ஏப்ரலில் சிக்கப்போகும் விஜய் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு
விஜய்க்கு எதிராக சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்ததற்கு தற்போது நீதிமன்றம் பதிலளித்துள்ளது.
விஜய் சங்கீதா
தமிழ் திரையுலக முன்னணி நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்க்கு எதிராக அவருடைய மனைவி சங்கீதா நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என விவாகரத்து மனு செங்கல்பட்டு குடும்ப நல கோர்டில் தாக்கல் செய்துள்ளார்.
சுமார் 27 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்னர் சங்கீதா இந்த முடிவை எடுத்துள்ளார். நடிகர் விஜய் சஙீதாவை 1998 ஜூலை 10ஆம் தேதி இங்கிலாந்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னை எக்மோர் ராஜா முத்தையா மன்றத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்படி இருக்க சங்கீதா விவாகரத்து மனுவிற்கான நீதிமன்ற உத்தரவு வெளியாகி உள்ளார்.

நீதிமன்ற உத்தரவு
இந்த மனுவை கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், வழக்கை குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டது. எனவே ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் சங்கீதா மற்றும் விஜய் இருவரும் ஆஜராக வேண்டும் என எத்தரவிடப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் தான் விஜய்க்கு தேர்தல் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் பிரச்சாரமும் இருக்கும். இந்த நிலையில் மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வாக்குப்பதிவு நடைபெறும்.
இதே நேரத்தில் விஜய் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய சூழல் ஏற்படும் பிரச்சாரத்தை ஒருபுறம் நடத்திக் கொண்டே விவாகரத்து வழக்கையும் நடத்த வேண்டிய நிலை விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் விஜய் மன ரீதியாக மிகவும் சிரமப்பட நேரிடும் என மக்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |