இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் இருக்கா? அப்போ இந்த பானங்களை மறந்தும் குடிக்காதீங்க!
பொதுவாகவே உடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டும் என்றால், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியே அதன் தொழிலை சிறப்பாக செய்ய வேண்டியது இன்றியமையாதது.
உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்கு ஊட்டச்த்து மிக்க உணவு, சீரான தூக்கம், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை பழக்கங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் அவசியமாகின்றது.

அதில் ஏதாவது ஒரு விடயம் பாதிக்கப்படும் போது உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவை சந்திக்க நேரிடும்.
ஏற்கனவே உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருபவர்கள் அல்லது சிகிச்சை எடுத்துகொள்பவர்கள் உணவு விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

அப்படி ஆரோக்கியமானதாக இருந்தாலும், எந்தெந்த ஆரோக்கிய பிரச்சினை இருப்பவர்ககள் எந்தவைகை பானங்களை தவிர்க்க வேண்டும் என்பது குறித்த சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காயில் அதிகளவில் வைட்டமின் சி சத்து காணப்படுகின்றது. தினசரி உணவில் நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் ஜூஸ் சேர்த்துக்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும் மேலும் கூந்தல் முதல் சருமம் வரையில் நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
இருப்பினும் அசிடிட்டி அல்லது GERD போன்ற பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் ஜூஸைக் தவிர்ப்து நல்லது.
காரணம்அது வயிற்று எரிச்சலை அதிகரித்து, அமில சுரப்பை அதிகரித்துவிடும்.அதனால் பாதிப்பு மேலும் வலுவடையும் என்பதால் இந்த பிரச்சினை உள்ளவர்க்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வெந்தய நீர்

வெந்தயம் உடல் சூட்டைக் குறைப்பதில் ஆரம்பித்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது வரையில் ஆற்றல் காட்டுகின்றது.
இதில் நார்ச்சத்தும் செரிந்து காணப்படுகின்ற. இந்த வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து வெளியேறும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க போராடுபவர்களுக்கு இது சிறந்த தெரிவாக இருக்கும்.
ஆனால் பைல்ஸ் அல்லது ஹெமோராய்டுகள் இருப்பவர்கள் வெந்தய நீர் குடிப்பதை தவிர்ப்பது சிறப்பு இது குடல் தூண்டுதலையும் எரிச்சலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மல்லி நீர்

மல்லி விதைகளை இரவில் தண்ணீர் ஊற வைத்து அதனை காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக பசியின்மை பிரச்சினைக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதிலும் இது ஆற்றல் காட்டும்.
ஆனால் மாதவிடாய் கோளாறு இருப்பவர்கள் அல்லது மாதவிடாய் இரத்தப்போக்கு மிகவும் குறைவாக இருப்பவர்கள் . இந்த மல்லி நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள குளிர்ச்சி யான பண்புகள் இரத்தப்போக்கை மேலும் குறைவடைய செய்யும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |