ஏற்காவிட்டால், வாட்ஸ்அப் சேவையை முழுமையாக பயன்படுத்த முடியாது எனும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, புதிய நெறிமுறைகளை ஏற்காதவர்கள் கணக்கு டெலிட் செய்யப்படாது. அதற்கு மாறாக வாட்ஸ்அப் இத்தகைய பயனாளிகளுக்கு பிரைவசி நிபந்தனையை தொடர்ந்து நினைவூட்டிக்கொண்டே இருக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட காலம் வரை இவ்வாறு பயனாளிகளுக்கு நினைவூட்டல் அளிக்கப்பட்ட பிறகு, இது நிரந்தர நினைவூட்டலாக மாற்றப்படும். அதன்பிறகு பயனாளிகள் வாட்ஸ்அப் சேவையை முழுவதும் பயன்படுத்த முடியாது. வாட்ஸ் அப் அழைப்புகளை மேற்கொள்ளலாம் மற்றும் செய்திகளுக்கு பதில் அளிக்கலாம்.
மற்றபடி, வாட்ஸ் அப் சாட் வசதியை எல்லாம் அணுக முடியாது. இப்படி செயலிழக்கும் கணக்குகள் 120 நாட்களுக்கு பிறகு நீக்கப்படும். இதனிடையே, வாட்ஸ்அப் புதிய நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அவை அமலுக்கு வரும். புதிய பயனாளிகளுக்கும் இது பொருந்தும்.
எனவே, வாட்ஸ்அப், சுற்றி வளைத்து பயனாளிகள் தனது சர்ச்சைக்குரிய பிரைவசி நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வாட்ஸ்அப் வழி செய்துள்ளது. வாட்ஸ் அப்பின் புதிய நெறிமுறைகளுக்கு பயனாளிகள் மற்றும் பிரைவசி வல்லுநர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, இந்திய அரசு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வாட்ஸ் அப் புதிய பிரைவசி நெறிமுறைகள் அமல் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால், விதவிதமான விளக்கங்களால் இந்த விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் வாட்ஸ்அப் தனது பிரைவசி கொள்கையை எப்படியேனும்
அமல் செய்வதில் தீவிரமாக இருப்பதை உணர்த்தியிருக்கிறது. இதனால் மேலும் பயனாளர்கள் அதிருப்தியை தெரிவித்து வருவதோடு மாற்று செயலியை நோக்கி செல்லதான் வேண்டும் என கூறி வருகின்றனர்.