வொர்த் இல்லைனு சொன்ன விஜய்.. மகன் சஞ்சய் கொடுத்த பதிலடி
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இவர்களின் விவாகரத்து சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய் சங்கீதா
பிரபல நடிகரும், அரசியல்கட்சி தலைவருமான நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா செப்டம்பர் 27ம் தேதி விவாகரத்து கேட்டு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் மற்றும் சாஷா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
2021ம் ஆண்டு வரை ஒரே குடும்பமாக வாழ்ந்த வந்த விஜய் சங்கீதா பின்பு வெளியில் சேர்ந்து எந்தவொரு நிகழ்விற்கும் வருவதில்லை. சங்கீதா லண்டனில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.

இவர் தனது விவாகரத்து புகாரில் விஜய் வேறொரு நடிகையுடன் வாழ்ந்து வருவதாகவும், தன்னை மனதளவில் கஷ்டப்படுத்தியுள்ளதாகவும், அவரது வீட்டில் இருப்பதற்கு தங்களை அனுமதிக்கவில்லை என்று பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
இதற்கு எந்தவொரு பதில் அளிக்காத விஜய் திடீரென திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகை த்ரிஷாவுடன் வந்து அதிர்ச்சியடைய வைத்தார்.
இந்த காணொளி இணையத்தில் வைரலானதையடுத்து, கட்சியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பல கேள்விகள் எழுந்தது. இதற்கு நடிகர் விஜய் மறைமுகமாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த பிரச்சனையெல்லாம் அவ்வளவு வொர்த் இல்லை... நீங்க கவலைப்படாதீங்க நான் பாத்துக்கிறேன் என்றார். விஜய்யின் இந்த பதிவிலுக்கு தனது 25 ஆண்டுகாலம் வாழ்ந்த மனைவியையே இப்படி வொர்த் இல்லை என்று சொல்றாரே என்று பரபரப்பாக பேச ஆரம்பித்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது மகன் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஜேசன் சஞ்சய்
விஜய்யின் மகன் சஞ்சய் படம் இயக்கி வரும் நிலையில், தற்போது புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு நான் வொர்த்தான மகன் என்பதை நிரூபித்துள்ளார்.
குறித்த புகைப்படத்தில் ஈரோட்டில் தொழிற்சாலை தொழிலாளர்களுடன் சஞ்சய் புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் விஜய்யை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மற்றொரு புறம் மனைவியை வொர்த் இல்லை என்று கூறிய உங்களுக்கு மகன் வொர்த் என்பதை நிரூபித்துள்ளார் என்று கூறி வருகின்றனர்.

சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக உள்ள நிலையில், சிக்மா என்ற படத்தினை இயக்கி வருகின்றார். இதனை லைகா நிறுவனமும், ஜேஎஸ்ஜே மீடியாவும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக இருக்கின்றார். தமன் இசையமைப்பில் உருவாகும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |