விஜய்–திரிஷா குறித்து வைரலான கருத்து உண்மையா? விளக்கம் அளித்த யாஷிகா ஆனந்த்
நடிகை யாஷிகா ஆனந்த்; விஜய், திரிஷா குறித்து தான் தவறான முறையில் பேசியது போல் சித்தரிக்கப்பட்ட விடயம் குறித்து தற்போது தனது எக்ஸ் தளபக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
த்ரிஷா - விஜய் சர்ச்சை
முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழக முல்வருமான விஜய் சங்கீதா விவாகரத்து விவகாரத்தின் பின்னர் த்ரிஷா மற்றும் விஜய் பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையான கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்தது தான்.

விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், அதனை தொடர்ந்து ஒரு திருமண நிகழ்ச்சிக்கு த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் ஜோடியாக ஒரே நிற ஆடையில் வந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்தது.
ஆனால் அதன் பின்னரும் இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்காமல் தேர்தலில் விஜய்க்கு வாக்களித்துவிட்டு, அதனையும் வெளிப்படையாக கில்லி பட பாடலுடன் மாஸாக அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது திருப்பதி சென்று தரிசனத்தில் ஈடுபட்டு, நேரடியாக விஜய் வீட்டுக்கே சென்று அவரை சந்தித்தார்.

அதனை தொடர்ந்தும் விஜய் பதவியேற்ப்பு விழாவிலும் அசத்தல் லுக்கில் வந்து, ஒட்டுமொத்த ஊடகங்களிலும் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார்.
அதனை தொடர்ந்து இணையத்தில் த்ரிஷா- விஜய் பற்றிய சர்ச்சை காட்டு தீயாய் பரவ ஆரம்பித்தது. இன்று வரைவில் இது குறித்து பொது வெளியில் வாய் திறக்காத த்ரிஷா மறைமுகமாக முதல்வர் விஜயுடனான உறவை உறுதிப்படுத்தும் வகையில் பதிவுகளையும் போட்டு வருகின்றார்.

சமீபத்தில் அஜித் தாயாரின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தவும் விஜயுடன் இணைந்து தான் சென்றிருந்தார். இதுவும் இணையத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஆனால் த்ரிஷா மற்றும் முதல்வர் விஜய் இது குறித்து கண்டுக்கொள்வதே இல்லை.
யாஷிகா சர்ச்கை கருத்து

சமீபத்தில் யாஷிகா கடற்கரையில் ஃபோட்டோஷூட் செய்திருந்தார். அந்த வீடியோவை ஒருவர் ஷேர் செய்து, 'பொது இடத்தில் அரைகுறை ஆடையோடு இப்படி செய்தால் முதலமைச்சர் விஜய் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்' என சொன்னது போன்றும்; அதற்கு யாஷிகா, 'அவர் நடிகை திரிஷாவோடு பிஸியாக இருப்பார்' என்று கூறியது போன்றும் ஒரு ஸ்க்ரீன் ஷாட் இணையத்தில் வைராலானது.

இந்நிலையில் அதுதொடர்பாக யாஷிகா ஆனந்த் விளக்கமளித்திருக்கிறார். அவர் தன் எக்ஸ் பக்கத்தில், "இப்போது பரவிவரும் விஷயம் முழுக்க முழுக்க என்னை கீழே தள்ளிவிட்டு, தங்களது பேஜுகளுக்கு பிரபலத்தை பெறுவதற்காக சிலர் உருவாக்கிய கற்பனை கதைதான் அது.
நான் தவறான ஒன்றை பயன்படுத்துவது மாதிரி முன்பு ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான படத்தை பரப்பினார்கள். இதுவும் அதே மாதிரியான ஒரு அபத்தம்தான். இப்படிப்பட்ட மோசமான பேஜுகள் லைக்குகளுக்காக என்ன செய்தாலும் அதை நம்பாமல் புறக்கணித்துவிடுங்கள்" என குறிப்பிட்டு தன்து எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
Hey! Whatever is getting circulated is absolutely made out of their own interest of putting me down and gaining popularity for their pages ! Just like how fake dildo image was circulated ( ai generated) This is also crap 🤣 ignore and don’t believe what shitty pages do forLikes
— Yashika Anand (@iamyashikaanand) June 8, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |