சாணக்கிய நீதி: இந்த குணங்கள் கொண்ட பெண் தான் உலகின் தலைசிறந்த மனைவியாம்... உங்களிடம் இருக்கா?
பண்டைய இந்தியாவில் வாழ்ந்த புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.
இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளம். சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒரு சிறந்த மனைவிக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறந்த மனைவியின் முக்கிய குணங்கள்
ஆச்சார்யா சாணக்யாவின் கருத்தின் அடிப்பயைடில் ஒரு பெண் தன் கணவரிடம் விசுவாசமாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும்.
மனைவியின் வலுவான குணம் குடும்பத்தின் அடித்தளத்திற்கு பலத்தை கொடுப்பதாக அமைகின்றது. இது எதிர்கால குழந்தைகளையும் பாதிக்கிறது, மேலும் அவர்களும் வலுவான வலிமை கொண்டவர்களாக மாறுகிறார்கள்.
சாணக்கிய நீதியின் பிரகாரம் ஒரு சிறந்த பெண் புத்திசாலி மற்றும் விரைவான புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இன்னல்களுக்கு பயப்படாமல், உடனடியாக தகுந்த முடிவுகளை எடுக்கும் தைரியம் அவருக்கு இருக்க வேண்டும். அத்தகைய பெண்கள் தங்கள் கணவரின் வாழ்க்கையை மகிழ்ச்சியால் நிரப்புகிறாள்.
ஒரு சிறந்த மனைவி தனது ஒழுக்க விழுமியங்களை உயர்வாக வைத்திருக்க வேண்டும். பொய், வஞ்சகம், பேராசை, மறைத்தல் போன்ற விரும்பத்தகாத விஷயங்களிலிருந்து அவள் விலகி இருக்க வேண்டும்.
தனது வேலைகளில் நேர்மையும், மதத்தின் மீது அர்ப்பணிப்பும் அவரது முக்கிய குணங்களாக இருக்க வேண்டும். கணவனிடம் அன்புடனும் மரியாதையுடனும் பேசும் மனைவி தன் கணவனை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்திருக்கிறாள்.
அத்தகைய குணம் கொண்ட பெண்கள் தங்கள் கணவன் மற்றும் மாமியார் அனைவருக்கும் மரியாதையை வழங்குவார். மனைவி வீட்டை நடத்துவதில் வல்லவராக இருக்க வேண்டும். பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவு நிச்சயம் ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டும். இத்தகைய பெண்கள் நிதி ரீதியில் குடும்பத்தை செழிப்படைய செய்கின்றார்கள்.
மேலும், குடும்ப வருமானத்தை அதிகரிக்க கணவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். நிர்வாகம், நிதி மற்றும் முடிவெடுப்பதில் திறமையான பெண்கள் எந்தவொரு குடும்பத்தின் முக்கிய சொத்துக்களாக கருதப்படுகிறார்கள். இந்த குணங்களை ஒருங்கே கொண்ட பெண்கள் தான் உலகில் தலைசிறந்த மனைவிகள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |