நாஞ்சில் வாழ்க்கைக்கு முடிவு கட்டாம விட மாட்டாங்களோ? வைரலாகும் திருநங்கையின் பதிவு!
சர்ச்சைக்கு மத்தியிலும் நாஞ்சில் விஜயனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துடன், 2024 ஆம் ஆண்டு நாஞ்சில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, திருநங்கை வைஷுலிசா மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
நாஞ்சில் விஜயன் - திருநங்கை சர்ச்சை
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி என்னிடம் பாலியல் ரீதியான தொடர்பைக் கொண்டிருந்தார், மனைவியாகவும் நான் வாழ்ந்திருக்கிறேன். என திருநங்கை வைஷுலிசா அண்மையில் புகார் கொடுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் “நானும் அந்த பொண்ணும் சாதாரண நண்பர்கள் தான். எங்களுக்குள் இருப்பது தவறான தொடர்பு இல்லை என மனைவியை ஆதாரமாக நிறுத்து ஒரு காணொளியை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.
இந்த காணொளிக்கு பதில் கொடுக்கும் வகையில் திருநங்கை வைஷுலிசா தன்னிடம் வாங்கிய பணத்தை மனசாட்சியிருந்தால் திருப்பி கொடுங்க என்று கேட்டுக்கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் பற்றியும் கேள்வி எழுப்பி ஒரு காணொளியை வெளியிட்டர்.

குறித்த பிரச்சினை இணையத்தில் பொது பிரச்சினையாக மாறி அண்மையில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன், உங்கள் பயணத்தை நீங்கள் தொடருங்கள்.எனக்கு குடும்பம், குழந்தைகள் இருக்கின்றன ஒருவேளை நான் உங்கள் மனதைக் காயப்படுத்தி இருந்தால் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசியிருந்தார்.அதனை தொடர்ந்து இந்த பிரச்சினை சற்று ஓந்தது.

வைஷுலிசாவின் சர்ச்சை செயல்
இந்நிலையில், தனது 37 ஆவது பிறந்த நாளை நேற்றைய தினம் கொண்டாடிய நாஞ்சில் விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டர்.
அவரின் வாழ்த்து காதல் சொட்டும் வகையில் இருந்தமையால் இணையத்தில் வைரலானது. அத்துடன் நிறுத்தாது திருநங்கை வைஷுலிசா தற்போது 2024 ஆம் ஆண்டு நாஞ்சில் விஜயன் தன்னுடன் பிறந்தநாள் கொண்டாடிய நினைவுகள் என சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் இவர் நாஞ்சில் விஜயன் திருமண வாழ்க்கைக்கு முடிவு கடடாமல் விட மாட்டார் போல.. என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |