Vastu Tips: ஒட்டக சிலையை வீட்டில் வைப்பதால் இவ்வளவு அதிர்ஷ்டமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
வீட்டில் ஒட்டக சிலையை வைப்பதால் வாஸ்து படி ஏற்படும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஒட்டகச் சிலை
வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒட்டச்சிலையை வீட்டில் வைப்பதால் நேர்மறை ஆற்றல் பெருகுவதாகவும், சுப பலன்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது.
ஒட்டகமானது பொறுமை மற்றும் நிலைத்தன்மையின் சின்னமாக பார்க்கப்படுகின்றது. மேலும் பல கஷ்டங்களையும் கடந்து முன்னேறும் குணம் கொண்டதாகவும் பார்க்கப்படுகின்றது.
முக்கியமாக பொறுமையின் சின்னமாக பார்க்கப்படும் இந்த சிலையினை வீட்டில் வைப்பதால் வெற்றி மற்றும் மன தைரியம் அதிகரிக்குமாம்.

எங்கு வைக்கலாம்? எங்கு வைக்கக்கூடாது?
குறித்த ஒட்டக சிலையினை வீட்டில் வைப்பதாக இருந்தால் சரியான திசையினை தெரிவு செய்வது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் வடக்கு மற்றும் மேற்கு திசைகள் வைப்பது சிறந்தது என்றும் இதனால் வீட்டில் சுப ஆற்றல் பெருகுவதாகவும் கூறப்படுகின்றது.
வரவேற்பறையில் குறித்த சிலையினை வைப்பது மிகவும் சிறந்ததாகவும், இவை விருந்தினர்களைக் கவர்வதாகவும் இருக்கும். ஆனால் படுக்கையறை, குளியலறை, படிக்கட்டுகளின் கீழ் குறித்த சிலையை வைக்கக்கூடாது.

அதே போன்று இந்த சிலையினை தனியாக வைக்காமல், ஜோடியாக வைப்பது சிறந்தது. ஏனெனில் இது குடும்ப ஒற்றுமையை குறிக்கின்றது. சிலையின் முகம் வீட்டின் உட்புறம் பார்த்தவாறு இருக்கவும். ஆனால் உடைந்த சிலைகளை வீட்டில் எப்பொழுதும் வைக்கக்கூடாது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |