விஜய் - த்ரிஷா காதலிக்கலாம் தப்பில்லை : பிரபல இயக்குநர் சொன்ன விஷயம்
பிரபல இயக்குநர் விஜய் மற்றும் த்ரிஷாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது சமூக வலைத்தள பக்கத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் த்ரிஷா
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு கோர்டில் மனு தாக்கல் செய்துதிருந்தார்.
சங்கீதா அந்த மனுவில் விஜய்க்கு வேறொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதால் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இது சமூக வலைத்தள பக்கத்தில் விஜய்க்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி இருக்க நடிகர் விஜய்யும் த்ரிஷாவும் ஒரே நிற ஆடையுடன் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டனர். இது விஜய்யின் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்த ஒரே ஒரு காணொளி வெளியாகி இணையத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது. இந்த நிலையில் பலரும் த்ரிஷா மற்றும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர்.
இப்படி இருக்க விஜய் மற்றும் த்ரிஷா குறித்து பாலிவுட் இயக்குநர் விக்ரம் பாட் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இவருடைய கருத்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் கருத்து
அவர் வெளியிட்டுள்ளதன் படி “விஜய் த்ரிஷாவை பாராட்ட எனக்கு ஒரு காரணம் உள்ளது. எல்லாம் இருந்தும் எங்களுக்குள் ஒன்றுமில்லை என காட்டாமல் வெளிப்படையாக இருப்பது ஒருவகையான கண்ணியம்.
காதலை பாவச் செயல் போல மறைக்காமல் வெளிப்படையாக இருப்பது ஒரு வகை கண்ணியம். தற்போது சமூக வலைத்தளங்களில் விஜய் மற்றும் த்ரிஷா பற்றி பல விடயங்கள் பேசப்பட்டு வருகின்றது.
இதெல்லாம் உண்மையா பொய்யா என்பதெல்லாம் எனக்கு தெரியாது.

ஒருவேளை அந்த விடயம் உண்மையாக இருந்தால் எனக்கு கூறுவதற்கு சில விடயம் உண்டு. என்னுடைய அண்மைக் கால சிறைவாசம் சுதந்திரத்தின் மதிப்பை எனக்கு உணர்த்தியது. சுதந்திரத்தின் உன்னதத்தை உணர்த்தியது.
இது மனித ஆன்மாவின் சிறைவாசம். இது மகிழ்ச்சியின் சிறைவாசம். இரண்டு பேர் ஒரு உறவில் சிக்கியிருக்கும்போது, அந்த உறவு தொடரவேண்டும் என சமூகம் வலியுறுத்துவதும் கூட ஒரு வகையில் சிறைவாசம் தான்.
நான் இந்த இரண்டு பக்கங்களிலும் இருந்திருக்கிறேன். நான் ஒருவரிடம் முட்டாளாக இருந்திருக்கிறேன். முட்டாளாக்கப்பட்டிருக்கிறேன். மனித மனம் தவறு செய்யக் கூடியது தான்.

அது மகிழ்ச்சியை தேடிச் செல்லும். தனிப்பட்ட முறையில் நாம் அனைவரும் இரக்க குணம் கொண்டவர்கள். மற்றவர்களின் பலவீனங்களை புரிந்துகொள்ளக்கூடியவர்கள்.
காதலின் சிக்கல்களை புரிந்துகொள்ளக்கூடியவர்கள். ஆனால் சேர்ந்திருக்கும் போது சட்டென்று நாம் பாவமற்றவர்களாக ஆகிவிடுகிறோம்.
மேலும், மனித சுதந்திரத்துக்கும் தனிப்பட்ட வாழ்க்கைத் தேர்வுகளுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும்” என்றும் விக்ரம் பாட் தனது பதிவில் தெரிவித்துள்ளார் இது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |