மகிழ்ச்சியாக இருந்த வனிதாவிற்கு ஏற்பட்ட சோகம்: மரணம் எல்லோருக்கும் வரும் என ரசிகர்கள் ஆறுதல்! நடந்தது என்ன?
தனது தாய் மஞ்சுளா விஜயகுமாரின் 8வது நினைவு நாளான இன்று அவரை நினைத்து வனிதா உருக்கமான டுவிட் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகையான மஞ்சுளா விஜயகுமாரின் 8வது நினைவு நாளில் வனிதா ட்விட்டரில் கூறியதாவது, நீங்கள் எனக்கு சிறந்ததை தான் அளித்திருக்கிறீர்கள். தற்போதும் அனைத்து விதத்திலும் என்னுடன் இருக்கிறீர்கள்.
உங்களை தினமும் ஒவ்வொரு நொடியும் மிஸ் பண்ணுகிறேன். என் வாழ்க்கையின் சிறந்த காலத்தில் நீங்கள் என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் நீங்கள் எப்பொழுதும் என்னுடன் இருக்கிறீர்கள் என்பது தெரியும் என தெரிவித்துள்ளார்.
வனிதாவின் இந்த பதிவிற்கு, பிறந்த அனைவருக்கும் ஒரு நாள் இறப்பு உண்டு, கவலை வேண்டாம் என்று ரசிகர் ஒருவர் ஆறுதல் கூறியுள்ளார்.
மற்றொருவரே அம்மா உயிரோடு இருந்த போது அவர் வேதனைபடும்படி நடந்து கொண்டீர்கள். இனியாவது யார் மனதையும் புண்படுத்ததாதீர்கள் என்று கூறியுள்ளார்.
வனிதா பவர்ஸ்டாருடன் இருக்கும் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள், பவர்ஸ்டார் தான் உங்களின் 4வது கணவரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பவர்ஸ்டார் நடித்து வரும் முருங்கைக்காய் படத்திற்கு தான் அப்படி விளம்பரம் தேடியிருக்கிறார் வனிதா. அது விளம்பரம் என்று சொல்லாமல் ஏன் போஸ்ட் போட வேண்டும் என சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்மா நீங்கள் உயிரோடு இருக்கும் போது வனிதா அக்கா எவ்வளவு கூத்து காட்டின உங்களுக்கு அதை நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது வனிதா அக்கா இனியாவது நல்லபடியாக யோசித்து மற்றவர்களின் மனதை புண்படுத்தாமல் வாழுங்கள்
— KR Sugir (@Sugirtharaj7) July 23, 2021