இந்த 3 அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள்

Heart Failure Heart Attack Blood Pressure
By Vinoja Jan 08, 2026 11:20 AM GMT
Vinoja

Vinoja

Report

தற்காலத்தில் வயது வேறுபாடுகள் இன்றி, உலகளவில் அதிக இறப்புகளுக்கு உயர் ரத்த அழுத்தமே முக்கிய காரணமாக அறியப்படுகின்றது.

ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல மணிநேரங்கள் வேலை பார்த்தல், துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, போதியளவு தூக்கமின்மை, முறையற்ற வாழ்க்கை முறை பழக்கங்கள், மனஅழுத்தம், அதிகரித்த உடல் பருமன் போன்ற பல்வேறு காரணிகள் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணியாக அமைகின்றது.

இந்த 3 அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள் | What Are The Danger Signs Of High Bp

உயர் ரத்த அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகள் நாம் அன்றாடம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சினைகள் போலவே இருப்பதன் காரணமாக யாரும் அதனை பெரிதாக பொருட்படுத்துவது கிடையாது.

ஆனால் அதனை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாத போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அளவுக்கு அபாயகரமான விளைவுகளை ஏற்டுத்தக்கூடும். எனவே உயர் ரத்த அழுத்தின் எந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கவே கூடாது என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இந்த 3 அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள் | What Are The Danger Signs Of High Bp

காலை நேர தலைவலி

பொதுவாக காலையில் தூக்கத்தில் இருந்து எழும் போதே தலைவலியை உணர்க்கின்றீர்கள் என்றால் நிச்சயம் இது ஆபத்தான அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது.

காரணம் அதிகாலையில் ஏற்படும் தலைவலியானது அதிக மன அழுத்தம் அல்லது போதுமான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால் சந்திக்க நேரிடும்.

இந்த 3 அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள் | What Are The Danger Signs Of High Bp

வறண்ட சருமத்திற்கான இயற்கை பராமரிப்புகள்! இந்த தவறுகளை செய்யாதீங்க

வறண்ட சருமத்திற்கான இயற்கை பராமரிப்புகள்! இந்த தவறுகளை செய்யாதீங்க

குறிப்பாக  உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும், இப்படியான தலைவலியை  ஏற்படும். அதனை கண்டுக்கொள்ளாமல் விடுவது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடும். 

குறிப்பாக இந்த வகையான தலைவலி காலையில் எழுந்ததும், தலையின் பின்புறத்தில் ஏற்படும். தூக்கத்தின் போது அல்லது அதிகாலையில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, மண்டை ஓட்டில் அழுத்தம் அதிகரிக்கிறது.

அதன் விளைவாகவே இந்த தலைவலியை சந்திக்க நேரிடுகிறது. எனவே அடிக்கடி காலையில் எழுந்ததும் தலைவலியை சந்தித்தால், உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

பார்வையில் மாற்றம்

பார்வையில் ஏற்படும் மாற்றங்களும் உயர் இரத்த அழுத்தத்தின் முக்கிய  எச்சரிக்கை அறிகுறி என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

காரணம்  இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, அது கண்களில் உள்ள சிறிய இரத்த குழாய்களை கடினப்படுத்தி, உயர் இரத்த அழுத்த ரெட்டினோபதியின் நிலைக்கு உள்ளாக்குகிறது.

இந்த 3 அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள் | What Are The Danger Signs Of High Bp

அதனால் பார்வை மங்கலாக தெரிவது அல்லது தெளிவின்றி இரண்டாக தெரிவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

தினமும் கணினி திரையை பார்த்தப்படி அதிக நேரம் பணிப்புரிபவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படுவதால், அதனை சாதாரணமாக சிலர் நினைக்கின்றார்கள்.

ஆனால் இந்த பிரச்சினையை தொடர்ந்து அனுபவித்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

அதிக உடல் சோர்வு

மிகுந்த உடல் சோர்வை உணர்கின்றீர்கள் என்றால்,அது உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக மூளை மற்றும் இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் கிடைக்காமையின் விளைவாக இருக்கலாம்.

இந்த 3 அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள் | What Are The Danger Signs Of High Bp

சரும பொலிவை இரட்டிப்பாக்கும் தேங்காய் பீட்ரூட் சாதம்! வாரம் ஒரு முறை இப்படி சாப்பிடுங்க

சரும பொலிவை இரட்டிப்பாக்கும் தேங்காய் பீட்ரூட் சாதம்! வாரம் ஒரு முறை இப்படி சாப்பிடுங்க

எனவே நல்ல தூக்கத்தை அனுபவித்த பபின்னரும் ஒருவர் மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், உடனே மருத்துவரை அனுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகின்றது.

இதனை புறக்கணிப்பதால், மாரடைப்பு ஏற்படுவதற்கு  அதிக வாய்ப்பு காணப்படுகவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US