வெளிநாட்டில் இருந்து வந்து அவசர அவசரமாக விவேக் வீட்டிற்கு சென்ற விஜய்!
தன் நகைச்சுவையால் நம்மை எல்லாம் சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்த சின்ன கலைவாணர் விவேக்கிற்கு கடந்த 16ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 17ம் தேதி காலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
#ThalapathyVijay Paid Visit To #Vivek Sir's Family Earlier This Morning!#Thalapathy @actorvijay @Jagadishbliss @BussyAnand @RIAZtheboss pic.twitter.com/PiSydxUhsr
— V4UMEDIA (@V4umedia_) April 26, 2021
78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
விவேக் இறந்தபோது விஜய் நாட்டில் இல்லை. நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் தளபதி 65 படத்தின் ஷூட்டிங்கில் அதுவும் ஜார்ஜியாவில் இருந்தார்.
ஜார்ஜியா ஷெட்யூலை முடித்துக் கொண்டு படக்குழு நேற்று காலை தான் சென்னை திரும்பியது. இதையடுத்து இன்று காலை முதல் வேலையாக விவேக்கின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார் விஜய்.
விவேக் இறந்தபோது பல்வேறு நடிகர்கள், நடிககைள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.
அப்பொழுது விஜய் மட்டும் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் நாடு திரும்பிய கையோடு விவேக் வீட்டிற்கு விஜய் சென்றது குறித்து அறிந்தவர்கள் அவசரப்பட்டு விமர்சித்துவிட்டோமே என்கிறார்கள்.
விவேக் திடீர் என்று இறந்துவிட்டதால் பலரும் இன்னும் அதிர்ச்சியில் தான் இருக்கிறார்கள். எனக்கு விவேக்கை தவிர வேறு எதுவுமே தெரியாதே என்று அவரின் உதவியாளர் செல்முருகன் தெரிவித்ததை பார்த்த ரசிகர்கள் கண் கலங்கிவிட்டனர்.
தமிழகம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்தவர் விவேக். அவரின் நினைவாக அந்த பணியை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் வீட்டில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதுடன், வாட்ஸ்ஆப்பிலும் ஸ்டேட்டஸாக பலர் வைக்கிறார்கள்.
இதை எல்லாம் பார்த்து விவேக் நிச்சயம் சந்தோஷப்படுவார்.