இதய நோயாளி என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்?
எல்லா வகையான உடற்பயிற்சிகளும் இதய நோயாளிகளுக்குப் பாதுகாப்பானவை அல்ல, எனவே எந்தவொரு உடற்பயிற்சியையும் தொடங்குவதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை மனதில் கொள்வது அவசியம்.

இதய நோயாளிகள்
இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு முறையான உடற்பயிற்சி மிகவும் முக்கியமாகும்.
வழக்கமான உடல் செயல்பாடு இதயத்தை வலுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், உடலுக்கு வேறு பல நன்மைகளையும் கொண்டு வரும்.
உடற்பயிற்ச்சி செய்யும் போது சரியான முறையிலும் கவனத்துடனும் செய்யவது அவசியம்.

உடற்பயிற்சி ஏன் முக்கியமானது?
வழக்கமான உடற்பயிற்சியானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, இரத்த ஓட்டம் மற்றும் நரம்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது, மேலும் உடல் எடை மற்றும் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இது மனநிலை, ஆற்றல் நிலைகள் மற்றும் உறக்கத்தையும் மேம்படுத்துகிறது.

என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்?
வேகமான நடைப்பயிற்சி
- இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் உடற்பயிற்சிகளில் வேகமான நடைப்பயிற்சியும் ஒன்றாகும். இது மூட்டுகளுக்கு அதிக சிரமத்தை கொடுக்காது. வேகமான நடைப்பயிற்சி இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதைச் செய்வதற்கு நீங்கள் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆரம்பத்தில், ஒவ்வொரு முறையும் 10-15 நிமிடங்கள் சாதாரண வேகத்தில் நடக்கவும். படிப்படியாக இதை 30 நிமிடங்களாக அதிகரிக்கவும்.
மிதிவண்டி ஓட்டுதல்
- மிதிவண்டி ஓட்டுவது மூட்டுகளில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதோடு, இதயத்திற்கும் நன்மை அளிக்கிறது. ஃபிட்னஸ் வாட்ச் மூலம் உங்கள் இதயத் துடிப்பை எளிதாகக் கண்காணிக்கலாம். மூட்டுவலி அல்லது சமநிலைக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும்.
நீச்சல்
- நீச்சல் என்பது இதய நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த, பாதுகாப்பான மற்றும் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு உடற்பயிற்சியாகும். நீரின் மிதப்புத்தன்மை உடல் எடையைத் தாங்கி, இதயம் மற்றும் மூட்டுகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தாமல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நீச்சல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, வீக்கத்தையும் குறைக்கிறது.
யோகா
- யோகா உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். வழக்கமான யோகா பயிற்சி இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, ஓய்வு நிலையில் உள்ள இதயத் துடிப்பையும் சீராகப் பராமரிக்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |