ரிஷப ராசியில் சக்கிரன் - தொட்டது எல்லாம் கெட்டது... கஷ்டம் எந்த ராசிகளுக்கு?
ரிஷப ராசியில் சுக்கிரன் நுழைவதால் 3 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் வாழ்க்கையில் உண்டாகும். அந்த ராசிகள் அந்த சிக்கலில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பதவில் பார்க்கலாம்.

ரிஷப ராசியில் சுக்கிரன்
சுக்கிரன் தனது சொந்த வீடான ரிஷப ராசிக்கு (ஏப்ரல் 19) திகதி நேற்று நுழைகிறார். இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு நன்மைகளை கொடுத்தாலும் சில ராசிகள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.
சுக்கிரன் ஒரு ராசிக்கு 6, 8, அல்லது 12 ஆகிய இடங்களில் மறையும்போது அல்லது பகை கிரகங்களுடன் இணையும்போது தான் சில ராசிகளுக்கு எதிரான பலன்கள் சுக்கிரனால் வழங்கப்படும்.
மே 14 வரை இந்த சூரியப்பெயர்ச்சி இடம்பெறும். இந்த சூரியப்பெயர்ச்சியால் சில ராசிகள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

துலாம்
- துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இவர் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது பலவீனமான ஒரு சஞ்சாரம் எனப்படுகின்றது. இதனால் தேவையற்ற மன உளைச்சல், தூக்கமின்மை மற்றும் உடல் நலத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படும். வாகனங்கள் ஓட்டும் போது கூடுதல் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் வந்து போகலாம் என்பதால், பேச்சில் நிதானம் அவசியம்.
தனுசு
- தனுசு ராசிக்கு ஆறாம் இடத்தில் சுக்கிரன் அமர்வ வீண் கடன் தொல்லைகளை உருவாக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதற்காக கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு பிடிக்காதவர் உங்களை எதிர்க்க நேரிடும். பணியிடத்தில் உடன் வேலை செய்பவர்களுடன் இணக்கமாகச் செல்வது நல்லது. தேவையற்ற பிரச்சனைகளில் ஈடுபடாமல் இலுருந்தால் நிம்மதியைக் காக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். இல்லை எனில் சில நோய்கள் வரும்.
மிதுனம்
- மிதுனம் ராசிக்கு சுக்கிரன் 12ஆம் இடமான விரய ஸ்தானத்திற்குச் செல்கிறார். இந்த பெயர்ச்சி தேவையற்ற வீண் செலவுகளையும் ஏற்படுத்தும். சேமிப்புகள் குறையக்கூடும். உங்கள் பொருட்களை உங்களிடம் வைத்துக்கொள்ளுங்கள். சட்ட சிக்கல்கள் அதிகமாக வரும். எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வது மன அமைதியைத் தரும்.
மேஷம்
- மேஷம் ராசிக்கு இரண்டாம் இடத்திற்குச் சுக்கிரன் செல்கிறார். அங்கு அவர் ராகு அல்லது கேதுவின் பார்வையால் பாதிக்கப்பட்டால், குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த ராசிகள் மே 14 வரை வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது பாதிப்புகளைக் குறைக்க உதவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).