வெப்பத்தினால் அவதிப்படும் உங்களது உடலை குளிர்ச்சியாக வைக்க வேண்டுமா?
காய்கறிகள்
உடலைக் குளிர்ச்சியாக வைப்பதற்கு நாம் என்னென்ன காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காய்கறிகள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து, நீர்ச்சத்து என பல நன்மைகள் காணப்படுகின்றது.
அதாவது இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் போன்ற பிரச்சனையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க இவை பெரிதும் உதவுகின்றது.

வெள்ளரிக்காய்
நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்களில் ஒன்று தான் வெள்ளரிக்காய். கோடை காலத்தில் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.
நீர்ச்சத்து அளவை சரியாக உடம்பில் பராமரிக்க உதவுவதுடன், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் உடல் வெப்பத்தினை தணித்து குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கின்றது.
இதனை அப்படியேயும், சாலட் போன்றும் சாப்பிடலாம்.

சுரைக்காய்
இதே போன்று சுரைக்காயும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளது. நம் செரிமானத்தை சீர்படுத்தி உடல் வெப்பத்தினை குறைக்கவும் உதவுகின்றது.
இதனை நாம் பொரியலாகவும், ஜுஸாகவும் குடிப்பதுடன், வெப்ப காலங்களில் நாம் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய காயாக இருக்கின்றது.

புடலங்காய்
புடலங்காயும் நீர்ச்சத்து அதிகமாக கொண்டு காய்கறில் ஒன்றாகும். இதில் வைட்டமின் A, வைட்டமின் c மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால் வெப்பத்தினை குறைக்கவும், அதனால் ஏற்படும் சோர்வையும், செரிமான பிரச்சனையையும் சரி செய்கின்றது.

பூசணிக்காய்
வெள்ளை பூசணியும் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கின்றது. இயற்கையாகவே அதிக நீர்ச்சத்து மற்றும் தாதுக்களை கொண்டு பூசணி வெப்பத்தினை சமநிலையாக வைப்ப உதவுகின்றது.
இதனையும் பொரியலாகவோ, கூட்டாகவோ அல்லது ஜுஸாகவோ எடுத்துக்கொண்டால் உடம்பிற்கு தேவையான சக்தியினை பெற முடியும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |