வீட்டில் காய்கறி செடி வளர்க்கிறீர்களா? இந்த ஒரு பானத்தை ஊற்றி பாருங்க காய்த்து குலுங்கும்
வீட்டில் காய்கறி செடிகளை வளர்க்கும் போது காய்ப்பது குறைவாக இருந்தால் இந்த பதிவை படித்ததன் பின்னர் உங்கள் செடியில் காய்களுக்கு பஞ்சம் இருக்காது.
காய்கறி செடிகள் காய்த்து குலுங்க
வீட்டில் செடிகளை வளர்ப்பது மனதுக்கு ஒரு பேரின்பத்தையும் அமைதியையும் தரும். வீட்டு வாசல், மாடி, அல்லது சிறிய இடங்களிலும் சிறிய அளவில் தோட்டம் அமைத்து செடிகளை பராமரிக்கலாம்.
குறிப்பாக மாடித் தோட்டங்களில் காய்கறி செடிகளை வளர்ப்பது இன்று பலரின் விருப்பமாக உள்ளது. இது இயற்கையாக, இரசாயன கலப்பின்றி நம்மை நோயின்றி வைத்திருக்க உதவுகிறது.
மாடித் தோட்டத்தில் காய்கறி செடிகளை வளர்க்கும்போது, நமக்கு இயற்கை உரங்களும் சில தேவையான இரசாயனங்களும் உதவியாக இருக்கின்றன.
இருந்தாலும், சில நேரங்களில் எல்லா முயற்சிகளும் செய்த பிறகும் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காமல் போவதுண்டு. இதற்கு ஒரு சிறந்த வழி உரமாக மோர் காணப்படுகின்றது.
சாதாரண ஒரு டம்ளர் மோர் உங்கள் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, அவற்றின் வளர்ச்சியை மேம்படுத்தும். பூச்சி தொல்லைகளையும் கட்டுப்படுத்தும் திறன் மோருக்கு உண்டு.
குறிப்பாக இலைகளில் தெளிக்கும்போது, அது ஒரு இயற்கை பூச்சிக்கொல்லியாகவும் செயல்படுகிறது.
மோரை எப்படி பயன்படுத்துவது
- மோரை தண்ணீருடன் கலந்து இலைகளில் தெளிக்கலாம்
- நேரடியாக மண்ணில் ஊற்றலாம்
- வாரம் ஒரு முறை பயன்படுத்துவது போதுமானது
காய்கறி செடிகளில் கருப்பு புள்ளிகள் ஏற்படுவதை தடுக்க மோரில் உள்ள லாக்டிக் அமிலம் உதவுகிறது. பூச்சி தாக்குதலால் பூ மலிக்காத நிலை ஏற்படலாம். இதைத் தவிர்க்க, ஒரு டம்ளர் மோர் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீரை கலந்து செடிகளின் இலைகளில் தெளிக்கவும்.
தக்காளி, மிளகாய், கத்திரிக்காய் செடிகள் பூக்கும் போது கால்சியம் குறைவால் நோய்கள் ஏற்படலாம். இதற்கு இரசாயனம் தேவைப்படாது. மோர் தெளித்தாலே போதும் அதில் உள்ள கால்சியம் செடிகளுக்கு இயற்கையாகக் கிடைக்கும், நோய்த்தாக்கும் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |