எப்போ வர்றீங்க? VJ பிரியங்காவை மிரட்டிய கணவர்! வைரலாகும் பதிவு
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் கணவர் வசி சாச்சி திருமணத்துக்கு பின்னர் முதல் முறையாக தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ரொமான்டிக் செல்பி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
பிரியங்கா தேஷ்பாண்டே - வசி சாச்சி
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே அண்மையில் வசி சாச்சி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் VJ பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், Oo Solriya Oo Oohm Solriya போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கியுள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் இவரின் தனித்துவமான பாணி பலருக்கும் பிடித்துப்போன ஒன்று.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவருடன் முதல் திருமணத்தை பிரியங்கா நடத்தி முடித்த நிலையில், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
அதன் பின்னர் பிரியங்கா தேஷ்பாண்டே வசி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட தகவல் அண்மைகாலமாக இணையத்தில் அனல் பறந்த நிலையில், இவர்களின் புதிய அப்டேட்களை ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது தனது மனைவி பிரியங்காவுடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் செல்ஃபி புகைப்படத்தை வசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு YO! Mrs Deshpande Sachi, eppo varinga? என பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |