மருத்துவமனைக்கு வந்த போதே நாடித்துடிப்பு இல்லை- வெளியான பகீர் தகவல்
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
கொரோனா தடுப்பூசி போட்டதற்கும், இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விவேக் அனுமதிக்கப்பட்டிருந்த சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் மருத்துவர் ராஜு சிவசாமி தனியார் நிறுவன தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், சுயநினைவிழந்த நிலையில் நடிகர் விவேக் காலை 11 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார், கொண்டு வரும்போது அவருக்கு நாடித்துடிப்பே இல்லை.
உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதயத்திற்கு செல்லும் இடதுபுற ரத்தக்குழாயில் 100 சதவிகிதம் அடைப்பு இருந்ததால் ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் எக்மோ உதவியுடன் சிகிச்சைகள் மேற்கொண்டோம், எனினும் அவர் இதயம் பலவீனமாக இருந்ததால் எங்களது முயற்சிகளுக்குப் பலன் இல்லை. அவருக்கு ஏற்கனவே ரத்தக் கொதிப்பு பிரச்சனை இருந்ததாக தெரிகிறது என தெரிவித்துள்ளார்.