விராட் கோலி டெஸ்டில் ராஜினாமா செய்யும் முன் நடந்தது என்ன? வெளியான ரகசிய தகவல்!
இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷினான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஆனால், விராட் கோலியின் இந்த முடிவு இன்று அவசரமாக எடுக்கப்பட்டது இல்லை. 3-வது டெஸ்டில் தோல்வி அடைந்த பிறகு விராட் கோலி வாழ்க்கையில் அடுத்த 24 மணி நேரத்தில் இவரின் முடிவு எடுக்கப்பட்டது எனகூறப்படுகிறது.
இந்நிலையில், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் முடிவை முதலில் கோலி பயிற்சியாளர் டிராவிட்டிடம் கூறியுள்ளார். புதிய கேப்டன் டெஸ்ட் அணிக்கும் வந்தால் தான், அணிக்கு நல்லது என்று அவரிடம் கூறிய கோலி, பிறகு அணி வீரர்களை அழைத்து நேற்று மாலையே தனது முடிவை கூறியுள்ளார். கோலியின் முடிவால் சக வீரர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
அதன்பின்னர், விராட் கோலி, மதியம் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷாவிடம் ராஜினாமா முடிவை பற்றி கூறியுள்ளார். இதற்கு பி.சி.சி.ஐ. ஒப்புதல் வழங்கிய பிறகே ரசிகர்களுக்கு கடிதம் எழுதி தனது ஓய்வு முடிவை கோலி சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
கோலியின் இந்த முடிவுக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா முழு ஒத்துழைப்பு வழங்கி மகிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிய டெஸ்ட் கேப்டன் குறித்து பி.சி.சி.ஐ. விரைவில் முடிவை அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ரோகித் சர்மாவுக்கே அந்த பதவியையும் கொடுக்கும் எனவும் துணை கேப்டனாக ராகுல் செயல்படுவார் எனவும் தெரிகிறது.
விராட் கோலியின் இந்த முடிவு ஒட்டுமொத்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினாலும், இனி வரும் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழவேண்டும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.