தனுஷை பிரிய இது தான் காரணம் - மனம் திறந்த விக்னேஷ் சிவன்
தனுஷை நான் பிரிவதற்கு இது தான் காரணமென இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறி உள்ளார்.

விக்னேஷ் சிவன்
சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் விக்னேஷ்சிவன்.
இதன் பின்னர் பல வெற்றி படங்களை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். தற்போது நடிகை நயன்தாராவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

சமீபத்தில் நயன்தாரா மற்றும் தனுஷ்க்கு இடையில் கருத்து முரண்பாடுகள் வந்தன.
தற்போது எல்ஐகே’ படம் வெளியாக உள்ளது. இந்தப் படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் புரோமோஷன் பணிகள் விக்னேஷ் சிவன் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் விக்கேஷ் சிவனின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தனுஷின் நட்பு முறிவு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதில் விக்னேஷ் சிவன் கூறியது “நடிகர் தனுஷை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை நடிகர் என்பதை தாண்டி அவரை நான் உச்சத்தில் வைத்திருக்கிறேன்.

ஜூலை 28-ம் தேதி தான் தனுஷுக்கு பிறந்த நாள். அதே ஜூலை 28-ல் தான் என்னுடைய அப்பா இறந்தார். தனுஷுக்கு என்னுடைய அப்பாவை நான் உணர்கிறேன்.
அந்த அளவுக்கு அவர் எனக்கு பிடிக்கும். ஆனால், சில நேரங்களில் சிலருடன் ஏன் நமக்கு முரண்பாடுகள் ஏற்படுகின்றன என்பது நமக்கே தெரியாது. அது குறித்து புரிந்துகொள்ள முடியவில்லை.
சூழ்நிலைகள் அப்படி அமைந்துவிட்டன. தனுஷ் உடனான என்னுடைய நட்பு முறிவை என்னுடைய மிகப்பெரிய இழப்பாக பார்க்கிறேன். அதே சமயம் நல்ல நட்பு உறவுடன் இருக்கும் ஒருவரை நாம் இழக்கிறோம் என்றால் அதை அவமானமாகவும் பார்க்கிறேன்.

ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு தவறை செய்திருக்கிறேன். இன்று நான் இப்படி ஒரு இடத்தில் இங்கே இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் தனுஷ். என்னுடைய இந்த நிலைக்கு அவர் முக்கியமான காரணம்.
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் படப்பிடிப்பின்போது 2 வருடங்களுக்கும் மேல் அவருடன் தான் இருந்திருக்கிறேன். அப்போது அவர் சாப்பிட்டால் தான் நான் சாப்பிடுவேன். அப்படியான ஒரு உறவில் இருந்தேன்” என்று விக்னேஷ் சிவன் பேசி இருந்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |