அட திரிஷா பெயரில் ஒரு ஊரே இருக்கா? எங்கன்னு தெரியுமா?
நடிகை த்ரிஷாவின் ரசிகர் ஒருவர் த்ரிஷா என்ற பெயரில் ஒரு கிராம் இருப்பதாக தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
நடிகை த்ரிஷா
மௌனம் பேசியதே படம் மூலமாக, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. இன்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, இடையில் சில வருடங்கள் சரியான கதை தேர்வு இல்லாத காரணத்தாலும், கதையின் நாயகியாக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசையிலும் தேர்வு செய்து நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், மார்க்கெட்டை இழந்தார்.
ஆனால் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், இரண்டு பாகங்களாக வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் த்ரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் அதிகம் கவனிக்கப்பட்டது. இந்த படத்தின் வெற்றியால் த்ரிஷா மீண்டும் பிஸியான நடியாக மாறினார்.
மீண்டும் தளபதி விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் மட்ட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இவர் அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்தார்.
அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக குட் பேட் அக்லீ படத்தில் நடித்து இருந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தக் லைப் படத்திலும் அவர் நடித்துள்ளார்.
த்ரிஷாவின் பெயரில் கிராமம்
இந்நிலையில், நடிகை திரிஷா பெயரில் உள்ள ஊர் ஒன்றை அவரது ரசிகர் கண்டுபிடித்து இருக்கிறார். அந்த ஊரின் பெயர் பலகை முன் நின்று வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் அந்த ரசிகர் பதிவிட்டிருந்த நிலையில், அதை நடிகை திரிஷாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ஆச்சர்யத்துடன் பதிவிட்டு இருந்தார்.
அந்த ஊர் பெயர் ‘Vijayak Trisha'. அந்த ஊர் லடாக்கில் உள்ள நுப்ரா வேலியில் இருந்து உலகத்தின் உயரமான பேஸ் கேம்ப் என அழைக்கப்படும் சியாச்சின் பேஸ் கேம்புக்கு செல்லும் வழியில் உள்ளதாம். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதனைப் பார்த்த பலரும் திரிஷா பெயரில் ஒரு கிராமமா என ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
