இது ஜோவிகாவா? சுற்றி வளைத்த போலீஸ்- அம்மா தப்பிச்சி ஓடிடுங்க.. வனிதா உடைத்த ரகசியம்
தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வனிதா விஜயகுமார்- ஜோவிகா இருவரும் சேர்ந்து கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் சாதித்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.
இவர் தமிழ் சினிமாவில் நடித்தது சில படங்கள் என்றாலும் இவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குஷியாகி விடுகின்றனர். முதல் படமே தளபதியுடன் “சந்திரலேகா” எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார்.
தொடர்ந்து சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்த போது திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
பின்னர் ஆகாஷை விவாகரத்து செய்து விட்டார். இதனை தொடர்ந்து ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார். இவருக்குஜெயனிதா என்ற மகள் இருக்கிறார். மூன்று பிள்ளைகள் இருந்தாலும் மகன் விஜய் ஹரியை அவரின் தந்தை ஆகாஷ்வுடன் இருக்கிறார்.
இதனிடையே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் என்றி கொடுத்த வனிதா கடந்த 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு பின்னர் அவருடன் ஏற்பட்ட மோதலால் அவரையும் பிரிந்து விட்டார்.
வனிதாவின் புதிய திரைப்படம்
இந்த நிலையில், வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்திருக்கும் Mr & Mrs திரைப்படத்திற்கான ப்ரோமோ சற்று முன்னர் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் சின்னத்திரையில் இருக்கும் பல பிரபலங்கள் இணைந்திருக்கிறார்கள். 40 வயதை தாண்டிய பெண்ணொருவர் குழந்தைபெற்றுக் கொள்ள ஆசைப்படும் கதையை கருவாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜோவிகா கொடுத்த ஐடியா?
சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வரும் வனிதா விஜயகுமார் அவருடைய மகள்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கம்.
அந்த வகையில் திரைப்பட ப்ரமோஷனில் கலந்து கொண்ட வனிதா, ஜோவிகா இருவரும் பேசிய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தொடர்ந்து பேசிய வனிதா, “எனது அம்மா வீட்டில் இருந்து என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீஸ் வேனில் அழைத்து செல்கிறார்கள். ஆனால் எனது மகள் ஜோவிகா என்னை தனியாக விடமாட்டேன் என்று அவளும் வண்டியில் ஏறிவிட்டாள். வண்டியில் எனது பக்கத்திலேயே நின்றுகொண்டு இருந்தாள்.
வண்டியில் இருந்து இறங்கும்போது பெண் போலீஸ் வந்துவிட்டார்கள். அப்போது ஜோவிகா எங்கோயோ பார்த்துக்கொண்டு அப்படியே இறங்கி ஓடி போய்டுங்க என்று சொன்னாள். இது எனக்கு சரியாக புரியவில்லை. அதன்பிறகு அப்படியே இறங்கி ஓடி போய்டுங்க நான் பாத்துக்கிறேன் என்றாள்.
நான் எங்கு போவேன் நீ என்ன பண்ணுவ என்று கேட்டேன். அதெல்லாம் எனக்கு தெரியும். எந்த எம்பெசிக்கு போகனும் என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும். அப்டியே இறங்கி ஓடிருங்க, ஓடிருங்க என்று சொன்னாள்.
எனக்கு என்ன பயம் என்றால், அந்த நேரத்தில் அதிகார துஷ்பரயோகம் நடந்தது. என்னை தூக்கிய லாக்கப்பில் போட்டுவிட்டால் என்ன செய்வது என்பதால் அவள் அப்படி சொன்னாள்..” என வனிதா பேசியிருந்தார்.
இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள்,“ ஜோவிகாவிற்கு அவ்வளவு தைரியமா?” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |