தமிழகத்தை அச்சுறுத்தும் Super-El-Nino – வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!
தமிழகத்தில் சூப்பர் எல் நினோவின் தாக்கம் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் சூப்பர் எல் நினோ (Super El Nino) நிகழ்வு, உலகளவில் தீவிர வானிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் வரலாறு காணாத கனமழை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, அதிக மழைப்பொழிவையும் வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஹேமச்சந்தர் மேலும் எச்சரித்துள்ளார்.
சூப்பர் எல் நினோவின் தாக்கம் மற்றும் அதன் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட தகவல்களை முழுமையாக இந்தக் காணொளி வாயிலாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |